18/11/2021
தேன் நிலவு உருவான வரலாறு...
தேன் நிலவும் தவறான நம்பிக்கையும்...
நாம் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாக பார்ப்பது திருமணமான தம்பதிகள் கொண்டாட தேன் நிலவு ஏற்பாடு செய்வது.
தேன் நிலவு என்றால் இளம் தம்பதிகள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேறொரு இடத்திற்கு அதாவது ஊட்டி கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு செல்வது.
இதை தான் நாம் தெரிந்து வைத்துள்ளோம்.
உண்மையில் இது பிழையானது.
தேன் நிலவு என்பது கிரேக்கர்களுடைய பழக்கம் இது தான் ஆங்கிலத்தில் ஹனி மூன் என்று வந்து.. நமக்கு தேன் நிலவாக மாறியுள்ளது.
ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே அர்த்தமாக இருக்கும்..
தேன் நிலவு - ஹனி மூன்..
இது எப்படி உருவானது தெரியுமா?
ஆரம்பத்தில் கிரேக்கர்கள் மாதத்தை கணக்கிட நிலவை வைத்தே கணிக்கிறார்கள்.. அரேபிய நாகரீகத்தை போல..
ஒரு முழு நிலவை கணக்கிட்டு அதிலிருந்து அடுத்த நிலவை ஒரு மாதமாக கணக்கிட்டு கொள்கிறார்கள்.
இந்த ஒரு மாதத்திற்கு அதாவது திருமணம் முடிக்க இருக்கும் தம்பதிகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே மஞ்சள் தேன் கலந்த ஒரு விதமான பானத்தை பருக செய்கிறார்கள்..
முக்கியமாக தேன்..
ஒரு மாதம் தேன் கலந்த பானத்தை தினமும் குடிக்க வேண்டும் பின்னர் தான் திருமணம்.
இது இவர்களது பழங்கால கலாச்சார வழிமுறை...
ஒரு நிலவில் இருந்து அடுத்த நிலவு வந்த பிறகு திருமணம்.
இது தான் தேன் நிலவு என்று ஆகிற்று ..
இன்றைய தேன் நிலவுக்கும் இவர்களுடைய பழக்கத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா ?
நீங்களே யூகித்து கொள்ளுங்கள்...
வாழ்க்கை...
வாழ்க்கை
ரொம்ப விசித்தரமானது...
இங்கு
சிரிப்பவர்களை விட
சிரிப்பதை போல்
நடிப்பவர்கள் அதிகம்...
வாழ்க்கை வாழ
கற்று தருகிறதோ இல்லையோ..
நடிக்க
நன்றாக கற்று தருகிறது...
சங்கராச்சாரியார் கைகளில் உள்ள கோலுக்கு அர்த்தம் தெரியுமா?
வரலாற்றில் கோலின் முக்கியத்துவம்...
கோவிலின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?
சங்க காலத்து இலக்கியங்களில் ஆடிரை கவர்தல் என்ற வார்த்தைகள் வரும்.
இந்த ஆடிரை கவர்தல் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்றால் ஆடுகளை கவர்தல் என்று பொருள்.
உதாரணமாக இன்றைய காலத்தில் மிகப்பெரிய செல்வமாக மதிப்பது தங்கத்தை தான், ஆனால் அன்றைய காலகட்டத்தில் ஆட்டு மந்தைகளை தான் மிகப்பெரிய செல்வமாக கருதினார்கள்.
அப்படி ஒன்றை தான் ஆடிரை கவர்தல் என்கிறது தமிழ் இலக்கியம் கவர்தல் என்பதற்கு கூர்ந்து கவனிப்பது என்று கூட அர்த்தம் உள்ளது.
ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்வையால் கவர்ந்தான் என்பது கூட இப்படி தான்.
ஒரு நாட்டின் மீது அண்டை நாடு படையெடுத்தது என்றால் அண்டை நாட்டின் மிகப்பெரிய சொத்தான ஆட்டு மந்தைகளை தன்னுடையதாக்கி கொள்வதை தான் மிகப்பெரிய சொத்தாக எண்ணியுள்ளனர்.
அப்படி தனது ஆட்டை கவர்ந்து பாதுகாத்து கொள்வதை தான் ஆடிரை கவர்தல் என்று குறிப்பிடுகிறது சங்க கால இலக்கியம்.
மற்றுமின்றி ஆட்டிடையன் [ஆடு மேய்ப்பவன்] கையில் கோலை வைத்தது தமது ஆட்டை பாதுகாப்பான்.
இப்பொழுது பாருங்கள் அரசனுக்கு கோலன் என்ற வார்த்தையும் உண்டு.
இன்றைய காலகட்டத்தில் இந்த வார்த்தை இல்லையென்றாலும் கூட கோலன் என்ற வார்த்தைக்கு நேரடி அர்த்தம் அரசன் தான்.
இதை வைத்து தான்...
கோல் = கோன்மை
செங்கோண்மை கொடுங்கோண்மை என்பதெல்லாம் வந்தது.
உதாரணத்திற்கு நாம் அடிக்கடி சொல்லும் வார்த்தை கொடுங்கோலன் ஆட்சி.
இந்த கொடுங் கோலன் என்ற வார்த்தையை சிந்தித்தது உண்டா ?
நாம் கொடுங் மன்னனின் ஆட்சி என்று தானே கூற வேண்டும் ஏன் கொடுங் கோலன் ஆட்சி என்று சொல்லுகிறோம்..
காரணம் இது தான் கோலன் என்றால் அரசன் என்று பொருள்.
[இயேசு நாதரும் முஹம்மது நபியும். ஆடு மேய்த்துள்ளார்கள் அவர்கள் இருவருமே ஆட்சியாளராகவும் இருந்துள்ளார்கள்].
அடுத்த விஷயத்தை பாருங்கள்..
மகுடம் சூடுதல் அரசனுக்கான அடையாளம்..
கோல் நீதிக்கான அடையாளம்..
அதனால் தான் அன்றைய காலத்து அரசர்கள் நான் அரசன் என்பதற்க்காக மகுடம் சூடி கொள்வதும்..
நான் நீதியானவான் என்பதற்க்காக கையில் கோலை வைத்து இருந்தார்கள்..
அதாவது நான் நீதியான அரசன் என்றால் கையில் கோலையும் தலையில் மகுடத்தையும் வைத்து இருக்க வேண்டும் என்று அடையாளம்..
முடியும் கோளும் தான் மன்னவனின் அடையாளம், அதன் ஒரு பகுதி தான் முடிசூடா மன்னன்...
ஆன்மீகவாதிகள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் பலரது கைகளில் இந்த கோல் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்..
ஜெகத் குரு முதற்கொண்டு சங்காராச்சார்யா மற்றும் காஞ்சி சங்கராச்சார்ய வரைக்கும் ஏன் குட்டி சாமியார் வரைக்கும் இந்த கோல் கைகளில் வைத்து இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
இதற்கு நேரடியான அர்த்தம் என்ன தெரியுமா ?
லோகத்தில் பிராமணன் அல்லாத உள்ளவா அனைவரையும் தாம் தான். ஆட்சி செய்கிறோம் என்று அர்த்தம்.
அரசன் கைகளில் கோல் இருப்பது நீதிக்கான அடையாளம் என்று ஏற்கனவே சொன்னேன் அல்லவா..
இவர்கள் கைகளில் இந்த கோலில் பெயர் என்ன தெரியுமா ?
தண்டம் என்பார்கள்..
தண்டம் என்பதற்கு மறைமுக அர்த்தம் தண்டனை வழங்குவது, அதாவது பிராமணன் அல்லாதவருக்கு நான் தான் ஆட்சியாளன் அவனுக்கு தண்டனை வழங்கவே இந்த தண்டத்தை [கோலை] வைத்துள்ளேன் என்பதாக அர்த்தம்..
நேரடியாக கோல் என்றால் உனக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது என்று கேட்டு விடுவார்கள் என்பதற்க்காக தண்டம் என்கிறார்கள்.
இதற்கு இன்னும் ஒரு உதாரணம் கூட சொல்லலாம்...
இன்றைக்கு போலீசிடம் எவ்வளவு தண்டம் அழுத என்று வாய் வார்த்தைக்கு அர்த்தம்..
போலீசிடம் தண்டனை பணமாக எவ்வளவு கொடுத்த என்பதே பொருள்..
கோலன் என்பதற்கு இன்னுமொரு உதாரணம் சொல்லுகிறேன் பாருங்கள்..
அன்றைய காலத்து வாலிபர்கள் வித்யாசமாக ஆடை அணியும்பொழுது என்னடி இது கோலம் என்பார்கள், அதாவது அரசன் தான் மற்றவரை விட வித்யாசமானம் ஆடை அணிபவன்.
கோலன் என்பது அரசன்
கோவில் என்பது அரசவை
கோல் என்பது நீதிக்கான அடையாளம்
இந்த மூன்றையும் ஆரியர்கள் தங்கள் வசமாக்கி கொண்டனர்..
கோலனை மறைத்து விட்டார்கள்..
கோவிலை கடவுளின் இடமாக மாற்றிவிட்டார்கள்..
கோலை யும் அவர்கள் வசமாக்கி மறைமுகமாக நீதியை நிலை நாட்டும் ஆட்சியை செய்து கொண்டு இருக்கிறோம் என்பதாகவே அர்த்தம்..
உண்மையில் பாரம்பர்ய அடையாளம் அழித்தொழிக்கப்பட்டு கொண்டுள்ளது....
திமுக கொத்தடிமைகளை காணவில்லை...
திமுக ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறம் நீட் எதிர்ப்பு போராளிகள், சினிமா போராளிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், டாஸ்மாக் எதிர்ப்பு போராளிகள், விவசாய போராளிகள், சமூக ஆர்வலர்கள்னு ஒரு கூட்டமே காணாம போயிருக்கு..?
யார்ரா நீங்க எல்லாம் 😏😒😒
ஒரு இனத்தின் வரலாற்றை அழித்த கொடூரம்1...
நீர் பெயரற்று, பதறி திட்டா, நிகமா, நாகனனம்...
தொலமி என்ற அறிஞரால் நிக்கல்வா என்றும்.
மார்கபோலோவால் பட்டான் என்றும்.
இத்சிங்காளால் நகவதனா என்றும்.
போர்துகீசியரால் நெக பட்டன் என்றும்.
ஆலந்து [ஹோலந்] காரர்களால் நேஹப்பட்டன் என்றும்.
ஆங்கிலேயரால் நேகபெட்டாம் என்றும்.
இன்று நாகப்பட்டினம் என்றும் இருக்கும் நாகப்பட்டினம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஊர்.
இதில் கொடுமை இதை அப்படியே மாற்றி விட்டனர்.
அதாவது இந்த பெயர் வருவதற்கு முன்பு பதறி திட்டா எனபது தான் நாகையின் உண்மையான பெயர்.
நிக்கோபார் தீவுகளை பற்றி படித்து இருப்பீர்கள் தானே..
இந்த நிக்கோபார் தீவுகளை பற்றி தமில் இலக்கியங்கள் நிக்கோ பாரை.. நாக நாடு என்று அழைகின்றார்கள்..
இங்கிருந்து புழம்பெயர்ந்து பதறி திட்டா வந்தவர்கள் தான் நாகர்கள்...
பிற்பாடு தான் நாகர் பட்டினம் என்ற பெயர் வந்தது..
இது 100 வருடத்தில் நடக்கவில்லை வம்சம் வம்சங்களாக இருந்து நடந்தது..
இந்நிலையில் புத்த மதம் தோன்றியது இவர்கள் புத்தமதத்தை தழுவினார்கள்...
மேலே சொன்ன அணைத்து வெளிநாட்டு அறிஞர்களும் இந்த நாகையை பற்றி கூற காரணம் தமிழகத்தில் நாகை தவிர்க்க முடியாத ஒரு ஊரு..
இதை தமிழ் இலக்கியங்களில் காவேரி பூம்பட்டினம் என்றும் குறிப்பிடுகிறது ...
துறைமுகம் விளைச்சல் போன்று எல்லாமும் இங்கு தான் நடக்கும்...
இப்படியுள்ள ஒரு ஊரை வட நாட்டு கும்பல் சிதைத்தது நாகர்கள் அழிவதற்கு இவர்கள் முக்கிய காரணம்...
தமது வயிற்ரை வளர்க்க நாகர் இனம் பாம்பின் இனம் என்றார்கள் ஆதி சேஷன் வாசுகி என்று இரண்டு கற்பனை பாத்திரத்தை உருவாக்கினார்கள் ....
நாகப்பட்டின சோழன் பிலத்துவாரத்தின் வழியே கீழ் உலகம் சென்று நாக கண்ணிகையுடன் உறவு மேற்கொண்டான்..
பிறகு நாக கன்னி கற்பம் தரித்து ஆண் மகனை பெற்றால் அவன் தான் நாகன் இனத்தின் முன்னோடி..
ஆகவே நாகர்கள் பாம்பின் பிள்ளைகள் அதாவது அவர்கள் கடவுள்கள்..
அப்படி கற்பனையாக உருவாக்கப்பட்டது தான் நாக கன்னி நாக நாதன கடவுள்கள்..
ஒரு இனத்தின் வரலாற்றை அழித்த கொடூரம்..
அதென்னங்கடா திமுக உபிஸ்...
இது த்ராவிடா பூமி, பெரியார் மண், கடவுள் மறுப்பு, ஆரிய எதிர்ப்பு, திமுகவில் இருக்கும் வரை கம்பு சுற்றி கொண்டு இருப்பது..
திமுகவில் பிரச்சனை என்றால் உடனே போய் சங்கிகளின் காலில் விழ வேண்டியது...
இது தான் த்ராவிடா கொள்கையோ?
காய்ச்சல்...
காய்ச்சலைக் குறைக்க வெங்காயத்தைப் பிழிந்து தண்ணீர் சேர்த்து சாறாக மாற்றி அருந்தலாம். இது கைகண்ட மருந்து.
குறிப்பாக காலராவால் பாதிக்கப்பட்டவர்கள் முப்பது கிராம் வெங்காயத்தில் ஏழு அல்லது எட்டு மிளகை வைத்து அரைத்து இந்தத் துவையலைச் சாப்பிட்டால் காலரா நோயாளியின் தாக்கமும் தணியு[ம். மனப் படபடப்பும் குறைந்து அமைதியாகத் தூங்குவர்.
காய்ச்சலின் போது திட உணவு சாப்பிடும் வகையில் நோயாளி திடகாத்திரமாக இருந்தால் உணவுப் பாதைக்கு அதிகம் சிரமம் தராத உணவு வகைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
காய்ச்சிய அரிசிக் கஞ்சி, பார்லி, வெந்தயக்கீரை, காய்கறி, சூப், பால், தயிர், முட்டை, இட்லி, இளநீர், கரும்புச்சாறு முதலியவற்றைச் சாப்பிடலாம். இவை உணவுப் பாதைக்குச் சிரமம் தராதவை.
காய்ச்சல் குறைய ஆரம்பித்த இரண்டொரு நாளிலிருந்தே சாத்துக்குடிச் சாறை மட்டும் தவறாமல் அருந்த வேண்டும். இது உடலுககுப் புத்துணர்ச்சி ஊட்டும்.
எனவே இரண்டு வேளையாவது சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.
காலையில் பெட் காப்பி போல் அடுத்த சில வாரங்களுக்கு எலுமிச்சை, தேன், தண்ணீர் சேர்ந்த சர்பத்தை அருந்தி வரவேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது, படுக்கையில் முழு ஓய்வு எடுப்பது...
திருப்பி அடிக்காதவரையில்...
நம்முடைய வலி அவனுக்கு தெரியாது...
நீ எனக்கு வரும் நீரைத் தடுத்தால்...
நான் உனக்கு வரும் சோறை தடுப்பேன்..
வேற... வாய்பில்ல_ராஜா...
நாம ஏற்கனவே ஒருமுறை தடுத்ததால...
அங்க தக்காளி விலை 500ரூபாய்க்கு மேலே எகிறிடுச்சு...
உலகை அதிர வைத்த போர்த்து கீசியர்கள்...
போர்த்துக்கல் பேரரசு பற்றி நம்மில் அதிகமானோருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை... தெரிந்து கொள்ளுங்கள்..
உலக வரலாற்றில் முதல் உலகளாவிய பேரரசு என்றால் அது போர்த்துகீசிய பேரரசு தான்.
அதிகாரபூர்வமான அறிவிப்பாக இதை உலக அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்..
முதலாம் யோன் என்ற ஆட்சியாளரின் காலத்தில் மிகப்பெரிய அடக்கி ஆளும் பேரரசாக இது இருந்தது.
1415 களில் இதன் தாக்கம் உலகத்தையே அச்சுறுத்தியது.
அதை தொடர்ந்து இவர்களது கொடுமை 1970 வரைக்கும் நடந்தது.
இவர்களது குறிக்கோள் எங்கெல்லாம் தங்கசுரங்கம் உள்ளதோ அது இவர்களது டார்கெட் , அதே போன்று விலை நிலங்கள் [விவசாயம்].
இவைகள் எங்கெல்லாம் செழித்து குலுங்கியது அங்கெல்லாம் இந்த போர்த்துக்கல் பேரரசு வந்து குவிந்து விடும்..
அப்படி இவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு நாடு தான் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய கண்டத்தில் சில இடங்கள்.
இப்படி திடீரென்று இவர்கள் உள்ளே நுழைந்ததும் செய்வதிறியாமல் திகைத்த அந்த நாட்டு மக்களை இராணுவத்தை கொன்றார்கள் இப்படி இவர்கள் கொன்றவர்கள் எண்ணிக்கை ?
நீங்கள் நம்பினால் நம்புங்கள் 5 மில்லியன் மக்கள்...
கொல்வது மட்டுமின்றி அடிமைகளாக பல்லாயிரம் மக்களை பிடித்து கொண்டு போனார்கள் ஆப்பிரிக்க அடிமை நாடாக மாற காரணம் பல நாடுகளில் இவர்கள் முக்கியமானவர்கள் பாலியல் கொடுமை.
1498 இல் இந்தியாவிற்கு கடல் வழியை கண்டு பிடித்தவர்கள் இந்தியாவிற்கும் வந்தார்கள், இந்தியா இன்றைய கோவா பகுதியிலும் பல கொடுமைகளை செய்துள்ளார்கள் என்று வரலாறு சொல்லுகிறது....
அதிகபட்ச தண்டனையாக கொதிக்கும் எண்ணையில் கைகளை கால்களை கட்டி இந்தியர்களை உயிருடன் இறக்கப்பட்டார்கள் என்று வரலாறு உள்ளது...
இவர்கள் உயிருடன் பிடித்து கொண்டு போன அடிமைகளை உலக நாட்டு சபை விடுதலை செய்ய வேண்டும் என்று பலமுறை கூறியும் கேட்காதவர்களை 1970 களில் கண்டிப்பாக அந்த மக்களை விடுதலை செய்ய வேண்டும் இல்லையென்றால் போர்த்துக்கல் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்த பிறகு..
எரிச்சல் அடைந்த போர்த்துகீசியர்கள் அடிமைகளாக பிடித்து கொண்டு போன அத்துணை பேரையும் நடு வீதியில் வைத்து சித்ரவதை செய்து சாகடித்தார்கள்.
குழந்தைகளின் கண்களை தோண்டி எடுப்பது.. பெண்களின் மார்புகளை அறுத்து வீசுவது.. ஆண்களின் தலைகளை சீவுவது போன்ற கொடுமைகள் நிகழ்ந்தது.. இதைத்தான் portugal 1970 massacre என்கிறார்கள்....
இத்தாலி செய்த அல்லது திருடிய ஒரு வித்யாசமான நிகழ்வு.?
இந்த பதிவுக்கு தலைப்பு வைக்க கொஞ்சம் நேரம் எடுத்து கொண்டேன்
அதாவது திருடியாவது தன மக்களை காக்கவேண்டும் என்ற இத்தாலி அரசை பாராட்டுவதா ?
அல்லது இந்திய அரசியல்வாதிகள் சிலரே கொஞ்சம் இவர்களை பார்த்து நீங்களே உங்களை செருப்பால் அடித்துக்கொள்ளுங்களேன் என்று வைக்கலாமா ?
அல்லது இத்தாலியின் கையாலாகாத தனம் என்று வைக்கலாமா என்று யோசித்தி பின்னர் மேலேயுள்ள அத்தலைப்பை வைத்துள்ளேன் ,,,
குறிப்பு_2 :
இந்த சம்பவத்தை படித்தபின்பு இது சம்பந்தப்பட்ட இத்தாலி அரசை புகழ்வதா?
அல்லது இந்திய அரசை காறித்துப்புவதா?
அல்லது கோபம் கொப்பளிக்க அடுத்த பதிவை வாசிப்பதா என்பதை வாசிக்கும் ஒவ்வொருவர் உணர்வுக்கும் விட்டுவிடுகிறேன்..
மண்ணுடைய தன்மையை பூச்சிக்கொல்லிகள் தெளித்து அழித்து விட்டால் என்ன நடக்கும் என்பதற்கு ஐரோப்பா கண்டத்தில் உள்ள சில நாடுகள் உதாரணம் நீங்கள் இலண்டனின் வரலாற்றில் இதை காணலாம்...
1830 களில் இந்த சம்பவம் நடந்தது மண்ணில் உயிர் இல்லாததால் விளைச்சல்கள் இல்லாததை கண்டு இத்தாலி அரசே செய்வதறியாது தவித்து கொண்டு இருந்த நேரம்...
மண்ணின் சத்துக்களில் முக்கியமான நைட்ரஜன் சத்து சுத்தமாக இல்லை என்பதை கண்டுபிடித்தது ஆய்வுக்குழு..
இது எப்படி மண்ணிற்கு கிடைக்கிறது என்பதை ஆய்வு செய்த குழு பின்னர் லண்டன்[ இத்தாலி] அரசிடம் தன ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது அதை வாசித்த அரசு மிரண்டுதான் போனது காரணம்..
அவர்கள் அதில் எழுதியது நம் மண்ணிற்கு நைட்ரஜன் சத்தை கொடுப்பது பிணமான மனித எலும்புகள் தான்..
ஆகவே இலண்டன் மற்றும் இத்தாலியின் விளைச்சலை விளைவிக்க மனித எலும்பு கூடுகள் தான் வேண்டும் என்றது அந்த ஆய்வு.?
இப்பொழுது மனித எலும்பு கூட்டுக்கு எங்கே செல்வது ?
லட்சம் டன் கணக்கில் மனித எலும்புக்கு எங்கே செல்வது ?
யோசித்த அரசு எடுத்த முடிவு தான் மனித எலும்பு கூடுகளை திருடுவது என்ற முடிவுக்கு வந்தது..
[இத்தாலிக்கு திருடுவது கைவந்த கலை தானே]..
தம் அருகே உள்ள பகுதியில் எங்கெல்லாம் பெரும் போர்கள் வரலாற்றில் நடந்தேறியது அங்கே இறந்த மனிதர்களின் உடல்களை எந்த இடத்தில புதைத்தார்கள்..
என்ற ஆராய்ச்சியை செய்தது..
அதில் தேர்தெடுக்கப்பட்ட இடங்கள்...
நெப்போலியனுடன் போர் புரிந்த வாட்டர்லு, ஆஸ்ட்ராஸிஸ், போன்ற பிரமாண்ட போர்க்களத்தையம் லிப்ஸிக் ,கிரிமியா,போன்ற தீவுகளையும் சுற்றிவளைத்து மனித எலும்புகளை கொள்ளையடிக்க தொடங்கியது..
அதே போன்று சிசிலியின் பாதாள கல்லறையில் பல நூறு ஆண்டுகளாய் கிடைக்கும் எலும்புகள் என்று எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு சென்றது..
இப்படி ஒட்டுமொத்தமாக மனித எலும்புகளை அள்ளிக்கொண்டு லண்டனின் தலைநகர் இங்கிலாந்துக்கு இறக்குமதியான மனித எலும்புகளின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?
2,54,600 பவுண்டுகள்..
இதில் ஒரு கணக்கும் உள்ளது.
இவ்வளவு பவுண்ட் எலும்புகளும் அந்த அந்த மண்ணிலையே விட்டு இருந்தால் மக்கி போய் அங்குள்ள மக்கள் சுமார் 35 லட்சம் பேருக்கு உணவு தந்திருக்கும் என்கிறது வரலாறு..
இந்த 35 லட்சம் மக்களின் உணவை கொள்ளை அடித்த நாடு இத்தாலி..
அது மட்டுமல்ல இந்த 2,54,600 பவுண்டுகளும் எவ்வளவு நாளைக்கு தான் அவ்வளவு பெரிய இத்தாலி நாட்டுக்கு போதுமானதாக இருக்கும் ஆகவே இது தீர்வதற்குள் அடுத்த என்ன திட்டத்தை [திருடுவதை] செயல்படுத்தலாம்..
வேறு என்ன செய்யலாம் என்பதை ஒரு ஆய்வு அறிக்கையாக உருவாக்க ஒருவரை தேர்வு செய்தது இத்தாலி அரசு..
அவர் யார் என்பது கூட பெரிய விஷயம் இல்லை இவர் அடுத்து சொன்ன ஒரு பொருள் தான் ஆச்சர்யமானது ?
அது என்ன ? என்பதை பற்றி அடுத்த பதிவில் காண்போம்...
இளநரை போக...
இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் இளநரையும் ஒன்று.
இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் எளிதாகத் தீர்வு காணலாம்.
மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அத்துடன் எலுமிச்சப் பழச்சாறு 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி, முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்..
இந்த கலவையை இரவு முழுவதும் ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும்.
பின்னர், இதனை காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும்.
இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்து விடும்.
இந்த தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்..
இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும்.
நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்...