11/01/2019

ஆதரவற்றோருக்கு உறவாகும் காவலர்...


காஞ்சிபுரத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஸ்ரீனிவாசன் ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதி காரியங்கள் செய்து வருகிறார்.

இவரது அம்மா உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த போது, இறுதிச் சடங்குகள் செய்ய பணம் இல்லாமல் ஸ்ரீனிவாசன் அலைந்துள்ளார். அருகில் இருந்த கடைகளுக்கு எல்லாம் சென்று கடை உரிமையாளர்களிடம் பணம் வசூலித்து இறுதிச் சடங்குகளை செய்துள்ளார். இதனை மனதில் வைத்திருந்த அவர், தற்போது அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கும் ஆதரவற்ற சடலங்களுக்கு இறுதி காரியங்கள் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், ஆதரவற்றோருக்கு உணவுகளையும் வழங்கி வருகிறார்.

 ஸ்ரீனிவாசன் ஆண்டுதோறும் கயாவுக்குச் சென்று இறந்த ஆத்மாக்களுக்கு திதி கொடுத்து பிண்டம் வைத்து பூஜை செய்து ஆற்றில் கரைத்து வருகிறார். இதனால் அவர்களது பாவங்கள் தொலைந்து ஆத்மா சாந்தி அடையும் என்கிறார் ஸ்ரீனிவாசன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.