23/09/2020

1950 வது வருடம் ஜுன் மாதம்...

 


Rudolph Fentz என்பவர் நியூயார்கின் பிராதான சாலையில் நடந்து போய் கொண்டு இருக்கிறார்.. அப்போது திடீரென அங்கு வந்த கார், அவர் மீதி ஏறி, சம்பவ இடத்திலேயே இறக்கிறார்..

அதற்கு பிறகு நடந்தது தான் அதிர்ச்சியான சம்பவம்..

சம்பவ இடத்திற்க்கு வந்த போலிசாருக்கு அதிர்ச்சி..  காரணம், அந்த நபர் 1800 ஆம் ஆண்டு வாக்கில் மக்கள் புழங்கிய ஆடையில் இருந்தார்...

சரி பழமை விரும்பி போல என நினைத்து, அவரது உடமைகளை பரிசோதித்ததில் 70 $ கரண்சியும், குதிரைகளை கழுவுதற்க்கு விட்ட டோக்கனும் ( இது 1950 வது வருடம் ), 1876 வருடத்தை சேர்ந்த ஒரு பிஸினஸ் கார்டும் இருந்தது..

எதிலும் அவரது பிறந்த வயது, அடையாளத்தை கண்டறிவதற்கான துப்பு கிடைக்கவில்லை...

அப்படியும் முட்டி மோதி போலிசார் கண்டு பிடித்ததில் 1876 வருடத்திலிருந்து அவர் மாயமாக மறைந்து போனதும் அப்போது அவரது வயது 29 என்பதும் மட்டுமே தெரிந்தது..

அப்படியென்றால் யாரோ ஒருவர் 1800 வாக்கிலேயே டைம்மேஷினை கண்டு பிடித்து விட்டார்களா ? அது உலகிற்கு தெரியாமலேயே போய் விட்டதா ?

எங்கப்பா அந்த சுகாதாரத்துறை அமைச்சர்...


 

அடிமை தமிழக அரசே வேளாண் மசோதாவை திருப்ப பெற செய்...


 

காலப் பயணத்தின் ஆதாரங்கள்...

 


1500 ஆண்டு பழமையான மம்மி  அணிந்திருந்த ADIDAS காலனி..

மங்கோலியா வில் அல்டாய் மலை அருகில் புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1500 ஆண்டுகள் பழமையான பதப்படுத்தப்பட்ட ஒரு பெண்ணின் சடலத்தின் சில பாகங்களை கண்டு பிடித்தனர்...

அந்த பெண் அணிந்திருந்த காலனி நவீன ADIDAS நிறுவன தயாரிப்பு காலனி போல் உள்ளதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு உள்ளது..

இந்த மம்மியை பற்றி ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த பெண் வாழ்ந்த காலத்தில் அந்த மக்கள் இனம் கைவினை பொருட்கள் தயாரிப்பதில் தன்னறிவு பெற்று மிகவும் முன்னேறி இருந்திருக்கும் என கூறினார்..

கைவினையில் சிறந்த இனமாக விளங்கி இருந்தாலும் நவீன அடிடாஸ் நிறுவன தயாரிப்பை  ஒற்ற ( அடிடாஸ் நிறுவதத்தின் தனித்துவமான வரிகள் இந்த காலனிகளில் காணப்பட்டன )..

கால பயணத்தின் ஆதாரமாகவே இதை பலர் பார்க்கின்றனர்...

நாட்டையே கூறு போட்டாச்சு... அடுத்து என்ன மோ(ச)டி?


 

ஆக தளபதியார் அவர்கள் இப்போது 10 திருக்குறளை துண்டுசீட்டு இல்லாமல் வாசித்துக்காட்டி... தனது தமிழ் உணர்வை வெளிப்படுத்துவார் 🤣

 


மேலும் திமுக நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் இந்தியை தடைச் செய்வார் என்று எதிர்ப்போம்...

அண்ணன் போக வேண்டிய நேரத்தில் போக மாட்டார்...


 

பறிபோன செங்கோட்டை காடு...

 


மொழிவாரி மாநிலங்கள் மாற்றியமைக்கப்பட்ட போது இரு மாநிலங்களுக்கு இடையே இயற்கையான எல்லையாக அமைந்துள்ள காடுகளைப் பங்கிடுவதில் சிக்கல் வந்தது.

அப்போது வகுத்த விதிப்படி ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 30% காடுகளாக இருக்க வேண்டும்.

ஆனால் இதிலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது.

தமிழகத்தின் மேற்கும் வடக்கும் மலைகளாலும் காடுகளாலும் சூழப்பட்டு இருக்கிறது.

ஆனால் இந்த இயற்கையான எல்லையைத் தாண்டி மறுபக்கமும் தமிழர் வாழ்ந்தனர்.

அவை பறிபோனதுடன் காடுகளையும் கூட தமிழகத்துக்கு தராமல் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

இதில் கேரளா அளவுக்கதிகமான காடுகளை எடுத்துக் கொண்டது.

(அப்போது கேரளாவில் பாதிக்கு மேல் காடாக இருக்க, தமிழகத்தில் கால்பங்கு கூட காடு இல்லை).

பறிகொடுத்த வரலாற்றில் சிறந்த எடுத்துக்காட்டு செங்கோட்டை தாலுகாவில் இருந்த (ஆரியங்காவு மற்றும் குளத்துப்புழா இருக்கும்) செங்குறிஞ்சி, பொன்முடி காடுகள்  பறிபோனது ஆகும்.

1931 மக்கட்தொகை கணக்கெடுப்பு செங்கோட்டை தாலுகா 100% தமிழர் வாழ்ந்த பகுதி்.

அன்றைய மலையாள இனவெறி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த தமிழர் பகுதிகளை மீட்க நேசமணி அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக அவர் கேட்டதில் பாதி கிடைத்தது.

இதில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை அடங்கும்.

மீட்ட பகுதிகளை ஒரே மாவட்டமாக்கும் போது நேசமணியார் செங்கோட்டையை கன்னியாகுமரியின் ஒரு பகுதியாக வைத்திருப்பது மக்களுக்கு இடைஞ்சல் என்று அதை திருநெல்வேலிக்கே கொடுத்தார்.

இழந்த செங்கோட்டை வனப்பகுதி 1950களிலேயே ஆண்டுக்கு 5கோடி வருமானம் கொடுத்த வளமான பகுதியாகும்.

இதை நாம் இழந்தோம்.

வரைபடம்: அன்றைய செங்கோட்டை தாலுகா மீது இன்றைய எல்லை வரையப்பட்டுள்ளது...

சோழ தேசத்தில் தமிழர்கள் யாரும் இல்லையா?


 

உலகம் சுற்றும் வாலிபன் மோடி...


 

தியான இரகசியம்...

 


கண் மூடி செய்யும் எந்த ஆன்மிக சாதனையும் தியானமோ , தவமோ ஆகாது.

கண்மூடிட்டான் என்று தமிழில் இறந்தவரையே கூறிப்பிடுவர்.

கண்மூடி பழக்கம் என்று தவறான பழக்கத்தை கூறிப்பர்.

கண் திறந்து கண்மணி உணர்வோடு கண் ஒளி கொண்டு உள் செல்வது தவம். இந்த உணர்வை தன கண் ஒளி கொண்டு கொடுப்பவர் தான் உண்மை சற்குரு. இதற்கு உதாரணங்கள்..

அகத்தியர் கண் மூடி தவம் செய்பவரை மூடர்கள் என்று சாடுகிறார்.

கண் மூடி செய்யும் தியானத்தை திருமூலரும் சாடுகிறார் :

"குருடும் குருடும் சேர்ந்து குருடாட்டம் ஆடி குழியில் விழுந்தவாரே" - திருமந்திரம்.

கண் மூடி தியானம் செய்ய கற்று கொடுபவர்களும் அதை நம்பி அவர் சொல்வதை செய்யும் சீடர்களும் குருடர்கள் என்றும் அவர்கள் கடைசியில் சேருமிடம் மரண குழியே என்பது தான் இதன் அர்த்தம்.

மேலும் வள்ளலார் கண் மூடி பழக்கம் எல்லாம் மண் மூடி போக என்கிறார்.

அகத்தியரும், வள்ளலார், சித்தர்களும் சொல்வதை கேட்பீரா? அல்லது இன்றைய அரை வேற்காடு சாமியார்களை நம்புவீர்களா சிந்திபீர்...

நாதக சீமான் 😂


 

பலருக்கு சொந்தமான 3,023 ச.மீ. நிலங்களை, போலி ஆவணங்கள் மூலம் தாயார் மற்றும் தம்பி பெயரில் பதிவு செய்த கீழையூர் ஒன்றிய திமுக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமறைவு...


 

அழிக்கப்பட்ட பறவையினமும் விவசாய அழிவும்...

 


காட்டை அழித்து விட்டு கடவுல் சிலை எதற்கு?

கோட்டான் என்ற ஒரு வகை பறவை நாம் சிறு வயதில் பார்த்து இருப்போம் நினைவில் இல்லாதவர்கள் கூவை என்ற பெயரில் சில இடங்களில் கூறுவார்கள்.

இப்போதெல்லாம் இந்த வகை பறவைகளை நாம் காண்பதே அறிது..

காரணம் நாம தான்.

இந்த கோட்டான் ஆந்தையை விட பெரியது

அதிகமாக சுடுகாட்டில் தான் இது வாழும்.

காரணம் இதற்கு மனிதர்களை  பிடிக்காது அதனால் அமைதியான இடத்தில் வாழும்.

சுடுகாட்டில் இது வாழ்வதால் இதை அபசகுணமான பறவை என்றும் வீட்டில் பின்புறம் உள்ள மரத்தில் உட்கார்ந்தால் வீட்டில் மரணம் ஏற்படும் எனவும் கட்டவிழ்த்து இதற்கு சாக்குருவி  (சாகடிக்கும் குருவி) தான் சாக்குருவி என்று மாறி இதை கண்டால் கொள்ளுங்கள் என்று எவனோ சொண்ணதை நம்பிய நாம்..

கண்ட இடத்தில் எல்லாம் கொன்றோம் விளைவு இந்த இனப்பறவை ஜூவிலும் கண்காட்சியிலும் கூட வைக்கபடுவதில்லை. .

இதன் பயன் என்ன தெரியுமா?

இந்த கோட்டான் என்று சொல்லக்கூடிய இந்த பறவையின் குஞ்சு ஒரு நாளைக்கு 14 எலிகளை தின்றுவிடுமாம்.

இது மற்றுமின்றி தின்ற இடத்தில் சிறிது நேரத்தில் எலியின் சக்கையை உடலை மட்டும் உருட்டி வாய் வழியே கக்கிவிட்டு செல்லுமாம் அதாவது கக்கிய எலியின் உடல் மண்ணோடு மண்ணாகி மழையில் நனைந்து ஊறி வெயிலில் காய்ந்து இத்துப்போய் மக்கிப்போய் மண்ணுக்கு உரமாக ஆகிவிடுகிறது..

எவ்வளவு பெரிய விஷயம் அல்லவா இது.

இப்போது பயிற்களை நாசப்படுத்தும் எலிகளையும் காணவில்லை கோட்டாரையும் காணவில்லை. ஏன் விவசாயத்தையும் காணவில்லை...

நவீனம் நவீனம் என்று எங்கே போய்க் கொண்டுளோம்...

பாரம்பரியத்தை அழித்து விட்டு பயித்தியம் பிடித்து அழைகின்றோம்..

மரம் வேண்டும் மரத்தில் தான் பறவைகள் கூடு கட்டும் பறவைகள் இருந்தால் தான் நம் விளைச்சல் நிலங்களில் உள்ள பூச்சிகளை சாப்பிடும்..

பூச்சிகளை சாப்பிட்டு தமது எச்சத்தை (கழிவை) நிலத்தில் வெளியிடும்

அந்த எச்சம் தான் 100 % உண்மையான உரம்..

இதற்கு பறவைகள் வாழ மரமும் காடும் தேவை.. காட்டை அழித்து விட்டு மன அமைதிக்கு யோகா கற்றுக் கொடுக்க மண்டபம் கட்டுவதெல்லாம் கேவலத்திலும் கேவலம்...

இந்தி தெரியாது போடா...


 

விவசாயிகள் மகிழ்ச்சி 😂


 

SHEL எண்ணெய் நிறுவனம் செய்த படுகொலை.. மறைக்கப்பட்ட கொடூர வரலாறு...

 


5 இலட்சம் விவாசிகளின் உயிரை குடித்த ஒரு நிறுவனத்தின் மரண போராட்ட பதிவு ..

இப்பதிவு அந்நிய நாட்டில் என்று யோசித்தாலும் நாளை நமக்கும் இதான் நிலை. பதிவின் இறுதியில் இது புரியும்..

நைஜீரியாவில் கறுப்பர்கள் என்பதை தாண்டி என்னை வளம் என்ற ஒரு விஷயம் உள்ளது.

இதைப்பற்றி யாரும் வாய் திறப்பதும் இல்லை எந்த ஊடகமும் இதை பற்றிய செய்தியை வெளியிடவும் இல்லை.

காரணம் அவர்களுக்கு தான் தெரியும்.. நைஜீரியா ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள முக்கியமான பெரிய நாடு தொழில் வளம் என்பதை தாண்டி பாரம்பரியமும் இங்குள்ளவர்களுக்கு உண்டு.

நைஜீரியாவில் என்னை வளம் என்பது எண்ணெய் வளம் அதிகம் உள்ள நாடுகளான மத்திய கிழக்கு நாடுகளை போன்று இங்கும் எண்ணெய் வளம் கொட்டி கிடக்கின்றது.

போன நூற்றாண்டு வரைகும் எண்ணைக்காக உலக முதலாளித்துவ நாடுகள் பண்ணிய அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல.

நமக்கு ஷெல் [SHELL] என்ற  பெட்ரோலியம் நிறுவனம் பற்றி நமக்கு தெரியும் தானே..

இந்தியாவில் கூட ஆங்காங்கே இந்த நிறுவனங்களை நீங்கள் பார்க்கலாம்..

இந்த ஷெல் நிறுவனம் நெதர்லாந்தின் அரச குடும்பத்திற்கு சொந்தமானது இதில் பிரிட்டனுக்கும் பங்கு உண்டு..

உலக பொருளாதாரத்தை இவனுக

சுரண்டுவதற்கு ஒரு பெயர் அது தான் SHELL..

பெட்ரோலிய நிறுவனம் என்று சொல்லி கொண்டு நைஜீரியாவில் உள்ள அமைச்சர்கள் ஆட்சியாளர்களை கையில் போட்டு கொண்டு அடிக்கும் கூத்துக்கள் ஏராளம் ...

எடுக்கும் எண்ணையை ஷெல் நிறுவனத்தாரிடம் மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்ற கட்டாய ஒப்பந்தம் போடப்பட்டுக் கொண்டு கிட்டத்தட்ட 110 வருடங்களாக சுரண்டி கொண்டுள்ளது ..

இதன் பாதிப்பு எண்ணையை எடுக்க கூடிய நைஜீரிய நாடு தமது எண்ணையை ஷெல் நிறுவனத்தாரிடம் கொடுத்துவிட்டு..

தமது தேவைக்கு அந்நிய நாட்டில் இருந்து பெற்றுக் கொண்டு இருக்கிறது..

[நம்பினால் நம்புங்கள் இதான் உண்மை]

இது நாள் வரைக்கும் இதான் நிலை நைஜீரியாவில்.

நைஜீரிய ஆட்சியாளர்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து தமது சுரண்டலை சுரண்டி கொண்டு உள்ளது இந்த ஷெல் நிறுவனம்..

இதில் பங்குதாரராக பிரிட்டிஷுக்கு 40 % சதவீதமும் 60% அரச குடும்பத்திற்காகவும் கிட்டத்தட்ட 100 வருடங்களாக திருடி கொண்டுள்ளது.

இதை உணர்ந்த நைஜீரிய வாலிபர்கள் இதை தட்டி கேட்டால் புரட்சியாளன் என்ற முத்திரை குத்தி அவனை சிறையில் அடைப்பதாக இருந்தது..

பொறுத்துப் பார்த்த மக்கள் எண்ணெய் கடந்து செல்லும் குழாய்களை அடித்து நொறுக்கி தங்களது தேவைக்கு எடுத்து கொண்டனர் .

சில நேரங்களில் குழாய்களை சேதப்படுத்தி விட்டு அந்நிறுவனத்தின் ஆட்கள் வந்து சரி செய்ய வரும் வரை மறைந்து இருந்து..

ஷெல் நிறுவனத்தின் ஆட்களை சிறை பிடித்து அரசுக்கும் ஷெல் நிறுவனத்திற்கும் பலமுறை எச்சரிக்கை செய்து விட்டார்கள் நைஜீரிய பொது மக்கள்..

இருப்பினும் பணத்தாசை பிடித்த கார்ப்பரேட் நிறுவனமான ஷெல்லும் இவனுக்கு வழியமைத்து கொடுக்கும்  உள்ளூர் ஆட்சியாளர்களும் மதிக்கவோ கண்டு கொள்ளவோ இல்லை ..

இதன் உச்சக்கட்டம் என்னவாக இருந்தது தெரியுமா ?

SHEL நிறுவனத்தின் அதிகாரிகள் உயிருக்கு ஆபத்து என்று கத்தி கூப்பாடு போட்டு இவர்களுக்கென்று தனியார் பாதுகாப்பு படை துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பதற்கு உருவாக்கப்பட்டது ...

நினைத்து பாருங்கள் என் நாட்டை சுரண்டி விவசாயிகளின் உயிரை மாய்க்க வைத்து என் அரசுக்கு பணத்தாசை காட்டி விலைக்கு வாங்கி என் மக்களால் உனக்கு ஆபத்து என்று தனி இராணுவம் அமைத்துக்கொள்ளும் அளவுக்கு திராணி வந்து விட்டது என்றால் இதற்கெல்லாம் காரணமான நைஜீரிய மண் சார்ந்த நாங்கள் என்ன செய்வோம் ?

என்று பலரது கேள்வி ?

இந்நிலையில் தான் நைஜீரிய எழுத்தாளர் கென் சரோ விவா என்பவர் இந்த விஷயத்தை கையில் எடுத்தார்..

இவர் சுற்றுசூழல் ஆய்வாளர் கவிஞர் மற்றும் ஆப்பிரிக்காவின் மிகப்பழமை வாய்ந்த ஓகோனி பழங்குடி இன மக்களின் தலைவராகவும் இருந்தார்.

இவர் சுற்றுச் சூழல் சீர்கெட்டது என்றும்  எண்ணெய்க் கசிவாலும் அமில மழையாலும் வளம் கொழித்த நிலங்கள் சத்து இழந்தன என்றும்..

இந்த ஷெல் நிறுவனத்தால் எண்ணெய் எடுக்கிறேன் என்ற பெயரில் விவசாய நிலங்களை அழித்ததால் கடந்த 100 ஆண்டுகளில் ஏறக்குறைய 5 இலட்சம் விவசாயிகள் வாழ்வாதாரம் இல்லாமல் மாண்டனர் என்ற ஆய்வு உண்மையை உலகிற்கு போட்டு உடைத்தார்..

இனியும் சரிவராது என்று உணர்ந்த ஷெல் நிறுவனம் . நைஜீரிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து Ken Saro Wiwa மற்றும் இவரது கூட்டாளிகள் 8 அப்பாவி மக்களையும் 1995 வருடம் தூக்கிலிட்டது ..

இதோடு ஒரு நூற்றாண்டுக்கான போராட்டம் வெற்றியடையாமலே முடிந்தது....

இன்றுவரைக்கும் தொடர்ந்து தங்களது வயிற்றை நிரப்பி கொண்டு தான் உள்ளது..

ஒரு 100 வருடத்தில் 5.5 இலட்சம் விவசாயிகளை காவு வாங்கிக்கொண்டு தமது வியாபாரத்தை நடத்தி கொண்டுட்டு தான் இருக்கிறது இந்த SHEL நிறுவனம்....

நான் ஆரம்பத்தில் சொன்னது போன்று இதையெல்லாம் மக்களிடம் சொல்லவோ விவாதம் செய்யாவோ ஊடகங்களுக்கு நேரம் இருக்காது சமூக ஊடகங்கள் நமது கையில் உள்ளது .

நைஜீரிய மக்களது 100 வருட போராட்டம் தமிழகத்திற்கும் பொருந்தும்..

சிந்திப்பவர்கள் கிரகித்து கொள்ளட்டும்...

தமிழர்களும் - திராவிடர்களும்...


 

வட இந்திய மாநிலங்களில் மோடி புகைபடத்தில் மாட்டுச்சாணியை அடித்து மரியாதை செய்த புரட்சியாளர்கள்...


 

தமிழர்களுக்கு ஜப்பான் இழைத்த பெரும் துரோகம்...

 


இலங்கை வரலாற்றிலும் மலாயா சிங்கப்பூர் வரலாற்றிலும் ஜப்பான் தமிழ் மக்களுக்குப் பெருந் துரோகம் இழைத்துள்ளது.

இலங்கை அரசின் கொடையாளி நாடாகத் திகழும் ஜப்பான் சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்குப் பொருளாதார வலுவூட்டியது.

தமிழின அழிப்பை நிறுத்தும்படி குரல் கொடுக்கத் தவறியதோடு சிங்கள அரசுக்குச் சாதகமான இராசதந்திர நகர்வுகளைத் தனது விசேட தூதர் மூலம் ஜப்பான் முன்னெடுத்தது.

மலாயா, சிங்கப்பூர் தமிழர்களை ஜப்பான் நேரடியாகப் படுகொலை செய்தது. இது ஜப்பானுடைய கொடூர முகத்தின் இன்னொரு பரிமாணமாக அமைகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது 1942ல் மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பான் தனது ஆதிக்கத்தை பர்மா, சியாம் நாடுகளுக்கு விரிவு படுத்தத் திட்டமிட்டது. சியாம் இப்போது தாய்லாந்து என்று அழைக்கப்படுகிறது.

பர்மாவைத் தாக்கிய பிறகு தனது படையினரையும் ஆயுத தளபாடங்களையும் எடுத்துச் செல்ல ஒரு புகையிரதப் பாதை அமைக்க தொடங்கியது. தாய்லாந்து தலைநகர் பாங்கொக், பர்மா தலைநகர் இரங்கூன் ஆகியவற்றை இணைக்கும் 252 மையில் நிளமான இருப்புப் பாதையை அமைக்க ஜப்பான் திட்டம் தீட்டியது.

அடர் காடுகள், கருங்கல், மலைகள், பெரிய நதிகள் ஆகியவற்றைக் கடந்து செல்ல வேண்டி இருந்தது. பாதை போடும் பணிக்குப் போர்க் கைதிகளைப் பயன்படுத்த ஜப்பான் படையினர் திட்டமிட்டனர்.

அத்தோடு மலாயா சிங்கப்பூர் தமிழ் இளைஞர்களையும் வலுக்கட்டாயமாகக் ஈடுபடுத்தவும் திட்டமிட்டனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட தமிழ் ஆண்களும் இளைஞர்களும் சரியான உணவு, மருந்து, ஒய்வு இல்லாமல் மரணமடைந்தனர்.

ஓரு சிலரை விட எல்லோரும் கொல்லப்பட்டனர் என்பதால் இந்த புகையிரதப் பாதை மரண இரயில்வே என்று அழைக்கப்படுகிறது.

சர்வதேசச் சட்டங்களுக்கு எதிரான இந்தச் செயல் ஜப்பான் அரசு இழைத்த மிகப் பெரிய போர்க் குற்றமாக போர் முடிந்த பிறகு அதன் மீது சுமத்தப்பட்டது.

இந்த இரும்புப் பாதையைப் போடுவதற்கு ஜப்பான் இராணுவம் 16,000 போர்க் கைதிகளையும் கூடுதலான எண்ணிக்கையில் பொது மக்களையும் பயன்படுத்தியது.

மலாயாத் தோட்டப் புறங்களில் இருந்து கொண்டுச் செல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 80,000 தொடக்கம் 100,000 வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.

பிரிட்டன், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சோந்த போர்க் கைதிகள் மேற்கூறிய 16,000 பேரில் அடங்குவர்.

மலேரியா, கொலரா, பெரிபெரி, போசாக்கின்மை போன்றவை உயிரிழப்பை ஏற்படுத்தின. வேலை செய்ய முடியாதவர்கள் சுடப்பட்டனர். குற்றவாளிகள் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.

மலாயா சிங்கப்பூர் தமிழர் வரலாற்றில் இது ஒரு கண்ணீர் அத்தியாயம்.

சுபாஸ் சந்திரபோஸ் உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்தில் இணைந்த பிரிட்டிஷ் இராணுவத்தைச் சேர்ந்த இந்தியச் சிப்பாய்கள் பர்மா – சயாம் இரயில்வே பணிக்கு கொண்டு செல்லப்படவில்லை.

இந்த ரயில் பாதை தொடர்பான திரைப்படங்களும் ஆய்வு நூல்களும் இன்றுவரை வெளிவந்தபடி உள்ளன.

குவாய் நதிக்கு மேலான பாலம் (Bridge on the River Kwai) என்ற திரைப்படம் பிரசித்தமானது. இதனுடைய படப்பிடிப்பு இலங்கையின் மலைப் பிரதேசத்தில் நடத்தப்பட்டது. காலஞ்சென்ற பிரிட்டிஷ் நடிகர் சேர் அலெக் கினெஸ் (Sri Alec Guinness) பிரதம பாகத்தில் நடித்தார்.

அவுஸ்திரேலியப் போர் கைதிகளின் துன்பியல் வரலாறு பற்றி ஊடகவியலாளர் கமரன் போர்ப்ஸ் (Cameron Forbes) நரகநெருப்பு (Hellfire) என்ற தலைப்பில் 559 பக்க ஆய்வு நூலை எழுதினார். ஒரு அத்தியாயத்தில் பின்வரும் செய்தி கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட சிறிய கப்பலில் ஓரு சிலரை ஜப்பான் படை அதிகாரிகள் மிக நல்லமுறையில் கவனித்தனர்.

சிங்கப்பூரில் ஜப்பானிடம் சரணடைந்த பிரிட்டிஷ் படைக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் ஆர்தர் பேர்சிவலை (Gen Arthur Percival) மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய தளபதி ஜெனரல் தோமோயுக்கி யமாஷிற்றா (Gen Tomoyuki Yamashita) பெரும் மரியாதையுடன் நடத்தினார்.

1,700 கைதிகள் நெருக்கமாக அடையப்பட்டனர். நிற்பதற்கு மாத்திரம் இடம் இருந்தது. வேண்டுமென்றே கப்பல் 54மணி நேரம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. கைதிகள் ஒருவருக்குமேல் ஒருவர் படுத்து உறங்கினார்கள். சிலர் கப்பலில் இறந்தனர். உடல்கள் கடலில் வீசப்பட்டன. பலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இறந்தனர்.

போர் முடிந்து ஜப்பான் படைகள் சரண்புகுந்த பிறகு அவுஸ்திரேலியப் படைகள் அவர்களுக்குச் சொல்லொணாத் துன்பத்தைக் கொடுத்தனர். நீதி விசாரணை என்ற பெயரில் நாளொன்றுக்கு சராசரி ஏழு ஜப்பான் படையாட்கள் தூக்கிலடபட்டனர். விசாரணை இல்லாமல் பலர் சுட்டும், வெட்டியும் கொல்லப்பட்டனர்.

வெறி அடங்கியதும் நட்புறவுகள் ஆரம்பித்தன. சில அவுஸ்திரேலியப் போர் வீரர்கள் ஜப்பான் பெண்களைத் திருமணம் செய்தனர். இன்னும் சிலர் ஜப்பான் சென்று பழைய படையினரோடு நற்புறவு பூண்டனர். இந்த நடவடிக்கைகள் வெள்ளை அவுஸ்திரேலியா நிறவெறிக் கொள்கையை உடைக்க உதவின.

இன்று ஜப்பானும் அவுஸ்திரேலியாவும் வர்த்தகப் பங்காளிகளாகி விட்டனர். மன்னிப்போம் மறப்போம் என்ற கட்டம் தொடங்கிவிட்டது.

ஆனால் ஈழத்தமிழர்களால் ஜப்பான் ஆடிய கபட நாடகத்தை மன்னிக்க முடியவில்லை.

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக உலகத் தமிழர்களின் குரலாக ஒன்றிணைவோம்...

திருப்பூர் இன்னொரு சாத்தான்குளம் சம்பவமா?


 

துரோகி பாஜக பொன்.ராதா தமிழனுக்கு பிறந்தவன் கிடைத்தாது...


 

அரிய வகை கூந்தல் பனை மரம்...

 


ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம், பண்டைய காலத்தில் எழுதுவதற்கு தேவையான ஓலைச் சுவடிகள் தாழிப்பனை மரங்களில் இருந்து பெறப்பட்டன. 

இந்த தாழிப் பனை மரங்களில் ஒன்று செம்பரம்பாக்கம் அருகே தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த மரத்தில் இதுவரை இல்லாத வகையில் உலகத்திலேயே மிகப் பெரிய பூங்கொத்து பூத்து உள்ளதும். அரிய வகையான தாழிப் பனை குறித்து, வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

பனை குடும்பத்தில் மொத்தம் 21 வகையான மரங்கள் உள்ளன. இவற்றில், மிகவும் அரிதான மரம் தாழிப்பனையின் பெயர் கோரிபா அம்ப்ராக்ரி பெரா.

சாதாரண பனை மரத்தைப் போல் இல்லாமல் இந்த மரத்தின் மட்டை நீளமாக இருக்கும். சங்க காலத்தில் தென்னிந்தியாவில் தாழிப்பனை மரம் பரவலாக காணப்பட்டது.

குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இந்த மரத்தை காண முடிந்தது. சாதாரண பனை மரம் வருடத்திற்கு ஒரு முறை காய் காய்க்கும். ஆனால், அரிய வகையான தாழிப்பனை வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே காய்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பண்டைய காலத்தில் சுவடிகள் எழுத இந்த மரத்தில் இருந்து பெறப்படும் ஓலைகளைத்தான் பயன்படுத்தினர்.

இம்மரத்தின் ஓலைகளை பக்குவப் படுத்தி, சுவடிகள் எழுதப்பட்டன. தாழிப்பனை மரம் நன்கு வளர்ந்து 65 முதல் 70 ஆண்டுகளில் பூ பூக்கும். ஒரு முறை பூத்த பின், அந்த மரம் காய்ந்து விடும்.

பண்டைய காலத்தில் இம்மரத்தில் பூக்கிறது என்பது தெரிந்த உடன், பூவின் காம்பை வெட்டி அதிலிருந்து கள் இறக்குவர்.காரணம், வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பூப்பதால், அனைத்து சத்துகளும் இக்கள்ளில் கிடைக்கிறது.

மருத்துவ குணம் கொண்ட இந்த கள்ளை குடித்தால் தீராத நோய்கள் அனைத்தும் நீங்கும்.

காலப்போக்கில் தாழிப்பனை இனம் மெல்ல மெல்ல அழியத் தொடங்கியது. தற்போது, தென்னிந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே இம்மரம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் தாழிப்பனை இல்லை.

மேழிச் செல்வம் கோழை படாது.

உழவே தலை...

இந்த ஈ.வெ.ரா எனும் பெரியார் தான் பெண்ணிய புடுங்கியாம் 😆

 


பெரியாராவது_மயிராவது

அதிமுகவினர் தொட்ட இடமெல்லாம் லஞ்சம் ஊழல்...


 

முக்தியும் மனமும்...

 


ஆன்மாவாகிய நாம் முதல் பிறப்பில் இருந்து சேர்த்த எண்ணப் பதிவுகளே நம்மை மறுபிறவிக்கு அழைத்து செல்கிறது.

அதை நாம் மனதின் கர்மம் என்கிறோம். இந்த கர்ம வினைகளை ஒருகாலும் நாம் அழிக்கவே முடியாது.

பிரபஞ்சத்தின் உருவான தகவல் ஒருபோதும் அழியாது என தற்போது வாழும் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாங்கிங்கே ஒப்புக் கொண்டார்.

ஆம் நாம் தகவலை அழிக்கவே முடியாது. ஆனால் அந்த கர்மத்தில் இருந்து மனதை பிரிக்க முடியும்.

நாம் பற்றற்ற நிலையில் எல்லா ஆசைகளையும் துறந்தால் நம் ஆன்மா எண்ணப் பதிவுகளில் இருந்து படிப்படியாக விலகும்.

பாவம்-இரும்பு விலங்கிட்டும், புண்ணியம்- பொன் விலங்கிட்டும், நம்மை மறுபிறப்பிற்கு அழைத்து செல்லும்.

எனவே சித்த நிலைக்கு முயல்பவன் மனித வாசனைகள் அல்லாத காடுகளுக்கு சென்று குகைகளில் மறைந்து தனித்து வாழ்கிறான்.

இன்னும் சில உண்மைகளை நான் இங்கு சொன்னால் அது கசக்கும் என்பதால் வேண்டாம் என விட்டு விட்டேன்...

பெட்டியுடன் தலைமறைவு 😂


 

இது உலக மகா நடிப்புடா சாமி 🤣


 

உலகின் திகில் கிளப்பும் தீவு...

 


கன்கஞ்சிமா தீவு (Gunkanjima Island)...

ஜப்பானின் நாகசாகி அருகே இருக்கும் ஒரு தீவு.

இந்தப் பகுதியில் 1800 களில்  நிலக்கரிச் சுரங்கம் ஆரம்பிக்கப்பட்டது.

பிரபல மிட்சுபிஷி நிறுவனத்தின் இந்த சுரங்கத்தில் வேலை செய்ய மக்கள் தீவுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

16 ஏக்கர் பரப்பரவிளான தீவு முழுக்க, காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட்டு அவர்களுக்குத் தேவையான மருத்துவமனைகள், வீடுகள், பள்ளிக் கூடங்கள் என அனைத்தும் கட்டப்பட்டது.

இரண்டாம் உலகப் போர் முடியும் வரை பணியாளர்கள் அனவரும் கொத்தடிமை முறையிலேயே பணி புரிந்து வந்தனர்.

1960களின் முடிவில் சுரங்கம் மூடப்பட்டது.

மக்கள் அனைவரும் சுதந்திர காற்றை சுவாசித்தவாறு வெளியேறினர்.

ஒரு வரலாற்றுத் துயரத்தின் சாட்சியாக நீலக் கடலின் நடுவே கான்கிரீட் தீவாக நின்று கொண்டிருக்கிறது கன்கஞ்சிமா...

IOB வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து தமிழர்களும் பணத்தை எடுத்து கணக்கை மொத்தமாக மூடுங்கள்...


 

தமிழர் விரோதி காங்கிரஸ் 2012 ஆட்சியில் இந்த வேளாண் மசோதாவை கொண்டு வர நினைத்தார்கள்...

 


தற்போது மக்கள் விரோதி, பொய், பித்தலாட்டத்தின் கில்லாடி பாஜக மோடி அரசு செய்துக் கொண்டிருக்கிறார்...

ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ்...

 


1990க்கு முந்தைய தலைமுறை வரைக்கும் தான் ஆப்பிள் என்றது நியூட்டனை நினைவு கூறும். அதற்கு பின் வரும் அனைவருக்குமே ஆப்பிள் என்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் தான் நினைவுக்கு வருவார் என்ற வாக்கியம் எப்போதுமே இணையத்தில் வைரல்.

புதுமை என்ற விஷயம் ஒவ்வொரு ஆப்பிள் தயாரிப்பிலும் இருக்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஜாப்ஸை கேட்டால் புதுமை என்று எதையுமே கூறிவிட முடியாது. அடுத்த நொடியே இதைவிட புதுமையான விஷயம் உருவாகிவிடும் என்பாராம். இன்றைய ஸ்மார்ட்போன் உலகின் வீரியத்தை முன்பிலிருந்தே உலகுக்கு எடுத்து சொன்ன ஸ்டீவ் ஜாப்ஸின் பிறந்த நாள் இன்று. அவர் பற்றிய சுவாரஸ்யமான 10 விஷயங்கள்.

1. 1955ம் ஆண்டு சான் ஃப்ரான்சிஸ்கோவில் பிறந்தவர் ஜாப்ஸ். பிறந்தவுடன் தன் மகன் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக பால் தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்டார். அவர்களிடம் ஜாப்ஸ் மகிழ்ச்சியாக வளர்ந்தாலும், தான் தத்துப்பிள்ளை என்பது ஜாப்ஸுக்கு அடிக்கடி வருத்தமளிக்கும் விஷயமாகவே இருந்துள்ளது. படிப்புக்காக தத்து கொடுக்கப்பட்ட ஜாப்ஸ் கல்லூரியில் பாதியில் படிப்பை விட்டவர்.

2. எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தின்மீதும், வரைகலையின் மீதும் ஆர்வம் கொண்ட ஜாப்ஸால் வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. அதோடி கல்வியில் சுதந்திரம் வேண்டும் என்று விரும்பியவர் ஜாப்ஸ். பிற்காலத்தில் வரைகலை பயின்ற ஜாப்ஸ் மாக் கம்ப்யூட்டருக்கான அழகான எழுத்துருக்களை தானே வடிவமைத்தார்.

3. படிப்பை விட்ட காலத்தில் நண்பர்களின் அறையில் தங்கி இருந்த ஜாப்ஸ் நீண்ட தொலைவுகளுக்கு நடந்து சென்றும், பசியால் வாடும் நேரத்தில் ஹரே கிருஷ்ணா கோவிலில் உணவு உண்டும் தனது காலத்தை கழித்துள்ளார்.

4. 1974ம் ஆண்டில் தலையில் நீண்ட முடியோடு, இந்தியாவில் இமையமலைப்பகுதிகளில் ஆன்மீக தேடலில் இருந்த ஜாப்ஸுக்கு தோல் நோய்கள் வந்துள்ளது. மேலும் கடும் புயலில் சிக்கி கொண்ட ஜாப்ஸ் ஆன்மீக தேடலை கைவிட்டு அறிவியல் பாதைக்கு மீண்டும் திரும்பியுள்ளார். இல்லையென்றால் இந்தியாவில் சாமியாராகி இருப்பார் ஜாப்ஸ்.

5. ஆப்பிள் 1 கணினிக்கு பின்னால் அவர் நிகழ்த்திய மேஜிக் அளப்பறியது. தனது நண்பருடன் இணைந்து ஆப்பிள் 1 கணினியை உருவாக்கிய ஜாப்ஸ் அதனை ஒரு வீடியோ கேம் கணினிகளை விற்கும் ஃபைட் ஷாப் உரிமையாளரிடம் விளக்கினார். அவர் ஒரு மாதத்தில் 50 கணினிகள் வேண்டும் என ஆர்டர் தர இதனை ஒப்பந்தமாக எழுதி வாங்கி, அந்த ஒப்பந்தத்தை காட்டி மூலப்பொருட்களை கடனில் வாங்கி கணினியை தயாரித்துள்ளார் ஜாப்ஸ்.

6. 1985ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக ஆப்பிள் சிஇஓ பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்ட ஜாப்ஸ். தளராமல் பிக்ஸார் அனிமேஷன் நிறுவனம் மூலம் ஹிட் அடித்தார். ஆப்பிள் நிறுவனமே வீழ்ச்சிக்கு சென்ற நிலையில் ரீ-என்ட்ரி கொடுத்து ஆப்பிளை முன்னணி பிராண்ட் ஆக்கினார் ஜாப்ஸ்.

7. ஜாப்ஸ் ஒரு சிறந்த வழிகாட்டி. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் ஃபேஸ்புக்கை மூடிவிடலாம் என்று முடிவில் இருந்த போது இந்தியா சென்றுவிட்டு வா ஒரு ஐடியா கிடைக்கும் அவசரப்பட்டு நிறுவனத்தை மூடிவிடாதே என அறிவுரை கூறி மார்க்கை இன்று உலகின் நம்பர் 1 மனிதனாக மாற்றியதும் ஸ்டீவ் ஜாப்ஸ்தான்.

8. ஜாப்ஸ் ஒரு பெஸ்டேரியன் (pescetarian) அதாவது மீன் தவிர மற்ற மாமிசங்களை உண்ணாதவர். வாழ்நாளில் 7 மாதங்கள் தீவிரமாக புத்த மதத்தை பின் தொடர்ந்தவர் ஜாப்ஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

9. ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரஷ்யாவின் பங்குச் சந்தையை விட அதிகம், ஆப்பிளின் செயல்பாட்டு கையிருப்பு அமெரிக்காவின் கஜானாவை விட அதிகம் என்பதும் ஆப்பிளின் மிகப்பெரிய சிறப்பு.

10. ஆப்பிள் ஐபோன்களை ஸ்டீவ் ஜாப்ஸ் தான் உலகுக்கு அறிமுகம் செய்தார். முதன் முதலில் 9:41 மணிக்கு இந்த போன்களை அறிமுகம் செய்ததால் அனைத்து ஐபோன்களும் வெளியிடப்படும் மாடல்கள் மற்றும் போன்களின் புகைப்படங்களில் 9:41 என்ற மணியையே காட்டும்...

2012 காங்கிரஸ் ஆட்சியில் இந்த வேளாண் மசோதாவை கொண்டு வர நினைத்தார்கள்...


தற்போது இந்த பொய், பித்தலாட்டத்தின் கில்லாடி பாஜக மோடி அதை செய்துக் கொண்டிருக்கிறார்...

பாஜக வில் இருக்கிறவன் பூரா பைத்தியமா இருந்தா என்ன பண்ணுறது...


 

மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டம் 2020...

 


பெரு முதலாளிகளையும் பன்னாட்டுக் கம்பெனிகளையும் இந்திய வேளாண் சந்தைக்குள் வரவழைக்கும் தந்திர சட்டம்.

அரசின் கண்காணிப்பு அமைப்புகள் குறுக்கீடுமோ என்ற அச்சமின்றி தனியாா் முதலீட்டாளா்கள் வேளாண் சந்தைக்குள் அனுமதிக்கும் சட்டம்.

உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்வதிலும் இருப்பு வைப்பதிலும் எந்தவிதக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது. உணவுப் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் உணவுப் பொருள்களைப் பதுக்கல் செய்து லாபம் சம்பாதிக்கும் இந்நாட்டு மற்றும் பன்னாட்டு பெருவணிகர்களுக்கு அனுமதிக்கும் சட்டம்..

`பருப்பு, எண்ணெய், உருளைக் கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பொருள்கள் இனி அரசின் அத்தியாவசியப் பொருள்கள் இல்லை' என்று நழுவும் சட்டம்

உணவுப் பொருள்கள் மும்பை, டெல்லி போன்ற பொருளாதாரத்தில் மேம்பட்ட நகரங்களுக்கு  அனைத்தும் செல்லும். பொருளாதாரத்தில் பின் தங்கிய கிராமப்புறங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுத்தும் சட்டம்.

உழவர்களை முன்னேற்றுவதற்கான சட்டங்கள் என்று சொல்லி, அவர்களை ஒட்டுமொத்தமாக வேளாண்மைத் துறையிலிருந்து வெளியேற்றும் சட்டம். 

மக்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் நியாய விலைக் கடைகளிலிருந்து படிப்படியாக நிறுத்தும் சட்டம்.

மாநிலங்களுக்கு இடையேயான தடைகளை நீக்குவதாக கூறி மாநில அரசின் உரிமையை அறுத்து எறியும் சட்டம்

இது விவசாயிகளுக்கு எதிரான சட்டத் திருத்தம். இடைத் தரகா்களும், பெரிய வியாபாரிகளும் மட்டுமே இதில் பயனடைவாா்கள். காா்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளைச் சுரண்ட பெரிய அளவில் வழி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது

விவசாய வர்த்தகம் முழுவதும் டிஜிட்டல் ஆக்கப்படும்

கொரோனா கொடூரங்களையும் தாண்டிய இனி வரும் காலங்களில் படிப்படியாக பெரும் அழிவை ஏற்படுத்தும் சட்டம்.

ஒரே தேசம், ஒரே சந்தை, ஒரே சுடுகாடு...

தெலுங்கன் ஈ.வெ.ரா மட்டும் இல்லனா தமிழர்கள் படிச்சிருக்க முடியாது - திருட்டு திராவிடம்...


 

நான் படித்த உளவியலில் இருந்து.. நாம் ஏன் பொய் சொல்கிறோம்?

 


இதுக்கான பதிலை ஒரு வரியில சொல்லணும்னா, நமக்கும் நல்லவனா இருந்துக்கிட்டு, மத்தவங்களுக்கு முன்னாடியும்  நம்மை நல்லவனா காட்டிக்கிறதுக்காகவும் தான்னு  உளவியல் ஆய்வாளர்கள் சொல்றாங்க..

பொய் சொல்வது எனும் செயல் ஒருவரின் சுயமரியாதையுடன் நெருங்கிய தொடர்புடையது.

ஒரு மனிதன் எப்போது தன் சுயமரியாதைக்கு பங்கம் வருகிறது என்று பயப்படுகிறானோ, அப்போதே அவன் அதிகமாக பொய் சொல்கிறான் அப்படீன்னு சொல்றாரு அமெரிக்காவின் மசாச்சூசெட்ஸ் பல்கலைக்கழக உளவியல் ஆய்வாளர் திரு.ராபர்ட் ஃபெல்டுமேன்..

பொய் குறித்த உளவியல் காரணங்கள்/கருத்துக்கள்...

உங்களுக்கே தெரியும்  நாம சொல்கிற எல்லாப் பொய்களுமே தீமையானது அல்ல என்று.. சில/பல சமயங்கள்ல நம்முடைய மற்றும் நம்மைச் சார்ந்தவர்களுடைய சுயமாரியாதையை காப்பாற்றிக்கொள்ள அல்லது நடக்கப் போகும் ஒரு அசம்பாவிதத்தை தடுக்க பொய் சொல்வதை விட ஒரு சிறந்த வழி இல்லைன்னு சில ஆய்வாளர்கள் சொல்றார்கள்.

தன்னைப் பற்றி உயர்வாக சொல்லிக் கொள்ள, அல்லது தான் ஒரு எளிமையானவன் என்பது போல காட்டிக் கொள்ள வேண்டி சொல்லும் பொய்கள் ஒன்றும் பெரிய குற்றமல்ல.

ஆனால், அப்பட்டமான (முழு நீள) பொய்கள், உதாரணமாக உண்மைக்குப் புறம்பான அல்லது உண்மையை மறைத்துச் சொல்லும் கருத்துகள் போன்றவை, ஒருவர் கொண்டிருக்கும் நம்பிக்கையையும், நெருக்கத்தையும் குலைத்து விடுபவை என்பதால் சமுதாயத்தின் பார்வையில் அவை குற்றங்களே.

தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, பிறரையும் ஏமாற்றும் குணாதிசயம்..

பல விலங்குகள் தங்களுடன் வாழும் சக விலங்குகளை ஏமாற்றுவது இயற்கைதான் என்றாலும், தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, பிறரையும் ஏமாற்றி விளையாடும் (?) குணாதிசயம் என்பது மனிதர்களுக்கே (மட்டுமே) உரித்தான பண்பு என்கிறார்கள் உளவியலாளர்கள்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், மனிதர்கள் பிறர் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள்/எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதிலேயே அதிக நேரம் மூழ்கிப் போய் விடுவதால், நாம் பிறரிடம் சொல்வது உண்மையா இல்லை முற்றிலும் (அபத்தமான ஒரு) பொய்யான விஷயமா, என்பதை தாங்களே இனம் பிரித்து பார்க்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்று ஃபெல்டுமேனின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உதாரணமாக, ஒரு ஆய்வில் முன்பின் அறிமுகமே இல்லாத இருவரை ஒரு அறையில் தங்க வைத்து, அவர்களின் உரையாடலை காணொளியாக பதிவு செய்தனர். பின்னர், அவ்விருவரையும் தனித்தனியாக, அக்காணொளியைக் கண்டு அதில் அவர்கள் பேசியவற்றில் முற்றிலும் உண்மையல்லாத (பொய்யான) ஒரு விஷயம் கூறப்பட்டுள்ளதா என்று கண்டறிந்து சொல்லுமாறு கேட்டதில், “தனக்கு சுத்தமாக பிடிக்காத ஒருவரை மிகவும் பிடித்தவர் என்று சொல்வதில் தொடங்கி, தான் ஒரு பிரசித்தி பெற்ற பாப் பாடகர்/இசையமைப்பாளர் என்பது போன்ற அபத்தமான விஷயங்களை” தாங்கள் சொல்லியதாக ஒப்புக்கொண்டார்களாம்? அடப் பாவிகளா…..

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் குறிப்பிட்ட அந்த உரையாடல் காணொளியைக் காணும் முன்பு, அச்சோதனைக்கு உட்படுத்தப்பட்ட இருவரையும், நீங்கள் பேசிய அனைத்தும் உண்மைதானா எனக்கேட்டதற்க்கு, “ஆம் நாங்கள் பேசிய அனைத்தும் முற்றிலும் உண்மையே” என்றார்களாம். அட…. இது நல்லாருக்கே..

சமீபத்திய ஒரு ஆய்வின்படி, ஒரு 10 நிமிட உரையாடலில் 60% மக்கள், சராசரியாக 2.92 பொய்களை சொல்லியிருக்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அப்படிப்போடு….. ஃபெல்டுமேன் அவர்களின் ஆய்வுக் கூற்றுகளின்படி, மக்கள் தன்னிச்சையாக பொய்களை சொல்லுகிறார்களாம், சமுதாயத்தில் அவை ஏற்படுத்தும்  விளைவுகளைப் பற்றி கண்டு கொள்ளாமலேயே

இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல இருக்கிறது இத

நாம் மற்றவர்களை ஈர்ப்பதில் ஆர்வம் காட்டுவதைவிட, மற்றவர்கள் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புவார்களோ, அப்படி இருப்பதற்காகவே பெரிதும் முயல்கிறோமாம்?

ஒரு சுமூகமான சமூக சூழலை ஏற்படுத்த வேண்டியும், பிறரின் கருத்துக்கு மறுப்பு தெரிவிப்பதன் மூலம், அவர்களின் மனதைப் புண்படுத்தாமல் இருப்பதற்காக வேண்டியும், நாம் பெரும்பாலும் மற்றவர்களுடன் (எண்ணங்களுடன்) ஒத்துப்போகவே விழைகிறோமாம்.

பெண்களை விட ஆண்களே அதிகம் பொய் சொல்கிறார்களாம். ஆண்களின் பொய்கள் பெரும்பாலும் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளவும், ஆனால் பெண்களின் பொய்கள் பிறரை மகிழ்ச்சி கொள்ளச் செய்யவுமே சொல்லப்படுகிறதாம்.

கூச்ச சுபாவமுள்ளவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, வெளிப்படையானவர்களே பெரிதும் பொய் சொல்கிறார்களாம்...