உன் நினைவின் வாசம்...


இன்னொரு முறை

குடிக்கும் போது

எனக்கொரு பாட்டில்

விஷத்தை வாங்கித் தாருங்கள்...


உனக்கென்னடி சகியே

சொல்லிவிட்டு போய்விட்டாய்...


இதோ

துளித் துளியாய் பருகும்

பக்காடியில்...


"உன் நினைவின் வாசம்"


🚶🚶🚶

என் இரவைக் கூறு போட...

 


எப்படியாவது தூங்கிவிட வேண்டும்

உன்னை நினைக்காமல் இன்றிரவு


ஆமாம்...

சபதம் எடுத்துக் கொண்டேன்...


பண்பலை பாடல்கள் தாலாட்டிக் கொண்டிருந்தது..

இமைகள் இறுகத் துவங்கிய வேளை

உயிருக்குள் ஒலிக்கத் துவங்கியது..


உனைப் பாடச் சொல்லிக் கேட்ட...


"ஊருசனம் தூங்கிருச்சு

ஊதக் காத்தும் அடிச்சிருச்சி"


இசைஞானி மெல்லிசை மன்னரோடு

இப்போது...


கூட்டனி சேர்ந்திருந்தது 

உன் நினைவுகளும்

என் இரவைக் கூறு போட....


🚶🚶🚶

என் ஆயுள் ரேகை...

 


கைரேகை பார்த்தேன் 

நேற்று

ஆயுள் தீர்க்கமாம்

ஜோதிடர் சொல்கிறார்...


ஆமாம்

தீர்க்கமாக தான் உள்ளது...


என்னில் உயிரோடு 

எனை கொல்லும்

உன் நினைவெனும் 

ஆயுள்ரேகை...


🚶🚶🚶

ஏன் இந்த முரண்பாடு?

 


பதிவேற்றம் செய்த ஓன்றைதானே

பதிவிறக்கமும் செய்ய முடியும்?


பின்னர் ஏன் இந்த முரண்பாடு?


குழப்பமாக உள்ளது எனக்கு

இங்கே பாருங்கள்..


என் இதயதளத்தில்

பதிவேற்றம் செய்ததென்னவோ

அவளின் நினைவுகளை தான்...


ஆனால் இப்போதோ

கண்ணீர் துளிகளை

பதிவிறக்கம் செய்கிறேன்...