24/09/2017

மே17 இயக்கம் திருமுருகன் காந்தியிடம் கேட்கப்படாத கேள்விகள்...


1) இந்தியா தமிழர்கள் மீது போர் தொடுக்கிறது. தமிழினம் அழிக்கப்படுகிறது என்கிறீர்கள். அந்த தமிழர்கள், தமிழினம் யார் எப்படி கண்டுபிடிப்பீர்கள்?

2) தமிழ்நாட்டில் தமிழினம் தவிர வேறு எந்த இனங்கள் உள்ளது? தெலுங்கினம், கன்னட இனம், மலையாள இனம் எல்லாம் இருந்தால் அதை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?

3) இயக்க அரசியலை மட்டுமே செய்வோம் என்கிறீர்கள். அது என்ன இயக்க அரசியல், தனித்தமிழ்நாடு கோரி விடுதலை போராட்ட அரசியலா? அல்லது இந்தியாவுக்குள்ளே கிடக்கும் இயக்க அரசியலா?

4) இந்தியாவுக்குள்ளேயே இயக்க அரசியல், தேர்தல் பாதையே இல்லை என்றால், தேர்தல்போது யாரை காட்டுவீர்கள்? யாருக்கு வேலை செய்வீர்கள்? மீண்டும் அதிகாரத்தை திராவிடத்திடம் கொடுத்து விட்டு தமிழரை வேடிக்கை பார்க்க வைக்கும் இயக்க அரசியலா?

5) தமிழ்நாடு விடுதலை கோரி இயக்க அரசியலென்றால் என்றைக்கு அறிவித்து துவங்க போகிறீர்கள்? அதனை என்றைக்கு, எப்படி அடைய போகிறீர்கள்?

இதற்கெல்லாம் விடை இல்லையென்றால் மே 17 இயக்கம் என்பது தமிழர்களை குழப்பி முட்டு சந்தில் நிறுத்தும் இயக்கமே...

இலுமினாட்டி மீடியா பதிவு - 2...


அன்பே சிவம்.. என்ன கமல் Free Masonary?

என்று சிந்திப்போர்க்கு இந்த காணொளி...

இலுமினாட்டி மீடியா பதிவு - 1..


இந்த படத்தை பார்த்தவர்கள் இப்போது உள்ள அரசியல் சூழலுக்கு ஒத்துப் போகிறதா என்று சிந்தியுங்கள்...

பறையரும் பார்ப்பனரும் ஒரே குலம்...


சங்ககாலத்தில் பறையர் பார்ப்பனர் பிரிவில் இருந்தனர்..

இது தொடர்பாகக் கல்வெட்டியலாளர்கள் சங்க ஆண்டுக் கூட்டத்தில் 1999 இல் ஒரு கட்டுரை சமர்பிக்கப்பட்டது.

அது எங்கே?

இது மூடி மறைக்கப்பட்டது எவ்வாறு?

17 ஆண்டுகளுக்கு முன்பே பறையர்களும் பார்ப்பனரும் ஒரே குலத்தவர் என்ற வலுவான சான்று ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இதைத் தவறவிட்டது யார்?

பறையர்களுக்கான அல்லது பறையர் மீது அக்கறை உள்ள ஒரு கட்சியோ அல்லது ஒரு ஊடகம் கூடவா இல்லை?

தலித் ஊடகங்கள் மற்றும் தலித் கட்சிகள் கூட இதனை பயன்படுத்திக் கொள்ளாதது பறையரை முட்டாளாக்கவா?

பாஜக சேட்டி லைட் சேகருக்கு செருப்படி...


உரிமை மறுக்கப்படுகின்றது, தமிழக அரசிற்கு ஐநாவில் கண்டனம்...


தங்களின் உரிமைக்காக அமைதியான முறையில் போராடுவது உலகில் உள்ள ஒவ்வொருவரின் உரிமை, ஆனால் தமிழகத்தில் சமீப காலமாக அது மறுக்கப்படுகின்றது. அமைதியான முறையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது அடக்குமுறை செய்யப்படுகின்றது என ஐநாவில் உலக அளவிலான மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கண்டனக் குரல் எழுப்பியுள்ளனர்.

மாறி மாறி பேசி ஏற்கனவே தமிழக அரசியல் நிலை மிகவும் மோசமாக இருக்கும் நிலையில் உலக அளவில் தமிழகத்தின் செயல்பாடு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்லவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...

தேவரடியாரும் - தேவதாசிகளும் : தமிழரும் - திராவிடரும்...


தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே, தமிழர் – திராவிடர் ஆகிய இனங்களுக்கு இடையிலான பண்பாட்டு வேறுபாடு உள்ளது.

தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர், திராவிடரின் பொதுமகளிர்.

இதற்கும் கல்வெட்டுச் சான்றுகளைக் காணலாம்.

தேவதாசி என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிடும் கல்வெட்டு கருநாடகத்தில் உள்ள அலனஹள்ளியில் காணப்படுகிறது. (கி.பி1113)’ (தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 16, 17).

தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.

சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.

சோழகுல சுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.

தேவதாசிகளோ, கோயிலுக்கு ‘நேர்ந்துவிடப்பட்ட பெண்கள்’ ஆவர். இவர்கள் கோயிலின் பேரால் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். ’தாசி’ எனும் சொல், ’அடிமை’ என்ற பொருள் கொண்டது. ‘அடியார்’ என்பதோ, ’ஒரு கோட்பாட்டுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்’ என்ற பொருள் கொண்டது.

சிவன் அடியார் என்றால், சிவனியத்துக்குத் தம்மை ஒப்படைத்தவர் என்றாகும். தாசி, தாசன் ஆகிய சொற்கள் தமிழர் மரபில் இல்லை. அவை திராவிடருடைய இழிந்த பண்பாட்டின் அடையாளங்கள். அதனால்தான், தேவதாசி என்ற சொல்லைக் கொண்ட முதல் கல்வெட்டு, கர்நாடகத்தில் உள்ளது.

தமிழகக் கோயில்களில் பெண்கள் தேவரடியார் என்றே மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்.

குந்தவை என்பது இராசராச சோழனின் மூத்த சகோதரியின் பெயர். அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, தம் மகளுக்கும் குந்தவை என்றே பெயரிட்டார் இராசராசன். பெருவுடையார் கோயிலில் இருந்த தேவரடியாரில் குந்தவை என்ற பெயருடைய தேவரடியாரும் இருந்ததைக் கவனித்தால், இராசராசன் காலத்தில், தேவரடியார் முறை எந்தளவு உயர் அதிகாரம் உடையதாக இருந்தது என்பதை உணரலாம்.

தேவரடியார்கள் சிலர் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தனர் என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன என்கிறார் முனைவர் கே.கே.பிள்ளை. (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் / உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்/ 2000 /பக் 334).

பொட்டுக்கட்டும் முறையும் தேவரடியார் முறையும் ஒன்று எனச் சிலர் எழுதுகிறார்கள். இது முறையற்ற, முற்றிலும் தவறான பார்வை.

கருநாடகத்தில், ஒரு பெண், அவள் வயதுக்கு வருவதற்கு முன்பாகத்தான் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆந்திரப் பிரதேசம் கிருக்ஷ்ணா மாவட்ட்த்தில் கண்ட கல்வெட்டு ஒன்று, நாகேஸ்வர சுவாமி கோயில் பணியில் எட்டு வயதே நிரம்பிய சிறுமிகள் இருந்த்தைக் குறிக்கிறது. (கர். கல் VAK 105).. (தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 19).

இந்துத்துவ வாதிகள், தேவதாசி முறையை தேவரடியார் முறையோடு இணைக்கின்றனர். வேண்டுமென்றே தமிழரை இழிவு செய்வதற்காக அவர்கள் இவ்வாறு எழுதுகின்றனர்.

மேற்கண்ட நூலில்கூட, தேவதாசியரும் தேவரைடியாரும் ஒருவகையினரே என்று எழுதப்பட்டுள்ளது. அந்நூல் மிகத் தெளிவான இந்துத்துவப் பார்வையை வைக்கிறது. தேவலோக மங்கையர் என்று வேதங்கள் கூறும் ரம்பை, ஊர்வசி முதல் தேவதாசி மரபு உள்ளது என்கிறது அந்நூல்.

இவ்வாறெல்லாம் அவதூறு பரப்புவதன் வழி, தமிழ்க் கோயில்களில் தமிழ் மறை பாடிய பெண்களை இவர்கள் அவமதிக்கின்றனர்.

தேவதாசி, பொட்டுக் கட்டுதல் ஆகிய இரண்டும் வேறு வேறானவை. ஆயினும் இவ்விரண்டும் விபசாரம் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகியவற்றுடன் தொடர்புடையவை. தேவரடியார் முறை என்பது, அரசரால் நியமிக்கப்பட்ட கலை வளர்க்கும், கோயில் பராமரிக்கும் அதிகார முறை.

தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005).

கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.

தேவரடியார் முறை பற்றி லெஸ்ஸி சி.ஓர் கூறும் முடிவைக் காணலாம்..

கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார்... இவர்கள் நாட்டியக்காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள். (மேலது நூல் /பக் 22).

அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்தோரே தேவரடியாரே தவிர, பொருளுக்காக விபசாரம் செய்தோர் அல்லர்.

பெண்களின் நிலை..

இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.

கொடை அளிக்கும் பெண்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

சொந்தச் சொத்து உடையவர்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்

நிலம் உடையவர்கள்:

10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்

(மேலது நூல்)

மேற்கண்ட ஒப்பீட்டுப் பட்டியல் எதைக் காட்டுகிறது?

இராசராச சோழன், இராசேந்திர சோழன் காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்த்து என்பதை அல்லவா..

திராவிட விஜயநகர அரசர்கள் காலத்தில்தான் பெண்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள் என்பதை விளக்க வேறு என்ன சான்று வேண்டும்?

லெஸ்லி.சி.ஓர் தனது நூலின் இறுதிப் பகுதியில் – அடிக்குறிப்புகளில் ஒன்றாக பின்வரும் முடிவை எழுதியுள்ளார்.

கி.பி.985 – 1070 காலத்தில், குடந்தைச் சுற்றுவட்டப் பகுதிகளில் பரிமாற்றம் செய்யப்பட்ட மொத்த சொத்துகளில் 48% பெண்களால் செய்யப்பட்டன என்கிறார் அவர்.

கி.பி 985 ஆம் ஆண்டில்தான் இராசராசர் முடி சூடினார். அந்த ஆண்டிலிருந்தே பெண்களின் சொத்துடைமை உயர்ந்துள்ளது. பெண்களுக்குச் சொத்தில் பங்கு வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டிய காலத்தில் வாழும் நாம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இராசராசச் சோழர் காலத்தில், ஏறத்தாழ சரிபாதிச் சொத்துரிமை பெண்களுக்கு இருந்தது குறித்துப் பெருமைப்பட வேண்டும்.

விஜய நகர – நாயக்கர் காலத்தில், தேவரடியார்கள் கோயில்களிலிருந்து துரத்தப்பட்டனர். அவர்கள் தேவதாசிகள் ஆக்கப்பட்டனர். இதற்காகவே, தெலுங்கு, கன்னடப் பெண்கள் தமிழகக் கோயில்களுக்கு வரவழைக்கப்பட்டனர்.

தேவரடியார் முறை ஒழிக்கப்பட்டு, தேவதாசி முறை தமிழகத்தில் புகுத்தப்பட்டது. கோயில்களில் தமிழ் வழிபாட்டு முறை ஒழிக்கப்பட்டு, சமக்கிருத மயமானது.

கோயில்களின் நிர்வாகம் முழுக்க பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இத்திராவிடர் காலத்தில் தான்.

இன்று நாம் காணும் பிராமண ஆதிக்கத்தை கி.பி 250 முதல் உருவாக்கியவர்களும் களப்பிர, பல்லவ திராவிடர்களே, வளர்த்தெடுத்தவர்களும் விஜய நகர – நாயக்க திராவிடர்களே.

இடையில் மிகக் குறுகிய காலம் தமிழகத்தை ஆண்ட பிற்காலச் சோழர்கள் பிராமண ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

இந்த வரலாற்றின் சிறு துளிக் காலமான 29 ஆண்டுகள் ஆட்சி செய்த இராசராசர், தன்னால் இயன்ற தமிழ்ப் பணிகளைச் செய்தார்...

Sbi வங்கியின் திருட்டு...


தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்...


பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?

தனுஷ்கோடிக்கு..

ஆம். அது தமிழன் கண்டறிந்த
தொழில் நுட்பம்..

தன் நுண்ணறிவால்
நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய.

தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

கடல் ஆமைகள் கடலில் இருக்கும்
நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ
வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன.

இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின்
ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.

இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான்.

இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போக முடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்.

மத்திய தரைக்கடல், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்.

பல நாடுகளையும் கைப்பற்றினான்.

கடலில் பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன்படுத்தினான்.

பிற்காலத்தில்
ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக் கொண்டனர்.

உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ்
மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர்.

கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார்.

சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில் பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள் அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான்.

போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான் உண்மை.

கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன் தொழில்நுட்பம் தான்.

அதாவது, கொலம்பஸ் கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட வழித்தடமும் ஒன்றுதான்.

ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க இது மட்டுமா காரணம்? இல்லை.

நம் பண்பாட்டுக்கும் ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

ஆம் தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர்.

விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம் உண்டு.

தான் பிறந்த இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும்.

தமிழகத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு...

தமிழன் என்றால் பயம்...


தமிழன் என்றால் ஏன் இந்த உலகத்தவர்க்கு இத்தனை ஏளனம்...?

காரணம் பயம்..

தமிழன் என்றால் பயம்..

தமிழனுக்கு தமிழன் என்ற உணர்வு வந்துவிட கூடாது என்ற பயம்..

தமிழன் விழித்துக்கொண்டால் இந்த உலகின் உண்மையான ஆன்மிகம் விழித்துக்கொள்ளும் என்கின்ற பயம்..

தமிழன் விழித்துக்கொண்டால் இந்திய அரசியல் ஒரு மிகப்பெரும் தலை கீழ் மாற்றத்தை அடையும் என்ற பயம்..

இந்த இந்திய நாட்டை ஆளப்போவது தமிழன் என்ற பயம்..

அதைத்தொடர்ந்து இந்த உலக அரசியலே இந்திய அரசியல் மாறியது போல தலைகீழாக மாறிவிடும் என்ற பயம்..

உலக நாகரீகத்தின் தாய்மடியாக இருந்த தமிழன் விழித்தால், இந்த உலகின் நவநாகரிக போதை என்கின்ற மாயை விலகும் என்ற பயம்..

இந்த உலகம் இப்போது பயணிக்கும் இலக்கு இல்லாத பாதையில் இருந்து மாற்றம்பெறும் என்கின்ற பயம், ..

எல்லோரும் சமம், எல்லாமும் சமம், எல்லோருக்கும் எல்லாமும் உரிமை என்ற கோட்பாடு உருவாகிவிடும் என்கின்ற பயம்....

தமிழன் விழித்துக்கொண்டால் இந்த உலகின் அழிவு சக்திகளுக்கும், அதிகார சக்திகளுக்கும், ஆதிக்க சக்திகளுக்கும் அழிவு என்ற பயம்..

தமிழர்களைப் போன்று அந்தந்த நாடுகளின் அந்தந்த நிலபகுதிகளின் பூர்வீக குடிகள் தற்போதைய இந்த உலக வல்லாதிக்கத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவிடும் என்ற பயம்..

இந்த உலகின் மூத்த குடியாகிய, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் குடியின் வாழ்வியல் முறைகள், பண்பாடு, நாகரீகம், கலாசாரம், அறிவியல், கலைகள், ஆன்மீகம் போன்றவை இந்த உலகம் முழுவதும பரவியுள்ளது என்கிற உண்மை வெளிவந்துவடும் என்கிற பயம்..

அப்படி தமிழர் வாழ்வியல் பரவிவிட்டால், இந்த உலகின் தற்போதைய பொருளாதார வேட்கை வெறி ஒழிந்துவிடும்..

எங்கு நோக்கினும் மக்கள் அமைதியாக சமாதானமாக ஒற்றுமையுடன் ஏற்ற தாழ்வு இல்லாமல், வறுமை இல்லாமல், சகோதர மனபான்மையுடன் "யாதும் ஊரே, யாவரும் கேளீர்" என்ற தமிழ் சான்றோர்களின் வாக்கு மெய்யாகி வாழ்ந்து விடுவர் என்ற பயம்...

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உலகில் விஞ்ஞானம் அறிவியல் என்று கூறிக்கொண்டு இயற்கை விதிகளை மீறி இந்த உலகின் சம நிலையை கெடுத்து , பொருளாதாரம் முனேற்றம், விஞ்ஞான முன்னேற்றம், மக்கள் வாழ்வு முனேற்றம் என்று கூறிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சக்திகளுக்கே இந்த உலகம் அடிமையாய் இருப்பது மாறிவிடும் என்கின்ற பயம்...

ஆம். தமிழன் என்றால் பயம்...

தந்திர - குண்டலினி யோகம்...


தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, தூய
உணர்வு நிலையானது முழு பிரபஞ்சத்தின் வெளிப்பாடு ஆகும்.

பிரபஞ்சம் வெளிப்படுத்த்தும் இந்த தூய உணர்வு நிலை, இரண்டு துருவங்கள் அல்லது அம்சங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒன்று மற்றது இல்லாமல் இருக்க முடியும்.

ஒரு அம்சமானது சிவம் (Shiva) ஆகும், ஆண் நிலை, நிலையான, இயக்கமற்ற (Static) தன்மை கொண்டது மற்றும் வெளிக்காட்டப்படாத உணர்வு அடையாளமாக உள்ளது.

சிவம் முழுமையான ஆற்றல் கொண்டது. ஆனால் உருவாக்கவோ அல்லது மாற்றவோ முடியாதது.

மற்ற அம்சமானது சக்தி (Shakthi) ஆகும்,
பெண் நிலை, இயங்கக் கூடியது (Dynamic). சுறுசுறுப்பு, படைப்பு தன்மையுடையது.

பிரபஞ்சத்தின் மாபெரும் தாய். அவளிடம் இருந்து அனைத்து வடிவங்களும் பிறந்தன.

தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம் ஆவான்.

பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்தும் ஒவ்வொரு தனி மனிதனிடமும் காணப்படும்.

பிரபஞ்சத்தில் பொருந்தும் ஏல்லாக் கொள்கைகளும் தனிப்பட்ட மனிதன் விஷயத்திலும் பொருந்தும்.

மனித உயிர்களின் மீது, சக்தியின்
பெண்மையை அம்சம் குண்டலினி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றல் முதுகு தண்டு அடிப்பகுதியில் ஓய்வு பெறுவதாகக் கூறப்படுகிறது.

குண்டலினி-யோகாவின் தந்திர பயிற்சியின் நோக்கம், இந்த அண்ட
ஆற்றலை மேலே எழுப்பச்செய்து
முதுகெலும்பு அச்சில் உள்ள சக்கரங்கள்
எனப்படும் உணர்வு திறன்கள் மையங்கள் வழியாக செலுத்துவதாகும்.

பிறகு சிவம் எனப்படும் தலையில் உள்ள கிரீடம் போன்ற தூய உணர்வு நிலை கொண்ட இடத்தில் சேர்ப்பதாகும்.

இவ்வாறாக சிவம், சக்தியை ஒன்றினைப்பதின் மூலம் நாம் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ள முடியும். உலகத்தின் பந்தங்களிலிருந்து விடுதலை பெறக்கூடிய நிலையை அடைய முடியும்.

நாடிகள் -  நுண் சரீரத்தில் உள்ள ஏழு சக்கரங்களை தொடர்ந்து, அவற்றிற்கு இடையே ஒரு பாதையானது அமைந்துள்ளது. அதன் பெயர்
நாடியாகும்.

சிவ சம்கிதம் என்ற தாந்திர சாஸ்திரம் 14 வகையான நாடிகள் உள்ளதாக
குறிப்பிடுகின்றன. அவற்றில்
இடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை
என்பவை மிகவும் முக்கியமானதாக
கருதப்படுகின்றது.

பிங்கலை: இது நாசித் துவாரத்தின் வலது பக்க பாதை. சிகப்பு நிறமுடையது, ஆண் தன்மை கொண்டது. வெப்ப வழிப்பதை, சூரியனின் பிரதிநிதியாக செயல்படுகிறது. யமுனை ஆற்றுடன் தொடர்பு கொன்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து வலது நாசித் துவாரத்தில் முடிவடைகின்றது.

இடகலை: இது நாசித் துவாரத்தின் இடது பக்க பாதை. வெண்மை நிறமுடையது, பெண் தன்மை கொண்டது. குளிர்சி வழிப்பதை, சந்திரனின் பிரதிநிதியாக செயல்படுகிறது. கங்கை ஆற்றுடன் தொடர்பு கொன்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து இடது
நாசித் துவாரத்தில் முடிவடைகின்றது.

சுழுமுனை: இது நடுவில் உள்ள பாதை,
சரஸ்வதி ஆற்றுடன் தொடர்பு கொண்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து தலையின் மேற்பக்கத்தில் கவிழ்ந்த நிலையில் உள்ள சகஸ்ரதளச் சக்கரத்தை நோக்கி ஓடுகிறது...

மரணப் படுக்கையில் ஒரு தமிழ் எழுத்து...


தமிழில் இன்று ஐந்து, ஐயா, ஐயோ என்ற சொற்களை எழுதப் பயன்படும் ஐ என்ற எழுத்து ஒரு காலத்தில் ஐ என்ற சொல்லாகத் தனித்து நின்று பெரியவர்கள் அண்ணன் தெய்வங்கள் தலைவன் போன்ற போன்ற பொருட்களைத் தந்திருக்கின்றது.

ஆனால் இன்றைய தமிழில் அது ஒரு எழுத்தாக மட்டுமே பயன்படுத்தப் படுகின்றது. அதற்குத் தனிப்பட்ட பொருள் இன்று கிடையாது. அது வேற்றுமை உருபு ஆவது வேறு செய்தி.

முதல் நாள் போரிலே அண்ணனை இழந்து மறுநாள் போரிலே கணவனை இழந்த பெண்ணொருத்தி மீண்டும் இன்று போர்ப்பறை கேட்க மகிழ்ந்து தன் மகனையும் வேல் கொடுத்துக் களத்துக்கு அனுப்பிய கதையைச் சொல்லும் புறநானூற்றுப் பாடலை எடுத்துக் கொள்வோம்.

அதிலே மேனாள் உற்ற செருவில் இவள் தன் ஐ யானை எறிந்து களத்து ஒழிந்தனனே (புறநானூறு 297) என்ற அடிகள் வரும்... முன்பு நடந்த போரிலே யானையை வேலால் எறிந்து கொன்று விட்டு தானும் இறந்து போனான் இவள் அண்ணன் என்பது இந்தச் சங்கச் செய்யுள் அடிகளின் பொருளாகும். இங்கே  என்பது அண்ணன் என்ற பொருளில் கையாளப்பட்டிருக்கின்றது.

திருக்குறள் படைச் செருக்கு அதிகாரத்திலே..

என் ஐ முன் நில்லன்மின் பகைவீர் பலர் என் ஐ
முன் நின்று கல் நின்றவர்

என்று ஒரு குறள் காணப்படுகின்றது.

முன்பு என் தலைவன் முன்னே போர் செய்யவந்து இறந்து இன்று கல்லறையில் கிடப்பவர் பலர். அதனால் பகைவர்களே என் தலைவன் முன் நிற்காமல் அகன்று விடுங்கள் என்பது இதன் பொருள். இங்கே ஐ என்பது தலைவன் என்ற பொருளில் வள்ளுவரால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பட்டினத்தார் தனக்கு நஞ்சு கலந்த சோறு தரப்பட்டபோது முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் என்று பாடினார். முன் ஐ இட்ட தீ முப்புரத்திலே என்றால் முன்பு இறைவன் வைத்த நெருப்பு மூன்று புரங்களை எரிப்பதற்காக என்று பொருளாகும்.

பாற்கடலைக் கடைந்த போது முதலில் தோன்றியவள் மூதேவி. அவளின் பின்பு தோன்றியவள் இலக்குமி. அவள் சீதையாகப் பிறந்து இராவணனால் சிறையெடுக்கப்பட்ட போது அவளைத் தேடிப் போன அநுமனின் வாலிலே தீ வைத்தான் இராவணன். அந்தத் தீயைக் கொண்டு அநுமன் இலங்கை முழுவதும் பாய்ந்து தீ மூட்டினான் என்று சொல்லும் கம்பராமாயணம். அது அநுமன் வைத்த நெருப்பு அல்ல அவன் மூலமாக திருமகள் ஆகிய சீதை வைத்த கற்பின் நெருப்பு என்பான் விபீடனன்.

கோநகர் முழுவதும் நினது கொற்றமும்
சானகி எனும் பெயர் உலகின் தம்மனை
யானவள் கற்பினால் வெந்தது அல்லது ஓர்
வானரம் சுட்டது என்று உணர்தல் மாட்சியோ?

(கம்பராமாயணம் - யுத்த காண்ணடம் - மந்திரப்படலம்).

அண்ணா! ஒரு குரங்கினால் இலங்கைக்குத் தீவைக்க முடியுமா? வைத்தாலும் தீ பிடிக்குமா? பிடித்தாலும் எரிந்து இவ்வளவு நாசம் வருமா? சானகியின் கற்பினால் வெந்து போன எங்கள் நாட்டைத் திரும்பத் திரும்ப குரங்கு சுட்டது என்று சொல்லிக் கொண்டிருக்காதே என்பது இதன் பொருளாகும்.

அதனால் தான் பட்டினத்தார் பின் ஐ இட்ட தீ தென் இலங்கையில் என்றார். இதை உணராத ஒரு பகுதித் தமிழுலகம் இன்றும் பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் என்ற தொடருக்கு பின்னொரு காலத்திலே வைக்கப்பட்ட தீ தெற்கு இலங்கையில் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றது.

இங்கே ஐ என்பது தெய்வங்களைக் குறிக்கும் சொல்லாக வந்து விடுகின்றது.

இனித் தொல்காப்பியர் ஐ என்ற எழுத்தை பெரியவர்கள் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளதைப் பார்ப்போம். சங்க கால காதல் ஒழுக்கங்களிலே தவறுகள் தலைகாட்ட முற்பட்ட போது பெரியவர்கள் அதைச் சீர் செய்வதற்காக சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார்கள் என்று சொல்ல வந்த தொல்காப்பியர்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப

(தொல்காப்பியம் - பொருளதிகாரம் - கற்பியல்).

என்று சொல்லிவிட்டுப் போனார். இதைக் கூட காதல் வாழ்விலே பிரச்சனைகள் ஏற்பட்ட போது பிராமணக் குருக்கள்மார் திருமணச் சடங்குகளை உருவாக்கினர் என்று தொல்காப்பியர் சொன்னதாக அடம்பிடிக்கும் தமிழ் அறிஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களைத் தவிர்த்து நோக்கினால் காதலித்து நெருங்கிப் பழகியவர்கள் தாம் அப்படிச் செய்யவில்லை என்று மறுத்து சில இன்னல்களை ஒருவருக்கொருவர் செய்து பொய்யும் தவறுமாக நடக்க முயன்ற போது அதை மாற்றியமைக்க பெரியவர்கள் சில சடங்கு முறைகளை வகுத்தனர் என்ற கொள்வதே பொருத்தமாகும்.

எனவே ஐ என்ற எழுத்து ஐ என்ற சொல்லாகிப் பயன்பட்ட காலம் போய் வெறும் எழுத்தாக மட்டுமே இன்று பயன்படுத்தப்படுகின்றது. வருங்காலத்தில் எழுத்தாகவாவது நிலைக்குமா என்பது தெரியவில்லை.

கணணி விசைப் பலகையில் ஐ என்பதை அய் என்று எழுதினால் என்ன என்று சிந்திக்கின்றார்கள். ஆம், சிந்தித்துக் கொண்டே இருக்கின்றார்கள்...

சளி தொல்லையை போக்கும் தூதுவளை துவையல்...


ச‌ளி ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு தூதுவளையை உளு‌த்த‌ம் பரு‌ப்பு, பு‌ளி வை‌த்து துவையல்‌ செ‌ய்து கொடு‌த்தா‌ல் எ‌ந்த மரு‌ந்து‌க்கு‌ம் அசராத ச‌ளியு‌ம் கரை‌ந்து காணாம‌ல் போ‌ய் ‌விடு‌ம்.

சளி தொல்லையை போக்கும் தூதுவளை துவையல்..

தேவையான பொருள்கள் :

தூதுவளை இலை - 2 கப்
புதினா - 1 கப்
பூண்டு - 4 பல்
இஞ்சி - 1/2 துண்டு
சிறிய வெங்காயம் - 10
சிவப்பு மிளகாய் - 6
எண்ணெய் - 2 டீஸ்பூன்
புளி - கோலிக்குண்டு அளவு
துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க :

கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.

செய்முறை :

பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கி பின் தேங்காய் பூவையும் போட்டு வதக்கவும்.

கடைசியாக தூதுவளை இலை, புதினா இலை போட்டு வதக்கி ஆற வைக்கவும்.

ஆறிய பின் மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.

மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த துவையலில் கொட்டவும்.

சுவையான சத்தான தூதுவளை துவையல் ரெடி.

புதினா, தூதுவளை இலையை சிறிது வதக்கினால் மட்டும் போதும்...

சாதியை எதிர்கிறேன் ஒழிக்கிறேன் சொல்லிட்டு திரிகின்றவனை நன்றாக பாருங்கள்...


ஒன்று திராவிடனாக இருப்பான் அல்லது திராவிடத்தின் கைகூலியாக தான் இருப்பான்..

ஆனால் தமிழகத்தில் நடக்கும் 80% சாதீ சண்டைகள் திராவிடத்தால் உருவாக்கப்படுகிறது என்பதை நாம் உணராதவரை...

தமிழனை ஏமாற்றி பிழைக்கும் கூட்டம் பிழைத்துக் கொண்டுத் தான் இருக்கும்...

1579ஆம் ஆண்டில் தமிழ் அச்சு...


ஆழ்மனதின் அற்புத சக்திகள்-22...


ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திய ஒரு முறை கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சி (ganzfeld experiment). இம்முறை ஓல்ஃப்காங்க் மெட்ஸ்கர் என்ற ஜெர்மானியரால் 1930களில் வேறொரு ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. சுமார் 1970 ஆம் ஆண்டிற்கு மேல் மிகப் பிரபலமாகி பல ஆழ்மன ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டது.

இந்த ஆராய்ச்சியில் தகவலைப் பெறுபவர் ஒரு தனியறையில் தனித்து விடப்படுவார். அவர் சாய்வு நாற்காலியில் கண்களை மூடியபடி ஓய்வாக அமர்த்தப்படும் அவருடைய மூடிய கண்களின் மீது பாதியாக வெட்டப்பட்ட பிங்பாங்க் பந்துகள் வைக்கப்பட்டிருக்கும். காதுகளில் ஹெட்போன்கள் வைக்கப்பட்டு ஒரேமாதிரியான இசை தொடர்ந்து கேட்கும். முகத்தில் சிவப்பு விளக்கொளி விழும்படி வைக்கப்பட்டிருக்கும். தகவல் அனுப்புபவர் வெளியே இருந்து ஏதாவது ஒரு பொருளை மனதில் நினைத்து அந்தத் தகவலை உள்ளே உள்ளவருக்கு அனுப்புபவர். அரை மணி நேரம் நீளும் இந்த ஆராய்ச்சியில் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருப்பவர் தன் மனதில் தோன்றுவதை சத்தமாகச் சொல்லிக் கொண்டிருப்பார். அதை டேப் செய்தோ, கையால் எழுதியோ குறித்துக் கொள்வார்கள்.

ஆழ்மன ஆராய்ச்சியாளர்கள் டீட் ரேடின், டேரில் ஜே.பெம், சார்லஸ் ஹொனொர்டன் ஆகியோர் இந்த கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிமுறையில் ஆழ்மன சக்திகள் நன்றாகச் செயல்புரிகின்றன என்று தங்கள் அனுபவங்கள் மூலம் கூறினாலும் ஆராய்ச்சியாளர்கள் சூசன் ப்ளாக்மோர், ரே ஹைமன் ஆகியோர் இந்த ஆராய்ச்சிகளில் பல குறைகள் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். சார்லஸ் ஹொனொர்டன் செய்த கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிகளில் சிலவற்றில் அந்த அரை மணி நேரம் தகவல் பெறுபவர் சொல்லிக் கொண்டு வரும் வர்ணனைகள் தகவல் அனுப்புபவர் இருக்கும் சூழ்நிலைகளையும் தெளிவாக விவரிப்பதாக இருந்ததாம்.

ஆனால் உண்மையில் அந்த ஆராய்ச்சி முறையைப் பார்க்கும் போது அது ஒருவரைத் தியான மனநிலைக்கு அழைத்துச் செல்லத் துணை புரிகிறது என்றே தோன்றுகிறது. நம் கவனத்தைச் சிதற வைக்கும் புலன்களில் முக்கியமானவை கண்களும் காதுகளும் தான். அவற்றை அடைத்து, தொடர்ச்சியாக ஒரே போன்ற இசை கேட்டுக் கொண்டிருக்கையில் தியான நிலைக்கு அது உதவுகிறது. அதைத் தான் கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சியில் செய்கிறார்கள்.

ஏறத்தாழ அதே கால கட்டத்தில் (1970 களில்) தான் கலிபோர்னியாவில் உள்ள SRI என்றழைக்கப்படும் ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சி நிறுவனம் (Stanford Research Institute) பல வித்தியாசமான ஆராய்ச்சிகளை இன்கோ ஸ்வான், மற்றும் பேட் ப்ரைஸ் (Pat Price) என்ற முக்கியமான ஆழ்மனசக்தி வல்லுனர்களை வைத்து நடத்தியது.

அவர்களில் ஸ்வான் பற்றி முன்பே (ஆழ்மன சக்திகள் 12ல்) சிறிது குறிப்பிட்டு இருந்தோம். புகழ்பெற்ற விஞ்ஞானியான ரஸ்ஸல் டார்க் ஒரு ஆராய்ச்சியில் ஒரு காகிதத்தில் '49\'b020'S, 70\'b014'E' என்பதை மட்டும் எழுதி ஸ்வானிடம் தந்து அவருக்கு அதைப் பார்த்ததும் கிடைக்கும் தகவல்களை எல்லாம் சொல்லச் சொன்னார். சிறிது நேரம் கண்களை மூடியிருந்த ஸ்வான் கண்களைத் திறக்காமல் தான் கண்டவைகளை சொல்ல ஆரம்பித்தார்.

“எனக்கு இது ஒரு தீவு போலத் தோன்றுகிறது. நிறைய பாறைகள் உள்ளன. மிகவும் கச்சிதமாகக் கட்டப்பட்ட சில கட்டிடங்கள் தெரிகின்றன. அதில் ஒன்று ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது. ஒரு ரேடார் ஆண்டெனாவும், ரவுண்ட் டிஸ்கும் தெரிகிறது. வடமேற்கில் ஒரு விமானத் திட்டு தெரிகிறது.....” என்று சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்னது போலவே அந்த எண்கள் குறிக்கும் அட்சரேகை தீர்க்கரேகை உடைய, தெற்கு இந்து மகா சமுத்திரத்தில் உள்ள, கெர்க்யூலன் என்ற சிறிய பிரெஞ்சுத் தீவில் எல்லாம் சரியாக அப்படியே இருந்தன.

SRI நடத்திய ஆராய்ச்சிகளில் மிகவும் பிரபலமானவர் பேட் ப்ரைஸ். ஒரு போலீஸ் அதிகாரியான அவர் தன் ஆழ்மன சக்தியால் பல குற்றவாளிகளை பெரிய சிரமமில்லாது கண்டுபிடிக்கக் கூடியவராக இருந்தார். அது SRI ஆராய்ச்சியாளர்கள் கவனத்தைக் கவர்ந்தது. அவரை வைத்து அவர்கள் செய்த ஆரம்ப ஆராய்ச்சிகள் கற்பனையையும் மிஞ்சும்படி இருந்தன.

அமெரிக்க CIA அதிகாரி ரிச்சர்டு கென்னட் என்பவர் செய்த ஆராய்ச்சியில் பேட் ப்ரைஸ் அமெரிக்க இராணுவத்தின் இரகசிய சுரங்க முகாம் ஒன்றை மிக நுணுக்கமானத் தகவல்களுடன் விவரித்தார். National Security Agency (NSA)ன் கட்டுப்பாட்டில் இருக்கும் நாட்டின் மிக மிக ரகசியமான தகவல்களை ஆழ்மன ஆராய்ச்சிகளால் தர முடியும் என்று நம்ப முடியாத அரசாங்கம் அவரை ரஷிய உளவாளியாக இருக்கக்கூடும் என்று கூட சந்தேகித்தது. அவர்கள் சந்தேகத்தைப் போக்க பேட் ப்ரைஸ் ரஷிய ரகசிய தளவாடங்களையும் கண்டறிந்து சொல்வதாகக் கூறினார். ரஷியாவில் வட யூரல் மலைகளில் ஒன்றான நரோட்னைனா என்ற மலையின் அடிவாரத்தில் இருந்த ரகசிய தளவாடத்தைப் பற்றியும், அங்கு அதிகமாக இருந்த பெண் ஊழியர்களைப் பற்றியும், ரேடார் டிஷ்கள் பற்றியும் விவரித்துச் சொன்னார். பின்பே அமெரிக்க அரசாங்கத்தின் சந்தேகம் நீங்கியது. இது போல பல ராணுவ ரகசியத் தளவாடங்கள், உயர் கருவிகள் பலவற்றை நுண்ணிய விவரங்களுடன் பேட் ப்ரைஸிடம் இருந்து பெற்றார்கள். (ஸ்டாலின் காலத்தில் வாசிலிவ் என்ற ஆழ்மன சக்தியாளரை வைத்து அவர்களும் அமெரிக்க ரகசியங்களைப் பெற்றார்கள் என்று சொல்லப்படுவதையும் நாம் முன்பு கூறியது நினைவிருக்கலாம்).

SRI பாரடே கூண்டில் பேட் ப்ரைஸை அமர வைத்துப் பல ஆராய்ச்சிகள் நடத்தினார்கள். துரதிர்ஷ்டவசமாக 1975 ஆம் ஆண்டு மர்மமான முறையில் பேட் ப்ரைஸ் இறந்து போனது ஆழ்மன ஆராய்ச்சிகளுக்குப் பெருத்த நஷ்டம் என்று CIA யின் உயர் அதிகாரிகளும், ஆழ்மன ஆராய்ச்சியாளர்களும் கருதினார்கள். அவருடைய மரணம் ரஷிய உளவாளிகளால் ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற வதந்தி அக்காலத்தில் நிலவியது. அவர் மேலும் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தால் தங்கள் அனைத்து ராணுவ ரகசியங்களும் வெளியே வந்து விடும் என்ற பயத்தில் ரஷியா அவரைக் கொல்லும் முயற்சிகளை எடுத்திருக்கக் கூடுமா என்ற சந்தேகத்திற்கு பதில் கிடைக்கவில்லை.

கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிகள், SRI நடத்திய ஆராய்ச்சிகள், மற்றும் ஃபாரடே கூண்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் வெற்றி பெற்றவைகளையும், வெளிப்படும் அலைகளையும் மேலும் நுணுக்கமாக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தார்கள். அப்போது மனிதர்களிடமிருந்து வெளிப்படும் மிக நுண்ணிய மின்காந்த அலைகளையொத்த அலைகள் பற்றி அவர்கள் அறிய நேரிட்டது.

Bioelectromagnetics என்ற விஞ்ஞானத் துறையின் கீழ் அந்த ஆழ்மன சக்தி அலைகளும் ஆராயப்பட்டன. அந்த அலைகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் அறிந்ததை நாமும் காண்போமா?

மேலும் பயணிப்போம்....

இவ்வளவு மருத்துவ பயன்களை கொண்டுள்ளதா சப்போட்டா...


100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.

சப்போட்டா கூழுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.

சப்போட்டா, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, கொழுப்பை நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூலநோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது, எலும்புகளை வலுவடையச் செய்கிறது.

சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையுடையது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான நித்திரைதான்.

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது. சருமத்தை மிருதுவாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்துக்கு உண்டு.

தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும். இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும்.

சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்களும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும்...

நாங்கள் அம்மா இட்லி சாப்பிட்டார்கள் என பொய் கூட சொன்னோம் - மதுரை கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்...


https://www.youtube.com/watch?v=230P10czA9s

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு - தமிழக அரசு உத்தரவு...


சித்தர் ஆவது எப்படி - 3...


சித்தத்தை சீர் செய்யும் முதல் படி-கனல் தன்மை அறிதல்..

சித்தத்தை சீர் செய்தல் மூலம் சித்தர் ஆவது எளிமையாகிறது.. மற்ற பூதங்கள் திறன் பட செயல் பட மாறுபட்ட முரண் பாடுகளை உடைய சித்தத்தை சீர் செய்ய அவசியமாகிறது.. சித்தத்தை சீர் செய்வதின் மூலம் ஆன்மீகம் முன்னேற்றம் மிக எளிதாகிறது..

சித்தத்தை சீர் செய்வது என்பது ஆன்மீக பணியில் 100 ல் 95 பங்கு செய்து முடித்தது போல... அதனால் தான் சித்தத்தை சீர் செய்து ஆன்மீகத்தில் உச்சத்திற்கு சென்றவர்களை சித்தர்கள் என்கிறோம்...

இப்பொழுது சித்தத்தை சீர் செய்யும் வழியினை ஆராய்வோம்..

இயல்பாக சித்தம், எண்ணக் குவியலால் ஆனது என்று முன்பே அறிந்தோம்....

பல ஜென்மங்களின் அனுபவங்கள் சூட்சும பதிவுகளாக சித்தத்தில் புதைந்துள்ளன... அதற்கு முன்னால் அனுபவம் என்னவென்று பார்ப்பது அவசியமாகிறது..

ஓர் அனுபவம் என்பது பஞ்சபூதங்களால் கூட்டாக அனுபவப் படுவது..

இதில் நிலம் நீர் பூதங்கள் உருவமாக திடமாக இருப்பதால், அவைகள் வெளிச்சத்தின் உதவியால் இயங்குவதால் அனுபவபடும் பொருளின் உருவ தோற்றத்தை நுகருகிறது..

காற்றும் ஆகாயமும் அருவமாக உருவமற்ற நிலையில் இருப்பதால் அவற்றை உணர்வாக நுகருகிறது...

மனம் என்ற பூதம், சித்தத்திலிருந்து தன்னை வந்து அடைந்த எண்ணத்தை நுகரும் போது அதை வெளிச்சமாகவும் உணர்வாகவும் பிரித்து வெளிச்சத்தை நீர் மண் பூதத்திற்கும், உணர்வை காற்று ஆகாய பூதத்திற்கும் அனுப்புகிறது...

ஆகையால் தான் மனம் என்ற பூதத்தை நெருப்பின் அம்சமாக கூறுகின்றனர்..

அதாவது நெருப்பிற்கு வெளிச்சத்தை தரும் சுடரும், சூடு என்ற உணர்வை தரும் கனலும்,இருப்பதால், மனத்திற்கு நெருப்பை உதாரணமாக வைத்தார்கள்...

முக்கியமாக அறிய வேண்டியது என்ன வென்றால் பிரபஞ்ச பேராற்றல் வருகின்ற பொழுது, அந்த ஆற்றலை உணர்வாக எடுத்துக் கொண்டால், அது தேக ஆற்றலாக மாறிக்கொள்கிறது..

அதே வெளிச்சமாக மாறும் பொழுது பொறி புலங்கள் வழியாக உலக தொடர்பு கொண்டு விரையமாகிறது..

ஆனால் எண்ணம் பெரும்பாலும் வெளிச்சமாகவும், குறைந்த அளவாய் உணர்வாகவும் இருக்கும்.. அதனால் தான் எண்ணங்களில் வெளிச்சம் அதிகமாக இருக்கும்..

ஆனால் காமம் கோபம் இரண்டில் உள்ள எண்ணங்களில் உணர்வு சற்று அதிகமாக இருக்கும்.. ஆனாலும் அது வெளிச்சத்தை விட குறைவாகவே இருக்கும்...

சித்தத்தில் வெளிவரும் எண்ணங்கள் மனதை சாரும் போது, வெளிச்சமாகவும் கனலாகவும் பிரிக்கின்ற ஒரு செயலை பார்த்தோம்.. அதே நேரத்தில் கனலானது வெளிச்சமாகி மாறி வெளி சார்புகளை நோக்கி சென்று விரமாகக் கூடிய செயலும் நடக்கிறது...

இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் நம்முடைய தேக அமைப்பில் உள்ள பொறி புலன்கள் வெளியே உள்ள சார்புகளில் பொருள்களில் இயல்பாகவே ஈர்க்கப்பட்டு வெளிச்சமாகி மாறி விடுகிறது..

இதன் காரணமாக தான் பகல் நேரங்களில் பொறி புலன்கள் அதிகமாக வேலை செய்து தேக கனல் பெரும்பாலும் வெளிச்சமாக மாறி நம் ஆற்றல் குறைய தொடங்குகிறது...

ஆற்றல் குறைவால் உறக்கம் வர தொடங்குகிறது.. உறக்கத்தில் பொறி புலன்கள் செயல்பாடு மிக மிக குறைவாக உள்ளதால், கனல் பெருகி தேகம் புத்துணர்ச்சி பெறுகிறது...

இந்த கனலை பற்றி சற்று அறிந்து கொள்வோம்..

எப்படி சூரிய ஒளி அலைவரிசை பூமியில் பட்டு பூமி சூட்டை, வெப்பத்தை பெறுகிறதோ அதே போல் பேரண்ட பேராற்றலின் அலைவரிசை தான், உயிர் ஆற்றல் பெறுவதற்கு மூல ஆதாரமாக உள்ளது.. இதை சில யோகிகள் காந்த அலை சக்தி என்று சொல்லிகிறார்கள்....

அதைதான் தேக கனலாக இங்கே நாம் புரிந்து கொள்கிறோம்.. தேகத்தில் இந்த கனல் ஒரு குறிபிட்ட அளவிற்கு கீழே குறைந்தால் தேகம் வலு இழந்து மரணம் அடைகிறது..

சித்தர்களிடம் இந்த கனலை தேகம் பூரணமாக பெற்றக் கொண்டபின் அந்த கனலை சூட்சம, நுண்ணிய தேகமாக மாறுகிறது.. அந்த சூட்சம தேகம் அளவற்ற கனலை பெறக்கூடிய ஆற்றல் உள்ளது..

ஆனால் சூட்சும தேகத்தை பழகி கொண்ட மனிதன் அளவற்ற ஆற்றல் அடைவதற்கு எல்லையே இல்லை.. ஒரு குறிபிட்ட ஆற்றலை பெறும் தகுதி உடைய தூல தேகத்தில் வாழும் மனிதன் தன் சூட்சும தேகத்தின் மூலம் அளவற்ற பிரபஞ்ச ஆற்றலான கனலை பெறும் தகுதி உடையவன் ஆகிறான்..

இந்த தூல தேகம் தன் சூட்சும தேகத்தின் உதவியால் பல பிரமிக்க வைக்கும் செயல்களை செய்யும் திறனை பெறுகிறது...

இந்த ஒரு இரகசியத்திலே சித்தர் ஆகும் பாதையில் இந்த பிரபஞ்ச கனல் மிக முக்கியமாக உள்ளதால், நம் தேக கனலை தக்க வைக்கவும் தேக கனலை பெருக்கவும் உகந்த உளவுகளை இனி வரும் பகுதிகளில் பார்ப்போமாக....

இலுமினாட்டி கமல் கலாட்டா...


அனைவரது வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு செடி துளசி...


1) இதன் வேறு பெயர்கள்: துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி.

2) இனங்கள்: நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்).

3) தாவரப்பெயர்கள்: Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family).

4) வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண், களி கலந்த மணற்பாங்கான இருமண், பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம் பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும் உடைய சிறுசெடி. தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. துளசியின் தாயகம் இந்தியா. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கும் பரவியுள்ளது. துளசியை விதை மற்றும் இளம் தண்டுக் குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில நிலை 6.5 - 7.5 வரை இருக்கலாம். வெப்பம் 25 டிகிரி முதல் 35 டிரிகி.

5) பயன் தரும் பாகங்கள்: இலை, தண்டு, பூ, வேர் அனைத்துப் பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.

6) பயன்கள்: தெய்வீக மூலிகையும், கல்ப மூலிகையும் ஆகும். வீட்டு உபயோகம், மருந்து, வாசமுடைய பூச்சி மருந்துகள், வாசனைப் பொருட்கள். துளசியின் கசாயம் இட்டும், சூரணம் செய்தும் சாப்பிடலாம். இருமல், சளி, ஜலதோசம் மற்றும் தொற்று நீக்கி, கிருமி நாசினி, பல்வேறு வியாதிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்தும் தடுக்கும் ஆற்றல் படைத்தது. துளசி நம் உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றி உடலின் உள்ளே இருக்கின்ற வெப்பத்தை ஆற்றக்கூடிய தன்மை உடையது.

வியர்வையை அதிகமாகப் பெருக்கக் கூடிய குணமும் இதற்கு உண்டு. இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து கொடுத்தால் குணமாகும். உடம்பில் ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு அரைத்து பூசி வந்தால் அவை எளிதில் குணமாகும். சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு சிறந்த நிவாரணி.

இலைகளைப் பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி. காலை, மாலை சாப்பிட்டு வர பசியை அதிகரிக்கும். இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை மிகுக்கும். இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு காலை மாலை 2 துளி வீதம் காதில் விட்டு வர 10 நாட்களில் காது மந்தம் தீரும். விதைச் சூரணம் 5 அரிசி எடை தாம்பூலத்துடன் கொள்ள தாது கட்டும். மழைக் காலத்தில் துளசி இலையை தேநீர் போலக் காய்ச்சி குடித்து வந்தால் மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற நோய்கள் வராது. தொண்டையில் புண் ஏற்பட்டு துன்பப்படுகிறவர்கள் துளசி இலைக் கசாயத்தை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேன் தொல்லை நீங்க துளசியை இடித்து சாறு எடுத்து அத்துடன் சமஅளவு எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் குளித்து வர பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

துளசி இலையை இடித்துப் பிழிந்த சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர வலி குறையும். வெட்டுக் காயங்களுக்கு துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமாகும். வீடுகளில் துளசி இலைக் கொத்துக்களை கட்டி வைத்தாலும், வீட்டைச் சுற்று துளசி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் வராது.

துளசி இலை நல்ல நரம்பு உரமாக்கியாகச் செயல்படுவதோடு, ஞாபக சக்தியையும் வளர்க்கிறது. துளசி மணி மாலை அணிவதால் அதிலிருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு நம்மை பல நோய்களிலிருந்து காக்கிறது. எளிமையான கருத்தடைச் சாதனமாகக் கொள்ளவும் ஏற்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் 15 கிராம் அளவு ஆண், பெண் இருவரும் துளசியைச் சாப்பிட்டு வந்தால் ஆறு மாதத்திற்குப் பின் கருத்தரிக்காது.

குணமாகும் வியாதிகள்.

1. உண்ட விஷத்தை முறிக்க.
2. விஷஜுரம்குணமாக.
3. ஜன்னிவாத ஜுரம் குணமாக.
4. வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.
5. காது குத்துவலி குணமாக.
6. காது வலி குணமாக.
7. தலைசுற்றுகுணமாக.
8. பிரசவ வலி குறைய.
9. அம்மை அதிகரிக்காதிருக்க.
10. மூத்திரத் துவாரவலி குணமாக.
11. வண்டுகடி குணமாக.
12. வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக.
13. எந்த வியாதியும் உண்டாகமலிருக்க.
14. தோல் சம்பந்தமான நோய் குணமாக.
15. மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற.
16. அஜீரணம் குணமாக.
17. கெட்டரத்தம் சுத்தமாக.
18. குஷ்ட நோய் குணமாக.
19. குளிர் காச்சல் குணமாக.
20. மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக.
21. விஷப்பூச்சியின் விஷம் நீங்க.
22. பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க.
23. காக்காய்வலிப்புக் குணமாக.
24 .ஜலதோசம் குணமாக.
25. ஜீரண சக்தி உண்டாக.
26. தாதுவைக் கட்ட.
27. சொப்பன ஸ்கலிதம் குணமாக.
28. இடிதாங்கியாகப் பயன்பட
29. தேள் கொட்டு குணமாக.
30. சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக.
31. கண்ணில் விழுந்த மண்,தூசியை வெளியேற்ற.
32. வாதரோகம் குணமாக.
33. காச்சலின் போது தாகம் தணிய.
34. பித்தம் குணமாக.
35. குழந்தைகள் வாந்தியை நிறுத்த.
36. குழந்தைகள் வயிற்றுப் போக்கை நிறுத்த.
37. சகல விதமான வாய்வுகளும் குணமாக.
38. மாலைக்கண் குணமாக.
39. எலிக்கடி விஷம் நீங்க.
40. காச்சல் வரும் அறிகுறிதோன்றினால்.
41. இரணத்தில் இரத்தம் ஒழுகினால் நிறுத்த.
42. வாந்தியை நிறுத்த.
43. தனுர்வாதம் கணமாக.
44. வாதவீக்கம் குணமாக.
45. மலேரியாக் காய்ச்சல் குணமாக.
46. வாய்வுப் பிடிப்பு குணமாக.
47. இருமல் குணமாக.
48. இன்புளூயன்சா காய்ச்சல் குண்மாக.
49. காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த.
50. இளைப்பு குணமாக.
51. பற்று, படர்தாமரை குணமாக.
52. சிரங்கு குணமாக.
53. கோழை, கபக்கட்டு நீங்க...

திராவிடமும் தெலுங்கு சாதி வெறியும்...


இசை வேளாளர் என்று இதுவரை இல்லாத ஒரு சாதியை, தனக்குத்தானே ஒரு சாதியை உருவாக்கிக் கொள்ளும் வல்லமையைக் கொடுத்தது தெலுங்கு அரசியல் ஆதிக்கமே..

அதே போல் தான் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்களை ஆதித்தமிழர் என்றும்..

தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் ஆதி திராவிடர் என்றும்.. மாற்றும் வல்லமையை தெலுங்கு அரசியல் ஆதிக்கத்தால் வந்த ஆதிக்க மனப்பான்மையே..

தெலுங்கர்களை தமிழர்களாகவும்
தமிழர்களை திராவிடர்களாகவும்
சித்தரித்து தமிழனை அழிக்க கருணாநிதி (திராவிடக் கட்சிகள்)  செய்த சூழ்ச்சியே..

அரசியல் ஆதிக்கம் இல்லாத தமிழர்களால் கைக்கட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது.

இதனை உடைத்தெறிய தமிழர்கள் தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிலை நாட்டுவது ஒன்றே வழி..

தமிழர்களாய் ஒன்றிணைவோம்..

ஆரசியல் அதிகாரத்தை திராவிடத்திடம் இருந்து தட்டிப் பறிப்போம்...

தமிழனுக்கு ஆளும் தகுதியில்லை - கன்னட ஈ.வே. ராமசாமி...


நீ ஒரு தெலுங்கு கன்னடியன்,
நீ எப்படி தமிழர்களுக்கு தலைவனாக இருக்க முடியும் என்று என்னை கேட்டார்கள்.?

தமிழன் எவனுக்கும் இந்த தகுதி இல்லையப்பா என்று நான் கூறினேன்..

- ஈ.வே.ரா  - 1.6.1954 - விடுதலை...

திராவிடம் Vs தமிழ் தேசியம்...


வந்தேறிகளின் ஒற்றுமை..

சன்சூ என்ற போர்க்கலை நிபுணர் கூறுகிறார்.

எதிரி நாட்டுக்குள்ளே நம் படையினர் முன்னேற முன்னேற அவர்களிடையேயான ஒற்றுமையும் நம்பகத்தன்மையும் அதிகரிக்குமாம்.

நம் நாட்டு வந்தேறிகள் ஒற்றுமையுடன் நம்மை விட வேகமாகவும் துடிப்பாகவும் இருக்க இதுதான் காரணம்.

அவர்களுக்கு இது உயிரைக்காக்க ஓடும் ஒரு முயலின் போராட்டம்.

நமக்கு இது உணவுக்காக அதைத் துரத்தும் புலியின் போராட்டம்.

ஆனால் நிலைமை தலைகீழாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

எனவே விழித்துக் கொள்ளுங்கள்...

காலம்தாழ்த்தி நாம் கண் விழிக்கின்றோம்...


மண்ணிருந்தும் தம் மண்ணை இழந்த மக்களான தமிழ் மக்கள், விழியிழந்து வழியிழந்து நாடோடி இனமாகக் கெட்டழிந்து வருவதை பார்க்கின்றோம்..

பெயருக்கொரு தமிழ்நாடு..

ஆனால் அங்குத் தமிழரிடம் ஆட்சியையும் அரசும் கொற்றமும் கொடியும் நிலமும் கடலும் வானமும் இல்லை..

தமிழனின் மானத்தை மறைக்க உதவிய நான்கு முழத்துண்டும் பரி போன கதையாய், தாய்த் தமிழகமே இன்று வேலியில்லா நிலமாகி, வாசலில்லா வீடாகி, வந்தாரை மட்டுமே வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழகம் இன்னொரு பாசுனியவாகக் கூடிய கேடு நம்மைப் பேரிருளாய்ச் சூழ்ந்து வருகிறது...

மாண்டியாவும் தமிழும் மாலியமும்...


தற்போதைய கர்நாடகாவில் உள்ள மாண்டியாவுக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை என்பார்..

அங்கே பாண்டவபுரம் வட்டத்தில் மேல்கோட்டை எனும் ஊரில் உள்ள செல்லப்பிள்ளை கோவிலில் இராமானுசரால் ஏற்படுத்தப்பட்டு தாழ்த்தப்பட்டிருந்த மக்களை (தமிழரை) சிறப்பு செய்யும் வகையில் இன்று வரைக்கும் கூட நடைபெறும்  'திருக்குலத்தார்' விழாவைப் பற்றி அறிந்து கொண்டு பிறகு சிந்திக்கவும்..

(இன்று கன்னடத்தில் மேல்கோட்டை மேலுகோட்டே ஆகி, செல்லப்பிள்ளை செலுவ நாராயணா ஆகி, சமஸ்கிருதத்தை வளர்க்கும் நிறுவனங்கள் வந்துவிட்டன.)

அதே போல தெலுங்கனான குலோத்துங்கன் சோழநாட்டு அரியணையில் ஏறியபிறகு தில்லை நடவரசர் (நடராஜர்) கோயிலில் இருந்த கோவிந்த பெருமாள் சிலையை கடலில் தூக்கிப்போட்டு (தசாவதாரம் திரைப்படத்தில் கூட வரும்) வைணவ பூசாரிகளை விரட்டியடித்த போது அந்த தமிழ்ப் பார்ப்பனர்கள் இராமானுசரின் செல்வாக்கு நிறைந்திருந்த தமிழ் மண்ணின் வடமேற்கு பகுதிகளுக்கு (தற்போதைய தென்கன்னட பகுதிகளுக்கு) குடிபுகுந்தனர்..

அவர்கள் இன்றும் தமிழராகத் தான் வாழ்கின்றனர்.

பிறகு நாயக்கராட்சி வைணவத்தைக் கையிலெடுத்தபடி விந்தியம் முதல் குமரிவரை பரவியது..

இதனால் வடதமிழகத்தின் வைணவ தலங்கள் தெலுங்கர் கைக்குப் போயின. ஆனால் தமிழ் வழிபாட்டு  முறைகள் இன்றும் எஞ்சியுள்ளன.

ஆனால் தமிழகத்தில் நாயக்கராட்சியை கடுமையாக கடைசிவரை எதிர்த்தவர்கள் சைவர்கள் என்று நினைக்க வேண்டாம்..

நாயக்கர்களை எதிர்த்து இறுதிவரை தமிழ் வழிபாட்டிற்காகப் போராடியவர்கள் தமிழினத்தின் பூர்வகுடிகளான முன்குடுமி பார்ப்பனர்கள்..

அதாவது வைணவ பார்ப்பனர்கள்.

அதிலும் குறிப்பாக தென்கலை வைணவர்கள்..

ஆக சிவனியம் (சைவம்), மாலியம் (வைணவம்) ஆகியனவும் தமிழர் மதங்களே..

ஒரு காலத்தில் சிவனியம் தமிழுக்காகப் போராடியது..

பிரிதொரு காலத்தில் மாலியம் தமிழைக் காக்கப்போராடியது..

மதம் எதுவாயிருந்தாலும் ஆளும் இனம் எது என்பது தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் ரூ.60 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டு பிடிப்பு...


ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஆளுநர் உள்பட யாரும் சந்திக்கவில்லை - திண்டுக்கல் சீனிவாசன்...


அப்படினா என்னை பார்த்து ஜெயலலிதா கை அசைத்தார் எனச் சொன்ன ஆளுநரைத்தான் முதலில் விசாரிக்க வேண்டும்...

பாஜக மோடி சாதனை...


குடிக்க தண்ணீர் இல்லாமல் இறந்து போன கர்ப்பிணி: மியான்மரில் கொடூரம்...


மியான்மர் நாட்டில் வசித்துவரும் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த மாதம் 25-ம் திகதியில் இருந்து கடந்த 8 ஆம் திகதி வரையிலான இரண்டு வார காலத்தில் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லீம்கள் வங்கதேசத்திற்குள் நுழைந்துள்ளனர் என ஐ.நா.சபை அறிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் காக்ஸ் பஜார் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது போன்ற முகாம் ஒன்றில் தங்கியிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு குடிப்பதற்கு தண்ணீரும், உரிய சிகிச்சையும் கிடைக்காததால் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய பணம் இல்லாத நிலையில், முகாமின் அருகிலேயே சடலத்தை எடுத்துச் சென்று பிரார்த்தனை செய்து அடக்கம் செய்துள்ளனர்.

ரோஹிங்கியர்களுக்கு எதிரான இனப்படுகொலை கொடூரத்தின் தீவிரத்தை உலகத்திற்கு உணர்த்துவதாக இந்த பரிதாப மரணம் இருக்கிறது என கூறப்படுகிறது.

மியான்மரில் நடக்கும் இனப்படுகொலைக்கு இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது...

தமிழனுக்கு சோதனையாவே வருது...


ஆர்.எஸ்.எஸ் ஹிந்துத்துவாவை எதிர்த்த சுவாமி விவேகானந்தர்...


விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு விழா. அஞ்சல் தலை வெளியீடு, நினைவு நாணயம் வெளியிடுதல், முக்கிய வீதி களுக்குப் பெயர் சூட்டுதல் பல்கலைக் கழகங்களில் ஆய்வு மையம் என்று ஆர்.எஸ்.எஸ். வர்ணாசிரம கூட்டம் சுவாமி விவேகானந்தரை உரிமை கொண்டாடியது...

ஆனால் உண்மை என்ன வென்றால் சுவாமி விவேகானந்தர் ஆர்.எஸ்.எஸ். இந்து வெறிக்கும், வர்ணாசிரம கொள்கைகளுக்கும் எதிரானவர்.

இந்த விவேகானந்தர் யார்?

அவரின் ஒரு பக்கத்தை மட்டும் வெளியே காட்டி விட்டு மறுபக்கத்தை மறைப்பதேன்.

சுவாமி விவேகானந்தர் பார்ப்பனீயத்தைப் பற்றியும், இந்து மதத்தின் ஜாதிய தன்மை குறித்தும் ஆர்.எஸ்.எஸின் இந்து வெறி குறித்தும் ஆதி சங்கரரின் குறுகிய இதயம் குறித்தும் அவர் எழுதியதை ஏன் இவர்கள் வெளிப்படுத்தவில்லை?

உண்மையிலேயே விவேகானந்தர் மீது பற்றும் அவர்தம் சிந்தனைகளைப் பரப்ப வேண்டும் என்ற நல்லெண்ணமும் அவர்களிடத்தில் இருக்குமேயானால் விவேகானந்தர் கருத்துக்கள் அனைத்தையும் ஒளிவு மறைவின்றி பரப்ப வகை செய்திட வேண்டும்.

இந்துக்கள் ஏன் மதம் மாறினார்கள்?

அதற்க்கு வர்ணாசிரம் ஜாதி வெறி எப்படி காரணமான இருந்தது என்பது பற்றி விவேகானந்தர் தனது (தர்மசக்கரம் - துந்துபி ஆண்டு கார்த்திகை மாதம் சக்கரம் -31, ஆரம் 11) நூலில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்..

வேதவியாசர், வசிஷ்டர், நாரதர் போன்றவர்கள் பிராமணர் குலத்தில் பிறந்தவர்கள் அல்லர்.

பிராமணர்களின் கருணையின்மை காரணமாகவே நம்நாடு முகம்மதியர்களின் ஆட்சிக்கு இலக்காக நேர்ந்தது என்று சுவாமிஜி திட்டவட்டமாய்க் கூறி இருக்கிறார்.

உப நிடதங்களிலுள்ள தத்துவங்கள் எல்லாம் அரசர்களுடைய மூளைகளில் அரும்பியவை. புரோகிதர்களிடமிருந்து பிறக்கவில்லை என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்..

பிராமணரல்லாத வகுப்பார் படிப்படியாகத் துயில் நீங்கி எழுகிறார்கள். பிராமணருடைய சாத்திரங்களிலும் மந்திரங்களிலும் அவர்களுக்குள்ள நம்பிக்கை நீங்குகிறது.

மேலை நாட்டுக் கல்வி பரவியதனால் பிராமணருடைய தந்திரங்கள் எல்லாம் மழைக் காலத்திலே பதுமா நதியினுடைய கரைகள் இடிந்து விழுவதுபோல அழிந்து போகின்றன.

ஆதாரம்: சுவாமி விவேகானந்தர் வரலாறு..

ஆதி சங்கரர் பற்றி சுவாமி விவேகானந்தர் கூறும் கருத்தை பாருங்கள்..

சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப் போல மிகவும் கூர்மையாய் இருந்தது; அவர் வாதம் புரிவதில் வல்லவர்; மஹா பண்டிதர்; அதில் அய்யமில்லை. என்றாலும், அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை;  அவருடைய இதயமும் அத்தகையதாகவே காணப் பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத் துவத்தில் பெருமை பாராட்டுபவர்..

பசுவதையும் - இந்துமதமும்  குறித்து விவேகானந்தர் கருத்து..

தம்முடைய சொந்தச் சகோதரர் பட்டினியினால் இறக்க, அவர்களுடைய உயிரைக் காப்பாற்றும் பொருட்டு ஒருபிடி அரிசி கொடாமல், மனிதர் மேல் அனுதாபமின்றிப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் குவியல் குவியலாக உணவைக் கொடுக்கின்ற இத்தகைய சபைகளில் நான் புகுவதில்லை.

மக்கள் சங்கம் இவற்றினால் நன்மை அடைகிறதென நான் எண்ணவில்லை என்று கோமாதா பாதுகாப்பு சங்கங்களை நோக்கி சுவாமிஜி சாடுகிறார்.

இந்துத்துவா வை  சராமாரியாக சாடுகிறார் விவேகானந்தர்...

இதற்கு முதலில் பதிலைச் சொல்லி விட்டு, விவேகானந்தரின் ஆண்டு விழாவை விசேடமாக நடத்துங்கள்..

இந்துவெறி, வர்ணாசிரம கொள்கைகளுக்கு எதிராக குரல் எழுப்பிய மகானை ஏதோ உங்கள் கருத்துக்களை சொல்லும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கேடர் போல் சித்தரிக்க உங்களுக்கு மானம், ரோசம் இல்லை...

சோமனூர் இடிந்து விழுந்த பேருந்து நிலையத்திற்கு கடந்தான்டு தான் பராமரிப்பு செலவு 50 லட்சம் செய்து இருக்காங்க...


எந்த லட்சணத்துல செய்து இருப்பாங்கனு பார்த்துங்குங்க..

அப்பாவிகளின் உயிர் அவ்வளவு மலிவா போச்சு அவங்களுக்கு. இனியாவது திருந்துவோமா? 50லட்சம் செலவு செய்ததற்கான ஆதாரம் இதோ...

நோய் தொற்று எச்சரிக்கையால் செப்.22 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, அக்.1 முதல் சசிகலாவே ஜெயலலிதாவை பார்க்கவில்லை - தினகரன்...


வடுகர்களின் அறிவிக்கப்படாத போர்...


வடுகர்களின் பூர்வீகம் தெரியாவிட்டாலும் வேங்கட மலைக்கு அப்பால் ஆண்ட தமிழ் மன்னர்கள் காட்டுமிராண்டிகளான வடுகர்களை கூலிப்படையாக வைத்திருந்தனர் என்பது மட்டும் தெரிகிறது.

(தமிழர்களான) நன்னர்களுக்கு அடங்கி விசுவாசமாக நடந்துவந்த (வடுகர்களான) கோசர்களுக்கு நன்னன் செய்த ஒரு வன்கொடுமையே, வடுகர்கள் தமிழர் மீது பகைகொண்ட தொடக்கப்புள்ளி.

ஆனால் வடுகர்கள் நேரடியாக அல்லாது மறைமுகமாக குறுக்கு வழியில் உறவாடிக் கெடுத்து தலைமுறை தலைமுறையாக தமிழினத்தின் மீது அறிவிக்கப்படாத போர் புரிந்து அதில் முக்கால்வாசி வெற்றியும் பெற்றுவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும்.

அந்த தொடக்கப்புள்ளி ஒரு பெண்கொலை.

நன்னனின் காவல்மரத்தின் (மாமரம்) ஒரு பழம் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டது.

அதை விபரம் தெரியாத ஒரு வடுகர் பெண் எடுத்து தின்றுவிடுகிறாள்.

இதற்கு மரணதண்டனை அளிக்கிறான் கொடுங்கோலனான நன்னன். வடுகர்கள் அவளது எடைக்கு எடை தங்கமும் அதோடு 81 யானைகளும் தருவதாகக் கூறி அவளை விடுதலை செய்யுமாறு கெஞ்சுகின்றனர்.

ஆனாலும் மனமிரங்காத அந்த கொடிய மன்னன் அந்த அப்பாவி பெண்ணைக் கொலை செய்கிறான்.

(புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் _பரணர், குறுந்தொகை 292)

அதன்பிறகு வடுகர்கள் ஒற்றுமையாகி சூழ்ச்சி மூலம் நன்னனை வீழ்த்தி அவனது காவல்மரத்தை வெட்டியெறிந்தனர்.
(நன்னன் நறுமா கொன்று
நாட்டிற் போக்கிய ஒன்று மொழிக் கோசர் போல வன்கட் சூழ்ச்சி
_ குறுந்தொகை 73)

ஆனாலும் வடுகர் நெஞ்சில் இந்த கொலை ஆறாத வடுவாக பல தலைமுறைகள் படிந்திருந்தது.

நன்னர்களை வீழ்த்திய வடுகர்களைத்தான்..

நந்தர்களை வீழ்த்திய மோரியர் என்று வரலாறு பதிவு செய்கிறது.

பெரும் வல்லரசாக எழுந்த வடக்கு வடுகரான மோரியர் தென்வடுகர் உதவியுடன் தமிழர் மீது போர் தொடுத்தனர். ஆனால் மூவேந்தரின் கூட்டணிப்படையிடம் படுதோல்வி அடைந்தனர்.

அதன்பிறகு தமிழர்களை சுற்றிவளைத்து தோற்கடிக்க தென்னிலங்கைக்கு படையனுப்பி புத்தமதத்தைப் பரப்பி அங்கே சிங்களவரோடு கலந்து தமிழர்களுக்கு எதிராக சிங்களவரைத் தூண்டியபடி இருந்தனர்.

வடவடுகர் ஏற்படுத்திய மோரிய பேரரசு வீழ்ந்ததும் தென்வடுகரான களப்பிர காட்டுமிராண்டிகள் தமிழர் மீது படையெடுத்து வென்றனர். (இதுவே இருண்டகாலம் என்று கூறப்படுகிறது) களப்பிரர்க்கு அடங்கி சிற்றரசாக இருந்த பாண்டியர் கடுங்கோன் காலத்தில் கிளர்ச்சி செய்து வடுகர்களை தோற்கடித்து ஒழித்தனர்.

அதே நேரத்தில் வட இலங்கையில் இருந்து ஆண்ட பாண்டியர் மீது ஆண்டுகளாக பலமுறை போர்தொடுத்து போர்தொடுத்து இறுதியில் தாதுசேனன் என்ற மோரிய குடிவழி மன்னன் குறுக்கு வழியில் பாண்டிய மன்னர் இருவரைக் கொன்றதன் மூலம் தமிழர்களை 700 ஆண்டுகள் கழித்து ஈழத்தில் வீழ்த்தினான்.

ஆனாலும் சோழ அரசின் பேரெழுச்சி அனைவரையும் அடக்கி தமிழர் பேரரசாக எழுந்தது.

வடக்கே வடுகர்களை துவம்சம் செய்தது.
இலங்கையிலும் வடுகர்களை ஒழித்தது.

இராசராசனை எதிர்த்து தோல்வியடைந்த வடுகன் அம்மன்னனின் பிறந்தநாளில் விடுதலை அடைந்து அரசவையில் பாட்டுப்பாடி சோழ இளவரசியை பரிசாகப் பெற்று அவள் மூலம் பெற்ற மகனை (அநாபய சாளுக்கியன் அல்லது குலோத்துங்க சோழனை) சூழ்ச்சி மூலம் சோழ அரியணையில் அமர்த்தினான்.
கலப்பினமாயினர் சோழர். இலங்கையை சிங்களவர் மீண்டும் பிடித்தனர்.

பாண்டியநாடு தவிர தமிழ்மண் முழுதும் வடுகரால் ஆக்கிரமிக்கப்பட்டது.

அப்போது பாண்டிய பேரரசு மீண்டும் எழுந்தது.

வடுக படைத்தளபதியுடன் வந்த சேரனை முறியடித்து அரைவடுகரான சோழரை அடக்கி வடமேற்கு தமிழகத்தில் நுழைந்திருந்த வடுக ஒய்சளரை விரட்டியடித்து பல்லவ வம்சாவழி காடவரையும் தெலுங்கு சோழரையும் ஒழித்துஈழத்தையும் மீட்டான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.

முழுமையாக தமிழ்மண் ஒற்றையாட்சியில் மீண்டும் வந்தது.

ஆனால் வாரிசுரிமைப் போர்களால் பாண்டிய அரசு வலுகுன்றியது.
இதைப் பயன்படுத்தி வடக்கே ஆண்ட துருக்கிய மங்கோலிய சுல்தான்கள் தமிழகத்தில் பாதியை வென்றனர்.
அவர்களுக்குள்ளேயே உட்கலகம் நடந்தபோது வடுகர்கள் மீண்டும் தமிழகத்தில் விஜயநகரப் பேரரசாக நுழைந்தனர்.

துருக்கியரை வென்று பாண்டியரை அடக்கி தமிழகத்தை மீண்டும் கைப்பற்றினர்.

கண்டி சிங்களவருக்கு பெண்கொடுத்து அவர்களை மேலும் கலப்பினமாக்கி மீண்டும் தமிழருக்கு எதிராகத் தூண்டினர்.

(அதாவது மோரியர் காலத்தில் செய்ததை அப்படியே மீண்டும் செய்தனர்).

ஆங்கிலேயர் இங்கே நுழைந்ததும் அவர்களுக்கு அடிபணிந்து சிற்றரசாகத் தொடர்ந்த வடுக நாயக்கர்கள் அவர்கள் அகன்றதும் அவர்கள் உருவாக்கித்தந்த திராவிடம் எனும் பெயரால் மீண்டும் தமிழகத்தை ஆளத்தொடங்கினர். ஈழத்தில் சிங்கள பௌத்தம் எனும் பெயரால் தமிழர்களை ஒழிக்கத் தொடங்கினர்.

1958 ல் ஈழத்தில் வன்முறை தொடங்கியது.

1956 ல் தமிழகத்தின் எல்லைப் பகுதிகள் விழுங்கப்பட்டன.

2009 ல் இனப்படுகொலை நடந்து இலங்கை முழுதும் விழுங்கப்பட்டு விட்டது.

2015 ல் இங்கே மண்ணோடு சேர்த்து தமிழினத்தை அழிக்க அணுவுலை மீத்தேன் ஹைட்ரோகார்பன் என நாசகாரத் திட்டங்கள் வடுகரால் தலைமேல் சுமந்து அழைத்து வரப்பட்டு தமிழ்மண் மீது  சுமத்தப்பட்டுள்ளன.

முதலில் சோழன் இளஞ்சேட்சென்னி தமிழர் கூட்டணி அமைத்து மோரியரை விரட்டினான்.

அடுத்து கடுங்கோன் பாண்டியன் களப்பிரரை விரட்டியடித்தான்(அதன் பிறகு சோழர் எழுந்தனர்).

அடுத்து சடையவர்மன் சுந்தரபாண்டியன் தமிழ் நிலத்தை மீட்டான்.

தற்போது மீண்டும் வடுகம் ஹிந்தியரின் உதவியோடு தமிழர் மண்ணை சுற்றிவளைத்துள்ளது. விரைவில் வீழ்த்தவுள்ளது

இப்போது அதை முறியடிக்கப்போகும் தமிழர் தலைவன் யார்?

கோவை மக்கள் பயன்படுத்திய சோப்பின் நுரை தான் நொய்யல் ஆற்றில் வருகிறது - அமைச்சர் கருப்பணன்...


NGO போராளி திருமுருகன் யார்? ராவுக்கும் NIBக்கும் இவருக்கும் என்ன உறவு?


1) சில பல மாதங்களுக்கு முன்பு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ரயில் என்ஜினை யாரோ ஒருவர் ஓட்டிக் கொண்டு சென்றார் என்ற செய்தி உங்களுக்கு நினைவு வருகிறதா?

2) அந்தக் குற்றவாளியைப் பிடித்து விட்டார்களா? இல்லை. இனிமேலாவது பிடிப்பார்களா? மாட்டார்கள். ஏன்?
அந்த ரயில் என்ஜினை ஓட்டிச் சென்றவர் ஒரு ரா (RAW) அதிகாரி. ரயில்வே போலீஸ், அந்த வழக்கின் கோப்பை (FILE) மூடிவிட்டது என்ற உண்மை மக்கள் அறியாதது. இவையெல்லாம் ராவின் ரகசிய நடவடிக்கைகள். மக்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது.

3) NGO புரட்சியாளர் திருமுருகன் காந்தி இரண்டு உளவு அமைப்புகளுக்கு நெருக்கமானவர். ஒன்று ரா. இது இந்திய உளவு அமைப்பு. இன்னொன்று NIB. இது
இலங்கையின் உளவு அமைப்பு.
(NIB = National Intelligence Bureau).

4) இவ்விரு உளவு அமைப்புகளின் ஈழம் குறித்த செயல்திட்டத்தை நிறைவேற்றித் தருவதே திருமுருகன் காந்தியின் அரசியல். இவ்விரு உளவு அமைப்புகளின் முகவர் மற்றும் சேவகரே திருமுருகன்.

5) ஈழத்தில் இனப்படுகொலை உச்சத்தில்
இருந்தபோதெல்லாம் ஐநா மனித உரிமை கவுன்சிலில் (UNHRC) கண்டனங்கள் எழும். மனித உரிமை கவுன்சில் இலங்கை அரசுக்கு அறிவுறுத்தல்களை வழங்கும். அப்போதெல்லாம் ராஜபக்சே ஆதரவு
சிங்கள புத்த பிக்குகள் UNHRC அறிக்கையை தீ வைத்துக் கொளுத்தும் போராட்டத்தை நடத்துவார்கள். மறுநாள் அதே போராட்டத்தை (UNHRC அறிக்கை எரிப்பு) திருமுருகன் தமிழ்நாட்டில் நடத்துவார். இது சர்வதேசப் பத்திரிகைகளில் UNHRC அறிக்கைக்கு இந்தியா இலங்கையில் எதிர்ப்பு என்று செய்தியாக வெளிவரும். (விரிவான விளக்கம் தனிக் கட்டுரையில்).

6) ஈழ அரசியல் அறிந்தோர் வெளிநாட்டில் வாழும் நெடியவனை அறிவார்கள். மே 17 இயக்கத்திற்கு தேவையான நிதியை வழங்கியது ஆரம்பத்தில் நெடியவனே.

7) லண்டனில் உள்ள TTC மற்றும் BTF அமைப்புகளுடன் நெருங்கிய உறவு கொண்டவர் திருமுருகன். BTF அமைப்பு
(BTF = British Tamil Forum) ராஜபக்சேவுடன் சமரசம் செய்து கொண்டதை அடுத்து அதன் மீதான தடையை ராஜபக்சே அரசு நீக்கியது.

இந்த அமைப்பு தற்போது சிங்கள இனவெறி ராஜபக்சே/மைத்திரிபால அரசின் அரவணைப்பைப் பெற்ற அமைப்பு. திருமுருகனின் மே 17 இயக்கமும் BTF அமைப்பும் சிங்கள இனவெறி அரசுக்குச் சாதகமாக ஈழப் பிரச்சினையைக் கையாளும் அமைப்புகள்.

8) தோழர் உமர் அவர்களை உங்களில் எவருக்கேனும் நினைவு இருக்கிறதா? மே 17 இயக்கத்தில் திருமுருகன் காந்தியுடன் இணைந்து செயலாற்றியவர் தோழர் உமர்.

திருமுருகனின் பித்தலாட்டங்களை அறிந்ததும் அவர் கடுமையாகச் சண்டையிட்டார். விளைவு: மே 17இல்
இருந்து வெளியேற்றப் பட்டார். அவர் திருமுருகனின் சிங்கள ஆதரவு மற்றும் நிதி மோசடிக் குற்றங்களை விளக்கி 450 பக்க அளவிலான ஒரு ஆவணத்தை
வெளியிட்டார். இந்த ஆவணம் அவரின் வலைப்பூவில் (blog) இப்போதும் உள்ளது. வாசகர்கள் அருள்கூர்ந்து அந்த ஆவணத்தைப் படிக்கவும்.

9) இன்னும் திருமுருகனின் பித்தலாட்டங்கள் குறித்து நிறையவே சொல்ல வேண்டும். ஒரே கட்டுரையில் எல்லாவற்றையும் சொல்லி விட முடியாது. தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்ட செங்கொடி என்னும் இளம் பெண்ணின் இறுதிச் சடங்கின்போது, திருமுருகன் எவ்வளவு அட்டூழியமாக நடந்து கொண்டார் என்பதை ஈழ ஆதரவாளர்கள் அறிவார்கள். அது பற்றி அடுத்துப் பார்ப்போம்.

10) மறைந்த திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், எழுத்தாளர் பாமரன், நடிகர் சிவகுமார் ஆகியோர் பல்வேறு காலக்கட்டங்களில் திருமுருகனின் மோசடிகளை அம்பலப் படுத்தியும், வன்மையாகக் கண்டித்தும் மேடைகளில் பேசி உள்ளனர்.அவற்றையும் அடுத்துக்
காண்போம்...

பதிவு Ilango Pichandy
Kasi Krishna Raja
Canthrasekar M

சைவமும் - அசைவமும்...


புலால் உண்பதில் ஏற்படும் நன்மைகள்..

உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும்.

30 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து ஆதிகால மனித இனமான ஹோமோ சேப்பியன்ஸ் முதற்கொண்டு இதை உண்டே ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.

மனித நாகரீகம் தோன்றியது முதல் அசைவமே பிரதான உணவாக இருந்து வந்தது.

நாள் முழுவதும் வேட்டையாட போதுமான சத்துக்களை அவர்களுக்கு அசைவமே கொடுத்தது. மானிறைச்சி தின்றதல்ல அன்றும் இன்றும் வேதியர், மானுரித்த தோலல்லோ மார்புநூல் அணிவது.....

புலால் உண்பதால் ஏற்படும் தீமைகள்..

மனிதாபிமான அடிப்படையிலும் கர்மாவின்படியும் பார்க்கும்போது இது ஓர் உயிர்கொலை.

அசைவ உணவை உண்டபின் அதன் சாராம்சம் இரத்தத்தில் கலந்து ஆக்ரோஷ எண்ணங்களையே தூண்டுகிறது.

மனதை கட்டுப்படுத்த நினைக்கும் எவருக்கும் அசைவ உணவு எதிரியே...

ஜெயலலிதா சிகிச்சை பெற்றதற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளது; சசிகலா ஒப்புதல் இல்லாமல் அவற்றை வெளியிட முடியாது - டிடிவி தினகரன்...


சி.ஆர். சரஸ்வதியை நோக்கி பறந்து வந்த கற்கள்...


அண்ணாவின் 109ஆவது பிறந்தநாள் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. அக்கூட்டத்தில் சி.ஆர் சரஸ்வதி பேசியபோது கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு உண்டானது. தற்போது தினகரன் அணியில் இருக்கும் சி.ஆர் சரஸ்வதி, விழுப்புரத்தில் நடந்த அண்ணாவின் 109ஆவது பிறந்தநாள் விழா கூட்டத்துக்கு சென்றிருந்தார். அக்கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்த போது திடீரென கற்கள் மேடையில் வந்து விழுந்தன.

அதைப் பார்த்து மேடையில் இருந்த அனைவரும் திடுக்கிட்டனர். உடனே கூட்டத்தில் கல் எறிந்த நபரைக் கண்டு பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து சி.ஆர்.சரஸ்வதி கூறும்போது, நாங்களும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தானே. எதர்கு இப்படி தரம் தாழ்ந்து நடந்து கொள்ள வேண்டும்?

சபாநாயகர் மற்றும் கொறடாவின் உத்தரவுகள் செல்லாது. எம்.எல்.ஏகளை நீக்கிய விவகாரத்தில் நீதிமன்றத்தில் நாங்கள் வெல்வோம் என கூறினார்...

திருட்டுத் திராவிடத்தின் இருட்டு வேலைகளை தெரிந்து கொள்ள, இந்த நூலைப் படியுங்கள்...



எல்லாரையும் வந்தேறிகள் என்று குறிப்பிடும் தாங்கள் இந்நிலப்பகுதியில் தோன்றி தொடர்ந்து இங்கேயே வாழ்ந்து வருகிறீர்கள் என கோர என்ன சான்று வைத்துள்ளீர்கள் என்று கேட்ப்பவர்க்கு.....


என்னய்யா அதிமேதாவிகளா...

கேரளம் மலையாளத்தனுக்கு மட்டுமே என்று வேலைவாய்ப்பில் சட்டம் செய்தானே அவனிடம் கேட்பது தானே கேரளா மலையாளத்தனுக்கு மட்டுமே சொந்தமா? அதற்கு என்ன சான்று  என்று?

கன்னடன் மத்தியதேர்வாணையம் மூலம் தேர்ந்த்டுக்கப்பட்ட 19 தமிழர்களை, அவர்களுக்கு கன்னடம் தெரியாது என்பதால் இன்றுவரை அனுமதிக்க மறுத்த அவனிடம் கேட்பதுதானே கர்நாடகம் கன்னடனுக்கு சொந்தமானது என்பதற்கு என்ன சான்று வைத்துள்ளீர்கள் என்று?

சீமாந்திரத் தெலுங்கன் தெலுங்கனைத் தவிர வேறு யாருக்கும் ஆந்திராவில் வேலைகிடையாது என்று சொன்னானே அவனிடம் கேட்பது தானே இது தெலுங்கனுக்குச் சொந்தமானது என்பதற்கு என்ன ஆதாரம் என்று?

கேணத்தனமா தமிழனை பார்த்து மட்டும் கேள்வி கேட்கும் துணிச்சல் திராவிட ஆட்சி உள்ளவரை தான்...

மக்களைப் பாதுகாக்கும் மானங்கெட்ட இலங்கை காவல் துறை இது தான்...


தமிழர்கள் எந்த மதத்தையும் சார்ந்தவர்கள் அல்ல...


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை மட்டும் திருமணம் செய்து மணைவி, குழந்தைகள், பெற்றோர் என்று சிறப்பாக வாழ சொன்ன திருவள்ளுவர் சிறந்தவரா?

1400 ஆண்டுகளுக்கு முன்பு குர்ஆன் என்ற அரபிகளின் புத்தகத்தில் நான்கு மனைவிகள் மற்றும் கணக்கு இல்லாம செக்ஸ் அடிமைகளை வைத்துகொள்ள சொன்ன முகமது நபி சிறந்தவரா?

அதிகாரம்: அறத்துப்பால் மூன்றாம் பகுதி: இல்வாழ்க்கை குறள்: 41..

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

பொருள் : பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்துவிடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்...

இவ்வுலகிற்கு ஏசு வந்தது வரமா? அல்லது மனிதகுலத்திற்கு சாபமா?


யூதமதத்தின் விதை கிருஸ்துவ சமயத்தில் எப்படி? பல புதிய பரிமாணங்களை சேர்த்துக் கொண்டு, மேலும் ஆழ்த்தை நோக்கி, அதே சமயம் தன் பழைய முகசுருக்கங்களை நீக்கி, இளமையான தோற்றம் தரும் புதிய திடமான செயல்பாடுகளின் துனணயோடு ஒரு மனித முகத்தை தருகிறது கிருஸ்துவ மதம்.

புதிய ஏற்பாடு - கிருஸ்துவ விவிலியத்தின் இரண்டாம் பாகம். இந்தபுதிய ஏற்பாட்டில் காணப்படும் கிருஸ்துவின் போதனைகள் புதிய சுவிசேஷம் எனப்படும்.

முதல் சுவிசேஷத்தை எழுதிய திருத்தூதர் புனித மேத்யூ. மூன்றாம் சுவிசேஷத்தை எழுதிய சமயதிருப்பணியாளர் (?) புனித லூக். தாமஸ் சுவிசேஷம் ஏசுவின் ரகசிய கூற்றுக்கள் அடங்கியது. இது புனித தாமஸால் பதிவு செய்யப்பட்டது. (The myth of St. Thomas) இதன் மூல வடிவம் பண்டைய எகிப்திய மொழியாகிய காப்டிய மொழியில் உள்ளது. இது 1946-ல் தான் கண்டு பிடிக்கப்பட்டது. இதனால் கிருஸ்துவ விவிலியத் தொகுப்பில் இதை இணைக்க முடியாமல் போயிருக்கலாம்.

உலகளாவிய சகோதரத்துவம் பற்றி கிருஸ்துவர்கள் பேசுகிறார்கள் ஆனால் கிருஸ்துவன் அல்லாத ஒருவன் நரகத்திற்குத்தான் செல்ல வேண்டும். மிருகங்களை போல் அங்கு நிரந்தரமாக வருக்கப்படவேண்டும். இதுவே கிருஸ்துவர்களின் மனநிலை - சுவாமி விவேகானந்தர். தன்னோடு ஒத்துப்போகாதவர்களுக்கு மீளமுடியா நரகம் என்று ஒன்று உண்டு. அவர்கள் அங்கு தான் செல்ல வேண்டும் என வெறுக்கத்தக்க துவேசத்தை விதைத்த முதல் சமய போதகர் ஏசுதான். பரந்த சமய உலகிற்கு இவர் அளித்த முதல் கருத்தும், மூலக்கருத்தும் இதுவே. 2000 ஆண்டுகளில் இது பல்வேறு நாட்டு மக்களையும், அவர்களது கலாச்சாரங்களையும் முழுமையாக அழித்து விட்டது. (The myth of St.Thomas - Eswar Saran).

பூமியில் அமைதியை கொண்டு வந்தேன் என்று நினைக்கிறாயா? இல்லை என்று சொல்கிறேன். மனித இனத்திற்குள் பிரிவினையை ஏற்படுத்தவே வந்துள்ளேன். உலகில் சமாதானத்தை கொண்டு வர நான் வந்து இருப்பதாக நினைக்க வேண்டாம். நான் சமாதானத்தை கொண்டு வருவதற்காக அல்லாமல் போருக்கான வாளையே கொண்டு வந்தேன் என்கிறார் ஏசு. குடும்பங்களை பிரிக்க, தந்தையும் மகனும், தாயும் மகளும், மருமகளும் மாமியாரும் என ஒருவருக்கொருவரை எதிராளிகளாக்க, பெற்றோரும் பிள்ளைகளும், சகோதர சகோதரிகளும், ஒருவரை ஒருவர் வெறுக்குமாறு செய்யவே வந்துள்ளேன். குடும்பங்களை கந்தல்களாக கிழிக்க, அவற்றை துண்டு துண்டுகளாக பிரிக்க, குடும்பம் என்ற அமைப்பை எப்போதும் அழியச் செய்யவே நான் வந்துள்ளேன். ஓரு மனிதன் தன் வாழ்க்கையை வெறுக்குமாறு செய்ய விரும்புகிறேன். எங்கும் எதிலும் வெறுப்பு, வன்மம் தவிர வேறெதுவும் இருக்ககூடாது. இவை அனைத்தும் ஏசுபிரான் உதிர்த்த முத்துக்கள். இதை அவரது சீடர்களும் மூன்று சுவிசேஷங்களில் உறுதி செய்துள்ளனர்.

உண்மை இப்படி இருக்க ஏசுவின் உருவத்தை அன்பும் அமைதியும் தவழ்வது போல் ஏன் அவர்கள் விளம்பரப்படுத்துகிறார்கள்? இந்த அன்பு உருவத்தின் மூலம் சந்தையில் அவர்கள் கிருஸ்துவ மதம் எனும் பொருளை விற்கப்பார்க்கிறார்கள். அதற்கான வெளி வேஷமே இது. இந்த போலியான முகத்தை காட்டும் சில வாக்கியங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

விவிலியம் மாத்யூ 10:34- பூமியின் மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என எண்ணாதீர்கள். சமாதானத்தை அல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்.

விவிலியம்லூக் 12:51 - நான் பூமியில் சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என நினைக்கிறீர்களா? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்கு சொல்கிறேன்.

தாம்ஸ் சுவிசேஷம் 16 - ஏசு சொன்னார்: உலகில் சமாதானத்தை உண்டாக்க நான் வந்தேன் என்று அநேகமான மனிதர்கள் எண்ணுகிறார்கள். பூமியில் பிரிவினையை, தீயை, பட்டயத்தை, போரை உண்டாக்கவே நான் வந்ததை அவர்கள் அறியவில்லை. குடும்பத்தில் உள்ள ஐந்து பேரையும் ஒருவருக்கொருவர் எதிராளியாக மாற்றுவேன் அவர்கள் தனித்தனி ஆட்களாகி விடுவார்கள்.

விவிலியம் மாத்யூ 10:35,36 - எப்படி எனில் மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினை உண்டாக்கவே வந்தேன். ஒருமனிதனுக்கு எதிரிகள் அவன் வீட்டாரே. இதையே புனித லூக் விவிலியம் லூக் 12:52,53ல் உறுதி செய்கிறார்.

தாமஸ் சுவிசேஷம் 56 - ஏசு சொன்னார்: தன் தகப்பனையும், தாயையும் வெறுக்காதவன் என் சீடனாக இருக்க முடியாது. தன் சகோதரர்களையும், சகோதரிகளையும் வெறுக்காதவன், என்னைப்போல் தன் சிலுவையை சுமக்காதவன் எனக்கு உண்மையானவனாக இருக்க மாட்டான். இதையும் புனித லூக் விவிலியம் லூக் 14:26ல் உறுதி செய்கிறார்.

உண்மையாக இருக்க முடியுமா? இதில் ஏதேனும் திரித்து கூறப்பட்டிருக்குமா? என்று உங்களுக்கு சந்தேகம் வரலாம். பகுத்தறிவுள்ள சுயமாக சிந்திக்க்கூடிய ஒவ்வொரு மனிதனுக்கும் வர வேண்டிய சந்தேகம்தான் இது.

விவிலியத்தை ஒருமுறை முழுமையாக படித்துப் பார்த்தால் உங்களது சந்தேகம் நீங்கும். அப்போது என் கருத்தை நீங்கள் இன்னும் அழுத்தமாக உறுதி செய்வீர்கள்.

ஆனால் எத்தனை பேர் விவிலியத்தை படித்துள்ளனர் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும்.

மதம் மாறிய நமது சகோதரர்களிடம் இதனை கேட்டுப்பாருங்கள். செம்மறி ஆட்டு கூட்டங்களை போல் நல்ல மேய்ப்பர் என்று நம்பி ஒன்றன் பின் ஒன்றாகப்போய் சேர்ந்தவர்கள் அவர்கள். அவர்க்களுக்கு எதுவும் தெரியாது. இப்படி எல்லாம் இருக்குமா? என்று உங்களிடமே அப்பாவித்தனமாக கேட்பார்கள். விவிலியத்தை கையில் மட்டுமே வைக்க பழக்கப்பட்டவர்கள். அதன் உள்ளிருக்கும் விஷத்தை அறியாதவர்கள்.

பிற கிருஸ்துவர்களுக்கு பயிற்சி அளிப்போர் இந்த போதனைகளை கொண்டே வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? புனிதர்கள், போப், தலைமை ஆயர்கள், பேராயர்கள், ஆயர்கள் என்ற பதவிகளில் இருந்தவர்களும், இருப்பவர்களும் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்பதை அவர்களது உண்மையான வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரியும்.

ஏசு அன்பை போதிக்க வந்தாரா? வன்மத்தை பரப்ப வந்தாரா? என்பதை கிருஸ்துவ மதம் 2000 ஆண்டுகளில் கடந்து வந்த பாதையை ஒரு பார்வை பார்த்தாலே தெரியும். விவிலியத்தில் கூறப்பட்ட ஏசுவும், உண்மையான ஏசுவும் வேறுவேறானவர்கள் என புதுக்கதை பரப்பப்படுகிறது. உலகின் பார்வையில், அவர்கள் ஒருவரா அல்லது இருவரா என்பதைப்பற்றி கவலையில்லை. கிருஸ்துவ விவிலியத்தின் ஏசுவை உலகம் நம்புகிறது. இங்கு உலகம் நம்புவதுதான் முக்கியம். காரணம் நம்புகிற தன்மை ந்ம்புவோரின் நிஜவாழக்கையை வடிவமைக்கிறது. அவர்களின் செயல் பாடுகளை தீர்மானிக்கிறது.

கடந்த 2000 ஆண்டுகளில் மதத்தின் பெயரால் உலகில் சிந்திய ரத்தம் அதிகம். அது உண்மையாகவே மதத்திற்காகவா என்றால் இல்லை. மதத்தின் பெயரால் தன் சொந்த நலத்திற்காக, உலக இன்பங்களை அனுபவிப்பதற்காகத்தான். எல்லாம் தனக்கே கிடைக்க வேண்டும் என்ற வெறி பிடித்த பேராசைக்காரர்களால்தான் இந்த உலகம் கடந்த 2000 ஆண்டுகளாக ரத்தத்தில் மிதக்கிறது.

சில காலங்களில் கிருஸ்துவர்கள், சில காலங்களில் யூதர்கள், சில காலங்களில் முஸ்லீம்கள் என போட்டி போட்டுக்கொண்டு இந்த உலகை ரத்தக்காடாக மாற்றிக் காட்டியவர்கள் இவர்கள்.

சிலுவைப்போர்கள், ஜிகாத்துக்கள், புனிதப்போர்கள் என இவர்கள் தொடர்பான ரத்தம் தோய்ந்த வரலாற்றை புரட்டிப்பாருங்கள். ரத்தத்தை உறைய வைக்கும் உண்மை சம்பவங்களை அதில் காண்பீர்கள். பல ஆண்டுகளாக பெய்ரூட்டில் நடந்தது என்ன? பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையே நடப்பது என்ன? ஏசுவின் கனவு நனவாயிற்று.

உண்மையில் இன்று எங்கும் ச்ண்டை சச்சரவுகளை காண்கிறோம். எங்கும் சிதறிவிட்ட குடும்பங்களை காண்கிறோம் இந்த பூமிக்கு ஏசு வந்ததிலிருந்து 2000 வருடங்களில் உலகிற்கு நேர்ந்தது என்ன? விளம்பரப்படுத்துவது போல் ஏசு வந்தது வரமா? அல்லது மனிதகுலத்திற்கு சாபமா?

விடையை தேட வேண்டியது நீங்கள் தான். நான் ஒரு வழிகாட்டி மட்டுமே....