11/01/2019

தமிழகத்தை ஆள தமிழனுக்கு அருகதை இல்லையா.?


இந்தியாவை இந்தியர்களே ஆள வேண்டும் என்பதற்காகத்தான் இந்திய சுதந்திர போர்..

அப்படியானால் தமிழகத்தை தமிழன் தானே ஆளவேண்டும்.

ஏன் இன்றுவரை தமிழகத்தை ஆள்பவர்கள், ஆண்டவர்கள் பெரும்பாலோனோர் பிற மொழியை தாய் மொழியாக கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.?

தமிழகத்தை ஆள தமிழனுக்கு அருகதை இல்லையா.?  தமிழர்களே நீங்கள் தான் சிந்திக்க வேண்டும்...

விஸ்வாசம் பட டிக்கெட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து படம் பார்த்த அஜித் ரசிகர்கள்...


மூக்குத்தி அணிவது ஏன்?


மூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை, காற்றை வெளியேற்றுவதற்கு.

கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்.

ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்யும் போது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள்.

இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும்.

வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள்.

வலது பக்கமாக சுவாசம் செல்லும் போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்ற வேண்டும்.

அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி. நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதலாமஸ் என்ற பகுதி இருக்கிறது.

நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது.

இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும் போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல் சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுக்கே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது.

பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டது தான் இந்த மூக்கு குத்துவது.

மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.

இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம் தான் பெண்கள் மூக்குத்தி அணிய வேண்டும்.

இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.

ஒற்றைத்தலைவலி, நரம்பு சம்பந்தமான நோய்கள், மனத்தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க முக்குத்தி உதவுகிறது என்று ஞானிகளும் ரிஷிகளும் கூறியிருக்கின்றனர்.

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது.

தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டு போகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும்.

தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்...

பாஜக - அதிமுக - ஊடகத்தின் சதிகள்...


₹1000 வழங்க மட்டுமே தடை; அரிசி, கரும்பு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பு வழங்கத் தடையில்லை...


முன்னுரிமைபெறாத (NPHH), சர்க்கரை மட்டுமே பெறும் (NPHHS) ரேஷன் கார்டுகளுக்கு ரூ.1,000 இல்லை - உயர்நீதிமன்றம்...

திராவிடர் கள் யார்.?


ஆதரவற்றோருக்கு உறவாகும் காவலர்...


காஞ்சிபுரத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஸ்ரீனிவாசன் ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதி காரியங்கள் செய்து வருகிறார்.

இவரது அம்மா உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த போது, இறுதிச் சடங்குகள் செய்ய பணம் இல்லாமல் ஸ்ரீனிவாசன் அலைந்துள்ளார். அருகில் இருந்த கடைகளுக்கு எல்லாம் சென்று கடை உரிமையாளர்களிடம் பணம் வசூலித்து இறுதிச் சடங்குகளை செய்துள்ளார். இதனை மனதில் வைத்திருந்த அவர், தற்போது அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதி காரியங்கள் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், ஆதரவற்றோருக்கு உணவுகளையும் வழங்கி வருகிறார்.

 ஸ்ரீனிவாசன் ஆண்டுதோறும் கயாவுக்குச் சென்று இறந்த ஆத்மாக்களுக்கு திதி கொடுத்து பிண்டம் வைத்து பூஜை செய்து ஆற்றில் கரைத்து வருகிறார். இதனால் அவர்களது பாவங்கள் தொலைந்து ஆத்மா சாந்தி அடையும் என்கிறார் ஸ்ரீனிவாசன்...

இது என்னடா பாஜக விற்கு வந்த புதிய சோதனை...


தண்ணீர்...


ஜீரண சக்திக்கு, உடல் சூட்டை ஒரே சீராக வைக்க, ஹார்மோன் மாற்றத்திற்கு, சருமப் பொலிவுக்கு என உடலுக்கு தண்ணீர் அவசியம். சராசரியாக ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால், ஒன்றரை லிட்டர் தண்ணீர் வெளியில் போகும். இந்த நீர்ச் சத்து உடலுக்குத் தண்ணீர் மூலம் நேரடியாகவும், சாம்பார், ரசம், ஜூஸ், காய்கறிகள், பழங்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற உணவின் மூலமாகவும் உடலில் சேர்ந்துவிடும்.

1. சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 1,500 மில்லி அதாவது ஒன்றரை லிட்டர் தண்ணீர் அவசியம். ஏழு முதல் எட்டு தம்ளர் வரை அவசியம் தேவை.

2. கோடைக் காலத்தில் சருமத்தின் மூலமாக வியர்வை வெளியேறுவதால், வறட்சி, போன்ற காரணங்களால் தண்ணீரின் தேவை இன்னும் கூடுதலாக மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தேவைப்படும்.

3. விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சியாளர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள் தண்ணீர் அதிகமாக குடிப்பது நல்லது. வெறும் வயிற்றில் இரண்டு தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

4. சாப்பிட்டவுடன், தொடர்ந்து மருந்து சாப்பிடுபவராக இருந்தால், அரை தம்ளர் முதல் ஒரு தம்ளர் வரை குடிக்கலாம்.

5. காலையில் டிபன் சாப்பிட்டதும், இரண்டு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

6. சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பும், சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின்பும் என தண்ணீரை குடிப்பது நல்லது.

7. உணவு உண்ணத் தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்கச் செய்வதற்கான திரவம் சுரக்கத் தொடங்கும். வாயில் உள்ள உமிழ்நீரே உணவை உள்ளே தள்ளப் போதுமானது. கூடுதலாகத் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தும்போது, தண்ணீர் ஜீரணத் திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் ஜீரணப் பணியை மந்தமாக்கும். சாப்பிடும்போது நடுநடுவே தண்ணீர் அருந்தக் கூடாது.

8. அதிக உப்பு, காரம் சேர்த்து சாப்பிடும்போது, தாகத்தைத் தூண்டி அதிக தண்ணீரை கேட்கும். தவிர்ப்பது நல்லது.

9. உணவை வேகமாக சாப்பிடும்போதும் தண்ணீரின் தேவை அதிகரிக்கும். நிதானமாக சாப்பிடப் பழகுங்கள்.

10. நமது உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்திப் பெற்றுக்கொள்ளும்.

ஒவ்வொருவரின் உடல்வாகு, வசிப்பிடம், மற்றும் வெப்பநிலை நிலை பொறுத்து, தண்ணீரின் தேவை அளவு மாறும்...

மகாகவி பாரதியாரின் ஒரிஜினல் குடும்ப புகைப்படம்...


தமிழ் போற்றும் தேசமும், தமிழ் மறந்த தேசமும்...


உலகில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் தம் மொழி, தம் வரலாறு மீது எப்போதுமே ஓர் அக்கறை உண்டு.

நமக்கும் நம் வரலாறு மொழி மீது ஓர் உயர்ந்த பற்று இருந்தது அது எதுவரை என்றால் நமக்கென்று ஓர் தேசம், நமக்கென்று ஓர் ராணுவம் என அனைத்தும் இருந்த காலத்தில்.

இப்போது நாம் அனைத்தையும் தொலைத்துவிட்டு, சிறுக சிறுக கட்டி எழுப்பியதையும் இந்திய துரோகிகளால் இழந்துவிட்டு தவிக்கிறோம்...

ஆமாம் சோழர்கள், பாண்டியர், சேரர்  முதல் தமிழ் ஈழ விடுதலைப்  புலிகள் வரைதான்.

அன்று நமக்கென்று ஓர் தேசம், நமக்கென்று நாணயம் உலகின் வலிமையான ராணுவம் என அனைத்தும் நம்மிடம் இருந்த காலத்தில் எவனும் நம்மை கனவிலும் சீண்ட நினைத்ததில்லை, அப்படியே அவர்கள் சீன்டினாலும் அவர்களை நாம் சும்மா விட்டதில்லை.

நம்முடன் அனைத்தும் இருந்தபோது நாம் சுதந்திரமாக உலாவினோம், இந்தியப் பெருங்கடல், சேது சமுத்திரம், வங்கக் கடல் என அனைத்தும் நாம் தான் ராஜா, நம்மை ஏன் என்று கேட்க எவனும் இல்லை. அப்படியே கேட்டாலும் அவன் உயிர் அவனுக்கில்லை. அப்படி இருந்த நம் தமிழ் இனம் இன்று எப்படி எல்லாமோ ஆகி விட்டது.

நம் வரலாற்றில் நிறைய உதாரணங்களை நாம் கூறலாம், தமிழ் வணிகர்களுக்கு இடையூறு ஏற்ப்படுத்தியதற்க்கு தென் கிழக்கு ஆசியாவையே அதிர வைத்தான் நம் ராஜ ராஜன், தமிழைப் பழிப்பின் தாய் தடுப்பினும் மிதிப்பேன் என்று வட இந்தியாவையும் வெற்றி கொண்டான் அந்த தமிழ்ப்புலி.

பருவ  மழை பொய்த்த சமயத்தில் ஒரு முறை கர்நாடக மன்னன் காவிரியைத் தடுத்து விட்டான், தமிழக வயல்கள் காயும் நிலைமை சோழன் எப்படியோ கேட்டுப் பார்த்தான், பேசிப் பார்த்தான் அவன் மசியவில்லை. உடனே இவன் படையை கிளப்பிக் கொண்டு காவிரி மேல் இருந்த அணையை உடைத்துவிட்டு, அவன் தேசத்தையே நிர்மூலமாக்கிவிட்டு வந்தான் ராஜ ராஜனின் பேரன்.

தமிழிற்கும், தமிழனுக்கும்  மதிப்பளிக்க வில்லை என்று இமயம் வரை சென்று வெற்றிக் கோடி நாட்டினான் தமிழ் ஆண்ட சேர மன்னன.

இவர்கள் உடலில் ஓடியதும் தமிழ் இரத்தம் தான், நம் உடலில் ஓடுவதும் அதே இரத்தம் தான். என்ன கொஞ்சம் சூடு, சொரணை எல்லாம் காலப்போக்கில் கரைத்து விட்டோம்.

தண்ணீர், உணவு, உரிமை என அனைத்திற்கும் நாம் மற்றவனையே எதிர்பார்க்கும் நிலை ஆகிவிட்டது.

நாம் வந்தவர்களுக்கு அடைக்கலம் அளித்த காலம் போய், நாம் இன்று பலரிடம் தஞ்சம் புகும் காலமாகி விட்டது. வருத்தம் தான்.

தற்ச்செயலாக மொரிசியஸ் நாட்டு நாணயங்களை பார்க்க நேரிட்டது, அதில் உள்ள அனைத்தும் தமிழ். தமிழிற்கு அவ்வளவு முக்கியத்துவம், எண்களும் தமிழ். எழுத்தும் தமிழ்.

எனக்கு ஒரு சந்தேகம் நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் எங்களைத் தெரியும்.

௦,௧,௨,௩,௪,௫,௬,௭,௮,௯ நம்மில் பலர் இதனை காலம் கடந்தே அறிந்துள்ளோம். இப்படி தமிழ் எழுத்தில் என்னுருக்கள் உண்டா என்று கேட்போம்.

காலத்தின் கொடுமை...

மொரிசியசின் எந்த நோட்டுகளை எடுத்தாலும் அதில் தமிழ் இன்றி இருக்காது.

அங்கு தமிழிற்கு அவ்வளவு மதிப்பு. நாம் இங்கு ஒவ்வொன்றிக்கும் ஹிந்திக்காரனிடம் கை எந்துகிறோம், புலம் பெயர் தமிழ் உறவுகளோ நம் தமிழிற்கு மிகச் சிறந்த அருமையான அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாராட்டத் தக்கது.

பிறந்த ஆறு மாத குழந்தைக்கு A,B,C,D கற்றுக் கொடுக்கும் தேசமாகிவிட்டது நம் தமிழ் என்பது தான் பெரும் வருத்தமாக உள்ளது...

சளியைத் தூரத்தும் வெற்றிலை...


யார் தமிழன்? என்று எவனெல்லாம் கேட்கிறானோ அவனெல்லாம் வந்தேறி...


நீ மட்டும் தான் தமிழனா? என்று கேட்பவன் வந்தேறிமகன்...

எந்த தமிழனுக்கும் தான் ஒரு தமிழனா? என்ற ஐயம் வருவதில்லை..

95% தமிழர்கள் இன அடையாளத்தோடு இருக்கிறார்கள்..

மீதி 5% தமிழர்களை 95% தமிழருடன் குழப்பும் செயலுக்குப் பெயர்தான் வந்தேறித்தனம்..

தமிழ் அடையாளத்தை கேள்விக்குறி ஆக்குவது ஒவ்வொரு தமிழனின் தாயினுடைய கற்பை கேலி செய்வது போல் ஆகும்.

பிறப்புவழித் தமிழனே தமிழன்.

உயிர் நண்பனே ஆனாலும் அப்பன் சொத்தில் பங்கு கிடையாது.பிறகு பிழைக்க வந்த அகதிக்கு எதற்கு பங்கு?

தமிழ் மண்ணைத் தமிழன் தான் ஆளவேண்டும்.

பிழைக்க வந்தவன் பிழைத்துக்கொள். பிறகு உன் நாட்டிற்கு திரும்பி விட வேண்டும்.

இங்கே குடித்தனம் குடியுரிமை எதுவும் கிடையாது.

உண்மையான தமிழ்ப் பெற்றோர்களுக்குப் பிறந்த தமிழன் வந்தேறித்தனம் செய்யும் அகதிகளை சும்மா விடக்கூடாது...

விடுதலைப் புலிகள் - அண்ணன் பிரிகேடியர் பால்ராஜ்...


தற்போது எல்லாம் தமிழகத்தில் வாழும் தெலுங்கு கூட்டங்களின் அலறல் சத்தத்தை அதிகமாக கேட்க முடிகிறது...


ஏனெனில் தமிழர்களை இனி ஏமாற்றி பிழைப்பு நடத்த முடியாது... அவர்கள் இனம் ரீதியாக சிந்தித்து செயல்பட தொடங்கி விட்டனர் என்ற அலறல் சத்தம் மிக அதிகமாக கேட்க முடிகிறது...

ஆந்திராவில் உள்ள தமிழர்களுக்கு எந்த உரிமையும் தெலுங்கர்கள் தர மாட்டார்களாம்... ஆனால் தமிழன் மட்டும் இங்கு அனைத்து உரிமையை கொடுக்கனுமாம்...

கேட்டால் இங்கயே பிறந்து வளர்ந்தார்களாம்...

இதையே தானே அங்கு பிறந்து வளர்ந்த தமிழர்கள் கேட்கிறார்கள்...

திராவிடம்.. இந்தியம்.. கம்யூனிசம்.. தலித்தியம்.. மதம்.. போன்ற ஏமாற்று அரசியல் ரீதிரியாக இனி தமிழனை ஏமாற்றி பிழைப்பு நடத்த முடியாது...

எப்படி பக்கத்து வீட்டில் பல காலமாக வாழுவதால்.. அந்த வீட்டின் உரிமையாளனை உங்க தந்தையாக மாற்றிக் கொண்டு வீட்டின் உரிமையை கேட்பது போல் உள்ளது...

இது எப்படிப்பட்ட கேவலம்.. சிந்தியுங்கள்...

தை மாதமே வருடத்தின் முதல் மாதம் - பழங்காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு...


தமிழ் புத்தாண்டை வரவேற்போம்...

தஞ்சை பெரியகோயில் ஓவியத்தில் காணப்படும் அழிந்துபோன தமிழரின் அலங்கு நாய்...


தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள சோழர் கால ஓவியங்களில் இடம்பெற்றுள்ள அலங்கு நாய்.

தமிழர்களுக்கு என இருந்த அடையாளங்களில் ஒன்றான அலங்கு இன நாய்கள்..

சோழர்களின் படைகளில் இவைகள் காவல், மற்றும் வேட்டைக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது….

தற்ப்பொழுது இந்த இன நாய்கள் அழிந்துவிட்டது…

நமக்கென இருக்கும் இதுபோன்ற அடையாளங்கள் காக்கப்பட வேண்டும்…

தற்ப்பொழுது உள்ள கோம்பை, சிப்பிப்பாறை போன்ற நாய்களை தமிழ்த்தேசிய மக்கள் வளர்க்க வேண்டும்…

நாம் தான் அவற்றை அழிவில் இருந்து காக்க வேண்டும்.

தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் கண்ணைக் கவரும் சோழர் கால ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த ஓவியங்களில் காணப்படும் கம்பீரமான நாயின் உருவம், தஞ்சை மற்றும் திருச்சிப் பகுதியில் ஒரு காலத்தில் காணப்பட்ட அலங்கு நாய் இனம் எனத் தெரியவருகிறது.

உலகப் புகழ்பெற்ற விலங்கியலாளரான டெசுமாண்ட் மோரிசு எழுதிய குறிப்புகளை இப்படத்தோடு ஒப்பிட்டு நோக்கும்போது, இப்படம் அலங்கு நாய்தான் என்பது உறுதியாகிறது.

கோயிலின் உட்பிரகாரத்தில் வரையப்படும் அளவுக்கு அந்த நாய் தகுதி பெற்றிருந்தது அதன் முக்கியத்துவத்தையே நமக்கு உணர்த்துகிறது.

தமிழ்நாட்டு நாய் இனங்களில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது அலங்கு..

வேட்டைக்கும் பாதுகாவலுக்கும் அலங்கை மிஞ்சிய நாய் இனம் இல்லை என்று நாய்கள் குறித்து தான் தொகுத்த அகராதியில் (Dogs-The Ultimate Dictionary of Over 1000 Dog Breeds) டெசுமாண்ட் மோரிசு எழுதியுள்ளார். தி நேக்கட் ஏப் (The Naked Ape: A Zoologist’s Study of the Human Animal) என்ற பிரபலமான புத்தகத்தை எழுதியவரும் டெசுமாண்ட் மோரிசுதான்.

இன்று பேருக்குக் கூட ஒரு அலங்கு கிடையாது. வெளிநாட்டு நாய்களின் மோகத்தில், தமிழர்களின் நாய் இனங்களை உதாசீனம் செய்ததால் நம் நாட்டைச் சேர்ந்த நாய் இனங்களே மெதுவாக அழிந்து போயின. அவற்றில் முக்கியமானது அலங்கு. அந்த இனத்தைப் பார்த்த வெகுசிலரே உள்ளனர்.

ஏற்கெனவே வரையப்பட்டிருந்த சோழர் கால ஓவியங்களின் மேல் வடுக வந்தேறிகளான நாயக்கர் காலத்தில் வேறு ஓவியங்களைத் தீட்டிவிட்டார்கள்.

தமிழரின் வரலாறு திட்டமிட்டு தமிழனிடமிருந்து மறைக்கப்பட்டு தமிழர்களை அழித்தனர்.

இந்த வகை நாயின் உடலமைப்பு குறித்து விளக்கும் டெசுமாண்ட் மோரிசு, இது 27 அங்குலம் உயரம் கொண்டது என்றும் நல்ல கட்டுமசுதான, சதைப்பிடிப்பு கொண்ட கால்களை உடையது மற்றும் இதன் காதுகள் எப்போதுமே நிமிர்ந்து நிற்கும் தன்மையைக் கொண்டவை என்றும் குறிப்பிடுகிறார்.

இந்த ஓவியத்தில் காணப்படும் அலங்கு நாயின் காதுகள் நன்றாக நிமிர்ந்து நிற்கின்றன. கூடவே அது தனது நெஞ்சை நிமிர்த்தியபடியும் நிற்கிறது.

அலங்கு வகை நாயின் முதுகு நீண்டும், வால் நன்றாக வளைந்தும் காணப்படும். நடக்கும்போது நீட்டித் தனது எட்டுகளை எடுத்துவைத்து நடக்கும்.

இதன் உடல் செவலை, கருப்பு மற்றும் நன்றாக வெளிறிய மஞ்சள் நிறங்களில் காணப்படும். சில நாய்களின் மார்புப் பகுதியில் வெள்ளை நிறப் புள்ளிகள் கூட இருக்கும். பெரும்பாலான நாய்களின் முகம் கருப்பாக இருக்கும். எந்த நிறமாக இருந்தாலும் முடியே இல்லாதது போல் உடல் பளபளவென்று இருக்கும் என்று இந்த நாயை நேரில் பார்த்திருக்கும் சிலர் கூறுகின்றனர்.

தமிழகத்துக்கே உரித்தான இன்னொரு வகை நாய் கோம்பை. ராசபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை ஆகிய மூன்று நாய் இனங்களும் அழிவில் இருந்து தப்பிப் பிழைத்தாலும், அலங்கு வகை நாயினம் முற்றிலும் அழிந்தே போனது. அதே போல் செங்கோட்டை நாய் என்ற இனம் குறித்தும் டெசுமாண்ட் மோரிசு எழுதியுள்ளார்.

இரண்டு செங்கோட்டை நாய்கள் சேர்ந்து ஒரு புலியை வேட்டையாட வல்லவை. இப்படி வேட்டையாடும் போது, அவை தங்கள் உயிரை இழப்பதும் உண்டு. செங்கோட்டை நாய்களின் தூரத்து உறவினராகக் கோம்பை நாய் இனத்தைக் குறிப்பிடலாம் என்கிறார் டெசுமாண்ட் மோரிசு...

.அதிமுக வின் பொங்கல் பரிசும்... டாஸ்மார்க் வசூலும்...


மனதுக்கு ஏது மருந்து ?


ஒரு துயரத்தை தாங்க முடியாமல் சமாளிக்க தவித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு துயரம் இடி போல் விழும்போது என்ன செய்ய முடியும்...

மனப்பாரத்தை துலாபாரத்தில் நிறுத்தி  இரண்டையும் எடை போடுவோம் பாருங்கள்...

அப்போது தெரியும் நம் இதயத்தின் பலம் என்ன என்று...

ஒரு துயரத்தில் இருக்கும் போது துடிக்கும் நாம்... இரு துயரத்தை  கையாளும் போது நீதிபதி ஆகிறோம்....

அப்போது ஒரு உண்மை... புத்தனாக ஞானம் பிறக்கும்.

இதுவும் கடந்து போகும்....

உயிரும் ஒரு நாள் உடலை கடந்து போகும் என்ற உண்மை உணர்வோம்...

பிரச்சினைகளை உருவாக்குவதும் நாமே....

பிரச்சினைகளை களை  எடுப்பதும் நாமே....

ஆகவே தேவையற்றதை நீக்குவோம்.

கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து பார்த்தால் ,
எல்லாமே தேவையற்றது என்ற உண்மை புரியும்.

நாம் யோசிக்க மறுப்பதால்தான், எல்லாமே தேவையானதாகிறது...

மாற்றங்களை நோக்கிய நமது பயணம், தோல் சுருங்கும் வரை தொடர்கிறது....

இதயம் சுருங்கி விரியும் வரை நிகழ்கிறது....

இடையே வரும் இடியும் ,மின்னலும் நமது வாழ்வில் தவிர்க்க முடியாதது...

எதையும் தாங்கும் இதயம் நம்முடன் இருப்பதை உணர்வோம்...

எல்லா மனிதனுள்ளும் ஒரு மிருகம் உறங்கி கொண்டு இருப்பதாக எல்லாரும் சொல்கிறார்கள்...


நான் கூறுகிறேன் எல்லா மனிதனுள்ளும் ஒரு  கடவுள் உறங்கி கொண்டு இருக்கிறார்..

மனிதன் வெளிப்புறத்தில் மிருகம்
மனிதன் உட்புறத்தில் கடவுள்

ஆனால் அந்த கடவுளை மனிதர்கள் சந்திப்பது கிடையாது..

வெளிபுறத்தில் தேடி கொண்டே இருக்கிறார்கள்..

பாவம்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


நீங்கள் உலகில் எத்தனை பிரமிடுகள் இருக்கிறது என்ற தேடலில் இறங்கினீர்கள் என்றால். குறைந்தபட்சம் சரியான எண்ணை கூட உங்களால் கணிக்க கண்டுபிடிக்க முடியாது. இந்த பிரமிடுகளில் ஆர்வம் கொண்டீர்களென்றால், நீங்கள் உங்கள் சிந்தனைகளில் இழக்கப்படுவீர்கள். நீங்கள் இந்த கேள்விக்கான ஒரு பதிலையும் காணவில்லை என்பது, உங்களுக்கே தெரியாது.

இந்த கம்பீரமான பூர்வ நினைவுச்சின்னங்கள் உலகின் எல்லா மூலையிலும் காணப்படுகின்றன, உலகெங்கிலும் உள்ள அனைத்து பழங்கால கலாச்சாரங்கள், நம்பமுடியாத பிரமிடுகளை உருவாக்கியுள்ளன, அவை நமது நவீனத்திற்க்கும் சவால் விடுகிறது.

சரி, பிரமீடுகளால் இந்த பண்டைய நாகரிகங்கள் ஒரு வழியில் அல்லது வேறு ஒன்றில் ஒன்றிணைக்கப்படவில்லை என்றால் ... அவர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கட்டிடக்கலை முறைகளை ஏன் பின்பற்றினார்கள்? அவர்களுக்கு ஒரே பயிற்றுவிப்பாளர் இருந்தார்களா?

பழங்கால எகிப்தியர்கள், பண்டைய சீனர்கள், முன்-இன்கா, இன்கா, அஸ்டெக்குகள், மாயா மற்றும் கணக்கிலடங்கா பிற பழங்கால கலாச்சாரங்கள் தங்களை இன்றும் பறைசாற்றும் பிரமிடுகளை அமைத்துள்ளனர்.

பிரமிடுகளின் உண்மையான நோக்கம் என்னவென்பதை யாரும் புரிந்து கொள்ள முடியவில்லை முயற்ச்சிக்கவில்லை ...
அவைகள் கல்லறைகளா? சேமிப்பு அறைகளா? கடவுள்களை மதிப்பதற்கா? அல்லது பிரபஞ்ச ஆற்றலை பூமிக்கு கடத்துவதற்க்காக உருவாக்கப்பட்டுள்ளனவா?

உண்மை என்னவென்றால், பழங்கால கலாச்சாரங்கள் உருவாக்கிய பிரமிடுகளின் அடிப்படைக் கோட்பாடுகளை புரிந்துகொள்வதில் மிகவும் கடினமாக முயன்றிருந்தாலும், இந்த கம்பீரமான கட்டிடங்களை எப்படி அமைக்க முடியும் என்பதையும், அவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்பதையும் இன்றும் நம்மால் அறிய முடியவில்லை என்பதே உண்மை.

ஆனால் ஒரு விளக்கம் மட்டுமே நம்மிடம் இப்போது உள்ளது. அது பிரமிடுகள் மற்றும் அவற்றின் விண்ணுலக இணைப்பு மட்டுமே.
உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்கள் மற்றும் பழங்கால நாகரிகங்கள் நம்பமுடியாத நினைவுச்சின்னங்களைக் கட்டியுள்ளன என்பதில் வியப்பேதுமில்லை.

கிசா உள்ள பிரமிடுகளில், தியோடிஹுவானின் பிரமிடுகளிலும், சீன பிரமிடுகளிலும் கூட நாம் பார்த்தால், அவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட விண்மீன் தொகுதிகளுடன் ஒத்திருப்பதை பார்க்கலாம். அது
உலகெங்கிலும் உள்ள பிற பண்டைய நாகரிகங்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த ஓரியனின் மண்டலத்தை பற்றி தான் பேசுகிறோம். இதை பற்றி தெரியாதவர்களே இருக்கமுடியாது.

ஒன்றை மட்டுமே இப்போது என்னால் கூறமுடியும். பிரபஞ்சத்தை பிரதிபலிக்கும் பொருட்டு, இது போன்ற துல்லியமான மனிதர்களை எப்படிப் பூரணமான மனிதர்கள் புரிந்து கொள்ள முடிந்தது என்பது யாருக்கும் தெரியாது...

பாமக நிறுவனர் இராமதாஸ் ஐயா டிவிட்...


மாணவர்கள் சென்று வர கார் வாங்கி கொடுத்த ஆசிரியர்.. ஆச்சரியப்பட வைத்த பரிசு...


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பள்ளிக்குளத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மேல் கூத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.

இந்த கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பள்ளி சென்றுவர பேருந்து வசதி இல்லை. பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.  ஆகையால் மாணவர்கள் தினமும் பள்ளிக்கு நடந்தே சென்று வருகின்றனர்.

இந்நிலையில் அந்தப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வரும் ஆசிரியர் பன்னீர், மாணவர்கள் பேருந்து வசதியில்லாமல் நடந்தே சென்று வருதை அறிந்து வேதனை அடைந்தார்.

இதனால் மாணவர்களுக்கு தன்னால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என்று கருதிய அவர்,  மாணவர்கள் பள்ளிக்கு சென்று வர உதவியாக தனது சொந்த செலவில் ஒரு ஆம்னி காரை வாங்கிக் கொடுத்துள்ளார்.

அத்தோடு,  அந்தப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் ஒருவர் ஆம்னி காருக்கு ஓராண்டுக்கு தேவைப்படும் பெட்ரோல் மற்றும் ஓட்டுநருக்கான ஊதியத்தை வழங்க முன் வந்துள்ளார்...

ஸ்டெர்லைட் கைகூலி அதிமுக அரசு...


பாஜக - அதிமுக - ஸ்டெர்லைட்டின் கூட்டு சதி...


கார்ப்பரேட் கிருமினல்கள் என்றும் மக்களை கொல்லும் கிருமிகளே...

கூட்டு நாடகம் இன்னும் எத்தனை நாட்கள் என்பதை மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள்...

தமிழர்களும்... பருவக் காற்றும்..


தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்தவர்கள். இதற்கான சான்றுகள் உலகெங்கிலும் கிடைக்கின்றன. மலேசியாவில் தமிழ்க் கல்வெட்டு, தாய்லாந்தில் சங்க கால நாணயங்கள், கம்போடியக் கல்வெட்டில் தமிழ் மன்னனின் பெயர், சாதவாகன மன்னர் நாணயத்தில் கப்பல்படம், ஜாவாவில் கப்பல்சிற்பம், சங்க இலக்கியத் தில் யவனர் பற்றிய குறிப்புகள், ரோமானிய மன்னர் அகஸ்டஸ் அவையில் பாண்டிய மன்னனின் தூதன், தமிழ்நாட்டில் கிடைக்கும் ஆயிரக் கணக்கான ரோமானிய நாணயங்கள், டாலமி, பிளினி போன்ற வெளி நாட்டு யாத்திரீகர்களின் பயணக் குறிப்புகள், யுவான் சுவாங் பாஹ’யான் முதலிய சீன யாத்திரிகர் குறிப்புகள் - இப்படிச் சான்றுகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

தமிழர்களின் கடல் வாணிகத்திற்குப் பெரும் உறுதுணையாக அமைந்தது பருவக் காற்றாகும். ஒரு குறிப்பிட்ட பருவத்தில், ஒரு குறிப்பிட்ட திசையில் வீசும் கடற் காற்றுக்குப் பருவக் காற்று என்று பெயர். டீசலினால் இயங்கும் ராட்சதக் கப்பல்களும், நீராவியால் ஓடும் பெரிய கப்பல்களும் கண்டு பிடிப்பதற்கு முன்னர் மனிதர்கள் கண்டு பிடித்த கப்பல் காற்றினாலேயே இயங்கின. காற்றின் இரகசி யத்தை அறிந்தவர்கள் குறிப்பிட்ட நாளில் புறப்பட்டு,குறிப்பிட்ட இடத்தை அடைவது எளிதாக இருந்தது. இதற்காக அவர்கள் பிர மாண்டமான பாய்மரக் கப்பல்களைக் கட்டினர்.

பருவக் காற்றின் இரகசியத்தை அறிந்து வைத்திருந்த யவனர்களும், அராபியர்களும் அதை வெளி நாட்டவர்களுக்குக் கற்றுத்தர வில்லை என்றும் தமிழர்கள் நடத்திய கப்பல் போக்குவரத்து கடற்கரையையொட்டி நடைபெற்ற கப்பல் போக்குவரத்துத் தான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

பருவக் காற்றின் சக்தியை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஹ’ப்பாலஸ் என்ற கிரேக்க நாட்டு அறிஞரென்றும், கிளாடியஸ் என்ற ரோமானிய மன்னன் காலத்தில் தான் பருவக் காற்றைப் பயன்படுத்திக் கப்பல் விடுவது அதிகரித்த தென்றும், மேலைநாட்டு அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர். ஆனால் புறநானூறு முதலிய சங்க கால நூல்களைப் படிப்போர்க்கு இந்தக் கூற்றில் பசையில்லை என்பதும், மேலை நாட்டாரின் வாதம் பொய் என்பதும், உள்ளங்கை நெல்லிக்கனியென விளங்கும்.

வெண்ணிக் குயத்தியார் என்ற பெண் புலவர் கரிகால் பெருவளத் தானைப் புகழ்ந்து பாடிய புறநானூற்றுப் பாடல் காற்றின் சக்தியால் தமிழர்கள் கலம் (கப்பல்) செலுத்தியதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்தப் பாடல் வரிகள் கரிகாலன் ஆண்ட காலத்தைப் பற்றிக் கூடப் பேசவில்லை. அவனுடைய முன்னோர் களின் காலத்தில் காற்றின் விசையால் கப்பல்கள் விடப்பட்டதைப் புகழ்ந்து பேசுகிறது. அந்த வரிகள்,

''நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
- (புறநானூறு - பாடல் 66)

வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்திக் கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மதயானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ! என்று உரையாசிரியர்கள் பொருள் எழுதி வைத்துள்ளனர் இப்பாடல் வரிகளுக்கு.

இப்பொழுது ஒரு கேள்வி எழும். கரிகால் வளவனின் காலம் என்ன? கிரேக்க அறிஞர் ஹ’ப்பாலஸ’ன் காலம் என்ன? யார் முதலில் வாழ்ந்தவர்?

கிரேக்க அறிஞர் ஹ’ப்பாலஸ் இன்றைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். ஆனால் கரிகால் சோழனோ அதற்கு முன்னர் குறைந்தது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அதாவது இன்றைக்கு இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் (கி.மு. 2ம் நூற்றாண்டு). மேலும் இப்பாடல் கரிகாலன் முன்னோர்களே காற்றின் விசையைப் பயன்படுத்திக் கப்பல் விட்டதாகக் கூறுகிறது. (முக்கியச் சொற்களின் பொருள்: - வளி - காற்று, முந்நீர் - கடல், நாவாய் - கப்பல்)

கிளாடியஸ் என்ற ரோமானிய மன்னர் காலத்தில் இந்த வழக்கம் பெரிதும் அதிகரித்த தென்று முன்னர் கண்டோம்.அவன் இயேசு கிறிஸ்துவுக்குச் சம காலத்தில் ஆட்சி புரிந்த மன்னன். ஆகவே கிரேக்கர்களுக்கு முன்னரே பருவக் காற்றைப் பயன் படுத்திக் கப்பல் விட்டது தமிழன் தான் என்று அடித்துக் கூறலாம்.

பழந்தமிழ் இலக்கியத்தில் மேலும் பல இடங்களில் இதே போன்ற குறிப்புகள் வருகின்றனயவனர்கள் பற்றிய பலகுறிப்புகளும் உள்ளன.

''கப்பல்'' என்ற தமிழ்ச் சொல் கூட உலகெங்கிலும் வெவ்வேறு வகையில உருமாறி வழங்குகிறது கப்பல் - skip - ship

ஜெர்மானிய மொழியில் ''ஸ்கிப்''என்றும் ஆங்கிலத்தில் ''ஷ’ப்'' என்றும் உருமாறி விட்டது தமிழ்ச் சொல் கப்பல்.

''கட்டமரான்'' (catamaran) என்ற சொல்லை மத்திய அமெரிக்க நாடான மெக்ஸ’கோவில் பயன்படுத்துகின்றனர். மெக்ஸ’கோவில் மாயா, இன்கா, அஸ்டெக் போன்ற பழம் பெரும் நாகரீகச் சின்னங்களை இன்றும் காணலாம்.

''நாவாய்'' (படகு, கப்பல்) என்ற சொல்லும் தமிழ் அல்லது வட மொழியில் இருந்து உலகம் முழுதும் சென்றது.

நாவாய் - NavY - Navy

இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம், ''எல்லாளன்'' என்ற சோழ மன்னனின் அறநெறி ஆட்சியைப் பெரிதும் புகழ்ந்து பேசுகிறது. இது ''ஏழாரன்'' (ஏழு மன்னர்களை வென்று ஏழு ஆரம் அல்லது ஏழு மணி முடிகளை அணிந்தவன்) என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். சிலர் இந்தச் சோழ மன்னனைக் கரிகாலனாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஏனெனில் இருவரின் காலமும் ஏறத்தாழ ஒன்று தான். எல்லாள மன்னனின் கதை மனுநீதிச் சோழன் கதை போலவே உள்ளது. ஒரு பசுவின் கன்றைக் கொன்ற தன் மகனையே தேரின் சக்கரத்தில் வைத்துக் கொன்றான் மனுநீதிச் சோழன் என்று சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம் ஆகியவை கூறுகின்றன. ஆனால் இருவரும் ஒருவரா என்று அறிய மேலும் ஆராய வேண்டும். சோழ மன்னர்கள் இலங்கை, மற்றும் ஜாவா, சுமத்ரா (தற்கால இந்தோனேஷ’யா) வரை கடலில் சென்று வென்றனர்.

கம்போடியா, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளில் 800க்கும் அதிகமான சமஸ்கிருதக் கல்வெட்டுகள் உள்ளன. இவைகளில் மிகவும் பழமையான இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ''ஸ்ரீமாறன்'' என்ற பெயரைக் குறிப்பிடுகிறது. இவன் அங்கு சென்ற பாண்டிய மன்னன் அல்லது தளபதியாக இருக்கலாம். புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் எழுதிய பாடல் ஒன்று உள்ளது. இவன் கடலில் செல்லும் போது உயிர் நீத்தவன் என்பதை அவனுடைய பெயரே கூறிவிடும்.

தமிழர்களின் கடலாட்சிக்கு ஏராளமான சான்றுகள் இருப்பினும் முதலில் பருவக் காற்றைக் கண்டு பிடித்து, பயன்படுத்தியது தமிழனே என்பதற்கு இந்தச் சான்றுகளே போதும் அல்லவா?