08/05/2024

மாமன் வீரவல்லாள தேவன்...

 


திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ''மாற வர்மன் ஸ்ரீ வல்லப பாண்டியனின்'' (கி.பி.1308 - 1342) கல்வெட்டு ஒன்று :-

''மாமடி வல்லாள தேவன் காணிக்கை''

என்று குறிப்பிடுகிறது. ஓய்சாள வேந்தர் மூன்றாம் வீரவல்லாள தேவர் அவர்களை, பாண்டிய வேந்தன் ஸ்ரீ வல்லபன் அவர்கள் ''மாமன்'' என்று குறிப்பிட்டுள்ளார். ஓய்சாளர்களும் பாண்டியர்களும் மிக நெருங்கிய உறவினர் ஆவர்.  

ஓய்சாள வேந்தர் மூன்றாம் வீர வல்லாள தேவர் அவர்களை, கி.பி.16 ஆம் நூற்றாண்டின் அருணாச்சலபுராணமானது ''வன்னிய குல மன்னன்'' என்று குறிப்பிடுகிறது.  

கூடல் இருவாட்சி புலவர் என்பவரால் இயற்றப்பெற்று அரியலூர் மழவராயர் அரசவையில் அரங்கேற்றம் செய்யப்பெற்ற, வன்னியர் புகழ் பாடும் நூலான ''திருக்கைவளம்'' என்ற நூலானது, ஓய்சாள வேந்தர் மூன்றாம் வீரவல்லாள தேவர் அவர்களை ''வன்னிய வம்சத்தவர்'' என்று குறிப்பிடுகிறது.

எனவே, மிக நெருங்கிய உறவினர்களான ஒய்சாளர்களும் - பாண்டியர்களும் வன்னிய வம்சத்தவர் என்று தெரியவருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.