கர்நாடகா ,ஆந்திரா கேரளா மாநிலங்கள் எல்லாம் புதுசா அணை கட்டுது .. நீ என்ன செய்த?

 


கோதுமை பீர் 🍺 கொண்டு வந்தேன்.. வீரன் சரக்கு கொண்டு வந்தேன் போதாதா 🤣🤣

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சிவன் கோயிலில் தமிழ் வாசகங்களை அழித்து தெலுங்கில் எழுதி வைத்துள்ளனர் 😡.

 


இது போன்ற அவல நிலை தமிழ்நாட்டில் மட்டுமே நடக்கும்..

அருகிலுள்ள ஆந்திராவிலோ கர்நாடகத்திலோ தமிழில் எழுதினால் என்ன நடக்கும் என்பது இவ்வுலகம் அறிந்ததே...

இதுக்கு தான் டா நான் சிங்கிளாவே இருக்கேன்...

 


டூவீலரும் வச்சிக்கல.. 

காதலியும் வச்சிக்கல... 

பொண்டாட்டியையும் வச்சிக்கல...


🚶🚶🚶

விசாரணைக்கு வந்தவரிடம் 95 பவுன் நகையை பெற்று அடகு வைத்த திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்...

 


டி.ஐ.ஜி.ரம்யா பாரதி அதிரடி...

திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கீதா (வயது 50). திருமங்கலத்தை சேர்ந்த ராஜேஷ் (33) பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபினையா. இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வழக்கு விசாரணை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்று வருகிறது.

இன்ஸ்பெக்டர் கீதா, ராஜேஷ்-அபினையா தம்பதியிடம் விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் அபினையா தனது பெற்றோர் திரும ணத்திற்கு போட்ட 95 பவுன் நகையை கணவர் ராஜேசிடம் திருப்பி தரும் படி கேட்டார். ராஜேஷ் 95 பவுன் நகையை இன்ஸ்பெக்டர் கீதாவிடம் கொடுத்து தனது மனைவியிடம் கொடுக்கும் படி கூறி உள்ளார். நகையை பெற்ற இன்ஸ்பெக்டர் அதை வங்கியில் ரூ.42 லட்சத்திற்கு அடமானம் வைத்தார். 

தொடர்ந்து அபினையா தரப்பினர் ராஜேஷ் தரப்பினரிடம் நகையை கேட்கவே தான் அதனை இன்ஸ்பெக்டரிடம் கொடுத்து விட்டதாக கூறியுள்ளார். 

இதையடுத்து ராஜேஷ் இன்ஸ்பெக்டர் கீதாவிடம் நகையை கேட்க அவர் மழுப்பி வந்துள்ளார். இத னால் சந்தேகம் அடைந்த ராஜேஷ் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்திடம் புகார் செய்தார். இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கீதா 10 பவுன் நகையை திருப்பி தந்தார். மீதி நகையை தரவில்லை.

பின்னர் ராஜேஷ் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் திருமங்கலம் மக ளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குறித்து புகார் செய்தார். 

இதனை தொடர்ந்து டி.ஐ.ஜி. ரம்யாபாரதி திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ் பெக்டர் கீதாவை நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்...

22/05/2024

ஒடிசாவை தமிழன் ஆளக்கூடாதா?

 


தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று சொன்னால் இங்குள்ள பாரதமாதா புத்திரர்களுக்கும், திராவிட மாதா புத்திரர்களுக்கும் கோபம் வரும். 

ஏனெனில், நாமெல்லாம் இந்தியர்கள், நாமெல்லாம் திராவிடர்கள்,  மாநிலத்திற்குள் இனம், மொழி பிரிவினை பேசக்கூடாது, நல்லவர் எவரும் எந்த மாநிலத்தையும் ஆளலாம் என்பதுதான் அவர்களின் கோட்பாடு.

எப்போதும் பாரத மாதா பஜனை பாடும் மோடிக்கும், அமித்ஷாவிற்கும் திடீரென்று மண்ணின் மைந்தர் கொள்கை மீது பற்று வந்துள்ளது.

ஒடிசாவில் மீண்டும் நவீன் பட்நாயக் ஆட்சிக்கு வந்தால் ஒரியர்கள் யாரும் இனிமேல் ஆட்சிக்கு வரமுடியாது என்று இருவருமே தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்கள்.

ஒடிசாவில் நவீன் பட்நாயக் கட்சியில் வி.கே.பாண்டியன் என்னும் தமிழன் செல்வாக்கோடு விளங்கி வருகிறார்.

நவீன் பட்நாயக்கிற்குப் பிறகு அவர் தான் அடுத்த முதல்வராகும் வாய்ப்பு என்று அங்குள்ள ஊடகங்கள் எழுதி வருகின்றன. இதை மண்ணின் மைந்தர்களான ஒரியர்கள் எதிர்த்தால் அதை வரவேற்கலாம். 

ஆனால் ஒரு தமிழன் முதல்வரானால் பாரத மாதா பஜனை பாடும் மோடிக்கும், அமித்ஷாவிற்கும்  ஏன் வலிக்கிறது? 

தமிழ்நாட்டிற்கு வந்தால் தமிழ் மொழியையும், தமிழரையும் உயர்த்திப் பேசும் அதே மோடி தான் ஒடிசாவிற்கு சென்று தமிழன் ஆளக்கூடாது என்று பேசுகிறார். 

குஜராத்தி இனத்தை சேர்ந்த நானே இந்தியாவையே ஆளும் போது, ஒரு தமிழன் ஒடிசாவை ஆள்வது தவறில்லை என்று பேசியிருந்தால் அவரின் பாரதீய ஜனதா கொள்கையின் பரந்த மனப்பான்மையை காட்டியிருக்கும்.

மோடிக்கு தமிழர் வரலாற்றுப் பெருமை மீது எப்போதும் காழ்ப்புணர்ச்சி உண்டு. அதை ஒடிசாவில் நின்று கொண்டு வெளிப்படுத்தியுள்ளார்.

மோடிக்கு தமிழர் மீதான காழ்ப்புணர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் ஒரு உண்மையை போட்டுடைத்துள்ளார்.

இந்தியா ஒரே நாடல்ல, பல்வேறு தேசிய இனங்களை உடையது. அந்தந்த தேசிய இனங்களின் மைந்தர்களே நாட்டை  ஆள வேண்டும் என்பதே அந்த உண்மையாகும்.

"அவனவன் நாட்டை அவனவன் ஆள்க! 

மற்றயல் நாட்டை சுரண்டல் அடியோடு வீழ்க! " என்று எங்கள் பாட்டன் பாரதிதாசன் ஏற்கனவே பாடி வைத்து சென்றுள்ளான். அதைத் தான் தமிழ்தேசியர்களும் வழி மொழிந்து பேசி வருகிறோம். 

மோடிக்கோ, அமித்ஷாவிற்கோ  தமிழ்த்தேசியர்களைப் போல, மண்ணின் மைந்தர் கொள்கை மீதெல்லாம் பற்று இல்லை. அவர்கள் இதே கருத்தை மற்ற மாநிலங்களில் பேச மாட்டார்கள்.

ஒடிசாவில்  நின்று பேசுவதற்கு காரணம் தமிழர் மீதான இன வெறுப்பு அரசியலைத் தவிர  வேறொன்றுமில்லை.

வியனரசு ஐயா சொல்வது நியாயம் தானே...

 


இந்த மாதத்தில் சிங்கப்பூர் இன்பச் சுற்றுலா, 

புதிய அலுவலகம் திறப்பு எல்லாம் தவிர்த்திருக்கலாம். 

அவனுக்கு தான் தெரியாது என்றால் கூட அண்ணன் சீமானாவது சொல்லி தடுத்திருக்க வேண்டாமா?. 

இப்படித்தான் ஐயா தடா.சந்திரசேகரன் இறப்புக்கு போகும் போது பல்லை காட்டி செல்ஃபி எடுத்து பகிர்ந்தான்...

கொஞ்சமாவது அறிவு இருக்குமா இருக்காதா என்று தெரியவில்லை...

கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது...

 


இது அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்க கேரள அரசு திட்டமிடும் செயல்..

நம்ம ஊர் காம்ரேட்ஸ் மற்றும் இன்னும் பிற திடல் ஓங்கோல் ஒட்டுண்ணி கட்சிகள் அமைதிகாக்க...

வரும் 27ம் தேதி தாராபுரத்தில் தமிழக விவசாயிகள் போராட்டம் அறிவித்துள்ளார்கள்.

தமிழ் நாட்டை அண்டி வாழும் கேரளா இதுவரை தமிழர்களுக்கு துரோகம் மட்டுமே செய்துள்ளது.

குற்றாலம் தேனருவி க்கு பொதுமக்களை விடாமல் வனத்துறை தடை போட்டு விட்டது.

அங்கே வாழ்ந்த பூர்வ குடிகளை கேரளா வனத்துறை சுட்டதால் சிலர் இருந்து விட்டனர்.

அதுகுறித்து தென்காசி மாவட்ட காவல்துறை இன்னும் வழக்கே பதிவு செய்யவில்லை.

தேனருவி வனப்பகுதி தமிழர் வசம் தான் இருக்கிறதா..? என்கிற கேள்வி எழுகிறது .

அதேபோல சித் ரா பெளர்ணமி நாளை தவிர தமிழர்களின் கண்ணகி கோயிலுக்கி தமிழர்களுக்கு அனுமதி இல்லை.

அந்த கோயில் இடிபாடுகளுடன் இருக்கிறது.

அதை  தமிழக அற நிலையதுறை வசம் கூட கேரளா அரசு கொடுக்க முன் வரவில்லை..

ஆனால் குமரி மாவட்டத்தில் இருக்கும் பத்மநாப புர அரண்மனை மட்டும் கேரளா அரசின் பராமரிப்பில் இருக்குமாம்..

என்னங்கடா  இது சட்டம்...? 

திராவிடர்கள் தமிழர்களின் எல்லா உரிமைகளையும் விற்று விடுவார்கள்.