09/04/2019

ஆண்வேடமிட்டு காதல் ஆசை காட்டி.. நகைகளை கொள்ளையடித்த பெண் கைது...


ஈரோடு அருகே கொடுமுடி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி நதியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் உறவுக்காரர் ஒருவரின் விருந்து நிகழ்ச்சிக்கு சென்ற போது விஷ்ணுபாலா என்ற இளைஞரிடம் நதியா நட்பாக பழகினார்.

விஷ்ணுபாலாவும் நதியாவும் உறவுக்காரர்கள் என்பதால் இருவரும் நெருங்கி பழகினர். இதையடுத்து நதியாவை காதல் வலையில் விஷ்ணுபாலா வீழ்த்தினார். பின்னர் நதியாவின் வீட்டுக்கு யாரும் இல்லாத நேரத்தில் வந்து போய் கொண்டிருந்தார்.

இதனிடையே நதியாவின் வீட்டிலிருந்த 15 சவரன் நகைகளை காணாததால் அவரிடம் அவரது பெற்றோர் விசாரித்தனர். ஆண் நண்பருக்கு கொடுத்துவிட்டதாக நதியா தெரிவித்தார்.

இதையடுத்து மான பிரச்சினை என்பதால் வெளியே இந்த விவகாரத்தை கூறாமல் மகளின் காதலனை பிடிக்க பெற்றோர் முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. மறுபடியும் 3 சவரன் நகைகள் பறிபோனது. இதையடுத்து நதியாவின் பெற்றோர் போலீஸில் புகார் கொடுத்தனர்.

பின்னர் நதியா மூலம் விஷ்ணுபாலாவிடம் பேச வைத்த போலீஸார் வீட்டில் தனியாக இருப்பதாக கூறி அவரை வரவழைத்தனர். பின்னர் அவர் வந்தவுடன் போலீஸார் சுற்றி வளைத்தனர். விசாரணையில் ஆண் வேடத்தில் இருந்தது பெண் என தெரியவந்தது.

அவர் காங்கேயத்தை சேர்ந்த சரோஜா என்பதும் பெண்கள் மீதான ஈர்ப்பால் ஆண் வேடமிட்டு பெண்களை காதல் வலையில் வீழ்த்தியதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 3 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். வேறு யாரையாவது ஏமாற்றியுள்ளாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

கள்ளக்காதலர்கள் அபிராமி - சுந்தரம் நேருக்கு சந்திப்பு.. கோர்ட் வளாகத்தில் பரபரப்பு...


சென்னை குன்றத்தூர், மூன்றாம் கட்டளையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர் விஜய். தனியார் வங்கியில் பணியாற்றுகிறார். இவரின் மனைவி அபிராமி. இவர்களுக்கு அஜய், கார்னிகா ஆகிய இரண்டு குழந்தைகள் இருந்தன.

அபிராமிக்கு அதே பகுதியில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்யும் சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது. இதைதொடர்ந்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அபிராமி, சுந்தரத்தை வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்த விஷயம் விஜய்க்கு தெரிந்ததும், அபிராமியை கண்டித்துள்ளார். இதனால் அபிராமி, தனது காதலன் சுந்தரத்துடன் வாழ முடிவு செய்தார். இதற்காக, கணவன் மற்றும் குழந்தைகளை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதற்கு சுந்தரமும் உடந்தையாக இருந்துள்ளார்.

அதன்படி, கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி, காதலன் சுந்தரத்தின் ஆலோசனைபடி தனது 2 குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார். மேலும் இதில் கார்னிகா துடிதுடித்து இறந்தார். ஆனால் மகன் அஜய் இறக்காததால், தலையணையால் முகத்தை அழுத்தி கொடூர கொலை செய்தார்.

பின்னர் காதலனுடன் அபிராமி தலைமறைவாக இருந்து வந்தார். அவரை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீஸார் பிடித்தனர். பின்னர் காதலன் சுந்தரத்தையும்  கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, தற்போது செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணைக்காக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அபிராமி, அவரது காதலன் சுந்தரம் ஆகியோரை ஒரே வேனில் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.

பின்னர் நீதிபதி வேல்முருகன் முன் 2 பேரையும் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கின் விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது...

வெற்றிலை...


மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும்.

இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது. வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது.

வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.

கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது.

இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடையவை.

இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத் தன்மையை போக்குகிறது.

அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும்.

முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

இதனால் தான் நம் முன்னோர்கள் பூஜையிலிருந்து சுபகாரியங்கள் அனைத்திற்கும் வெற்றிலையை முக்கியத்துவம் கொடுத்து சேர்த்துள்ளனர், பயன் உள்ளவை என்றும் நம் பயன்பாட்டில் இருக்க வேண்டும்...

கருணாநிதி வீட்டு சிறை குறித்து விசாரணை.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி...


அரசியல் ஆதாயத்திற்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறையில் வைத்தவர் ஸ்டாலின் என தமிழக முதல்வர் பழனிசாமி பேசி உள்ளார்.

நீலகிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து முதல்வர் பழனிசாமி இன்று (ஏப்.,08) பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், தான் அரசியலில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக திமுக தலைவர் கருணாநிதியை 2 ஆண்டுகள் வீட்டு சிறையில் வைத்திருந்தார் ஸ்டாலின்.

அவருக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்திருந்தால் நன்றாக பேசி இருப்பார் என அவர்களின் கட்சியினரே கூறுகிறார்கள். கருணாநிதிக்கு ஏற்பட்ட நிலை குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், கொடநாடு விவகாரத்தில் ஸ்டாலின் பொய் பேசுகிறார். தொடநாடு விவகாரத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.

நீலகிரி தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா எதுவும் செய்யவில்லை. நீலகிரி மாவட்டத்தை முன்னிலைப்படுத்த பல திட்டங்களை வகுத்தவர் ஜெயலலிதா என்றார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என ஸ்டாலின் கூறி வரும் நிலையில், கருணாநிதி வீட்டு சிறையில் வைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் பழனிசாமி கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது...

மூன்றாவது கண்...


ஒருவனது இரண்டு புருவங்கள் இடையே புரியாத கதவு ஒன்று திறக்க இருக்கிறது என்று நம்முடைய மெய்ஞானிகள் கண்டு பிடித்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியாவில் இதை மூன்றாவது கண் என்று அழைப்பார்கள்.

சாதாரணமாக மனிதனின் இரண்டு கண்களும் வெளியில் தெரியும்.

ஆனால், இந்த மூன்றாவது கண் சரியாக இரண்டு புருவ மத்தியில் உணர்வுமயமாக அமைந்துள்ளது.

அது திறந்தால் உங்களுடைய உள் உலகம் இந்த வெளி உலகம் போல் தெளிவாக உணரப்படும்.

அப்பொழுது நீங்கள் உடலாகவும் இல்லை, மற்றும் மனமாகவும் இல்லை என்பது உங்களுக்கு புரியும்.

முதன் முதலில் நீங்கள் ஒரு சாட்சியாக இருப்பதும் புரியும்.

அதாவது உங்கள் உயிர்த் தன்மை சாட்சியாக இருக்கிறது.

இது உங்களை மனதிற்கு அப்பால், புரியாத, அதற்கு அற்புதமான அதிசயம்மிக்க உலகுக்கு அழைத்து செல்லும்.

அதற்கு பிறகு உங்கள் வாழ்க்கை ஆனந்த மயமானது தான்.

ஆடல், பாடல் நிறைந்தது தான்.

நீங்கள் சுத்த தங்கம் போல ஆனந்த மிகுதியில் ஜொலித்து ததும்பி வழிவீர்கள்.

ஏனெனில், நீங்கள் புதையளிலேயே சிறந்த புதையலை அடைந்திருக்கிறீர்கள்.

இதைத் அறிவுக் கூர்மை படைத்தவர்கள் அனைவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்...

இயற்கை மருத்துவம்...


இயற்கை  மருத்துவத்தில் நீரிழிவு, சளி, இருமல் மற்றும் ஜலதோஷம் போன்றவற்றிற்கு எந்த மூலிகைகளை பயன்படுத்தினால் நல்லது என்பதைப் பற்றி பார்ப்போமா...

நீரிழிவிற்கு...

கறிவேப்பிலை: உணவுகள் அனைத்திலும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு பொருள் தான் கறிவேப்பிலை. அத்தகைய கறிவேப்பிலை ஒரு சூப்பரான மருத்துவகுணம் கொண்டது. அதிலும் நீரிழிவிற்கு நல்லது. ஆகவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து மூன்று மாதம் தினமும் 8-10 இலைகளை சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும். அதுமட்டுமல்லாமல், உடல் எடையையும் குறைத்துவிடும்.

இலவங்கப்பட்டை: இது பெரும்பாலும் பிரியாணிக்கு பயன்படுத்துவார்கள். இத்தகைய இலவங்கப்பட்டையை தினமுத் சாப்பிட்டு வந்தால், நீரிழிவு குறைந்துவிடும். மேலும் சில காரத்திற்கு பயன்படுத்தும் உணவுப் பொருட்களான பே இலைகள், மஞ்சள் மற்றும கிராம்பு போன்றவையும் நீரிழிவை சரிசெய்யும்.

நெல்லிக்காய்: நெல்லிக்காய் சாப்பிட்டால், கூந்தல் நன்கு வளரும் என்று அனைவருக்கும் தெரிந்தது. அத்தகைய நெல்லிக்காய் ஒரு சிறந்த மூலிகைப்பொருள். இதனால் இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். அதற்கு இந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாகற்காய் ஜூஸ் உடன் கலந்தும் சாப்பிடலாம். மேலும் இந்த நெல்லிக்காயை தொடர்ந்து 2-3 மாதத்திற்கு சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும்.

இருமல் மற்றும் சளிக்கு...

துளசி: உடலில் அதிக குளிர்ச்சியின் காரணமாக வரும் சளி மற்றும் இருமல் போன்றவற்றிற்கு துளசி இலைகளை பச்சையாகவோ, ஜூஸ் அல்லது துளசி டீ-யாகவோ செய்து சாப்பிட்டால், நல்லது.

இஞ்சி: சளி மற்றும் இருமலுக்கு இஞ்சி மற்றொரு சிறந்த மூலிகைப் பொருள். ஆகவே சளி அல்லது இருமல் ஏற்படும் போது ஒரு துண்டு இஞ்சியை தேனுடன் தொட்டு சாப்பிடலாம். இல்லையெனில் அதனை இஞ்சி டீ போட்டும் குடிக்கலாம்.

ஏலக்காய்: உணவுகளில் நறுமணத்திற்கு சேர்க்கும் ஏலக்காயும், சளி மற்றும் இருமலுக்கு சிறந்தது. ஆகவே இதனை டீ செய்து குடித்தால், இருமலால் தொண்டையில் ஏற்படும் அரிப்பு நீங்கும்.

எலுமிச்சை: வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் விட்டு கலந்து குடித்தால், சளி மற்றும் இருமல் சரியாகும். இதனை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம்...

தோல்வி பயம் துரத்த தர்காவுக்குள் புகுந்த பாஜக மோடி & யோகி...


சங்கிகள் பாணியில் சொல்வதானால் பாகிஸ்தான் கொடிக்கு மரியாதை செலுத்திய மோடி...

எங்கடா அந்த எச். ராஜா சர்மா.. இங்க இரண்டு தேச துரோகிகள் செய்ற வேலையை பார்க்க சொல்லு...

மச்சானுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய விஜயகாந்த் அழைப்பு.. டி.ராஜேந்தர் மறுப்பு...


அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி, வட சென்னை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. உடல் நிலை பாதிப்பு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.

சென்னையில் உள்ள இல்லத்தில் ஓய்வில் இருந்துவருகிறார். அவருடைய மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா  தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இதேபோல விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், தனது இளைய மகன் குறளரசனின் திருமணத்துக்கு அழைப்பு விடுப்பதற்காக இயக்குநர் டி. ராஜேந்தர், விஜயகாந்த் இல்லத்துக்கு நேற்று முன் தினம் சென்றிருந்தார்.

இந்தச் சந்திப்பின்போது அரசியல் நிலவரம், தேர்தல் நிலவரங்களை விஜயகாந்தும், டி. ராஜேந்தரும் பகிர்ந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் சுதிஷுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யும்படி டி.ராஜேந்தரிடம் விஜயகாந்த் கேட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், விஜயகாந்தின் வேண்டுகோளை டி.ராஜேந்தர் நிராகரித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமண வேலைகள் அதிகம் இருப்பதால், பிரசாரத்தில் ஈடுபட டி.ராஜேந்தர் ஆர்வம் காட்டவில்லை என்றும் தேமுதிகவில் உள்ள நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன...

பாஜக வின் தேர்தல் அறிக்கை (தேர்தலுக்காக பொய் அறிக்கை) ...


லோக்சபா தேர்தலுக்கான பா.ஜ., தேர்தல் அறிக்கை இன்று (ஏப்.,08) வெளியிடப்பட்டது. டில்லியில் பா.ஜ., தலைமையகத்தில் நடந்த விழாவில் "சங்கல்ப் பத்ரா" என பெயரிடப்பட்ட தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.

தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சங்கள்...

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் 2022 ம் ஆண்டிற்குள் பா.ஜ., அளித்துள்ள 75 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.

பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் வகையில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்.

2030 க்குள் உலகிவ் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும்.

மகாத்மா காந்தி கண்ட கிராமத்தை நனவாக்க அனைவருக்கும் வீடு, குடிநீர், டிஜிட்டல் இணைப்பு, சாலை வசதி, தூய்மை இந்தியா உள்ளிட்ட திட்டங்கள் கொண்டு வரப்படும்.

60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு பென்சன் வழங்கப்படும்.

அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6000 வருமானம் கிடைக்க செய்யப்படும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படாத வகையில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும்.

5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன்.

விவசாயிகளுக்கு வட்டியில்லாத கிரெடிட் கார்டு வழங்கப்படும்.

ஜிஎஸ்டி நடைமுறைகள் எளிமையாக்கப்படும். ராணுவம் போலீஸ் படைகள் நவீனமயமாக்கப்படும்.

உள்கட்டமபை்பு துறையில் ரூ.100 லட்சம் கோடி.

நாடு முழுவதும் 75 மருத்துவ கல்லூரிகள்.

முத்தலாக் தடை சட்டம் மற்றும் குடியுரிமை சட்டம் நிறைவேற்றப்படும்.

மத நம்பிக்கைகளை பாதுகாக்க அரசியல் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

2022க்குள் தேசிய நெடுஞ்சாலைகள் இரு மடங்காக்கப்படும். நதிகள் இணைப்பிற்கு தனி ஆணையம் உருவாக்கப்படும்.

எல்லையோர பகுதிகள் வளர்ச்சிக்கும்,
உள்கட்டமைப்புக்கு தரம் உயர்த்தப்படும்.

உரிமைக்கான சேவை சட்டம் நிறைவேற்றப்படும்.

வடகிழக்கு மாநிலங்களில் சட்ட விரோத ஊடுருவலை தடுக்க நடவடிக்கை.

அனைவருக்கும் வீடு, கழிப்பறை, வங்கிக்கணக்கு கிடைக்க நடவடிக்கை.

பெண்கள் நலன், முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பார்லிமென்ட், சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டம் ரத்து செய்யப்படும்.

2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடுகள் கட்டித்தரப்படும்...

மனமற்ற நிலை...


இருபத்து நான்கு மணி நேரமும் மனமற்ற நிலைபெறுவது தான் இறுதிச் சாதனை...

இப்படிச் சொல்வதால், மனதை பயன்படுத்தவே கூடாது என்பதல்ல.

மனமற்ற நிலை பற்றி எதுவும் தெரியாதவர்களே அப்படிச் சொல்வார்கள்.

அது பொய்..

மனமற்ற நிலை என்றால், மனம் உன்னைப் பயன்படுத்தக் கூடாது என்று பொருள்...

மனமற்ற நிலை என்றால், மனதை அழித்து விடுவது அல்ல. மனதை ஒரு பக்கமாய் ஒதுக்கி வைப்பது.

அது உலகத்தோடு தொடர்பு கொள்ளும் எந்த வினாடியும் மனதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அது உன் பணியாளாக இருக்க வேண்டும்.

நீ சும்மா இருந்தால் கூட 'கடக்கடக் கடக்கடக்' என்று போய்க் கொண்டே இருக்கும். அப்போது உன்னால் எதுவுமே செய்ய முடியாது.

பரிதாபமாக நின்று விடுவாய்..

மனமற்ற நிலை என்பது, மனதைச் சரியான இடத்தில் ஒதுக்கி நிறுத்தி வைப்பது. அது ஒரு வேலையாள் என்ற முறையில் மனம் பெரிய கருவி தான். ஆனால், எஜமானனாகி விடுவது துரதிர்ஷ்டம். அது ஆபத்தானது. உன் வாழ்வையே ஒழித்துக் கட்டிவிடும்.

மற்றவர்களோடு தொடர்பு கொள்ள நீ விரும்பும் போது மனம் ஒரு ஊடகம் மட்டுமே.

ஆனால் நீ தனித்திருக்கையில் மனம் தேவையில்லை. எப்பொழுது பயன்படுத்த வேண்டுமோ அப்பொழுது மட்டும் பயன்படுத்தினால் போதும்.

இன்னொன்றையும் நினைவில் வைத்துக்கொள்.

மனம் பல மணி நேரம் மௌனமாக இருந்தால், அது புத்துணர்ச்சி பெற்று விடும். இளமை துடிப்புடன், படைப்பாற்றலுடன், உணர்வுகளுடன், புதுப்பிறவி எடுத்து விடும். அந்த ஓய்வில் ஏற்படுபவை இவை...

சொந்தமாக தொழில் தொடங்கலாம் வாங்க... மலர் எர்பல்ஸ் / Malar Herbals...




Herbal Tea 100gm - 120rs

Nalangu maavu 100gm - 65rs

Nalangu maavu 200gm - 130rs

Nalangu maavu 250gm - 158rs

Nalangu maavu 500gm - 315rs

Nalangu maavu 1kg - 610rs

Amla Tooth powder - 50rs

Henna powder - 50rs

Hibiscus shikakai powder - 65rs

Facial kit - 120rs

Anti pimple face pack 100gm - 70rs

Multhanimetti - 40rs

Almond powder - 40rs

Almond powder 100gm - 130rs

Kashturi manjal - 40rs

Kashturi powder bottle -  130rs

Hair grow pack 100gm - 70rs

Anti Dandruff & lice 100gm - 93rs

Hair wash powder with conditioner 150gm  - 101rs

Hair wash powder with conditioner 250gm - 158rs

Hair wash powder with conditioner 500gm - 315rs

Hair wash powder with conditioner 1kg - 610rs

Herbal Hair Dye - 90rs

Gram powder (kadalai maavu) - 40rs

Arappu podi (Usilam podi) - 30rs

Greem gram powder (paasi paiyur thul) - 40rs

Honey Amla - (20 pc) 240rs

Wanted Franchises, Dealers, Distributors & Retailers...

பள்ளி மாணவர்களே.. கல்லூரி மாணவர்களே சிந்தித்து பாருங்கள்...


மக்களை கெடுக்கும் மானமில்லா திரை உலகினருக்கு தேசிய விருதுகள்...

மக்களுக்கு உணவை கொடுக்கும் உழவர்களுக்கு நாம் கொடுக்கும் உயரிய விருது வறுமை மட்டுமே...

நடிகர் நடிகைகள், தாங்கள் நடிக்கும் திரைப்படங்களுக்கு கோடி கணக்கில் ஊதியம் நிர்ணயித்து வாங்குகின்றனர்...

ஆண்டு முழுக்க வியர்வை சிந்தி உழைக்கும் உழவர்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் உணவு பொருள்களுக்கு அவர்கள் விலை நிரனயிப்பது இல்லை.. அரசு விலை நிர்ணயம் செய்கிறது..

பூமி பந்தில் இந்தியாவில் மட்டுமே இந்த நிலை...

உடல் நோகாமல் நடிப்பவர்களுக்கு இந்த நாட்டின் உயரிய தேசிய விருது...

உடல் வலிக்க உழைப்பவர்களுக்கு வறுமையும், பசியும், பட்டினியும் , தற்கொலை மட்டுமே நாம் அவர்களுக்கு கொடுக்கும் தேசிய விருது...

ஒரு கிலோ அரிசியின் விலை வைத்து அதனை மதிப்பிடாதீர்கள். அதற்கு பின்னால் உழவனின், ஏழைத் தமிழனின் அவனின் வறுமையான வாழ்வு இருக்கிறது என்பதை மறவாதீர்கள்...

உங்களுக்கு உயர் தர அரிசியை விளைவித்து கொடுத்து விட்டு இலவச அரிக்கு கையேந்தி நிற்கும் அவலத்தை எண்ணி பாருங்கள்...

உழைத்து உழைத்து உடலின் வலியை போக்க குடித்து சீரழியும் அவன் வாழ்க்கையை நினைத்து பாருங்கள்...

நீங்கள் உண்பது உணவல்ல அவனின் ரத்தமும், சதையையும் உழைப்பாக மாற்றி, நாம் உயிர் வாழ அவன் விளைவித்து கொடுக்கும் உணவால் நம்மை வாழ வைத்து தன்னை அழித்து கொள்ளும் உயரிய மாந்தன் நம் உழவன்...

பள்ளி மாணவர்களே கல்லூரி மாணவர்களே சிந்தித்து பாருங்கள்..

நீங்கள் உயிர் வாழ உழவன் உணவை அளிக்கிறான்...

நீங்கள் உங்கள் நடிகருக்கு, உங்கள் உழைப்பையும் கொடுத்து, உங்கள் பணத்தால் பாலபிசேகம், விளம்பர தட்டிகள் என்று செலவழிக்கிரீர்களே சிந்தித்து பாருங்கள்...

திராவிட பகுத்தறிவும், போலித்தனமும்...


வலைபதிவுகளில் ஒரு கும்பல் இருக்கு, பகுத்தறிவு, பெரியார், மூட நம்பிக்கை, பார்ப்பான் அது இதுன்னு இஷ்டத்துக்கும் எழுதுவாங்க. குறிப்பா இந்து சமயத்தை தாக்கித் தான் அவங்களோட பதிவுகள் இருக்கும்.

இந்த கோஷ்டிகளுக்காகத் தான் இந்த பதிவு..

நாத்திகம், ஆத்திகம்... என்னது இது?

தைரியமா கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டா அது ஆத்திகம்..

அதுவே திருட்டுத்தனமா வீட்டுலேயே கும்பிட்டா அது நாத்திகம்..

இப்படி பட்ட போலித் தனமான பகுத்தறிவு ஜீவிகள் தான் இப்ப ரொம்ப ஜாஸ்தி..

அது மட்டுமல்ல, பெரியாரே, காசி யாத்திரைக்கு சாமி கும்பிட போன போது, சாப்பாடு மடத்துல பாப்பானுக்கு தான் அனுமதின்னு சொன்னதால தான், இப்படி பார்ப்பன எதிர்ப்பு கொள்கையை ஆரம்பிச்சார்..

சரி, அப்படியாப் பட்ட பகுத்தறிவாளிகளின் கருத்துக்கள் தான் என்ன?

யார் பகுத்தறிவாளி?

கிறித்துவை கும்பிடலாம்
இஸ்லாமை பின்பற்றலாம்
இவங்க எல்லோரும் பகுத்தறிவாளிகள்..

இந்து சமயத்தை பின்பற்றுகிறவன் மூடன், பைத்தியக்காரன். பிற்போக்கு சிந்தனை கொண்டவன்..

ஹஹ...இது தானாயா பகுத்தறிவு?

சென்னை மைலாப்பூரில் சமூக விரோதிகளும்.. தேச துரோகிகளும் போராட்டம்...


நாடு வளர்ச்சி அடையணும்முன்னா சில தியாகங்களை செஞ்சிதான் ஆகணும்முன்னு பாடம் எடுத்தேளே.    இப்போ ஏன் போராட்டம் நடத்தறேள் ?

பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி...


எண்ணங்களுக்குக் காந்த சக்கி இருக்கிறது. அவற்றிற்குக் குறிப்பிட்ட அலைவரிசைகளும் உண்டு.

எண்ணங்களைச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது அவை பிரபஞ்சத்திற்குள் அனுப்பப்படுகின்றன.

எண்ணங்கள் பௌதீகப் பொருட்களாக உருப்பெறும்.

விரும்பியவற்றை மூன்று எளிய படிகள் மூலமாக உருவாக்க...

1.கேளுங்கள் (ASK).
2.நம்புங்கள் (BELIEVE).
3.பெறுங்கள் (RECEIVE).

1. கேளுங்கள் : உங்களுக்கு வேண்டியதைப் பிரபஞ்சத்திடன் கேட்கும் போது, விருப்பம் குறித்த தெளிவை பெறுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. அத்தெளிவு நீங்கள் கேட்டதற்குச் சமானம்.

2. நம்புங்கள் : கேட்டது ஏற்கனவே கிடைத்துவிட்டது போல நடந்து கொள்வது, பேசுவது, மற்றும் சிந்திப்பது ஆகியவை நம்பிக்கை கொள்வதாகும்.
கிடைத்து விட்டது என்ற அலைவரிசையில் ஒளிப்பரப்பும் போது அதை பெற்றிட ஈர்ப்பு விதி மக்களை, நிகழ்வுகளை மற்றும் சந்தர்ப்பங்களை ஒருங்கிணைக்கும்.

3. பெறுங்கள் : வேண்டும் என்று விரும்புபவற்றிக்கு, முன்னதாக நன்றி தெரிவிக்கும் செயல் ஆசைகளை முடுக்கிவிட்டு, பிரபஞ்சத்திற்கு இன்னும் சக்தி வாய்ந்த சமிக்கையை அனுப்பும்
வேண்டியதை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை மனத்தில் உருவாக்குவது தான் அக்க்காட்சிப் படைப்பாகும். . அகக்காட்சிப் படைப்பில் ஈடுபடும் போது அவற்றை இப்போதே கொண்டிருக்கும் உணர்வையும் சக்திமிக்க எண்ணங்களையும் உருவாக்கும்.
மனக்கண்ணால் என்ன பார்த்தீர்களோ அதே யதார்த்தத்தை ஈர்ப்பு விதி உங்களுக்கு திருப்பி அளிக்கும்...