01/07/2024

ஐயா விற்கு இன்னைக்கு தான் தெரிஞ்சது போல...

 


பஞ்சம் பொழக்க வந்து பத்தாயிரம் பேர் கூட இல்லாதவர்கள் என்று 😃

சாராய வியாபாரி ஸ்டாலின் கலாட்டா....

 


ஏன்யா நாம தான் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சா*ராயம் காய்ச்சுன கன்னுக்குட்டியை தூக்கி உள்ளே வச்சுட்டோமே, இந்த உடுமலையில் எவன்யா சா*ராயம் விக்கிறது?

அவன் தம்பி பன்னிக்குட்டி சார்...

இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் - அதிர்ச்சி...

 


சைக்கிள்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் எவை? 3-4 நிறுவனங்களுக்கு மேல் இருக்க முடியாதே?

இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள் - ப.சிதம்பரம்.

அட தத்தி கும்பலை செட்டியார் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டாரே..

என்னமோ போங்கடா...



10 yr : வயசு எவ்ளோ.?

10 -20 ; மார்க் எவ்ளோ?

30-40 ; சம்பளம் எவ்ளோ?

40-50 ;சொத்து எவ்ளோ? 

50-60 ; BP, சுகர் எவ்ளோ.?

60 - 70; பென்சன் எவ்ளோ.? 

எப்படிபட்ட வாழ்க்கையை வாழ்ந்தாலும் இந்த சமூகம் சாகுறவரை கேள்வி கேட்டே தான் இருக்கும்...

அதனால மூடிட்டு அவனவன் வேலைய அவனவன் பாருங்கடாவ்...

ஒரு ஊரில், கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது...

 


அந்த கடை வாசலில் கடையின் விதிமுறைகளின் பலகை இருந்தது. 

அதில் எழுதியிருந்தது.

கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கின்றன. 

ஒவ்வொரு தளத்திலும் இருக்கின்ற ஆண்களோட தகுதிகள் மேல போகப்போக அதிகமாகிக் கொண்டே போகும்.

ஒரு தளத்தில் இருந்து மேலே சென்று விட்டால் மறுபடியும் கீழே வர முடியாது.

அப்படியே வெளியே தான் போக வேண்டும்.

இது தான் அந்த விதிமுறைகள். 

இதையெல்லாம் படித்து பார்த்து விட்டு, ஒரு இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார். 

கணவர் வாங்குவது என்பது காய்கறி வாங்குவது போன்ற காரியமல்லவே, என்று நினைத்துக்கொண்டு கடையின் உள்ளே நுழைந்தார். 

முதல் தளம் அறிக்கை பலகையில், இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் "வேலை உள்ளவர்கள்", "கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்". இது என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்.

இரண்டாம் தளம் அறிக்கை பலகையில், இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் "வேலை உள்ளவர்கள்", "கடவுள் நம்பிக்கை உளளவர்கள்" மேலும் "குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்" இதுவும் என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்.

மூன்றாம் தளம் அறிக்கை பலகையில் இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் "வேலை உள்ளவர்கள்", "கடவுள் நம்பிக்கை உளளவர்கள்" , "குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்" மற்றும் "வசீகரமானவர்கள்" அந்த இளம்பெண் "வசீகரமானவர்கள்" என்பதை பார்த்ததும், "ஆஹா.. மூன்றாவது தளத்திலேயே இவ்வளவு தகுதிகள் இருந்தால், மேலே போகப்போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ" என்று நினைத்துக்கொண்டு மேலே செல்ல முடிவெடுத்தார்.

நாலாவது தளம் அறிக்கை பலகையில், இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் "வேலை உள்ளவர்கள்", "கடவுள் நம்பிக்கை உளளவர்கள்", "குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்", "வசீகரமானவர்கள்" மற்றும் "வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்" இதை விட வேறு என்ன வேண்டும். 

நல்ல குடும்பம் அமைக்கலாமே? 

கடவுளே... மேல என்ன இருக்கு என்று தெரிந்தே ஆகணும் அப்படி என்று முடிவு செய்து விட்டு, அடுத்த தளத்திற்கு சென்றார். 

ஐந்தாவது தளம் அறிக்கை பலகையில்,*>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள் "வேலை உள்ளவர்கள்", "கடவுள் நம்பிக்கை உளளவர்கள்", "குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்", "வசீகரமானவர்கள்", "வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்" மற்றும் மிகவும் "ரொமாண்டிக் ஆனவர்கள்" அவ்வளவு தான்.. 

அந்த பெண்ணால் தாங்க முடியவில்லை..

*சரி இங்கேயே யாரையாவது தேர்வு செய்யலாம் என்று நினைத்தாலும் இன்னொரு தளம் பாக்கி இருக்கின்றதே..

அங்கே என்ன எப்படிப்பட்ட கணவர்கள் இருப்பார்கள் என்பதை பார்க்காமல் எப்படி முடிவு செய்வது..??? 

சரி மேலே சென்று பார்த்து விடலாமே என்று முடிவு செய்து விட்டு ஆறாவது தளத்திற்கு செல்கிறார்.

ஆறாவது தளம் அறிக்கை பலகையில், 

"இந்த தளத்தில் கணவர்கள் யாரும் இல்லை.. 

வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது.. 

இந்த தளத்தை அமைத்ததற்கு காரணம், பெண்களை திருப்திப்படுத்தவே முடியாது  என்பதை நிரூபிக்கத்தான்".....

*"எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி"...!*" 

கீழே படிகளில் இறங்கவும்".என்று எழுதியிருந்தது.....

கல்கி - 2898 AD PART - 1...

 


இந்த படம் - புதிய உலக ஒழுங்கு பற்றி அறிந்தவர்களுக்கு நன்கு புரியும். மற்றவர்களுக்கு போர் எனத் தோன்றும்...

ஞானநிலையில் கடவுளானவர்களுக்கும் - அறிவியல் மூலம் கடவுளாக முயற்சிப்பவர்களுக்கும் நடக்கும் போராட்டம்...

"கமல்" தான் அறிவியல் மூலம், தன்னை கடவுளாக அறிவித்துக் கொண்ட "Supreme Yashin" என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், பொருத்தமான பாத்திரம்.

இந்த படம் - மகாபாரத காலத்தில் தொடங்குகிறது. அதாவது முதல் புதிய ஒழுங்கு காலமான கிமு 3100ல் தொடங்குகிறது, நம்மல விட வரலாறு அவனுகளுக்கு சரியாக தெரிகிறது...

கிபி 2898ல் நடப்பது போன்ற Science Fiction Type Movie... அவசியம் படம் பாருங்க மக்களே...

திமுக காவல்துறை கலாட்டா....

 


பஞ்சுமிட்டாய் விக்கிறவனையும், கிளி ஜோசியக்காரனையும் பிடிக்கிறதுக்கே எங்களுக்கு நேரம் போதல..!

இதுல எங்க போயி கள்ளச்சாராயம் காய்ச்சிறவனை எல்லாம் பிடிக்கிறது..?

😂😂😂

ஆனந்த் அம்பானி திருமண செலவை சரி செய்ய ரிலையன்ஸ் ஜியோ கட்டணம் உயர்கிறது...

 


செல்போன் கட்டணத்தை 12% முதல் 25% வரை உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவிப்பு...

ரூ.155 ஆக இருந்த மாதாந்திர கட்டணம் ரூ.189 ஆகவும்; ரூ.399 கட்டணம் ரூ.449 ஆகவும் அதிகரிப்பு; 28 நாள்களுக்கு ரூ.299 (2GB) என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.349 ஆக அதிகரிப்பு...

புதிய கட்டண உயர்வு ஜூலை 3ஆம் தேதி முதல் அமலாவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது...