27/10/2017

தமிழர் வாழ்வியலில் பலிகொடுத்தல்...



01. பேஎ விழவினுள் (பரிபாடல் 5)..

வெறியாடும் பொழுது ஆட்டுக் குட்டியைப் பலியிடுவர் . அதன் குருதியினைத் தினையரிசியோடு சேர்த்துத் தூவுவர். ஆட்டின் கழுத்தை அறுப்பதோடு தினைப் பிரப்பை வைத்து வழிபடுவர்.

02. மறிக்குரல் அறுத்துத் தினைப்பிரப் பிரீஇ (குறுந்தொகை 265)..

03. சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து..

04. குருதியோடுவரைஇய தூவௌ் அரிசி..

05. குருதிச் செந்தினை பரப்பி (திருமுருகாற்றுப்படையின் வரிகள்)..

மலையில் விளைகின்ற உருவத்தில் சிறிய தினை அரிசியுடன் மலையில் மலரும் காட்டு மலர்களைப் பறித்து விரவிச் சுளகில் பரப்புவார்கள். வரையாட்டை அறுத்து அதன் ஊனைத் தேக்கிலையில் வைப்பார்கள். இரண்டையும் தெய்வத்திற்குப் படைப்பார்கள். மலையில் விளைந்த தூய வெண்ணெல் அரிசியை வரையாட்டுக் குருதியில் விரவி, தேக்கிலையில் இட்டுப் படைப்பார்கள். செந்தினை அரிசியை வரையாட்டுக் குருதியுடன் கலந்து சுளகில் இட்டுப் பரப்பிப் படைப்பார்கள்.

பலவாகிய வேறுபட்ட நிறமுடைய சோற்றையுடைய பலியுடன் ஆட்டுக்குட்டியைக் கொன்று, நோய்கொண்ட பெண்ணின் நறுநுதலை நீவி முருகனை வேண்டிப் பலியாகக் கொடுப்பர் (குறுந்தொகை 362)

06. படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை
நெடுவேள் பேணத் தணிகுவள் இவள்என
முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற
களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி
வளநகர் சிலம்பப் பாடி பலி கொடுத்து
உருவச் செந்தினை குருதியோடு தூஉய்
முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள் (அகநானூறு  22;5)..

முருகவேளைப் போற்றி வணங்கிட, இவள் வாட்டம் தணியப் பெறுவாள் என்று முடிவு செய்தனர். அனுபவம் மிக்க மகளிர் அவ்விடத்தில் ஒன்று கூடி வெறியாடு களத்தை உண்டு பண்ணினர். மலர்க் கண்ணி சூட்டி அலங்காரம் செய்தனர். மலை முழுவதும் எதிரொலிக்குமாறு முருகனைப் போற்றிப் பாடினர். வரையாட்டைப் பலி கொடுத்தனர். நன்கு முற்றிய செந்தினை அரிசியோடு வரையாட்டுக் குருதியைக் கலந்து பலி தூவி முருகப் பெருமானிடத்து ஆற்றுப்படுத்தினர். சங்க காலத்தில் முருகப் பெருமானுக்கு உயிர்ப்பலி கொடுத்தனர்.

குளி்ர் மிகுந்த மலைப் பகுதிகளில் மக்கள் தங்களின் உடல் வெப்பம் குறையாமல் சமநிலையில் வைத்துக் கொள்ளவும், குளிரிலிருந்து காத்துக் கொள்ளவும், கடுமையான தொழில்களைச் செய்வதற்கு ஏற்ற உடல் வலிமை பெறவும் புலால் உணவு அருந்தினர். தாங்கள் உண்ணும் புலால் உணவையே தாங்கள் வழிபடுகின்ற கடவுளர்க்கும் படைத்து வழிபட்டனர். படைத்தவற்றை உணவாக ஏற்றுக் கொண்டனர்.

07. கனங்கெழு கடவுட்கு உயிர்ப்பலி தூஉய்ப்
பரவினம் வருகஞ் சென்மோ (நற்றிணை, 358)..

08. ஒல்லார் நாண பெரியவர்க் கண்ணிச்
சொல்லிய வகையின் ஒன்றோடு புணர்ந்து
தொல்லியிர் வழங்கிய அவிப்பலி யானும்..

தான் கலந்து கொள்ளும் போரில் தன் பக்கம் வெற்றி பெற விழைந்த வீரன் ஒருவன் தீயை வளர்த்தான். தனது பக்க வெற்றிக்காக அத்தீயில் தன்னையே அவிப்பலியாக்கிக் கொண்டு விழுந்து உயிர் நீத்தான்.

உயிர்ப்பலி கொடுத்துத் தெய்வத்தை வழிபாடு செய்யும் வழக்கம் இருந்தது.

09. கடியுடை வியல்நகர்க் காவல் கண்ணி
முருகு என வேலன் தரூஉம்
பவருமாகப் பயந்தன்றால் நமக்கே (அகம் 232)..

10. மெய்ம்மலி உவகையன் அந்நிலைகண்டு
முருகு என உணர்ந்து முகமன் கூறி
உருவச் செந்தினை நீரோடு தூவி தூஉய் (அகம் 272)..

11. உருகெழு சிறப்பின் முருகுமனைத் தழீஇக்
கடம்பும் கணனும் பாடி நுடங்குடி (அகம் 138)..

வேலன் வெறியாட்டு என்ற முறையில் பண்டைத் தமிழ் மக்கள் முருகனை அதிகமாக  வழிபட்டு இடையிறாத தெய்வ விழாக்களும் நிகழ்த்தி ஆடிப்பாடியும் பலிகொடுத்தும் இரவில் வழிபாடு நிகழ்த்தினர்.

12. தோப்பிக் கள்ளுடன் துரூஉப்பலி கொடுக்கும் (அகம் 35).

அரிசியிலிருந்து வடித்து எடுக்கப்பட்ட ஒருவகைக் கள்ளைத் தாங்கள் வழிபடுகின்ற தெய்வங்களுக்குப் படைத்தனர். கூடவே, மலை ஆட்டையும் பலி கொடுத்து வழிபட்டனர்.

13. நனைமுதிர் நறவின் வாட்பலி கொடுக்கும் (அகம்  13)..

கடும் புளிப்பு நிறைந்த கள்ளைப் படைத்து வழிபட்டனர்.

14. கள்ளும் கண்ணியும் கையுறையாக
நிலைக்கோட்டு வௌ்ளை நால்செவிக் கிடாய்
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி (அகம் 156)..

கடவுளுக்குக் கையுறையாக மலர்க் கண்ணியுடன் கள் படைக்கப்பட்டது.

15. பலிபெறும் வியன்களம் மலிய ஏற்றி (பெரும்பாணாற்றுப்படை)..

குளத்திலே உறைகின்ற தெய்வங்களுக்கு மிகுந்த பலி இட்டு வழிபட்டனர்.

16. உயர்பலி பெறூஉம் உருகெழு தெய்வம் (அகம் 166)..

சிறந்த பலியைப்பெறுகின்ற வலிமை மிக்க தெய்வம்..

போர் முனைக்குச் செல்லுவதற்கு முன்னால் போர் வீரர் அனைவரும் படைஞர் திடலில் அணிவகுத்து நிற்பார்கள். போரில் தங்களுக்கு வெற்றியை நல்க வேண்டும் என்று வேண்டி, கொற்றவைக்குப் பலி இட்டு வழிபடுவதை களப்பலி  என்றனர்...

புரட்டாசியும் ஆண்மையும்...


இயல்பாகவே புரட்டாசி, ஐப்பசியில் சூரியன் பலமிழந்து காணப்படும்.

அதனால் அதிகப்படியான குளிர்ச்சி காணப்படும் அல்லது மழைப் பொழிவு இருக்கும்.

குளிர்ச்சியின் காரணமாக நமது உடலில் இயல்பாகவே வெப்ப சக்தி அதிகரிக்கும்.

நமது உடலில் உயிர் ஆற்றல் பெருக வெப்ப சக்தி தேவை.

எனவே நமது உடலில் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

அந்த விந்துவில் உயிர் ஆற்றலும் வீரியமும் அதிகரிக்க புரட்டாசியில் அதிகப்படியான அசைவம் சாப்பிட வேண்டும்.

நம்முடைய சந்ததியை வீரிமில்லாத மலட்டு சமூகமாக உருவாக்க எதிரிகளால் திணிக்கப்பட்டது தான் புரட்டாசி விரதம்.

நல்ல ஆண்மை பலமும் வீரியமும் உள்ள அடுத்த தலைமுறையை உருவாக்க புரட்டாசியில் அசைவம் சாப்பிட வேண்டும்.

மேலும் புரட்டாசி ஐப்பசியில் சூரியன் பலவீனம் என்பதால் நம்முடைய முன்னோர்கள் நம்மைத்தேடி வருவார்கள்.

அவர்களை மகிழ்விக்க அசைவப்படையல் (பலி) கொடுத்தே  ஆகவேண்டும்.

அப்படி அசைவப்படையல் போட்டால் நாம் நிம்மதியாகவும் வலிமையாகவும் வாழ அவர்கள் துனையிருப்பார்கள்.

நம் தமிழ் சமூகம் இயல்பாகவே வீரியமுள்ள சமூகம்தான் அதை வலுவிழக்க வைக்கத்தான் இத்தனை வழிபாடுகள்.


ஏன் ஐப்பசி மாதங்களில் ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் இருக்க சொல்கிறார்கள் என்பதையும் இதனுடன் இணைத்துப் பாருங்க உண்மை புரியும்...

இவன் தான் கொலை பன்னிருக்கான் எனக் கூறி காவலருக்கு பொதுமக்கள் சரமாரி அடி உதை - திருவண்ணாமலையில் பரபரப்பு...


திருவண்ணாமலை மேல்புழுதியூர் கிராமத்தை சேர்ந்த இளம் விவசாயி திருமலை வனப் பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதை தொடர்ந்து வனப் பகுதியில் மர்மமான முறையில் திருமலை இறந்து கிடந்துள்ளார்.

இதை கண்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறை காவல் துறையினர் தான் திருமலையை அடித்து கொலை செய்துள்ளார்கள் எனக் கூறி சந்தேகப்படும் படி இருந்த வனத்துறை காவலர் ஒருவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது வாய் உடைந்தது. அவரது வாகனத்திற்க தீ வைத்தனர்.

இதை தொடர்ந்து அந்த பகுதியில் போராட்டம் வெடித்தது, இது தொடர்பாக 50 க்கும் மேற்பட்டவர்கள் மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்...

இஸ்ரேல் ராணுவத்தின் பாராசூட் பிரிவில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர் யூரிகெல்லர்...


இவர் கூர்ந்து பார்த்தால் கரண்டி கத்தி ஸ்பூன் தட்டு போன்ற உலோகங்கள் எல்லாம் தானாகவே வளைய ஆரம்பித்தன.கெல்லரின் இந்த அதீத சக்தி விஞ்ஞானிகளுக்கு பெரும் புதிராக இருந்தது.

 1973 ஆம் ஆண்டு பி.பி.சி ரேடியோவில் யூரிகெல்லரின் செயல் விளக்கங்களைப் பற்றி ஒலி பரப்பினார்கள் அப்போதே பல வீடுகளில் இரும்பு பொருட்கள் வளைவதாக போன்கள் அலறின. இதை நேரில் பார்காத சிலர் நம்ப மறுத்தனர்.

யூரிகெல்லர் பத்திரிக்கை வாயிலாக ஒரு அறிக்கை விட்டார் டி.வி. நிகழ்ச்சியில் தோன்றி நான் பார்க்கிறேன் உங்கள் வீட்டில் டி.வி யின் முன்பாக பொருட்களை வைத்து சோதித்துப் பாருங்கள் என்றார்.

குறிப்பிட்ட அன்றைய தினம் நாடு முழுவதிலும் உள்ள பலர் தம் வீட்டு டி.வி முன்பாக வேலைக்கு உதவாத கரண்டிகள், கத்திகள், லாடங்கள், இரும்பு பொருட்களை வைத்திருந்தனர்.

சில நிமிடங்களில் டி.வி யில் யூரிகெல்லர் தோன்றினார் கைகளை கட்டிக் கொண்டு ஏதோ பிரார்த்தனை செய்தவாறு உற்று  நோக்கினார்.

என்ன ஆச்சரியம் நாடு முழுவதிலும் டி.வி யின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் வளைந்து சுருண்டன ஓடாத கடிகாரங்கள் ஓடின. சில வீடுகளில் டேபிள், சேர்கள் கூட வளைந்தன. அவரவர் வீட்டில் பொருட்கள் வளைந்ததாக எங்கும் இதே பேச்சு இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் மட்டுமே யூரிகெல்லர் உலகப் புகழ்பெற்றவராகி விட்டார்.

கலிஃபோர்னியா மென்லே பார்க்கில் உள்ள ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (S.I.R) கெல்லரை அழைத்தது அங்கு கெல்லருக்கு பல பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

எல்லாவற்றிலும் கெல்லர் வெற்றி பெற்றார்.

எஸ்.ஐ.ஆர் நடத்திய சோதனைகளில் ஒன்று யாருக்கும் தெரியாமல் ஆறு படங்களை வரைந்து அதை ஒரு கவரில் போட்டு அதை ஒரு பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டு அந்த பெட்டியை ஒரு லாக்கரில் வைத்து அந்த லாக்கரை பல மாடிகள் கொண்ட ஒரு அரையினுள் வைத்து பூட்டுக்கும் சீல் வைத்தனர்.

கெல்லரிடம் அந்த படங்களை வரைந்து காட்டுமாறு கேட்டனர் கெல்லர் மிக சரியாக அந்த படங்களை வரைந்து காட்டினார்.

விஞ்ஞானிகள் இதை ESP power என்றனர். கெல்லரோ என்னையும் மீறி ஏதோ ஒரு சக்தி எண்னை இப்படி செய்விக்கிறது என்கிறார்.

ESP POWERக்கு ஒரு எல்லை உண்டு இந்த ஆற்றல் அதையும் மீறிய செயல் எனவே இது ஒரு அமானுஷ்ய சக்தியின் ஆற்றலாகத் தான் இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...

பசுமைத் தேநீர்...


நோய்களிலிருந்து காப்பாற்றும் பசுமைத் தேநீர் (க்ரீன் டீ)...

பொதுவாகவே டீ வகைகளில் க்ரீன் டீ, சி டி சி (ctc) டீ என்று இருவகைகள் பயன்பாட்டில் உள்ளது. நாம் பெரும்பாலும் பயன் படுத்திக்கொண்டு இருப்பது சி டி சி தேநீரைத்தான்.

ஆனால் சீன மக்களிடையே தொன்று தொட்டு பாரம்பரியமாக தொடர்ந்து வருவது பசுமைத் தேநீர் (க்ரீன் டீ) ஆகும். அதன் மருத்துவ குணத்தால், இப்போது உலகளவில் பிரசித்தி பெற்றுவருகிறது..

சி.டி.சி. தேநீர். (C.T.C Tea) என்பது என்ன?

(Cut turn and crush tea ஐ தான் CTC Tea என்கிறார்கள். இது பதப்படுத்தப் பட்ட டீ. இதுதான் நாம் அன்றாடம் குடித்து பழகி வரும் டீ.

பசுமைத் தேநீர் (க்ரீன் டீ) என்பது என்ன?

பயோகெமிக்கல் முறையில் நிழலில் உலர்த்தி பதப் படுத்தப் படும் தேயிலைதான் க்ரீன் டீ.

க்ரீன் டீக்கு எதனால் இந்த மகத்துவம்?

கேட்சின் கொலிபெனல்ஸ் (Catechin Colyphenols ) தான் க்ரீன் டீயில் பிரதான விஷயம். அதாவது பவர்புல் ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் எனப்படும் மிகச் சிறந்த நோயெதிர்ப்பு சக்தி இந்த டீயில் குவிந்து கிடக்கிறது என்பதுதான் இதில் ஹைலைட்!

கேன்சருக்கு மிக நல்லது..

பொதுவாகவே கேன்சர் ட்ரீட்மென்ட் என்றால் ரேடியேசன் தெரபிதான் மெயின். இந்த ரேடியேசன் கதிர்வீச்சு கேன்சர் செல்களை மட்டுமின்றி கூடவே நல்ல செல்களையும் கொல்கிறது.

ஆனால் இந்த க்ரீன் கேன்சர் செல்களை மட்டுமே கொல்கிறது. காரணம் இதன் கேட்சின் கொலிபெனல்ஸ் தான். என்றாலும் கேன்சருக்கான உடனடி ட்ரீட்மென்ட் ஆக மருத்துவர்கள் க்ரீன் டீயைப் பரிந்துரைப்பதில்லை.

காரணம் கேன்சரின் ஆரம்ப அறிகுறியிலிருந்து நீண்ட நெடும் காலம் தொடரவேண்டிய வழிமுறை இது என்பதால்தான்.

சீன மக்களின் ஆரோக்கிய ரகசியம்..

காலம் காலமாக சீன மக்கள் விரும்பி குடிக்கும் டீ இந்த க்ரீன் டீ. சீனர்கள் பன்றி இறைச்சி சாப்பிடுபவர்கள். கொசுறு கொசுறாக சாப்பாட்டை அடிக்கடி சாப்பிடுபவர்கள். எனவே இவர்கள் உணவு முறையில் கெட்ட கொழுப்பு சேரும் அபாயம் கண்டிப்பாக இருக்கிறது.

ஆனால் சீனர்கள் தினமும் அடிக்கடி க்ரீன் டீ பருகும் பழக்கம் இருப்பதால் இந்த க்ரீன் டீ கெட்ட கொழுப்பை உடலில் சேரவிடாமல் தடுக்கிறது.

ரத்த நாளங்களின் அடைப்பை நீக்கும்..

பொதுவாகவே நாம் சாப்பிடும் சமோசா, பீட்சா, வடை, சிக்கன் 65 போன்ற எண்ணெய் பலகாரங்களாலும், அதிக ஸ்வீட் சாப்பிடுவதனாலும் உண்டாகும் கெட்ட கொழுப்பினால், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும். இதனால் உயர் இரத்த அழுத்தம் உண்டாகும். இது மாரடைப்பு (Heart Attack) வரை கூட கொண்டு போய் விட்டுவிடும்.

இப்படிப்பட்ட ரத்த நாளங்களின் அடைப்பைப் போக்கி நார்மல் நிலைக்கு கொண்டுவரும் பணியை செய்கிறது இந்த க்ரீன் டீ.

தொடர்ந்து க்ரீன் டீ பருகி வந்தால் மூட்டு பிரச்சனைகள், ரத்தகொதிப்பு, இதய நோய்கள் போன்ற நோய்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து நாளடைவில் காணாமல் போகின்றன.

சளி, ஜுரம் வராது..

அன்றாடம் காற்றில் நிறைந்துள்ள சின்ன சின்ன தொற்றுக் கிருமிகளால் நமக்கு சளி ஜுரம் உண்டாகிறது. இந்த நோய்களைத் தோற்றுவிக்கும் கிருமிகளைக் கூடக் கொல்கிறது க்ரீன் டீ தரும் எதிர்ப்பு சக்தி.

உடல் நடுக்கம் குறையும்..

சிலருக்கு உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து போவதால் உடல்நடுக்கம் இருக்கும். நல்ல செல்களை உருவாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதன் மூலம் உடல் நடுக்கத்தைப் போக்குகிறது க்ரீன் டீ.

உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்...

க்ரீன் டீயைப் பருகுவதால் Fat Oxddations Themnogenesis எனும் குறிப்பிட்ட சிஸ்டம் மூலம் உடலில் சேர்ந்துள்ள கலோரிகள் உடனடியாக எரிக்கப் படுகிறது.

எனவேதான் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி க்ரீன் டீ சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

சீன மக்களின் உணவுப் பழக்கப் படி அவர்கள் உடல் எடை அதிகமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஸ்லிமாக இருப்பதற்கு அவர்கள் அடிக்கடிப் பருகும் க்ரீன் டீ தான் காரணம்.

சர்க்கரை நோய்க்கு நல்லது...

நல்ல டயட், உடற்பயிற்சி, மன அழுத்தமின்மை போன்றவற்றோடு, அன்றாடம் க்ரீன் டீ பருகி வந்தால் சர்க்கரை நல்ல கட்டுப்பாட்டில் இருக்கும். காரணம் எந்த உணவும் செரிமானத்துக்குப் பின் குளுகோஸ் ஆக மாறி ரத்தத்தில் சேராத படி க்ரீன் டீ தடுக்கிறது.

செரிமான சக்தியை அதிகரிக்கும்...

என்னதான் சாப்பாட்டில் மசாலா, அஜினமோட்டோ, போன்ற ஜீரண சக்தி பொருட்களை சேர்த்திருந்தாலும் உணவுக்கு பின் க்ரீன் டீ பருகுவதற்கு நிகர் வேறெதுவும் இல்லை. ஜீரண சக்தியை அந்த அளவுக்கு தூண்டிவிடும், மேலும் உடனடியாக கெட்ட கொழுப்பையும் நீக்கும்.

பருகும் முறை...

1 டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். (2 - 3 நிமிடங்கள்) அடுப்பை நிறுத்தவும். 1/2 ஸ்பூன் டீத்தூள் போடவும். 3 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

அவ்வளவுதான். க்ரீன் டீ ரெடி.. குடிக்கலாம்.

குறிப்பு...

Green Tea யில் நிறம், சுவை கிடயாது. Lite green colour ல தான் இருக்கும்.

அதிக நேரம் அடுப்பில் கொதிக்க வைத்தால் தான் கசக்கும். அது உடம்புக்கு கெடுதல்.

அடுப்பை ஆப் செய்து விட்டு தான் இலைகளை போட வேண்டும்.

அதிக நேரம் தண்ணீரில் போட்டு வைத்தால் தான் Dark colour ல இருக்கும். அது உடம்புக்கு கெடுதல்.

இதையே 3 முறை பயன்படுத்தலாம்..

முதல் முறை போடுவதை பெரியவங்களுக்கு (ஸுகர், பிரசர் இருக்குறவங்க) குடுக்கலாம். 2nd, 3rd முறை போடுவதை ஸுகர், பிரசர் இல்லாதவங்க குடிக்கலாம்...

காட்டுப்பன்றி வேட்டையாடி விற்பனை செய்த 4பேர் கைது...


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் பகுதியில் காட்டுபன்றியை வேட்டையாடி விற்பனை செய்ததாக பரதராமி பகுதியை சேர்ந்த முருகேசன், மோகன் உட்பட 4 பேர் கைது. அவர்களிடமிருந்து 30, கிலோ காட்டுபன்றி இறைச்சி மற்றும் வேட்டைக்கு பயன்படுத்திய கத்தி, மற்றும் கூர்மை ஆயுதம் ஒரு ஆட்டோ மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து  குடியாத்தம்  வனத்துறையினர்  நடவடிக்கை...

அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை...


மாணவர் பிரகாஷ் சுடுமண் துறையில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். தனது துறைத் தலைவர் ரவிக்குமார் கொடுத்த நெருக்கடி தாங்க முடியாமல் மன அழுத்ததில் தற்கொலை செய்து கொள்வதாக நான்கு பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இறந்து போனார்.

கல்லுரி மாணவர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளனர்  காவல் துறை கல்லுரி வளாகத்தின்  உள்ளே மாணவர்களை அனுமதிக்க மறுக்கின்றனர்.

போராட்டம தீவிரம் அடைந்து வருகிறது...

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 43...


தியானம் - சில நடைமுறை சிக்கல்களும் காரணங்களும்..

பல வகை தியானங்களை விரிவாகப் பார்த்தோம். தியானத்தைப் பற்றி படித்தோ, ஒரு குருவிடம் பயிற்சி பெற்றோ பயிற்சி முறையைத் தெரிந்து கொள்ள முடியுமே தவிர தியான அனுபவத்தை உணர அது என்றும் போதுமானதாகாது. பயிற்சி முறைகளை அறிந்து கொள்வது வழிகாட்டிப் பலகையையோ, வரைபடத்தையோ பார்ப்பது போல. அது வழிகாட்டுமே தவிர வழிநெடுகக் கூடத் துணைக்கு வராது. அந்த இலக்கிற்குச் செல்ல வேண்டுமானால் அது காட்டிய பாதையில் பயணிக்க வேண்டும். அதற்கான விருப்பத்தையும், மன உறுதியையும் மற்றவர் தர முடியாது. இதை மனதில் இருத்திக் கொள்வது மிக முக்கியம்.

எல்லா வகை தியானங்களும் எல்லோருக்கும் ஏற்றதல்ல. அவரவர் தன்மைக்கு ஏற்ப சில வகை தியானங்கள் சிலருக்கு மிக எளிதாகவும், சில வகை தியானங்கள் மிக கஷ்டமானதாகவும் இருக்கலாம். அவை தியானம் செய்யும் ஆரம்ப நாட்களிலேயே தெரிந்து விடும். உங்களுக்கேற்ற ஒரு தியானத்தை ஏற்றுக் கொண்டு தொடர்ச்சியாக அதைச் செய்வது மிக முக்கியம். முதலில் ஒரு தியானம் நம் மனதில் வேரூன்ற ஆரம்பிக்க குறைந்த பட்சம் 21 நாட்கள் அவசியம் அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள். எனவே 21 நாட்களாவது தேர்ந்தெடுத்த தியானத்தை ஒரு நாள் கூட தவறாமல் செய்வது முக்கியம். அதன் பின் ஒரிரு நாள் விட்டுப் போனாலும் பரவாயில்லை. (அந்த ஓரிரு நாட்கள் பல நாட்களாக மட்டும் அனுமதிக்காதீர்கள்).

உற்சாகமாக தியானம் செய்ய ஆரம்பித்து அதைத் தொடர்ந்து செய்ய முடியாமல் கைவிட்டு விடும் மனிதர்கள் ஏராளம். கைவிரலிடுக்கில் விழும் மணல் குறைய ஆரம்பித்து பின் தீர்ந்து விடுவது போல் ஆரம்ப உற்சாகம் சொற்ப காலத்தில் காணாமல் போகிறது. பலரும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி தியானத்தைக் கைவிட்டு விடுகிறார்கள். சில சமயங்களில் கைவிடா விட்டாலும் தியானம் எந்திரத்தனமான ஒரு வேலை போல ஆகிறது. அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

முதலாவதாக, ஒரு மகத்தான அனுபவத்திற்கு தயாராகி நாம் தியானம் செய்ய ஆரம்பிக்கிறோம். பலரும் அதைப் பற்றிப் படித்தும் கேட்டும் நிறைய எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பிக்கிற தியான அனுபவம் நாம் எதிர்பார்க்கிற விதத்திலும், எதிர்பார்க்கிற வேகத்திலும் நமக்குக் கிடைப்பதில்லை. அதனால் அலுப்பு தட்ட ஆரம்பிக்கிறது. சிலர் வேறு குருவைத் தேடிப் போவதுண்டு. வேறு சில பயிற்சி முகாம்களை நாடிப் போவதுண்டு. அங்கும் ஆரம்பத்தில் ஒரு உற்சாகம், ஒரு எதிர்பார்ப்பு பின் ஏமாற்றம், அலுப்பு என்று சரித்திரம் தொடர்கிறது. யதார்த்தத்திற்கு ஒத்து வராத நம் எதிர்பார்ப்புகளே தியானம் தொடர முடியாமைக்கு முதல் காரணம் என்று சொல்லலாம்.

இரண்டாவது, தியானத்திற்குப் பொருத்தமான சூழ்நிலைகள் பயிற்சி இடங்களில் கிடைக்கின்றன. அங்கு தியானத்தின் மூலம் நல்ல அமைதி கிடைப்பது போல பயில்பவர்கள் உணர்கிறார்கள். ஆனால் தேனிலவு முடிந்து இயல்பு வாழ்க்கையைத் தொடங்கும் போது சில கசப்புகளையும், சிக்கல்களையும் உணர ஆரம்பிக்கிற தம்பதியர் போல தினசரி வாழ்விற்குத் திரும்பும் போது தியானப் பயிற்சியாளர்களும் தியானத்திற்கு அனுகூலம் இல்லாத சூழ்நிலையை உணர ஆரம்பிக்கிறார்கள். எனவே தான் சிலர் ”நான் அங்கு சென்று பத்து நாட்கள் தியானம் பயின்ற போது புதிய மனிதனாக உணர்ந்தேன், புத்துணர்ச்சியுடன் திரும்பினேன், ஆனால் நாளாக நாளாக பழையபடியே ஆகி விட்டேன்” என்று சொல்லும் நிலை ஏற்படுகிறது.

மூன்றாவது, சடங்குகளிற்கு அளவுக்கதிக முக்கியத்துவம் தந்து சத்தான விஷயங்களை புறக்கணிப்பது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் தியானம் காலக் கணக்கிலேயே முழுவதும் அளவிடப்படுவதும், மதிப்பிடப்படுவதும். நான் தினமும் அரை மணி நேரம் தியானம் செய்கிறேன் என்று சொல்லி பெயருக்கு ஆண்டாண்டு காலம் தினமும் அரைமணி நேரம் தியானத்திற்காக அமர்ந்தாலும் பயன் இருக்காது. தொடர்ந்து தியானத்தில் ஈடுபடுவது என்பது வேறு, தொடர்ந்து தியானம் என்ற பெயரில் எந்திரத்தனமாய் அமர்ந்திருப்பது என்பது வேறு. தியானம் வெறும் சடங்காகும் போது அர்த்தமில்லாததாகப் போகிறது.

ஆரம்ப காலங்களில் அரைமணி நேரம் தியானப் பயிற்சி செய்வோமானால், அதில் ஒருசில வினாடிகள் மனம் தியானத்தில் லயிக்குமானால் அதுவே பெரிய வெற்றி. உண்மையில் தியானம் வெற்றிகரமாக கைகூடினால் மனதில் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒருவித அமைதி கண்டிப்பாக உணரப்படும். அது தொடருமேயானால் உங்கள் முகத்தை மாற்றும். உங்கள் பேச்சை மாற்றும். நீங்கள் வாழ்க்கையைப் பார்க்கும் விதத்தை மாற்றும். நீங்கள் செயலாற்றும் முறையை மாற்றும். நீங்கள் அறிகிறீர்களோ இல்லையோ உங்களிடம் பழகுபவர்கள் அதை உங்களிடம் உணர ஆரம்பிப்பார்கள்.

தியானத்தில் நீங்கள் வேரூன்றிய பின் தியானத்தின் போது நீங்கள் அனுபவித்த அமைதி உங்கள் தினசரி வாழ்க்கையிலும் தொடரும். காலப் போக்கில் நீங்கள் எங்கும், எப்போதும் உங்கள் விருப்பப்படி தியான நிலைக்குள் புக முடியும் என்ற நிலை ஏற்படும். ஓஷோ சொல்வது போல சந்தையில் கூட நீங்கள் தியானத்தில் மூழ்க முடியும்.

ஆனால் இதெல்லாம் நிகழ்வது ஒரு நேர்கோடு போன்ற சீரான, தொடர்ச்சியான முன்னேற்றத்தில் அல்ல என்பதை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். சில நாட்கள் நல்ல முன்னேற்றம் இருந்து திடீரென்று ஓரிரு நாட்கள் ஆரம்பத்தில் இருந்ததை விட மோசமான சறுக்கலை ஒருவர் சந்திக்க நேரிடலாம். மன அமைதி காணாமல் போய் தியானத்திற்கு எதிமாறான உணர்ச்சிக் கொந்தளிப்பை உணரலாம். தியான நிலைக்கே மனம் போகாமல் போகலாம். அதைக் கண்டு ஒருவர் பின்வாங்கி விடக்கூடாது.

உள் மனதில் உறங்கிக் கிடந்த ஏதோ ஒரு குப்பையை மனம் மேல் தளத்திற்கு எறிந்திருக்கின்றது என்று அர்த்தம். அதைக்கவனியுங்கள். அதற்கான காரணம் உங்களுக்குள்ளே இருந்திருக்கின்றது என்பதை அங்கீகரியுங்கள். விருப்பு வெறுப்பில்லாமல் ஆராயுங்கள். பின் அது குப்பை என்பதை உணர்ந்து, தெளியுங்கள்.

இதை ஒழுங்காகச் செய்தீர்களானால் இனி அந்தக் குப்பை திரும்பி வந்து உங்களைத் தொந்திரவு செய்யாது. மறுபடி முன்னேற்றம் தொடரும். திடீரென்று இன்னொரு நாள் இன்னொரு குப்பை மேலே வரலாம். இதுவும் சறுக்கல் போல் தோன்றலாம். முதல் குப்பையைக் கையாண்டது போலவே இதையும் நீங்கள் கையாண்டு விலக்கி விடுங்கள். உள்ளே ஆழத்தில் உள்ள குப்பைகள் முழுவதுமாக நீக்கப்படும் வரை இந்த அனுபவங்கள் நிச்சயமாய் தொடரும்.

ஆனால் தியானத்திற்கான பயணத்தில் இது போன்ற அனுபவங்கள் சகஜம் என்பதைப் புரிந்து கொண்டு தியானத்தைத் தொடருங்கள்.

விடாமுயற்சியோடு தொடர்ந்தால் பின் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலன்கள் அளவிட முடியாதவை.

இனி அடுத்த கட்டத்திற்குச் செல்வோம்....

சக்கரை நோய் க்கு மருந்து...


பூணூல் போட்டக் குயவர்...


வேறு எந்த சாதியையும்..

அவன்-இவன்,
அந்த பய -இந்த பய,
அந்த புத்தி - இந்த புத்தி,
அதுக - இதுக
என்று பேசினால் பிற்போக்கு..

ஆனால்,

பார்ப்பனர்களை..

பாப்பான்,
பாப்பாரப்பய,
பார்ப்பன புத்தி, குடுமி,
பூணூல்,
அவாள்,
என்றெல்லாம் பேசினால் அது மட்டும் முற்போக்கு..

இப்பொது முற்போக்கிற்கு வந்த சோதனையைப் பாருங்கள்..

1837 ல் வரையப்பட்ட இந்த ஓவியம் பூணூல் போட்டபடி ஒரு குயவர் பானை செய்யும் காட்சியை கண்முன் நிறுத்துகிறது.

"Seventy-two Specimens of Castes in India" எனும் புத்தகத்தில் இது இடம் பெற்றுள்ளது.

நம்புங்க மக்களே..

பூணூல்னா பார்ப்பான்..

ஒரு பூணூல் ஒரு கோடி ரூபாய்..

அது போட்டவன் உயர்சாதி..

சமஸ்கிருத ஆரியனின் அடையாளம்..

பூணூல்..பூணூல்.. பூணூல்...

இலுமினாட்டி இரகசியம் - ஸ்பைடர் படத்தின் பதிவு - 2...


ஹைப்போ தைராய்டு...


ஹைப்போ தைராய்டு, மெட்டபாலிசம் குறைவாக உள்ளவர்கள், உடல் பருமன், ஓபேசிட்டி அதிகரித்தவர்கள் கொள்ளை முளைக்க வைத்து கொள்ளு சுண்டல், கொள்ளு சூப், கொள்ளு தோசை, அடை, சப்பாத்தி செய்யலாம்.

மூட்டுவலி, எலும்பு பலக்குறைவு, தொப்பை சீராகும். சாத்துக்குடி, மாதுளை, திராட்சையை அவ்வப்போது சாப்பிடவும்...

நீதிமன்ற வளாகத்திலேயே பின்பற்றப்படாத நீதிமன்றத்தின் பேனர் உத்தரவு...


கோவை நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி உயிருடன் இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பேனர்கள்...

ஆழ்மனம் என்றொரு வேலைக்காரன்...


பூமியில் வசிப்பதற்கு பெரிய முயற்சியோ, நம்பிக்கையோ துணிச்சலோ தேவையில்லை. ஏனெனில் நம் பூமி எவ்வித பாகுபாடுமின்றி அனைவருக்கும் இடம் கொடுக்கும். ஆனால் இந்த பூமியில் வாழத்தான் நாம் பெரும் முயற்சி மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம்தான் முடிவு செய்ய வேண்டும், நாம் வசிக்கப் பிறந்தோமா? அல்லது வாழப் பிறந்தோமா? என்று.

நல்வாழ்வு வாழ வேண்டும் என்று முடிவெடுத்தபின் நாம் செய்ய வேண்டியது ஒரு சிறு விஷயம்தான் மாற்றம். அத்தகைய மாற்றம் நம்மில் இருந்தும், நம் அன்றாட செயல்களிலிருந்தும் ஆரம்பமாக வேண்டும். மாற்றங்களை விரும்பாத எவரும் மகத்தான வாழ்வு வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. மாறாத, மாறவிரும்பாத எந்த உயிரினமும் அதன் சந்ததியை பூமியில் விட்டுச் செல்லவில்லை. இதை நம்பினால் பூமியில் இனிய வாழ்வு வாழலாம்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும், ஒவ்வொரு நிமிடமும் ஏன் ஒவ்வொரு நொடியும் எஞ்சியுள்ள வாழ்வை ஆனந்தமாய் வாழ முடிவெடுக்கும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.

சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு கோள்களில் (புளூட்டோ குள்ளக்கோள்) பூமி மட்டுமே ஜீவராசிகள் வாழத் தகுதி வாய்ந்தது. பூமியானது எந்தப் பிடிமானமுமின்றி தன்னைத் தானே சுற்றிக்கொண்டும், சூரியனையும் சுற்றி வருகிறது.

ஆனால், பூமி சுற்றுவதை உணர முடிவதில்லை. நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் அது உண்மை. அதேபோல் நம் ஒவ்வொருவரிடமும் சக்தி உள்ளது. இதை உணர முடிவதில்லை. ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும். ஏனெனில் இதுவும் உண்மை.

சூரியன் தன் ஈர்ப்புச் சக்தியினால் எட்டு கோள்களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்த சக்தி சூரியனுக்கு எங்கிருந்து வந்தது? சூரியனுக்கு அச்சக்தி கொடுத்த பிரபஞ்சம்தான். நம் அனைவருக்கும் சக்தியை அனுதினமும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பிரபஞ்சத்தைப் பற்றி முழுவதுமாக அறிந்தவர்களில்லை. எனினும் சிறு துளிகள். நாம் உயிர் வாழும் பூமி போன்ற பல கோடிக்கணக்கான கோள்கள் அடங்கிய பால்வெளி மண்டலமும் கோடிக்கணக்கான விண்மீன்கள் தொகுப்பும் சேர்ந்தது அண்டம் ஆகும். பல கோடிக்கணக்காக அண்டங்களின் தொகுப்பே, பேரண்டம்  பிரபஞ்சம் எனப்படுகிறது. மனிதனின் கற்பனைக்கும் எட்டாத ஒன்றுதான் பிரபஞ்சம்.

கற்பனையே செய்ய முடியாத பிரபஞ்சத்தின் ஒரு சிறு பகுதி தான். நாம் உயிர் வாழும் பூமி. இந்த பூமியை இயக்கிக் கொண்டிருப்பது பிரபஞ்ச சக்தி ஆகும். இதே பிரபஞ்ச சக்திதான் பூமியில் வாழ நினைப்பவர்களுக்கு வாழ்க்கையை கொடுக்கிறது. இருக்க நினைப்பவர்களுக்க வசிக்க இடம் கொடுக்கிறது. இந்த பிரபஞ்ச சக்தியானது நம் ஆழ்மனம் மூலமாக நம் ஒவ்வொருவருள்ளும், ஒவ்வொரு நொடியும் அளப்பரிய சக்தியை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஆழ்மனம் என்ற ஒன்று தனியாக இல்லை. மனித மனம்தான் அறிவுமனம்  ஆழ்மனம் என்று இருவிதமாக வேலை செய்து கொண்டு இருக்கிறது.

உருவமே இல்லாத ஆழ்மனம்தான் இந்த உலகத்தை உருவாக்குகிறது. அடையாளம் காண முடியாத ஆழ்மனம்தான் நம்மை இந்த உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. அறிய முடியாத ஆழ் மனம்தான் நம் வாழ்க்கையில் அற்புதத்தை நிகழ்த்துகிறது.

இதுவரை நாம் வாழ்ந்த நாட்களுக்கும், இனி வாழும் வாழ்க்கைக்கும் மூலதனம் நம் ஆழ்மனம் ஆகும். இன்று நாம் வாழும் வாழ்க்கை நமக்கு பிடித்திருந்தாலும் பிடிக்காதிருந் தாலும் அது நாம் தெரிந்தோ, தெரியாமலோ நம் மனம் விரும்பியது தான்.

ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்குகிறது? ஏன் சிலருக்கு தொட்டதெல்லாம் சுடுகிறது? ஏன் ஒரு சிலருக்கு தொட்டதெல்லாம் தொலைந்தே போகிறது? இப்போது இதற்கு காரணம் உங்களால் சொல்லமுடியும். நீங்கள் யூகிப்பது முற்றிலும் சரியே. ஆம். எல்லாவற்றிற்கும் காரணம் நம் எண்ணங்களே. எதை நாம் விரும்பி நினைக்கிறோமோ அதுதான் நடக்கும். நாம் நினைக்கும் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும் சக்தி நம் ஆழ்மனத்திற்கு உண்டு.

நாம் நாள் முழுவதும் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம். காரணம் நம் ஆழ்மனம். நாம் விரும்பிய அனைத்தையும் நம் கண்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு விசுவாசமுள்ள வேலையாள்தான் நம் ஆழ்மனம்.

நாம் விரும்பியதை அடைய ஒரே வழி, நம் எண்ணங்களை சீர் செய்வதுதான். அந்த எண்ணங் களுக்கு உருவம் கொடுப்பதுதான்.

ஏனெனில் நம் ஆழ்மனத்திற்கு வார்த்தைகள் தெரியாது. நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்துப்பபார்க்கத் தெரியாது. எண்ணத்தை வலிமைப்படுத்துவதுதான் ஆழ்மனதை வசியப் படுத்த ஒரே வழி.

ஓர் எண்ணத்தை மனதில் விதைத்து, அதை அனுதினமும் நினைத்து, அந்த எண்ணத்தை நம் ஐம்புலன்களாலும் உணர்ந்து வாழ்ந்தால் அந்த எண்ணம் வண்ணமாவது திண்ணம்...

தமிழின துரோகிகள்.. விசிக திருமா vs பாஜக தமிழிசை...


சென்னையில் 1000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள மால் ஒன்று. அதை திராவிடன் ஒருவருக்கு வாங்கிக் கொடுக்க திருமாவளவனும் , மார்வாடி ஒருவருக்கு வாங்கிக் கொடுக்க தமிழிசையும்  முயற்சி செய்ததில் ஏற்பட்ட நேரடி மோதலின் காரணமாக பல விஷயங்கள் வெளியில் வந்து விட்டது.

இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் வெளியில்  பேசி விட்டார்கள்.

நிலங்களை மிரட்டி கையகப்படுத்துவது தான் திருமாவளவனின் முழுநேர வேலை என்று திருமாவளவனின் பெயரை நேரடியாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லியே தமிழிசை பேட்டி கொடுத்தார்.

அதற்கு திருமாவளவன் பதில் சொல்லாவிட்டாலும், அவரது கட்சியினர், தமிழிசை வட சென்னையில் பாதி இடங்களை  வளைத்து போட்டு விட்டார் என்று புகார் சொல்லி, தமிழிசையின் வீட்டின் முன் போராட்டங்கள் நடத்தி அவரது கொடும்பாவியை எரித்து மகிழ்ந்தார்கள்.

மொத்தத்தில் இருவருக்கும் இடையிலான மோதலே இவர்கள்  யார், எப்பேர்ப்பட்ட கிராதகர்கள் என்பதை  மக்களுக்கு அடையாளம் காட்டி விட்டது.

1000  கோடி பெறுமானமுள்ள கட்டிடம் என்றால், 2  சதவீத கமிஷனாக எப்படியும் 20  கோடி கிடைக்கும். இதற்காக நடந்த நேரடி மோதலில்  இவர்கள் இனங்காணப்பட்டு விட்டார்கள்.

இவர் இந்தப்பக்கம், அவர் அந்தப்பக்கம் என்று வேறுவேறு திசைகளில் இவர்கள்  கொள்ளையில் ஈடுபட்டிருந்தால் இவர்களை  பற்றி நமக்கு தெரிய வந்திருக்காது.

ஒரே வியாபாரத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட நேரடி மோதல் இவர்களின் நமக்கு உணர்த்தி விட்டது...

இலுமினாட்டிகள் ஒரு முன்னறிமுகம்...


உலகை அடிமையாக்க துடிக்கும் அடிமைகள் பற்றிய ஒரு சின்ன அறிமுகம்..

இலுமினாட்டிகள், ஜல்லிகட்டு போரட்டத்திற்கு பிறகு நம்மில் சிலருக்கு மட்டுமே இந்த வார்த்தை புதிதாக இருக்கும் என்று கருதுகிறேன். இன்று உலகில் நடக்கும் 90% அதிகமான பிரச்சனைகளை திரைக்கு பின்னால் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் இரகசிய அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த இலுமினாட்டிகள்.

தொடக்கம்: சற்றேறக் குறைய சுமார் 5000 வருடங்களுக்கு முன் பேரரசர் சாலமனின் (pbuh) ஆட்சி காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட ஆற்றலின் மீது கொண்ட கர்வத்தால் தன்னை வெல்ல யாருமில்லை என்று ஒருவன் எண்ணிக் கொண்டிருந்தான் (A1 13). அவன் மனித இனத்தை சேர்ந்தவன் இல்லை. இந்திய மரபு வழி கலாச்சாரம் ராக்ஷ்சர்கள் என்று அடையாளப்படுத்தும் ஒரு (ஜின்) இனத்தை சேர்ந்தவன்.

இந்த இனத்தை சேர்ந்தவர்களைத் தான் நாம் வேற்றுகிரக வாசிகள் என்று அழைக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

அவனது கர்வத்தினால் அவனுக்கு ஏற்பட்ட பேராசையால் அவன் இந்த பிரபஞ்சம் முழுவதையும் அடைக்கி ஆள வேண்டும் என்று எண்ணத்துடங்கினான். 

இறைவன் பேரரசர் சாலமனுக்கு (pbuh) முழு மனித ஆற்றலையும் உணர்ந்து அதை பயன்படுத்தும் வழிமுறைகளை கற்றுக் கொடுத்திருந்தான். அதன் மூலம் அவர் பூமியில் இருந்த (மனித, ரக்ஷ்ச, பறவை, விலங்கு, காற்று என) அனைத்து இனங்களின் மீதும் அதிகாரம் செலுத்தி ஆட்சி புரிந்தார்.

இவரது ஆட்சி, A1 13 கு தனது பேராசையை செயல்படுத்தி வெற்றியடைய முடியும் என்ற எண்ணத்திற்கு வழுசேர்த்தது.

எனவே அவன் தனது திட்டங்களை செயல்படுத்த தொடங்கினான். அதேகால கட்டத்தில் பாபிலோனில் வாழ்ந்த ஒருவனை (தஜ்ஜால்) இவன் சந்தித்தான், அந்த மனிதனும் அரசர் தாவூதின் (pbuh) குடும்பத்தை சேர்ந்தவன் தான், ஒருவகைக்கு பேரரசர் சாலமனுக்கு (pbuh) சகோதர முறை. பேரரசர் சாலமனை (pbuh) போல் அவனும் (ஓரளவுக்கு) மனித ஆற்றலை உணர்ந்திருந்தான், அதே நேரத்தில், அவனுக்கு பேரரசர் சாலமனுக்கு (pbuh) வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தின் மீது பெரும் பொறாமை இருந்தது.

அதை அறிந்து கொண்ட A1 13 அவனோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான், அதன் படி முழு மனித ஆற்றலை உணர்ந்து பயன்படுத்தும் வழி முறைகளை இவன் அவனுக்கு கற்றுக் கொடுத்து பூமியில் உள்ள அனைத்து இனங்களின் மீதும் ஆட்சி செலுத்தும் அரசனாக அவனை நியமிப்பதாகவும், அதற்கு பகரமாக அவன் தனக்கு கட்டுபட்டவனாக இருந்து தனது இலக்கை அடைய போராட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டான்.

பிறகு அவனுக்கு மனித உடலை சறியாக பயன்படுத்தும் வழிமுறைகளை கற்றுக் கொடுத்தான். தஜ்ஜால் முன்பைவிட இப்போது அதிக அளவில் மனித ஆற்றலை பயன்படுத்தக் கூடியவனாக இருந்தான்.

இந்த நிலையில் வேறொரு காரணத்திற்காக A1 13 யின் குடும்பத்தார்கள் மற்றும் அவனது இனத்தின் மீது நடத்தபட்ட சிறைப்பிடிப்பில் பேரரசர் சாலமனால் (pbuh) இவன் எதேச்சையாக சிறை பிடிக்கப்பட்டான். அவசரபட்டு எதையாவது செய்யப்போய் அது தனது இலக்கை அடைவதை விட்டும் தன்னை தடுத்துவிடலாம் என்பதால் அவன் எதுவும் செய்யாமல் பேரரசர் சாலமனுக்கு கட்டுபட்டவன் போல் அமைதியாய் இருந்தான்.

ஆனால் முன்பை விட தனது ஆற்றலை அதிகம் உணர்ந்திருந்த தஜ்ஜாலின் பொறாமை அவனை அமைதியாக இருக்க விடவில்லை. அவன் பேரரசர் சாலமனுக்கு எதிராக கலகம் செய்யத் தொடங்கினான்.

தானே உண்மையான கடவுள் என்று அவன் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய தொடங்கினான். அதனால் பேரரசர் சாலமன் (pbuh) அவனோடு போர் செய்து அவனை வீழ்த்தினார்.

அவர் அவனை கொல்லவே விரும்பினார், என்றாலும் அது முடியாமல் போகவே, (கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள) ஒரு தீவில் அவனை சிறை வைத்தார்.

என்றாவது ஒருநாள் இவன் இந்த சிறையை உடைத்தக் கொண்டு மக்களுக்கு மத்தியில் வெளியாகுவான் என்று பேரரசர் சாலமன் (pbuh) கருதினார்.

எனவே, அவர் அவனது நெற்றியில் காஃப் ஃபே ரே அதாவது மறுப்பாளன் என்று வாள் கொண்டு எழுதினார், அவன் வெளிப்படும் போது மக்கள் அதைக் கொண்டு அவனை அடையாளம் கண்டு கொள்வார்கள்.

பேரரசர் சாலமனின் (pbuh) மரணத்திற்கு பிறகு விடுதலை அடைந்த A1 13 மிகுந்த சிரமத்திற்கு பிறகு தஜ்ஜால் சிறை வைக்கப்பட்ட அந்த தீவை கண்டு பிடித்தான்.

அவன் எவ்வளவோ முயன்றும் அவனால் தஜ்ஜாலை விடிவிக்க முடியவில்லை.

(பிற்காலத்தில் அவனை விடுவிப்பதற்கான சரியான கால சூழலை பூமியில் ஏற்படுத்திய பிறகு அந்த சங்கிலியை உடைத்துக் கொள்ளலாம் என்று தன் முயற்சியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறான் என்று சில ஆய்வுக்கு குறிப்புகள் சொல்கின்றன.).

பிறகு அவன் அரசர் தாவூதின் குடும்பத்தார்களில் தஜ்ஜாலை போலவே பேரரசர் சாலமனுக்கு (pbuh) வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தின் மீது பொறாமை கொண்ட 13 நபர்களை தேர்ந்தெடுத்தான்.

பேரரசர் சாலமனின் (pbuh) ஆட்சி கட்டிலுக்கு கீழ் பொதைக்கப் பட்டிருந்த ஆட்சி குறிப்புகளை திருடி அதற்கு இடையிடையில் சூனியத்திற்கான (காபாலா) மந்திரங்களை எழுதி இதன் மூலம் தான் சாலமன் (pbuh) ஆட்சி நடத்தினார் என்று அவர்களை நம்ம வைத்தான்.

இவற்றை முயற்சி செய்தால் தஜ்ஜாலை விடுதலை செய்து அவனது தலைமையில் நீங்கள் இந்த பூமி முழுவதையும் ஆளலாம் என்று பேராசை காட்டினான்.

இவ்வாறாக 13 அடிமைகள் கொண்டு தொடங்கப்பட்ட இந்த குழுவும், இந்த குழுவையும் இந்த குழுவின் மூலம் உலகையும் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கும் அந்த 13 பேரின் இரத்தவழி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் இலுமினாட்டிகள் என்று அறியப்படுகிறார்கள்.

நோக்கம்:

இலுமினாட்டிகள் இந்த வார்த்தைக்கு, ஒளி பெற்றவர்கள் அல்லது ஞானம், முக்தி அடைந்தவர்கள் என்று பொருள், தாங்கள் மட்டுமே அதீத ஞானம் பெற்றவர்கள் என்றும் தாங்கள் மட்டுமே உலகை ஆள தகுதிவாய்ந்தவர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒரு இரகசிய குழுவை சேர்ந்த 13 குடும்பத்தார்களை குறிப்பதற்கு இப்போது இந்த சொல் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருகிறது.

இவர்களது நோக்கம் என்னவென்பதை இவர்களது பாஷையில் சொல்வதென்றால் ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். The New World Order (NWO) அதாவது புதிய உலக கட்டளை. புரியும் படியாக சொல்ல வேண்டும் என்றால், பூமி முழுவதையும் ஒரே தலைமைக்கு கீழ் அதாவது தங்களது அரசனது ஆட்சி அதிகாரத்திற்கு கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே இவர்களது நோக்கம், இதையே இவர்கள் NWO என்று அழைக்கின்றனர்.

கடந்த 5000 வருடங்களாக தங்களது நோக்கத்தில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக பெரும்பாடுபட்டு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீண்ட காலமாக இவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் ஒரு மகா யுத்தம், அதில் தங்களின் அரசனான தஜ்ஜாலையும் அவனது கடவுளான A1 13யையும் எதிர்க்கும் மக்களை முழுமையாக அழித்து விட்டு, மக்கள் தொகையை கணிசமாக குறைத்து விட்டு, பிறகு தஜ்ஜாலை விடுவித்து பூமி முழுவதையும் ஒற்றை தலைமைக்கு கீழ் கொண்டு வந்து இறுதியாக A1 13ஐ இந்த பிரபஞ்சத்தின் கடவுளாக ஆக்க வேண்டும் என்பதே இவர்களின் ஒரே நோக்கம்.

அந்த மகா யுத்தத்தில், இலுமினாட்டிகள் வென்றால் எஞ்சி இருக்கும் மக்களை அடிமைப்படுத்தி ஆள தஜ்ஜால் விடுவிக்கப்பட்டு அழைத்து வரப்படுவான்.

நாம் வென்றால் யுத்தத்தின் போக்கை கட்டுப்படுத்தி தனக்கு சாதகமான ஒரு சூழலை உருவாக்க (கோபத்தில்) அவனே சங்கிலிகளை உடைத்துக் கொண்டு வெளியாக்குவான்.

ஆக, யார் வென்றாலும், தோற்றாலும் யுத்தத்தின் முடிவில் தஜ்ஜால் வெளிப்படுவான்.

துருவ மாற்றக் காலத்தில் தான் அவன் வெளிப்பட வேண்டும் என்ற A1 13யின் திட்டப் படி அந்த மகா யுத்தம் துருவ மாற்றக் காலத்தை கணக்கிட்டே நடத்தப்படும்.

பி.கு: இலுமினாட்டிகளின் தொடக்கம் பற்றியும் A1 13 பற்றியும் இங்கு நான் குறிப்பிட்டிருக்கும் விஷயங்களுக்கு மதரீதியான 100% நேரடி ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

மதரீதியான குறிப்புகளையும், மதங்களுக்கு வெளியில் இருந்து கிடைக்கும் குறிப்புகளையும் ஒருங்கிணைக்கும் பொது கிடைத்த தர்க்க ரீதியான வடிவமைப்பையே நான் உங்கள் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறேன். இவர்களின் தொடக்கம் பற்றிய எனது குறிப்புகள் 80% ஆதாரப் பூர்வமானதும் உறுதி செய்யப்பட்டதுமே தவிர 100% அல்ல. இறைவன் நாடினால் கூடிய விரைவில் 100% வெளிப்படையான ஆதாரங்கள் கிடைக்கும்...

தகவல் - musthafays...

சில சிகிச்சை முறைகள்...


தமிழ் மருத்துவ முறைப்படி இருபாலருக்குமுரிய சிகிச்சை முறைகள்...

மனிதகணம் எனப்படும் மானிட மருத்துவம்.

தேவகணம் எனப்படும் தெய்வ மருத்துவம்.

ராட்சச கணம் எனப்படும் நிசாசர மருத்துவம்.

என இவை முப்பெரும் பிரிவாகக் கூறினாலும், அவற்றின் உட்பிரிவுகளாக வேறு சிலவற்றையும் கூறலாம்.

பொதுவாக வேர்பாரு, தழைபாரு, மிஞ்சினக்கால் மெல்ல மெல்ல பற்ப செந்தூரம் பாரு என்பதற்கிணங்க மூலிகை மருந்துகளால் தீராப் பிணிகளை -பற்ப செந்தூரங்களினாலும், இவ்விரு முறைகளால் நீங்காப் பிணிகளை அறுவை, அக்கினி,காரம் இவற்றைக் கொண்டு நீக்க வேண்டுமெனவும் அறியவும்.

மானிட மருத்துவம்: இது தாவரங்களினாலான குடிநீர், சூரணம்,மணப்பாகு, இளகம், மாத்திரை, சுரசம், பிட்டு, வடகம், போன்றவற்றால் சிகிச்சை செய்வதாகும்.

தேவ மருத்துவம்: சகல பிணிகளும் இயற்கை, செயற்கை காரணங்களினாலும், சில துர் தேவதைகளினாலும் - சில பூர்வ சென்ம தீவினைகளினாலும் ஏற்படுகிறது.

குட்டம், சுவாசகாசம், சயம் போன்ற கொடிய பிணிகள், முற்பிறவியின் பயனோடு இணைந்தும், பிறவி இலக்கினம் - நட்சத்திரம் இவற்றின் அடிப்படையிலும் ஏற்படுவதாகும்.

இத்தகைய நோய்களுக்கு மருந்துகள் மட்டுமின்றி, தேவதைக் குற்ற நீக்க முறைகளும் தேவைப்படும்.

எனவே இது, பூர்வ கருமானு சாரத்தையே காரணமாகக் கொண்டு - தாது சீவ இனங்களாகிய இரசம், கெந்தி, பாடாணம், உப்பு, உலோகம், முத்து,  பவளம் போன்றவைகளினாலான பற்பம், செந்தூரம், சுண்ணம்,கட்டு, களங்கு, குளிகை, திராவகம், செயநீர் போன்ற உயர்ந்த மருந்துகளால் சிகிச்சை செய்வதாகும்.

இராட்சச மருத்துவம்: இது கத்தி, கத்திரி,  குறடு, சலாக்கை, போன்ற கருவிகளைக் கொண்டு அறுவை, கீறல், சுட்டிகை, குருதி வாங்கல், கொம்பு கட்டல், அட்டைவிடல், போன்ற முறைகளில் சதையை அறுத்து செய்யும் சத்திர சிகிச்சையாகும்.

இதை ஏன் பதிவு செய்கிறேன் என்றால் நமது குருமார்களாகிய சித்தர்கள் முப்பது பிரிவுகளாக பிரித்து மருத்து முறைகளை வகுத்துள்ளார்கள்.

உலகில் உள்ள  அனைத்து மருத்துவ முறைகளும் சித்தாவிலிருந்து பிரதியெடுக்கப்பட்டவை என்பதற்கே...

இந்தியாவும் மக்கள் தொகை அழிப்பும்...


மேலதிக தகவல்களுக்கு : https://scroll.in/article/852180/india-has-imported-millions-of-tonnes-of-gm-food-products-in-violation-of-food-safety-laws

ஞாபக சக்தி பெருக மணலிக்கீரை...


ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம் ஆகும்.

மேலும் மூளைக்குத் தேவையான சத்து குறைவதாலும் இப்பிரச்சனை ஏற்படுகிறது.

இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை மசியல் செய்து சாப்பிட வேண்டும்...

இலுமினாட்டி இரகசியம் - இந்த ஸ்பைடர் படத்தில் வேறு என்னவெல்லாம் கூறியுள்ளார்கள் என்று இனி பார்ப்போம்...


தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்...


மலையாளிகள் கொண்டாடும் அரிசி...

சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்...

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள் தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம்.

இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது..

கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது.

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.

அதனால் தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.

இந்தியாவில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம்.

இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பது தான் உண்மை..

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.

நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்.

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch)..

இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்து விட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்.

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.

மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காண முடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், பொசுபரசு போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன. தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.

இதையெல்லாம் விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத் துறையில் இப்போதும் லோவாசு (ஸ்)டேடின் (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.

செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாசு (ஸ்)டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள்.

சிவப்பு பூஞ்சண அரிசி (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், சுவாசகாசம் மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து...

திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர் ?


பட்டு சேலைகள் அணிவதன் விஞ்ஞான ரகசியம்..

தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன.

நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று.

அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது.

இப்பொழுதாவது இதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன் இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் பதிப்புரிமை (copyright) வாங்கி விடும்.

பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு.

அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின் சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும்.

திருமண வீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர்.

அதில் யார் எப்படி என்று தெரியாது.

எனவே தான் மணப்பெண்ணிற்கும் மணமகனுக்கும் அரோக்கியமான வாழ்வு வேண்டும்.

தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே அணிகின்றனர்.

இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது.

மேலும் திருமண பெண்ணிற்கு அணிவிக்கும் நகைகளும் உடலியல் காரணங்களுக்காகவே.

தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங்களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும்.

எதற்கு தாலிதங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா?

மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங்களுக்காகவே..

இதில் வருத்தம் அளிக்கும் விசயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை.

கோவில்களுக்கு செல்லும் பொழுது ஏன் அணிகிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே.

கோவில்களில் சென்றால் தெரியும் எவ்வளவு இடம் இருந்தாலும் கற்பக்ரகத்தின் வாயிலாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங்களில் இருந்து வந்து கொண்டே இருக்கும்.

மேலும் கோபுரகலசங்களும் இடி தாங்கியாகவே செயல் பட்டு வருகின்றன.

பிறகு ஏன் இடி தாக்குகின்றது என கேட்கின்றீர்களா?

முறையான பராமரிப்பு அற்ற காரனங்களுக்ககவே அவ்வப்பொழுது அப்படி நடக்கின்றது.

முழுமையான ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்கள் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளில், சுற்று வட்டார பகுதிகளில் இடி தாகும் அபாயம் இல்லை.

சும்மாவா சொன்னாரு பாரதியார் கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று?

இவை எதுவும் தெரியாமல் பகுத்தறிவு பகலவர்கள் நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டு தானும் நாசமாவதுடன் மற்றவர்களையும் கெடுக்கின்றனர்...

சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி...


எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும்.

பயிற்சியும் செய்முறையும்...

மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்றுவரைந்து கொள்ளவும்.

அதை வடக்கு தெற்கு முகமாக  வரைந்து கொள்ளவும்.

படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும். நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது.

மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.

தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு.

நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm).

வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம்.

நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.

நடைப்பயிற்சி முடியும் வரை மெளனமாக நடக்க வேண்டும்..

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும்.

15 வது நிமிட முடிவில் இரு நாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக் காற்றையும் உணரலாம்.

பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும்.

இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

பலன்கள் இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம்.

70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்..

சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும்.

குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது.

இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது.

மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் புள்ளி(Point) அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது.

செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியை
செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும்.

அளவான நடைப் பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

இரண்டு வேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.

முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம்.

தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், சுவாசகாசம் (Asthma), கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன.

நல்ல முறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். வாழ்க வளமுடனும் நலமுடனும்...

கப்பற்படையே வைத்து உலகையே ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழப்பேரரசு...


கப்பலோட்டி உலகை வென்ற இராசராச சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்.

இராசராச சோழன் என்றாலே காலாற்படை முதல் யானை படை வரை நடுநடுங்கிப் போகும். வானுயர் வெற்றிகளை முடிசூடிய மாமன்னன் என்றால் சாதாரணமா என்ன.

பண்டையக் காலத்திலேயே கப்பற்படை வைத்து உலகை ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழப்பேரரசு.

ஆயிரம் வருடம் ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல, ஆயிரம் வருடங்களாக கப்பற்படையை வைத்து அரசு நடத்தியப் பெருமை உலகிலேயே சோழ பேரரசிற்கு மட்டும் தான் இருக்கிறது.

கனம்..

இந்த கப்பற்படையில் நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ஒன்று பிரிக்கப்பட்டிருக்கும், அவர்களை கனம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களை தலைமை தாங்கி இருந்தவரை, கனாதிபதி என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.

கன்னி..

தமிழில் கன்னி என்பதற்கு இளம் மங்கை என்று மட்டும் பொருள் அல்ல, பொறி என்ற மற்றொரு பொருளும் இருக்கின்றது.

எதிரிகளை பொறி வைத்துப் பிடிக்கும் கப்பற்படை வீரர்களை, கன்னி என்று அழைத்திருக்கின்றனர். இவர்கள் தான் சிறப்பு பணியில் நியமிக்கப் படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களை நிர்வாகிப்பவர், கலபதி என்று அழைக்கப்படுவார்.

ஜதளம் அல்லது தளம்..

கப்பற்படையில் சக்தி வாய்ந்த குழுவாக திகழ்பவர்களை, ஜதளம் என்பார்கள். சுருக்கமாக இவர்களை தளம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்களை நிர்வகிப்பவர், ஜலதலதிபதி என்னும் நபர் ஆவார்.

மண்டலம்..

கப்பற்படையின் பாதி நிரந்திர போர் குழுவை, மண்டலம் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களை தலைமை வகிக்க மண்டலாதிபதி என்பவர் நியமிக்கப்பட்டிருப்பார்.

இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும். இவர்கள் தனி, தனியாகவும், குழுவாகவும் சென்று போர் புரிவதில் வல்லமைப் பெற்றவர்கள்.

நிரந்திர போர் பிரிவு நாம் முன்பு குறிப்பிட்டிருந்த, கனம் பிரிவை சேர்ந்தவர்கள் தான் நிரந்திர போர் பிரிவை சேர்ந்தவர்கள்.

இவர்களிடம் 100 இருந்து 150 கப்பல்கள் வரை இருக்கும். மூன்று மண்டலம் குழுவை உள்ளடக்கி இருக்கும் குழுவானது கனம் என்று கூறப்படுகிறது.

அணி...

பெரிய போர்களில் ஈடுபட மட்டுமே உபயோகப்படுத்தப்படும் குழுவை அணி என்று கூறுகின்றனர்.

ஒரு அணியில் மூன்று கனம் குழு உள்ளடங்கி இருக்கும். 300-500 கப்பல்கள் வரை இந்த குழுவில் இருக்கும். மாபெரும் அணியான இதை தலைமை தாங்குபவர், அணிபதி என்று அழைக்கப்படுவர்.

அதிபதி...

இதெல்லாம் போக இந்த அனைத்து குழுக்களையும் தலைமை தாங்கும் நபர் தான் அதிபதி. இவரின் கட்டளைகளுக்கு இணங்க அனைத்து குழுக்களும் இயங்கும். இவர் இளவரசருக்கு கீழ் இருப்பவர்.

கைப்பற்றிய பகுதிகள்..

இந்த மாபெரும் கப்பற்படையை வைத்து தான், இந்தோனேசியா, யா(ஜா)வா, மாலத்தீவு, சிங்கப்பூர், இலங்கை, ஆங்கோர், கடாரம் போன்ற பல பகுதிகளை வென்றுள்ளது சோழப் பேரரசு.

நாவாய்..

பண்டைய தமிழர்களின் நாவாய் என்ற கப்பற்படையின் பெயர் தான் ஆங்கிலத்தில் நேவி (Navy) என்று அழைக்கப்படுகிறது...

அறிவிக்கப்பட்ட ஒரு வருடத்திற்குள் பல்லை காட்டிய பாஜக மோடியின் ரூபாய் நோட்டு மதிப்பு இழப்பு திட்டம்...


33.6 கோடி புது 2000 ரூபாய் நோட்டுகளுடன் பிடிபட்ட சேகர் ரெட்டி அந்த பணத்தை முறைகேடாக வங்கிகளில் இருந்து வாங்கியதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஆகையால் இந்த பணம் அனைத்தும் தான் முறையாக சம்பாதித்து வரி கட்டியது என சேகர் ரெட்டி சொல்லும் கூற்றை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அவரை விடுதலை செய்யும்.

மேலும் எத்தனை சேகர் ரெட்டிகள் தங்கள் கறுப்பு பணத்தை இவ்வாறு வெள்ளையாக மாற்றியுள்ளார்கள்?

இந்த திட்டத்தை கொண்டு வந்தவர்கள் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆதாயங்கள் என்ன?

இந்த திட்டத்தின் மூலம் கறுப்பு பணத்தை ஒழித்து நாட்டின் பொருளாதாரத்தை பலமான நிலைக்கு கொண்டு செல்வோம் என்று சூளுரைத்தவர்கள் எங்கே?

இவர்கள் சொன்னதை நம்பி வங்கி வாசல்களிலும் ATM வாசல்களிலும் பல இன்னல்களை அனுபவித்த மக்களுக்கு இவர்கள் என்ன பதில் சொல்ல போகிறார்கள்.

கறுப்பு பணம் வைத்திருந்தவர்கள் அனைவரும் இன்று தங்கள் பணத்தை வெள்ளையாக மாற்றி உல்லாசமாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் சிறு தொழில் செய்து பிழைத்த மக்கள் அடுத்து என்ன என்று தெரியாத நிலையில் வேலையை இழந்து எதிர்காலத்தை தொலைத்து செய்வதறியாது திணறிக்கொண்டு இருக்கிறார்கள்.

Demonetisation அமல்படுத்தப்பட்ட நவம்பர் 8ம் தேதியை சிறப்பாக அனுசரிக்க தயாராகுங்கள்.

மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்...

சித்தராவது எப்படி - 24...


சுவாச ஒழுங்கில் சூரிய கலை சந்திர கலை...

சுவாசத்தோடு இருக்கின்ற நாம் அதில் செம்மையாக இருக்கும் போது அதாவது ஒழுங்காக இருக்கும் போது ஏற்படுகின்ற உயர்வுகள் முன்னேற்றங்கள் அளவிட முடியாதது..

அப்படி பட்ட உயர்வுகளை தன்னிடமே வைத்துக் கொண்டுள்ள அந்த சுவாச ஒழுங்கில் இருப்பது அவ்வளவு எளிதா என்ன?

ஆமாம் அது சற்று என்ன மிகவும் கடினமே..

அதற்கு இடையூறு செய்கின்ற தடைகளை வெல்லுவது என்பது ஒன்று சேர்ந்து வரும் மிக பெரிய பூதங்களை வெல்லுவதற்கு இணையானது..

கவர்ச்சி என்பது துளியும் இல்லாத இந்த சுவாச ஒழுங்கு மனதிற்கு புலப்படாத ஒருநிலை நோக்கி நகர்ந்து ஒரு தோன்றா நிலை என்ற அதி உன்னத நிலை நோக்கி நகர்த்தி செல்லுவதால் அந்த தெய்வநிலைக்கு இடையூராக பூத கணங்கள் என்ற எண்ண தடைகள், தடை செய்வது சகஜமே..

சரி இந்த சுவாச ஒழுங்கில் சூரியகலை சந்திர கலை என்று வெளி விடுகின்ற மூச்சும் உள்வாங்குகின்ற மூச்சுமாக பார்த்தோம்..

ஆனால் சந்திர கலை சூரிய கலை என தனித்தனியாக உணர முடிந்ததா ?

இரண்டும் ஒன்றாகவே இருக்கும் பொழுது எந்த முன்னேற்றமும் காண முடியாது..

ஆனால் தனித்தனியாக உணர வேண்டும் என்றால் வெளி விடுகின்ற சூரிய கலை முழுமையும் தோன்றா நிலையாக இருந்தால் மட்டுமே சூரிய கலை சந்திர கலை தனித் தனியாக பிரியும்..

அதற்கு ஓம் நமசிவய என்ற மந்திரத்தின் கால அளவினை பிடித்துக் கொண்டு சூரிய கலை முழுமைக்கும் தோன்றா நிலை உணரவும் அதே நிலையில் சந்திர கலையும் அந்த தோன்றா நிலைக்கு சென்று விடாமல், நம் மனதின் திறனை இழந்து விடாமல் சந்திர கலையில் உள் வாங்கும் மூச்சை நம் மனதால் பற்றி நாமே உள் வாங்க வேண்டும்..

இதில் நாம் என்பது மனதாக உள்ள நாம் தான்...

அந்த சந்திர கலையில் நம் அதி தேவையான ஒன்றை நினைக்கும் போது அந்த தேவைக்கான தடைகள், அந்த தோன்றா நிலையில் கரைந்து போகும் அதிசயம் நடக்கிறது...

தடைகள் கரைந்து நீங்கிய நிலையில் அந்த தேவை நிறைவேற்றப் படும் அதிசயமும் நடைக்கிறது...

மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன வென்றால் தோன்றா நிலையினை சூரிய கலையில் பெற்ற உடன் நம் சந்திர கலை சுத்தமாக தோன்றா நிலையை பூரணமாக கவ்விக் கொண்டு அமாவாசை போன்ற சந்திரகலையும் தோன்றா நிலைக்கு சென்று மறைந்து விடுகிறது..

பயிற்சியில் தொடரும் போது, தோன்றாநிலை நீங்கிய பிறைகளாக சந்திர கலை வளர்ந்து வளர்ந்து பௌர்ணமியான முழு நிலவு ஆகிறது..

அந்த முழு மதிநிலையில் மட்டுமே நமது ஆசைகள் ஒழிந்து தேவைகள் முன் நிறுத்தப் படுகின்றன..

ஆசைகள் வேறு தேவைகள் வேறு என்பதை முன் பகுதிகளில் தெளிவாக கூறி இருக்கின்றது..

அனைத்துக்கும் ஆசைபடு என்ற கருத்தை விட்டு விட்டு அனைத்து தேவைகளையும் உணர் என்ற சத்தியத்தை பிடித்தால் பெரும் நன்மை அடையலாம்...

நோய் நீங்குதல், தரித்திரம் நீங்குதல், தன்னை சார்ந்தவர்களுக்கு உதவாத அவலநிலை, பாதகமான சூழ்நிலைகளை எதிர் கொள்ளல் போன்ற, மிக அவசியமான தேவைகள் மட்டுமே இந்த சந்திர கலை மதியான நிலையில் உதிக்கும்..

அந்த தேவைகளின் தடைகளை இந்த சூரிய கலை போக்கும் அதிசயத்தை இந்த மனம் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை... இல்லவே இல்லை..

ஆனால் தேவைகள் பூர்த்தியாகும் அதிசயத்தை நீங்கள் விரைவில் உணரலாம்..

சந்திர கலையை மதி ஆக்குவதற்கு மிக சிரமமா என்ற கேள்விக்கு பதில் சராசரி மனிதனுடைய திறமையில் சற்று தீவிரமாக பயின்றால் மூன்று அல்லது நான்கு வாரத்திற்குள் இது சாத்தியமாகும்...

உங்கள் அனைத்து தேவைகளையும் நிறைவேற இந்த சுவாச ஒழுங்கு முற்றிலும் கவர்ச்சி அற்ற ஒன்று என்பது மிக முக்கியமான தடை..

மதியிலே வைக்கப் படும் தேவைகள் கண்டிப்பாக சூரிய கலையின் தோன்றா நிலையால் நிறைவேற்றப் படும் என்பது சத்தியமான உண்மை..

தெய்வத்திடம் பக்தியோகத்தில் முறையாக நிற்கும் மனிதன் முதலில் அந்த தெய்வத்திடம் தோன்றா நிலையினை உணர வேண்டும்..

தெய்வத்தின் இயல் நிலை என்ற தோன்றா நிலையை உணராமல் செய்யும் பக்தியோகம் ஒரு பலனும் அளிக்காது..

தெய்வத்திடம் முறையிட்டு பல தோல்விகளை கண்டு துவண்டு போன மனிதன் தானாக அனுபவப் படும் தோன்றா நிலை மூலமாகவும் அதன் பின் சந்திர கலையை முழு மதியாகவும் அனுபவப் படும் போது மட்டுமே தெய்வதிடமிருந்து பலன் பெறப் படுகிறது..

அந்த நிலைக்கு வர பல ஆண்டுகள் ஒடி விடும்.. அதற்கு காரணம் ஆன்ம இலாபம் துளியும் இல்லாத நிலை..

காட்டில் வாழ்ந்த கண்ணப்பருக்கு தன்னுடைய அப்பாவித்தனம் மூலம் ஏழே நாட்களில் தோன்றா நிலைக்கு சென்று அன்பு என்ற முழு மதி நிலை அடைந்ததால், இறை தரிசனம் கிடைத்தது.. அவருக்கு அப்பாவி தனம் மிகவும் உதவியது..

ஆனால் அப்பரோ தனது என்பது வயதில் கடினமான கைலாய மலையில் பயணப் பட்டு அதில் அடைந்த சோர்வில் துவண்டு தோன்றா நிலைக்கு தள்ளப்பட்டு பின் தன் ஒரே குறிகோளான இறை தரிசனம் என்ற ஒரே தேவையால், கலைகள் நிரம்பிய மனம் ஒரே தேவையான இறைதரிசனம் என்ற ஒன்றால் மதியாகி, அந்த கைலாயமே தன் சொந்த ஊரிலேயே காணும் வல்லமை பெற்றார்.. அதற்குள் அவர் காலம் எண்பதற்கு மேல் தாண்டி விட்டது..

சில சமயங்களில் சில யோக பயிற்சிகளை குறை கூறுவது ஆன்மா இலாபம் துளியும் கிடைக்காது முடிவில் தோல்வி ஒன்றையே தழுவும் படியாக தருவதை தான்..

அதில் கற்றுக் கொள்பவர்கள் மேலும் மேலும் இடர் படக் கூடாது என்ற அன்பின் காரணமாகதான்... மற்றபடி வேறு ஒன்றும் இல்லை...

தோன்றா நிலை வெளிப்படாத வெளி சுவாசம் சூரியகலை அல்ல.. அதன் பெயர் வெளி சுவாசம் மட்டுமே..

தோன்றா நிலை உடைய வெளி சுவாசம் மட்டுமே சூரிய கலை எனப்படும்... உள் வாங்கும் சுவாசத்தில் மதி நிலை தோன்றா விட்டால் அதன் பெயர் உள் சுவாசம் என்றே கொள்ள வேண்டும்..

அது சந்திர கலைகள் நிறைந்தது.. பலவித ஆசை என்ற எண்ண ஆதிக்கங்களால் நிரப்பப்பட்டது..

ஆனால் ஒரே எண்ணமான தேவையை மட்டும் உடைய மதியான உள் சுவாசத்தை ஏக கலையான பௌர்ணமியை சந்திர கலை எனலாம்..

இப்படியாக சுவாச ஒழுங்கின் மூலம் சந்திரகலை சூரிய கலை பெற்று நம் உடல், வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து பின் சித்தராகும் உயர்ந்த குறிகோளை நோக்கி நகருவோம்...

கிணத்துக்கடவு எம்.எல்.ஏ சண்முகத்தை காணவில்லை - தொகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு...


பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக.....


சங்க இலக்கிய அறிவியலில் சூரியனும் விமானமும்...

சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.

சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும்.

அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது.

அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும்.

ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு.

அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது.

அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை.

இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே

இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப் போனார்கள்.

நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது.

அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது...

இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு.

அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப

இதன் பொருளைப் பாருங்கள்!

விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து.

இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம்.

இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம் பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும்.

விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.

எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள் என்று திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி சொல்கிறது.

பலகணியில் இருந்து புறப்பட்டதால் உலங்குவானூர்தியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள்...

இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி!

இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள்.

ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன.

மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை.

ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.

மண்ணின் மேல் அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது.

விமானப் பறப்பை நேரில் கண்டானா?

இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா?

தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மைதான்...

அகத்திக்கீரையின் மகத்துவம்...


துக்க வீடுகளில் உள்ளவர்களுக்கு அகத்திக் கீரையை ரசம் வைத்துக் கொடுக்கும் வழக்கம் இன்றைக்கும் உண்டு..

காரணம், இறப்பின் சோகத்தில் சாப்பிடாமல் - கிடப்பவர்களின் உடல் பாதிப்புக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதால்..

உடலின் உள் காயங்களை ஆற்றுதல், குடற்புழு நீக்கம், மலச்சிக்கலைப் போக்குவது, விஷ முறிவு போன்ற ஏராளமான மருத்துவக் குணங்களை வேர், இலை, பட்டை, பூ என்று பல பாகங்களிலும் தன்னகத்தே வைத்திருக்கும் உன்னதமான மரம் அகத்தி...


அகத்தி மரம்..

அகத்தி மரம் தை முதல் மாசி மாதம் வரையிலும் பூக்கும் இயல்பு உடையது.

தஞ்சாவூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் பி.சரஸ்வதி, அகத்தியின் பலவிதமான மருத்துவக் குணங்களை விவரிக்கிறார்..

'அகத்தி 20 முதல் 30 அடி வரை வளரக்கூடியது. பூவின் நிறத்தைப் பொருத்து செவ்வகத்தி மற்றும் வெள்ளை அகத்தி என்று அகத்தியை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்..

இலைகள்:

அகத்தி இலையைக் கீரை என்பார்கள்.

இதன் சாற்றை எடுத்து, ஒன்று அல்லது இரண்டு துளி மூக்கில்விட்டால் காய்ச்சல் குணமாகும். அகத்தி இலையிலும் பூவிலும் அதிக அளவில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. நெய்யை நன்றாகக் காய்ச்சி அதில் அகத்தி இலைகளை இட்டு நன்கு வெந்த பிறகு வடிகட்டிப் பருகச் செய்தால், மாலைக்கண் நோய் குணமாகும்..

இலையை அரைத்துப் பசைபோல் செய்து காயங்களுக்குக் கட்டலாம். புண்கள் விரைவாக ஆறும். சீழ் பிடிக்காது..

வயிற்றில் உள்ள புழுக்களை நீக்கும் குணம் அகத்திக் கீரைக்கு உண்டு.

செவ்வகத்தி இலை குளிர்ச்சியை உண்டாக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. தேகம் குளிர்ச்சி அடையும். மலச்சிக்கல் இருக்காது. சிறுநீர் பிரிவது எளிதாக இருக்கும்..

பூக்கள்:

அகத்திப் பூச்சாற்றைக் கண்ணில் பிழிய, கண் வலி குணமாகும்.

மரப்பட்டைகள்:

குடிநீரில் இட்டுக் குடித்துவந்தால், அம்மைக் காய்ச்சல் தீரும்.

வேர்ப் பட்டை:

அகத்தி வேர்ப் பட்டையில் சாப்போனின், டானின், ட்ரைடெர்பின் போன்ற பல வேதிப் பொருட்கள் உள்ளன. வேர்ப் பட்டையை நீரில் இட்டுக் குடித்து வந்தால், மேகம், ஆண் குறியில் ஏற்படும் எரிச்சல் மற்றும் ஐம்பொறிகளில் ஏற்படும் அனைத்து வகையான எரிச்சல்களையும் குணமாக்கும்.

அகத்திக் கீரையை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும். இல்லாவிட்டால், வாயுவை உண்டாக்கிவிடும்.

மேலும் தினசரி அதிக அளவில் உண்டால், வயிற்றுக் கடுப்பையும் ஏற்படுத்திவிடும்.

இந்தக் கீரைக்கு மருந்துகளின் செயல்பாடுகளைத் தடுக்கும் இயல்பு உண்டு. எனவே, பிற மருந்துகளை உட்கொள்ளும் நோயாளிகள் அகத்தியைத் தவிர்ப்பது நல்லது.

பல வீடுகளில் முருங்கை மரம் இருக்கும் அதை போல வீட்டுத் தோட்டத்தில் அகத்தி மரத்தையும் வளர்க்க வேண்டும் . கடைகளில் இதன் விதை கிடைக்கும். தவறாதது உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்...

அதிமுக எம்.ஜி.ஆர் திருடிய திருச்செந்தூர் முருகனின் வைரவேல்...


சின்னப்ப தேவர் தன் குலதெய்வமான மருதமலை முருகன் கோவில் படிக்கட்டுகளின் இருபுறமும் மின் விளக்குகள் அமைத்தார்.

அதைத் திறந்து வைக்க எம்.ஜி.ஆரை அழைக்க அவர் தி.மு.க வில் இருந்து கொண்டு ஆன்மீக நிகழ்ச்சிக்கு வர இயலாது என்று கூறிவிடுகிறார்.

உடனே தேவரின் தாய் எம்.ஜி.ஆரிடம் வேண்டுகோள் விடுக்க அவர் ஒத்துக் கொண்டு விழாவிற்கு வந்தார்.

இதை பலரும் பெருமையாகக் கூறுவார்கள்.

ஆனால் இதே 1980 வாக்கில் எம்.ஜி.ஆர் திருச்செந்தூர் முருகனுடைய வைரவேலைத் திருடி பலகோடிக்கு விற்றார் அப்போதிருந்த அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் இதற்கு உடந்தை.

தி.மு.க வினர் இதை பெரிய பிரச்சனையாக்க சி.ஜே.ஆர்.பால் என்பவர் தலைமையில் விசாரணை கமிசன் கூட அமைக்கப்பட்டது.

ஆனால் வேல் கடைசிவரை கிடைக்கவில்லை.

கோயில் பொறுப்பாளர் சுப்பிரமணியபிள்ளை மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.

(இதைக் கண்டித்து கருணாநிதி நீதிகேட்டு நெடும்பயணம் என்று மதுரை முதல் திருச்செந்தூர் வரை நடைபயணம் கூட போனார் 1981ல்).

அதன் பிறகு இதே எம்.ஜி.ஆர் பல கோடி மதிப்புள்ள ராமேஸ்வரம் லட்சுமணர் சிலையை திருடினார்.

அது தொடர்பான வழக்கு இப்போது சூடுபிடித்துள்ளது.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கருணாநிதி வைரவேலை கண்டுபிடிக்க முயன்றிருப்பார் என்று நினைத்தால் நீங்களும் அன்றைய தமிழர்கள் போல அப்பாவியே.

அன்று கருணாநிதி குற்றம் சாட்டிய ஆர்.எம்.வீரப்பனும் சண்முகநாதனும் இன்று அவரது உயிர் நண்பர்கள்.

தமிழக கோவில்களில் சிலைகள் திருட்டு போவது மிகவும் சகஜமாகி, அதன் பிறகு அதற்கென்று தனி தடுப்புத்துறை உருவாக்கப்பட்டு அதன் பிறகும் சிலை திருட்டு திராவிட மாபியாக்களால் நடந்து கொண்டே தான் இருக்கிறது...

கன்னட ஈ.வே.ரா வளர்ப்பு மகளே மணியம்மை...


அப்பா அப்பா என்று அம்மை மனம் குளிர, வாய் குளிர, கேட்போர் காது குளிரக் கூறவும்..

அம்மா அம்மா என்று கேட்போர் பெருமையும் பூரிப்பும் அடையும் விதமாக, பெரியார் அந்த அம்மையாரை அழைக்கவும்.

இக்காட்சியைக் கண்டு பெரியாரின் வளர்ப்புப் பெண் இந்த மணியம்மை எனப் பல்லாயிரவர் எண்ணி மகிழவுமான நிலை இருந்தது.

அந்த வளர்ப்புப் பெண்தான், இன்று பெரியாரின் மனைவியாக இருக்கிறார்.

- அண்ணாதுரை (திராவிட நாடு 03.07.1949).

பெரியாரின் மறுபக்கம் தொடரில் (பாகம் 14) ஈ.வே.ரா - மணியம்மை திருமணம் பற்றி விமர்சித்து அண்ணாதுரை எழுதிய முழு கட்டுரையும் உள்ளது...

காவல்துறையினரின் உதவியுடன் கந்துவட்டிக் கும்பல் என் தாயாரின் வீட்டை எழுதி வாங்கிவிட்டதாகவும் தன் சகோதரனைக் கொலை செய்துவிட்டதாகவும் சென்னை காவல்துறை ஆணையரிடம் சின்னத்திரை நடிகை ஆனந்தி புகார்...


மராட்டிய கன்னட ரஜினியின் புதிய இந்தியா பிறந்தது...


ஆழ்வார்பேட்டையில் லதா ரஜினிகாந்த் நடத்தும் ட்ராவல் ஏஜென்சி கட்டிடத்துக்கான வாடகையை கார்பொரேஷன் ரூ. 3,702/-லிருந்து ரூ. 21,160/- ஆகா உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டை அணுகியுள்ளார்.

இதுக்கு அவர் சொல்ற காரணம் தான் பெரிய காமெடி.... டீமானிடைசேஷன், ஜிஎஸ்டி வரி விதிப்பு, மார்க்கெட் நிலவரம் ரொம்ப மோசமாக இருப்பது, ஆன்லைன் வியாபாரம் இவற்றால் ஏற்கனவே ரொம்ப பாதிக்கப்பட்டு குறைந்த லாபத்தில் நடத்தி வருவதால் இந்த வாடகை ஏற்றம் தொழிலை மிகவும் பாதிக்குமாம்....

அடப்பாவிகளா... அங்க உங்க ஊட்டுக்காரர் ஒரு படத்துக்கு 80 கோடி வாங்குறாரு.... நீங்க நடத்துற பள்ளிக்கூடத்துக்கு வாடகையே குடுக்குறதில்ல... வேலை செய்றவங்களுக்கு சம்பளம் குடுக்குறதில்ல.... அதை விட கொடுமை.... லட்ச கணக்கில வாடகைக்கி போற  இவ்ளோ மெயின் லொகேஷன்ல ஆபீஸ் வச்சுக்கிட்டு அதுக்கு மூவாயிரத்து சொச்சம் ஓவா வாடகை குடுத்து இத்தனை நாள் பொழப்ப ஓட்டிட்டு.... இப்போ வாடகையை ஏத்தினா குடுக்குறதுக்கு வலிக்குது உங்களுக்கு... விட்டா சோத்துக்கே கஷ்டப்படுறோம்னு புலம்புவனுக போல....

இந்த லட்சணத்தில் உங்க ஆத்துக்காரர் அரசியலுக்கு வந்து ஒரே கிழியா கிழிக்க போறாரு தமிழ்நாட்டு மக்களுக்கு..... எல்லாம் நேரம்டா....

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக வினரை புரட்டி எடுத்த பொதுமக்கள்...


என்னா அடி..... தொண்டனுக்கே இந்த  அடினா......  தலைவனுக்கு என்ன ஆகுமோ....

நேற்று குஜராத் மங்களூரில் தலைவர்களுக்கு முட்டை அடி...

ஆக இந்தியா முழுவதும் எல்லாம் மாநில மக்களும் பாஜக வை துரத்தி துரத்தி அடித்து விரட்டுகிறார்கள் என்பது நன்றாக புரிகிறது...