14/06/2021
ஏதோ ஆந்திராவானு நானும் ௮ப்படி தான் நினைச்சேன்....
௮ப்புறம் தான் தெரிஞ்சுது நம்மூரு விடியல் கூட்டமாம்! 😂🤣
திண்டுக்கல் மாவட்டம் பழனி௮ருகே உள்ள பாப்பம்பட்டி டாஸ்மாக் கடையில் இன்று கூடிய கூட்டம்!! 😳
மூன்றாம் ௮லை உருவானால் ௮தற்கு முழு பொறுப்பையும் முதல்வர் ஸ்டாலினே ஏற்க வேண்டும்...😡
குடியை_கெடுக்கும்_திமுக...
ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் எதற்கு - திமுக ஸ்டாலின்...
Tasmac கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அணுமதி.
கடந்த வருடம் உருட்டிய உருட்டுகளை நினைவு கூர்கிறார் பதிவர்...
ஜெர்மனி To தஞ்சை...
ஜெர்மனியின் மேற்கே பிராங்கோயன் என்ற இன மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.
இவர்கள் ஜெர்மன் மேற்கு பகுதியில் பேசிய மொழியான டச்சு என்ற மொழியை தான் பேசி வந்தனர்.
இம்மக்கள் ஜெர்மன் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்து 1581 இல் இவர்களுடைய மொழியான டச்சு மொழி அரசு ஏற்படுத்தப்பட்டது.
இவர்களுக்கென்று ஹாலந்து என்ற நாடும் உருவானது...
பின்னர் மேலே குறிப்பிட்ட அரசு தான் கிழக்கிந்திய கம்பெனியின் நிறுவனத்தார் .
அதற்கு முன்பே திருமலை நாயக்கர் ஆட்சியில் தமிழகத்தில் விவசாய பகுதியான தஞ்சை நாகை சுற்று வட்டாரத்தில் தங்களது சுரண்டல் வியாபாரத்தை தொடங்கி விட்டனர்..
இவர்களை நமது தமிழர்கள் ஒல்லாந்தர்கள் என்று அழைத்து வந்தனர்..
இதற்கு காரணம். இவர்கள் பூர்வீகம் ஜெர்மன்.. டச்சு காரர்கள் என்றும் இவர்களை அழைப்பார்கள்..
அதே போன்று ஹாலந்து நாட்டவர்களாக இருப்பதால் ஹாலந்துகாரர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்.
ஹோலந்தை தான் ஒல்லாந்தர் என்று தமிழர்கள் அழைத்தனர்.
ஒல்லாந்தர் தான் ஆலந்தூர் என்றானது.
இன்று இருக்க கூடிய ஆலந்தூர் மற்றும் ஆலந்தூரார் என்பதெல்லாம் இவர்களுடைய பெயரில் இருக்ககூடிய பெயர் தான்....
எங்கே ஆரம்பித்து எங்கே முடித்துள்ளார்கள் பாருங்கள்.
Holland + ollanthar =ஆலந்தூர்...
இறப்பு என்பது பயப்பட வேண்டிய காரியம் அல்ல...
இந்த உடலை மாற்ற கிடைக்கும் ஒரு சந்தர்ப்பம்.
உடலை விட்டு உயிர் பிரிந்தால் ஒரு பரிபூரண அமைதி கிடைக்கும்.
நல்ல மனிதர்களுக்கு மட்டும்.
தவறு செய்பவர்களுக்கு நரக வேதனையாய் இருக்கும்...
நோய்களும் உணர்வுகளும்...
நம் உடலை ஒரு பிரம்மாண்டமான தொழிற்ச் சாலையோடு ஒப்பிடலாம். இந்த தொழிற்ச்சாலையில் சராசரியாக 75 லட்சம் கோடி தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். அதாங்க ஜீன்கள்.
நாம் செய்யும் வேலைக்கு தகுந்தாற்போல் மற்ற தொழிலாளர்களும் அதற்கு ஒத்திசைவாக செயல்படுவார்கள். அதாவது நடத்தல், உண்ணல், பேசுதல், உறங்குதல் போன்ற வேலைகள்.
அந்த வேலைகள் நடைபெரும் போது நாம் உணர்வுகளை அதன்வசம் விடாமல் நம் எதிர்மறை சிந்தனைகளால் மாற்றினால் உடற்கூறு அதை நோயாக வெளிப்படுத்தும்.
இதனை பாதிக்கும் முக்கியமான நான்கு சிந்தனைகள் உள்ளன. அவை பயம், வெருப்பு, பழியுணர்ச்சி மற்றும் தாழ்வு மனப்பான்மை. இவை எதும் உங்களிடம் இல்லை எனில் நிச்சயமாக என்னால் கூற முடியும், உங்களுக்கு எந்த நோயும் இல்லை என்று.
சித்தர்களின் கூற்றுப்படி நமக்கு ஏற்படும் 4448 நோய்களும் இந்த நான்கே காரணிகளால் தான் ஏற்படுகின்றன. இங்கு சில உதாரணங்களை கொடுக்கிறேன்.
பயம் நுரையீரல் சம்மந்தபட்ட நோய்களையும்(சளி, ஆஸ்துமா போன்றவை), வெருப்பு வயிறு சம்மந்தப்பட்ட நோய்களையும்(அல்சர், சிறுநீரக கோளாறு, மஞ்சள் காமாலை போன்றவை), பழியுணர்ச்சி இரத்த சம்மந்தப்பட்ட நோய்களையும் (கேன்சர், இதய அடைப்பு போன்றவை), தாழ்வு மனப்பான்மை தோல் சம்மந்தப்பட்ட நோய்களையும்(தோல் வியாதி, அலர்ஜி போன்றவை) உருவாக்குகிறது.
நம் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுத்தும் உணர்ச்சி அதிர்வுகள் நம் உடலின் சராசரி அதிர்வுகளை மாற்றுவதாலேயே இப்படி உடற்கூறு நோயை வெளிப்படுத்துகிறது.
எனவே உங்கள் மனதில் இருந்து இந்த நான்கு காரணிகளையும் தூக்கி எரியுங்கள். பின் உங்கள் உடல் எதர்க்காக வடிவமைக்கப்பட்டதோ அதை செய்யும்.
இந்த மனயிருக்கத்தை நீங்கள் அகற்றி மகிழ்ச்சியான மனநிலையில் உங்களால் தொடர்ந்து இருக்க முடிந்தால் சர்க்கரை அளவு சீராவதையும், புற்றுநோய் செல்கள் கரைவதையும், அனைத்து நோய்களும் வெளியே ஓடியிருப்பதையும் கண்டு வியந்து போவீர்கள். இதனை இன்னும் துரிதப்படுத்த விரும்பினால் தியானம் செய்யுங்கள். இவை அனைத்திற்கும் ஹிப்னாடிசத்தில் தீர்வு உண்டு...
அகத்திக் கீரையீன் சிறப்பு..
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..
சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு மருந்திடுதல் எனும் ஒரு பழக்கம் தமிழ் மக்களை ஆட்டி வந்திருக்கிறது;
கணவனின் அன்பு தொடர மனைவியும், மனைவியின் அன்பு தொடர கணவனும், விலை மாதர்கள் தங்களுக்கு தொடர்ந்து வாடிக்கையாளர் கிடைக்கவும் இந்த மருந்திடுதலை பயன் படுத்தினர்.
உள்ளுக்குல் ஒரு சில கூட்டு மருந்துகளை சேர்த்து கொடுத்து விட்டால் அதை அருந்தியவர் கொடுத்தவரிடம் தொடர்ந்து அன்புடன் இருப்பார் என்பது ஒரு நம்பிக்கை .
அத்தகைய மருந்திடுதல் எனும் தோஷத்தை நீக்கும் சத்தி அகத்திக்கு உண்டு .
அகத்திக் கீரையை உண்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பித்த தொடர்பான நோய்கள் நீங்குகும்,
வாரத்துக்கு ஒரு முறையேனும் தவறாமல் அகத்தி கீரையை சமைத்து சாப்பிடடால் தேகத்தில் உஷ்ணம் தணியும் கண்கள் குளிர்ச்சி பெறும். குடல் புண் ஆறும் சிறு நீர் மற்றும் மலம் தாரளமாக கழியும். பித்து எனும் மனக் கோளாறும் நீங்கும், அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும் .
இதற்கு அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நான்கு பங்கு சின்ன வெங்காயம் சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினசரி ஒரு வேளை குடிக்கலாம்.
அகத்தி கீரையையும் மருதாணி இலையையும் சம அளவில் எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.
அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.
உடம்பில் காண படும் தேமலுக்கு அகத்தி கீரையீன் இலையை தேங்கா எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.
அகத்தி கீரையை சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிடலாம்..
அகத்தி கீரையை ஏகாதசி அன்று விரதமிருந்த பிறகு துவாதசியன்று உணவில் அகத்தி கீரை உடன் நெல்லிக்காயையும் சேர்த்துக் கொள்வது சிறப்பு, எதையும் அர்த்ததுடன் தான் நம் முன்னோர்கள் வகை படுத்தியுள்ளனர்.
நாம் அதை மதித்து நடக்க வேண்டும்..
அகத்தி கீரைக்கு எல்லா மருந்துகளின் வீரியத்தையும் முறிக்கும் சக்தி உண்டு .எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்..
வாரம் ஒரு முறை மட்டுமே அகத்தியை உபயோகிக்க வேண்டும் .. அதிகம் உபயோகித்தால் சொறி சிரங்கு வரும்...
நாங்கள் ஏன் திருட்டு_திமுக ௭ன்று சொல்கிறோம்...?
மதுவை ஒழிக்க 50 வருசமா நாடகம் போடுற ஒரே கோஷ்டி, ௮து நம்ம திமுக கோஷ்டி தான்...
குடியை_கெடுக்கும்_திமுக...
நான் ஒரு நடைபிணம்....
உந்தன்
ஓராயிரம் விருப்பங்களில்..
நான் மட்டும்
ஒதுக்கப்பட்ட ஓரமாய்..
ஒய்யாரக்கவிதைகளில்
நீ நனைந்திட..
அழியாக்க(றை)ரைகளாய்
தனிமையில்..
அரங்கேறாத ஆற்றலில்
எந்தன் முத்தங்கள்
அவமதிப்பு சின்னங்களாய்..
அழிவுறா வாழ்வினை வாழ ஆசை..
வழியின்றி...
அடங்கியமர்கிறது ஆன்மா..
ஏற்றுக்கொள்ளா
உந்தன் மனம்தனில்..
மழைநேர தூறலிலும்..
நனைவதாயில்லை மனம்..
கண்ணீர் துளிகள் மேலோங்கிட..
அச்சப்படும் அடிமை நிறம்
பயந்து வாழ்கிறது..
மிரட்டும் விளக்குகளின் கீழே..
திறக்கப்படாத கதவுகளில்
தீண்டாமை விளக்காய்..
தனிமை ஒளிர்வில்
உந்தன் வழிப்பாதைகளில்..
அவளின்றி நானறியா வீதிகளில்..
சடலம் இல்லை... நான்மட்டும்
நடைபிணமாய்.. நடைபிணமாய்...
😒😒😒