27/06/2021

என் காதலியே...

 




என் உயிர் போகும் நாள் வரை 
உன்னை தேடுவேன்...

உன்னை மீண்டும் பார்த்த பின்
கண் மூடுவேன்...

நீங்க முடியுமா.. 
நினைவு தூங்குமா...

என் சதிகாரியே...

வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள்...

 




கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார்.

கணக்கதிகாரப் பாடல் : 50

“விட்ட மதனை விரைவா யிரட்டித்து
மட்டுநாண் மாதவனில் மாறியே – எட்டதனில்
ஏற்றியே செப்பியடி லேறும் வட்டத்தளவும்
தோற்றுமெப் பூங்கொடி நீ சொல் “

விளக்கம்:

விட்டம்தனை விரைவா யிரட்டித்து = விட்டத்தின் இரு மடங்கு = 2r + 2r = 4r
(விட்டம் = 2r ); மட்டு நாண் மாதவனில்
மாறியே = 4 ஆல் பெருக்கு; எட்டதனில்
ஏற்றியே = 8 ஆல் பெருக்கு; செப்பியடி =
20 ஆல் வகு.

வட்டத்தின் சுற்றளவு = ( 4r x 4 x 8 ) / 20 = 32 / 5 r = 2 ( 16/5) r = 2 π r
இங்கு π = 16 / 5 = 3.2
( இது ஓரளவுக்குத் துல்லியமான
தோராயமே ) இன்று நாம் பயன்படுத்தும்
வட்டத்தின் சுற்றளவு = 2 π r என்ற
சூத்திரத்தை நம் முன்னோர்கள் பல
நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துள்ளனர் என்று அறியும் போது உண்மையில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்...

காதலின் கடைசி நினைவு...

 




தவறு செய்து விட்டேன்
போலிருக்கிறது..

இனி நிகழக்கூடாது யாருக்கும்..

நினைவுகளை பலவந்தமாய் அடைத்து
விடுதலையை மறுத்திருக்கக் கூடாது..

அழுத்தம் குறைந்து
வெளியேறும் வேளை..

மிச்சத்தையும் துடைத்திருக்கலாம்..

நாசம் செய்யப்படாத நினைவுகள்
நாசம் செய்ய ஆரம்பித்தன..

பனிக்கட்டியில் செய்த கத்தி போல
கூர்மையாக. மாறிவிட்டது..

இதயத்தில் உறைந்த காதல் தோல்வி...

எல்லாவற்றையும் கிழித்துக் கொண்டு
இப்போது மேலே எழும்புகிறது..

உச்சியில் ஒரு வெற்றிடம்..

பெருமூச்சாய் பாய்ந்து
மண்டை ஒட்டிலிருந்து விலகுகின்றது..

இனி பேசுவதற்கும் நினைப்பதற்கும்
ஒன்றுமில்லை..

கடைசி நினைவு இதுதான்..

எல்லோரும் என்னைச் சுற்றி
அழுது கொண்டு...

ஒரு முகம் தென்படவில்லை...

எந்த நாய் கேட்கப் போகுது...

 




பாரீஸ் நகரில் ரயில் நிலையம் அருகில்
ஒருமுறை ஒரு பயங்கர வெடிகுண்டு
சம்பவம் நடந்தது. தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் தப்பித்தனர்.

ஆனால் அவர்களுடன் அந்த செயலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு பயிற்சி *நாய்* மட்டும் போலீசார் வசம் சிக்கி கொண்டது. ஆனால் அந்த நாயை வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை. காரணம் அது எந்த முறையில் எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை!

எப்படியாவது இந்த நாயை வைத்தே குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து அவர்களை கைது செய்ய
முயற்சி செய்தது போலீஸ்.  ஒரு வழியாக, ஒரு பன்மொழி கலைஞரை அழைத்து வந்தனர். அவருக்கு 60 மொழிகள்வரை அத்துப்படி. அவர் ஒரு புரஃபெஸரும் கூட.
.
அவரும் வந்து வித விதமான மொழிகளை பேசி முயற்சி செய்தும் பயன் இல்லை. அந்த நாய்க்கு ஒன்றும் புரியவே இல்லை.

கடைசியில் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான *ஹிப்ரு* என்ற மொழியில் அவர் பயிற்சியை துவக்கியதும்  நாய்க்கு புரிய ஆரம்பித்தது. உடன் அதை வைத்து குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டு, உடன் கைதும்  செய்தது பாரீஸ் போலீஸ்.

அந்த புரஃபெஸருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. பாரீஸ் அரசாங்கம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளித்தர முடிவு செய்தது. பெரிய விருந்து ஒன்றுக்கும் ஏற்பாடு செய்தது. விருந்தில் அவரிடம், 

உங்களால் பாரீஸ் பெருமை அடைந்தது.  உங்களுக்கு என்ன வேண்டும்? கேளுங்கள் வழங்கபடும்.* என்றனர்....

பணம் வேண்டுமா.....?
விலை கூடிய கார்கள் வேண்டுமா..?
மாளிகை வேண்டுமா....?
அரசாங்க பணிகள் வேண்டுமா...?

அனைத்தையும் அவர் மறுத்துவிட்டார்...

*எனக்கு உதவியாக இருந்த அந்த...நாயை மட்டும் தயவு செய்து எனக்கு வழங்கிவிடுங்கள்* என்றார்...

அதை கேட்டு அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சர்யம்.  சிலர் இவருக்கு பைத்தியம் என்றனர்.

ஒரு அதிகாரி,  ஏன் அந்த நாயை வைத்து நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

அதற்கு அவர் சொன்னார்...

இந்த நாயை என் வீட்டிற்கு கொண்டு போய் என் மனைவி முன் நிறுத்தவேண்டும். ஏன் என்றால்,  நான் கஷ்டப்பட்டு இந்த பல மொழிகள் படிக்க முயலும்போதெல்லாம் அவள் சொல்வாள் "எந்த நாய் கேட்க்க போகுதுன்னு இதையெல்லாம் படிக்கிறீங்கன்னு. அதுக்காக தான் இதை கொண்டுபோகணும்னு"
சொன்னவுடன்...

பாராட்டக் கூடிய மக்கள் அரங்கமே பலத்த  சிரிப்பொலியில் மூழ்கியது..

🤪😁🤣😜

பாஜக திருடன் எச். ராஜா சிக்கினான்...

 


அதிமுக ராஜேந்திர பாலாஜி கலாட்டா...

 


மேதகு திரைப்படம் பார்த்தேன்...

 


ஈழத்தையும், ஈழத்தமிழர்களின் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் பெயரையும் வைத்து தமிழ்நாட்ல கோடி கோடியா சம்பாதிச்சு செட்டில் ஆனவனுங்களுக்கு கூட இப்படி ஒரு படம் எடுக்கனும் னு தோணல பாருங்க.

இந்த மேதகு படத்தை உருவாக்கிய படக்குவினருக்கு தலை வணங்கி வாழ்த்தி பாராட்டுகிறேன்.

இலங்கையை ஆண்டது பன்னடார வன்னியன் என்ற மன்னன்தான் என்ற மாபெரும் வரலாற்று உண்மையை வெளிக்காட்டிய இயக்குநருக்கு நன்றி..

திரு.பிராபகரன் அவர்களின் கதாபாத்திரம் பேசும் வசனங்கள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைத்தது.

இந்த மேதகு படத்தின் உங்களின் அடுத்த PART-2 க்காக காத்துக் கொண்டிருக்கிறேன்...

டெல்டா பிளஸ் : தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்...

 


டெல்டா பிளஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மத்தியஅரசு தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

‘டெல்டா பிளஸ்' வகை வைரஸ் நுரையீரலை கடுமையாக பாதித்து நோய் எதிர்ப்பு சக்தியை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டது. 

கொரோனா மேலும் பரவாமல் தடுக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

சென்னை காஞ்சிபுரம், மதுரை பகுதிகளில் கொரோனா தீவிர பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

நம்ப முடியாத உண்மைகள்...

 


நம்ப முடியாத வேற்றுகிரக வாசிகள் உண்மைகள்...

 


உலகின் மிகப்பெரிய மாஃபியா மருந்து நிறுவனங்கள் தான்...

 


மருந்து நிறுவனங்கள் தங்களின் லாபத்திற்காகவே மருந்துகளை உற்பத்தி செய்கின்றன.

நான் அன்றாடம் தேவைப்படும் பொருட்களை விற்பனை செய்கிறேன் என்றால் அவை தரமாக இருந்தால் தான் நீங்கள் மீண்டும் அதை வாங்குவீர்கள். அப்போது தான் நான் லாபமடைய முடியும்.

அதுபோல நான் தரமாக ஒரு மருந்தை தயாரிக்கிறேன். அதை உபயோகப்படுத்தினால் மீண்டும் நோய் வராது. அதனால் எனக்கு ஒரு முறை மட்டுமே லாபம். அதனால் எனக்கு பயன் இல்லை.

அதனால் மருந்து நிறுவனங்கள் நோய்களை குணப்படுத்துவதை விட நோயாளின் எண்ணிக்கையை உயர்த்துவதையே குறிக்கோளாக கொண்டுள்ளன. ஏற்றுக் கொள்கிறீர்களா?

என்ன கொடுமைடா இது...

 




நாம் யாருக்காக
தேடி தேடி status
வைக்கிறோமோ..,


அந்த மூதேவி
மட்டும்
கடைசி வரைக்கும்
பாக்குறதே இல்ல..

😁😁😁

திராவிடத்தை வேறருக்க வேண்டும் என்பதற்கு சில காரணங்கள்...

 




திராவிடம் செய்யும் தீமைகளை மறப்பது தமிழினின் இயல்பு..

திராவிடம் வேண்டாம் என்று நினைவு படுத்துவது எனது கடமை..

1. அண்டை மாநிலத்தில் இதுவரை தமிழன் முதல்வர் பதவியல் இருத்து இருகிறானா? அப்படி இல்லாத போது வீட்டில் தெலுங்கு / கன்னடம் / மலையாளம்  பேசும் இவர்கள் எப்படி தமிழர்களின் இன உணர்வை புரிந்து கொள்ள முடியும்...

2. திராவிட கட்சிகளால் ஏன் இன்னும் ஒடுக்கப்பட்ட இன மக்கள்  முதல்வர் பதவிக்கு வர முடியவில்லை.. ஆனால், திராவிடம் இல்லாத மண்ணில் தான்... ஒடுக்கப்பட்ட இனத்தில் உள்ள ராம்விலாஸ் பாஸ்வான் போன்றவர்கள் தலைவராக அமைச்சராக முடிந்தது. திராவிடம் இல்லாத மண்ணில் தான்.... ஒடுக்கப்பட்ட இனத்தில் உள்ள மாயாவதி முதல்வர் ஆக முடிந்தது.

3. திராவிடம் என்றால் தெலுங்கன், கன்னடன், மலையாளி சேர்ந்த ஒன்று என்று சொல்லும் உனனால் ஏன் இன்னும் காவிரி தண்ணீரை வாங்கி தர முடியவில்லை.

முல்லை பெரியாறு அணையில் இதுவரை நமக்கு தண்ணீர் வரவில்லை... தமிழன் மீது இன வெறியை தூண்டி தமிழனுக்கு தண்ணீர் தர மறுத்த தெலுங்கர்கள்.. ஏன் ஏன் ஏன்.?

4. திராவிடம் பேசும் நீ தீண்டாமை பேசும் நீ ஏன் இன்னும் தமிழகத்தின் கிராமங்களில் ஜாதியின் பெயரால் இருக்கும் இரட்டைக் குவளை முறையை மாற்ற முடியவில்லை. ஏன் ஏன் ஏன் ..?

5. திராவிடம் பேசும் நீ இதுவரை 1000க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க நீ என்ன முயற்சி செய்தாய்...

6. திராவிடம் பேசும் நீ ஏன் இலங்கையில் நடைபெற்ற போரில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் மௌனம் காத்து இருந்தாய் ஏன்...

ஏன் ஆட்சில் இருந்து வெளிய வர வேண்டியது தானே ஏன் உன்னால் முடியவில்லை.. அப்படி செய்தால் கனி மொழி மற்றும் ராசா உடன் சேர்த்து ஸ்பெட்ராம் முறைகேடு செய்ய முடியாது என்றோ ?

7. திராவிடம் பேசும் நீ ஏன்டா.. குடும்ப அரசியல் பண்ணி தமிழர்களை படுகொலை செய்கிராய்...

8. திராவிடம் பேசும் நீ.. ஆரியத்துக்கு எதிராய் தான் திராவிடம் வந்தது என்றால் பார்பனியர் எப்படி திராவிட கட்சில் வந்தார்கள்.

9. திராவிடம் பேசும் நீ... சாராயம் கொடுத்து தமிழர்களை ஏன் அடிமையை போல வைத்து இருக்கிறாய்... சாராயத்தை நிறுத்த வேண்டியது தானே...

10. பள்ளியில் தமிழ் மொழி படிப்படியாக அகற்றப்படுகிறது. ஆங்கிலமும் திராவிட மொழிகளும், இந்தியும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன. இதுதான் திராவிடம் செய்த கோலமா ?

11. தமிழர்களின் விளை நிலத்தை தெலுங்கு / மலையாளி/ கன்னட / வட இந்தியர் வாங்கி கொளுமையை இறுக்க வழி வகுக்கும் தெலுங்கு / மலையாளி/ கன்னட அரசியல் வியாதிகளே...

12. திராவிடம் பேசும் நீ... தமிழர்களை கடன் வாங்கி கடன்காரனாக ஆக்கும் முத்தூட் / மனபுரம் / மர்வடி நிறுவனத்திற்கு மற்றக... தமிழகத்தில் வங்கி மூலம் கடன் கொடுத்து தமிழர் நலம் காக்க மறந்தது எப்படி...

என்னை திராவிடனாய் இரு என்று சொல்ல நீ யாராட பொறம்போக்கு..

வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்..

தமிழ் நாட்டில் திராவிட சிந்தனை அழியாதவரை..

ஈழத்தில் மட்டும் அல்ல, உலகில் எந்த நாட்டிலும், தமிழ் இனமோ, மொழியோ - வாழாது, வளராது.
திராவிடம் தான் தமிழனின் முதல் எதிரி...
விழுவது எல்லாம் அழுவதற்கு இல்லை ..
விழுவது எல்லாம் எழுவதற்கு...

நண்பனின் கேள்வி : கற்பு என்றால் என்ன.?

 




உடல் சம்பந்தப்பட்டதா.?
மனம் சம்பந்தப்பட்டதா.?

என்னை பொறுத்த வரையில்...

கற்பு என்பது மனம் சம்பந்தப்பட்டவையே...

ஏனெனில் 100 இல் 95 % பெண்களுக்கு கற்பு இருக்காது...

1. தெரிந்தே தவறு செய்பவர்கள்..

2. ஏதோ ஒரு வழியில் ஏமாற்றப்பட்டவர்கள்..

3. விளையாட்டு பெண்கள் (Sports)..

ஏதோ ஒரு வகையில் உடலளவில் கற்பு பறி போய் இருக்கிறது...

அப்படியிருக்க.. அந்த பெண்ணே சொன்னால் ஒழிய நாமாக தெரிந்து கொள்வதும் கடினமே...

ஆகையால் தான் கற்பு என்பது மனம் சம்பந்தப்பட்டவை...

யாரையும் காதலிக்காமல் மனதை பரி கொடுக்காமல் ஒருவரை நேரடியாக திருமணம் செய்யும் பெண்  கற்புடையவள்...

ஒருவரை காதலித்து அவரையே திருமணம் செய்பவளும் கற்புடையவளாகிறாள்...

ஆனால் மனதில் ஒருவனை நினைத்து விட்டு... வேறொருவனுடன் வாழ்பவள்...
தூய்மை அற்றவளே... கணவனுக்கு துரோகம் செய்தவளே... 

இது ஆண் - பெண் இருவருக்கும் பொருந்தும்...

கொரோனா கலாட்டா 😁

 


கொரோனா தடுப்பூசி உண்மைகள் - மருத்துவ வியாபாரம்...

 


கென்யாவில் யாருமே வசிக்க முடியாத மர்மமான இடம்...

 


யாருமே வசிக்க முடியாத ஒரு மர்மமான இடம் பூமியில் இருக்கிறது. இந்தத் தீவுப்பகுதிக்குச் சென்றவர்கள் யாரும் உயிருடன் திரும்பியதே இல்லையாம்.

கென்யா நாட்டின் வடமேற்குப் பகுதியில் கடலுக்கு நடுவே இருக்கும் குட்டித்தீவில் பிரமாண்டமாய் தேங்கியிருக்கும் துர்கனா ஏரியைச் சுற்றி ஏராளமான குட்டிக் குட்டித் தீவுகள் இருக்கின்றன. அந்தத் தீவுகளில் ஒன்றுதான் ‘என்வைன்டினெட்’ என்றழைக்கப்படும் கொஞ்சூண்டு நிலப்பகுதி. துர்கனா ஏரியைச் சுற்றி வாழும் பழங்குடியின மக்களின் மொழியில் ‘என்வைன்டினெட்’ என்றால், ‘திரும்பி வராது’ என்று அர்த்தமாம். தீவுக்கு இப்படிப் பெயர் வந்ததற்குப் பின்னணியில் இருக்கும் கதைதான் சுவாரஸ்யமும், மர்மமும் நிறைந்தது.

1900-களில் என்வைன்டினெட் தீவில் ஏராளமான மனிதர்கள் வாழ்ந்தார்கள். மீன் பிடிப்பது அவர்களுடைய தொழில். பெரும்பாலும் தீவை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்றாலும், வியாபாரத்துக்காக அவ்வப்போது பக்கத்துத் தீவுகளுக்குச் சென்றுவருவார்களாம். என்வைன்டினெட் தீவில் மக்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே ஆதாரம், அவர்கள் பக்கத்துத் தீவுகளுக்கு அடிக்கும் விசிட்தான்!

இந்த நிலையில், திடீரென சில நாட்கள் அந்தத் தீவில் இருந்து, வியாபாரத்துக்காகப் பக்கத்துத் தீவுகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது. அடுத்தடுத்த சில நாட்களில் மனிதர்களின் வருகை முற்றிலும் நிற்கவே, பக்கத்து தீவைச் சேர்ந்த சிலர் அந்தத் தீவுக்குச் சென்றிருக்கிறார்கள். தீவுக்குச் சென்றவர்கள் திரும்பவில்லை. பிறகு, பாதுகாப்புடன் பயணித்த இன்னொரு பழங்குடியினர் குழுவும் திரும்பி வரவில்லை! இது போதாதா? ‘தீவுக்குச் செல்பவர்கள் காற்றில் கரைந்து விடுகிறார்கள்’, ‘வேற்றுக்கிரகவாசிகள் அவர்களை அழைத்துச் செல்கிறார்கள்’, ‘திடீரென வரும் ஒளி வளையம் மக்களைக் கொன்று விடுகிறது’ என ஏகப்பட்ட கதைகள் தீவை ஆக்கிரமித்தன. அன்று முதல் மர்மத் தீவாகவே மாறிவிட்ட என்வைன்டினெட்டுக்குள் யாரும் நுழைவதில்லை.

1934-ல் அமெரிக்காவைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் விவியன் ஃபுச் என்பவர், தன்னுடைய குழுவினரோடு துர்கனா ஏரியை ஆராந்துகொண்டிருந்தபோது அவருடைய காதில் ‘என்வைன்டினெட்’ தீவின் கதைகள் கிசுகிசுக்கப்படுகிறன.

ஆர்வமான விவியன் ‘இந்தத் தீவுக்கு என்னதான் ஆச்சு?’ என்பதை ஆராய உடன் வந்திருந்த மார்டின், டைசன் என்ற இரு இளம் ஆராய்ச்சியாளர்களை அந்தத் தீவுக்கு அனுப்பிவைத்தார். மர்மத்தைக் கண்டுபிடித்தே தீருவது என்று ‘என்வைன்டினெட்’ தீவுக்குக் கிளம்பிய இந்த இரு ஆராய்ச்சியாளர்களும் திரும்பி வரவில்லை என்றதும் அதிர்ச்சியானார்கள் விவியனுடன் வந்திருந்த ஆராய்ச்சியாளர்கள்.

பிறகு, ஹெலிகாப்டர் உதவியோடு தீவுகளை வட்டமடித்த அவர்களுக்கு என்வைன்டினெட் தீவில் என்ன தெரிந்தது? பழங்குடியினரின் குடிசைகள் அப்படியே இருந்தன. மீன், முதலை போன்ற சில உயிரினங்கள் அழுகிய நிலையில் கிடந்தன. மொத்தத்தில், அங்கே மனிதர்களும் இல்லை, மனிதர்கள் இருந்த தடயமும் இல்லை. என்வைன்டினெட் தீவுக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா, இங்குள்ள மக்கள் அழிந்து போனதற்கு வேறு ஏதேனும் இயற்கைச் சூழல்கள் காரணமாக இருக்குமா, தீவுக்குச் செல்லும் மனிதர்கள் ஏன் திரும்புவதில்லை எனப் பல கேள்விகளோடு, இன்றுவரை எட்ட நின்றே ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் சுற்றுலாவாசிகள்...

அழ கூட தெரியுமா உனக்கு..

 




கால் கடுக்க நின்றேன்,
கண்டுகொள்ளாமல் போனாய்....

கல்லறையாய் நிற்கிறேன்,
கண்ணீர் விடுகிறாயடி...

மலர்தூவி யாசித்தேன்.... 
மறுத்தாய்...

மலர்தூவி வந்து 
புதைத்திருக்கிறார்கள்...
மண்ணுக்குள்....

உனக்கு அழத் தெரியும்
என்பதை கூட
இப்போது தான் 
உணர்கிறேன்...

யார் அங்கே ...
இவளை 
அழைத்துச் செல்லுங்கள்..

என் கல்லறையாவாது மிச்சமிருக்கட்டும்...

வாழ தகுதியற்றவன்...

 




உள்ளம் விரும்பும் உறவுகளிடம்
நெருங்கி பழக நினைத்தாலே
நெஞ்சோரத்தில் பயமொன்று
நெருப்பாய் சுட்டெரிக்கிறது..

பிரிவென்ற இறையை கொத்த
விதியென்ற பறவை
வாழ்க்கையென்ற வானில்
சுற்றித் திரிகிறது...

அதனாலே
அன்பானவர்களிடம்
அளவாக பேசி
ஆதரவை பூசி
கைவிடக் கூடாதென்று
கண்ணோரம் 
கண்ணீர் வந்தாலும்
கவனமாக 
காவல் காத்து வருகிறேன்
சில உறவுகளை...

ஏனெனில்...
வாழ தகுதியற்ற 
ராசியில்லாத மனிதன் நான்...

😏😏😏

நமக்கு சிங்கிள்ஸ் வாழ்க்கையே போதும் 😁

 


என் காதலியே...

 




நான் கேட்டது 
அழகிய நேரங்கள்.. 

நீ கொடுத்தது 
விழிகளில் ஈரங்கள்.. 

வலிகளுடன் தொடர்கிறது 
என் வாழ்க்கை...
நடைபிணமாய்...

கோவில் என்பது ஒரு நிறுவனம்...

 


கோவில் என்பது ஒரு நிறுவனம் என்று எத்தனை முறை சொல்லியும் கேட்க மறுத்தவர்கள் இப்போது இதற்கு பதில் சொல்லுங்கள்...

கோவில்களில் இருந்து மக்களுக்கு 12.5% வட்டிக்கு  கொடுக்கப்பட்டிருந்திருக்கிறது...

இப்படி அநியாய வட்டி கொடுக்கும் இடத்திற்கு போய் தமிழர் வழிபட்டார்கள் என்பது எவ்வளவு பெரிய பொய்...

பெரும் கோவில்களுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் இதற்கு சேர்த்தும் பதில் சொல்லி விடுங்கள்..

பலிகொடுத்து வணங்கும் குலதெய்வ வழிபாடு மட்டுமே மரபுவழி கடத்தப்பட்டது இதுவே தமிழர்களின் மதம் ஆகும்...

திமுக சேகர் பாபு கலாட்டா...

 


பாஜக பிராடு கரு. நாகராஜன் கலாட்டா...

 


இது தான் இந்தியா... துரோகத்தால் உருவானதே இந்திய ஒன்றியம்...

 


BLACK TIGER - Ravindra Kaushik இந்தியா கைவிட்ட வீரர்..

RAVINDRA KAUSHIK இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பட்ட (RAW AGENT) உளவாளியாக அனுப்பட்டவர்...

1975 இல் இந்திய அளவில் நடந்த THEATER FESTIVAL இல் கலந்து கொண்டார் , அவரின் நடிப்பை பார்த்த இந்திய INTELLIGENCE அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு SPY ஆக செல்லுமாறு கேட்டனர். RAW வில் சேர்ந்து 2 வருட கடின பயிற்சிக்கு பின் பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு KARACHI UNIVERSITY ல் சேர்ந்து LLB முடித்தார். PAKISTAN ARMY ல் சேர்ந்தார் , பின் MAJOR ஆக பதவி உயர்வு பெற்றார் . 1979 to 1983 வரை இந்தியாவிற்கு பல தகவல்களை தந்தார்.. அவரை யாரும் சந்தேகிக்கவில்லை. அவருக்கு இந்தியா அரசாங்கதத்தால் வைக்கபட்ட பெயர் BLACK TIGER...

26 வருடங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து PAKISTAN ல் பல சூழ்நிலைகளில் இருந்தார். INYAT MAISHA என்ற இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட இன்னொரு உளவாளி PAKISTAN அதிகாரிகள் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலால் RAVINDRA KAUSHIK உம் கைது செய்யப்பட்டார். இந்தியா , எதுவும் தெரியாதது போல காட்டிகொண்டது. 1985 இல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அத்தனைக்கு மனகஷ்டத்திற்கு பிறகும் , அவர் PAKISTAN jail இல் இருந்து பல கடிதங்களை தனது வீட்டிற்கு அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில்...

"Is this the reward a person gets for sacrificing his life for India? "

என்று எழுதி இருக்கிறார். பல துன்பங்களுக்கு பின் 2001 இல் RAVINDRA KAUSHIK இறந்தார்...

19ம் நூற்றாண்டின் வாழ்வில் முறை...

 


19 ம் நூற்றாண்டில் இறந்த பிறகு ஒரு வேலை உயிர் வந்தால் மக்களுக்கு அறிவிக்கும் பொருட்டு சமாதியில் மணியை கட்டி அதன் கயிற்றை இறந்த உடலின் கைகளில் கட்டிவிடுவார்கள்...

உயிர் வந்தால் இழுத்து தகவல் தெரிவிக்க .....

கடவுளின் இருப்பதற்கான முதல் ஆதாரமே மனிதனின் மரணம் தான் .

புன்னகை...

 




சில கேள்விகளுக்கு 
புன்னகை தான் 
பதில் என்றாலும்.. 

அந்த புன்னகைக்கு பின்னால் 
எவ்வளவு வலிகள் 
மறைந்த்திருக்கும் என்று 
அந்த இதயத்திற்கு மட்டுமே தெரியும்...

ரவுடி பேபி சூர்யா கலாட்டா...

 


பாஜக சங்கிகளின் நிலை...