10/04/2019

R2A2 சூத்திரம்...


நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது மட்டுமன்றி எப்படி செய்ய வேண்டும் என்பதையும் இந்த சூத்திரத்தை மனதில் கொண்டால் போதும்..

உங்கள் இலக்குகளை அடைவதற்குப் பயன்படும் விதமாக நீங்கள் பார்க்கும் , கேக்கும், படிக்கும் அனுபவங்களிலிருந்து கோட்பாடுகளை , உத்திகளை , முறைகளை கண்டுணர்ந்து தொடர்பு கொண்டு , உள்வாங்கி பிரயோகியுங்கள்.. இதுவே R2A2 சூத்திரம் எனப்படுகிறது.

R2 எனப்படுவது கண்டுணர்ந்து தொடர்பு படுத்திப் பார்ப்பது. (Recognize and Relate).

A2 எனப்படுவது உள்வாங்கி பிரயோகிப்பதை குறிக்கிறது (Assimilate and Apply).

உங்கள் பயனுள்ள இலக்குகளை அடைய உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொண்டு , உங்கள் எண்ணங்களை வழிப்படுத்தி , உணர்வுகளைக் கட்டுப்படுத்தி , உங்கள் தலைவிதியை தீர்மானியுங்கள்..

இலக்குகளை மற்றும் அதனை அடையும் வழிகளை முதலில் கண்டுணருங்கள் அவற்றை உங்கள் கனவுடன் தொடர்புபடுத்தி பாருங்கள்..

அவற்றை முழுதாக உள்வாங்குங்கள் அதனை பிரயோகித்து இலக்கினை அடையுங்கள்...

தமிழ் தேசியம் குறுகிய வட்டமாம். மனிதநேயம் தான் அதைவிடப் பெரியதாம்...


அப்படியே பார்த்தாலும்,பேரண்டத்துடன் ஒப்பிட்டால் உலகமே சிறியது தான். கடுகளவு கூட கிடையாது.

என் உரிமையை நான் ஒரு நொடிக்கு எடுத்துக் கொண்டால் மறுநொடி இந்த உலகமே அழியும் என்ற நிலை வந்தாலும் கவலை இல்லை.

இவ்வுலகம் அடங்கிய சூரிய குடும்பத்தோடு பால்வெளி அண்டமே அழிந்து போனாலும் பேரண்டம் பாதிப்பேதும் இல்லாமல் தொடர்ந்து இயங்கத் தான் போகிறது.

ஆக என் உரிமையை விட்டுக் கொடுக்க என்னால் முடியாது...

பல்லாங்குழிக்கு பின் இத்தகைய உளவியல் சிந்தனையா – ஆதி தமிழன் அற்புதங்கள்...


இப்போது நாம் பார்க்க இருக்கும் விளையாட்டு பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுக்களாகவே இருக்கும்.

சரி பெண்கள் மற்றும் சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுக்களில் என்ன சமநிலை போதிக்கப்படுகிறது. நாம் பார்க்கவிருக்கும் விளையாட்டு பல்லாங்குழி, பல்லாங்குழியின் நோக்கம் பற்றி அறிந்து கொள்வோம்..

பல்லாங்குழி விளையாட்டு அதிகமாக பெண்களால் மட்டுமே விளையாடப்படுகிறது, இந்த விளையாட்டு பெண்களுக்கு பல உளவியல் நற்கருத்துக்களை போதிப்பவையாகவே உள்ளன.

ஆம்.. பல்லாங்குழி என்பது இரு வரிசையில், வரிசைக்கு ஏழு குழி என்ற வகையில் மொத்தம் 14 குழிகளோடும், குழிக்கு ஐந்து புளியங்கொட்டை என்ற வீதம் விளையாடப்படும் ஆட்டம்.

இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடுபவர் எதாவது ஒரு குழியில் இருந்து புளியங்கொட்டைகளை எடுத்து அக்குழியைத் தொடர்ந்து இருக்கும் அடுத்தடுத்த குழிகளில் ஒவ்வொரு கோட்டையாக நிரப்ப வேண்டும்.

இப்படியாக எடுக்கப்பட்ட கொட்டைகள் முடியும் குழியை அடுத்த குழியில் இருந்து மீண்டும் கொட்டைகளை எடுத்து அதே போன்று மற்ற குழிகளை நிரப்ப வேண்டும்.

ஒரு தருணத்தில் கொட்டைகள் முடியும்  போது ஒரு வெற்று குழி உண்டாகும், அப்போது அந்த வெற்றுக்குழியை துடைத்துவிட்டு அதனை அடுத்து இருக்கும் குழியில் இருக்கும் கொட்டைகளை தனதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இது தான் அந்த ஆட்டக்காரர் வெற்றி பெற்ற கொட்டைகள்.

இதை தொடர்ந்து அடுத்த ஆட்டக்காரர் இதே போன்று  ஆடத்துவங்குவார்.

ஆட்டத்தின் இறுதியில் எவரிடத்தில் வெற்றி பெற்ற கொட்டைகள் அதிகம் உள்ளதோ அவரே வென்றவர் ஆவார்.

இந்த விளையாட்டின் நோக்கம் என்ன தெரியுமா...

கிடைத்ததை பெருக்கவும், பெருகும் போது பிறருக்கு கொடுக்கவும், கொடுப்பதையும் ஏற்ற இறக்கம் இன்றி சமமாக கொடுக்க வேண்டும், என்றாவது ஒரு தருணத்தில் இருப்பதை எல்லாம் கொடுத்துவிட்டு ஒன்றும் இல்லாத நிலை வரும் போது, நிச்சயம் ஒரு புதையல் உன்னை வந்து சேரும் என்பதே இந்த ஆட்டம் உணர்த்தும் விதி.

ஈகை பண்பை நமது மகளிர்களுக்கும் சிறுவர்களுக்கும் போதிக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே இந்த விளையாட்டு...

ஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்...


1. விரும்பு / 1. Lea to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise leaing.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Disce the good and lea.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Lea when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Lea from the leaed.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubbo.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to lea.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement...

தேர்தல் ஆதாயத்திற்காக கன்னட ஈ.வே.ரா சிலையை உடைத்த திமுக...


பெரியார் சிலையை உடைத்த விவகாரத்தில் பக்கத்தில் இருந்த CCTV காட்சிகளை வைத்து பார்த்த போது மாவட்ட திமுக மாணவர் அணி நிர்வாகி இந்த செயலை செய்தது அம்பலம் ஆனதால் கைது ...

நேற்று யோக்கியன் போல் பேசிய திராவிட கட்சி நண்பர்களே இதற்கு உங்கள் பதில் என்ன...

தமிழினத் துரோகி திமுக வும் வேண்டாம்... எதிரி காங்கிரசும் வேண்டாம்...


ஏழு கோடி தமிழர்களுக்கு துரோகம் செய்து - ஒன்றரை லட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த ஆதிக்கவாதிகளும் வேண்டாம்...

உணவு இடைவேளையில் உண்ணாவிரத நாடகம் நடத்தி - ஈழத்தமிழர் இனப்படுகொலையை வேடிக்கை பார்த்த அடிமைகளும் வேண்டாம்...

யாளி - சிறு குறிப்பு...


யாளி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகம் என்று நம்பப்படுகிறது.

யாளி என்பது இந்துக் கோயில்களில் காணப்படும் ஒரு கற்பனை உயிரினச் சிற்பமாகும். இது வியாழம், சரபம் எனும் பெயர்களாலும் அறியப்படுகிறது.

பொதுவாக இவை இந்துக் கோயில்களின் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன.

தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும்.

இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது.

பொதுவாக யாளியானது யானையைத் தாக்குவது போன்று சிற்பங்களில் சித்தரிக்கப் படுகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் வேறு சில முருகன் கோயில்களிலும் கடவுள்களின் (உற்சவர்) சிலைகள் உலா வரும் பொழுது யாளி போன்று வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் வருவது வழக்கம்.

யாளியின் பூர்விகம்...

யாளி என்கிற, சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவுபடுத்தும் உறுப்புடன் காணப்படும் இந்த விலங்கு இந்தியாவில் கி.மு 25,000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழக்கத்திற்கு வந்தது. தமிழ்நாட்டில் கோயில்கள் செங்கற்களிலிருந்து கருங்கற்களாக மாறத் தொடங்கியது கி.பி 800 -களில். பராந்தக சோழன் மற்றும் ஆதித்த சோழன் காலத்தில் முதன்முதலாகக் கோயில்கள் கருங்கற்கள் கொண்டு கலைநயத்துடன் கட்டப்பெற்றன. இதனைக் 'கற்றாளி' என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுவார்கள். இதற்கு முன் இந்தியக் கோவில்களில் உள்ள சிற்பங்களில், எடுத்துக்காட்டாக மாமல்லபுரம், அஜந்தா, புத்தவிகாரங்கள் போன்றவற்றில் இந்தச் சிற்பத்தினைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தியச் சிற்ப சாத்திரங்களிலும் இதைப் பற்றிக் குறிப்புகள் இல்லை.

யாளி வகைகள்...

யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பை கொண்டுள்ளன. அவற்றின் தலை வேறு ஒரு மிருகத்தின் சாயலில் வடிவமைக்கபடுகின்றன. யானை, சிம்மம், மகரம் ( ஆடு ) , அரிதாக நாய், எலி போன்றவற்றின் தலைகள் யாளியிடம் காணலாம்.

பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்...

(௧) சிம்ம யாளி (௨) மகர யாளி (௩) யானை யாளி...

மேளகர்த்தா ராகங்கள்...


ஸ்வர சமூகங்களின் சேர்க்கையில் ஏற்படும் எந்த தொனியாவது, செவிக்கும் மனதிற்கும் இன்பத்தை அளிக்கிறதோ, அதுவே ராகம் என்று பெயர்படும்.

கர்னாடக சங்கீததில் முக்கியமானது கர்த்தா ராகங்கள் (தாய் ராகங்கள்) என்பது. அவைகள் மொத்தம் 72. ரி, க, ம, த, நி, என்கிற விக்ருதி ஸ்வரங்களின் மூன்றுவித ப்ரஸ்தாரங்களினால் 72 மேளகர்த்தாக்கள் ஏற்பட்டன.

இந்த 72 மேளகர்த்தாக்களில் முதல் 36 ராகங்களுக்கு “சுத்த மத்யம” ராகங்கள் என்றும், அடுத்த 36 ராகங்களுக்கு “ப்ரதி மத்யம” ராகங்கள் என்றும் பெயர்.

சுத்த மத்யம ராகங்கள்...

1.  கனகாங்கி
2.  ரத்னாங்கி
3.  கானமூர்த்தி
4.  வனஸ்பதி
5.  மானவதி
6.  தானரூபி
7.  சேனாவதி
8.  ஹனுமதோடி
9.  தேனுகா
10. நாடகப்ரியா
11. கோகிலப்ரிய
12. ரூபவதி
13. காயகப்ரியா
14. வகுளாபரணம்
15. மாயாமாளவகௌளை
16. சக்ரவாகம்
17. ஸீர்யகாந்தம்
18. ஹாடகாம்பரி
19. ஜங்காரத்வனி
20. நடபைரவி
21. கீரவாணி
22. கரஹரப்ரியா
23. கௌரீமனோஹரி
24. வருணப்ரியா
25. மாரரஞ்ஜனி
26. சாருகேசி
27. ஸரஸாங்கி
28. ஹரிகாம்போஜி
29. தீரசங்கராபரணம்
30. நாகாநந்தினி
31. யாகப்ரிய
32. ராகவர்த்தினி
33. காங்கேயபூஷிணி
34. வாகதீஸ்வரி
35. சூலினி
36. சலநாட்டை

ப்ரதி மத்யம ராகங்கள்...

37. ஸாலகம்
38. ஜலார்ணவம்
39. ஜாலவராளி
40. நவனீதம்
41. பாவனி
42. ரகுப்ரிய
43. கவாம்போதி
44. பவப்ரிய
45. சுபபந்துவராளி
46. ஷட்வித மார்கிணி
47. ஸீவர்ணாங்கி
48. திவ்யமணி
49. தவளாம்பரி
50. நாமநாராயணி
51. காமவர்த்தினி
52. ராமப்ரிய
53. கமனாச்ரம
54. விச்வம்பரி
55. ச்யாமளாங்கி
56. ஷண்முகப்ரிய
57. சிம்ஹேந்த்ரமத்யமம்
58. ஹேமவதி
59. தர்மவதி
60. நீதிமதி
61. காந்தாமணி
62. ரிஷபப்ரிய
63. லதாங்கி
64. வாசஸ்பதி
65. மேசகல்யாணி
66. சித்ராம்பரி
67. ஸுசரித்ரம்
68. ஜோதிஸ்வரூபிணி
69. தாதுவர்த்தனி
70. நாஸிகாபூஷணி
71. கோஸலம்
72. ரஸிகப்ரிய...

குழந்தைகளுக்கு திக்குவாய் ஏன் ஏற்படுகிறது...


தட்டுத்தடங்கல்களோடு சரளமாக பேச முடியாத குறைதான் திக்குவாயாகும். திக்குவாய் உடல்ரீதியான பிரச்சனை இல்லை. வாயும் தொண்டையும் நன்றாக இருக்கும் போதே பலருக்கு திக்குவாய் ஏற்பட்டிருக்கிறது. திக்கித்திக்கி பேசுவது மனரீதியான பிரச்சனையின் காரணமாகத்தான். திக்குவாயர்கள் பேசும்போது திக்கித்திக்கி பேசுவார்கள். ஆனால் பாட்டு பாடச் சொன்னால் திக்காமல் தெளிவாக பாடி முடித்து விடுவார்கள். பேசும் போது தானாக யோசித்து பேச வேண்டியுள்ளது.

எனவே எங்கே நாம் தவறாக பேசி விடுவோமோ, பிறர் நம்மை தவறாக நினைத்துக் கொள்வார்களோ என்ற பயத்தில் பேச்சு சரளமாக வருவதில்லை. ஆனால் பாட்டு யாரோ பாடியது. எனவே அதைப் பாடும் போது எவ்வித மன பயமும் இன்றி தெளிவாக திக்காமல் பாடி விடுகிறார்கள். இதிலிருந்தே திக்குவாய் மனம் தொடர்பான நோய் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

குழந்தைகளை அடக்கி அடக்கி வளர்த்தல் திக்குவாய் ஏற்பட முதல் காரணம் ஆகும். ‘அதைச் சொல்லாதே, இதைச் சொல்லாதே, சத்தம் போடாதே’ என்று எப்போதும் குழந்தைகளை மிரட்டிக்கொண்டே இருப்பது குழந்தைகளின் ஆழ்மனதில் கட்டுப்பாட்டை உண்டாக்கி இயல்பாக தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த இயலாத நிலைக்கு அவர்களை இட்டுச் செல்கிறது.

ஒருவர் தன் சகோதரரை எதிர்த்து பேசாதே என்று சாட்டையை கையில் வைத்துக் கொண்டு மிரடிக் கொண்டே இருந்தார். அப்பையன் வளர வளர திக்குவாய் தோண்றி பெரியவனானதும் நல்ல திக்குவாயனாக மாறிவிட்டான். சிறு வயதில் மிரட்டிக் கொண்டே இருந்ததே இதற்கு காரணம்.

பழக்கத்தின் காரணமாகவும் குழந்தை பருவத்தில் திக்குவாய் உருவாகி பின் வாழ்க்கை முழுவதும் தொடரலாம்.

வீட்டில் தாத்தா, பாட்டி அப்பா அம்மா என யாராவது ஒருவருக்கு திக்குவாய் பழக்கம் இருந்தால் அவ்வீட்டில் வளரும் குழந்தை அவர்கள் பேசுவதை கூர்ந்து கவணித்து தானும் திக்கித்திக்கி பேச கற்றுக் கொண்டு விடும். ஒருவர் சிறுவயதில் தன் நண்பனுக்கு திக்குவாய் இருந்ததால் அவனை கேலி செய்யும் விதமாக திக்கி திக்கி பேசி கிண்டலடித்தார். பின்னர் அதுவே இவருக்கும் பழக்கமாகிப் போய்விட வயதாகிய காலத்தில் இன்னமும் திக்கி திக்கி பேசிக் கொண்டிருக்கிறார்.

மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மை சமூக சூழலில் ஒருவரை திக்கிப் பேச காரணமாக அமையலாம். கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் வகுப்பில் எழுந்து நின்று பிறர் முன்னிலையில் பேசும் போது மட்டும் திக்கிப் பேசுவார்.

ஆனால் வகுப்பிற்கு வெளியே தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவருக்கு திக்குவாய் இருக்காது. இயல்பாக பேசுவார் பிறர் முன்னிலையில் பேசும் போது தவறாக பேசி விடுவோமோ என்ற தாழ்வு மனப்பான்மையே திக்கிப் பேசுவதற்கு காரணம்.

திக்குவாய் குணமாகக் கூடிய ஓர் உளவியல் பிரச்சனை..

குழந்தைகளுக்கு திக்குவாய் உள்ளது என்பதை கண்டறிந்து கொண்டால் உடனே உளவியல் மருத்துவரை அணுக வேண்டும். அத்தகைய குழந்தைகளுக்கு பேச்சு தொடர்பான உடல் உறுப்புகளில் எவ்வித குறையும் இல்லை எனச் சோதித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

அதற்குப் பின்னர் குழந்தைகள் திக்கிப் பேசினால் உடனே அதை திருத்தி நன்றாக பேச செய்ய வேண்டும். அதட்டிப் பேசாமல் அன்புடன் இதைச் செய்வது நன்று. அத்தகைய குழந்தைகளை பெற்றோர் தம் முன்னிலையில் பிறரிடம் பேச வைக்க வேண்டும்.

அதிகமான அளவுக்கு வெளியிடங்களுக்கு அழைத்து சென்று பிறரிடம் பயமின்றி உடையாட பெற்றோர் உதவ வேண்டும். திக்குவாய் குறையை குழந்தை முன்னிலையிலேயே அனைவரிடமும் சொல்லி கவலைப்படுவதை தவிர்ப்பது நன்று.

மேலும் குழந்தை திக்காமல் நன்றாக பேசும் சமயங்களில் குழந்தையை முதுகில் தட்டிக் கொடுப்பது, தலையை தடவுவது போன்ற செயல்களின் மூலம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

நன்கு வளர்ந்த பெரியவர்களுக்கு திக்குவாய் இருப்பின் அவர்களும் இக்குறையை போக்கிக் கொண்டு நன்றாக பேச முடியும். இவர்கள் முதலில் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எவ்வித மனப்பதட்டமும் இல்லாத நிலையில் என்னால் பிறர் முன்னிலையில் திக்காமல் தெளிவாக பேச முடியும் என்று தனக்குத்தானே சுய கருத்தேற்றம் செய்து கொள்ள வேண்டும். தினமும் ஏதாவது ஒரு புத்தகத்தில் ஐந்து பக்கங்களை மிக மிக மெதுவாக ஒரு ஸ்டூலின் மீது ஏறி நின்று காலையிலும் மாலையிலும் படித்து வர வேண்டும்.

இவ்வாறு படிக்கும் முறைக்கு நீட்டிப் படித்தல் என்று பெயர். ஸ்டூலின் மீது ஏறி நின்று படிக்கும் போது முன்னால் நிறைய பேர் அமர்ந்திருப்பதாக கற்பனை செய்து கொண்டு படிக்க வேண்டும்.

திக்குவாய் உள்ளவர்கள் மேற்கண்ட பயிற்சிகளோடு ‘எனக்கு உள்ள திக்குவாய் பிரச்சனையிலிருந்து நான் வெளிவந்தே தீருவேன்’ என்று மனதினுள் பெருங்கோபம் கொள்ள வேண்டும். அவ்வுறுதியினை வலிமையாக்கும் விதமாக நீண்ட தூரம் நடைப் பயிற்சி செய்தல், நீண்ட நேரம் நீந்துதல், நீண்ட நேரம் கயிறு தாண்டுதல் போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம்.

மேற்கண்ட பயிற்சிகளை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் திக்குவாய் பிரச்சனையை விரைவில் தீர்த்துவிடலாம். தற்காலத்தில் உளவியல் வல்லுநர்கள் மேற்கண்ட பயிற்சிகளை அளிப்பதன் மூலம் ஆறே நாட்களில் திக்குவாயை குணமாக்குகிறார்கள். உங்களுக்கு திக்குவாய் இருந்தால் நீங்களும் முயன்று முன்னேறலாமே...

கர்மா...


ஒருவன் பிறக்கும் போதே பணக்காரனாகவும் ஏழையாகவும் ஆரோக்கியமாகவும் நோய்வாய்பட்டும் பிறக்க காரணம் என்ன என்பதை ஆராய்ந்ததில் எனக்கு கிடைத்த பதில் ஒன்றே ஒன்று தான்.

அது தான் கர்மா...

கர்மா என்பது நாம் எடுத்த முதல் பிறவியில் இருந்து நம் சித்தத்தில் பதிந்த விடயங்கள் ஆகும்.

இயற்கைத் தான் சேர்த்து வைத்துள்ள மொத்த அறிவையும் பயன்படுத்தி மிக மிக எளிய வழியில் சம்பவங்களை நிகழ்த்துகிறது.

உதாரணமாக இன்று ஒருவனுக்கு விபத்து நேர வேண்டும் எனில் அந்த சூழலை முன்னமே அறிந்த இயற்கை திடீரென அவன் மனதில் ஒரு எண்ணத்தை உருவாக்கும்.

எப்படி எனில் வேறு வேலைகளில் அவன் ஈடுபட்டிருந்தாலும் திடீரென வண்டியில் அங்கே சென்று அந்த வேலையை முடித்து வருவோம் என தோன்றும்.
உடனே இவனும் கிளம்பி போய் வாகனத்தில் அரைபட்டு மால்வான்.

இவனுக்காக அந்த சூழல் உருவாக்கப் படாவிட்டாலும் இவனை அதனுடன் எளிமையான சிந்தனையில் மூலம் தொடர்புபடுத்தி விடுகிறது.

நம் மனம் இரண்டு விதமாக இயங்குகிறது..

ஒன்று நாமாக மனதினை இயக்கி செயல்படுத்துவது. இது சங்கற்பம் எனப்படும்.

மற்றொன்று தாமாக இயங்கும் மனதை கண்கானிப்பது. இது விகற்பம் எனப்படும்.

இதில் இரண்டாவது வகையான விகற்பத்தின் ஊடே தான் நம் கர்மா செயற்படுகிறது.

இதனை நிறைவேற்றுவது கிரகங்கள், தெய்வங்கள், ஆவிகள் மற்றும் பிறரின் வலுவான எண்ணங்கள் ஆகும்.

திடீரென உதிக்கும் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன் கர்மாவால் அலைக்கழிக்கப் படுகிறான்.

மனம் செயல்படாத ஒருவனை கர்மாவால் எதுவும் செய்ய இயலாது.

உதாரணம் கோமா நிலையில் இருப்பவன்.

அதே போல் மனதை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனையும. கர்மா தீண்டாது.

உனக்கு நடக்கும் ஒவ்வொரு செயலும் உன் மன எண்ணங்கள் மூலமே நடக்கிறது. எந்த ஒரு செயலும் முதலில் மனதில் தான் நடக்கிறது. பிறகு தான் ஸ்தூல உலகில் அது செயல்படும்...

தமிழைப் பழித்த கன்னட ஈ.வெ.ரா...


யாராவது தேசியம் நாட்டுப்பற்று, மொழிப்பற்று என்று எதைச் சொன்னாலும் அதற்கு எதிராக பேசி அவர்களை கடுப்படிப்பது என்பது மட்டுமே ஒருவரது வேலையாக இருந்தது என்றால் அது மிகையாகாது.

யார் எதைச் சொன்னாலும் அதற்கு எதிராகவும் குதர்க்கமாகவும் பேசி அவர்கள் மனம் கோனுவதை பார்த்து ரசிப்பது ஒரு வித சைக்கோ பழக்கம்.

அத்தகைய பழக்கம் கொண்ட ஒருவர், தமிழகத்தில் தமிழை வளர்க்க வேண்டும் என பலரும் சொல்லும் போது இல்லை தமிழை விட்டொழியுங்கள், ஆங்கிலத்தை வீட்டு மொழி ஆக்குங்கள் என்று ஏறுக்கு மாறாக முழங்கி தாய்மொழியாம் தமிழை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தரம் தாழ்த்திப் பேசி தமிழர்களை கடுப்பேற்றி அதனால் மிகுந்த சந்தோஷம் கொண்டார். அத்தகைய குரூர குணம் கொண்டவர் யார் என்று கேட்கத் தோன்றுகிறதா?

அட, வேறுயாராக இருக்கமுடியும் – கன்னட ஈ.வெ ராமசாமி நாயக்கரைத் தவிர.

தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, அதை பேசும் தமிழனுமொரு காட்டுமிரான்டி என்று அவர் சொன்னதாகச் சொல்லுவார்கள். சரி தமிழை தரம் தாழ்த்தி அவர் வேறென்ன சொன்னார் என்பதையும் கொஞ்சம் பார்ப்போம்.

தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் போன்றது தமிழ், எனினும் அந்த தாய்ப்பாலில் சக்தியும் சத்தும் இல்லை. தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு நோயாளியாகவும் இருக்கும் போது அந்தப்பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக இருக்குமா?

தாய்ப்பாலை அதாவது தமிழை எதற்காக படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்கு பயன்படுகிறது?

உலக ஞானத்தில் முற்போக்கு தன்மையில் தமிழுக்கு எந்த சிறப்பும் இல்லை.

தமிழனுக்கு தெளிவான நேரான சரித்திரம் எதுவும் இல்லை.

மனித வாழ்வுக்கு மொழி முக்கியம் என்றால் உலகில் மற்ற நாடுகளைக் காணும் போது தமிழ்நாட்டுக்கு தமிழ் மொழி என்ன பயனை அளித்திருக்கிறது?

ஆங்கில எழுத்துக்களையே தமிழ் எழுத்துக்களுக்கு எடுத்துக் கொள்ளலாம். ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் வந்தால் நான் பெரிதும் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன்..

மேற்கண்ட கூற்றுக்கள் யாவும் ஈவெரா வின் அறிக்கை மற்றும் கட்டுரைகளில் காணக்கிடைக்கின்றன. ம பொ சிவஞானம் அவர்கள் அக்காலத்தில் ஈவெராவின் இது போன்ற தமிழுக்கெதிரான மற்றும் ஆங்கில ஆதரவுக் கட்டுரைக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் என்பதை "தாய்ப்பால் பைத்தியம் - ஈ வே ரா கண்டு பிடிப்பும் ம பொ சி மறுப்பும்" என்கிற சிறிய நூலில் பா. குறிஞ்சிக்குமரன் தொகுத்தளித்திருக்கிறார்.

தமிழ், தமிழன் என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் முற்போக்கு வியாதிகளும் ஈவெரா அடிபொடிகளும் தமிழுக்கெதிராகவும் தமிழை அவமதித்தும் ஈவேரா பேசியதை மறைத்தே வருகின்றன.

தமிழின் அருமை என்னவென்று கொஞ்சமும் தெரியாத கன்னடரான ஈவேரா தமிழ் மொழியில் சத்தில்லை அதனால் தமிழ் நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை என்றெல்லாம் தன்னால் ஆனவரை தமிழை உமிழ்ந்திருக்கிறார். ஆனால் சூடு சுரனை இல்லாத இன்றைய முற்போக்கு சிந்தனை பேசும் டமில் ஒணர்வாளர் கூட்டங்கள் ராமசாமி நாயக்கரையே தங்களது ஆதர்ஷ புருஷராக கொண்டாடி வருகின்றனர். ஆனால் அழிவின் விளிம்பில் இருந்த தமிழை அச்சு இயந்திரத்தில் ஏற்றி காப்பாற்றிய உவே சுவாமிநாத ஐயரை புறம் தள்ளுகின்றனர்.

இப்படி யாரை ஆதரிக்கிறோம் என்று விவஸ்தை இல்லாமல் உணர்ச்சி வசப்பட்ட கூட்டமாய் ஈவேராவை தமிழர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதை தெரிந்தேதான் தமிழ் காட்டுமிரான்டி மொழி என்றும் தமிழனை காடுமிரான்டி என்றும் ஈவேரா சான்றிதழ் கொடுத்திருப்பார் போல.

நாம் காட்டுமிரான்டியாக கன்னட ஈவேராவை போற்றி தமிழை வெறுக்க வேண்டுமா அல்லது சிந்திக்க தெரிந்த மனிதர்களாக உ வே சாமிநாத ஐயரைப் போற்றித் தமிழை வளர்க்க வேண்டுமா?

சிந்தியுங்கள் தமிழர்களே..
சிந்திக்கும் திறனிருந்தால்?

உறுதியேற்ப்போம் நண்பர்களே...


இனி,  பற்பொடியில் இருந்து. குளியல் பொடி உப்பு மற்றும் மசாலா பொருட்க்கள் உள்ளிட்ட..

நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் உள்ளூர் தயாரிப்பாகவே இருக்க வேண்டும்..

இதனால் நம் ஆரோக்கியம் பாதுகாக்கபடுவதோடு எந்த பன்னாட்டு நிறுவனமும் நம்மை சுரண்ட முடியாது...

அபான முத்திரை விளக்கம்...


முத்திரை பயிற்சிகளின் மூலம் உடலில் பஞ்ச பூதங்களை சமன்படுத்தலாம் என்பது நம் முன்னோர்களின் அரிய கண்டு பிடிப்பு.

மனிதனின் இயல்பான செயல்பாடுகளே முத்திரைப் பழக்கம். காலப்போக்கில் இதன் முக்கியத்துவத்தை நாம் மறந்து விட்டோம்.

நம் சாஸ்திரங்கள் எல்லாம் மூட நம்பிக்கைகள் என்று வெள்ளைக்காரர்கள் நம்மவர்களை நன்றாக மூளைச்சலவை செய்துவிட்டு போய் விட்டார்கள். நாமும் அவர்களை நம்பி நம் சாஸ்திரங்களை இழந்து நிற்கிறோம்.

மீண்டும் நம் சாஸ்திரங்களுக்கு உயிர் கொடுக்க வேண்டும். இதன் பயன் அளப்பரியது.

நாம் தினமும் காலையில் எழுந்தவுடன்  காலைக் கடன்களை முடித்து உடலை சுத்தி செய்கிறோம்.

அதாவது உடலுக்கு அக சுத்தி, புற சுத்தி இரண்டையையும் செய்கிறோம்.

புற சுத்தியை தண்ணீரில் நீராடுவதன் மூலம் எளிதில் செய்து கொள்ளலாம்.

அக சுத்தி என்பது உடல் தனக்கு தானே செய்து கொள்வது. அது இயல்பாக நடக்க வேண்டியது.

அக சுத்தி இயல்பாக நடக்கவில்லை என்றால் உடலில் கழிவுகள் தங்கி நோய்களை உருவாக்கும்.

இவ்வாறு இயல்பாக கழிவு நீக்கம் நிகழாத போது கை விரல்களை குறிப்பிட்ட முறையில் அழுத்திப் பிடித்தால் உடல் உரிய வேலையை தானே செய்து கொள்ளும்.

படத்தில் காட்டியுள்ள விரல்களை காலை எழுந்தவுடன் குறைந்தது 10 நிமிடங்கள் அழுத்திப் பிடித்தால் உடல் கழிவுகளான மலம், மூத்திரம் போன்றவை எளிதில் வெளியாகும். படத்தில் காட்டப்பட்டுள்ளது அபான முத்திரையாகும்.

அபானன் என்றால் வெளித்தள்ளுபவன் என்று பொருளாகும். கை விரல்கள் ஐந்தும் பஞ்ச பூதங்களை குறிப்பவையாகும்.

அதில் பெரு விரல் நெருப்புத் தத்துவத்தையும்.. ஆள் காட்டி விரல் வாயு தத்துவத்தையும்.. நடு விரல் ஆகாய தத்துவத்தையும்.. மோதிர விரல் நில தத்துவத்தையும்.. சிறு விரல் நீர் தத்துவத்தையும் குறிக்கின்றன.

உடல் உள்ள முத்தோசங்கள் என்பவை வாதம் (வாயு), பித்தம் (நெருப்பு),  கபம் ( நீர்) என்பவை ஆகும்.

இதில் நீரானது நிலத்தை பற்றி நிற்கும்,  நெருப்பும், காற்றும் ஆகாயத்தை பற்றி நிற்கும்.

அதாவது நீரை நிலம் உறிஞ்சிக் கொள்ளும், நெருப்பையும், காற்றையும் ஆகாயம் உறிஞ்சிக் கொள்ளும்.

இதன் அடிப்படையில் உடல் கழிவுகளை வெளியேற்ற ஆகாயத்தைக் குறிக்கும் நடு விரலும், நிலத்தைக் குறிக்கும் மோதிர விரலும் அபான முத்திரையின் மூலம் அழுத்தப்படுகின்றன.

இதன் பயன் மலசிக்கல் நீங்கும், மூல வியாதி குணமாகும், சிறு நீர் நன்றாக வெளியேறும். உடல் கழிவுகள் அனைத்தும் எளிதில் வெளியேறும்...

தமிழ் நாட்டுக்கு பிழைப்பு தேடி வந்தவன் எல்லாம் தமிழனாக போலி முகத்திரையில்...


தமிழ் நாட்டில் பிழைபதற்கு தன்னை தமிழன் என்று அறிமுகம் செய்துக் கொண்டான்..

இதனை நம்பி ஏமாந்த தமிழன்..

வந்தவன் பிழைத்து கொண்டான்...

இதில் யாரை குற்றம் சொல்லுவது ?

பிழைப்பு தேடி வந்தவனா?
வந்தவனை பிழைப்பதற்கு வழி விட்ட தமிழனையா ?

அந்த வகையில் தமிழனை இளித்த வாயனாக மாற்றி பிழைத்தவர்கள் பிழைத்து கொண்டு இருபவார்கள்..

தமிழா சிந்தித்து செயற்பட முன் வா..

பிழைப்புக்கு வந்தவனை புறக்கணிக்க வேண்டாமா ?

தமிழன் அழிந்து கொண்டு இருபது வந்தவனால் மட்டுமே..

இதனை புரிந்து கொண்டு தமிழன் செயற்பட வேண்டும்..

தமிழர்கள் நாம் தமிழர்களையே ஆதரிக்க வேண்டும்...

தமிழர்களுக்கு மட்டுமே வாக்களிப்போம்..

தமிழனை மட்டுமே தேர்தெடுப்போம்...

தமிழனிடம் கேள்வி கேட்க்கும் முன்பு.....


பருப்பறிவு திராவிட வியாதிகள் திராவிட ஒட்டுண்ணி கழகம், கட்சி, இயக்கங்கள் தங்களுக்குள் தாங்கலே முதலில் கேட்க வேண்டிய கேள்விகள்...

1. திராவிடன்  (தெலுங்கு கன்னட மலையாளி) என்றால் யார் ?

2. இவன் திராவிடன் என்று எந்த இரத்த பரிசோதனையை கூடத்தில் கண்டு பிடிப்பது ?

3. திராவிடனை ஆரியன் ஆட்சி அதிகாரம் செய்ய கூடாது திராவிடனுக்கு ஏன் இந்த இனவாதம் ?

4. மனிதனை மனிதனாக பார்க்காமல் ஏன் பார்பான் சாதியை வைத்து திராவிடன் சாதி பார்க்கின்றனர் ?

5. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் கூற்றுப்படி திராவிட (தெலுங்கு கன்னட மலையாளி) இலக்கியம் அசுத்தம், திராவிட மன்னர்கள் ஆரிய அடிமை, திராவிட மொழி காட்டுமிராண்டி மொழி.... அப்படி என்றால் அசுத்த ஆரிய அடிமை காட்டுமிராண்டி திராவிட இழிவு தேவையா ?

6. திராவிடம் ஆதிதிராவிடம் என்று ஏன் திராவிட ஆட்சி அதிகாரம் திராவிடத்தை பிரித்தது ?

7. ஆதிதிராவிடம் உயர்ந்ததா அல்லது திராவிடம் உயர்ந்ததா ?

8. ஆதிதிராவிட ஈ.வெ.ராமசாமி நாயக்கர், ஆதிதிராவிட கீ.வீரமணி, ஆதிதிராவிட எம்.ஜி.ஆர், கருணாநிதி, வைகோ, கொளத்துர்மணி என்று அழைத்தால் ஏன் திராவிடர்கள் ஆதிதிராவிட தன்மான உணர்ச்சியை மறுக்கின்றனர் ?

9. திராவிடம் என்றால் ஏன் ஆதிதிராவிடம் உள்ளே நுழைய முடிவதில்லை ?

சங்கீதம் என்பது சரீரம், சாரீரம், சுருதி, லயம் இவைகளைக் கொண்டது...


சரீரம் : சரீரம் என்றால் உடம்பு. உடம்பு நன்றாய் இருந்தால் தான் சாரீரம் நன்றாக இருக்கும்

சாரீரம் : சாரீரம் என்றால் குரல். குரல் நன்றாக இருந்தால்தான், சுருதி நன்றாக சேரும். குரலை ஸாதக பலத்தால் நன்றாக வளமடையச் செய்ய முடியும்

சுருதி : சுருதி என்பது, மந்திரஸ்தாயி ஷட்ஜம் (ஸ) மத்யஸ்தாயி பஞ்சமம் (ப) தாரஸ்தாயி ஷட்ஜம் (ஸ்) இந்த மூன்று ஸ்வரங்களும் சேர்க்கம் இனிமையாய் ஒலிப்பதாகும். முக்கியமாகக் காது நன்றாய் கேட்க வேண்டும். பாடும் போதோ, வாத்யங்களில் வாசிக்கும் போதோ, சுருதியை நன்றாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சுருதியை தாயாருக்குச் சமமாகச் சொல்லப்படுகிறது.

லயம் : லயம் என்றால் தாளம். எண்ணிக்கையின் சமமான இடைவெளியை குறிக்கும். தாளத்தை தகப்பனாருக்கு சமமாக குறிப்பிடுவார்கள்.

கர்னாடக சங்கீதம் : கர்னாடக சங்கீதம் என்பது, ஸ்வராளி வரிசைகள், கீதங்கள், வர்ணங்கள், ராக ஆலாபனை, நிரவல், கல்பனா ஸ்வரங்கள் முதலிய அம்சங்களைக் கொண்டதாகும்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவில்.. கொள்ளையன் யார் என்று கண்டுபிடி?


பஸ்ல போனா பயண கட்டணத்தை பல மடங்கு உயர்த்துறாங்க..

பைக்ல போனா  போலீஸ் தொல்லை இன்சூரன்ஸ்க்கு வருசாவருசம் ஆயிரம் ரூபாய் அழனும்..

கார்ல போனா  வழிப்பறி கொள்ளையர்களைப் போல் 50 கி.மீ க்கு ஒரு கட்டணவசூல் மையம்..

பெட்ரோல் டீசல் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு..

இது பத்தாதுனு GST 18% - 28%..

சம்பாதிக்கிற காசுல வேற income tax 30% வரை..

இதுல  கார், பைக் வாங்குனா road tax , compulsory vehicle  insurance..

இதையும் மீறி சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்திருந்தால் Property க்கு tax கட்டணும்..

ஒரு பக்கம் பேங்குல காசு போட்டாலும் servive கட்டணம் பணம் எடுத்தாலும்  service கட்டணம்..

ATM கார்டுக்கு வருசத்துக்கு usage கட்டணம்..

Balance குறைந்தால் கட்டணம்..

Message அனுப்ப கட்டணம்..

இப்படி எட்டு பக்கமும் பிச்சுப்புடுங்குற கூட்டத்துக்கு நடுவுல வாழுறோம்..

இத விடவா வேற எதாச்சும் திருடன் வந்து நம்ம கிட்ட இருக்கறத திருடிற முடியும்...

இறந்த பிறகு என்ன நடக்கும்.?


வாழ்வில் நீங்கள் பிறப்பைக் கண்டு அஞ்சத் தேவையில்லை. அது நடந்து முடிந்து விட்டது.

அதைப்போல் வாழ்வைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. அது நடந்து கொண்டே இருக்கிறது.

அதேபோல் இறப்பைக் கண்டும் அஞ்சத் தேவையில்லை. ஏனெனில் அது தவிர்க்க முடியாதது.

அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். பின்பு எதைக் கண்டு அஞ்ச வேண்டும்?

நான் பிறக்கும் போது எந்தக் கவலையையும் சுமந்திருக்கவில்லை. எந்த மாதிரியான தொந்தரவுகளை சந்திக்கப் போகிறோம் என்று எண்ணவில்லை.

அப்போது நான் என்ற உணர்வு கூட என்னிடம் இருந்ததில்லை. அதைப்போல இறக்கும் போதும், அதே உணர்வுடன் தான் இறப்பேன், என்று எண்ணுங்கள்.

இறந்த பிறகு என்ன நடக்கும்.?

இதற்குப் போய் உன் நேரத்தை வீணடிக்காதே. நீ கல்லறையில் படுத்திருக்கும் போது அதைப்பற்றி சிந்தித்துக் கொள்ளலாம். இப்போது ஏன் நீ அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டும்.

வரலாற்று தலைவர்களின் நினைவை போற்றும் கிராமம் -- பெரியபோது...


ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட பெரியபோது கிராமத்தில் தெருக்களுக்கு வரலாற்று தலைவர்களின் பெயரை சூட்டி பெருமை சேர்த்துள்ளனர். ஆனைமலை ஒன்றியத்தில் பெரியபோது ஊராட்சி, அங்கு செல்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அங்குள்ள தெருக்களுக்கு வரலாற்று தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாக உள்ளது. பெரியபோது ஊராட்சியில், பெரியபோது, காந்தி ஆசிரமம், சித்தாண்டிகவுண்டன்புதூர் என்ற மூன்று கிராமங்களையும், ஒரு ஆண்டிற்கு முன்பு புதிதாக உருவாக்கப்பட்ட அம்மன் நகர் என்ற பகுதியையும்
கொண்டது.

இந்த ஊராட்சியில் மக்கள் ஐந்தாயிரம் பேரும், மூவாயிரத்து 500 வாக்காளர்களையும் கொண்டுள்ளது. இக்கிராமத்தில் 15 தெருக்கள் உள்ளன. காமராஜர் வீதி, இந்திராகாந்தி வீதி, பாரதியார் வீதி, கஸ்தூரிபாய் வீதி, குமரன் வீதி, விவேகானந்தர் வீதி, நேரு வீதி, ராஜாஜி வீதி, திருவள்ளுவர் வீதி, திருஞானசம்பந்தர் வீதி, வினோபா வீதி போன்ற வரலாற்று தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.பி.கே.பி. வீதி, நல்லண்ணகவுண்டர் வீதி, கிருஷ்ணசாமி வீதி போன்ற பெயர்களையும் கொண்டுள்ளது. கடைசி மூன்று பெயருள்ள தெருக்கள் பெரியபோது கிராமத்திற்கு இடம் கொடுத்தவர்களின் பெயர்கள். இதுவரை இந்த ஊராட்சிக்கு தற்போது உள்ள ஊராட்சி தலைவரையும் சேர்த்து நான்கு பேர் தலைவர்களாக இருந்துள்ளனர்.
இதில் பழனிச்சாமி என்பவர் மூன்று முறை தலைவராக இருந்துள்ளார். முன்னாள் ஊராட்சித்தலைவர்கள் சுப்பையர், ராதா கலையரசி ஆகியோரும் இருந்துள்ளனர். தற்போது ராதாகண்ணன் என்பவர் ஊராட்சியின் தலைவராக உள்ளார். மற்ற ஊராட்சிகளுக்கு முன்னுதாரணமாக அனைத்து வீடுகளிலும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள மூன்று கிராமங்கள் முழு சுகாதார கிராமம் என்ற சான்றிதழையும் டில்லியில் நடந்த விழாவில் பெற்றுள்ளது. அதில் பெரியபோது கிராமமும் உள்ளது. ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கழிப்பிட வசதி ஏற்படுத்த ஊர் பொது மக்கள் நன்கொடை வழங்கி அதன் மூலம் திட்டம் நிறைவடைந்துள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 1956ம் ஆண்டு காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியபோது ஊராட்சி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3333 ஆகும். இவர்களில் பெண்கள் 1642 பேரும் ஆண்கள் 1691 பேரும் உள்ளனர்.

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்:

சித்தாண்டிகவுண்டண்புதூர்
காந்திஆஸ்ரமம்
பெரியபோது

பெரியபோது ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தினமும் காலை வழிபாட்டில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல் பாடப்படுகிறது. பொள்ளாச்சி அடுத்துள்ள பெரியபோது ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு தமிழின் சிறப்பை விளக்கும் வகையில், செம்மொழி மாநாட்டு பாடல் கற்பிக்கப்படுகிறது. தினமும் காலை பிரார்த்தனை கூட்டத்தின்போது, மாநாட்டு பாடலையும் பாடி மாணவர்கள் அசத்துகின்றனர்.

பள்ளி தலைமையாசிரியர் திருநாவுக்கரசு கூறியதாவது:

செம்மொழி மாநாடு குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிப்பது மட்டுமின்றி, பாடலையும் பாட வைத்தால், நாளடைவில் அவர்களுக்கு தமிழின் சிறப்பு தெரியவரும். தமிழ் மீது அவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே, செம்மொழி மாநாட்டு பாடல் துண்டு பேப்பர் மூலமாக அனைத்து மாணவர்களுக்கும் வினியோகிக்கப்பட்டுள்ளது; பாடவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.தினமும் காலையில் கூட்டுப் பிரார்த்தனையின் போது, மாணவர்கள் அந்த பாடலை பாடி வருகின்றனர். தமிழ்தாய் வாழ்த்துக்கு அடுத்தப்படியாக செம்மொழி மாநாடு விளக்கப்பாடல் பாடப்படுகிறது. பின்னர், உறுதிமொழி, தேசியகீதத்துடன் பிரார்த்தனை கூட்டம் முடிவடைகிறது. இவ்வாறு, தலைமையாசிரியர் தெரிவித்தார்.

பெரியபோது ஊராட்சியில் நுழைந்ததும் ரோட்டோர குப்பைகள் நம்மை வரவேற்றது. முகம் சுளித்துக் கொண்டு ஊராட்சிக்குள் சென்றதும் அழகுச் செடிகள் சூழ வரவேற்கிறது ஊராட்சி அலுவலகம். அதேபோன்று, அழகுச் செடிகள் சூழ்ந்த நுாலகமும், ஆபத்தை வரவேற்கும் பாதுகாப்பு வேலி இல்லா பொதுக்கிணறும் கண்ணில் பட்டது. ஊருக்குள் சுற்றிய போது, திறந்த வெளி கழிப்பிடமில்லாத ரோடுகள், எல்.இ.டி., தெருவிளக்குகள், உயர்நிலைப் பள்ளி போன்ற வசதிகள் நிறைவு செய்யப்பட்டிருந்தன. மக்களிடம் பேசிய போது, 'எங்கள் ஊரில் அனைத்து வசதிகளும் உள்ளது, குப்பையைத் தவிர வேறு எந்த பிரச்னையும் இல்லை' என பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியபோது ஊராட்சியில், ஒன்பது வார்டுகளில், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். விவசாயம், விவசாயகூலி மற்றும் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்து வாழ்கின்றனர் மக்கள்.ஊராட்சியில் நுாலகம், உயர்நிலைப் பள்ளி, வறுமை ஒழிப்புத் திட்ட கட்டமைப்பு, சேவை மையம், தரமான ரோடுகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளது. ஆனால், சில காட்சிப்பொருள் கட்டமைப்புகளாலும், குப்பை மற்றும் குடிநீர் பிரச்னையாலும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.ஊராட்சியில் மொத்தம், 33 ரோடுகள் உள்ளன. தேசத் தலைவர்களான காமராஜர், நேரு உள்ளிட்டோரின் பெயர்கள் ரோடுகளுக்கு சூட்டப்பட்டுள்ளன. மெயின் ரோடுகள் தார் ரோடாகவும், மற்ற இடங்கள் கான்கிரீட் ரோடுகளாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ரோடுகள் அனைத்தும் குண்டும், குழியுமின்றி பளிச்சிடுகின்றன.

குடிநீர் சப்ளைபெரியபோது ஊராட்சிக்கு வேட்டைக்காரன்புதுார் - ஒடையகுளம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம், நான்கு மேல்நிலைத் தொட்டி, மூன்று தரைமட்ட தொட்டிகளில் குடிநீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு வாரத்துக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்படுகிறது.குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட, எட்டு ஆழ்குழாய் கிணறுகளில் தற்போது ஆறு இடங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. இதன் மூலம் நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நேரு வீதியிலுள்ள கைப்பம்புடன் கூடிய ஆழ்குழாய் கிணறு, ஒரு மாதமாக பழுதடைந்துள்ளது. பொதுமக்கள் குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கு அருகிலுள்ள தெருக்களுக்குச் சென்று தண்ணீர் எடுக்கின்றனர். நுாலகம்ஊராட்சி அலுவலகம் அருகில், 3.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் வசதிக்காக நுாலகம் கட்டப்பட்டது. பல ஊராட்சிகளில் நுாலகம் யாருக்கும் பயன்படாமல் பூட்டிக்கிடக்கும் நிலையில் பெரியபோது நுாலகத்தை, ஊராட்சி நிர்வாகத்தினர் சிறப்பாக பராமரிக்கின்றனர்...