24/08/2017

நாளை முதல் புதிய 200 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது...


பதவி போனாலும் பரவாயில்லை, அம்மாவின் பேச்சை கேட்டு தொண்டர்கள் எங்களை வெற்றி பெற வைத்துள்ளார்கள் - டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பேட்டி...


டிடிவி ஆதரவு 19 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய அரசு கொறடா, சட்டமன்ற சபாநாயகருக்கு பரிந்துரை...


19 எம்எல்ஏக்களின் பதவியும் பரிபோகும் நிலை..

எடப்பாடி அரசிற்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கியதால் அரசு கொரடா சபாநாயகருக்கு பரிந்துரை செய்ததாக பேட்டி...

சட்டசபை நடக்கும் நேரங்களில் மட்டுமே கொறடா உத்தரவை பின்பற்ற வேண்டும்... அதனை மீறியவர்களை மட்டுமே தகுதி நீக்கம் செய்யலாம்...


ஆனால் சட்டசபை நடைபெறாத சமயங்களில் கொறடா உத்தரவை மீறியதாக அதிமுக கொறடா கூறுவது வியப்பாக உள்ளது...

அதிமுக கலாட்டா...



அறந்தாங்கி எம்எல்ஏ தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு...


ஆதரவு எம்எல்ஏ எண்ணிக்கை 20 ஆக உயர்வு...

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தமே இல்லாமல் சிறையில் இருக்கும் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவு...


26 ஆண்டுகளில் முதன்முறையாக பேரறிவாளனுக்கு பரோல்...

தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்...


திமுக காங்கிரசும் தமிழன அழிப்பும்...


இந்தியாவில் நீட் தேர்வை கொண்டு வர திட்டம் கொண்டு வந்தது காங்கிரசு...

முதன் முதலில் தமிழகத்தில் நீட் தேர்வு முறைக்கு அனுமதி கொடுத்தது திமுக..

எல்லாம் காலக்கொடுமை, இந்த உலகத்திலியே தான் கொண்டு வந்த திட்டத்திற்கு தானே ஆர்ப்பாட்டம், போராட்டம், உண்ணாவிரதம் இருப்பது நம்ம திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.

நீதிமன்றத்திலும் தமிழக மாணவர்களுக்கு எதிராக வாதாடி சதி செய்ததும்.. இதே திமுக காங்கிரசு வழக்கறிஞர்கள் தான்..


இந்த தகவலை  விபச்சார ஊடகங்கள் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு மறைக்கின்றது.

இளைய சமுதாயமே விழித்தெழுங்கள்...

நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...




2.5% இருக்கும் பிராமண மாணவர்களுக்கு 515 மருத்துவ இடம்...



97.5 % மொத்த தமிழகத்திற்கும் 3019 மருத்துவ இடமாம்..

திட்டமிட்டு திருட துவங்கி விட்டார்கள்..

நாம் வழக்கம் போல வாய்பிளந்து நிற்கிறோம்...

சுண்ணாம்பு மருத்துவம்...


சுண்ணாம்பில் இரண்டு வகை உண்டு. ஒன்று கல் சுண்ணாம்பு. மற்றொன்று கிளிஞ்சல் சுண்ணாம்பு. இவை இரண்டும் பயனுள்ளதே. விஷ ஜந்துக்கள் நம்மைக் கடித்து விட்டால் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு இம்மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.

கடுமையான தொண்டை கட்டா? இரவில் படுக்கும் முன் தேனும், சுண்ணாம்பும் சம அளவு எடுத்து கலக்கவும். சூடாகும் இந்தப் பசையை தொண்டையில் பூசினால் நன்கு பிடித்துக்கொள்ளும். காலையில் தொண்டை வலி குறைந்துவிடும்.

மஞ்சள் காமாலைக்கு தயிருடன் சிறிதளவு சுண்ணாம்பைச் சேர்த்து காலையில் மட்டும் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம்.

கட்டிகள் பழுத்து உடைய சுண்ணாம்பு, மாவிலங்கம் பட்டை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நல்லெண்ணெயில் குழைத்துப் போட்டால் கட்டி பழுத்து உடைந்து விடும்...

பாஜக எச்ச. ராஜா சர்மா வை செருப்பால் அடிக்காத ஆளே இல்லை போல...


ஈ.வே.ரா வின் தாய்மொழி தெலுங்கா? கன்னடமா?


ஒருமுறை ஈ.வே.ரா பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு இறங்கும்போது ஈ.வே.ராவின் பக்தர் ஒருவர் பணம் கொடுத்து...

(அதாவது ஈவேரா பெயர் வைக்க, சொற்பொழிவு ஆற்ற, புகைப்படம் எடுத்துக் கொள்ள என அனைத்திற்கும் தனக்கு இவ்வளவு என்று கட்டணம் அறிவித்திருந்தார்).

தனது குழந்தைக்கு பெயர்வைக்குமாறு கேட்டுள்ளார்.

பெயர் வைக்கும் முன் இது எத்தனையாவது குழந்தை என்று ஈவேரா கேட்டுள்ளார்.

அந்த நபர் ஏழாவது குழந்தை என்று கூறியுள்ளார்.

உடனே குழந்தைக்கு சாலம்மா (போதுமம்மா) என்று தன் தாய் மொழியான தெலுங்கில் பெயர் வைத்தார்.

சாலு (தெலுங்கு) = போதும் (தமிழ்)...

ஆழ்மனதின் அற்புத சக்திகள்-10...


ஸ்பூன், இரும்புக்கம்பி, சாவி போன்ற பொருள்களை சிலர் தங்கள் மனோசக்தியால் வளைத்துக் காண்பித்தார்கள் என்றால் ஸ்வாமி ராமா என்ற இந்திய யோகி தன் உடலிலேயே பல அற்புதங்களை செய்து காட்டக் கூடியவராக இருந்தார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட அமெரிக்க மனோதத்துவ ஆராய்ச்சி நிறுவனமான மென்னிங்கர்· பௌண்டேஷன் 1969 இறுதியில் அவரைத் தொடர்பு கொண்டு அவரை ஆராய்ச்சி செய்ய அனுமதி கேட்ட போது அவர் ஒத்துக் கொண்டார். 1970 ஆம் ஆண்டு மார்ச் 28 முதல் 30 வரை மூன்று நாட்கள் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவரை டாக்டர் டேனியல் ·பெர்குசன், எல்மர் மற்றும் அலைஸ் க்ரீன் ஆகியோர் பரிசோதனைகள் செய்தனர்.

முதல் நாள் அவரிடம் என்னென்ன அபூர்வ செயல்கள் செயல்கள் செய்து காண்பிக்கப் போகிறார் என்று கேட்டுக் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் அதனைக் கண்காணிக்கத் தேவையான நவீன கருவிகளைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டார்கள். அவர்கள் சோதனைக்கான நிபந்தனைகளையும் அவரிடம் சொல்லி விளக்கினர். ஸ்வாமி ராமா அது வரை எந்த பரிசோதனையிலும் ஈடுபடுத்தப்பட்டவரல்ல. அவருக்கும் தன் சக்திகளை அந்த அதிநவீன கருவிகளைக் கொண்டு பரிசோதித்துக் கொள்வதில் ஆர்வம் இருந்தது.

ஸ்வாமி ராமா இரண்டாவது நாள் தன் வலது கையின் வலது பக்கத்திற்கும், இடது பக்கத்திற்கும் இடையே உடலின் வெப்பநிலையை மாற்றிக் காட்டுவதாகக் கூறினார். அவர் குறிப்பிட்ட இடங்களில் அவரது வலது உள்ளங்கையில் உடல் வெப்பத்தை அளக்கும் நவீன கருவிகள் தனித் தனியாகப் பொருத்தப்பட்டன. பரிசோதனை முடியும் வரை அந்தக் கையை எந்தக் காரணத்தைக் கொண்டும் அசைக்கக் கூடாதென அந்த ஆராய்ச்சியாளர்கள் சொன்னார்கள். அவர்கள் அவர் கையை அசைக்காமல் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டார்கள்.


ஆரம்பத்தில் வலது கையின் வலது பக்க, இடது பக்க வெப்ப நிலைகள் ஒரே அளவில் (90 டிகிரி F) இருந்தன. பின் அவர் ஒரு பக்க வெப்ப நிலையை 89 டிகிரிக்கும், மறுபக்க வெப்ப நிலையை 91 டிகிரிக்கும் மாற்றினார். ஒரே கையில் இரு பக்கங்களுக்கு இடையில் 2 டிகிரி வித்தியாசம் இருந்தது. மூன்று நிமிடங்கள் கழித்து ஒரு பக்க வெப்பநிலை 88 டிகிரிக்கும், இன்னொரு பக்க வெப்பநிலை 95 டிகிரிக்கும் மாறியது. இரண்டாவது அளவீட்டில் இரு பக்கங்களுக்கும் இடையே 7 டிகிரி இருந்தது. அப்படியே படிப்படியாக அந்த வித்தியாசத்தை 9 டிகிரிக்கும், கடைசியாக 11 டிகிரிக்கும் உயர்த்திக் காட்டினார். இது அந்த ஆராய்ச்சியாளர்களை அதிசயிக்க வைத்தது. மருத்துவ ரீதியாக ஒரு கையில் வேறு வேறு வெப்பநிலை இருப்பது சாத்தியமில்லை. அப்படி இருக்கையில் அந்தக் கையை அசைக்கக்கூட செய்யாமல் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கும் இடையே 11 டிகிரி வித்தியாசத்தை அவர் ஏற்படுத்தியது அற்புதமாகவே அவர்களுக்குத் தோன்றியது.

அடுத்ததாக ஸ்வாமி ராமா தன் இதயத்துடிப்பையும் ஏற்றி இறக்கிக் காட்டினார். இதயத் துடிப்பை அதிகரித்துக் காட்டியதைப் பெரிய விஷயமாக ஆராய்ச்சியாளர்கள் நினைக்கவில்லை. ஆனால் இதயத்துடிப்பை தாங்கள் சொல்கிற சமயத்தில் குறைத்துக் காட்ட முடியுமா என்று ஆராய்ச்சியாளர்கள் கேட்ட போது ஸ்வாமி ராமா சம்மதித்தார். அவர்கள் சொன்ன சமயத்தில், ஒரு நிமிடத்திற்கு 21 இதயத்துடிப்புகள் குறைத்து வியப்பூட்டினார்.


பின்னர் உணவருந்துகையில் பேசுகையில் இதயத்துடிப்பை சில நிமிடங்களுக்கு நிறுத்தக் கூட தன்னால் முடியும் என்றும் ஆனால் அதற்கு மூன்று நாட்கள் உபவாசம் இருந்து ஆயத்தமாக வேண்டும் என்றும் ஸ்வாமி ராமா சொன்னார். ஆனால் அவருடைய குருகா ஆயத்தமே இல்லாமல் மூன்று வினாடிகளில் செய்து காட்டுவார் என்று ஸ்வாமி ராமா சொன்னார். (அவருடைய குருவைப் பற்றிக் கேட்டதற்கு அவருடைய குரு பிரமிக்கத்தக்க சக்திகள் படைத்த யோகி என்றாலும் அவருக்கு பிரபலமாவதில் விருப்பமில்லை என்றும் அது ஆன்மீக வாழ்க்கைக்கு இடைஞ்சல் என்று கருதுபவர் என்றும் சொன்னார்). உபவாசம் இருந்து செய்து ஆயத்தமாக சமயமில்லாததால் ஓரளவு இதயத்துடிப்பைத் தன்னால் நிறுத்திக் காட்ட முடியும் என்றும் எத்தனை நேரம் நிறுத்திக் காட்டினால் அதை சாதனை என்று எடுத்துக் கொள்வீர்கள் என்றும் கேட்க ஆராய்ச்சியாளர்கள் பத்து வினாடிகள் நிறுத்திக் காட்டினால் போதும் என்று சொன்னார்கள். மறுநாள் ஸ்வாமி ராமா 16.2 வினாடிகள் தன் இதயத்துடிப்பை நிறுத்திக் காட்டினார்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியானவுடன் ஸ்வாமி ராமா அமெரிக்காவில் மிகவும் பிரபலமானார். எனவே மீண்டும் 1970ஆம் ஆண்டு இறுதியில் உரையாற்றவும், பரிசோதனைகளுக்காகவும் அமெரிக்காவிற்கு அழைக்கப்பட்டார். ஒரு பரிசோதனையில் 14 அங்குல, 7 அங்குல அலுமினிய ஊசிகள் இங்கு காட்டியுள்ள படத்தில் உள்ள படி அளவுகள் குறித்த ஒரு வட்ட அமைப்பில் வைக்கப்பட்டிருந்தன. சற்று தொலைவில் ஸ்வாமி ராமா அமர்த்தப்பட்டிருந்தார். அவர் அந்த ஊசிகளை தன் மூச்சுக்காற்றால் எந்த விதத்திலும் அசைக்க முடியாதபடி ஒரு பிரத்தியேக முகமூடி (அதுவும் இங்கு காட்டப்பட்டுள்ளது) அவருக்குத் தரப்பட்டு இருந்தது. அதை அணிந்து கொண்டு சில மந்திரங்களை உச்சரித்து அந்த ஊசிகளை ஸ்வாமி ராமா அசைத்துக் காட்டினார்.

சிகாகோவில் ஒரு முறை உரையாற்றிக் கொண்டிருந்த போது உடலில் உள்ள 'சக்ரா'க்களைப் பற்றியும் அந்த சக்ராக்களுக்கு சக்தியை அதிகப்படுத்த முடியும் என்றும் அப்போது அவை ஒளிர்வதைக் கண்ணால் கூடக் காண முடியும் என்றும் ஸ்வாமி ராமா சொன்னார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் சந்தேகத்துடன் கேட்டார். "கண்ணால் காண முடியும் என்றால் அதைப் புகைப்படம் எடுக்கவும் முடியும் அல்லவா? நீங்கள் இப்போது செய்து காட்டினால் நான் பொலொராய்டு காமிராவில் புகைப்படம் எடுக்கிறேன். முடியுமா?"


அதற்கு சம்மதித்த ஸ்வாமி ராமா அங்கேயே தன் இதயச் சக்ராவிற்கு சக்தியை அனுப்பி அந்தச் சக்ராவை ஒளிரச் செய்தார். அப்போது அந்த மருத்துவர் அதைப் பல புகைப்படங்கள் எடுத்துப் பார்த்து பின் தான் சந்தேகம் தெளிந்தார். அந்தப் புகைப்படங்களில் ஒன்றை நீங்கள் இங்கே காணலாம்.

இந்த ஆராய்ச்சிகளில் முதல் மூன்றும் பரிசோதனைக் கூடத்தில் பல பார்வையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் முன்னிலையில் செய்யப்பட்டவை. கடைசி அற்புத நிகழ்ச்சி பொதுக் கூட்டம் ஒன்றில் எல்லோர் முன்னிலும் நிகழ்த்திக் காட்டப்பட்டது. ஆழ் மனதின் சக்திகள் செய்து காட்ட முடிந்த அற்புதங்கள் தான் எத்தனை...

மேலும் பயணிப்போம்...

பாஜக தமிழிசை கலாட்டா...


அடிமைகள் மாறுவதில்லை...


விஜயகாந்துக்கு நடந்ததெல்லாம் திமுக ஸ்டாலின் கண்ணுமுன்னாடி வந்து போகுமா இல்லையா. வரலாறு முக்கியம்...


பாஜக வின் நீட் தேர்வை திமுக காங்கிரஸ் வழக்கறிஞர்கள் இனைந்து தமிழக மாணவர்களுக்கு எதிராக தீர்ப்பு வாங்கி கொடுத்தது...


அதை மறைமுகமாக அதிமுக துணை நின்றது...

பாஜக மோடியும் சுற்றுப் பயணங்களின் நோக்கமும்...


கோடான கோடி மக்கள் வரிப்பணத்தில் மோடி செய்யும் வெளி நாட்டு பயணங்களால் இந்திய மக்கள் நன்மை அடைந்ததை விட அதானி நன்மை அடைந்தது தான் அதிகம்...


அதன் விளைவு இங்க போயி நிற்கிறது..?

கோடான கோடி போட்டு அயல் நாடுகளில் அதானி முதலீடு செய்ய பணம் எங்கு இருந்து வந்தது ஆபிசர் ?


இதுவா ஊழல் இல்லா ஆட்சி ?

இதுவா ஊழலுக்கு எதிரான போர் ?

அதிமுக வில் தியானத்தின் பிசேன் என்றோ தொடங்கிவிட்டது....


மராட்டிய கன்னட ரஜினி புதிய கட்சி அடுத்த மாதம் அறிவிப்பு: சென்னையில் பிரமாண்ட மாநாடு...


ரஜினியின் புதிய கட்சி குறித்த தகவல் அடுத்த மாதம் அறிவிக்கப்பட உள்ளது. அந்த முக்கிய அறிவிப்பை சென்னையில் பிரமாண்ட மாநாடு நடத்தி அறிவிக்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் ரசிகர்களை சந்தித்தபோது, தனது அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக அறிவித்தார்.

ரஜினியின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் ஏராளமானோர் கருத்து தெரிவித்தனர். இதை யடுத்து ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர் பார்ப்பு ஏற்பட்டது.

ரஜினி பலமுறை அரசியல் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். ஒருமுறை தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளித்தார். என்றாலும் தனிக்கட்சி தொடங்குவதில் எந்தவித அக்கறையும் காட்ட வில்லை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் மக்களுக்கு நல் ஆட்சி தேவை. எனவே புதிய கட்சி தொடங்க ரஜினி முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சமீபத்தில் ரஜினியை சந்தித்தார். அதன் பிறகு அவர் அளித்த பேட்டியில், ‘ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட முடிவு செய்து விட் டார்’ என்று தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்னோட்டமாக திருச்சியில் ரஜினி ரசிகர்கள் பங்கேற்ற மாநாட்டை சில தினங்களுக்கு முன்பு நடத்தினார். இதில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

அரசியலுக்கு வருவதற்கு இது தான் சரியான தருணம் என்று என்னிடம் ரஜினி தெரிவித்துவிட்டார் என்று இந்த மாநாட்டில் தமிழருவி மணியன் கூறினார். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால் தமிழக அரசியல் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

இந்த நிலையில், ரஜினி தொடங்கும் புதிய கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை முக்கிய பிரமுகர்கள் மூலம் தயாரித்து இருப்பதாகவும், அதில் பொருத்தமான பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ரஜினி தேர்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது.

கட்சியின் கொள்கைகளாக வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு, நதிகள் இணைப்பு போன்றவை இடம்பெற உள்ளன. தமிழ் நாட்டில் நீர்நிலைகளை அதிகரிப்பது, தமிழக நதிகளை இணைப்பது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் புதிய கொள்கைகள் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.

ரஜினி பல்வேறு மாவட்ட ரசிகர்களை ஏற்கனவே சந்தித்தார். மீதம் உள்ள மாவட்ட ரசிகர்களை செப்டம்பர் இறுதிக்குள் சந்திப்பேன் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி அவர் அடுத்த மாதம் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

அப்போது புதிய கட்சி தொடங்குவது பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி ஏற்கனவே ‘2.0’ படத்தில் நடித்து முடித்து விட்டார். அடுத்த மாதத்துக்குள் ‘காலா’ படப்பிடிப்பும் முடிந்துவிடும். எனவே, ரசிகர்கள் சந்திப்பின்போது கட்சி அறிவிப்பு வெளியாவது உறுதி என்று ரஜினி ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து, சென்னையில் ரஜினி ரசிகர்கள் பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஜனவரி மாதம் ரஜினியின் ‘2.0’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து ரஜினி ரசிகர்கள் மாநாடு நடைபெறும் என்று தெரிகிறது.

இந்த மாநாட்டில் கட்சி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. அதில் கொடி, சின்னம், கொள்கைகள் ஆகியவையும் இடம் பெறும். இந்த மாநாட்டில் கட்சியின் தீவிர செயல்பாடுகள் பற்றியும் முடிவு செய்து அறிவிக்கப்படும். அதன் பிறகு கட்சியின் செயல்பாடுகள் தீவிரம் ஆகும் என்று சொல்லப்படுகிறது...

ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஆர்.பி.உதயக்குமார் நீக்கம்: டிடிவி தினகரனின் அடுத்த அதிரடி...


யார் தமிழர் என்று கேட்கும் வேற்று இனத்தவருக்கு பதில் சொல்லும் சட்டநாதன் ஆணையம்…


1956 - ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கர்நாடகாவில் கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்ட கன்னடச் சாதிகள் மட்டுமே மாநில பட்டியல்களில் இடம்பெற்றது, கன்னடர் மட்டுமே அரசு வேலை மற்றும் அரசாங்க பிரதிநிதிகளாக இருக்க வகை செய்தது கர்நாடகம். அங்கு உள்ள பட்டியல்களில் எந்தவொரு தமிழ்ச் சாதிகளும் இடம் பெற முடியாது. தாழ்த்தப்பட்டவர் இட ஒதுக்கீட்டில் கன்னடர் அல்லாத பிற மாநில தாழ்த்தப்பட்டோருக்கு இடமில்லை.

அவ்வாறே ஆந்திராவில் தெலுங்கைத் தாய் மொழியாகவும், கேரளாவில் மலையாளத்தை தாய்மொழியாகவும் கொண்டவர்கள் மட்டுமே அந்தந்த மாநில பட்டியல்களில் இடம் பெற வகை செய்யப்பட்டது.

இதே நிலைபோல் தமிழகத்திலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே பட்டியல்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து அதன் அடிப்படையில் "சட்டநாத ஆணையம்" 1972 - இல் மு.கருணாநிதி (தட்சிணாமூர்த்தி) தலைமையிலான தி.மு.ஆட்சியின் போது நீதிபதி சட்டநாதன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு அனைத்து பட்டியல்களில் உள்ள தமிழ்ச் சாதிகளை இனம் கன்டு புதிய பட்டியல் உருவாக்குவதற்க்கான திட்டம் வகுக்கப்பட்டது.

சட்டநாதன் ஆணையம் அனைத்து பட்டியலில் உள்ள தமிழ்ச் சாதிகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, அந்தந்தச் சாதிகளைப் பற்றிய முழு விவரங்களையும் தொகுத்து ஆங்கிலத்தில் 300 பக்கங்களை கொண்ட அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.

அனைத்து பட்டியல்களிலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே கொண்ட அந்த அறிக்கையில் தனது சாதியான "சின்ன மேளம்" (இசை வேளார்) என்ற தெலுங்குச் சாதி இடம் பெறாதது கண்டு அதிர்ச்சி அடைந்த மு. கருணாநிதி 'அறியாமையில் பெரும் பிழை செய்து விட்டோமே' என அஞ்சி சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டு இருட்டடிப்புச் செய்துவிட்டார்.

தற்போது இருக்கக்கூடிய அனைத்து பட்டியல்களிலும் ( SC,ST,BC,MBC) தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவிகளை தமிழர்கள் இருக்கக்கூடிய இடங்களில் அந்நிய மொழியினரான தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும், மார்வாடிகளும், செளராட்டிரர்களும், 'இந்தி'யர்களும் தான் வலுவாக அமர்ந்து கொண்டு வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இடத்தை பறிகொடுத்த தமிழர்கள் ஏமாளிகளாகத் தேர்வு எழுதிக் கொண்டே தெருவில் திரிகிறார்கள்.

ஆகையால் தமிழ் மக்களின் நலன் கருதி மீண்டும் நமக்குரிய அதிகார பங்கினை மீட்டெடுக்க.

சட்டநாதன் ஆணையத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த தமிழர் அமைப்புகள் அனைத்தும் இந்த போராட்டத்தை வீரியத்துடன் முன்னெடுத்து போராட வேண்டும்.

தமிழ் நாட்டில் தலித் அரசியல் பேசுவோர் தமிழர் நலனில் கவனம் செலுத்த மாட்டார்கள், தாழ்த்தப்பட்ட தமிழரை ஒரு குறிப்பிட்ட சதவீத வாக்குகளாகவே பார்பார்கள்.

தமிழர் அல்லாதோரின் நலனுக்காக கட்சி கண்ட திராவிட அரசியல் கட்சிகளும் இதை கண்டுகொள்ளாது.

திராவிட இயக்கம் இந்த 'தமிழர் உரிமை மறுப்பை' ஆதரித்து சட்டநாதன் ஆணையத்தையே இனவாதம் என்று கருத்தாக்கம் செய்ய துணியும்.

தமிழ் தேசிய அரசியலில் மட்டுமே இந்த தமிழர் உரிமையும் நிலைநாட்டப்படும்.

யார் தமிழர் என்று கேட்கும் வேற்று இனத்தவருக்கு இனி சட்டநாதன் ஆணையம் சமர்ப்பித்த பட்டியல் தான் பதில்...

ஒரு ஓட்டுக்கு எத்தனை முதலமைச்சருடா?


இதுக்கு பேரு தான் நெத்தியடி...


பார்ப்பான் எச்சி இலையில் உருண்டு புரள்வது தமிழனா? திராவிடனா?


பார்ப்பான் எச்சி இலையில் தமிழன் உருள்கிறான் என ஒரு பதிவைப் பார்த்தேன்..

அது என்னய்யா

பார்ப்பான் எச்சி இலையில் திராவிடன் உருள்கிறான் என்று எழுத வேண்டியது தானே..

மற்ற நேரமெல்லாம் திராவிடன் என மூச்சுக்கு முன்னூறு முறை கூவுறீங்க..

இழிவு நிலையை பேசும் போது மட்டும் தமிழன் என்று சொல்லிட்டு வாயில வந்தபடி திட்டுறீங்க?


அடுத்து, தமிழன் என்றாலே பார்ப்பானும் வந்து விடுவான் என்று சொல்லுறீங்க.. தமிழ் என்றாலே சாதி என்று தான் சொல்லுறீங்க..

அப்புறம் எதுக்கு 'தமிழர் தலைவர்' என்று பட்டம்?

சாதிய தலைவர் அல்லது பார்ப்பனிய தலைவர் என மாற்றியமைக்க வேண்டியது தானே..

தமிழ் பார்ப்பனரும் தமிழன் தான் டா...

இலங்கையின் மொத்த ராணுவத் தொகை இரண்டு லட்சம்...


அதில் ஒன்றரை லட்சம் பேர் தமிழர் தாயகமான ஈழத்தை ஆக்கிரமித்துள்ளார்கள்.

ராணுவத்தை வெளியேற்றுவது குறித்து பேச கூட மறுக்கும் இந்திய அரசு தமிழர்களுக்கு நல்லது செய்யும் என்பதை நம்ப தமிழர்கள் என்ன முட்டாள்களா?

தமிழர்களுக்கு வெளிப்படியாக நல்லது செய்தால் சிங்களர்களுக்கு கோபம் வந்துவிடும், அவர்கள் மீண்டும் ராஜபக்சேவை அரியணை  ஏற்றி விடுவார்கள் என புதுவகையான பூச்சாண்டி காட்டுகிறார்கள்.

தமிழர்களுக்கு நல்லது செய்வது சிங்களர்களுக்குப் பிடிக்காது என்றால் தமிழனும் சிங்களனும் எப்படி இணைந்து வாழ முடியும்?

சிங்கள உழைக்கும் மக்களும் தமிழ் உழைக்கும் மக்களும் இணைந்து போராட வேண்டும் என இன்னொரு தரப்பு வகுப்பெடுக்கிறது.

நியாயம்தான்.. ஆனால் யதார்த்தம் என்ன?

தமிழன் அழிக்கப்படும்போது அதனைத் தடுக்கக் கோரி எந்த சிங்கள உழைக்கும் மக்களோ, அமைப்போ குரல் கொடுக்கவில்லையே, அனைவரும் ஒன்றாகக் கூடி பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்களே..

(அதற்காக அனைந்து சிங்களர்களும் இனப்படுகொலையை ஆதரிக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது).

நடந்தது இனப்படுகொலை என்கிற உண்மையைப் பேசும் ஒரு சிங்கள அமைப்பாவது இருக்கிறதா?

அப்புறம் எங்கே ஒன்றா சேர்ந்து போராடுவது?

பொதுவாக்கெடுப்பைத் தவிர வேறு எதுவும் தீர்வாகாது...

திராவிடம் என்பது மாயையான ஒன்று...


ஓர் இனம் என்று சொன்னால் அது மரபினமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மொழிதேசிய இனமாக இருக்க வேண்டும்.

திராவிட இனம் என்பது மொழிதேசிய குடும்ப இனம். இது எதற்குள்ளும் வராது.

திராவிடம் என்கிற சொல், தமிழர்களை மூன்றாம் முறை அடிமைப்படுத்துவதற்காக, அவர்களின் அடையாளத்தை மறுப்பதற்காக வந்த சொல்லே ஆகும்.

1400களில் தெலுங்கர்களாக இருக்கக்கூடிய கிருஷ்ண தேவராயர் போன்றவர்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு எதிராக, இந்து என்ற பொது அடையாளத்தை முன்வைத்தார்கள்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்களும் அதற்கு உதவி செய்தார்கள். இதனால் இஸ்லாமியர்களைத் துரத்திவிட்டு தெலுங்கர்கள் ஆட்சிக்கு வந்து விட்டார்கள். அதுதான் செஞ்சியில் நடந்தது. அதுதான் மதுரை வரைக்கும் நடந்திருக்கிறது.

தமிழர்கள் தங்கள் அடையாளத்தை முன்வைத்து நடத்தாததன் காரணமாக இப்படியாக முதல் முறையாக தங்கள் ஆட்சியுரிமையை, அதிகாரத்தை இழந்தார்கள்.

இரண்டாவது முறையாக ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதும் தங்கள் ஆட்சியை நிறுவியபோது, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆட்சிப்பொறுப்பில், அதிகாரத்தில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் தெலுங்கு  மொழி பேசுபவர்கள் தான்.  அப்போது அன்னிபெசண்ட் வருகையால் காங்கிரசில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது.

சுயாட்சிக்கான கோரிக்கையை அன்னிபெசன்ட் முன் வைத்தார். அது இந்தியாவில் எங்கும் எடுபடவில்லை.

அந்த அம்மையார்  தமிழ்நாட்டில்  இருந்ததால் அந்த கோரிக்கைக்கு மிகப்பெரிய ஆதரவு எழுந்தது.

ஆங்கிலேயர்களைப் பொருத்தவரையில் அன்னிபெசன்டின் கோரிக்கையை நீர்க்கச் செய்ய வேண்டும்.

இச்சூழ்நிலையில் அவருக்கு எதிராக ஆங்கிலேயரின் தூண்டுதலால் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே பார்ப்பனரால்லாதோர் இயக்கம்...

உலகத்தில் மூடநம்பிக்கை இல்லாத இனமே கிடையாது...


தமிழ்நாட்டில் மட்டும்தான் மூடநம்பிக்கை இருந்தது, இங்கே மட்டும்தான் ஏற்றத்தாழ்வு இருந்தது, சாதிக் கீழ்மைகள் இருந்தன என்று சொல்வதெல்லாம் இவர்களை நியாயப்படுத்துவதற்காக சொல்லப்படும் மோசமான கருத்து.

நீதிக்கட்சி தான் சமூக சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்னது, இட ஒதுக்கீடு பெற்றுக்கொடுத்தது என்றெல்லாம் திராவிடக் கட்சி கூறுகிறது..

நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இடஒதுக்கீடு அறிமுகமாகி விட்டது.

தமிழர்களுக்குத் துரோகம் செய்தது  நீதிக்கட்சி  என்பதே வரலாறு.

1920 இல் ஆட்சிக்கு வந்த நீதிக்கட்சி வரலாற்றில் ஒரு முதலமைச்சர்கூட தமிழர் கிடையாது.

1919 இல் அன்றைய சென்னை மாகாண அரசு  இடஒதுக் கீடு ஆணையைக் கொண்டு வந்தது.

எழுத்தர் போன்ற பதவிகளுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள தெலுங்கர், தமிழர்கள் விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்று அந்த ஆணையில் இருந்தது.

நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த அம்சத்தை எடுத்து விட்டார்கள்.

1923 இல் இரண்டாம் ஆணையில் தெலுங்குப் பகுதிகளில் தெலுங்கர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு என்று கொண்டு வந்து விட்டார்கள்.

1909லிருந்து தெலுங்குப் பகுதி தெலுங்கர்களுக்கே என்று போராட்டம் நடத்தியவர்கள், தமிழர்கள் ஆட்சி நடத்தக்கூடாது என்று போராடியவர்கள் தான் இந்த ஆணையைக் கொண்டு வந்தார்கள்.

ஆந்திராவில் தெலுங்குப் பல்கலைக்கழகம் கொண்டு வந்தார்கள்.

தமிழ்ப் பல்கலைக்கழகம் வேண்டும் என்று அப்போது தமிழன் போராட்டம் நடத்தினான். ஆனால் அவர்கள் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

தெலுங்கர்களின் ஆதிக்கத்தை நிலைத்திருக்கச் செய்ய பார்ப்பனரல்லாதார் இயக்கம் எப்படி தோற்றுவிக்கப்பட்டதோ, அதன் தொடர்ச்சியாகத்தான் நீதிக்கட்சியின் (திராவிடத்தின்) வேலைகளும் இருந்தன...

சீனி - சில கசப்பான உண்மைகள்...


மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளூகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.

சீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.

சிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரழிவு நோய், இப்படி சீனி உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சீனி அதிகம் சேர்க்கப்படுகிறது.

உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சீனி உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.

சீனி அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத் தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கு நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது. சீனியும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப் பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.

தினமும் 24 தேக்கரண்டி சீனி நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.

உடலில் அதிகம் சீனி இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டின் வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.

கேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சீனி இன்னும் துரிதப்படுத்துகிறது. அளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு எலும்பில் கால்சியத்தைக் குறைத்து எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என்று பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது.

காபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சீனியை பயன்படுத்துங்கள் போதும். காபி, டீ சாப்பிடாதவர்கள் சீனியின் தொந்தரவிலிருந்து முழுவதும் விடுபட்டவர்கள். மெல்லக் கொல்லும் சீனியை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது...

இலுமினாட்டி களை தவிர்ப்பது எப்படி..?


நம்மை சுற்றி இவ்வளவு அரசியலை மிகத்தெளிவாக புரியவைக்கும் காணொளி...