16/11/2018

ஒடிசாவில் மறுவீடாக மாறிவரும் தமிழகம்...


தமிழ்நாடு – தமிழர்களின் தாயகமாக நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் நாட்டை அடக்க முடியாமல் இருப்பதற்கு காரணம் அதில் வாழும் தமிழர்களின் எண்னிக்கை தான். அதனை குறைந்துவிட்டால் நாம் நினைத்ததை சாதிக்கலாம் என்று நிணர்கிறது நடுவன் அரசு. தமிழ்நாட்டை இப்படி மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான், தமிழ்நாட்டில் உள்ள தனது அலுவலகங்கள், தொடர்வண்டித் துறை, துறைமுகம், வானூர்தி நிலையம் உள்ளிட்ட தொழிலகங்கள் அனைத்திலும் தமிழர்களைப் புறக்கணித்துவிட்டு வெளி மாநிலத்தவர்களை 80 முதல் 100 விழுக்காடு வரை வேலையில் சேர்க்கிறது.

அதோடு மட்டும் அல்லாமல் அவர்கள் நலனை பாதுகாக்க அந்தந்த மாநிலம் தமிழகத்தில் தூதரகம் போன்ற அமைப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். அப்படி ஒடிசா மாநிலத்தால் உருவாக்கப்பட்ட ஒடிசா தூதரகம் தான் ஒடிசாபவன்.

சென்னை பள்ளிக்கரணையில் புதிதாக கட்டப்பட்டுள்ளது ஒடிசாபவன். ஒடிசா பவனுக்காக சென்னை வேளச்சேரியில் 5 கிரவுண்டு நிலம் குடுத்து கட்டிடத்தை திறந்து வைத்து இருக்கிறது தமிழக அரசு. இது ஏன் என்று காரணம் கூறுகையில். ஒடிசாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் ஒடிசா மக்களின் நலனுக்காக இந்த கட்டிடம் திறக்கப் பட உள்ளது என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். மேலும் கல்வி, தொழில், மருத்துவம் உறவினர் சந்திப்புக்காக வருவோர் இந்த பவனில் தங்கி பணிகளை முடித்து விட்டு செல்லலாம் எனவும் பட்நாயக் தெரிவித்தார்.

இதை எளிதாக நாம் கடந்து விட கூடாது. இவை அணைத்து தொடக்கமே.. இன்றைய நாள்வரை தமி்ழ்நாட்டில் குடியேறியுள்ள வெளி மாநிலத்தார் எண்ணிக்கை  கோடியை தாண்டும். வரமபு மீறி குடியேறும் வெளிமாநிலத்தவரால் வேலைவாய்ப்பு, சட்ட ஒழுங்கு, பொருளியல் சுரண்டல், பெருவாரியாக அதிகப்பட்டுள்ளது. வரைமுறையின்றி அயல்நாட்டுத் தொழில் நிறுவனங்கள், வெளி மாநில முதலாளிகளின் தொழிலகங்கள், வணிக நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பெருகி வருகின்றன. இதனால், தமிழர்களின் தொழில்களும், வணிகங்களும் நசுக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிலகங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான சட்டம் வேண்டும். நடுவணரசு நிறுவனங்களில் 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும். தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் நிலம் உள்ளிட்ட சொத்துகள் வாங்கத் தடை விதிக்க வேண்டும். இதனை எதிர்த்து அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்.

அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாய்த் தமிழ்நாட்டில் வந்து குவிகின்றனர். இதனால் சொந்த மண்ணில் தமிழர்களின் வேலை வாய்ப்புகள் வெளியாரால் பறிக்கப்படுகின்றன. அத்துடன் தமிழ்நாட்டில்
தமிழர்களின் மக்கள் தொகையை விஞ்சும் அளவிற்கு அயலார் மக்கள் தொகை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

அந்த நிலை ஏற்பட்டால் தமிழ்நாடு என்ற பெயர், தமிழ் ஆட்சி மொழி தமிழர் ஆட்சி என்பதெல்லாம் காணாமல் போய்விடும். கலப்பின மாநிலமாகத் தமிழ்நாடு மாறிவிடும்.

வரம்புமீறி குடியேறும் வெளி மாநிலத்தவரை கட்டுக்குள் வைப்போம்..

குற்றச் செயல்களையும், வேலை பறிப்பையும் தடுத்து நிறுத்துவோம்..

தமிழர் ஆய்வுக் கூடம்...

தியானம் ஏன் எதற்கு எப்படி?


நம் அன்றாட வாழ்கையில் பல விதமான இடர்பாடுகளை சந்திக்கிறோம்.

ஒவ்வொரு நாளும் சக மனிதர்களால் இன்பத்தையும் துன்பத்தையும் அனுபவிக்கிறோம்.

ஏன் இப்படி என்றால் பிரபஞ்சம் அப்படித் தான் உருபெற்றுள்ளது.

ஆம் நேர் எதிர் ஆற்றல்கள் இரண்டும் சேர்ந்தது தான் பிரபஞ்சத்தை இயக்குகின்றது.

இவை இரண்டும் ஒரு புள்ளியில் இணைந்தால் அந்த இடத்தில் இயக்கம் இருக்காது.

ஆம் இன்பதுன்பம் இரண்டும் இல்லை என்றால் பற்றற்ற நியூட்ரான் தளத்தில் மோன நிலையில் இருந்துவிடுவீர்கள்.

அங்கு காலம் இடம் இருப்பு அனைத்தும் உறைந்துவிடும். அதுதான் இன்பதுன்பம் அற்ற பிறவா நிலை.

நாம் இன்பம் ஏற்படும் போது வாழ்வை வரமாகவும், துன்பம் ஏற்படும் போது அதையே சாபமாகவும் பார்க்கிறோம்.

இந்த நிலையை போக்க ஒரே வழி தியானம். ஆம் தியானத்தின் போது மட்டுமே மனம் மூலத்தில் ஒடுங்குகிறது.

தியானம் பழக ஆசைப்படுபவர்கள் சில சின்ன விடயங்களை கடைபிடிக்க தவறி விடுகிறார்கள்.

நம் உடல் மற்றும் மனதை ஒரே மாதத்தில் நம் விருப்பத்திற்கு மாற்றியமைக்க முடியும்.

ஆம் அதற்கான குறிப்புகள் இதோ..

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து தியானம் பழகுங்கள். இடத்தை மாற்றாதீர்கள். ஒருநாள் கூட தவற விடாதீர்கள்.

தடிமனான தடுப்பில் அமர்ந்து தியானியுங்கள். தினமும் ஒரே நேரத்தில் பழக மறக்காதீர்கள். படிப்படியாக நேரத்தை கூட்டுங்கள்.

எந்த எண்ணம் வந்தாலும் பரவாயில்லை. ஆரம்பத்தில் நிறைய வரும் வரட்டும். அதை பற்றி கவலை கொள்ளாமல் வெருமனே மூச்சை கவனியுங்கள்.

அவ்வப்போது கவனத்தை இழுத்துவந்து மூச்சில் நிறுத்துங்கள். ஒரு வாரத்தில் மெல்ல மெல்ல உங்களுக்குள் அமைதி பரவுவதை உணர்வீர்கள்.

இரண்டு வாரத்தில் பிரபஞ்ச சக்தி உங்களுக்குள் பாய ஆரம்பத்திருக்கும். மூன்று வாரத்தில் உங்கள் முகம் பொலிவு பெற்றும் உங்களை சுற்றி நல்லதே நடப்பதையும் உணர்வீர்கள்.

ஒரு மாதத்தில் நீங்கள் ஆழ்ந்த தியான நிலையை அடைந்திருப்பீர்கள். இவ்வளவு தான் தியானம்.

இது உங்களுக்கு நடக்கவில்லை எனில் நான் மேலே கூறியிருப்பதை நீங்கள் கடை பிடிக்கவில்லை என்றே அர்த்தம்...

அரசியல்வாதிகளை ஒருபோதும் கண்டு கொள்ளாதீர்கள்...


அரசியல்வாதிகள் ஒப்பந்தம் பேசி, கையெழுத்து போடும் நிறுவனங்களை பற்றி தெரிந்துக்கொள்ள முயற்சி பண்ணுங்கள்...

ஏனெனில் அவனே ( வணிகன் ) திட்டத்தை  0-முதல் 100 சதவிகிதம் கட்டமைக்கிறான்..

அந்த கட்டமைப்பு எப்போதும் உங்களுக்கு எதிராகவே இருக்கும்...

சித்தப்பாவை காதலித்த ஆசிரியை.. கட்டாய திருமணத்தால் தற்கொலை...


தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் என்பவரின் மகள் ரம்யா. பி.எட்.,பட்டதாரியான இவர் இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கும் பெரியகுளம் அருகே  உள்ள சரத்துபட்டியை சேர்ந்த  ரங்கராஜ் என்பவருக்கும்  இந்த மாதம் 11ம் தேதி திருமணம் நடந்தது. 

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரம்யா மற்றும் ரங்கராஜ் ஆகிய இருவரும் சரத்துபட்டியில்  இருந்து புலிக்குத்தி கிராமத்திற்கு மறுவீட்டிற்காக வந்தனர்.

பின்னர் அங்கிருந்து அருகில் நடுத்தெரு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்றனர். மணமக்களுடன் ரம்யாவின் சித்தப்பா முத்து கிருஷ்ணன் உடன் சென்றார்.

ரங்கராஜன் வீட்டுக்குள் சென்று விட்டார்.
வீட்டுக்கு வெளியே ரம்யாவும், முத்து கிருஷ்ணனும்  பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து பேசி கொண்டிருந்தவர்கள் மயங்கி விழுந்தனர்.  உடனடியாக உறவினர்கள்  இருவரையும்  போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இருவரையும் பரிசோதித்த டாக்டர்கள் விஷம் குடித்திருப்பதாக தெரிவித்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ரம்யா உயிரிழந்தார். முத்து கிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில்  திடுக்கிடும் தகவல் வெளிவந்தது. அதில், ரம்யா தனது தந்தையின் தம்பியான சித்தப்பா முத்துகிருஷ்ணனை காதலித்து வந்தார். 
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை.

சித்தப்பாவை எல்லாம் திருமணம் செய்ய கூடாது என்று அறிவுரை கூறினர். ஆனால் ரம்யா காதலில் பிடிவாதமாக இருந்தார்.

இதனால்  ரம்யாவுக்கு பலவந்தமாக உறவினரான ரங்கராஜுடன் திருமணம் செய்து வைத்தனர்.

 ஆனாலும் வேறு ஒருவருடன் திருமணம் நடந்து விட்டதே என்ற வேதனையில் விஷம் குடித்தது தெரியவந்தது...

ஊறுகாய் இதயத்துக்கு டேஞ்சர்...


ஹார்ட் அட்டாக் கேள்விப்படும்போது பயங்கரமா தான் இருக்கும். ஹார்ட் அட்டாக் வந்துட்டதால, அதோட எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு, வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ரெண்டு, மூணு முறை அட்டாக் வந்து பிழைச்சு, நிறைய காலம் ஆரோக்கியமா வாழறவங்களும் இருக்காங்க. வந்ததை நினைச்சு பயப்படாம, அடுத்து எப்படி இருக்கணும், அதுக்கு என்ன சாப்பிடணும், எப்படி சாப்பிடணும்னு தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம்.

இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் யாருக்கெல்லாம் வர வாய்ப்பு அதிகம்?

நீரிழிவு உள்ளவங்க, சிறுநீரகக் கோளாறு உள்ளவங்க, சிகரெட் பழக்கமுள்ளவங்க, உடல் பருமனானவங்க, மொனோபாஸ் கடந்தவங்க, எப்போதும் டென்ஷனா இருக்கிறவங்க, எந்த வேலையும் செய்யாம உடல் இயக்கமே இல்லாதவங்க, ஏற்கனவே குடும்பத்துல யாருக்காவது இதய நோய்கள் இருக்கிறவங்க... இவங்க எல்லாம் ஜாக்கிரதையா இருக்கிறது நல்லது.

இதய நோய்க்கான அறிகுறி நெஞ்சு வலியாதான் இருக்கணும்ணு அவசியமில்லை. அடிக்கடி தலைவலி, தலை சுற்றல், பார்வைத் தடுமாற்றம், ஞாபகமறதி, மூச்சு விடறதால சிரமம், தோள்பட்டை வலி.... இதுல எது இருந்தாலும், அது இதய நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம்னு உடனே டாக்டரை பார்க்கிறது அவசியம்.

சிகிச்சை, உடற்பயிற்சி... இது எல்லாத்தையும் விட முக்கியம் உணவு. அமெரிக்கால எல்லா உணவுகள்லயும் "டிரான்ஸ்ஃபேட்"னு சொல்லப்படற அடர்த்தி குறைவான மிதக்கும் கொழுப்பு இருக்காங்கிறதை பேக்கிங் லேபிள்ல போடணும்னு சட்டம் இருக்கு. நம்மூர்ல அப்படி எதுவும் இல்லாதது பெரிய குறை. எதை சாப்பிடலாம், எது கூடாதுங்கிற விழிப்புணர்வு இல்லாம, கண்டதையும் சாப்பிட்டு நோய்களை விலை கொடுத்து வரவழைச்சுக்கறோம்.

சாப்பாட்டு விஷயத்துல ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டியது ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ், சில வகை உணவுகளை சமைக்கிறபோதே, சத்துகள் ஆக்சிஜனோட சேர்ந்து ஆவியாகி வெளியேறிவிடும். அதைத் தடுக்க ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அவசியம். கிரீன் டீ, பழங்கள், காய்கறிகள்ல இந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமா இருக்கு. உடம்புல கொழுப்பு அதிகமா இருக்கிறப்ப, ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் தங்காது. கூடவே நச்சுப் பொருளும் சேர்ந்து உண்டாக்கிற கோளாறுகள்ல இதய நோயும் ஒன்று. காய்கறிகளும் பழங்களும் எல்லாருக்கும் அவசியம்னு சொல்ல இது இன்னொரு காரணம்.

இதயம் பலவீனமானவங்க தவிர்க்க வேண்டிய உணவுகள் மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும். ஒரு முட்டைல 210 மி.கி. கொலஸ்ட்ரால் இருக்கிறதால, அது கூடவே கூடாது. பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்ல அடைச்ச உணவுகள், தக்காளி சாஸ் கெட்ச்சப், ஃப்ரோஸன் உணவுகள் - அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம்.

"ஊறுகாயும் அப்பளமும் இருந்தா போதும்... வேற எதுவும் வேணாம்"னு சாப்பிறவங்க பலர். இந்த ரெண்டையும் போல ஆபத்தானது வேற இல்லை. காரணம், அதுல சேர்க்கப் படற உப்பு. அந்தக் காலத்துல அப்பளம் நல்லா விரிஞ்சு பொரியணும்னு பிரண்டை சாறு விடுவாங்க. இப்ப அதுக்குப் பதில் சோடியம். ஊறுகாயும் அதே மாதிரிதான். அதிக உப்பு ரத்தக்கொதிப்பை அதிகமாக்கி, இதய நலனைப் பாதிக்கும்.

சாப்பிடக்கூடிய உணவுகள்: கீரை, முழு தானியங்கள், காய்கறிகள், அசைவத்துல மீன் மட்டும் (அதுல உள்ள ஒமோக 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது) ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம்.

தினசரி சமையல்ல சாதாரண புளிக்குப் பதிலா கொடப்புளி உபயோகிக்கலாம். கோக்கம்னு சொல்லப்படற கொடப்புளியை எந்தவித குழம்புலயும் சேர்க்கலாம். ரத்தத்துல கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதயத்தைப் பாதுகாத்து, உடல் எடையையும் குறைக்கும் இது. கொழுப்பு குறைஞ்சாலே, இதயம் உள்ளிட்ட அத்தனை உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்...

காலங்காலமாக RSS க்கு உதவிய திமுக...


நெருக்கடியான பல நேரத்தில் RSS க்கு கருணாநிதியும், திராவிடமும் திமுகவும் தான்  உதவியிருக்கிறார்கள் என்று காவியே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்கள்...

அரசு ஊழியர்களை குறைக்க நடவடிக்கை தமிழகம் முழுவதும் நாளை அரசாணை எரிப்பு போராட்டம்: அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு...


தமிழகத்தில் செலவினங்களை குறைக்க அரசுத் துறைகள், ஆசிரியர்கள், உள்ளாட்சி துறைகளில் தேவையில்லாத பணியிடங்களை கண்டறியவும் அவுட்சோர்சிங் அல்லது ஒப்பந்தஅடிப்படையில் பணிகளை மேற்கொள்ளும் பணியிடங்களை கண்டறிந்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷய்யா தலைமையில் பணியாளர் சீரமைப்புக் குழு அமைத்து கடந்த பிப்.19ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த குழுவுக்கு தமிழக நிதித்துறை செயலாளர் சித்திக் அலுவல் சாரா செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அரசுத் துறைகளில் 30 முதல் 35 சதவீதம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பணிச்சுமை அதிகரித்துள்ளது. எனவே காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்திவரும் நிலையில், பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்கவும் அவுட்சோர்சிங் அடிப்படையில் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கவும் தமிழக அரசு அமைத்த குழுவிற்கு அரசு ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். எனினும் தமிழக அரசு கண்டுகொள்வில்லை.
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ள நிலையில் அரசுத் துறைகளின் பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பதால் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற முடியாது. எனவே அரசுத் துறைகள், அரசு பள்ளிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசு ஆணை எண்.56ஐ திரும்பப் பெற வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் சார்பில் நாளை தமிழகம் முழுவதும் அரசு ஆணை எண்.56ஐ தீயிட்டு எரிக்கும் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நெல்லை மாவட்ட செயலாளர் துரைசிங் கூறுகையில், ‘’தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து ஒரு கோடி பேர் வேலையின்றி உள்ளனர். அரசு பணியிடங்களை குறைக்கும் நோக்கத்தில் அரசு ஆணை 56 பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு ஆணையை செயல்படுத்தும் விதமாக முதல் கட்டமாக கருவூலத் துறையில் அனைத்துப் பணிகளும் ஆன்லைன் மயமாக்கப்பட்டு தனியாரிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலை தொடர்ந்தால் பிற்காலத்தில் அரசுப் பணி என்பது கேள்விக்குறியாகி விடும். எனவே அரசுப் பணிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் அரசு ஆணை எண்.56ஐ எரிக்கும் போராட்டம் நாளை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடத்தப்படுகிறது. இந்த ஆணையை திரும்பப் பெறும் வரை அரசு ஊழியர்களின் போராட்டம் தொடரும்’’ என்றார்...

பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா...


மின்சாரத்தை (மித்ரவருனசக்தி) கண்டு பிடித்தது ஒரு தமிழனே...


மின்கலத்தை கண்டு பிடித்தவர் வோல்ரா என்று நினைத்து கொண்டிருக்கும் தமிழரே சற்று விழியுங்கள்…

மின்சாரத்தை கண்டு பிடித்தது ஒரு தமிழனே…..

கிறிஸ்து வருவதற்கு முன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழன் மின்கலத்தை கண்டு பிடித்து விட்டான்…. வியப்பாக உள்ளதா? கீழே படியுங்கள்….

சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

“சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்”

புரியவில்லை என்டா விடுங்க‌… நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.

இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,

“ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்”.

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? என்று யோசிக்கிறீர்களா?

மித்ரவருனசக்தி என்றால் மின்சாரம் என்பது தாங்க பொருள்.

வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு.

வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி [Baghdad Battery] என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் “தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்’ தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார்.

இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால “electroplating” என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1891 ஆம் ஆண்டு Rao Saheb Krishnaji Vajhe புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, வேறு சில மேதாவிகளுடன் சேர்ந்து இதனை செய்து பார்த்தனர். அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்,

எப்படி இருக்கிறது தமிழனின் அறிவியல்?

குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டு பிடிக்கப்பட்டது என்று கூறலாம்.

அகத்தியர் தமிழன் என்கிறீர்கள் ஆனால் அவர் ஏன் சமஸ்கிருதத்தில் எழுதினார் என்பது இங்கு பலரது கேள்வி. உங்களுக்கும் கூட இது எழலாம். அதை முழுவதுமாய் இங்கு விலக்க முடியாது ஆனால் சுருக்கமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் தமிழும் சமஸ்கிருதமும் பாரதம் முழுவதும் பரவி இருந்த மொழிகள் என்பதை நாம் உணர வேண்டும்.

அதே நேரம் படத்தில் இருப்பது அகத்தியர் தயாரித்த மின்கலம் ஏன்று இந்த கட்டுரையில் எந்த இடத்திலும் நாங்கள் சொல்லவில்லை. இந்த பதிவில் உள்ள ஸ்லோகம் மட்டுமே அவருக்கு சொந்தமானது. இருந்தாலும் இந்த அறிவியல் உண்மையாய் இல்லாவிட்டால் ஒரு வெளிநாட்டு தனியார் தொலைகாட்சி நிறுவனம் இதை அங்கீகரித்து இருக்காது என்பதையும் நாம் உணர வேண்டும்...

மிளகு மருத்துவம்...


பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது பழமொழி. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது.

வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு
உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி ?

-குதம்பைச் சித்தர்..

உணவில் தினமும் மிளகு இரசம் இடம் பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.

காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது.

காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.

வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாத போதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.

ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத் தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம்.

தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.

சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும்.

உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.

ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.

பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும்.

மிளகு இரசமும், மிளகு சேர்ந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.

திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி] மருந்தை காலை மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்று நோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது.

மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்க வைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.

மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்து அரைத்து புழுவெட்டு [ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடி முளைக்கும்.

மிளகு ஊறுகாய்: பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது...

பேராசியர் உயிரை பறித்த ஸ்ரீ சாஸ்தா கல்லூரி...


அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த இரண்டு பெண் குழந்தைகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டன...


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுரை சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் ஒன்றரை மற்றும் இரண்டரை வயதுள்ள குழந்தைகள் நேற்று மாலை ஆதரவின்றி சுற்றித்திரிந்தன. இதுகுறித்து வழக்கறிஞர்கள், குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ள 1098 என்ற எண்ணிற்கு தகவல் அளித்தனர். விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அழகு, அருப்புக்கோட்டை ஒருங்கிணைப்பாளர் பொற்செல்வி ஆகியோர் நீதிமன்றம் வந்து ஆதரவின்றி குழந்தைகளை மீட்டனர். 

இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மீட்கப்பட்ட இரண்டு குழந்தைகளும் விருதுநகர் பாண்டியன் நகரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டன. குழந்தைகளை விட்டு சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படும் வேளையில், அருப்புக்கோட்டையில் பெண் குழந்தைகளை அனாதையாக விட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

செயற்கை கருத்தரிப்பு மையம்...


செயற்கை கருத்தரிப்பு மையம் மூலம் பெறப்படும் குழந்தைகள் தற்சார்புத் தன்மை இழந்து, தன் தகவமைப்புக்காக கூட பெருநிறுவனங்களை சார்ந்திருக்கும் நிலையே உருவாகும்..

வரலாற்றில் இருந்து ஒரு தகவல்...


1752 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 11 நாட்கள் காணாமல் போய் இருக்கும்...

அது ஏன் என்றால் அந்த மாதத்தில் தான் இங்கிலாந்து அரசு "the Roman Julian Calendar" இருந்து "the Gregorian Calendar" மாற்றிக் கொண்டது....

ஜூலியன் வருடம் கிரகோரியன் ஆண்டை விட 11 நாட்கள் அதிகம்...

இதனை அறிந்த மன்னர் அந்த மாதத்தில் இருந்து 11 நாட்களை அகற்றும் படி உத்தரவிட்டார்...

ஆகையால் அந்த மாதத்தில் உழைப்பாளிகள் 11 நாட்கள் குறைவாக உழைத்தனர்..

இதிலிருந்து தான் விடுப்பு ஊதியம் (paid leave) எனும் முறை தோன்றியது...

ஜூலியன் காலேண்டேரில் ஏப்ரல் 1 ஆம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வந்தது....

ஆனால் கிரகோரியன் காலேண்டேரில் ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டது....

கிரகோரியன் காலேண்டர் முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகும் மக்கள் பழைய வழக்கமான ஏப்ரல் 1 ஆம் தேதியையே புத்தாண்டாக கொண்டாடி வந்தனர்...

புதிய முறையை ஏற்க அதிக மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை...

அரசு சிறிய உத்தரவுகள் பிறப்பித்தும் மக்கள் பழைய வழக்கத்தை விடுவதாக இல்லை....

யோசித்த மன்னர் ஒரு வினோதமான அறிக்கையை வெளியிட்டார்....

ஏப்ரல் 1 ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாடுபவர் யாராக இருந்தாலும் அவர் முட்டாளாக அறியப் படுவார் என்று அந்த அறிக்கையில் இருந்தது....

அதிலிருந்து உதித்தது தான் ஏப்ரல் 1 ஆம் தேதி முட்டாள்கள் தினம் (april fool day)...

கண்கள் பல நிறங்களில் ஏன்.....?


இயற்கையின் வினோதப் படைப்புகள் அனைத்தும் வியப்பிற்குரியவை. அதில் மானிடப் படைப்பு அதனினும் வியப்புக்குரியது. இதையே சித்தர்கள் அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்றனர். கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும். பல மருந்துகளின் செயல்பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு (Perception) என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை வேறுபாடுகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது.

கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வேறு வெவ்வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு, மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாச்சார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாக்குகிறது.

உதாரண்மாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது கண் நிறம் ஒரு பல ஜீன (Polygenic) கூறு ஆகும். கண்களின் நிறம் கண்களில் உள்ள கருவிழியில் உள்ள நிறப்பொருட்களில் (Pigments) அளவை வைத்து தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. மனிதர்களிடத்திலும் விலங்குகளிடத்திலும் இது கண் நிற வேறுபாடு காணப்படுகிறது.

மனிதர்களில் கண்களின் நிறம் கருவிழியின் மெலனோசைட்டுகளால் உற்பத்தி செய்யப்படும் மெலனின் என்ற நிறப்பொருளின் வேறுபடும் விகிதாசாரத்தினால் நிற வேற்றுமைகள் ஏற்படுகின்றனர் மனிதர்களின் கண்ணில் ஒளி புகுந்து செல்லக்கூடிய விழிவெண்படலம் (cornea) முன்னாலும், அதற்குப் பின்னால் கருவிழிப் படலம் (iris) என்ற தசையாலான திரையும் உள்ளன.

கருவிழிப் படலம், ஒளி உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்துவது, மெலனின் என்ற நிறமிப் பொருளுடன் கூடிய உயிரணுக்களால் அமைந்தது. கண்களின் நிறத்திற்குக் காரணமாக அமைவது இந்நிறமிப் பொருளே. கருவிழிப்படலத்தில் மெலனின் என்ற நிறமிப் பொருள் இல்லாமற் போகுமானால் கண் நீல நிறமாகத் தோன்றும்.

இதற்குக் காரணம் கண்ணின் விழிப்படலத்திற்கும் ஒளி வில்லைக்கும் இடையேயுள்ள கண்முன்நீர் (aqueous humour) என்ற திரவப் பகுதியில் ஒளிக்கதிர் ஊடுருவிச் சென்று நீல நிறத்தை உண்டாக்குதலேயாகும். வானம் நீல நிறமாகக் காட்சியளிப்பதற்கும் இவ்விளைவே காரணம் எனலாம்.

நிறமிப் பொருள் அடர்த்தியாக இருக்குமானால் கண் பழுப்பு நிறமாயும், மிகவும் அடர்த்தியுடன் இருப்பின் கருமை நிறமாகவும் இருக்கும். இந்நிறமிப் பொருள் கருவிழிப்படலத்தில் இல்லாமல் இருப்பதும் அல்லது குறைந்தோ, கூடவோ இருப்பதும் மரபுவழிப்பட்ட பரம்பரை இயல்பாகும். இன்னும் சிலருக்குக் குழந்தைப் பருவத்தில் நீல நிறக் கண்களும், வளர வளரக் கண்கள் பழுப்பு நிறமாக மாறுவதும் உண்டு, கருவிழிப் படலத்தில் நிறமிப் பொருள் வயது கூடக் கூட, அடர்த்தியாகச் சேருவதே இதற்குக் காரணம்.

கண் கருவிழியின் நிறம் மனிதர்களை குறித்த பல்வேறு தகவல்களை கொடுக்க இயலும். பல மருந்துகளின் செயல்பாடுகளை மனிதர்களின் கண் நிறத்தை கொண்டு அறிய இயலும். மேலும் கண் நிற புலனுணர்வு (Perception) என்பது வெளிச்சத்தி அளவு, பார்க்கும் கோணம் போன்ற சூழ்நிலை வேறுபாடுகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது.

கண்களின் நிறம் கறுப்பு நிறத்தில் இருந்து மிக மென்மையான நீல நிறம் வரை வேறு வெவ்வேறாக வேறுபடுகிறது. உண்மையில் மூன்றே மூன்று நிறங்களே உள்ளன அவை பழுப்பு, மஞ்சள் மற்றும் சாம்பல் நிறம் ஆகும். இந்த மூன்று நிறங்களின் வெவ்வேறு விகிதாச்சார வேறுபாடுகளே கண்களில் பலதரப்பட்ட நிற வேறுபாடுகளை உருவாக்குகிறது. உதாரண்மாக பச்சை நிற கண்கள் மஞ்சள் மற்றும் கொஞ்சம் சாம்பல் நிறத்தின் சேர்க்கையால் ஏற்படுகிறது...

நம்பும் படியே நடக்கும்...


அமெரிக்கப் பத்திரிக்கையாளரும், பேராசிரியருமான நார்மன் கசின்ஸ் (Norman Cousins) கலிபோர்னியா பல்கலைகழகத்தில் மனித உணர்வுகள் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி ஆராய்ச்சிகளும் நடத்தியவர்.

அவர் ஒரு பேட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடந்த ஒரு கால் பந்துப் போட்டியின் போது நேரில் கண்ட தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். பெருந்திரளாக அந்த விளையாட்டைக் காண வந்திருந்த ரசிகர்களில் சிலர் திடீரென்று நோய் வாய்ப்பட்டனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்த குளிர்பான எந்திரம் ஒன்றிலிருந்து குளிர்பானம் குடித்திருப்பது தெரிய வந்தது. அது தான் காரணமாக இருக்கும் என்று மருத்துவர்கள் நினைத்ததால் உடனடியாக ஒலிப் பெருக்கியில் அறிவித்தனர். யாரும் அந்த குளிர்பான எந்திரத்தில் இருந்து குளிர்பானம் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். அதைக் குடித்தவர்களுக்கு ஏற்பட்டிருந்த உடல்நலக்குறைவின் அறிகுறிகளையும் விவரித்தனர். உடனே அதில் குளிர்பானம் வாங்கிக் குடித்திருந்து அது வரை நோய்வாய்ப்படாதவர்களும் அந்த நோய் அறிகுறிகளை உணர ஆரம்பித்தனர்.

பலரும் மயங்கி விழ ஆம்புலன்ஸ்கள் பெருமளவு அங்கே தேவைப்பட்டன. எல்லோரிடமும் பயம் பரவியது. உள்ளூர் மருத்துவமனைகள் நிரம்ப ஆரம்பித்தன. அதற்குள் அந்த திடீர் நோயிற்குக் காரணம் அந்த குளிர்பானம் அல்ல என்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அதுவும் அறிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட பிறகு நோயின் அறிகுறிகளை தங்கள் உடல்களில் உணர ஆரம்பித்தவர்கள் கூட சரியாக ஆரம்பித்தார்கள். மயங்கி விழுந்தவர்கள் கூட திடீரென்று நலமடைந்தார்கள். சிறிது நேரத்தில் ஆரம்பத்தில் நோய் வாய்ப்பட்டவர்களைத் தவிர எல்லோரும் நலமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் முதலில் நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமே உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் அந்த குளிர்பான எந்திரத்தில் இருந்து குடித்ததால் தான் அந்த நோய் ஏற்பட்டது என்று அறிவித்தவுடன் அதில் இருந்து குளிர்பானம் குடித்த அத்தனை பேரிடமும் அந்த நோயின் அறிகுறிகள் காண ஆரம்பித்ததும் பிரச்சினை அந்த குளிர்பான எந்திரத்தில் அல்ல என்பதை அறிவித்தவுடன் அந்த நோயின் அறிகுறிகள் காணாமல் போனதும் மனதினால் சாதிக்கப்பட்டவை. அது தான் அந்த நிகழ்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மனதின் நம்பிக்கைகளின் சக்தி இது போன்ற எத்தனையோ ஆராய்ச்சிகளில் விளக்கப்பட்டுள்ளது. ஹார்வர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் ஹென்றி பீச்சர் (Dr. Henry Beecher) இது குறித்து விரிவான ஆராய்ச்சிகள் பலவற்றை செய்துள்ளார். அதில் ஒரு ஆராய்ச்சி நம்பிக்கைகள் ஏற்படுத்தும் உடலியல் மாற்றங்கள் குறித்தது. அந்த ஆராய்ச்சியில் 100 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இரண்டு புதிய மருந்து வகைகளைக் கண்டுபிடித்திருப்பதாகவும் அதன் சக்தி பரிசோதனைக்காக இந்த ஆராய்ச்சி என்றும் அந்த மாணவர்களுக்குச் சொல்லப்பட்டது.

சிவப்பு மாத்திரை (capsule) உடனடியாக அதிக சக்தி தரும் ஊக்க மருந்தாகவும் (super-stimulant), நீல மாத்திரை உடனடியாக அமைதிப்படுத்தும் மருந்தாகவும் (super-tranquilizer) மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் அந்த மாத்திரைகள் மாணவர்கள் அறியாமல் மாற்றப்பட்டிருந்தன. சிவப்பு மாத்திரை அமைதிப்படுத்தும் மருந்தாகவும், நீல மாத்திரை சக்தியை அதிகரிக்கும் மருந்தாகவும் இருக்க அவற்றை மாணவர்களுக்கு உட்கொள்ளக் கொடுத்தார்கள். ஆனால் ஐம்பது சதவீதம் மாணவர்கள் தாங்கள் என்ன மருந்து சாப்பிட்டோம் என்று தவறாக நம்பினார்களோ அதற்கேற்ற விளைவுகளையே தங்கள் உடலில் கண்டார்கள். இது வரை மருந்தே அல்லாத ஒன்றை மருந்தென்று (Placebo Effect) நம்பி அதற்கேற்றவாறு குணமான பல ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் டாக்டர் ஹென்றி பீச்சர் உண்மையான மருந்தையே கொடுத்து அதற்கு நேர் எதிரான ஒரு விளைவை மனிதன் தன் நம்பிக்கையால் ஏற்படுத்திக் கொள்கிறான் என்று கண்டுபிடித்தது தான் இந்த ஆராய்ச்சியின் சிறப்பு.

யேல் பல்கலைக்கழக பேராசிரியர் (Dr. Bernie Siegel) அன்னியன் திரைப்படத்தில் வருவது போல பல ஆட்களாய் ஒருவரே மாறும் (Multiple Personality Disorders) வியாதியைப் பற்றி பல ஆராய்ச்சிகள் செய்தவர். அப்படி வேறொருவராக மாறும் போது வியக்கத்தக்க வகையில் அவர் உடலும், குணாதிசயங்களும் மாறுவதாக அவர் பரிசோதித்து கண்டிருக்கிறார். அந்த திரைப்படத்தில் வருவது போன்ற மாற்றங்கள் வெறும் கற்பனை அல்ல என்று இதன் மூலம் தெரிகிறது.

இந்த ஆராய்ச்சிகளும், நம்முடைய சில அனுபவங்களும் சொல்லும் மகத்தான உண்மை இது தான் - மனம் எதை உண்மையென நம்புகிறதோ அதை உருவாக்க வல்லது. அந்த நம்பிக்கையின் ஆழத்திற்கேற்ப உருவாக்கத்தின் தன்மையும் இருக்கும்.  இருட்டில் கையில் பிடித்தது கயிறாக இருந்தாலும் அதை பாம்பு என்று எண்ணி பயக்கும் வரையில் உடலில் ஏற்படும் அத்தனை விளைவுகளும் பாம்பைப் பிடிப்பதால் ஏற்படும் விளைவுகளாகவே இருக்கும். விளக்கைப் போட்ட பின் அது கயிறென்று உணர்ந்த பின் தான் அந்த பயத்தின் மாற்றங்கள் விலகும்.

உடலில் மட்டும் தான் நம் நம்பிக்கையின் விளைவுகள் வெளிப்படும் என்பதில்லை. எல்லாவற்றிலும் நம் நம்பிக்கைகளின் ஆதிக்கம் உண்டு. எதை நம்புகிறோமா அதற்கேற்ற தன்மைகளை நாம் நம்மிடம் உருவாக்கிக் கொள்கிறோம். அடுத்தவர்களிடமும் உருவாக்கி விடுகிறோம்.

மனம் அந்த அளவு சக்தி வாய்ந்தது என்றால் நாம் எப்படிப்பட்ட நம்பிக்கைகளுடன் வாழ்கிறோம் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி நாம் கவனமாக இருக்கிறோமா? நம்முடைய நம்பிக்கைகளில் எத்தனை நம்மை பலப்படுத்துவனவாக இருக்கின்றன? எத்தனை நம்பிக்கைகள் நம்மை மெருகேற்றுவனவாக இருக்கின்றன? இந்தக் கேள்விகளுக்கான பதில்களில் தான் நம் வாழ்க்கையின் போக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

நான் அதிர்ஷ்டமில்லாதவன் என்று திடமாக நம்பும் ஒருவன் அப்படி அதிர்ஷ்டம் இல்லாதவனாகவே வாழ்ந்து மடிகிறான். ஒருசில விஷயங்களில் தொடர்ந்து சில முறை தோல்விகளும், சிக்கல்களும் ஏற்படலாம். அதை வைத்து உடனடியாக அதிர்ஷ்டமில்லாதவன் என்று நம்ப ஆரம்பிப்பது அப்படியே நம் வாழ்வைத் தீர்மானித்து விடுவது போலத் தான். அதே போலத் தான் நல்ல நம்பிக்கைகளும் நம் வாழ்வில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் வலிமை வாய்ந்தவை. ‘எனக்கு கடவுள் பக்கபலமாக இருக்கிறார்’ என்ற நம்பிக்கையில் இருப்பவன் எல்லா சிக்கல்களிலும், பிரச்சினைகளிலும் முடிவில் ஏதாவது ஒரு தீர்வைக் கண்டுபிடிக்கிறான். கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ, கடவுள் அருள் அவனுக்கு உண்டோ, இல்லையோ, அந்த நம்பிக்கை அவனை அந்த மோசமான சூழ்நிலைகளிலிருந்து காப்பாற்றி விடும் என்பது உண்மை.

ஆழமாக எதை நம்பினாலும் அதற்கேற்ற சூழ்நிலைகளையும், தன்மைகளையும் ஈர்க்கக் கூடிய சக்தி நமது ஆழ்மனதிற்கு உண்டு. அதற்கேற்றபடி நம்முடன் பழகுபவர்களின் இயல்புகளை மாற்றும் சக்தியும் நமது ஆழ்மனதிற்குண்டு. அது சரி தவறு என்று பகுத்தறியும் சிரமத்தை அது எடுத்துக் கொள்வதில்லை. அதனால் அந்த சிரமத்தை நாம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். நம் அறிவைப் பயன்படுத்தி நம் நம்பிக்கைகளில் நமக்கு நன்மை அல்லாதவற்றை அவ்வப்போது கண்டு களைந்து எறிந்து விட வேண்டும். நல்ல வலுவான நம்பிக்கைகளையே நம்மிடம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

எனவே வாழ்க்கையில் எல்லா சமயங்களிலும் நல்லதை நம்புங்கள், வலிமையை நம்புங்கள், சுபிட்சத்தை நம்புங்கள். நம்பிக்கையின் படி சில நேரங்களில் நடக்காமல் போகலாம், எதிர்மாறாகக் கூட சில நேரங்களில் நடக்கலாம். அதை விதிவிலக்காக எண்ணுங்கள். உங்கள் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள். தொடர்ந்து நம்பி நன்மைகளை எதிர்பாருங்கள். விரைவில் அந்த நம்பிக்கையின் படியே நல்ல பாதைக்கு வாழ்க்கை நிகழ்வுகள் திரும்புவதை நீங்கள் காணலாம்...

நோய் எப்படி உண்டாகிறது...


நான் படித்த உளவியலில் இருந்து.. மாணவர்களுக்காக படிப்பது எப்படி என்பதற்கான சில பயிற்சி முறைகள்...


படிப்பதன் நோக்கம் என்ன? என்பதை முதலில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்..

பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும், அறிவை பெருக்கிக் கொள்வதற்கும், தேவையில்லாத பழக்கங்ளை நீக்கிக் கொள்வதற்கும், ஆளுமையை மேம்படுத்துவதற்கும் முழுமையாகப் பயன்படுவது தான் படிப்பதன் முக்கிய நோக்கம் – என்பதை பள்ளிப் பருவத்தில் அறிந்து கொண்டவர்கள் தங்கள் படிக்கும் பழக்கத்தை நெறிப்படுத்திக் கொள்கிறார்கள்..

எவ்வாறு படிக்க வேண்டும்? என்பதை அறிந்து கொள்வது தான் படிக்கும் பழக்கத்தின் முதல்படி ஆகும்.

ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமாக தங்களின் கற்றுக்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள்.

வெவ்வேறு விதமான படிக்கும் பழக்கத்தை நடைமுறைப்படுத்தி கற்றல் (Learning) கலையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள்.

தான் கற்கும் முறை சரியானது தானா? என்பதுகூட தெரியாமல் சில மாணவ – மாணவிகள் பள்ளிகளில் பாடங்களை படிப்பதும் உண்டு.

எனவே முறைப்படி கற்கும் கலையைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

ஒரு நிகழ்வில் இருந்து கூட பாடத்தை கற்றுக்கொள்ள முடியும். அதேபோல் விளையாட்டாக விளையாடும் போதும் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

குறிப்பாக – நாம் பார்க்கும் பார்வைகள் (Sight), கேட்பவைகள் (Hearing), செய்யும் செயல்கள் (Doing) ஆகியவற்றின் மூலம் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்..

மெய், வாய், கண், மூக்கு, செவி – என்னும் இந்த ஐம்புலன்களும் (Five Senses) நம்மைச் சுற்றி நடக்கின்ற பல்வேறு தகவல்களை நம் மனதினுள் கொண்டுவருகிறது. இந்தத் தகவல்களை முறைப்படுத்தி தேவையானவற்றை மட்டும் உள்வாங்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் படிக்கும் காலத்திலேயே நெறிவாழ்க்கை வாழ்வதற்கான பயிற்சியை எளிதாகப் பெற்றுவிடலாம்..

பார்த்தல், கேட்டல், செய்தல் – ஆகிய 3 முறைகளையும் பயன்படுத்தி முறையாக கல்வி கற்க வேண்டும்..

பார்த்தல் எனப்படும் பார்வை என்பது தான் கற்பவருக்கு அவர் படித்தத் தகவல்களை எளிதான முறையில் நினைவில் கொண்டு வருவதற்கு உதவுகிறது. எனவே பாடத்தை கவனமுடன் படிக்கும் போது எவற்றையெல்லாம் படிக்க வேண்டும்? என்பதை மனதிற்குள் முதலில் காட்சிப்படுத்திக் (Visualisation) கொள்ள வேண்டும்.

காட்சிப்படுத்துதல் என்பது செய்ய வேண்டிய செயல்களை மனக்கண்ணில் கொண்டு வந்து ஒவ்வொன்றாக சிந்தித்து பார்ப்பது ஆகும்.

உதாரணமாக – இன்று மாலை படிக்க வேண்டும்? என்று நீங்கள் திட்டமிட்டிருந்தால் காட்சிப்படுத்துதல் முறையில் இதனைப்பற்றி இப்படி கீழ்க்கண்டவாறு சிந்திக்கலாம்..

நான் பள்ளியை விட்டு 4 மணிக்கு வீட்டுக்கு புறப்பட வேண்டும். சைக்கிளில் வீட்டிற்குச் செல்லும் போது மணி 4.30 ஆகிவிடும். முகம் கழுவ வேண்டும். அம்மா டீ தருவார்கள். அதனை சாப்பிட்டு முடிக்கும் போது மணி 5 ஆகிவிடும். அதன் பின்னர் முதலில் தமிழ் பாடத்தை படிக்க வேண்டும். ஆங்கிலப் பாடத்தை படித்தபின்பு அறிவியல் பாடத்தை முடிக்க வேண்டும். பின்பு ஹோம் வொர்க் கை செய்து முடிக்க வேண்டும். இரவு 7 மணி வரை படித்தபின்பு கொஞ்ச நேரம் டி.வி. பார்க்க வேண்டும் 7.30 மணிக்கு சாப்பிட்டு விட்டு செய்தித்தாள்கள் படிக்க வேண்டும். சாப்பிடும் போது அம்மாவிடமும், தங்கையிடமும் இன்று நடந்த செய்திகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். 8.30 மணியிலிருந்து 10.30 மணிவரை மீண்டும் பாடங்களைப் படிக்க வேண்டும் – என்று காட்சிப்படுத்துதல் முறையில் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்..

ஒரு திரைப்படத்தில் அடுத்தடுத்து வரும் நிகழ்வுகள் போல செய்ய வேண்டிய பணிகளை முறைப்படுத்தி மனதிற்குள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வதைத் தான் காட்சிப்படுத்துதல் என அழைப்பார்கள்..

படிப்பது மட்டுமல்ல, எந்தவொரு செயலில் ஈடுபட்டாலும் காட்சிப்படுத்துதல் அந்த செயல் வெற்றிக்கு அடித்தளமாக அமையும். செய்ய வேண்டிய செயல்களை காட்சிப்படுத்துதல் மூலம் முன்கூட்டியே திட்டமிட்ட பின்பு அதனை நடைமுறைப்படுத்துவது எளிதாகும்..

காட்சிப்படுத்துதலை அடுத்து எப்படி படிக்க வேண்டும்? என்பவற்றையும் தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

படிப்பதற்காக நேரம் ஒதுக்கி வீட்டில் படிக்கும் நேரத்தில் தேவையான நோட்டுப் புத்தகங்களை அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் தேவையான புத்தகங்களும், நோட்டுகளும் எங்கே இருக்கிறது? என்பதை கண்டு பிடிக்கும் விதத்தில் தேடுதல் வேட்டை யில் ஈடுபட வேண்டிய சூழல் உருவாகிவிடும்..

வகுப்பில் பாடவேளையில் எடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்ட நோட்டுகளையும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த குறிப்பு நோட்டுகளில் குறிக்கப்பட்ட மிகவும் முக்கியமான குறிப்புகளை மட்டும் கலர் பென்சில் கொண்டு அடிக்கோடு இட்டுக் கொள்ள வேண்டும். இதன்மூலம் முக்கியக் குறிப்புகளை மனதில் எளிய முறையில் பதியச் செய்யலாம்..

வகுப்பில் ஆசிரியர்கள் நடத்திய பாடங்களையும் காட்சிப்படுத்துதல் முறையில் அடிக்கடி நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். தேவையான இடங்களில் படங்கள் வரையவும், வரைபடங்களை பயன்படுத்தவும் பயிற்சிகள் மேற்கொள்ளலாம். சிலவேளைகளில் பாடங்கள் பற்றிய தெளிவான குறிப்புகள் கிடைக்கவில்லையென்றால் இண்டர்நெட்டை பயன்படுத்தி இணையதளங்கள் மூலம் படிக்கும் பாடத்திற்கு உதவும் வகையில் அதிக தகவல்களை அதிகமாக சேகரித்துக் கொள்வதன் மூலமும் பாடங்களை எளிதில் கற்க இயலும்..

சிறந்த முறையில் படிப்பதற்கு உதவும் வகையில் பல்வேறு ஆடியோ சி.டிக்கள் (CD) வெளிவந்துள்ளன. அதைப்போலவே வீடியோ சி.டி.க்களும் வெளியிடப்பட்டுள்ளன. பாடத்தை எளிதாக கற்கும் வகையில் அந்தவகை சி.டி.க்கள் உதவுவதால் அவைகளையும் பயன்படுத்தி கற்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்..

தனியாக இருந்து அறையில் படிக்கும் போது படித்தவற்றை திரும்ப ஒருமுறை புத்தங்களைப் பார்க்காமல் சொல்லிப் பார்த்து நினைவாற்றலை வளர்க்கலாம். மேலும் நெருங்கிய வகுப்பு நண்பர்களை சந்தித்தும் தான் படித்த பாடங்களை அவர்களோடு பகிர்ந்து கொண்டு பாடம் சம்பந்தப்பட்ட மேலும் பல தகவல்களை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்..

வகுப்பில் ஆசிரியர்கள் சிலவேளைகளில் குழு விவாதம் (Group Discussion) மூலம் பாடங்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குவார்கள். அந்த வேளைகளில் ஆர்வத்தோடு மற்ற குழு உறுப்பினர்களோடு சேர்ந்து கருத்துக்களை பரிமாறுவதற்கும், முரண்பாடுகள் இல்லாமல் மற்ற குழு உறுப்பினர்களோடு பழகுவதற்கும் கற்றுக் கொள்ள வேண்டும்.

குழு விவாதத்தின்போது ஒருவர் தனது பகுப்பாய்வு திறனையும் (Analytical Skill), முடிவெடுக்கும் திறனையும் (Decision Making Skill), பிறறோடு இணைந்து பழகும் திறனையும் (Interpersonal Skill) வளர்த்துக் கொள்வதற்கு அருமையான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு குழு விவாதத்தில் பங்குகொள்ள வேண்டும். அப்போதுதான் அறிவாற்றலையும், மற்றவர்களோடு பிரச்சினை இல்லாமல் இணைந்து பழகும் திறனையும் வளர்க்க இயலும்..

அறையில் ஒரே இடத்தில் அமர்ந்து தொடர்ந்து பல மணிநேரங்கள் படிக்கும்போது களைப்பு ஏற்படலாம். இந்தக் களைப்பைப் போக்குவதற்கு இடையிடையே எழுந்துநின்று கொள்ளலாம். சிலவேளைகளில் புத்தகத்தை மூடி வைத்துக் கொண்டு அங்கும் இங்குமாக கொஞ்சநேரம் நடந்தும் வரலாம். தொடர்ந்து படிக்கும்போது ஏற்படும் களைப்பை நீக்குவதற்கு இடையிடையே இடைவெளிவிட்டு (Breaks) படிப்பது நல்லது..

படித்த பாடங்கள் எளிதில் நினைவில் நிற்கும் வகையில் படித்தவற்றை தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிப்பார்ப்பது நல்லது.

இதேபோல் அறிவியல் பாடங்களில் உள்ள சோதனைகளை (Experiments) வீட்டில் தனியாக செய்து பார்த்து அந்தப் பாடம் பற்றி மேலும் கற்றுக்கொள்ள முயற்சிசெய்ய வேண்டும்..

படிப்பது என்பது நினைவுக் கலையை வளர்ப்பதற்கான ஒரு பயிற்சி என்பதை புரிந்து கொண்டவர்கள் சிறுவயது முதலே பாடங்களை ஒழுங்காகப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதுதான் கல்வியாளர்களின் கருத்தாகும்..

மனதை ஒருமுகப்படுத்தவும், திறமைகளை வளர்க்கவும், வாழ்க்கையை வளப்படுத்தவும் கல்விதான் மிகப்பெரிய துணை என்பதை அனைவரும் புரிந்து கொண்டு செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றிகள் குவியும்...

திருமணத்தில் நூதன விருந்து வைத்த மணமக்கள்.. குவியும் பாராட்டு...


புதுச்சேரியை அடுத்த ஆரோவில் அருகே உள்ள சஞ்ஜீவி நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இசைக்கலைஞரான இவருக்கும் சென்னையை சேர்ந்த பட்டதாரி பெண்ணான கீர்த்தி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று இருவருக்கும் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள கல்யாண மண்டபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் இருவரும் மண்டப வாசலில் வந்து  உறவினர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க தொடங்கினர்.

இதனை திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மறுக்காமல் வாங்கி குடித்து விட்டு அவர்களை ஆசிர்வாதம் செய்தனர். 

டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் தாக்கி வரும் நிலையில், மணமக்கள் நில  வேம்பு கசாயம் அளித்தற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்...

பச்சோந்தி பற்றிய சில தகவல்கள்...


ஓந்தி அல்லது பச்சோந்தி ஊர்வன பிரிவைச் சேர்ந்த ஒரு விலங்கு குடும்பம்.

ஓந்திகளுள் ஒரு சில அவற்றின் மனநிலை, வெப்பம், ஒளி ஆகியவற்றைப் பொறுத்து தங்களின் தோலின் நிறத்தை மாற்றவல்லவை..

ஓந்திகளுள் சில இனங்கள், தாம் இருக்கும் இடத்திற்கு ஏற்றாற்போல் தமது நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் படைத்தவை.

இதற்கு காரணம் அவற்றின் தோலில் உள்ள நிற கலங்களுக்கும், மூளைப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்து கொண்டேயிருப்பதாகும்.

பச்சோந்திக்கு காக்கை, கழுகுகளால் ஆபத்து அதிகம். அதுமட்டுமல்லாமல் ஒரு பயந்த பிராணி.

அதனால் ஒரு நிமிடத்திற்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக் கொள்ளும்.

பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு.

பச்சோந்தி தன் ஒரு கண்ணால் ஒரு இடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது.

அது மட்டுமின்றி தன்னுடைய இரு கண்களையும் 360°க்கு சுழலும் தன்மையையுடையது.

பச்சோந்திகள் கட்புலனாகும் ஒளியை மட்டுமன்றி புற ஊதாக்கதிர்களையும் கண்டுணரவல்லது.

அத்துடன் இவைகள் நாக்கினாலே வேட்டையாடுகின்றன.

இதன் நாக்கு ஒட்டும் தன்மையையும் நீண்ட தூரம் நீட்டும் வகைலும் காணப்படுகிரமையினால், இதனால் இருந்த இடத்திலேயே இரையை வேட்டையாடலாம்.

பச்சோந்தியின் நாக்கு அதன் உடம்பைப் போல் இரண்டு மடங்கு நீளம் கொண்டது...

தமிழகத்தில் நீங்கள் இனவாதம் பற்றி பேசுகிறீர்களே.. மற்ற மாநிலத்தில் வாழும் தமிழனின் நிலையை எண்ணிப் பாருங்கள்... நண்பரின் கேள்வி இது...


பதில் : பிற மாநிலங்களில் பெரும்பான்மையாக உள்ள தமிழர்களுக்கு எந்த ஒரு அரசியல் அங்கீகாரமோ அடையாளமோ வழங்கப்படவில்லையே, ஏன்?

சில கட்சிகள் பிறமொழியாளர்களுக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அரசியலில் இடம் கொடுக்க வேண்டும் என்கிறார்கள் . நல்ல விடயம் தான். அது தான் சனநாயகப் பூர்வமானது.

ஆனால் அப்படிச் சொல்பவர்கள் ஆந்திராவில் 30 விழுக்காடு தமிழர்களும்.

கர்நாடகாவில் 33 விழுக்காடு தமிழர்களும்.

கேரளாவில் 30 விழுக்காடு தமிழர்களும் வாழ்கிறார்கள் .

அங்கு அவர்களுக்கு எத்தனை விழுக்காடு அரசியலில் இடம் கொடுத்து இருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து பார்த்த பின்பே வழங்க வேண்டும்.

ஆனால் ஒரு விழுக்காடு கூட அந்த மாநிலங்களில் தமிழர்களுக்கு அரசியலிலும் சரி அரசு சார்ந்த பணியிலும் சரி இடம் வழங்கப்படவில்லை என்பதே கசப்பான உண்மை.

இது இப்படிச் சொல்கின்ற கட்சியினருக்கும் உங்களுக்கும் புரியுமா?

ஆஸ்பத்திரிக்கு வந்தால் குடும்ப கட்டுப்பாடு செய்து விடுவீர்கள்.. 12வது குழந்தை பெற்ற பெண்ணின் பிடிவாதம்...


திருச்சி மாவட்டம் முசிறி கீழத்தெருவைச் சேர்ந்த கண்ணன். கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 11 குழந்தைகள் பிறந்தன. அதில் 2 குழந்தைகள் இறந்துவிட்டன. 9 பிள்ளைகள் மட்டும் உள்ளன.

இந்த வேளையில், சாந்தி கர்ப்பம் தரித்ததார். இதையறிந்த கிராம சுகாதார செவிலியர் சுப்புலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெறும்படி அறிவுறுத்தினார். ஆனால், அதற்கு சாந்தி மறுத்துவிட்டார்.

மேலும், குழந்தைகள் அதிகமாக இருப்பதால், மருத்துவமனையில் தனக்கு குடும்ப கட்டுப்பாடு செய்துவிடுவார்கள் என அவர் கூறியுள்ளார். இதற்காக எவ்வித பரிசோதனையும் அவர் செய்து கொள்ளவில்லை.

இதையடுத்து, மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள், மேற்கண்ட கிராமத்துக்கு சென்று, சாந்தியை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சில நாட்கள் சிகிச்சை பெற்ற சாந்தி, மீண்டும் வீடு திரும்பினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சாந்திக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வீட்டில் இருந்த சாந்தி, கணவர் கண்ணனின் உதவியுடன் தனக்கு தானே பிரசவம் பார்த்து கொண்டார். அதில் பெண் குழந்தை பிறந்தது.

தகவலறிந்து அங்கு சென்ற சுகாதார துறையினர், சாந்தியை அழைத்து சென்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு தாயும், குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்.

இதுகுறித்து சாந்தியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தனது பிரசவத்தை தானே பார்த்துக் கொண்டதாகவும், தனது கணவர் சிறிது உதவி மட்டும் செய்ததாக கூறினார்...

தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்...


பிஸ்தா பருப்பு நன்மைகள்...


ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் இனப்பெருக்க ஹார்மோன்களின் குறைபாட்டை நீக்கி, பாலுறவில் ஈடுபடுவதற்கு ஏற்ற உடற்தகுதியையும், மனப்புத்துணர்ச்சியையும் தரும் அற்புத மூலிகை தான் பிஸ்தா.

பிஸ்டேசியா வீரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட அனகார்டியேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறுமரங்களின் உலர்ந்த பழ பருப்புகளே பிஸ்தாபருப்பு என்று அழைக்கப்படுகின்றன.

பிஸ்தா பருப்பில் டெரிபின்தினேட், இனிப்புச் சுவையுடைய நறுமண எண்ணெய், காலோடானிக் அமிலம் ஆகியன காணப்படுகின்றன. இவை நரம்பு மணடலத்தை தூண்டி, ஹார்மோன்களின் சுரப்பை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன.

பிஸ்தா பருப்பை இளவறுப்பாக வறுத்து, ஒன்றிரண்டாக இடித்து, கற்கண்டு சேர்த்த பாலுடன் கலந்து தினமும் 1 முறை சாப்பிட தேகம் ஆரோக்கியமடைவதுடன் பாலுறுப்புகள் வலுவடைகின்றன.

பிஸ்தா பருப்பை நெய்விட்டு வறுத்து, ஒன்று அல்லது இரண்டு தினமும் சாப்பிட செரிமான சக்தி அதிகப்படுவதுடன் சுறுசுறுப்பு உண்டாகும்.

பிரசவித்த பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேக வைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

ஆண், பெண் இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட போக சக்தி அதிகரிக்கும்.

மணம் மற்றும் நறுசுவை நிறைந்த பிஸ்தா பருப்பானது ஐஸ்கிரீம், கேக், சாக்லேட் போன்றவற்றில் பெருமளவு சேர்க்கப்படுகிறது...

தமிழகத்தின் விரோதி நியூஸ் 7 தொலைக்காட்சி....


சென்ற வாரம் சர்க்கார் , இந்த வாரம் ரஜினி.

நாட்டின் 4ம் முனையாம் ஊடகம், TRP க்காக மழுங்கி போய் விட்டது போல.

தொடரும் பெண்கள் மீதான தாக்குதல்கள் , பன்றி/டெங்கு காய்ச்சல்  மரணங்கள் , ஓரகடத்தில்  50+ நாட்களுக்கு  மேலான  வேலை நிறுத்தம் என மக்கள் பிரச்சினை....

இவைகளை மறைத்து மக்களை திசை திருப்பும் வேலைகளில்...

நான் ஏன் பாமக அன்புமணி இராமதாஸ் அவர்களை ஆதரிக்கிறேன்...


இவர் அமைச்சராக இருந்த போது, பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் புகைப்பிடிப்பது தடை செய்யப்பட்டது.

சிகரெட், புகையிலைப் பொருள்கள் விளம்பரங்கள், சிறுவர்களுக்குப் புகையிலைப் பொருள்கள் விற்பது, கல்விக்கூடங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பது என்பவை தடை செய்யப்பட்டது.

புகை பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றை இந்தியத் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் மூலம் கவர்ச்சிகரமாகக் காட்டி இளைஞர்களைப் போதைப் பொருள்களுக்கு அடிமையாக்குவதைத் தடுக்கக் கடுமையான தணிக்கை நெறிகளைக் கொண்டு வந்தார்.

இவரது இந்தச் செயல்கள், புகையிலை, மற்றும் மதுபானப் பெருநிறுவனங்களின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளாக்கின.

எனினும், அமெரிக்கப் புற்றுநோய்க் கழகம் இவரது புகையிலைப் பொருள்கள் எதிர்ப்புச் செயல்களைப் போற்றி சூலை 14, 2006 அன்று இந்திய மருத்துவ அமைச்சகத்துக்கு லூதர் எல். டெர்ரி விருது வழங்கிப் பாராட்டியது...

கஜா புயல் மண்டல பொறுப்பு அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்கள்...


கடலூர் - உதவி செயற் பொறியாளர் ஜோதி வேலு - 9443435879-7402606213

அண்ணாகிராமம் - கலெக்டர் பி.ஏ., (சத்துணவு) ரவிச்சந்திரன் - 9443702189

பண்ருட்டி - கலெக்டர் பி.ஏ., (தேர்தல்) மோகனசுந்தரம் - 9940779045

குறிஞ்சிப்பாடி - மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல் - 9445000209

காட்டுமன்னார்கோவில் - மாவட்ட பஞ்சாயத்து செயலர் சிவஞானபாரதி - 7402606221

குமராட்சி - மாவட்ட பி.சி., சிறுபான்மையினர் நல அலுவலர் பானுகோபன் - 9445477830

கீரப்பாளையம் - முத்திரைத்தாள் தனித்துணை கலெக்டர் ஜெயக்குமார் - 9952712551

மேல்புவனகிரி - உதவி திட்ட அலுவலர் ராஜேந்திரன் - 7402606223

பரங்கிப்பேட்டை - தாட்கோ மாவட்ட மேலாளர் ராஜலட்சுமி - 9445029458

விருத்தாசலம் - பஞ்சாயத்துகள் உதவி இயக்குநர் தாராஈஸ்வரி - 9942354568

கம்மாபுரம் - சமூக பாதுகாப்பு திட்ட தனி கலெக்டர் பரிமளம் - 9486529140;

நல்லூர் - தனிக்கை உதவி இயக்குநர் ரவிச்சந்திரன் - 7402606295

மங்களூர் - கலால் உதவி ஆணையர் நடராஜன் - 9442101966

கடலுார்-1 மற்றும் 2 - மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா - 9444094257

பண்ருட்டி - வருவாய், தனி துணை கலெக்டர் மங்களநாதன் - 9894442752;

நெல்லிக்குப்பம் - இ.ஐ.டி., பாரி துணை கலெக்டர் ஈஸ்வரி - 9442402366

சிதம்பரம் - மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராசு - 9486647087

விருத்தாசலம் - துணை கலெக்டர் அம்பிகா சர்க்கரை ஆலை வைத்தியநாதன் - 9500337344...

அதிர்வலைகள்...


இந்த பிரபஞ்சமே ஒரு கோணத்தில் பார்க்கும்போது அனைத்துமே அதிர்வலைகளாக தான் உள்ளது.
அதற்கு ஒரு எடுத்துகாட்டு பின்வருபவை.

1939 ஆம் ஆண்டு சுவிடன் நாட்டை சேர்ந்த Dr.Jarl என்பவர் திப்பெத்தில் உள்ள துறவிகள் மடலாயத்திற்கு சிறப்பு விருந்தினராக லாமா தலைமையில் அழைக்கப்பட்டு இருந்தார்,

அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு சென்ற அவர் சில நாள்கள் அங்கேயே தங்கிருந்தார், அவர்களுடன் நல்ல நட்புஉறவு ஏற்ப்படவே துறவிகள் கட்டும் கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கு ஒருமுறை Dr.Jarl லையும் அழைத்து சென்றனர்.

உடன் வந்த துறவிகளோ கையில் பறை, நீள்குழல் போன்ற இசைகருவிகளை எடுத்து வந்தனர்,Dr.Jarl லோ
கட்டுமான பணிகளுக்கும் இசை கருவிகளுக்கும் என்ன சம்மந்தம் என குழம்பியிருந்தார்.

கட்டுமான பணி நடக்கும் குன்றை அடைந்ததும் அங்கு பெரிய அளவிலான பாறைகள் ஆங்காங்கெ வெட்டப்பட்டு கிடந்தன அவைகள் உருவாக்கப்படும் பாறைகளான மதில்சுவருக்கு ஏற்றவாரு சில அடி தூரமும், உயரமும் கொண்டு செல்லப்பட வேண்டி இருந்ததது.

துறவிகளோ தாங்கள் கொண்டுவந்த இசைகருவிகளை தாங்கள் தூக்கப்பட வேண்டிய   பாறைகளில் இருந்தது 63 மீட்டர் தொலைவிலும் ஒரு குறுப்பிட்ட கோணத்திலும் வரிசைபடுத்தினர் அதில் மொத்தம் 19 கருவிகள்,அதில் 13 பறைகள் மற்றும் மற்ற பிறஇசைகருவிகளும் அடக்கம், பிறகு வாத்தியங்களை இசைக்க தொடங்கினர் அதில் இருந்து 6 விதமான எக்காளம் (ஒலி) எழுப்பப்பட்டது,

அதனை தொடர்ந்து துறவிகள் ஒருவித ஒலி அமைப்புடன் கூடிய வழிபாடுகளையும் நடத்தினர்.

அதனை தொடர்ந்து கனமான பாறை அந்தரத்தில் மிதக்க தொடங்கியது குன்றின் கீழில் இருந்து 250 மீட்டர் தொலைவிருக்கு அந்தரத்தில் மிதந்தபடி குன்றின் உச்சியை அடைந்தது இது போன்று ஒருமணிநேரத்தில் 5-6 பாறைகளை அவர்கள் இடம்பெயர்த்தி கட்டுமான பணிகளை செய்தனர்.

இதை பார்த்த Dr.Jarl  அதிசயத்து போயினார் அவரது கண்களை அவராலே நம்பமுடியவில்லை, பிறகு அவர்  இதனை படமாக்கி கொண்டு கிளம்பினார்.

அப்படியென்றல் யோசித்து பாருங்கள் உலகில் இன்றும் காணப்படும் மிகப்பெரிய அளவிலான பழங்கால கட்டிடங்கள் எப்படி கட்டப்பட்டது என புரியும்.

அறிவியலில் இப்போது சத்தத்தை கொண்டு சிறிய அளவிலான கற்களை மிதக்கவைக்கமுடியும் என இப்போது நிருபித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த அதிர்வலைகளை உருவாக்குவதன் மூலம் அனைத்தையும் சாதிக்கமுடியும்.

உதரனத்திற்க்கு இவற்றை கொண்டு முந்தைய அரசர்கள் வானிலையை கட்டுபடுத்தியுள்ளனர்.

மற்றும் புவியின் சுழ்ற்ச்சியையும் ஒழுங்குபடுத்தி பஞ்சம் வராமல் தடுத்துள்ளனர்.

மற்றும் இதுவே வரும் காலங்களில் மருத்துவ முறைகளில் ஒன்றாகவும் வரவாய்ப்பு உள்ளது.

இவற்றை முறையாக பயன்படுத்துவதன் மூலம் காடுகளை கூட உருவாக்கமுடியும். எதையும் நல்லவற்றிக்கு பயன்படுத்தினால் அனைவருக்கும் நல்லது தான்...

ஆஸ்திரேலியா பிரமிட்...


குழந்தை பருவம்..


குழந்தைகள் பிறக்கும் போது விவாதம் செய்ய அறிவே இருக்காது. விவாதம் என்றால் என்ன என்றே தெரியாது.

குழந்தைகள் அனைவரும் ஏழு வயதிற்கு முன் பிடிக்க பட்டுவிட வேண்டும்.

குழந்தை இந்து, கிருத்துவன், முஸ்லிம்,
அல்லது பிற மதங்கள் அல்லது எதாவது ஒன்றில் நிலைபடுத்த பட்டுவிட வேண்டும் இவை எதுவும் எந்த வித்தியாசமும் ஏற்படுத்துவதில்லை.

ஆனால் எழு வயதிற்குள் முன்னால் கட்டி போட்டு விடுங்கள். ஏழு வயதிற்குள் அந்த குழந்தை வாழ்க்கை முழுவதும் அறிந்து கொள்பவற்றில் ஐம்பது சதவீதத்தை கற்று கொண்டுவிடும்.

இந்த ஐம்பது சதவீதம் மிகவும் அர்த்தம் நிறைந்தது ஏனெனில் இதுதான் அடிப்படையாகிறது..

எல்லா அறிவு அமைப்பும் அவன் குழந்தையாயிருக்கும் போது கற்று கொண்டதன் அடிப்படையில் தான் அமைகிறது..

இந்த காலகட்டத்தில் ஏழு வயதுக்கு முன் குழந்தைகளுக்கு எந்த தர்க்கமும் தெரியாது. எந்த வாதமும் தெரியாது. அவன் நம்புகிறான், அனுபவிக்கிறான், நம்புகிறான்.

அவனால் நம்பிக்கை இல்லாமல் இருக்க முடியாது ஏனெனில் அவனுக்கு நம்பிக்கை என்றால் என்ன? அவநம்பிக்கை என்றால் என்ன என்று தெரியாது..

நீங்கள் என்ன சொன்னாலும் அவனுக்கு அது உண்மையாகத்தான் தோன்றும்
அதயே திரும்பி திரும்பி சொன்னால் அந்த குழந்தை மயங்கி விழும்..

இப்படித்தான் எல்லா மதங்களும் வழிபாடுகளும் மனிதனை பயன்படுத்தி கொண்டு விட்டன குழந்தை எதாவது ஒரு பாதையில் நிலைக்க வலியுறுத்தபடுகிறது..

ஒரு முறை அந்த பாதை ஆழமாக வேரூன்றி விட்டால் ஏதுவும் செய்ய முடியாது.  பிற்காலத்தில் அந்த குழந்தை மதம் மாறினால் கூட ஏதும் மாறாது..

மாறாக இந்து, கிருத்துவம், இஸ்லாம், வழிபாடு, அப்படியே, தத்துவங்கள்  இருக்கும் அடிப்படையின் காரணமாக.

தொடரும்...

லேடி காகா...


கப்பலும் வங்கிகளும்...


ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு கடலில் சென்று வணிகம் செய்யும் குழுக்கள்.... அந்த நாட்டில் தங்களது பொருள்களை விற்றுவிட்டு அதன் மூலம் கிடைக்கும் தங்கத்தை அந்த நாட்டில் உள்ள தனது இரத்தவழி சொந்தங்களின் வட்டிகடையில் கொடுத்துவிட்டு... அதற்கான ஒப்புகை சீட்டை பெற்றுகொண்டு.....

3 மாதம் கடல்பயணம் மேற்கொண்டு வந்து இந்த நாட்டில் அதே இரத்தவழி சொந்தகளின் வேறு ஒரு வட்டிகடையில் கொடுத்துவிட்டு அதற்கான தங்கத்தை பெற்றுகொண்டார்கள்......

இதில் கிடைக்கும் நன்மைகள்

1) கடற்கொள்ளையர்கள் கையில் இருந்து தங்கத்தை காப்பாற்ற முடிகிறது....

2) 3 மாதங்கள் கடலில் பயணிக்கும் போது வீணாக அந்த தங்கம் பதுக்கிய படி உள்ளது.... அதே தங்கம் வட்டி கடைகாரரிடம் இருந்தால்.... அதற்கு நிகரான ஒப்புகைசீட்டை கொடுத்து வட்டிக்கு விட முடியும்......

இதில் நான் சொல்லும் ஒப்புகை சீட்டு வேறு எதுவும் இல்லை....

அது தான் பணம்....

இப்போதும் தங்கத்திற்கு நிகராக தான் பணம் அச்சிடப்படுகிறது.... அதுவும் ஒரு நாட்டுக்கே பணத்தை அச்சிட்டு கொடுப்பது ஒரு வங்கி என்ற வட்டிகடை தான்.. அன்று அதில் அந்த வட்டிகடை காரன் கையெழுத்து போடுவான்.... இன்று Reserve bank என்ற வட்டிகடை போடுகிறது....

வங்கிகளில் Float Income என ஒன்றை கேள்விப்பட்டு இருப்பீர்கள்...அதில் தான் ஒவ்வொரு வங்கியும் இயங்கி கொண்டு இருக்கிறது.....

அந்த Float income என்பதற்கான சரியான அர்த்தம்...மிதந்து கொண்டு இருக்கும் போது கிடைக்கும் வருமானம்.. அதாவது நீங்கள் வங்கியில் போடும் பணத்தை மீண்டும் நீங்கள் எடுக்கும் வரை அதை வட்டிக்குவிட்டு சம்பாதிப்பது.....

அந்த மிதந்து கொண்டு இருக்கும் போது வரும் வருமானம் இந்த வார்த்தை நியாபகம் வருகிறதா?

ஆதி காலம் தொட்டு இவைகளை இயக்கிவருவது ஒரே கூட்டம் தான்....ஒவ்வொரு நாடுகளிலும் அவர்களின் இரத்தவழி சொந்தங்கள் இருக்கிறார்கள்.... இந்திய வங்கிகளை தோற்றுவித்தவர்களை கொஞ்சம் தேடிப்பாருங்கள் அனைவரும் ஒரே கூட்டத்தை சேர்ந்தவர்களே....