03/04/2018

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு...


சிதிலமடைந்த சாலை செப்பனிடப்படாததால் பேருந்து வசதி இன்றி தவிக்கும் கிராமம்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகில் உள்ள சோலைசேரி கிராமத்தில் சாலை சிதிலமடைந்ததால், பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு கடந்த ஓராண்டாக, பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர்கள் பேருந்துக்காக சுமார் 2 கி.மீ தூரம் நடந்து செல்லும் அவலம்.

சாலையை செப்பனிடாமல் மெத்தனம் காட்டும் பஞ்சாயத்து அதிகாரிகள்...

பாஜக மோடியின் தமிழக பயணம் ரத்து...


பிரித்தானியா UK தமிழர்கள்...


1960 தொடக்கமே கல்வி தொழில் வாய்புகளை நாடி தமிழர்கள் ஐக்கிய இராச்சியம் அல்லது பிரட்னுக்கு புலம் பெயர்ந்தார்கள்.

1983 இலங்கை கலவரங்களுக்கு பின்னர் கூடிய தொகையினர் பிரட்டனுக்கு புலம் பெயர்ந்தார்கள்.

இன்று ஏறத்தாழ 250 000 - 300 000 தமிழர்கள் பிரிட்டனில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும் பாலனவர்கள் இலங்கைத் தமிழர்கள் ஆவார்...

இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே...


நாங்கள் வாங்கி வந்த சாபங்கள்...


உங்களுக்கும் சேர்த்துதான் போராடுறோம் - தடுத்த போலீஸ்காரர்களால் பொங்கிய விவசாயிகள்...


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து, திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் கைதுசெய்யப்பட்டனர்.
மத்திய அரசின் அலட்சியத்தால், தமிழக மக்களின் காவிரி உரிமை முடக்கப்பட்டிருக்கிறது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், இன்னும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது தமிழர்களை வஞ்சிக்கும் செயலாகும். இதைக் கண்டித்தும், உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி அமைப்பினர் சார்பாக திருப்பூரில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.

காலை 11 மணி அளவில், திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள குமரன் நினைவகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள், கூட்டமாக ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். அப்போது, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றபோது, இரு தரப்புக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கூச்சலிட்ட விவசாயிகள், "சார்... எங்களைப் போராட்டம் நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துறீங்க... உங்களுக்கும் சேர்த்துதானே போராடிக்கிட்டிருக்கோம். போலீஸ்காரங்களுக்கு எல்லாம் இனி குடிக்க தண்ணீர் வேண்டாமா என்றவாறு முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து, ரயில் மறியல் செய்ய முயன்ற அனைத்து விவசாயிகளும் கைதுசெய்யப்பட்டு, அருகில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்...

அதிகமுறை எச்சரித்த காரணம் இதனால் தான் கைமீறி செல்லாமல் செயலாற்றுங்கள் நமக்கான அவகாசத்தில் ஒற்றுமையை பலப்படுத்தி விழிப்புணர்வு கொடுங்கள்...


இயற்கை வாழ்வியல்முறை...


மனித குலத்தின் பொது எதிரி...

மனித குலத்தின் ஒரே பொது எதிரி நெகிழிதான். அதை பிளாஸ்டிக் என்று சென்னால் தான் புரியும்.

ஒருநாள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பற்றி விரிவாகப் பேசிவிட்டு, அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சொன்னேன். அது எப்படி முடியும் என்று எதிர் கேள்வி கேட்டான் ஒரு மாணவன். பிளாஸ்டிக் குழாய் இல்லாவிட்டால் குளியலறையில் தண்ணீர் வராது என்றான். அவன் சொல்வது உண்மைதான்.

இன்று இயந்திரங்களில் ப்ளாஸ்டிக் பாகங்கள் தவிர்க்க இயலாதவை. மருத்துவம் சார்ந்த கருவிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க முடியாதது. ஆனால் எடுத்ததற்கெல்லாம் பிளாஸ்டிக் வேண்டுமா?

சென்ற வாரம் ஒரு திருமண விருந்திற்குப் போயிருந்தேன். வாழை இலை போட்டு உணவைப் பரிமாறினார்கள். கூர்ந்து பார்த்தபோது தெரிந்தது. அது ஒரு பிளாஸ்டிக் வாழை இலை! அசப்பில் வாழை இலையைப் போலவே இருந்தது. சாம்பார் சாதத்தோடு எழுந்து வந்துவிட்டேன். அங்கு பந்தலில் தொங்கிய மாவிலைத் தோரணங்களைப் பார்த்தேன். மாவிலைகள் அனைத்தும் பிளாஸ்டிக்! அங்கு வரிசையாக வைக்கப்பட்டிருந்த தொட்டிகள், தொட்டியில் இருந்த செடிகள் அனைத்தும் பிளாஸ்டிக்!  வரவேற்பு மேசைமீதிருந்த தாம்பாளத்தில் இருந்த பழங்கள் எல்லாம் பிளாஸ்டிக்! அவர்கள் கொடுத்தது பாலித்தின் தாம்பூலப்பை! அந்தப் பையைத் திறந்து பார்த்தால் அதில் இருந்தது ஒரு பிளாஸ்டிக் டிஃபின் பாக்ஸ். நல்ல வேளை அதில் இருந்த பாக்கும் வெற்றிலையும் பிளாஸ்டிக்கால் ஆனவை அல்ல!

இது என்ன கொடுமை...

செருப்பு பயன் உடையதுதான். அதற்காக பூஜை அறையிலும் காலில் போட்டுக் கொள்ள வேண்டுமா என்ன? சற்றே சிந்திக்க வேண்டாமா?

தன்னையே அழிக்கும் வல்லமையுடையன என்பதை அறியாமல் பல பொருள்களை மனிதன் கண்டுபிடித்துவிட்டான். அவற்றுள் ஒன்று இந்த பிளாஸ்டிக். PVC என்றும் polythene என்றும் செல்லப் பெயரிட்டு அழைத்தான்.(PVC-Poly Vinyl Chloride) அது அவனைக் கொல்ல வந்த யமன் என்பதை எப்போது உணரப் போகிறானோ?

பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யும் போதும், பழைய பிளாஸ்டிக் பொருள்களை எரிக்கும் போதும் டயாக்சின் (dioxin) என்னும் உயிர்க்கொல்லி வாயு வெளியாகிறது. இந்த நச்சு வாயுவை சுவாசிக்கும் மனிதனுக்கு வரும் நோய்கள் எண்ணற்றவை. அவற்றுள் சில : புற்றுநோய்,சர்க்கரை நோய், தோல் நோய், கல்லீரல் அழுகல் நோய் மற்றும் மலட்டுத் தன்மை உருவாதல்.

1997 ஆம் ஆண்டு நம் நாட்டில் சராசரியாக ஒரு மனிதனின் பிளாஸ்டிக் நுகர்வு ஆண்டிற்கு 1.7கிலோ என்று இருந்தது. ஆனால் தற்போது ஒரு மனிதனின் பிளாஸ்டிக் நுகர்வு 10.5 கிலோ என உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் 1,70.000 டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விளைவாக வளி மண்டலத்தில் டயாக்சின் வாயுவின் அளவு அதிகமாகிக் கொண்டே உள்ளது.

ஒரு மனிதன் இந்த டயாக்சின் வாயுவை  குண்டூசி தலையின் எடைக்குமேல் முகர்ந்தால் இறக்க நேரிடும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதைப்பற்றி   யார் கவலைப்படுகிறார்கள்?  வரும் முன் காக்கும் மனப்பாங்கு நம்மிடத்தில் மிகவும் குறைவு.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்..

என்று வள்ளுவர் கூறுவது செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் உள்ளது.

மண்ணில் மக்குவதற்கு பிளாஸ்டிக் பொருள்கள் எடுத்துக் கொள்ளும் காலம் 500 முதல் 1000 ஆண்டுகள் எனக் கணக்கிட்டுள்ளனர். இதை எளிதில் மக்கச் செய்யும் மகத்துவத்தை யாரேனும் கண்டு பிடித்தால் அவருக்கு இரண்டு நோபல் பரிசுகளை ஒரே சமயத்தில் கொடுக்கலாம்.

அதுவரை நாம் என்ன செய்யலாம்?

01. பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகத்தைத் தவிர்ப்போம் அல்லது குறைப்போம்.

02. பிளாஸ்டிக் பொருள்களை உபயோகித்தபின் கண்ட இடங்களில் போடாமல், சேர்த்து வைத்து மறு சுழற்சிக்கு அனுப்புவோம்.

03. பாலித்தின் பைகளில் பொருள்கள் வாங்குவதைத் தவிர்ப்போம். பழைய காலம் மாதிரியே மீண்டும் காகிதப் பைகளில், துணிப்பைகளில் பொருள்களை வாங்குவோம். (மஞ்சள் துணிப்பை கலாச்சாரம் நம் கொங்கு மண்ணுக்கே உரியதுதானே?)

04. பிளாஸ்டிக் பொருள்களின் தீமைகளை உணர்வோம், உணர்த்துவோம்.

ஒரு வீட்டிற்கு விருந்தினராகச் செல்லும் போது அந்த வீட்டை அலங்கோலப் படுத்தலாமா?  சிறிது காலம் இந்த மண்ணில் விருந்தினராகத் தங்கியுள்ள நாம் இம் மண்ணை மாசுபடுத்த நமக்கு எந்த உரிமையும் இல்லை. சிந்திப்போமா

நாம் மாறாமல் இங்கு எதுவும் மாறாது
மாறுவோம் மாற்றுவோம்..

நன்றி வணக்கம் பெருசங்கர்
ஈரோடு  மாவட்டம்...

அடிதூள் தரமான சம்பவம் தோழர்களே...


இனியாது சரியான ஆட்ச்சியாளரை தேர்ந்தெடுப்போம்...


ஆட்ச்சியாளர்கள் சரியாக இருந்தால் பாலைவனம் சோலைவனமாகும்...

ஆட்ச்சியாளர் சரி இல்லையென்றால் சோலைவனமும் பாலை வனமாகும்...

உன் உரிமையை நீ களத்தில் இறங்கி போராடத போது , உனக்கு நீதி கிடைக்காது... ரௌத்திரம் பழகு...


அமானுஷ்யம் - தாமஸ் ஆல்வா எடிசனும் ஆவியுலக தொடர்பும்...



பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ஆவியுலக ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார்...

அது பற்றி அவர் ஒரு கருவியைக் கண்டு பிடித்திருந்ததாகவும், அதன் மூலம் ஆவிகளின் உதவிகளைப் பெற்று பல்வேறு கண்டு பிடிப்புகளை அவர் உலகிற்கு வழங்கியதாகவும் ஒரு கருத்துண்டு.

Electronic voice phenomenon என்ற கருவி மூலம் ஆவிகளின் குரல்களை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். சிலர் புதிய பல கருவிகள் மூலம் ஆவிகளை புகைப்படமெடுத்தும் உள்ளனர்.

மாத்யூ மானிங் என்ற ஆய்வாளர் ஹிட்லரின் ஆவியுடன் பேச முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றுள்ளார்.

அதுபோன்று ராவ்டிவ் என்ற ஆய்வாளரின் நண்பரான ரேமாண்ட் கேஸ் என்பவரும் ஆவி உலக ஆய்வில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். ஒருநாள் அவர் ஆவிகளின் குரலைப் பதிவு செய்ய முனைந்திருந்தார். அவர் காதுகளுக்கு ஒன்றுமே கேட்கவில்லை. பின் பிளேயரில் போட்டுக் கேட்ட போது அதில் ஆவிகளின் குரல் பதிவாகியிருப்பதை உணர்ந்தார். திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டவர், அதிர்ச்சியடைந்தார்.

காரணம், ‘அதில் ராவ்டிவ் தன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்ன்’ என்ற ஒலி பதிவாகி இருந்தது.

அப்போது ராவ்டிவ் நல்ல உடல்நிலையில் இருந்தார். மரணத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால் ரேமாண்ட் அதைப் பெரிதாக எண்ணவில்லை.

ஆனால் அனைவரும் அதிர்ச்சியடையும் படி திடீரென ஒருநாள் ராவ்டிவ் திடீரென மரண மடைந்தார்.

அது ஆவியின் குரல் தான் என்றும், அது முன்னெச்சரிக்கை செய்யவே வந்ததும் என்றும் பின்னர் அவர் உணர்ந்து கொண்டார்.

இது ஆய்வாளர்களால் ஆச்சரியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இது போன்று பல அனுபவங்கள் பலருக்கு ஏற்பட்டுள்ளன. ஆனாலும் ஆவியுலக மர்மங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது...

தமிழா விழிப்போடு செயல்படு...


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய அரசின் அலுவலகமான சாஸ்திரி பவன் இன்று மே பதினேழு இயக்கத்தினால் முற்றுகையிடப்பட்டது...


இந்த போராட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கழக தோழர்களும் பங்கேற்றனர்.

கர்நாடகா அணை கட்டுவதற்கு முன்பு வழங்கப்பட்ட 370 டி.எம்.சியே தமிழருக்கான நீதி என்று முழக்கமிட்டனர். உச்சநீதிமன்ற 177.25டி.எம்.சி வரை குறைத்து தமிழர்களுக்கு அநீதி இழைத்திருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர்.

காவிரி தண்ணீரை தர மறுக்கும் இந்திய அரசுக்கு தமிழனின் வரிப்பணம் எதற்கு என்றும், தமிழர்கள் வரிகொடா இயக்கம் நடத்துவோம் என்றும் தெரிவித்தனர்.

போராட்டத்தின் போது மோடியின் உருவப்படம் கொளுத்தப்பட்டது. சாஸ்திரி பவன் முன்பாக சாலையில் அமர்ந்து தோழர்கள் போராட்டத்தை நடத்தினர். தோழர்களை இழுத்துச் சென்று கைது செய்தது.

போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தோழர்கள் தற்போது நுங்கம்பாக்கம் அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்...


ஏப்ரல் 1 கொண்டாட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வீட்டின் மீது சாணியை கரைத்து ஊற்றிய இளைஞர் கைது...


இளைஞர்களே அலுவலகத்தில் அமர்ந்து செய்த இணைய புரட்சி போதும், கல்லூரி மாணவிகளே மாணவர்களே உள்ளிருப்பு போராட்டம் வேண்டாம் வீதிக்கு வாருங்கள் உலகிற்கு காட்டுங்கள்...


நிறைய பேருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை , தெரிந்தால் அவர்களும் கரம் கோர்ப்பார்கள்...

அரசாங்கத்தை எதிர்த்து பேசுவது என்பது பெரிய விடயமில்லை...


ஏனெனில் இதுவரை அரசாங்கத்தை எதிர்த்து பேசிய பிரபலங்கள் எந்தவித பாதிப்பும் அடைந்தது இல்லை..

அரசாங்கத்தை எதிர்த்தால் சிறந்த அரசியல்வாதி என இங்கு நம்பவைக்கப் படுகிறது..

அரசாங்கம் தான் திட்டங்களை நிறைவேற்றுகிறது, ஆனால் வல்லாதிக்க சக்திகள் தான் அந்த நிறுவனங்களின் பின்புலம்..

அனைத்து பிரபலங்களுக்கும் இல்லை, நான் அரசியல்வாதி என கூறுபவர்களுக்கு மட்டுமே இந்த உவனின் கேள்வி...

கருப்பையும், சிகப்பையும் பார்த்தாலே வயிறு எரிகிறது..


வந்தவரெல்லாம் வாழ வேண்டும், தமிழன் ஓட்டைசட்டியை, வைத்துக் கொண்டு அரசியல் ஆட்சி அதிகாரத்தை விட்டு கொடுத்து விட்டு கையேந்தி நிற்க வேண்டும்..

என்ற நிலையில் தான் தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கிறது...

இது உங்களுக்கு பெருமையாடா...


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி...



ஏப்ரல் 3 விக்கிரமராஜா கடையடைப்பு..

ஏப்ரல் 5 தி.மு.க கடையடைப்பு..

ஏப்ரல் 11 பா.ம.க & வெள்ளையன் கடையடைப்பு..

என்னா ஒற்றுமை..

மொதல்ல ஒண்ணா சேந்து கைதட்டுங்கடா அப்ரசண்டிகளா...

பிராமணர்கள் மாட்டுக்கறி உண்டதற்கான சான்றுகள் இதோ...


இந்த கன்னட ஈ.வே.ரா நாய்க்கர் தான் தமிழ்க்காகவும் தமிழனுக்காகவும் பாடுபட்டார்...


அட சொன்னால் நம்புங்கள்...

இந்தியாவுக்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும் அல்லது வணிகத்திற்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்சிக்க வேண்டுமேயன்றி வேறு மொழியைப் பற்றி எண்ணுவது முட்டாள்தனமே, சூழ்ச்சியேதான் ஆகும்.

(குடியரசு 20.01.1920)..

காலையில் நான் இம்மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், தமிழைவிட ஆங்கிலத்தைக் கட்டாய பாடமாக்கினால், அதற்கு வாக்களிப்பேன் என்று கூறினேன்.

(பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் III-ம் தொகுதி)...

ஜனநாயகம் என்பது நாடக மேடை...


உடல் மொழி...

                         
1.மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டுகிறது.

2.மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.

3.மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.

4.நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.

5.நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.

6.பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.

7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.

8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.

9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.

10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்...

தமிழகத்தை அழிப்பதே பாஜக மோடியின் குறிக்கோள்... விழித்துக்கொள் தமிழா...


முடிவெடுங்கள்...


அணு சக்தியைவிட ஆற்றல் வாய்ந்தது, முடிவெடுக்கும் திறமை..

சரியான நேரத்தில், மிகச் சரியாக எடுக்கப்படும் முடிவுகள் தான் வெற்றியாளர்களின் இரகசியம் எனச் சொல்லலாம்.

ஒரு மாணவன் தான் எந்தத் துறையில் செல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கிறானோ அந்தத் துறையில் கால் பதித்தால் அவனால் முத்திரை பதிக்க முடியும்.

கடவுள் என்கின்ற கலாச்சாரத்தை மனிதம், மனித நேயம் என்ற வெளி நாட்டினரின் கருத்தை மாற்றி சாதனை தேசம் இந்தியா என்று பதிவு செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்த ஒரு நரேந்திரன் தான் சுவாமி விவேகானந்தர் என்ற தீர்க்க தரிசனத்தை பெற முடிந்தது.

மிகக் கடுமையான வறுமை நிலையிலும்கூட, பொதுவுடைமைக் கொள்கையிலிருந்து விடுபடுவதில்லை என்று எடுக்கப்பட்ட முடிவுதான் ‘மூலதனம்’ என்கின்ற அற்புதத்தை படைக்க முடிந்தது. தன்னுடைய உழைப்பு தான் மூலதனம் என்று தெரிந்ததாலோ என்னவோ காரல் மார்க்ஸ் இன்னும் கூட நற்செய்திகளை நமக்குத் தந்து கொண்டிருக்கிறார்.

“உழைப்புதான், எல்லாச் செல்வங்களுக்கும் மதிப்புகளுக்கும் மூலம்” – காரல் மார்க்ஸின் இந்த வரிகள் பல சிந்தனைகளின் முடிவு வாக்கியம் என்றும் கூடச் சொல்லலாம்.

உலகிடம் இருந்து பாடம் கற்றுக் கொண்டவர்கள், கற்றுக் கொள்கின்றவர்கள் சராசரி மனிதர்கள். எந்த மனிதரிடமிருந்து உலகம் பாடங்களைக் கற்றுக் கொள்கின்றதோ அவர் சாதனை மனிதர்.

நம்முடைய எதிர்பார்ப்புகள் வேண்டுமானால் நமக்கு ஏமாற்றங்களைத் தரலாம். ஆனால் காத்திருப்புகள் எந்தக் காலத்திலும் கவலை தருவதில்லை.

“காத்திருக்கப் போகிறேன்” என்ற முடிவும்கூட சரி என்று தான் சொல்ல வேண்டும். சரியான சமயத்திற்காகக் காத்திருந்த நாராயணமூர்த்திதான் இன்று கணினித் துறையில் புரட்சி செய்த இன்போஸிஸ் நாராயணமூர்த்தி.

நம்மிடம் இருக்கின்ற சில வேண்டாதவற்றை விட்டுவிட்டால் போதும், வெற்றி நம்மைத் தேடி வரும்.

நம்மிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மை என்கிற இன்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ், தான் என்கின்ற ஆணவம் சேர்ந்த சுப்பீரியாரிடி காம்ப்ளக்ஸ் விட்டு விட்டாலே போதும். அசையா சொத்தாக ஒரு மல்ட்டி டிரேடிங் காம்ப்ளக்ஸ் கட்டிவிடலாம்.

பலருக்கு பிரச்னையே “நம்ம பாவம்” என்கின்ற ஒரு எண்ணம். நம் மீது நாம் கொள்கின்ற சுயபச்சாதாபம் விட்டொழிக்கின்ற நாளே நமக்குத் திருநாளாகும்.

தான் (சேர்ந்த) சார்ந்த தொழிலில் திறமையுடையவனாக இருப்பது என்பது வெற்றிக்கான அடிப்படைத் தகுதி ஆகும். எந்தச் செயலில் நம் திறமை வெளிப்படுகிறதோ அந்தச் செயல்தான் நமக்குத் தொழிலாக மாறி விடுகிறது.

ஒரு கோட்டைக்குத் தலைவனாக இருப்பதைக் காட்டிலும் சிறந்தது, செயல், தொழில் இரண்டிலும் திறமையாக இருப்பது.

நம் உழைப்பும் நேர்மையும் வெற்றியைத் தருகின்றது என்று சொன்னால், அந்த வெற்றி நிலைத்திருப்பது நம்முடைய தீர்க்கமான முடிவுகள் எனலாம்.

21வது குழந்தையாக பிறந்தவர் வில்மா குடால்ப். 4 வயதில் போலியோ பாதிப்பு. கட்டை வைத்து நடந்த குழந்தை எடுத்த முடிவுதான் ஓட்டப் பந்தய வீராங்கனையாக மாறுவது என்று தாங்கு கட்டையை தூர எறிந்துவிட்டு ஓடப் பழகினாள். கால்கள் வேகங்கொண்ட பறவையாக மாறியது. தொடர்ந்து ஒலிம்பிக்கில் 3 தங்கப் பதக்கங்களைப் பெற்றாள். வென்றது அவளின் மனம் தான்.

சரியாக செல்கின்ற வாழ்வு, வெல்கின்ற வாழ்வாக மாற வேண்டும் என்றால், மிகுந்த உழைப்பு, மிகுந்த நேர்மை, சரியாக முடிவெடுக்கும் திறன் இந்த மூன்றும் 33.5% x 3 என்று இருக்குமேயானால், வெற்றியின் சதம் 100.5% ஆக இருக்கும்.

வெற்றி என்பது நமது வாடிக்கைகளாக இருந்தால் முயற்சிகளும் பயிற்சிகளும் நமக்கு வேடிக்கைகளாகவும், பழக்கங்களாகவும் மாறிவிடும்.

100 முறை சிந்தனை செய்யுங்கள். ஒரே ஒரு முறை மட்டுமே முடிவெடுங்கள்...

உலகம் முழுவதும் நம் பிரச்சினை தெரிய வேண்டுமா...


கரூர் மாவட்ட ஆட்சியர் மாண்புமிகு த.அன்பழகன்.இ.அ.ப.,அவர்கள்...


வெகுநாட்களாக உதவித்தொகைக்காக விண்ணபித்து கிடைக்காத நிலையில் உள்ள கரூர்வட்டம் சின்ம்ம நாயக்கன் பட்டியை சேர்ந்த ராக்கம்மாள் என்ற  மூதாட்டிக்கு இல்லம் தேடி , விசாரணை மேற்க் கொண்டது மட்டுமல்ல,

மூதாட்டியின் ஆணைக்கிணங்க உணவு அருந்தி பின் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.

வாழ்த்துக்கள் ஐயா..
உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்...

கார்ப்பரேட் தந்திரம்.. பதஞ்சலியும் இப்படி தான்.. பிரிட்டானியாவும் இப்படி தான்...


பக்தி இயக்கக் காலம் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி - 4...


மாணிக்கவாசகர்… இத்தனை வருடங்களுக்குப் பின் நாம் இப்பொழுது அவரைப் பற்றிப் பார்ப்பதற்கு இரண்டுக் காரணங்கள் உள்ளன.

ஒன்று… இவர் வாழ்ந்தக் காலம்.
இரண்டு… இவர் எழுதிய வரிகள்.

முதலில் இவர் வாழ்ந்தக் காலத்தினைப் பற்றிப் பார்ப்போம்.

இவர் காலம் ‘பக்தி இயக்கக்’ காலம்.

பக்தி இயக்கமா அப்படினா? என்கின்றீர்களா. சொல்கிறேன்.

சென்றப் பதிவில் இந்தியா முழுவதும் எவ்வாறு சமணமும் பௌத்தமும் பரவி இருந்தன என்பதனைப் பார்த்தோம்.

கடவுள் இல்லை என்றக் கோட்பாடு தமிழகத்திலும் பரவி இருந்தது.

சைவ வைணவச் சமயங்கள் என்ன ஆகுமோ என்றுப் பலரும் எண்ணிக் கொண்டு இருந்த நேரத்தில் தான் அந்தக் காலம் வந்தது.

திடீர் என்று சைவக் கருத்துக்கள் ஒரு எழுச்சியைக் கண்டன. கூடவே வைணவக் கருத்துக்களும்.

இறைவனின் திருவிளையாடல்கள் பற்றியச் செய்தி இங்கும் அங்குமாக கேட்க ஆரம்பித்தன.

இறை பக்தர்கள் ஊர் எங்கிலும் தோன்றத் தொடங்கினர்.
காரைக்கால் அம்மையார், மாணிக்க வாசகர், அப்பர், சுந்தரர், திருமூலர் போன்ற நாயன்மார்களும் ஒவ்வொருக் காலத்தில் தோன்றி சைவத்தினை வளர்க்க ஆரம்பித்தனர்.

அதைப் போலவே நம்மாழ்வார், பெரியாழ்வார் போன்ற ஆழ்வார்களும் வைணவத்தினை வளர்க்க ஆரம்பித்தனர்.

தத்துவக் கருத்துக்கள் வெள்ளம் போல் கரை புரண்டு ஓடின.

மன்னர்கள் மாறத் தொடங்கினர்.

“கடவுள் இல்லையா… எம்பிரானை உணர்ந்த பின் நான் எவ்வாறு ஐயா அவ்வாறு சொல்லுவேன்… அவனின் திருவிளையாடல்கள் உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?… அவனது செய்திகள் உங்கள் காதுகளில் கேட்கவில்லையா?… பின் எவ்வாறு ஐயா அவன் இல்லை என்கின்றீர்?”
என்று மன்னர்கள் கூற சமணமும் பௌத்தமும் பின் வாங்கத் தொடங்கின.

“உனக்கு தெரியுமா, சோழன் வைணவத்திற்கு மாறி விட்டாராம்… பாண்டியரும் சைவத்திற்கு மாறி விட்டாராம்…” என்று மக்களும் மாறத் தொடங்கினர்.

பக்தி இலக்கியங்கள் முன்பில்லா அளவிற்கு வளர்ச்சி அடைந்தன.

திருவாசகம், திருமந்திரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், தேவாரம் போன்ற நூற்கள் இறைவனை மக்களிடத்துக் கொண்டுப் போய் சேர்த்துக் கொண்டு இருந்தன.

கோவில்களில் தேவாரங்கள், திருவாசகப் பாடல்கள் பக்தியினைப் பறைசாட்டிக் கொண்டு இருந்தன.

மக்கள் இறைவனை உணர்ந்துக் கொண்டு இருந்தனர்.

இறைவன் உணர்த்திக் கொண்டு இருந்தான்.

அத்தனையும் நடந்தது தமிழில்…. தமிழ்நாட்டில்.

தமிழ்நாட்டில் எழுந்த இவ்எழுச்சி இந்தியா முழுவதும் பரவுகின்றது.
சமணமும் பௌத்தமும் இந்த எழுச்சியின் முன் நிற்க முடியாது கரைகின்றன.

இந்தியா மாறுகின்றது…

கடவுள் இல்லை என்ற நிலையில் இருந்து கடவுள் இருக்கின்றார் என்ற நிலைக்கு.

இந்தக் எழுச்சியின் காலம் தான் பக்தி இயக்கக் காலம் (கி.பி 7 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை).

இந்த எழுச்சியைப் பரப்பியது தான் ‘பக்தி இயக்கம்’.

அடடே, இவ்வளவு நடந்து இருக்கு ஆனா நமக்கு எதுவுமே தெரியலையே என்று எண்ணுகின்றீர்களா?

தவறில்லை. இது நமக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை தான்.

 ஏனெனில்,

சைவ வைணவ மதங்களின் வரலாற்றில் மிகவும் முக்கியப் பகுதியான இந்த பக்தி இயக்கக் காலம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.

இருட்டடிப்பா ஏன் என்றுக் கேட்பவர்களுக்கு…

ஏங்க நாங்க சமசுகிருதம் தான் இறைவன் மொழி அப்படின்னு சொல்லிக்கிட்டு இருக்கோம்…. அப்படி இருக்கும் போது ஏன் சைவ வைணவ சமயங்கள் சமசுகிருதத்தில் எழுச்சி பெறாமல் தமிழில் எழுச்சி பெற்றன அப்படின்னு நீங்க கேட்டா நாங்க என்னங்க விடை சொல்றது. கேள்வி கேட்குறது சுலபம்… விடை சொல்றது தான் கடினம்… புரிஞ்சிக்கோங்க..

வடநாட்டில் வடமொழியில் உருவான மதம் என்று சொல்லப்படும் ஒன்று ஏன் தமிழ்நாட்டில் அதுவும் தமிழ் மொழியில் எழுச்சிப் பெற வேண்டும் என்றக் கேள்விக்கு வடமொழியின் புகழினைப் பாடுபவர்களிடம் இருந்து விடை இல்லை என்பதே உண்மை.

நிற்க..

சரி… பக்தி இயக்கத்தினை கண்டாயிற்று.

கடவுள் இல்லை என்ற நிலைமை தமிழால் தமிழ் நாட்டில் கடவுள் இருக்கின்றார் என்ற நிலையாய் மாறிவிட்டது.

இப்பொழுது நாம் மாணிக்கவாசகரிடம் மீண்டும் செல்லலாம்.

அவர் சில வரிகளை கூறி இருக்கின்றார்.

அந்த வரிகள் நம் பயணத்திற்குரிய அடுத்தக் கதவினை திறக்கும் சாவிகள்.
பயணிப்போம்…

அடுத்த தலைமுறை தமிழர்கள் விழித்துக் கொண்டார்கள்...


பாம்பு இறைவி யும் அவளின் மகன்களும்...


Persius என்ற உரோமை கவிஞர் சொல்கிறார்..

இரு பாம்புகளை படமாக வரைந்தால் போதும், ஒரு இடம் புனிதமடையும்.

இந்த இரு பாம்புகளை மரத்தடியில் கண்ட நியாபகம் இருக்கா உங்களுக்கு, ஒரு வேலை இல்லை எனில், இந்த படத்தை பாருங்கள்..


இரு பாம்பு சரி , இது ஒரு புறம் இருக்கட்டும் நாம் பாம்பு இறைவி பற்றி பார்ப்போம், எனது தேடுதல் ஆங்கிலத்தில் இருப்பதால் முதலில் கிடைப்பது மேற்குலகினரால் ஆராயபட்ட பாம்பு இறைவி தான்.

இந்த பாம்பு இறைவி மக்களால் இயற்கை தாயாக வழிபடப்பட்டுள்ளாள்; இந்த இறைவியின் பிறப்பிடம் Crete . இது ஒரு மத்திய தரைக்கடல் பகுதி , தீவு. Crete என்பதிலிருந்து தான் Create என்ற சொல் வந்துள்ளது. இதற்கு உருவாக்கு என்று பொருள். இந்த தீவுடைய மற்றொரு சிறப்பு இது மூழ்கிபோன அட்லாண்டிக் கண்டத்தின் மீதம் உள்ள ஒரு தீவு; இது தான் மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் மேற்கத்திய நாகரிகத்தின் தாய் நிலம்.


33ம் நிலை Free Masonary, Manly P. Hall தனது நூலான Secret Teaching of All Ages ல் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

பாம்பு என்பது பிரபஞ்ச மீட்பரின் சின்னம் மற்றும் மாதிரி; அவரே ஞானத்தையும் , நன்மை தீமை அறியும் திறனையும் உருவாக்கி உலகை மீட்பவர்.


இவர் எந்த பாம்பை சொல்கிறார் என எல்லாருக்கும் புரியும் என நம்புறேன். படத்தை போட்ட பிறகுமா தெரியாது ?

ஆனால், இந்த பாம்பு - மரம் நம் உடலாகிய சிறிய பிரபஞ்சத்தில் வேற ஒன்றையும் குறிக்கிறது. அதை வேறு பதிவில் பார்க்கலாம்.


தாய் பாம்பு இறைவியை வழிபட்டோர் பாம்பின் மகன்கள் என அழைக்கபடுகின்றனர். (SONS OF SERPENT). இவர்களுக்கு வரலாற்றில் பல பெயர்கள், அதில் ஒன்று பினீசியர்.

இவர்களை எகிப்தியர்கள் கடலின் மக்கள் (Sea People) என அழைத்தார்கள். இவர்களின் பூர்வீகம் Crete என்பதால் Cretens எனவும் அழைக்கபடுகிறார்கள்.


பழங்கால பினீசியர்கள் விவிலியத்தில் வரும் உண்மையான் இசுராயேல் குலத்தின் வாரிசுகள், Manly P. Hall கருத்துப்படி.. பினீசிய எபிரேயர்களே, உயிர் எழுத்துக்கள் , வரிவடிவ எழுத்துரு, மந்திரம், கலைகள், அறிவியல், ஆயுதம் , சட்டம், ஏவல் வழியாக மக்கள் தொகை குறைத்தல், கப்பல் கட்டுதல், கடல் வழி பாதைகள் ஆகியவற்றின் முன்னோடிகள். சில ஆயிரம் ஆண்டுகள் கடலின் அரசர்களாக திகழ்ந்தவர்கள்.

மேலும், உலகம் முழுவதும் ஒற்றை மதத்தை உருவாக்கியவர்கள் பினீசியர்கள். அது தான் பாம்பு வழிபாடு. விவிலியத்தின் முதல் ஐந்து நூல்கள் இவர்களால் உருவாக்கபட்டது. இந்த பாம்பு இனத்தின் வெவ்வேறு நபர்கள் விவிலியத்தில் இறைவங்களாகவும் இறைவிகளாகவும் சாத்தான்களாவும் சொல்லப்படுகின்றனர்.


இனி அந்த பாம்பு இறைவியோட படத்தை பார்ப்போம்.

ஒரு பெண் கைகளில் இரண்டு பாம்புகளோடு இருக்கிறாள் அல்லது
ஒரு அண்டம் இரு விந்தணுகள்..


சரி பினீசியர் எல்லா நாட்டுலையும் பாம்பு இறைவி வழிபாட்ட கொண்டு வந்தது உண்மையா இருக்குமா ?

உண்மை மாதிரி தான் தெரியுது...

மகாபாரதம் பகுதி - 4...













சண்டைக்கான காரணம்... தமிழக நிலப்பரப்பில்ந நடந்த போர்..