04/04/2018

உடல், எடை மற்றும் பானை போன்ற வயிறும் குறையும்....


பானை போல வயிறு இருக்கா.? இலகுவாகக் குறைக்கலாம்...

உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விசயம் அல்ல. அதிலும் அந்த எடையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது.

அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே மிக மேன்மையான (super) மருந்து இருக்கிறது. அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு நிச்சயம் குறைந்துவிடும். அது என்னென்னவென்று பார்ப்போமா!

உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற சக்தியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு குவளை நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி தேநீரை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு குவளை சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க திட்ட உணவில் (diet) இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்...

பாஜக ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட முயன்ற நந்தினி கைது...


மயிலாப்பூர் தியாகராஜ புரத்தில் உள்ள குருமூர்த்தி வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு...

காவல்துறை எனும் மக்கள் விரோத துறையே பதில் சொல்...



ஏப்ரல் 5ம் தேதி தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படாது.. சிறப்பு மிகச் சிறப்பு...


தமிழக சுதந்திர வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம்.. சார்பாக நாளை 05/04/2018 வேலை நிறுத்தம்...


காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மாநில அரசையும், மத்திய அரசையும் கண்டித்து முழு  அடைப்பு மேலும் தமிழக வாடகை கார்கள் மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் ஆதரவு...

குறிப்பாக
சென்னை,
மதுரை,
காஞ்சிபுரம்,
திருவள்ளூர்,
நாகப்பட்டினம்,
ஈரோடு

ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 5000ம் மேற்பட்ட வாகனங்கள் இயங்காது.

இப்படிக்கு,
தமிழக சுதந்திர வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கம்.

பொது செயலாளர்
ஜூட் மேத்தியு 9092996999...

காவிரி போராட்டத்தை ஒடுக்குங்கள்.. அதிமுகவுக்கு உத்தரவு போட்டுள்ள பாஜக...


ஆகாயத்தில் ஒரு ஒளி (அத்தியாயம் - 3) சத்திய யுகம் பகுதி - 4...

சத்திய யுகம் வருங்கால தீர்க்கதரிசனம் பகுதியில் இன்று நாம் அறிந்து கொள்ளும் தீர்க்கதரிசனப் பகுதி 4-ம் பகுதியாகும். இந்த 4-ம் தீர்க்கதரிசனப் பகுதியில் இடம்பெறும் ஒவ்வொரு குறிப்புகளும் உடனே நடந்து முடிய உள்ளன. இந்த பூமி எங்கும் இறைவனின் நியாயத் தீர்ப்புகள் இறங்கும் காலமாக இக்காலம் இருக்கும் என இந்த 4-ம் பகுதி ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


இந்திய துணைக் கண்டங்கள் முழுவதும் இயற்கை சீற்றங்களான புயல், மழை, சூறாவளிக்காற்று என பல கோர தாண்டவங்களால் அப்பகுதிகள் பலத்த சேதங்களை சந்திக்க இருப்பதாகவும், மக்களின் இறப்பு சதவீதம் 8 % முதல் 12 % வீதம் வரை இருக்கும் என தீர்க்கதரிசனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.



குமரிக் கண்டமான லெமூரியாவை ஆண்ட மன்னன் ஒருவனின் சமாதி கடலுக்குள் அடியிலிருந்து பூமியின் மேல் பரப்பிற்கு வர உள்ளது என்றும், இதுவரும் சமயம் இந்திய தேசத்திற்கு போதாத காலமாக இக்காலம் இருக்கும் என்றும், இதன் தாக்கம் குமரி முதல் இமயம் வரை தென்படும் என்று இறை தீர்க்கதரிசனம் தெரிவிக்கின்றன.



கிருஸ்துவ மக்களுக்கு இது போதாத காலமாக இருக்கும் என்றும், இதனால் இந்திய மண்ணில் சில உயிர் பலிகள் நடக்க இருப்பதாகவும், தேவாலயம் ஒன்று வெடி வைத்து தகர்க்கும் சம்பவம் ஒன்று உடனே நடக்க இருப்பதாகவும், அச்சமயத்தில் “புனிதர்“ ஒருவரின் வருகை உறுதிபடும் வகையில் ஒரு அதிசயம் நடைபெறும் என்று 4-ம் தீர்க்கதரிசனப் பகுதி ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


காலத்தால் அழிக்க முடியாத காவியம் ஒன்று தமிழகத்தில் உருவாகி வருகின்றது என்றும், அந்த காவியத்தின் சொந்தங்களே இந்த நாட்டை ஆளும் ராஜாவையும், இந்த நாட்டின் பிரதேசப் பகுதிகளை ஆளும் இந்திய பிரதிநிதிகளையும் முடிவு செய்வார்கள் என்றும், இந்தியா மட்டுமின்றி, இந்த காவியத்தின் குடைக்கு கீழேதான் உலக நாடுகளும், அதனை ஆளும் பிரதிநிதிகளும் வருகிறார்கள் என்றும், அந்த காவியத்தின் தலைவன் இறைவனே இருப்பார் என்றும்,  அக்காலம் தற்போது துவங்கி விட்டது என்றும், அதனை மக்கள் உணரும் காலமாக நடப்பு ஆண்டு அமையும் என்று இறை தீர்க்கதரிசனங்கள் கூறும் உண்மைச் செய்தியாகும்.
   

இனி வானிலை மாற்றங்கள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் காணப்படும் என்றும், மக்கள் மனதில் இது மிகுந்த பயத்தை உருவாக்குபவையாக இருக்கும் என தீர்க்கதரிசனங்கள் இங்கே குறிப்பிடுகின்றன.


இயற்கை வழியில் தமிழகத்திற்கு நிறைய ஆபத்துகள் வர உள்ளது என்றும், இதன் அறிகுறியே கோவிலில் நடந்த தீவிபத்துகளின் அறிகுறிகள் என்றும், இதற்கு அச்சாரமாக பஞ்சபூத சிவ ஸ்தலங்களில் ஒன்று இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகி அழிவுறும் என்றும், இது நடந்தால் தமிழக அரசியல்வாதிகளின் சாம்ராஜ்யமே ஆட உள்ளதாக தீர்க்கதரிசனச் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


அழிவில்லாதவர், நித்தியமானவர், வலிமையானவர் என்ற அடைமொழிக்கு உரிய “ஸ்ரீ ஆஞ்சநேயரை“ வடமாநில பக்தர்கள் சிலர் நேரில் கண்களால் தரிசிக்கும் பாக்கியத்தை பெறுவார்கள் என்றும், இது இணையதளத்தில் வேகமாக செய்தியாக உலகம் முழுவதும் பரவும் என்றும், அப்பொழுது கடல் உள்மட்டத்தில் உள்ள துவாரகையின் ஒரு சிறு நிலப்பரப்பு வெளியே வரும் என்றும், இதன் அறிகுறி என்னவெனில் “கலியுக கடவுளான“ ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் செயல்பாடுகள் பூமியெங்கும் துவங்கி விட்டதற்கான அறிகுறி என மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என இந்த 4-ம் தீர்க்கதரிசனப் பகுதி ஒரு முக்கிய செய்திக் குறிப்பை இங்கே வழங்குகின்றது.


கேரளாவில் உள்ள பத்மநாப சுவாமியின் சந்நதியில் உள்ள ஒரு அறையின் கதவு திறக்கப்படும் நிகழ்வு உடனே நடக்கும் என்றும், அப்பொழுது 108 திவ்ய தேசங்களில் உள்ள ஸ்ரீநாராயணின் முக்கிய ஆலயம் ஒன்று பெரிய அழிவுக்கு உள்ளாகும் நிகழ்வு தற்போது நடக்க உள்ளதாகவும், இது நடந்து விட்டால் “இந்த உலகம்“ அடுத்த யுகத்திற்கு தயாராகி விட்டது என உலக மக்கள் எண்ண வேண்டுமென்று இறை தீர்க்கதரிசனங்கள் தெரிவிக்கின்றன.


வேற்றுகிரக வாசிகளின் “ஓடம்“ ஒன்று கடலின் உள்ளே இருந்து வெளிவரும் நிகழ்வு தற்போது நடக்க உள்ளதாகவும் “ஜெனிவா“ கவனத்தில் கொள்ள வேண்டிய நிலப்பரப்பு என்று மற்றொரு செய்திக்குறிப்பு இங்கே நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.


புகழ் என்ற ஒன்றையே விரும்பி உலகத்தை சுற்றிவரும் ஒருவனின் கால்கள் இந்திய தேசத்தில் ஊன்றும் பொழுது இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் முக்கிய நிகழ்வு ஒன்று துவங்கி விடும் என்றும், அதன் ஆரம்ப அறிகுறி அவனின் தேசம் தீப்பற்றி எரிந்திருக்கும் என்பதே அதன் குறிப்பாகும்.


இந்த தேசத்தின் மீது இறைவனின் நீயாயத் தீர்ப்பு தற்போது இறங்க உள்ளது என்றும், இது இந்திய தேசத்தின் எல்லையில் அமைந்துள்ளது என்பதே இதன் முக்கிய குறிப்பாகும்.


பன்னாட்டு கிருஸ்துவக்குழு ஒன்று இந்திய தேசத்திற்குள் நுழைந்து ஒரு இறைச்சபையை தேடும் நிகழ்வு ஒன்று தற்போது துவங்கிட உள்ளது என்றும், அவர்கள் வெளியிடும் செய்திக் குறிப்புகள் இந்திய மக்களிடையே பல ஆச்சர்யங்களை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் 4-ம் இறை தீர்க்க தரிசனப் பகுதி நமக்கு ஒரு குறிப்பை தருகின்றது.


பக்ரையன் கவனத்தில் கொள்ள வேண்டிய பகுதி என்றும், முஸ்லீம்களின் ஆதிக்க பலத்தால் பலத்த உயிர் சேதங்கள் அங்கு ஏற்பட உள்ளதாக இறை தீர்க்கதரிசனங்கள் இங்கே தெரிவிக்கின்றன.



சுமேரியா நாகரிகத்தின் தொண்மைகள் வாயிலாக இனி தமிழனின் பண்பாடுகள், கலாச்சாராங்கள் தெரிய வரும் என்றும், சுமேரியா நாகரீகம் அது முற்றும் இந்திய வம்சாவழி மக்களின் நாகரீகம் என்பதே உலக புதைபொருள் ஆய்வு மன்றக்குழு உலக மக்களுக்கு அறிவிக்கும் என்ற செய்திக் குறிப்பை 4-ம் தீர்க்கதரிசனப் பகுதியான சத்திய யுக செய்திக் குறிப்பு இங்கே நமக்கு சுட்டிக் காட்டுகின்றது.


பாதாள நாயகி அன்னை மாகாளி இந்த பூமியின் மீது தொடுக்கும் போரை மக்கள் அழிவுகளாக இனி காணப் போகிறார்கள் என்றும், அதன் எதிரொலியாக “காஷ்மீர்“ பகுதியில் உருவாகும் அழிவுச் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகளாக இருக்கும் என செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.


இறைவனின் அவதாரம் இந்திய மண்ணில் மட்டுமே என்பதை இனி உலக மக்கள் அறிய உள்ளார்கள் என்றும், இதன் அறிவிப்புகளை இறைவனே முன்நின்று அறிவிக்கும் நிகழ்வுகள் இனி உலக முழுவதும் நடைபெறும் என்றும், “ஒலிவ“ மலையிலிருந்து இக்காட்சி துவக்கம் பெற உள்ளது என்றும் 4-ம் தீர்க்கதரிசனப் பகுதி இங்கே ஒரு முக்கிய இறைவன் சார்ந்த குறிப்பை நமக்கு நினைவூட்டுகின்றது.


மறைபொருள் பொதிந்த தென்னிந்திய நடிகர் ஒருவனின் அரசியல் பிரவேசம் “ஆட்டம்“ காண உள்ளது என்றும், இது மக்களிடையே பல சந்தேகங்களை உருவாக்கி அந்த நடிகரை வெறுப்புக்கு ஆளாக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடக்கும் என தீர்க்கதரிசனப் பகுதி இங்கே சுட்டிக் காட்டுகின்றது.


மறைந்த முன்னாள் முதல்வரின் “அந்தரங்க“ செய்தி ஒன்று உண்மையாகும் நிகழ்ச்சி ஒன்று தற்போது நடக்க இருப்பதாகவும், இதனால் அவரின் புகழுக்கு எந்த வகையிலும் இழுக்கு ஏற்படாது என்று சத்திய யுக தீர்க்க தரிசனத்தின் 4-ம் பகுதி நமக்கு இங்கே ஒரு குறிப்பை தருகின்றது.


குஜராத்தில் இனக்கலவரம் ஒன்று தற்போது துவங்கிட இருப்பதாகும், இது ஒரு வேதனை அளிக்கக்கூடிய செயலாக மக்களுக்கு அமையும் என்று வருங்கால தீர்க்கதரிசனச் செய்திக் குறிப்பு நமக்கு தெரிவிக்கின்றது.


புத்த அமைப்பு ஒன்று இந்திய தேசத்தில் நடக்க உள்ள “இறை“ சார்ந்த ஒரு புனித நிகழ்வை பற்றி பகிரங்கமான ஒரு செய்தியினை வெளியிடுவார்கள் என்றும், புத்தர் வாழ்ந்த பகுதியில் ஒரு அதிசயம் அப்பொழுது நடந்தேறிடும் என்றும் 4-ம் தீர்க்கதரிசனம் ஒரு முக்கிய குறிப்பை இங்கே தருகின்றது.


அகத்திய மாமுனியின் மறுபிரவேசம் இப்பூமியில் இன்னும் 3 தினங்களில் நடக்க உள்ளதாகவும், அதனை சார்ந்த நிகழ்வுகளை மக்கள் காணும் அரிய நிகழ்ச்சிகள் உடனே நடக்க இருப்பதாக தீர்க்க தரிசனச் செய்திக் குறிப்புகள் ஒரு உண்மை நிகழ்வை இங்கே சுட்டிக் காட்டுகின்றன.


பல்லாயிரம் ஆண்டுகளாக இப்பூமியை வலம் வந்த ஒரு ஆன்மாவில் மட்டுமே இறைவனின் பிரவேசம் இருக்கும் என்றும், அந்த ஆன்மா காலத்தை கடந்து பல பிரவேசங்களை கண்ட ஒரு ஆன்மாவாக அது இருக்கும் என்றும், அது திரித்துவ தத்துவத்தின்படி “மும்மூர்த்திகளின்“ ஸ்வரூபமாக அமைந்திருக்கும் என்றும், அந்த ஆன்மாவின் முகத்தை இனி உலக மக்கள் தங்களின் பிரார்த்தனை நேரத்திலும், தியான நேரத்திலும், தனது கனவுகளின் வழியாகவும் காண்பார்கள் என்றும், அந்த முகத்தின் அடையாளமாக அனைவருமே அந்த ஆன்மாவின் “இரு“ கண்களைப் பற்றியே ஒரே மாதிரியாக வர்ணித்து செய்திகளை வெளியிடுவார்கள் என்று, சத்திய யுக தீர்க்கதரிசனத்தின் 4-ம் பகுதி ஒரு முக்கிய செய்திக் குறிப்பை இங்கே பதிவு செய்கிறது.


எழுத்தும் செயலும் ஒன்றாக இருப்பின் அதுவே உண்மையின் தத்துவம், அதுவே இறைவனின் வடிவம்.

வடிவத்தை காண்பவன் உண்மையானவன். உள்ளத்தில் உணருபவன் பக்திமான். பரவசத்தில் அடையாளம் காண்பவன் மனிதன். மனிதனுக்குள் உள்ள அந்த இறைவனை அடையாளம் காணும் காலமாக இக்காலம் இருக்கும் என தீர்க்கதரிசனங்கள் மெய்பட கூறுகின்றன.

அந்த இறைவனை அடையாளம் காண நாம் அனைவரும் உண்மையாக காத்திருப்போம். அப்பொழுது உண்மைகள் உறங்காது அது ஆகாயத்தில் ஒளி வீசும் சூரியனை போன்று ஒருநாள் நமக்கு வெளிச்சமிட்டு அடையாளப் படுத்தும் அதுவரை நாம் காத்திருப்போம். சத்தியம் வென்று “சத்திய யுகத்தை“ படைக்கும் பொழுது நாம் அனைவரும் புதியவர்களாக மாறி இருப்போம். இதுவே உண்மை.

குறிப்பு : இந்த வருங்கால தீர்க்க தரிசனத்தில் வெளிப்படுத்தப்படும் தேதிகள் மற்றும் வருடங்களை மட்டும் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இது இறைவனின் நீயாத்தீர்ப்புகளின் படியே அமையும், ஆனால் செய்திக் குறிப்புகள் அனைத்துமே நடைபெறும்.

மேலும் இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல.

அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும். இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும். அன்று உறங்கும் உண்மைகள் வெளிப்படும்...

போட்ரா விசில என் வீரத் தமிழச்சிகளுக்கு...


தண்ணீர் பிரச்சனையை தீர்த்த நிர்வாகத்திற்க்கு நன்றி...


03 - 04 - 2018 இன்று குன்னத்தில் குழாயில் தண்ணீர் வருகிறது மிக்க மகிழ்ச்சி.

எங்கள் கோரிக்கையை ஏற்று தண்ணீர் வழங்கிய சம்மந்தப்பட்ட துறை நிர்வாகத்துக்கு நன்றி.

அன்புடன்
உங்களில் ஒருவன்
வெண்மணி வரதராஜன்
சமூக ஆர்வலர்
பெரம்பலூர் மாவட்டம்...

அதிமுக காட்டியும் கொடுக்குது.. கூட்டியும் கொடுக்குது.. அப்படி தானே பாஸ்...


காலையில் பெட்ரோல் விலையை கண்டு அதிர்ச்சி அடைந்த காமன் மேன் தற்போது நாட்டை ஆளும் பிரதமர் பாஜக மோடிக்கு...


ஆயில் நிறுவனங்கள் தான் விலையை நிர்ணயிக்கின்றது என யாரேனும் முட்டுக் கொடுத்தால் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாஜக எதிர்கட்சியாக இருந்த போது போராட்டங்கள் நடத்தியது ஏன் என்ற கேள்விக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

- காமன் மேன்...

குறிப்பு : இதற்கு முட்டுக் கொடுப்பவர்கள் இதில் இடம் பெற்றுள்ள புள்ளி விபரங்களில் (சென்னை விலை) தவறு இருப்பின் சுட்டிக்காட்டலாம்...

வைகோ நாயுடுவின் மாமா வேலை ஆரம்பம்...


காவிரிக்காக தமிழர்கள் ஒன்று கூடி விடக்கூடாதுனு.. சாதி திராவிடம் தன் வேலையை ஆரம்பித்து விட்டது தமிழா... உசாரு...

ஸ்டெர்லைட் ஆலைக்காக இன்று தூத்துக்குடி துறைமுகத்தில் MIV LA TONDA 1373 என்ற கப்பலில் 32,850டன் காப்பர் மூலப்பொருள்...


எங்க அடிச்சா மத்திய அரசு பார்க்குமோ அங்கே அடித்த நம் சிங்கங்கள்...


இன்று திருச்சி ஏர்போட் வாயிலில் காவிரி மேலாண்மை அமைக்க வழியுறுத்தி போராட்டம்...

இவர்களா தேசதுரோகி.. எச்ச ராஜாக்கள் வயிறு எரிந்து சாகுங்கள்.. நம் ஒற்றுமை ஓங்கட்டும்...

நாம் ஒன்றுபடும் நேரத்தில்... எவன் பிரிவினை செய்தாலும் அவனை கருவறுப்போம்...


இன்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு MV LA Tonda 1373 என்ற கப்பல் 32,850 டன் எடை காப்பர் Concentrate இறக்குமதி செய்ய இருக்கிறது...


இது அனுமதி காலம் முடிந்த ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு தான் வந்து இறங்குவதாகவும் , துறைமுகத்திற்கு சொந்தமான Warehouse ல் இறக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இது சட்டப்படி தப்பு ஆபிஸர்...

அடக்குமுறை என்றும் எங்களை அடக்கி விடாது, வீறுகொண்டு எழுவோம்...


தம்பி இளம்போராளி அருண் ஸ்டெர்லைட் போராட்டத்தில் முக்கிய பங்காற்றி வருகிறான்...

சட்டம் அனைவருக்கும் சமம் தானே நீதித்துறையே...


சூரியனில் இருந்து மின்சாரம் எடுத்தால் சூரியபகவான் கோபம் அடைவார் பாஜக MPஅசோக் சக்சேனா...


அட  மாட்டு மூத்திரம் குடிக்குறவனுக்கு எம்புட்டு அறிவு...

உனது பலவீனமே உன் எதிராளியின் அசுரபலம்...


மனோதிடம்...


மனிதனாகப் பிறந்துவிட்ட நம்மை முன்னேற்றியே தீருவது என்று கச்சை கட்டிக் கொண்டு நிற்கிறார்கள் பல புத்தக வெளியீட்டாளர்கள்.

ஆண்டவனின் திருவடியை அடைய அறுபது சுலப வழிகள் என்பது முதல் இடது கால் சுண்டு விரலின் நகத்தை இடது கையால் வெட்டுவது எப்படி என்பது வரையில் சகலவிதமான தந்திரங்களையும் சொல்லித் தரும் புத்தகங்கள் ஏராளமாக வருகின்றன.

கடைப் பிடிக்கிறோமோ இல்லையோ சுவாரஸ்யமாகப் படிக்க முடிகிறது.

இன்னொரு உபயோகம் என்னவென்றால் அந்தக் கஷ்டம் இந்தக் கஷ்டம் என்று நம்மிடம் வந்து புலம்புகிற பேர்வழிகளிடம் 'இந்தப் புத்தகத்தைப் படியுங்கள் உங்கள் கவலைகள் யாவும் தீரும்' என்று கூறிக் கொடுத்தனுப்பலாம். பிறகு அவர்கள் உங்களிடம் வரவே மாட்டார்கள்.

ஆனால் அடிப்படையில் மனோதிடம், மனோதிடம் என்கிறார்களே அது மட்டும் இருந்துவிட்டால் எந்தப் புத்தகமும் தேவையில்லை.

சிகரெட் பழக்கத்தை நிறுத்துவதற்கான வழிமுறைகளைப் பற்றி விகடன் பிரசுரம் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறது. அழகான அச்சு. கவர்ச்சியான வடிவமைப்பு. பீட்டர் க்ராஸ் என்பவரும் க்ளைவ் ஹாப்வுட் என்பவரும் இணைந்து எழுதிய ஆங்கிலப் புத்தகத்தின் மொழி பெயர்ப்பு. 200 பக்கங்கள். விலை நூறு ரூபாய். 'புகைப்பதை நிறுத்துவோம்' என்ற இந்தப் புத்தகத்தில் சின்னதும் பெரிதுமாகப் பல விஷயங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

என் நண்பரொருவர் நிறைய சிகரெட் பிடிப்பவர். அவரது மனைவியிடம் இதைக் கொடுத்து 'உங்கள் கணவரிடம் கொடுங்கள்' என்றேன். 'இதைப் போல நூறு புத்தகங்களை வாங்கித் தந்து விட்டேன். அவரைத் திருத்த முடியவில்லை' என்றார் அலுப்புடன்.

எந்த நல்ல காரியமானாலும் முதலில் ஆசமனம் செய்ய வேண்டுமென்று பெரியவர்கள் சொல்வார்கள். (ஆசனம் செய்வது என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள அதற்கான புத்தகத்தைப் படியுங்கள்.) மனோதிடம் பெறுவதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன.

பசியெடுத்தால் உடனே சாப்பிட உட்காராதீர்கள். ஒரு மணி நேரம் தள்ளிப் போடுங்கள். ஒரு கடினமான வேலையை செய்து கொண்டிருக்கும் போது கைக்கருகே உள்ள தினசரி 'வேளச்சேரியில் இரட்டைக் கொலை' என்று கொட்டை எழுத்தில் பேப்பரை எடுக்காதீர்கள். இப்படியே செய்து வந்தால் எடுத்துக் கொண்ட வேலையை முடிப்பதில் முனைப்பு ஏற்படும்.

உங்கள் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் கவனமாக இருங்கள். உங்கள் அம்மாவிடம் சொல்வதற்கு வெட்கப்படும் எந்தக் காரியத்தையும் செய்யாதீர்கள்.

தூக்கத்தைக் குறையுங்கள். காலையில் எழுந்தவுடன் அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகள் என்ன. அவற்றை எப்படி செய்ய போகிறோம் என்று சிந்தியுங்கள். மென்மையான இசையைக் கேளுங்கள். கண்ணாடி முன் நின்று ஐந்து நிமிடங்கள் வாய்விட்டு சிரியுங்கள். நாலு வயதுக் குழந்தை ஒரு நாளைக்கு 500 தடவைகள் சிரிக்கிறதென்று கணக்கிட்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தை மனம் உங்களுக்கு இருக்க வேண்டும்.

நடைப் பயிற்சியின் போது, எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறோம் என்பதை எண்ணிக் கொண்டே நடங்கள். மன ஒருமைப்பாட்டுக்கு இது மிகவும் உதவும்.

இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உபவாசம் இருங்கள். பழ ரசத்தை மட்டுமே அருந்துங்கள் அல்லது பழங்களை சாப்பிடுங்கள்.

நாளொன்றுக்கு குறைந்த பட்சம் பத்து டம்ளர்கள் தண்ணீரைக் குடியுங்கள்.

இப்படி செய்யலாமா அப்படி செய்யலாமா என்ற பிரச்னை ஏற்படும்போது இரண்டில் எது கடினமானதோ அதை செய்யுங்கள்.

ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவருடைய பெயரை அடிக்கடி சொல்லுங்கள். 'நான் என்ன சொல்கிறேன் என்றால், மிஸ்டர் நாராயணசாமி', நீங்கள் சொல்வது புரிகிறது மிஸ்டர் தாமஸ்' என்பது போலப் பேசினால் உறவு பலப்படுகிறது. எந்த மனிதருக்கும் அவருடைய பெயர் இனிய சங்கீதம்.

செய்யப் பிடிக்காத இரண்டு வேலைகளை ஒவ்வொரு நாளும் செய்யுங்கள். புத்தக அலமாரியை சுத்தம் செய்வது, உறவினருக்குக் கடிதம் எழுதுவது, செடிக்குத் தண்ணீர் ஊற்றுவது, பத்திரிக்கைகளைத் தேதி வாரியாக அடுக்கி வைப்பது இப்படி ஏதாவது இரண்டு வேலைகளை செய்து முடியுங்கள்.

அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு எழுந்திருக்க வேண்டுமானால் அதற்கு அலாரம் தேவையில்லை. உங்களுக்குள்ளேயே ஒரு அலாரம் இருக்கிறது. படுப்பதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன், வசதியான நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்கள் கைகளை முழங்காலின் மீது மேலோடு வைத்துக் கொண்டு கண்ணை மூடிக் கொள்ளுங்கள். 'நாளைக் காலையில் ஐந்து மணிக்கு நான் புத்துணர்வுடன், உற்ச்சாகத்துடன், சுறுசுறுப்புடன் எழுந்திருப்பேன்' என்று இருபது முறைகள் சொல்லுங்கள். மறுநாள் காலை தானென்று ஐந்து மணிக்கு எழுந்து கொள்வீர்கள்.

எழுந்ததும் மூன்று மந்திரங்களை சொல்லுங்கள்...

இன்று நான் பிறரிடம் பரிவு காட்டுவேன். இன்று நான் பிறருக்கு உதவி செய்வேன். இன்று நான் கருணையுடன் நடந்து கொள்வேன்...

பாஜக மோடியின் தமிழக பயணம் ரத்து...


நான் ராஜினாமா கடிதம் கொடுக்கவே இல்லை , ஒபிஎஸ் ம் இபிஎஸ் ம் என்னை போனில் தொடர்பு கொண்டு கொடுக்க வேண்டாம் என்றனர், என் தலைவர்கள் போனில் தொடர்பு கொண்டதால் யோசிக்கிறேன் - பல்டி அடித்த அதிமுக எம்பி முத்துக்கருப்பன்...


அவருடடை தனிப்பிட்ட முடிவு எனக் கூறிய அதிமுக தலைமை ராஜனாமா கொடுக்க சென்றவரை தடுத்தது ஏன் ?

யார் என்ன சொன்னாலும் கொடுத்துடுவேன் எனக் கூறிய எம்பி, என் தலைவர்கள் சொல்லிட்டாங்க என பின் வாங்குவதன் பின்னணி என்ன என சமூக வலைதளத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றது...

காவிரி.. அயர்லாந்தில் தமிழர்கள் போராட்டம்...