17/04/2019

வரலாறு என்பது வெற்றி பெற்றவர்கள் வரலாறாகத் தான் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது...


தமிழர்களுக்கு இப்போது நடந்த முள்ளிவாய்க்கால் மட்டுமே தெரியும்.

இதைப் போன்றே தமிழ்நாட்டில் தெலுங்கு நாயக்கர் மன்னர்களால் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் ஏராளம், ஏராளம்..

தமிழர்களை சூறையாடிய வரலாறு மறைக்கப்பட்டு வெற்றி பெற்ற தெலுங்கர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறாக சமீபகாலம் வரை புனையப்பட்டுள்ளது..

அதற்கு உதாரணம் காவல் கோட்டம் நாவல்..

இது தமிழர்களின் வரலாறு சொல்லும் நாவல் இல்லை. இது தெலுங்கர்களின் ஆக்கிரமிப்பையும் அதிகாரத்தயும் போற்றிப் புகழும் நாவல்.

எனவே வரலாறு என்பது எப்போதும் வெற்றி பெற்றவர்களின் வரலாறு என்பதை வெங்கடேசன் என்ற இந்த தெலுங்கு எழுத்தாளர் தனது காவல் கோட்டம் நாவலின் மூலம் நிரூபித்துள்ளார்.

இது முழுக்க முழுக்க தெலுங்கர்களின் ஆக்கிரமிப்பு வரலாறே..

இப்படித்தான் பல நூற்றாண்டுகளாக தமிழர்களை ஏமாற்றி வருகின்றனர்...

திமுக வால் தமிழகமே அழிய போகிறது.. மூடி மறைக்கப்படும் அநியாயம்... அடகு வைத்து அடிமையான ஸ்டாலின்...


https://youtu.be/HSpjDLr2K7A

Subscribe The Channel For More News...

பழக்கத்தின் வலிமை...


தனியாக வாழ்வது..
மிக மிக கடினம்.

அதுவும் இந்த உலகத்தோடு ஒட்டாமல் பழக வேண்டும்.

இது முதலில் சாத்திய மற்றதாகவே தோன்றும்.

ஆனால், யாருக்காவது சூழ்நிலையின் காரணமாக தனியாக இருக்க நேர்ந்தால்.
ஆரம்பித்தில் பல கஷ்டங்களை அனுபவித்திருப்பாா்,

பிறகு நாட்கள் ஆக, ஆக
அதுவே பழகி போயிருக்கும்.

நீங்கள் அவா்கிட்ட போய் கேட்டீங்க என்றால்.

என்ன செய்வது, இதுதான் எனக்கு அமைந்தது, இதுவே பழகி போச்சு.
என்று தானே சொல்வாா்.

இது தான் பழக்கத்தின் வலிமை.

முதலில் கட்டாயமாக்க வேண்டும்.
மனம் எதிா்க்கும்.
பிறகு நீங்கள் வேறு வழியில்லாமல் அதை பொறுத்து கொள்வீா்கள்.
கடைசியில், மனம் உங்கள் வழிக்கு வந்து விடும்.

இது தான் பழக்கத்தின் பயிற்சி.

எதை திரும்ப திரும்ப செய்கிறீா்களோ
அதுவாகவே நீங்கள் ஆகி விடுகிறீா்கள்...

அதிமுக கூட்டணிக்கு இறுதி நேரத்தில் கிடைத்த மாபெரும் ஆதரவு...


https://youtu.be/zxfJB890dvU

Subscribe The Channel For More News...

சென்னை விமான நிலையத்தில் பெண் ஊழியர் திடீர் சாவு உறவினர்கள் முற்றுகையால் பரபரப்பு...


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியை தனியார் நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் சார்பில், சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கும் பணியில் திரிசூலத்தை சேர்ந்த அருள் என்பவருடைய மனைவி கவுரி(வயது 40) ஈடுபட்டு வந்தார்.

நேற்று காலை வழக்கம்போல் பணியில் இருந்த கவுரி, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அங்கிருந்த மற்ற ஊழியர்கள் மீட்டு விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், கவுரி மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கவுரி இறந்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் 50-க்கும் மேற்பட்டோர் விமான நிலையத்தில் உள்ள அந்த தனியார் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாருடன், கவுரியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது போலீசாரிடம் கவுரியின் உறவினர்கள், “கடந்த 15 ஆண்டுகளாக கவுரி இந்த சுங்கச்சாவடியில் வேலை பார்த்து வந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளது” என்றனர்.

இது தொடர்பாக முறையாக புகார் தாருங்கள். அதன்மீது உரிய நடவடிக்கை எடுக் கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் முற்றுகையை கை விட்டு கலைந்து சென்றனர்.

இதுபற்றி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவுரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது சென்னையில் கடுமையான வெயில் கொளுத்துகிறது. இந்த வெயில் கொடுமையால் கவுரி இறந்தாரா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கவுரியின் சாவுக்கு உண்மையான காரணம் என்ன? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்...

தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ அறிவிப்பு.. வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து...


https://youtu.be/_nB5JKSsZWE

Subscribe The Channel For More News...

பொதுவான நோய் அறிகுறிகளும் மூலிகை மருத்துவமும்...


காய்ச்சல்...

காய்ச்சலில் பல வகைகள் உள்ளன. சாதாரண காய்ச்சல், தொடர்காய்ச்சல், விட்டுவிட்டு வரும் காய்ச்சல், காய்ச்சல் அதிகமாகி குறைதல் ஆகியவை காய்ச்சலின் வகைகளுள் சிலவாகும்.

காற்று மூலம் பரவக்கூடிய சாதாரண காய்ச்சலுக்கு இன்புளூயென்சா என்று பெயர். பாக்டீரியா தொற்றின் காரணமாக மார்பு சளி, உடலில் சீழுடன் கட்டி ஆகியவை காரணமாக தொடர் காய்ச்சல் ஏற்படலாம். கொசு காரணமாக மலேரியா, டெங்கு, மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோயின் அறிகுறியான கால்வீக்கத்துடன் கூடிய காய்ச்சல் ஆகியவை கொசுக்களில் பரவுகின்றன.

நோய்க்கிருமி உடலில் நுழைந்து பெருகி ரத்தத்தில் கலக்கும்போதுதான் வெளிப்பொருள் உடலில் இருப்பதற்கான அறிகுறியாக காய்ச்சல் ஏற்படுகிறது.

இன்புளூயன்சா...

இது சாதாரண காய்ச்சல், காய்ச்சல் உள்ள ஒருவர் தும்மும்போது அவருக்கு அருகில் ஆரோக்கியமாக உள்ளவருக்கு காற்றுமூலம் இக்காய்ச்சலுக்கான கிருமி உட்சென்று பரவுகிறது.

இக்காய்ச்சல் வரும்போது மூக்கிலும், கண்ணிலும் நீர் வடியும். உடல் வெப்பம் 104 டிகிரி வரை செல்லும். நோயாளியால் நோயின்போது இயல்பாக இருக்க முடியாது.

மலேரியா காய்ச்சல்...

சுத்தமற்ற தண்ணீரினால்தான் மலேரியாவைப் பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. கிராமப் புறங்களில் வயல் வெளிகளில் தேங்கும் தண்ணீரில் உற்பத்தியாகி மலேரியாவைப் பரப்புகின்றன. நகர்ப்புறங்களில் நீர்த்தொட்டிகளில் உள்ள தண்ணீரில் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி மலேரியாவைப் பரப்புகின்றன.

அறிகுறி...

மலேரியா காய்ச்சல் மூன்று கட்டங்களாகக் கடுமையாகும். சில மணிநேரம் இடைவெளிக்குள் இந்த மூன்று கட்டங்களும் உடலில் வெளிப்படும். முதல் கட்டத்தில் லேசான குளிர்மட்டும் இருக்கும். காய்ச்சல் இருக்காது. இரண்டாவது கட்டத்தில் சட்டையை கழற்றி எறியும் அளவிற்குக் காய்ச்சல் இருக்கும். உடனடியாகக் காய்ச்சல் சிறிது இறங்கி வியர்வை வரும். மூன்றாவது கட்டத்தில் உடலில் நடுக்கம் ஏற்படும்.

போர்வையை உடல் முழுவதும் போர்த்திக் கொள் ளும் அளவுக்கு உடல் நடுக்கம் ஏற்படும். அத்துடன் விட்டு விட்டுக் காய்ச்சல், தலை வலி, குமட்டல், உடல்வலி, பசியின்மை ஆகியவை இருக்கும்.

டைபாய்டு...

இது ஒரு பாக்டீரியா காய்ச்சல். சுத்தமற்ற உணவை சாப்பிடுவதால் வரு கிறது. இந்நோய்க்கிருமி குடலில் தங்கி பல்கிப்பெருகி நச்சுத் தன்மை மிக்க திரவம் உற்பத்தியாகிறது. இத்திரவம் ரத்த்தில் கலப்பதால்தான் பாதிக்கப்பட்டவருக்கு டைபாய்டு காய்ச்சல் ஏற்படுகிறது. இதனால் காய்ச்சல் தொடர்ந்து இருக்கும். மூச்சுக்காற்று சூடாக இருக்கும். சில சமயம் காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கும் இருக்கும். சாப்பிடுவதற்கு முன்பும், கழிப்பறைக்குச் சென்றுவந்தவுடன் சோப்பு போட்டு கைகழுவ வேண்டும்.

தேவையான மூலிகைகள்...

வேப்பிலை, கண்டங்கத்திரி, கீழாநெல்லி, வில்வம் ஆகியவற்றை பொடி செய்து பின் சமஅளவு ஒன்றாக கலந்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். பின் இதிலிருந்து ஒன்றரை ஸ்பூன் எடுத்து காலை, பகல், மாலை, இரவு ஆகிய நான்கு வேளைகளும் சாதாரண நீரில் கலந்து உணவுக்கு ஒரு மணிநேரம் முன்பாக சுமார் பதினைந்து நாட்கள் முதல் ஒரு மாதம்வரை தொடர்ந்து உண்ண வேண்டும். சுமார் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரத்திற்குள் அனைத்து விதமான காய்ச்சலும் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடும்.

தீராத பட்சத்தில் மூலிகை மருத்துவரின் ஆலோசனையை நாடவும்...

தமிழகத்தில் 8 மாவட்டத்தில் வெளுத்து வாங்கப் போகும் மழை கணித்து கூறிய வெதர்மேன்...


https://youtu.be/aMi8_Qci2Rc

Subscribe The Channel For More News...

கீத, வாத்திய, நிருத்தியம்...


கீத, வாத்திய, நிருத்தியமாகிய இம்மூன்றும் சேர்ந்தது சங்கீதம் என்பது எவ்வாறோவெனின்...

கீதமென்பது பாட்டு. இந்த பாட்டை வசனநடை போல கூறலாம். அவ்வாறு கூறும்போது அது கீதம் என்ற எழுத்தின் நிலையைப்பெறும் இந்தப் பாட்டாகிய எழுத்துக்கள் வாத்தியமாகிய சுர அமைதியில் மேலும் கீழும் நல் ஒலியோடு பயின்று வரும்போது, அது கீதமும் வாத்தியமும் ஆகி அந்த கீதம் சுரஒலியாகிய வாத்தியத்தில் அமைதி பெருகின்றது. கருவியில் எழுத்தொலி பேசாதென்றும் அவற்றினிடமாகச் சுர ஒலி மட்டுமே வரப்பெறும். கீத வாத்தியமாகிய இவ்விரண்டையும் இசைக்கும் போது பாட்டின் எழுத்து, பாட்டின் கருத்து, அவைகள் அமைதிபெற்று வரும்- சுரங்கள், அவற்றின் நிறமாகிய இராகம், நிறத்திற்குரிய அச்சுரங்கள் நீண்டும், குறுகியும், வளைந்தும், சுழன்றும், குழைந்தும் பேசும் தன்மைகள், அதன் தாள அளவுகள், அத்தாள எடுப்புகள் யாவும் மனத்தில் ஒருவாறு பதிந்த பின்னரே இயக்கத்தக்கனவாகின்றன. எனவே மனதின் எண்ணங்களின் தொகுதியே இங்கு நிருத்தியாமாகின்றது. ஓர் இசைக்காரன் பாடும் போது இம்மூன்றும் சேர்ந்துவந்துதான் இசையானது.

சிலப்பதிகாரம் முத்தமிழ் பெருங்காப்பியம். அது இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும், முத்தமிழ் இலக்கணத்தையும் செவ்வனே கூறுகிறது. இவற்றில் பல நுட்பங்கள் அடங்கியுள்ளன. கீதம் என்ற பகுதியை இயலென்றும், வாத்தியம் என்ற பகுதியை இசையென்றும் நிருத்தியம் என்ற பகுதியை கூத்தென்றும் எடுத்து, அதன் இலக்கண அமைதிகளைச் செவ்வனே உணர்த்தியுள்ளனர். எனவே, இம்மூன்றின் சேர்க்கையே முத்தமிழ் காப்பியம் ஆயி்ற்று. இதுபோல, இயலிசை நாடகமாகிய இம்மூன்றும் சேர்க்கையின்றி இசை (கீத, வாத்திய, நிருத்தியம்) சிறப்படையாது.

மேற்பரப்பாகப் பார்த்தாலும் இயலிற்குரிய இலக்கணமும், இசைக்குரிய இலக்கணமும், கூத்திற்குரிய இலக்கணமும் இம்மூன்றுவகை இலக்கணமின்றி இசை இலக்கணம் அறிதற்கியலாது. கீதம் என்பதற்குச் சுரக்கூட்டம் என்றொரு பொருள் உண்டு. ஆதலால் ஏழிசையாகிய அந்த சுர எழுத்துக்கூட்டம் (கீதம்) வாத்தியமாகிய ஏழிசை ஒலிச் சூழலிலும் (வாத்தியம்), அவ் ஒலி இயக்கம் பாவமென்ற அசைவு, ஆட்டம், நீளல், குறுக்கல், சுழல்தல் (நிருத்தியம்) ஆகிய ஒலி வகைகளாலும் வரப்பெற்று மூன்றும் ஒருசேர மிளிர்கின்றதென்பதையும் நன்கு அறியலாம்...

திமுக ஸ்டாலின் திட்டம் எல்லாம் டமார், டுமீல் தான் என்று அணுகுண்டு போட்ட மு.க. அழகரி...


https://youtu.be/vhgvCm4GEDY

Subscribe The Channel For More News...

திருட்டு திராவிடம்...


களப்பிரர்கள் பார்ப்பனர்களிடம் இருந்து நிலத்தைப் பிடுங்கி மக்களுக்குக் கொடுத்ததாகவும்...

அதை பாண்டிய மன்னன் களப்பிரர்களை வென்றபிறகு மீண்டும் பார்ப்பனர்களுக்கே கொடுத்ததாகவும்...

வண்டி வண்டியாக கட்டுரை எழுதும் திராவிட கம்யூனிச வலைகளே...

பாண்டியன் கொடுத்த அந்த நிலத்தில் (வேள்விக்குடி) இடையர், நாவிதர் உட்பட அனைத்து மக்களும் சேர்ந்து வாழ்ந்தனர் என்பதையும்...

பார்ப்பனருக்கு அதில் ஏகபோக உரிமை எதுவும் இருந்ததில்லை என்பதையும்..

அதில் பொதுவான சுடுகாடும் மேய்ச்சல் நிலமும் இருந்தன என்பதையும் பரம ரகசியம் போல மூடிமறைப்பது ஏனோ?

R.K.நகர் நினைவிருக்கா.. டெபாசிட் காலி, வாக்கு வங்கியும் காலி, திமுக வுக்கு பீதியை கிளப்பிய டிடிவி...


https://youtu.be/FGfT83VPsVs

Subscribe The Channel For More News...

லெவி ஸ்டாரஸ் லோகோவில் மறைந்துள்ள தகவல்கள்...


ஒவ்வொரு லோகோவுக்குப் பின்னால் வரலாறே இருக்கும். இன்றைக்கு ஜீன்ஸ் பேண்ட் என்றாலே லெவி ஸ்டாரஸ் பெயர் தான் நினைவுக்கு வரும்...

அந்த லெவி ஸ்டாரஸ் ஜீன்ஸின் பின் பக்கமிருக்கும் லோகோவில் மறைந்துள்ள தகவல்கள் தான் இது.

எண் 1 சுட்டிக்காட்டுவது,  லெவி ஸ்டாரஸ் அண்ட் கோ என்கிற பெயரை.

1829-ல் ஜெர்மனியில் பிறந்தவர் லெவி ஸ்டாரஸ், தன்னுடைய குடும்பத்துடன் 1847-ல் 18 வயதில் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து வந்தார். அங்கு உலர் பொருட்கள் விற்கும் கடையை இவர் குடும்பம் நடத்தியது. அமெரிக்கா முழுவதும் தங்க வேட்டைக்காக சுரங்கங்கள் தோண்டிக் கொண்டிருந்த போது இவர் சான் பிரான்ஸ்சிஸ்கோவில் ஒரு சுரங்கம் அருகே தையல் கடை போட்டார். அப்போது  சுரங்கம் தோண்டுபவர்களுக்காக எளிதில் கிழியாத கூடாரத் துணியில் பேண்ட் தைத்து கொடுத்தார். இவரே ஜீன்ஸை உலகிற்கு அறிமுகம் செய்தவர். இவருடைய பெயரிலான கம்பெனி ஜீன்ஸே லெவி ஸ்டாரஸ் அண்ட்  கோ.

எண் 2 சுட்டிக்காட்டுவது, லெவி ஸ்டாரஸ் நிறுவன முகவரியை, ஏனெனில் அமெரிக்காவில் நிறைய லெவி ஸ்டாரஸ் என்கிற பெயரில் ஜீன்ஸ்கள் பவனி வரவே, லெவி ஸ்டாரஸ் தனது நிறுவனத்தின் பெயரை பேடன்ட் வாங்க முற்பட்டார்.

அப்போது தான் அதே பெயரில் வேறொருவர் வாங்கியிருப்பது தெரியவரவே தனது ஊரான சான் பிரான்சிஸ்கோவையும், மாநிலமான கலிஃபோர்னியாவின் ஆங்கில எழுத்தான சி.ஏ-வையும் லெவி ஸ்டாரஸ் பெயருக்கு கீழ் இணைத்து காப்புரிமை வாங்கியுள்ளார்.

எண்  3  சுட்டிக்காட்டுவது, இரண்டு குதிரைகளைக் கொண்டு இழுத்தாலும் லெவிஸ் ஜீன்ஸ் கிழியாது என்பதை உணர்த்துவதற்காக.

எண் 4 குறிப்பிடுவது, இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரின் பிரபல மில்லான அமோஸ்கெக்லிருந்தே லெவிஸ் ஜீன்ஸுக்கான துணிகள் வாங்கப்படுகிறது. அந்த மில்லில் லெவிஸ் நிறுவனத்துக்கான துணி பண்டல் எண் 501 என்றே குறிப்பிடப்படுமாம். 501 எண் கொண்ட துணி வகை வேறு யாருக்கும் விற்பனையில்லையாம்.

எண் 5 குறிப்பிடுவது, கடுமையான துணியினால் செய்யப்பட்ட ஜீன்ஸ் பேண்டை அணிவதற்கு எளிமைபடுத்த காப்பரில் ரிவிட் அடிக்கப்பட்டதைக் குறிக்கிறது.

எண் 6 குறிப்பிடுவது, அந்த மான்செஸ்டர் மில்லில் வாங்கப்பட்ட துணி என்பதைக் குறிக்க அந்த மில்லின் காப்புரிமை குறியீடான XX என்பதை குறிக்கிறது.

எண் 7 குறிப்பது, முதல் முதலில் லெவி ஸ்டாரஸ் ஜீன்ஸ் பேண்ட்டுக்கு காப்புரிமை வாங்கப்பட்ட தேதியான மே 20, 1873  ஆகும்.

ஒரு லோகோ லேபிளில் இவ்வளவு மேட்டர் இருக்கிறது...

உலகில் வாழும் பழங்குடினரின் சில வினோதமான அசிங்கமான பாலியல் பழக்கங்கள்...


https://youtu.be/3jZnYzh0IjY

Subscribe The Channel For More News...

கன்னட ஈ.வே.ரா வும் திராவிட பொய் மூட்டை கதைகளும்...


கேரளாவின் வைக்கம் வரை சென்று போராடிய ஈ.வே.ரா. இந்த நம்பூதிரிப் பிராமணனின் அரசுக்கு எதிராக தனது பகுத்தறிவு தடியை சுழற்றியது உண்டா? இல்லையே? ஏன்?

1957ல் இந்தி(தீ)யக் கம்யூனிச கட்சி கேரளாவில் வாக்குச் சீட்டின் மூலம் ஆட்சியைப் பிடித்தது. அப்போது பிளவுபடாத இந்தி(தீ)யக் கம்யூனிச கட்சியில் இருந்த ஈ.எம்.எசு நம்பூதிரிப்பாட் கேரளாவின் முதல் அமைச்சராகத் தேர்தெடுக்கப்படார்.

அவர் முதல் அமைச்சராக ஆனவுடம் அவர் செய்த இரண்டாவது காரியம், ஆபாச கற்பனை புனைவுக் கதையாக்கக் கொண்டு கேரள மக்களால் இன்று கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரள அரசின் தேசியப் பண்டிகையாக அறிவித்து , கேரளாவில் உள்ள கிறித்துவர், இசுலாமியர் உட்பட அனைவரையும் கொண்டாடும் படி அரசு சட்டத்தின் மூலம் அறிவித்தார்..

அதனை கேராளவில் உள்ள மக்களும் ஏற்றுக் கொண்டு இன்று வரை மலையாளக் கிறிசுத்தவர், மலையாள இசுலாமியர் உட்பட அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

ஒரு கம்யூனிசுடானவர் தனது அரசின் சட்டத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட மத்த்தின் பண்டிகையை எல்லா மதத்தவரும் கொண்டாடும் படி செய்து தன்னை ஒரு மனுவாதி என்பதைக் கொஞ்சமும் கூச்சமில்லாமல் காட்டிக் கொண்டார் என்பது தெளிவாகிறது...

பாமக வை எதிர்க்க திமுக ஸ்டாலின் செய்யும் செயலால் பரிதாபத்தில் நிற்கும் விசிக திருமாவளவன்...


https://youtu.be/tQDzDBJPzwU

Subscribe The Channel For More News...

பப்பாளி பழத்தை வெறுக்காதீங்க.. இதயத்திற்கு நல்லது...


நிறைய பேர் பப்பாளிப்பழம் என்றால் அலர்ஜி போல், அதன் வாசனை வந்தாலே ஓடிப் போய் விடுவர். ஆனால் அத்தகைய பப்பாளிப் பழத்தில் அதிகமான அளவு சத்துக்கள் நிறைந்துள்ளன. கொலம்பஸ் இதனை பழங்களின் ஏஞ்சல் என்று சொல்கிறார். ஏனெனில் இந்த பழம் நன்கு கனிந்த பின் பார்த்தால், அதன் நிறம் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும்.

மேலும் இந்த பழம் நன்கு சுவையோடு இருப்பதோடு, அதிகமான ஊட்டச்சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது.

உடலில் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கிறது என்று நிறைய பேர் அதற்கான மாத்திரைகளை சாப்பிடுகின்றனர்.

ஆனால் அவ்வாறு மாத்திரைகளை சாப்பிடுவதை விட, இந்த பழத்தை தினமும் சிறிது சாப்பிட்டாலே போதுமானது.

சரி, இப்போது பப்பாளி பழத்தினை சாப்பிட்டால் என்னென்ன நன்மை உடலுக்கு கிடைக்கின்றது என்று பார்ப்போமா...

பப்பாளியில் அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,சி மற்றும் ஈ இருக்கிறது. இத்தகைய அதிகமான அளவு ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அவை உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்கின்றன. மேலம் கொலஸ்ட்ராலின் அளவு உடலில் அதிகமாக இருந்தால், அவை இரத்த குழாய்களில் தங்கி, சரியான இரத்த ஓட்டத்தை தடை செய்கின்றன. இதனால் தான் மாரடைப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த பழத்தில் நார்ச்சத்துக்கள் மிகுதியாக உள்ளது. இந்த நார்ச்சத்துக்களும் இரத்ததில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்துகிறது.

இந்த பழத்தில் இருக்கும் புரோட்டீனான பாப்பைன், செரிமான மண்டலத்தை சரியாக இயக்குகிறது. மேலும் இதில் இருக்கும் நொதிப் பொருள், செரிமானமாகாத புரோட்டீன்களை உடைத்து எளிதில் செரிமானமாகும் அமினோ ஆசிட்டுகளாக மாற்றி, செரிமானத்தை விரைவுபடுத்துகிறது. அதிலும் பப்பாளியை சாப்பிட்டால், மலச்சிக்கல் இருந்தாலும் சரியாகிவிடும்.

பாப்பாளியில் இருக்கும் நொதிப்பொருள் மற்றும் நார்ச்சத்துக்கள், குடல் இயக்கத்தை சரியாக இயக்குவதால், செரிமானம் எளிதில் நடைபெற்று, மலச்சிக்கலும் குணமாகிறது.

பப்பாளியில் உடலில் ஏற்படும் அழற்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் இருக்கின்றன. அதனால் தான் உடலில் எரிச்சல் அல்லது புண் இருந்தால், பப்பாளியை சாப்பிடுகின்றனர்.

மேலும் இந்த அழற்ஜியை எதிர்த்து போராடும் பண்புகள் பப்பாளியில் இருப்பதால், மூட்டுவலி அல்லது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை சாப்பிட்டால் நல்லது.

பப்பாளியில் இருக்கும் பலவித பண்புகளோடு, புற்றுநோயை குணப்படுத்தும் பொருளும் இருக்கிறது. இந்த பழத்தில் இருக்கும் நார்ச்சத்து, புற்றுநோய் உண்டாக்கும் டாக்ஸின்களை உடலில் இருந்து முற்றிலும் வெளியேற்றி, வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.

மேலும் பப்பாளியில் இருக்கும் போலேட், வைட்டமின் சி, பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவையும் புற்றுநோய் உண்டாக்குவதை தடுக்கும் சத்துக்களாகும்.

அதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இந்த பழம் டயட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது.

ஆகவே பப்பாளிப் பழத்தை தினமும் ஒரு துண்டாவது சாப்பிடுங்க...

பாஜக மோடிக்கு எதிராக என்னை தூண்டி விட்டதே திமுக தான்.. அய்யாக்கண்ணு பகீர் குற்றச்சாட்டு...


https://youtu.be/ttfi5StYJRo

Subscribe The Channel For More News...

குமரிக்கண்டம் தாண்டி இராவணன் ஆண்ட இலங்கை...


உண்மையில் இராவணன் ஆண்ட இலங்கை தற்போதைய இலங்கைத் தீவு கிடையாது. இதைக் கம்பரே கூறுகிறார்.

இராமாயணத்தில் சீதையைத் தேடி அனுமன் தென்திசையில் செல்கிறான்.
அகத்தியர் தமிழ்ச்சங்கம் அமைத்த பொதிகை மலையில் பொருநை (தாமிரபரணி) ஆறு ஓடுவதையும்
அதற்கடுத்து மயேந்திரமலை (கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தற்போதைய மகேந்திரகிரி) இருப்பது குறிப்பிடப்படுகிறது.

கிட்கிந்தா காண்டம் நாடவிட்ட படலத்தில் இது வருகிறது..

தென்தமிழ் நாட்டு அகன்பொதியின் "திருமுனிவன் தமிழ்ச்சங்கம்..."
"பொருநையெனும் திருநதிபின்..."
"மயேந்திரமா நெடுவரையும்..."

அங்கேயிருந்து நூறு ஓசனை (யோசனை) தொலைவில் நடுக்கடலில் இலங்கை இருக்கிறது என்றும் வருகிறது.

இது கிட்கிந்தா காண்டம்,
சம்பாதிப் படலத்தில்,
"ஓசனை ஒருநூறு கொண்டால் ஒலிகடல் இலங்கை..."
என்றும்,

கிட்கிந்தா காண்டம் மயேந்திரப் படலத்தில்
"ஓசனை ஒன்று நூறும்...."
என்றும் வருகிறது.

யோசனை என்றால் எவ்வளவு?

பொறிஞர் கொடுமுடி சண்முகத்தின் "பழந்தமிழர் பொறியியல் நுட்பத் திறன்" என்ற புத்தகத்தில் பழந்தமிழ் அளவீடுகளுக்கான தற்போதைய அளவுகள் தரப்பட்டுள்ளன. அவை...

1 விரல் = 3.48958 cm
6 விரல் = 1 சாண் = 21cm
2 சாண் = 1 முழம் = 42 cm
2 முழம் = 1 கோல் = 84 cm
4 கோல் = 1 தண்டம் = 3.35 m
500 தண்டம் = 1 கூப்பீடு= 1.675Km
4 கூப்பீடு = 1 காதம் = 6.7 Km
4 காதம் = 1 யோசனை = 26.82 Km

எனில் 100 யோசனை என்பது 2682 கி.மீ. தொலைவு ஆகும்.

அதாவது கிட்டத்தட்ட காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி (2750 கி.மீ, வான்வழி) இருக்கும் தூரம் ஆகும்...

திமுக வுக்கு மரண அடி நிச்சயம்... தோல்வியின் பயத்தால் கத்தி கதறும் மு.க. ஸ்டாலின்...


https://youtu.be/wD1Q6QiMVZU

Subscribe The Channel For More News...

தியானம் என்பது ஒரு பரிசோதனை...


கடவுளிடம் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..?

பரவாயில்லை.. தியானத்திற்கு அது ஒரு தடையாக இருப்பதில்லை.

ஆன்மா இருக்கிறது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா.....?

பரவாயில்லை.. தியானத்திற்கு அது ஒரு தடங்கலாக இராது.

எதிலுமே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா......?

நல்லது. அதுவும் ஒரு தடை அல்ல.

நீங்கள் தியானிக்க முடியும்.

ஏனெனில் உள் நோக்கிச் செல்வது எவ்வாறு  என்பதை மட்டுமே தியானம் தெரிவிக்கிறது.

ஆன்மா இருக்கிறதா இல்லையா என்பது ஒரு பிரச்சினையே இல்லை. கடவுள் உண்டா இல்லையா என்பது பற்றி கவலையே இல்லை.

நீங்கள் (உயிரோடு) இருக்கிறீர்கள்-இந்த ஒரு விஷயம் நிச்சியமானது.

சாவுக்குப் பிறகு நீங்கள் இருப்பீர்களா இருக்க மாட்டீர்களா என்பது முக்கியமான விஷயம் அல்ல.

இந்தக் கணத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற ஒரு விஷயம் மட்டுமே முக்கியமானது.

நீங்கள் யாராக-என்னவாக இருக்கிறீர்கள்.? அதற்குள் நுழைவதே தியானம் ஆகும்.

உங்கள் சொந்த உயிர்த்தன்மைக்குள் அதிக ஆழமாகச் செல்வதே தியானம் ஆகும்.

அது தற்காலிகமானதாகக்கூட இருக்கலாம். நீங்கள் நித்தியமானவராக இல்லாதிருக்கலாம். எல்லாவற்றையுமே சாவு முடிவு கட்டிவிடலாம்.

நீங்கள் நம்பியே ஆகவேண்டும் என்று எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. பரிசோதனை செய்து பாருங்கள் என்று மட்டுமே சொல்கிறேன்.

முயன்று பாருங்கள், ஒரு நாள் அது நிச்சியம் நிகழ்கிறது.

எண்ணங்கள் இல்லாது ஒழிகின்றன. எண்ணங்கள் மறைந்ததும், திடீரென்று, உடம்பும் நீங்களும் வெவ்வேறாக இருக்கிறீர்கள்.

ஏனென்றால், எண்ணங்களே இணைப்புப் பாலமாக இருக்கின்றன. எண்ணங்கள் வாயிலாகத்தான் நீங்கள் உடம்புடன் சேர்ந்திருக்கிறீர்கள். அதுவே இணைப்புக் கண்ணி.

திடீரென அந்த இணைப்புக்கண்ணி மறைகிறது. நீங்கள் ஓரிடத்தில் இருக்கிறீர்கள், உடம்பு ஓரிடத்தில் இருக்கிறது.

இவ்விரண்டிற்கும் இடையில் எல்லையற்ற இடைவெளி இருக்கிறது.

இந்த உடம்பு அழியும். ஆனால் நீங்கள் அழிய முடியாது. அழிவில்லை என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்.

அதன்பின், அது ஒரு வறட்டுக் கோட்பாடு போன்ற ஒன்றாக இருப்பதில்லை. அது ஒரு மத நம்பிக்கையாகவும் இருப்பதில்லை.

அனுபவமாகவே தானே கண்டுணர்ந்து தெளிந்த அனுபவமாகவே இருக்கிறது.

அந்த நாளிலேயே மரணம் மறைகிறது.

அன்றே சந்தேகம் மறைகிறது.

ஏனென்றால் இனி நீங்கள் உங்களை ஓயாமல் தற்காத்துக் கொண்டிருப்பதில்லை.

யாராலும் உங்களை அழிக்க முடியாது.

நீங்கள் அழிக்கப்பட முடியாதவராக இருக்கிறீர்கள். அப்போது தான் விசுவாசம் உருவாகிறது.

நிரம்பித் ததும்புகிறது. அப்படிப்பட்ட விசுவாசத்தில் இருப்பதே பரவசத்தில் இருப்பதாகும்.

அப்படிப்பட்ட விசுவாசத்தில் இருப்பதே கடவுளில் கலந்து இருப்பதாகும்.

அம்மாதிரியான விசுவாசத்தில் இருப்பதே பூரண நிறைவடைந்து இருப்பதாகும்.

எனவே விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றுகூட நான் கூறுவதில்லை.

தியானத்தில் பரிசோதனை மேற்கொள்ளுங்கள் என்றே சொல்கிறேன்...

வேலூரில் தேர்தல் ரத்தாகலாம்...


மஞ்சள் இருக்க அஞ்சல் ஏன்?


மஞ்சளை 'ஏழைகளின் குங்குமப்பூ’ என்பார்கள். விலை உயர்ந்த குங்குமப்பூ தரும் பலன்களைக் குறைந்த விலையில் கிடைக்கும் மஞ்சள் தருகிறது. இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள் இது.

அழகு, ஆரோக்கியம், ஆன்மிகம் என மூன்றும் கலந்த முத்தான மூலிகை மஞ்சள்.

இதன் அறிவியல் பெயர், 'கர்க்குமா லாங்கா’ (Curcuma longa). இதில் உள்ள 'கர்க்குமின்’ (Curcumin)  என்ற வேதிப் பொருள்தான் மஞ்சள் நிறத்தைத் தருவதோடு, மஞ்சளின் நற்பலன்கள் அனைத்துக்கும் காரணியாகவும் விளங்குகிறது.

மஞ்சளின் மருத்துவக் குணங்கள்பற்றி சித்த மருத்துவர் வீரபாபு விளக்கமாகப் பேசினார்.

'கப்பு மஞ்சள், கறி மஞ்சள், மர மஞ்சள், விரலி மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என மஞ்சளில் பல வகைகள் உள்ளன.

கப்பு மஞ்சள், புண்களை ஆற்றும்; சொறி, சிரங்கு, படை ஆகியவற்றுக்கு மேற்பூச்சாகவும் பூசலாம்.

கறி மஞ்சள் என்பது நாம் சமையலுக்குப் பயன்படுத்துவது.

விரலி மஞ்சளைப் பொடிசெய்து, தினமும் பாலில் கலந்து குடித்துவந்தால், சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

மர மஞ்சளை வேப்பிலையுடன் சேர்த்து அரைத்துப் பூச, அம்மை நோய் குணமாகும்.

கஸ்தூரி மஞ்சள் அழகுக்காகப் பயன்படுத்தப்படுவது.

காய்கறி, கீரையுடன் மஞ்சளைச் சேர்த்துச் சமைக்கும்போது, புழு, பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும்.

மஞ்சளும் சந்தனமும் கலந்து முகத்துக்குப் பூசிவந்தால், மினுமினுப்பு ஏறும். கரும்புள்ளிப் பிரச்னை இருக்காது.

மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி. எனவேதான், வீட்டைச் சுற்றிலும் மஞ்சள் கலந்த நீரைத் தெளிப்பார்கள். இதனால் பாக்டீரியா, பூஞ்சைத் தொற்றுக்கள் பரவாது.

வெயிலில் அலைவதால் சிலருக்குத் தலையில் நீர் கோத்துக் கடுமையான தலைவலி ஏற்படும். மஞ்சளைத் தணலில் போட்டு, கரியாக்கும்போது வெளிவரும் புகையை நுகர்ந்தால், நீர்க்கோவை சரியாகும்.

வீக்கத்தைக் குறைக்கும். காயங்களை ஆற்றும்.

புற்றுநோய்க் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

அருகம்புல்லுடன் மஞ்சளைச் சேர்த்து அரைத்து வியர்க்குரு மற்றும் வேனல் கட்டிகளில் தடவி, இரண்டு மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதுபோல் தொடர்ந்து செய்துவர சில நாட்களில் தொல்லை நீங்கும்.

மஞ்சள்தூளைப் போட்டுக் காய்ச்சிய நீரில் வாய் கொப்பளிக்க, தொண்டைப்புண் ஆறும். சளிப் பிரச்னையும் சரியாகும்.

பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உணவில் மஞ்சளைச் சற்றுக் கூடுதலாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

கர்ப்பக் காலத்தில் வயிற்றில் ஏற்பட்ட தளர்ச்சி குறைந்து, வயிறு இறுக இது உதவுகிறது.

குளவி, தேனீ போன்றவை கொட்டினால், வலி - கடுப்பு ஏற்படும்.

மஞ்சளுடன் வேப்பிலையைச் சேர்த்து அரைத்துக் கொட்டிய இடத்தில் பூசினால் விஷம் முறியும்; வலி குறையும்.

தீப்புண் ஏற்பட்டால் சிறிது வெங்காயச் சாற்றுடன் மஞ்சள்தூளைக் குழைத்துப் பூசினால் குணமாகும்.

சாதம் வடித்த நீரில் சிறிது மஞ்சள்தூளைக் கலந்து குடித்தால் வயிறு உப்புசம் சரியாகும்.

சம அளவு மஞ்சளையும் மிளகையும் அரைத்து மோரில் கலந்து குடித்தால், பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் வயிற்று வலி கட்டுப்படும். தலைவலி குணமாகும்.

மஞ்சளையும் சந்தனத்தையும் சம அளவில் அரைத்துப் பருக்களின் மீது தடவிவந்தால், சில நாட்களிலேயே பருக்கள் மறைந்துவிடும்.

அடிபட்ட காயங்களின் மீது மஞ்சளைப் பூச, ரத்தம் வெளியேறுவது தடுக்கப்படும்.

மஞ்சள் பூசினால் முடி உதிருமா?

பெண்கள் முகத்துக்கு மஞ்சள் பூசிக் குளிப்பதால்தான் அவர்களது முகத்தில் மீசை, தாடி வளர்வதில்லை என்ற நம்பிக்கை கிராமப்புறங்களில் உண்டு. இதனால் ஆண்கள் முகத்தில் மஞ்சள் பூசப் பயப்படுவார்கள்.

ஆனால், மஞ்சளுக்கும் முடி உதிரலுக்கும் சம்பந்தமே இல்லை என்பதுதான் உண்மை.

பெண்களுக்கு முகத்தில் முடி வளர்வது என்பது ஹார்மோன்களால் ஏற்படுவது.
பிறகு ஏன் பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசிக் குளிக்கிறார்கள்?

மஞ்சள் ஓர் அழகுசாதனப் பொருள். சருமத்தைப் பொலிவாக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு.

எனவே தான் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு அந்தப் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது.

அதற்குப் பதிலாக மஞ்சள் சேர்க்கப்பட்ட அழகு க்ரீம்களைப் பயன்படுத்துகிறார்கள். காசு அதிகம் கொடுத்து ரசாயனங்களுடன் சேர்க்கப்பட்ட மஞ்சளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இயற்கையாகக் கிடைக்கும் மஞ்சளைப் பயன்படுத்தியே அழகைப் பெறலாமே...

திமுக கனிமொழிக்கு எத்தனை கணவர்கள் தெரியுமா.? அப்பா கருணாநிதியை யே மிஞ்சிய மகள்...


https://youtu.be/krv-mR1aBqc

Subscribe The Channel For More News...

உடல் உறவு மூலம் நல்ல குழந்தை உண்டாக.. நமது பாரம்பரிய ரகசியம்...


உடலுறவு மூலம் சிசு உண்டாக நல்ல நேரங்கள்...

கணவனும், மனைவியும் கூடிய நேரம் சந்திர கலையாக இருந்தால் அந்தக் கரு பெண் ஆகும்.

சூரிய கலை நடக்கும் பொது உடல் உறவு கொண்டால் அந்த கரு ஆண் ஆகும்.

சுழிமுனை நடக்கும் போது உறவுக்கொண்டால் குழந்தை ஆகாது..

அமாவாசையன்று கருவானால் கருப்பு நிறமாகவும், ஆறு விரல் உள்ளதாகவும் குழந்தை பிறக்கும்.

தொலை தூரம் சென்று வந்த பொழுது உறவுக்கொண்டு கருவானால் அந்தக் குழந்தை அறிவில்லாத குழந்தை ஆகும்.

அமாவாசை கழித்து பிரதமையில் கரு உண்டானால் பொய் பேசும் குழந்தை பிறக்கும்.

அமாவாசைக்கு மூன்றாம் நாள் கருவானால் அந்த குழந்தை நீண்ட நாள் வாழாது.

முழு நிலவுவில் உடலுறவு கொண்டு கருவானால் முடமாகவும், தண்டியாகவும் குழந்தை பிறக்கும். யானை வடிவில் இருக்கும்.

முழுநிலவு கழித்துப் பிரதமையில் கருவானால் சிறு வயதில் பல கண்டங்களைத் தாண்டி, நீண்ட ஆயுள் உடையதாகக் குழந்தை பிறக்கும்.

பதினைந்தாம் நாள் கூடிப் பிறந்த குழந்தை பித்தம், கருங்குட்டம், வெண்குட்டம், பித்தம், முயலகம் என்னும் நோயால் பீடிக்கும்.

புணர்ச்சியின் போது பேசக்கூடாது. பேச்சுக்களைப் பேசினால் குழந்தை அலியாகப் பிறக்கும்.

பெண்ணை நிர்வாணமாக்கிப் புணர்ந்தால் குழந்தை சோம்பேறியாகப் பிறக்கும்.

உடலுறவு கொள்ளும் பொழுது வேறு பெண்ணை நினைத்து உடலுறவு கொண்டால் அதற்குப் பிறக்கும் குழந்தை ஆறு அல்லது நான்கு விரல் உடையாதகப் பிறக்கும்.

பிறைகண்ட 3,5,8,10ஆகிய நாள்களில் எந்த உடலுறவும் கூடாது.

வெள்ளிக்கிழமை மூன்றாம் ஜாமத்தில் உடலுறவு கொண்டு கருவானால், மாறுகண் உள்ள குழந்தை பிறக்கும்.

ஒரு பெண் மாத விளக்கு ஆகி மூன்றாம் நாள் உடலுறவு கொண்ட போது கருவானால் குழந்தை திருடனாகப் பிறக்கும்.

நான்காம் நாள் கூடிக் கருவானால் குழந்தை வறுமையில் வாடும்.

ஐந்தாம் நாள் கூடிப் பிறக்கும் பிள்ளை கல்வியில் சிறந்து விளங்கும்.

ஆறாம் நாள் கூடிக் கருவானால் பெரியோர்கள் கருத்தைக் கேளாத குழந்தை பிறக்கும்.

ஏழாம் நாள் கூடிக் கருவானால் உண்மையை பேசும், ஈகை, இரக்கம், நற்குணம் உடைய குழந்தை பிறக்கும்.

எட்டாம் நாள் கூடிக் கருவானால் குழந்தை தரித்திரத்தில் வாழும்.

ஒன்பதாம் நாள் கூடிக் கருவானால் செல்வம், வளம் நிறைந்து குபேரனாக வாழும் குழந்தை பிறக்கும்.

பத்தாவது நாள் கூடிக் கருவானால் காமம் மிகுந்து கெட்ட பழக்கம், அவ மரணம் உள்ள குழந்தை பிறக்கும்.

பதினொன்றாவது நாள் கூடிக் கருவானால் நோயுள்ள குழந்தை பிறக்கும்.

பன்னிரெண்டாவது நாள் கூடிக் கருவானால் பல கலைகளும், அறிவு நலன்களும் உள்ள குழந்தை பிறக்கும்.

பதின்மூன்றாவது நாள் கூடிக் கருவானால் அரசியல் ஞானம், வருங்காலத்தை உணரும் விவேகம் உள்ள குழந்தை பிறக்கும்.

பதிநான்காம் நாள் கூடிக் கருவானால் உலக இன்பங்களிலிலே திளைக்கின்ற யோகியாகக் குழந்தை பிறக்கும்.

பதினைந்தாவது நாள் கூடிக் கருவானால் ஓர் அரசனுக்கு ஒப்பான ஆற்றலும், நற்புகழும் உள்ள குழந்தை பிறக்கும்.

பதினாறாவது நாள் கூடிக் கருவானால் பெரிய ஞானியாகவும், யோகியாகவும், சித்தனாகவும் ஆகக்கூடிய குழந்தை பிறக்கும்...

உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சத்தியை விழிப்படைய செய்ய தியான காணொளி...


https://youtu.be/i2DFlfmr_f8

Subscribe The Channel For More News...

அமானுஷ்யம்...


பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும்.

பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே விரும்பும்..

எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன....

பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காண முடியும்..

உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம். .

பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே முயற்சி செய்யும்....

விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும். .

பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள்....

பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை. அதனால் தான் அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள். .

பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்....

நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும்....

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது..

எப்பவுமே கோவில்கள்/ சர்ச்சுகளை வழிபாடு தலங்களை அண்டியே சுற்றியபடி இருக்கும். .

பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings)உண்டு.. ஆனால் உணர (sense) முடியாது. ....

பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும். .

பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலை செய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு....

பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல..

எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும். .

பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்....

பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும். .

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்து போனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு...

நடிகர் லாரன்ஸ்சிடம் மன்னிப்பு கேட்ட நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்...


https://youtu.be/ZWZ1VhRN5JM

Subscribe The channel For More News...

இராகம்...


இராகத்தைத் தமிழிசையில் நிரம் என்று அழைப்பர்..

இந்துஸ்தானி இசையில் இராக வகைகள் பத்து "தாட்" (அடிப்படை ராக உருவம்) - களின் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கின்றன.

தென் இந்தியாவில் ராகங்கள் 72 மேளாகர்த்தா ராகங்களின் அடிப்படையில் ஜனக - ஜன்ய ராகங்களாக வகுக்கப்படுகின்றன. 36 மேலகர்த்தா இராகங்கள் ப்ரதி மத்தியத்திலும்... 36 இராகங்கள் சுத்த மத்தியத்திலும் அமைந்திருக்கின்றன.....

‌இராகம் என்பது இந்திய பாரம்பரிய இசையில் பயன்படுத்தப்படும் இசை வடிவங்கள். இவை வைதீக இசையின் அடிப்படையில் அமைந்துள்ளன என்று பலர் கூறுகின்றனர்.

இந்திய பாரம்பரிய இசை இராகங்களின் அடிப்படையில் அமைக்கபட்டிருக்கின்றது. இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையைக் குறிக்கும்.

இராகம், ஒரு பாட்டை எவ்வாறு உருவாக்கலாம் என்று காட்டும் விதிகளை விளக்குகின்றன எனலாம். அது இசை மேலே செல்லும் போதும் (ஆரோகனத்தில்) கீழே செல்லும்போதும் (அவரோகனத்தில்) எந்த ஸ்வரங்களை வரிசையில் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது.

ஒவ்வொரு இராகத்திலும் ஐந்து, ஆறு அல்லது ஏழு ஸ்வரங்கள் இருக்கும்.

வெகு சில இராகங்களில் மட்டும் நான்கு அல்லது மூன்று ஸ்வரங்களோ, அல்லது ஏழுக்கு மேல் ஸ்வரங்கள் (அன்னிய ஸ்வரங்களை கூட்டி) வரலாம். ஐந்து ஸ்வரங்கள் கொண்ட ராகங்கள் ஔடவ ராகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆறு ஸ்வரங்கள் கொண்ட இராகங்களுக்கு ஷாடவ ராகம் என்ற பெயர் உண்டு.

எல்லா ஏழு ஸ்வரங்களையும் கொண்டுள்ள ராகங்கள் சம்பூர்ண ராகங்கள் என்றழைக்கப்படுகின்றன.

ஒரு ராகத்தின் ஆரோகனத்திலோ அவரோகனத்திலோ ஸ்வரங்கள் சரியான வரிசையில் இல்லையென்றால் இது வக்ர ராகம் என்று அழைக்கப்படும்.

கர்நாடக இசையில், ஏழு ஸ்வரங்களையும் சரியான வரிசையில் கொண்டுள்ள 72 ராகங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு மேளகர்த்தா இராகங்கள் என்ற பெயர் உண்டு...

உங்களுக்கே இவ்வளவு இருந்தால் எனக்கு எவ்வளவு இருக்கும் ஸ்டாலினை கடுமையாக சாடிய எடப்பாடியார்...



https://youtu.be/lOWs184xJbs

Subscribe The Channel For More News...

ஞானம்...


பிறப்பும், இறப்பும் சரி விகிதத்தில் இருக்கும் போது ஞானம் மட்டும் இங்கொன்றும் அங்கொன்றுமாக தான் இருக்கிறதே தவிர சரிவிகிதமாக இல்லையே.. ஏன் இந்த தாமதம்....?

ஞானம் தாமதிப்பதில்லை ஆனால், நாம் தான் தள்ளிப் போட்டுக் கொண்டு இருக்கிறோம்.

புத்தத் தன்மையை புரிந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை.

ஆனால், புத்தரைப் போல ஆக வேண்டும் எனபதில் தான் சிக்கல் இருக்கிறது.

ஞானத்தைப் பற்றிய ஏராளமான புனைக் கதைகளால் நாம் நிரபபப் பட்டிருக்கிறோம்.

அது தான் ஞானம் தெளிவதற்கு தடையாக இருக்கிறது.

ஞானிகள் அடைந்த பெயர், புகழ், நடை, உடை, பாவனை, அற்புதங்கள் செய்யும் திறன், இவைகளில் மட்டுமே பெரும்பாலும் ஈர்க்கப்பட்டிருக்கிறோம்.

மனமானது தந்திர உபயங்கள் நிரம்பியது. அதனால் தொடர்ந்து அது கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்க முயற்சிக்கிறது.

நாம் கேட்கும் கேள்விகளுக்கு உள்ளாகவே பதிலும் இருக்கிறது.

ஆனால், மனம் நுணுகி செல்லாமல் மேலோட்டமாகவே நின்று கொண்டு கேள்வி வந்த உடன் புறத்தில் கேட்டக் கற்றுக் கொண்டிருக்கிறது.

ஏனெனில், கேள்வி கேட்பதும் ஞானம் என்று சொல்லப்பட்டிருப்பதால் கேள்வியே ஞானம் என்று தவறான முடிவுக்கு வந்துவிடும் பழக்கமாகிவிட்டது.

மனதிற்குள் பதிலை தயார் நிலையில் வைத்துவிட்டு தான் கேள்வியானது புறத்தில் எழுகிறது.

ஆனால், மனம் நுணுகி செல்ல மறுப்பதால் புறத்தில் தேடிக் கொண்டிருக்கிறது.

பதிலை தெரிந்த பிறகு கேள்வியும், பதிலும் வேறு வேறாக இல்லாமல், இணைந்தே இருபது தெரிய வரும்.

அப்படி தெரிய விடாமல் செய்வது மனம் தான்.

எப்படி என்றால், மனம் ஏதோ ஒரு வழியில் அடையாளங்களை பிடித்து வைத்திருக்கிறது.

அந்த அடையாளங்களை வைத்துக் கொண்டு பதிலை தேட முயற்சிப்பதால் தான் பதில் கிடைத்தும் அதை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது.

இன்னும் வேறு ஒருவரிடம் கேட்டால் தெளிவு பிறக்கும் என்று எண்ணி வாழ்க்கை முழுவது தேடுதலிலேயே அலைந்து கொண்டிருக்கிறது.

மனம் தேடுதலை முடித்துக் கொள்ள தயார் நிலையில் இருப்பதில்லை.

இன்னும் கொஞ்சம் ஆழமாகவும், அகலமாகவும் செல்லலாமே என்று சமாதானம் செய்து கொண்டு தன் தந்திரத்தை உயிர்பித்துக் கொள்கிறது.

இது புரியாமல் நாமும் மனதின் வழியே சென்று பயணித்து காலத்தால் விரக்தி நிலையை மனம் எய்துகிறது.

அதன்பின் ஞானம் குழப்பம் என்ற முத்திரையும் கொடுத்து விடுகிறோம்.

இது யார் தவறு.....?

மனதின் தவறா....?

இல்லை ஞானத்தின் தவறா..