08/07/2020

மறைக்கப்பட்ட பக்கங்கள்...



சம்பவம் 1...

டிசம்பர் 2005 அன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து கெலி ஹெஸ்க்கின் என்ற இஸ்ரேலிய யூத பெண்ணை துப்பாக்கி குண்டுகள் வைத்து இருந்ததாக கூறி கைது செய்யப்பட்டு 3 வாரங்கள் சிறையில் அடைத்து பின்னர் பத்திரமாக போய் வாருங்கள் மேடம் என்று அனுப்பி வைத்தது இந்திய அரசு..

சம்பவம் 2...

செப்டம்பர் 21 2006 ஆண்டு நோவா ஹெவுஸ் என்ற இஸ்ரேலிய பெண் மும்பை விமான நிலையத்தில் இருந்து கொச்சின் விமானத்திற்கு ஏறுவதற்கு முன்பு  கஸ்டம்ஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் காரணம் பதினாறு துப்பாக்கிகளும் அதற்கான தோட்டாக்களும் இருந்தனவாம் ...

எப்புடியா ஹாண்ட் லாஃஜெகில் இருந்ததை பார்க்காமல் விட்டீர்கள் என்றதற்கு உலகின் பாதுகாப்பான நாடான இஸ்ரேலில் இருந்து வந்துள்ளனர் ஆகவே தான் சோதனையை சரியாக செய்யவில்லை என்று மும்பை அதிகாரிகள் தெரிவித்தனராம்..

சம்பவம் 3...

2011  ஆக்டொபர் மாதம் மும்பை விமான நிலையத்தில் இருந்து காத்மாண்டு செல்ல தயாரான நிலையில் னுரித் டொக்கர் என்ற இஸ்ரேலிய பெண்மணி விசாரித்ததில் கையெறி குண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்தனர்

அதே கதை தான் ஏற்கனவே நான் இராணுவத்தில் இருந்தவள் என்னுடைய பாதுகாப்பிற்கு நான் குண்டுகளை வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.. கதையை ஆஹா ஓஹோ வென புகழ்ந்து 2012 ஜனவரி 24 ம் தேதி பாதுகாப்பான முறையில் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்..

ஏன் எல்லாமும் கொச்சின் நோக்கி படை எடுக்கின்றனர் தெரியுமா ?

இந்தியாவின் யூத நகரம் என்று அழைக்கப்படும் மாட்டஞ்சேரியில் யூத வழிபாடுத்தலமே இன்றும் உள்ளது இது 1568  கட்டப்பட்டது...

சரி இதன் முடிவு தான் என்ன ?

2012 இல் டெல்லி பிரதமர் அலுவலகம் அருகில் குண்டு வெடிப்பு நடந்தது ?

பேசுவோம்...

ஜப்பானில் கொரோனா உயிரிழப்பு குறைவே....



காரணம்.. ஜப்பானியர்கள் நம்பியது அவர்களின் அறிவை..

WHO பரிந்துரைத்த படி பரிசோதனைகளை அதிகரிக்கவில்லை, முழு  ஊரடங்கை அறிவிக்கவே இல்லை.

ஊடகம் மூலம் உயிர் பயத்தை ஏற்படுத்தும் போலி பரப்புரையை அனுமதிக்கவில்லை. அங்கு ஸ்கோர் போர்டு போட்டு ஊடகங்கள் பார்வையாளர்களை பெறவில்லை.

மக்களை பயமுறுத்தி மனநோயாளிகளாக மாற்றவில்லை.

பில் கேட்ஸ் அல்லது பெரு பார்மா நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் நாடோ, அரசோ, ஊடகங்களோ இல்லை.

மக்கள் அவரவருக்கு விருப்பப்பட்ட, நம்பிக்கையுள்ள மருத்துவமுறையை பின்பற்றியுள்ளனர்.

அவர்கள் நம்பியது அவர்களின் உடல் எதிர்ப்பாற்றலை மட்டுமே.

சுயச்சார்பு, தற்சார்பு என்று பேசினால் மட்டும் போதாது. சுயஅறிவுடன் அரசுகள் செயல்படவேண்டும்.

உள்நோக்கத்துடன் சீனாவுக்கு சாதகமாக செயல்பட்டு வரும் WHOவை புறக்கணித்துவிட்டு கொரோனாவை கட்டுப்படுத்த இனியாவது மருத்துவ வணிக எண்ணத்தை கைவிட்டு சித்த மருத்துவ குழுவிடம் முழு பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டும்...

https://bbc.in/3ithQc1

மருத்துவ மாப்பியா... பல தடவ ஏற்கனவே சொன்னது தான்...


டெங்கு வந்தபோது தினமும் தொடர்ந்து சாவு செய்திகளாகவே தொடர்ந்து டி வியில் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

இது அப்போது அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. அதனால் அப்போதைய மத்திய அரசு ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திலிருந்து ஒரு சுற்றறிக்கை அனைத்து டிவி சேனல்களுக்கும் வருகிறது.

அதில், டெங்கு செய்திகள் நிறுத்தப்பட வேண்டும், மீறினால் ஒளிபரப்பு தடை செய்யப்படும் என்று மிரட்டியது அந்த கடிதம். செய்திகள் ஒளிபரப்பாவதும் நின்றது. டெங்கும் அதன்பிறகு காணாமல் போனது.

கரோனா செய்திகள் உலக நாடுகளில் உள்ள அத்தனை அரசுக்கும் தேவைப்படுகிறது. இது ஒரு உலகளாவிய செயற்திட்டம்.

ஒரு விதத்தில் சாமானிய மக்கள் பார்வையில் அரசு பயங்கரவாதம் என்றுகூட சொல்லலாம். அரசு நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு டெங்கும், கரோனாவுமே நம் காலத்தின் அழியா சாட்சிகள்.

https://www.nytimes.com/2020/05/10/health/coronavirus-plague-pandemic-history.html