16/09/2021

அமானுஷ்யம் - மனுஷங்களைப் போல தான் பேய்களிலும்... ஏகப்பட்ட குரூப்கள்...


சில வகைப் பேய்கள் மக்களோடு தான்
இருக்கும்..

நள்ளிரவில் விசும்பல் சத்தம் கேட்பது, கட்டில் கிரீச்சிடுவது, யாரோ நடக்கிற மாதிரி கேட்பது இதெல்லாம் இந்த வகைப் பேய்களுடைய சமாச்சாரங்கள்.

தற்கொலை, விபத்து, கொலை என ஏடாகூடமாகச் செத்துப் போறவங்க தான் இந்த வகைப் பேய்கள்.

ரொம்ப உஷாரா இருங்க இவை புத்திசாலிப் பேய்கள்.

சில பேய்கள் சும்மாச் சும்மா ஒரே மாதிரி செயல்களைச் செய்து கொண்டே இருக்கும்..

கொஞ்சம் முட்டாள் பேய் என்று சொல்லலாம். பாழடைந்த மண்டபங்களில் கதவு அசைவது , ஊஞ்சல் ஆடுவது இப்படி சொல்லி வைத்த மாதிரி எல்லோரும் ஒரே கதை சொல்றாங்கன்னா, இந்த வகைப் பேய்கள் தான்.

சில வகைப் பேய்கள் நினைவு நாள்
பேய்கள்..

செத்துப் போன நாளைக் கொண்டாட மட்டும் ஆவியா பூமிக்கு வருமாம். மற்றபடி சாதுவாக கல்லறைக்குள் தூங்கி விடும். ஆனால் ஒரே ஒரு நாள் வந்தாலும் கொஞ்சம் கெடுபிடியான பேயாகவே இருக்குமாம்.

சினிமாவில் வருவது போல, மனிதர்களைப் பிடித்து உள்ளே நுழையும் பேய்கள் இன்னொரு வகை..

மனிதனுக்குள் புகுந்து கொண்டு அதிகாரம் செய்யும். கொஞ்சம் டேஞ்சரஸ் பேய் இது.

நிறைவேறாத ஆசை பேய்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்..

பையனுக்கு கல்யாணம் பண்ணிப் பாக்க ஆசைப்பட்டேன் என ஏக்கத்துடன் இறந்து போனவர்கள், அந்தப் பையனுக்கு திருமணம் நடக்கும் வரை ஆவியாகி சுற்றிச் சுற்றி வருவார்களாம்.

சிலவகைப் பேய்கள் மெசெஞ்சர்
பேய்கள்..

நல்ல பேய்கள் லிஸ்டில் வைக்க வேண்டிய பேய்கள் இவை.

பெரும்பாலும் ஒரு குடும்பத்திலுள்ள மரணச் செய்தியை நெருங்கிய சொந்தக்காரர்களுக்குச் சொல்லும் செய்தியாளன் இது.

சட்டென மனதில் ஏதோ தோன்ற ஊருக்கு போன் பண்ணினால், ஆமாப்பா இப்போ தான் தாத்தா போயிட்டார் என கிடைக்கும் புரியாத Ghost (22)கதைகளின் நாயகன் இந்தப் பேய்தான்.

இன்னொரு வகை பேய் பாசக்கார பேய்..

சொந்தக்காரர்களைத் தேடி வரும். பார்த்து விட்டுப் போய்விடும். பல வேளைகளில் அது வருவதே கூட யாருக்கும் தெரியாது. இறந்து போன பிறகும் வீட்டிலுள்ளவர்களைக் காவல் காப்பவை இவை.

நல்ல பேய் இனத்தில் பாதுகாக்கும்
ஏஞ்சல்ஸ் முக்கியமானவை..

இவை ஒவ்வொருவருடைய தோளிலும்
அமர்ந்திருந்து நம்மைப் பாதுகாக்குமாம்.

பல நேரங்களில் மயிரிழையில் தப்புவதெல்லாம் இந்த காவல் தேவதைகளின் புண்ணியத்தினால் தான்.

சில வகைப்பேய்களுக்கு தான் இறந்து போனதே தெரியாது. உயிருடன் இருப்பதாகவே நினைத்துக் கொள்ளும்.

குறிப்பாக ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்
வசிக்கும் வயதானவர்கள் கவனிக்க
யாருமின்றி இறந்து போனால், அவர்கள்
ஆவியான பின்னும் மனிதர்களைப் போலவே வாழ்ந்து கொண்டே இருப்பார்களாம்...

அடேய் யாருடா நீ... மோடிக்கே மோடி வித்தை காட்டுவ போல...

 


மீ Vs நண்பன்...

 


பத்தாயிரம் ரூபாய் கடனா குடுங்க...

தப்பா நினைக்காதீங்க கடன் கொடுத்த நம்ம நட்பு கெட்டுவிடும்...

அப்படி எல்லாம் இல்லைங்க, திருப்பிக் கேட்டால் தான் நட்பு கெடும்...

🤣🤣

பிரம்மத்தை நோக்கி - 3...

 


நமது மூலம் என்ன? நாம் நமது தாய் தந்தை வழியே இணைய பெற்று இங்கு வந்துள்ளோம்.

தாய் தந்தையின் விந்தணுவில் உள்ள 46 குரோமோசோம்களும் இணைந்து வந்துள்ளோம்.

தாயின் மரபணுவில் உள்ள 23 குரோமோசோம்களும், தந்தையின் மரபணுவில் வந்த 23 குரோமோசோம்களும் இணைந்து ஒரு செல் உருவாகி, தாயின் கருவில் வளர்ந்து நாம் இங்கு வந்துள்ளோம்.

சரி தாய் தந்தையின் மூலம் என்ன?

நமது தாய் உருவாக இரண்டு பேர் காரணம், அவளது தாய் மற்றும் தந்தை, நம் தந்தை உருவாக இரண்டு பேர் காரணம், அவனது தாய் மற்றும் தந்தை.

ஆக நான்கு பேர்கள். அந்த நான்கு பேர்களின் தாய் தந்தையென எட்டு பேர்கள். இப்படி 2-4-8-16-32-64-128-256-512-1024.

இந்த பெருகி வரும் நம் முன்னோர் சந்ததி இரு வேறு புறத்திலும் விரி வடைகிறது.

ஆக, நாம் என்னவோ முப்பாட்டன் பாட்டன் அப்பன் பிறகு நான் எனக்கு அடுத்து என் மகன் என இந்த மரபு தந்தையின் மூலம் ஒரே வழியாக நேரடியாக வரும் மரபு என நினைத்து கொண்டு இருக்கிறோம்.

அது தவறு, அது நேரடியான மரபு அல்ல. உன் முன்னோர்கள் என சொன்னால் அது ஒரு நதியின் நீரோட்டமல்ல. அந்த நதி தாய் தந்தை என இரண்டு கிளைகளாக பிரிகிறது. இன்னும் கொஞ்சம் முன்னே பார்த்தால் அந்த இரண்டுக்கும் நான்கு கிளைகள்.

இப்படி ஒவ்வொரு கிளைக்கும் மொத்தம் 1024 கிளைகள் பிரிந்து செல்கிறது. நம் உயிரானது இந்த கிளைகள் ஒன்றை ஒன்று சந்திக்கும் இடத்தில் உருவாகிறது.

ஆம் நம் மூலம் ஒருவழிப் பாதை அல்ல. இருவேறு வழிப்பாதை. நமது இடப்புற பாதையிலும் வலப்புற பாதையிலும் இருவேறு உலகங்கள் அகண்டு விரிந்து பரவுகிறது.

பிரம்மத்தை நோக்கிய பயணம் தொடரும்....

மறந்து விட்டேன் உன்னை.. உன் நினைவுகளை அல்ல...

 




காலங்கள்
வலிகளையும் ஆற்றும்...

எத்தனை உண்மை
என்பதை நானும் உணர்ந்தேன்...

நீ கொடுத்த
வலிகளை மறந்துவிட்டேன்...

உன் நினைவுகளை
மட்டும் மறக்க முடியவில்லை...

நம் பாதங்களை தழுவி
சென்ற கடல் அலைகள்...

எதுவென்று நம்மால்
பிரித்து பார்க்க முடியாது...

என் சுவாசத்தில் கலந்த உன்
நினைவுகளும் அதுபோலவே...

என்
சுவாசங்கள் நின்றாலும்...

எழுத்து வடிவில் உலாவரும்
பூமியில் உன் நினைவுகள்...

உன் கழுத்திற்கு வேறு கைகளில் 
தாலி கட்டிக் கொண்டாய்...

நானோ என் நினைவில்
இருக்கும் உனக்கு...

தாலி கட்டி வாழ்ந்து
கொண்டு இருக்கிறேன்...

உன் நினைவுகளோடு
கணவன் மனைவியாக...

நீ கொடுத்த
வலிகளை மறந்தேன்...

உன்
நினைவுகளை அல்ல.....

இவன் எல்லாம் ஒரு எதிர்க்கட்சி தலைவர் வேற 🤦

 


Happy Engineering Day 😁

 


குங்குமப் பூவின் மருத்துவக் குணங்கள்...

 


தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும்..

குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும்.

குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும்.

அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்...

பூஜை அறை பற்றி பேசுற தகுதியே இல்லயேடா உங்களுக்கு 😂

 


விழித்துக்கொள் தமிழினமே...

 


ஞாபக சக்தி பெருக மணலிக்கீரை...


ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும்.

மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது.

இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும்...

இஸ்ரேல் ராணுவத்தின் பாராசூட் பிரிவில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர் யூரிகெல்லர்...

 


இவர் கூர்ந்து பார்த்தால் கரண்டி கத்தி ஸ்பூன் தட்டு போன்ற உலோகங்கள் எல்லாம் தானாகவே வளைய ஆரம்பித்தன.கெல்லரின் இந்த அதீத சக்தி விஞ்ஞானிகளுக்கு பெரும் புதிராக இருந்தது.

1973 ஆம் ஆண்டு பி.பி.சி ரேடியோவில் யூரிகெல்லரின் செயல் விளக்கங்களைப் பற்றி ஒலி பரப்பினார்கள் அப்போதே பல வீடுகளில் இரும்பு பொருட்கள் வளைவதாக போன்கள் அலறின. இதை நேரில் பார்காத சிலர் நம்ப மறுத்தனர்.

யூரிகெல்லர் பத்திரிக்கை வாயிலாக ஒரு அறிக்கை விட்டார் டி.வி. நிகழ்ச்சியில் தோன்றி நான் பார்க்கிறேன் உங்கள் வீட்டில் டி.வி யின் முன்பாக பொருட்களை வைத்து சோதித்துப் பாருங்கள் என்றார்.

குறிப்பிட்ட அன்றைய தினம் நாடு முழுவதிலும் உள்ள பலர் தம் வீட்டு டி.வி முன்பாக வேலைக்கு உதவாத கரண்டிகள், கத்திகள், லாடங்கள், இரும்பு பொருட்களை வைத்திருந்தனர்.

சில நிமிடங்களில் டி.வி யில் யூரிகெல்லர் தோன்றினார் கைகளை கட்டிக் கொண்டு ஏதோ பிரார்த்தனை செய்தவாறு உற்று  நோக்கினார்.

என்ன ஆச்சரியம் நாடு முழுவதிலும் டி.வி யின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் வளைந்து சுருண்டன ஓடாத கடிகாரங்கள் ஓடின. சில வீடுகளில் டேபிள், சேர்கள் கூட வளைந்தன. அவரவர் வீட்டில் பொருட்கள் வளைந்ததாக எங்கும் இதே பேச்சு இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் மட்டுமே யூரிகெல்லர் உலகப் புகழ்பெற்றவராகி விட்டார்.

கலிஃபோர்னியா மென்லே பார்க்கில் உள்ள ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (S.I.R) கெல்லரை அழைத்தது அங்கு கெல்லருக்கு பல பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

எல்லாவற்றிலும் கெல்லர் வெற்றி பெற்றார்.

எஸ்.ஐ.ஆர் நடத்திய சோதனைகளில் ஒன்று யாருக்கும் தெரியாமல் ஆறு படங்களை வரைந்து அதை ஒரு கவரில் போட்டு அதை ஒரு பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டு அந்த பெட்டியை ஒரு லாக்கரில் வைத்து அந்த லாக்கரை பல மாடிகள் கொண்ட ஒரு அரையினுள் வைத்து பூட்டுக்கும் சீல் வைத்தனர்.

கெல்லரிடம் அந்த படங்களை வரைந்து காட்டுமாறு கேட்டனர் கெல்லர் மிக சரியாக அந்த படங்களை வரைந்து காட்டினார்.

விஞ்ஞானிகள் இதை ESP power என்றனர். கெல்லரோ என்னையும் மீறி ஏதோ ஒரு சக்தி எண்னை இப்படி செய்விக்கிறது என்கிறார்.

ESP POWERக்கு ஒரு எல்லை உண்டு இந்த ஆற்றல் அதையும் மீறிய செயல் எனவே இது ஒரு அமானுஷ்ய சக்தியின் ஆற்றலாகத் தான் இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...

திருட்டு திமுக ஊழல் ராணி கனிமொழியே...

 


பெண்களுக்கு எதுக்கு 40% இடஒதுக்கீடு?

 


அகத்திக்கீரையின் மகத்துவம்...

 


துக்க வீடுகளில் உள்ளவர்களுக்கு அகத்திக் கீரையை ரசம் வைத்துக் கொடுக்கும் வழக்கம் இன்றைக்கும் உண்டு..

காரணம், இறப்பின் சோகத்தில் சாப்பிடாமல் - கிடப்பவர்களின் உடல் பாதிப்புக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதால்..

உடலின் உள் காயங்களை ஆற்றுதல், குடற்புழு நீக்கம், மலச்சிக்கலைப் போக்குவது, விஷ முறிவு போன்ற ஏராளமான மருத்துவக் குணங்களை வேர், இலை, பட்டை, பூ என்று பல பாகங்களிலும் தன்னகத்தே வைத்திருக்கும் உன்னதமான மரம் அகத்தி...

அகத்தி மரம்..

அகத்தி மரம் தை முதல் மாசி மாதம் வரையிலும் பூக்கும் இயல்பு உடையது.

தஞ்சாவூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் பி.சரஸ்வதி, அகத்தியின் பலவிதமான மருத்துவக் குணங்களை விவரிக்கிறார்..

'அகத்தி 20 முதல் 30 அடி வரை வளரக்கூடியது. பூவின் நிறத்தைப் பொருத்து செவ்வகத்தி மற்றும் வெள்ளை அகத்தி என்று அகத்தியை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்..

இலைகள்:

அகத்தி இலையைக் கீரை என்பார்கள்.

இதன் சாற்றை எடுத்து, ஒன்று அல்லது இரண்டு துளி மூக்கில்விட்டால் காய்ச்சல் குணமாகும். அகத்தி இலையிலும் பூவிலும் அதிக அளவில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. நெய்யை நன்றாகக் காய்ச்சி அதில் அகத்தி இலைகளை இட்டு நன்கு வெந்த பிறகு வடிகட்டிப் பருகச் செய்தால், மாலைக்கண் நோய் குணமாகும்..

இலையை அரைத்துப் பசைபோல் செய்து காயங்களுக்குக் கட்டலாம். புண்கள் விரைவாக ஆறும். சீழ் பிடிக்காது..

வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கும் குணம் அகத்திக் கீரைக்கு உண்டு.

செவ்வகத்தி இலை குளிர்ச்சியை உண்டாக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. தேகம் குளிர்ச்சி அடையும். மலச்சிக்கல் இருக்காது. சிறுநீர் பிரிவது எளிதாக இருக்கும்..

பூக்கள்:

அகத்திப் பூச்சாற்றைக் கண்ணில் பிழிய, கண் வலி குணமாகும்.

மரப்பட்டைகள்:

குடிநீரில் இட்டுக் குடித்துவந்தால், அம்மைக் காய்ச்சல் தீரும்.

வேர்ப் பட்டை:

அகத்தி வேர்ப் பட்டையில் சாப்போனின், டானின், ட்ரைடெர்பின் போன்ற பல வேதிப் பொருட்கள் உள்ளன. வேர்ப் பட்டையை நீரில் இட்டுக் குடித்து வந்தால், மேகம், ஆண் குறியில் ஏற்படும் எரிச்சல் மற்றும் ஐம்பொறிகளில் ஏற்படும் அனைத்து வகையான எரிச்சல்களையும் குணமாக்கும்.

அகத்திக் கீரையை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும். இல்லாவிட்டால், வாயுவை உண்டாக்கிவிடும்.

மேலும் தினசரி அதிக அளவில் உண்டால், வயிற்றுக் கடுப்பையும் ஏற்படுத்திவிடும்.

இந்தக் கீரைக்கு மருந்துகளின் செயல்பாடுகளைத் தடுக்கும் இயல்பு உண்டு. எனவே, பிற மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் அகத்தியைத் தவிர்ப்பது நல்லது.

பல வீடுகளில் முருங்கை மரம் இருக்கும் அதை போல வீட்டுத் தோட்டத்தில் அகத்தி மரத்தையும் வளர்க்க வேண்டும் . கடைகளில் இதன் விதை கிடைக்கும். தவறாதது உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்...

திருடர்களை காணவில்லை...

 


ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...

 




பெண்ணே...

உன்னை போல ஒரு
பெண் குழந்தையைப் பெற்று விடாதே..

என்னை போல 
பல கிறுக்கன்கள் 
கவிதைகளை கிறுக்கக்கூடும்...