27/01/2022

டெலிபதி (TELEPATHY)...

 


டெலிபதி (Telepathy) என்பது கிரேக்க சொற்களான tele (தூரம்) மற்றும் patheia ( உணர்வு) இருந்து வந்தது.

இது மனித மற்றும் பிற உயிரினங்களுடன் வார்த்தை மொழி , உடல் மொழி அல்லது எந்த ஒரு பிற உபகரணங்களின்றி ஆழ்மனத்தின் மூலம் தொடர்பு கொள்ளும் முறையாகும்..

இது ESP - இன் ஒரு பகுதியாக விளங்குகிறது. டெலிபதி (Telepathy) இன்றளவும் விஞ்ஜானிகளளால் முழுவதும்மாக ஏற்றுக் கொள்ளப்படாத விவாத பொருளாகத்தான் உள்ளது..

டெலிபதி (Telepathy) அனுப்புவார்களிடம் (sender or agent) பெறுபவர்கள் (receiver or percipient) நேரடியாக ஆழ்மனத்தின் மூலம் தகவல்களை பெறுவார்கள்.

ஆனால் இது இன்று வரை அதிகார பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இரட்டையர் (Twins) களிடம் இந்த டெலிபதி (Telepathy) அதிகமாக செயல்படுகிறது என்று ஒரு பொதுவான கருத்து உள்ளது...

ஞானதிருஷ்டி (CLAIRVOYANCE)...

 


clairvoyance என்ற பிரஞ்சு வார்த்தைக்கு clair - clear (தெளிவான) மற்றும் voyance - vision (பார்வை) என்று பொருள்படுகிறது.

ஞானதிருஷ்டி(clairvoyance) யின் முலமாக நிகழ்காலத்திலோ அல்லது எதிகாலத்தில் உள்ள ஒரு பொருளையோ, மனிதனையோ, அல்லது நிகழ்வுகளையோ இருந்த இடத்தில் இருந்த படியே ஆழ்மனதின் உதவியுடன் பார்த்தல் ஆகும்.

ஞானதிருஷ்டி(clairvoyance) ஆனது நமது புராணங்களில் பல்வேறு இடங்களில் காணலாம்..

எடுத்துக்காட்டாக : மகாபாரதத்தில் போர்க்களத்தின் காட்சிகளை சஞ்ஜயன் ஞானதிருஷ்டி மூலமாக திருதராஷ்டிரனுக்கு எடுத்துரைப்பார்...

ESP என்றால் என்ன..?

 


Extra sensory perception..

(புலன் புறத்தெரிவு) என்பது நமது ஐந்து புலன்களை தாண்டி நமது ஆழ்மனதின் மூலம் செய்யப்படும் அல்லது உணரப்படும் விடயங்கள் ஆகும்.

இது அறிவியலுக்கும் சாதாரண மனித அறிவுக்கும் அப்பாற்பட்டு விளங்குவதால் என்றும் மனிதனுக்கு இதன் மீது அளவு கடந்த ஆர்வம் உள்ளது.

ESP - இன் வகைகள்:

Telepathy : பிறரின் எண்ணங்களை அறிதல் அல்லது பிறருக்கு குறிப்பிட்ட எண்ணத்தை அனுப்புதல்.

Clairvoyance : தொலைதுரத்தில் நடைபெறும் நிகழ்சியை பார்த்தல் அல்லது அங்கு இருக்கும் பொருள்களை பார்த்தல்.

Precognition : எதிர்க்காலத்தை கணித்தல்.

Retrocognition : கடந்த கால நிகழ்வுகளை பார்த்தல்.

Mediumship : இறந்தவர்களின் ஆவிகளுடன் பேசுதல்.

Psychometry : ஒரு பொருளை பார்த்து ஒரு குறிப்பிட்ட மனிதரை பற்றியோ அல்லது நிகழ்வுகள் பற்றியோ சொல்லுதல்.

Apportation : பொருள்களை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மறைய செய்தல்.

Aura reading : மனிதனை சுற்றியுள்ள ஒளி அலையை காணுதல்.

Automatic writing : சுயநினைவு இன்றி ஆழ்மனதின் உதவயுடனோ அல்லது பிற சக்திகளின் உதவியுடனோ எழுதுதல்.

Bilocation : ஒரே நேரத்தில் பல இடங்களில் இருத்தல்.

Death-warning : பிறரின் இறப்பை முன்கூட்டியே காணுதல.

Divination : குறி சொல்லுதல்

Dowsing : தங்கம்,புதையல் ,நீர் அல்லது கண்களுக்கு புலப்படாத பொருள்களை குறிப்பிட்ட சில உபகரணங்களை வைத்து கணித்தல்.

Energy medicine : Healing சிகிச்சை முறைமூலம் மனித உடலின் குறிப்பிட அலைவரிசையை சரிசெய்தல்.

Levitation  : ஆழ்மனத்தின் உதவியுடன் காற்றில் மிதத்தல்.

Psychokinesis or telekinesis  : மனத்தால் பொருள்கள் நகர்த்துதல்

இவ்வாறு பலவிதமான ESP சக்திகள் உள்ளன. ஆனால் விஞ்ஞான பூர்வமான பலதும் நிருபிக்கபடவில்லை.

ஆனால் மேலே கூறப்பட்ட பல சக்திகளும் பல காலங்களில் பல்வேறு மனிதர்களால் நிகழ்த்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.

தியானம்,யோகா, இயற்கையோடு சேர்த்த வாழ்க்கை முறை, முன்னோர்களின் வழிகாட்டல்கள் போன்றவற்றின் மூலமாக இந்த சக்திகளை மனிதனால் பெற முடியும் என்பது சான்றோர்களின் கருத்து.

காரணம் இச் சக்திகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்து கிடக்கும் சக்திகள் ஆகும்.

அதை வெளிக்கொண்டு வர அவனால் மட்டும் தான் முடியும்...

வெயிலைத் தாக்குப் பிடிக்க.....

 


வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும்.

உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம்.

ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும்.

குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.

வேர்க்குருவைப் போக்க சந்தனத்தை பன்னீரில் குழைத்து, வேர்க்குருக்கள் மீது தடவலாம். நல்ல நிவாரணம் கிட்டும்.

வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் உண்டு.

கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும்.

முருங்கைக் கீரை மற்றும் ஏனைய கீரை வகைகளை வாரத்தில் 2 நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

வியர்வை அதிகமாக சுரப்பதால் தோல் வறட்சியை ஏற்படுத்தும். இதற்கு பழச்சாறு, காய்கறிச்சாறு, சூப் மற்றும் குடிநீரை அடிக்கடி குடிக்கவும்.

இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும். உடம்புக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு தோலும் பளபளப்பாக மாறும். கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவதை விட உப்பு சேர்த்து மோராக சாப்பிடுவதும் நல்லது...

அம்மா Vs மகன்...

 


எதுக்கு அங்க போற...?

சும்மா என்னய திட்டாத மா..

நானும் கோவிச்சிகிட்டு பக்கத்து தெருல உள்ள ஆண்ட்டி வீட்டுக்கு பொய்டுவேன்...

நீ அப்பாவ திட்னா அவரு அங்கதான் போறாரு...

அப்பா வின் நிலைமை👆

🤣🤣🤣