10/01/2019

போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகர் சக்தி.. விரட்டிப் பிடித்த பொதுமக்கள்...


இயக்குநர் பி.வாசுவின் மகனும் நடிகருமான சக்தி, பிக்பாஸ் நிகழ்ச்சியில்  கலந்து கொண்டதன் மூலம் மிகப் பிரபலமடைந்தார்.

இவர் சென்னை, சூளைமேடு பகுதியில்,   தனது சொகுசு காரில் குடிபோதையில் காரோட்டி, சாலையில் சென்றவர்களை மோதும் வகையில் சென்றுள்ளார்.

இதனால் கோபமான சிலர், அவரது காரை விரட்டிச் சென்று பிடித்தனர்.

அதன் பிறகு தான் உள்ளே இருந்தது நடிகர் சக்தி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு, அவர்மீது அண்ணாநகர் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது...

நுரையீரல் சளி நீங்க...


மகனை பறிகொடுத்தவருக்கு உதவிய கலெக்டர்...


நெல்லை மாவட்டத்தில், மது போதையில் சென்ற இளைஞர்கள் ஏற்படுத்திய விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. ஆதரவற்ற நிலையில் கதறித்துடித்த தாயை நேரில் சென்று சந்தித்த நெல்லை கலெக்டர், முதியோர் உதவித்தொகை கிடைப்பதற்கான ஆணை வழங்கிய மனிதநேயம் பாராட்டைப் பெற்றுள்ளது...

திமுக தெலுங்கர் ஸ்டாலினை வருத்தெடுக்கும் டிடிவி. தினகரன்...


சந்திரகலை என்றால் என்ன..?


இடது நாசிச்(இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்(வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை எனவும் அழைக்கப்படும். சந்திரகலையை மதி/இடகலை/இடைக்கால் எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

இங்கு 'கால்' என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது. அதனால் தான் 'காலனைக் காலால் உதைத்தேன்' எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு. இங்கு காலனாகிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.

'விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன். 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் . உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம். இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம்.

நமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள். வலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் 'ஸ்பாஞ்' போல காற்றுப் பைகளால் ஆனது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க 'பிராணா' சக்தி சீராகப் பரவுகிறது .

இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சந்திரகலை'. இது குளுமையானது . வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சூரியகலை'. இது வெப்பமானது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான 'சந்திரகலை' அதிகரிக்கும். இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்...

தமிழக டெல்டா பகுதிகளை காக்க.. பாமக அன்புமணியின் திட்டம்...


அதிமுக அமைச்சரின் தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய மனு ஏற்பு...


மேல்முறையீடு செய்யும் வரை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உட்பட 16 பேருக்கு தண்டனை நிறுத்தி வைப்பு.

1998 ல் பேருந்தில் கல்வீசிய வழக்கு பதிவு செய்யப்பட்ட நேரத்தில் இவர் பாஜகவில் இருந்தது குறிப்பிடதக்கது.

ஒரு மாதத்திற்குள் மேல் முறையீட செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் தண்டனையை நிறத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவு...

அதிமுக அரசின் கோழி ஊழல்...


பாலைப்பழம்...


பாலைப்பழம் என்பது மிகவும் இனிப்பான ஒருவகைப் பழமாகும். இது இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் காடுகளில் வளரும் பாலை மரத்தில் காய்க்கும் பழமாகும்.

பாலைப்பழம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும். பாலைப்பழம் காய்க்கும் காலத்தில் பாலைப்பழம் பருவம் என்றும் அழைப்பர்.

பாலைப்பழம் மிகவும் தித்திக்கும் இனிப்பு சுவைக்கொண்டது. அத்துடன் பாலைப்பழங்களை சாப்பிடும் போது அதனுள் இருக்கும் பிசின்போன்ற பால் பசைப்போல் வாயில் ஒட்டிக்கொள்ளும்.

பாலைப்பழம் உருவில் மிகவும் சிறியது. அதனை ஒன்று இரண்டு என்று விற்பனை செய்வதில்லை. ஒரு சுண்டு, இரண்டு சுண்டு என, அளவை களாகவே விற்பனை செய்வர்...

கள்ளக்குரிச்சியை தலைநகராகக் கொண்டு விழுப்புரத்தை இரண்டாக பிரித்து புதிய மாவட்டமாக அறிவிப்பு...


காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே பவுஞ்சூரில் கடத்தப்பட்ட குழந்தை மும்பையில் மீட்பு...


கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நரிக்குறவரின் 2-வது பெண் குழந்தை ஹரிணி மர்மநபர்களால் கடத்தல்...

கேப்டனுக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை...


தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு விரைவில்  'கிட்னி' மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உடல் நலக்குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் அவ்வப்போது ட்விட்டரில் தனது மனைவி பிரேமலதாவுடன் புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வந்திருந்தார்.

இந்நிலையில் கிட்னி' மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான டோனர்  கிடைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ஒரு வாரத்திற்குள் விஜயகாந்திற்கு ஆப்பரேஷன் செய்ய, முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், பொங்கல் பண்டிகை வருவதால், அறுவை சிகிச்சை தேதி வரும் 17க்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஆப்ரேஷன் சிகிச்சைக்கு விஜயகாந்தின் உடல் நிலையையும், மன நிலையையும் தயார்படுத்தும் வகையில், பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு, அவரை அழைத்து சென்று வருகிறார், பிரேமலதா...

பொய் சொல்வது யார்.?


இலங்கை தமிழர்களின் நாடு...


இலங்கையின் ஆதிக்குடிகளான நாகரும் இயக்கரும் சிவ வழிபாட்டை கைக்கொண்ட தமிழர்களே என்பது தொல்பொருள் ஆய்வுகள் மூலம் வரலாற்று ஆசிரியர்களால் நிறுவப்பட்ட உண்மையாகும்...

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயும் அண்மையில் நடந்த நாவலர் மாநாட்டில் பகிரங்கமாக ஒத்துக் கொண்டிருந்தார்...

வான்கோழி வளர்ப்பு முறைகள்...


ஆடு, கோழி மற்றும் மீன் இறைச்சிகளுக்கு அடுத்தப்படியாக அசைவப் பிரியர்களின் உணவாக இருப்பது வான்கோழி ஆகும். இதன் சுவையும் அனைவருக்கும் பிடிக்கும். தற்போது கோழி வளர்ப்பவர்களின் அனைவரது கவனமும் வான்கோழி வளர்ப்பில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. தற்போது வான்கோழி வளர்ப்பு முறையை பற்றி பார்போம்.

இடம் தேர்வு செய்யும் முறை :

வான்கோழி வளர்க்க அதிக இடவசதியோ, முதலீடோ தேவையில்லை. வான்கோழி வளர்க்க விரும்புபவர்கள் 200 முதல் 250 சதுர அடி இடத்தில் 100 வான்கோழி குஞ்சுகளை வளர்க்கலாம்.

வான்கோழி இனங்கள் :

அகன்ற மார்புடைய வெண்கல இனம், அகன்ற மார்புடைய வெள்ளை இனம்(கரி-விரட்), பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை இனம், நந்தனம் வான்கோழி ஆகிய வான்கோழி இனங்கள் ஆகும். இதில் நந்தனம் வான்கோழி இனமானது நமது பகுதிகளுக்கு வளர்க்க ஏற்றதாகும்.

வான்கோழி கொட்டகை அமைக்கும் முறை :

வான்கோழி வளர்ப்புக்கு புறக்கடையில் அதிக செலவு செய்து கொட்டகை அமைக்கத் தேவையில்லை. அதற்கு பதிலாக பழைய டைமண்ட் லிங்க் வேலிகளை வாங்கி தடுப்பு அமைத்துக்கொள்ளலாம். வான்கோழி வளர்க்கும் போது கொட்டகைக்குள் மழை மற்றும் வெயில் பாதிக்காத அளவுக்கு மூங்கில், தென்னங்கீற்று ஆகியவற்றை கொண்டு கொட்டகை அமைக்க வேண்டும்.

கொட்டகையின் தரை பகுதியில் நான்கு அங்குல உயரத்துக்கு கடலைப்பொட்டு பரப்பிவிட வேண்டும். கடலைப்பொட்டுக்கு பதிலாக தேங்காய் நார்க்கழிவுகள், நெல் உமி ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். அதன் பிறகு ஒன்றரை மாத அளவிலான கோழிக்குஞ்சுகளை வாங்கி விடலாம்.

கொட்டகையின் சுவர்ப்பகுதியில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை சுண்ணாம்புத் தூளை தூவி விட வேண்டும். அதே போல் 15 நாட்களுக்கு ஒரு முறை கடலைப்பொட்டை மாற்ற வேண்டும். பகல் வேலையில் கோழிகளை திறந்த வெளியில் மேய்ச்சலுக்கு செல்வதற்கு திறந்து விட வேண்டும்.

தீவனம் அளிக்கும் முறை :

வான்கோழி வளர்ப்புக்கு கடைகளில் விற்கும் தீவனங்களை வாங்கினால் கட்டுபடியாகாது. இதற்கு பதிலாக பச்சை புற்களை அதிக அளவில் கொடுக்க வேண்டும். நம் வயல்களில் உள்ள புற்கள், கீரைகளையும் தீவனமாக கொடுக்கலாம்.

மேலும் 60 சதவீதம் புற்கள், 20 சதவீதம் தவிடு, 20 சதவீதம் முட்டைக்கோழி தீவனங்களை சரியான விகிதத்தில் கலந்து கொடுத்தால் தீவனச் செலவை அதிக அளவில் குறைக்க முடியும்.

நோய் மேலாண்மை :

வான்கோழிகளை அம்மை மற்றும் சளி போன்ற நோய்கள் தாக்கும். இதற்கு சீரகம், மிளகு, வெந்தயம், மஞ்சள் தூள், கசகசா, கடுகு போன்றவற்றை தலா 2 தேக்கரண்டி, பூண்டு 5, வெங்காயம் 4 ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வாரம் ஒரு முறை தண்ணீரில் கலந்து கொடுத்து வந்தால் நோய்கள் தாக்காது.

அதன் பிறகு மாதம் ஒரு முறை 20 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் மஞ்சள் தூளைக் கலந்து, வான்கோழியின் தலையை தவிர்த்து, உடல் முழுவதும் முக்கி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கோழிகளுக்கு தோல் நோய் தாக்காது.

வான்கோழியின் மூலம் லாபம் :

வான்கோழிகளை குஞ்சுகளாக வாங்கி வளர்க்கும் போது அடுத்த ஆறு மாதத்தில் முட்டை வைக்க தொடங்கும். 100 கோழிகளுக்கு 20 சேவல்கள் வேண்டும். இதன் மூலம் தினமும் 25 முட்டைகள் வரை கிடைக்கும்.

வான்கோழிகள் 36 மணி நேரத்திற்கு ஒரு முறைதான் முட்டை வைக்கும். இதன் மூலம் தினமும் வருவாயாக 500 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம். ஒரு வான்கோழியானது ஒன்றரை ஆண்டு வரை முட்டை இடும். வான்கோழிகளை தினமும் மற்றும் பண்டிகை காலங்களில் விற்பனை செய்தால் அதிகளவில் லாபம் பெற முடியும்...

பாஜக - அதிமுக - நீதிமன்றம் சதிகள்...


ஸ்டெர்லைட் ஆலையை நேற்று திறக்கவே முடியாது என்ன முதல்வர் எடப்பாடி நேற்று அறிவித்த நிலையில் இன்று ஆலை இயங்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது...

மருத்துவ குறிப்புகளைத் தாங்கி வந்த தமிழர் பழமொழிகள்...


தமிழர்களால் வழிவழியாகச் சொல்லப்பட்டு வரும் பழமொழிகளால், முந்தைய தமிழ் மக்களின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும், சமுதாயப் பின்னணியையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

இத்தகைய பழமொழிகளில் மருத்துவச் செய்திகளும், நோய் ஏற்படாமல் இருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கிய வழிமுறைகளும், மற்றும் உணவு மற்றும்  மருந்துப் பொருட்களின் மருத்துவ தன்மைகளும், அதனால் குணமடையக்கூடிய நோய்கள் பற்றிய விபரங்களும் காணக்கிடைக்கின்றன.

 இத்தகைய மருத்துவப் பழமொழிகள் பெரும்பாலும், மக்களால் சாதாரணமாகப் பேசப்படுவதில்லை. நோய் உண்டான போதும், கேலியாகப் பேசும் போதும் மட்டுமே வெளிவருகின்றன. மக்களின் அனுபவங்களே பழமொழிகள். அரிய மருத்துவச் செய்திகள் அடங்கிய பழமொழிகள் சிலவற்றைக் காண்போம்...

1. ”இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு;
கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு”

எள், கொள்ளு என்பவை இரண்டும் உணவு வகைகள். எள் என்பது நல்ல சத்துள்ள உணவாகும். மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள் எள்ளைத் தின்றால் நன்கு உடல் பெருக்கும் என்றும், பருமனான உடலைக் கொண்டவர்கள் கொள்ளைத் தின்றால், உடல் மெலிந்து போதுமான அளவோடு இருக்கும் என்றும் இப்பழமொழி கூறுகிறது.

2. ”ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டையும் போக்கும்“

மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக விளங்குவது வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும். இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும் நோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது. ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும். மூலிகைகளின் மீது பட்டு இந்நீர் வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது. வாதநோய் தொடர்பாக நரம்புக்கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன. இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும் பயன்படுகின்றன. வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது. இத்தகைய மருத்துவகுணம் கருதியே நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் பழைய சோற்று நீரை அருந்துகின்றனர்.

3.”வேலம் பட்டை பித்தத்தைப் போக்கும்; ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்”

வேலம்பட்டையை இடித்து ஒரு குவளை நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி அரைக் குவளையாக்கித் தினமும் காலை வேளை மட்டும் குடித்துவர பித்த நோய்களான, வயிற்றுப்புண், பித்தமயக்கம், கைகால் குடைச்சல் குணமாகும். ஆலமரத்தின் பட்டையைக் குடிநீராக்கி குடித்து வர வாய்ப்புண், வாய்நாற்றம், சிரங்கு, கரப்பான்படை ஆகியன விலகும் என்கிறது பழமொழி.

4. ”மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும்”

மாங்காய் என்பது மாங்காய் ஊறுகாயைக் குறிக்கும், மாங்காய் ஊறுகாய் பசியைத் தூண்டுகிறது. எனவே உணவில் மாங்காய் ஊறுகாயைச் சேர்த்துக் கொள்வதால் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை இப்பழமொழி விளக்குகிறது.

5. ”ஒரு போது உண்பான் யோகி; இருபோது உண்பான் போகி; முப்போது உண்பான் துரோகி”

ஒரு வேளை உணவை உட்கொண்டு ஆழ்ந்த யோகப் பயிற்சி மேற்கொள்வதால், மூளையின் அடிப்பகுதியில் ஹைப்போதாலமஸ் என்னும் அமைப்பிற்குக் கீழே உள்ள சுரப்பியானது நரை திரை நோய்களை அணுக விடாது. இருவேளை உணவை உட்கொள்வதால் வாழ்வு நோயற்று இன்பமுடையதாக இருக்கும். மூன்றுவேளை உணவு கொள்பவர்கள் நோயாளிகளாகவே இருப்பர். அஜீரணம், மலச்சிக்கல், குடல்நோய் போன்றவற்றால் இவர்கள் பாதிக்கப்பட்டு, எந்நேரமும் நோயுடன் போராடி வாழும் நிலையை உண்டாக்கும்.

6. ”அழுத பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம்”

சில குழந்தைகள் பிறக்கும்போதே நோய்களின் அறிகுறியுடன் பிறக்கின்றன. உள்ளங்கை, உள்ளங்கால் பகுதிகள் நீல நிறமாக இருப்பின் குழந்தை செவ்வாப்பு என்னும் நோயால் தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். இதற்குரிய மருந்தாகக் கழுதைப் பால் புகட்டப்படுகிறது என்பதனை இப்பழமொழி குறிக்கிறது.

7. ”இருப்பவன் இரும்பைத் தின்பான், போறவன் பொன்னைத் தின்பான்“

உடல் இயங்குவதற்கு இரும்புச் சத்து இன்றியமையாதது. இதன் குறைவால் இரத்தச் சோகை என்னும் நோய் ஏற்படுகிறது. எனவே இரும்புச்சத்து அதிகமுள்ள காய் கறி உள்ளிட்ட உணவுப் பொருளை உட்கொள்ளுதல் வேண்டும். போக இச்சையை விரும்புபவர்கள் பொன்னைப் பஸ்பமாக்கி உண்பார்கள். இதனால் நரம்புக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு போன்றவை ஏற்படும்.  இதனைக் குறிக்க, போறவன் பொன்னைத் தின்பான் என்றார்கள்.

8. ”ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்”

இதனைக் கிராமப்புற மக்கள் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று வழங்குகின்றனர். ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுவே இதன் பொருளாகும். நாட்டுப்புற மருந்துகளில் மூலிகைச் செடிகளும் அவற்றின் வேர்கள் மற்றும் பட்டைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் குறைந்தது ஆயிரம் வேர்களின் பயன்பாடு பற்றி ஒருவன் தெரிந்திருந்தால் மட்டுமே அவன் அரை வைத்தியன் என்ற நிலையைப் பெற இயலும் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது.

9. ”அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டாளாம்”

அரச மரத்தைச் சுற்றிவந்தால் குழந்தைப் பாக்கியம் ஏற்படும் என்று யாரோ கூறக்கேட்ட ஒருத்தி, கணவனுடன் சேராமல், அரசமரத்தை மட்டுமே சுற்றி வந்தாளாம். அரசமரமும், வேம்பும் இணைந்த மரத்தினைச் சுற்றிவர காற்றானது கருப்பையில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை வாய்ந்தது என்பதை அறிந்தே நம் முன்னோர்கள் பிள்ளையார் சிலையை இந்த மரத்தின் கீழ் வைத்தனர். குழந்தைப் பாக்கியமற்ற பெண்கள் கும்பிடுவதற்கு இதுவே முக்கிய காரணம் ஆகும்.

10. ”ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

ஆலும் என்பது ஆலமரத்தின் விழுதினையும், வேலமரம் என்பது வேப்ப மரத்தின் குச்சியையும், நாலும் என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும். இது பொதுமக்கள் அனைவராலும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பழமொழியாகும்.

ஆலமரத்தின் விழுதினையும், கருவேல மரத்தின் மரக்குச்சிகளையும் நன்கு மென்று பல்விளக்க, பல் நன்கு பளபளப்புடனும், பல் ஈறுகள் நல்ல பலத்துடனும் காணப்படும் என்னும் செய்தி இப்பழமொழியில் விளக்கம் பெறுகிறது.

11. ”பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”

மருத்துவக் குணம் கொண்ட மிளகு நம் உணவில் பயன்படுத்தப்படும் பொருள்களுள் ஒன்றாகும். இந்த மிளகு நஞ்சு நீக்கும் தன்மையுடையது. பகைவர்களின் வீட்டில் உண்ணும் உணவில் விஷம் கலந்திருந்தாலும், பாம்பின் விஷம் தாக்கியவர்களுக்கு விஷத்தின் தன்மையைக் கண்டறிவதற்கும் மிளகு பயன்படுகிறது. பாம்பால் கடியுண்டவருக்கு மிளகின் எரிப்புச் சுவை தெரியாவிட்டால் உடம்பில் விஷம் தாக்கி விட்டதாகக் கூறுகின்றனர்.

12. ”விருந்தும் மருந்தும் மூன்று நாள்”
சொந்தக்காரர்கள் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றால் மூன்று நாள் மட்டுமே இருக்க வேண்டும். நீண்ட நாட்கள் இருப்பின் பகையுண்டாகும். மருத்துவரிடம் மருந்து உட்கொள்ளும்போது, ஒரு மருந்தின் ஆற்றல் மூன்று நாட்களுக்குள்ளாக தெரிந்துவிடும். இல்லையேல் மருந்தை மாற்ற வேண்டும் என்கிறது இப்பழமொழி.

13. ”ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ”

ஆவாரைப் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய வைத்து, இடித்து வைத்துக் கொண்டு தேநீர்,   கோப்பித்தூள் இவைகளுக்குப் பதிலாக உபயோகித்து வர உடல் வறட்சி, உடல் நாற்றம், நீரிழிவு நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாக்குவதால், ஆவாரைப் பூவின் மகத்துவத்தைக் குறிக்க வந்த பழமொழியாகும்.

இதுபோன்று ஏராளமான பழமொழிகள் மருத்துவக் குறிப்புகளை உணர்த்தும் நோக்கில் சொல்லப்பட்டுள்ளன. உலகில் வேறெந்த இனத்தாரும் இப்படிச் சொன்னதில்லை என்பது தமிழர்களுக்கு பெருமையான விடயம..

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...

முட்டாள் இளைஞர்களே....


எகிப்த்தை ஆண்ட தமிழன்...


எகிப்திய அரசுகளில் பதினெட்டாம் அரசாட்சியின் பத்தாவது அரசர் ஆக்கியநாதன்(Akyyanatan) (1352 BC). இவர் தன்னை சூரிய வம்சத்தை சார்ந்தவர் எனக்கூறிக்கொண்டார் .

அதுவரையில் பல்வேறு குழப்பத்துடன் இருந்த எகிப்த்திய சமயத்தை இவர் ஆட்சிக் காலத்தில் முற்றிலுமாக மாற்றினார். அதாவது சூரியனையே ஒரே கடவுளாக இவர் அரிவித்துள்ளார்.

இவர்காலத்தில் தான் ஆதன் (Athen) அதாவது சூரியனையே முழுமையான கடவளாக எகிப்த்தியர்கள் வளிபட்டார்கள். ஆனால் இவர் ஒரு எகிப்த்தியர் இல்லை.. மற்றும் இவர் கடவுள்கள் வாழும் இடத்தில் இருந்து வந்தார் என்று எகிப்திய மக்களால் நம்பப்படுகிறது. இவர் தான் அமோர்னா என்ற நகரத்தை தோற்றி வைத்தவர். இவரின் மகன் தான் தொட்டகாமன் (tutunhaman)..

இவர்கள் தமிழர்களாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது..

எடுத்துக்காட்டாக சோழர்கள் தங்களை சூரிய வம்சத்தவர்கள் என்றும் பாண்டியர்கள் சந்திரன் வம்சத்தவர்கள் என்றும் கூறிக்கொண்டார் .

உண்மையான தமிழர் வரலாறு மீட்க்கப்படும் வறையில்… ஆக்கியநாதன் ஒரு என்சியன்ட் ஏலியன்...

ஊடகங்களின் ஏமாற்று வேலைகள்...


பாசிட்டிவ் எனர்ஜி...


உலகம் முழுமைக்கும் ஆக்க சக்திகளாக இருப்பவற்றை பாசிட்டிவ் எனர்ஜி என்கிறோம். ’நீங்க நல்லா இருக்கணும், வாழ்க வளமுடன்’ போன்ற வாழ்த்துச் சொற்கள் பலவும் பாசிட்டிவ் எனர்ஜியை சேர்ந்தவை.

வங்கி வாசலில் பேனா இல்லாமல் தவிக்கும் போது உதவியவரிடம் புன்முறுவலிடம் நன்றி என சொல்வது, சாலையில் நடப்பட்ட மரத்திற்கு ஒருவாளித் தண்ணீர் ஊற்றுவது போன்ற பலவும் பாசிட்டிவ் எனர்ஜியை வெளிப்படுத்தும் செயல்கள்தான். நற்செயல்களின் மூலாதாரம், பாசிட்டிவ் எனர்ஜி. அது ஒன்றின் வளர்ச்சியை கூட்டும். அவ்வளர்ச்சியை பாதுகாக்கும்.

பாசிட்டிவ் எனர்ஜியின் பகையாளிதான் நெகட்டிவ் எனர்ஜி. ’அவன் அழியணும், அந்த குடும்பம் அழியணும், அவன் வீட்டு மாடு சாகணும், விவசாயம் பொய்க்கணும், பிசினஸ் நொடிக்கணும்’ போன்ற வசவு உணர்வுகள் நெகட்டிவ் எனர்ஜியை சேர்ந்தது. ஒன்றின் அழிவை, ஒருவரின் துயரத்தை நேசிக்கக்கூடியது. தீய நிகழ்வுகளின் தூண்டுகோலாக இருப்பது நெகட்டிவ் எனர்ஜி. இத்தகைய இரண்டு எனர்ஜிகளின் பிறப்பிடம், வாழ்விடம் எது? மனிதனின் சிந்தனை அறைதான்.

இரு சக்திகளும் ஒரே அறையில்தான் வித்தாக விழ்கிறது. அதில் எந்த விதை செடியாகும், எந்த விதை மரமாகும் என்பது அம்மனிதனுக்குக் கிடைக்கிற சூழ்நிலையே முதலில் முடிவு செய்கிறது.

மனிதன் தனக்குக் கிடைக்கிற சூழ்நிலையால் சிந்தனைகளைப் பெறுகிறான். இயல்பாகவே நல்ல சூழ்நிலையை பெறுகிறவன் பாக்கியசாலிதான். அவனுக்கு நற்சிந்தனை, நல்ல செயல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு எளிதில் கிட்டிவிடும். சமூகம் ’நல்லவர்’ என்ற பட்டியலில் சீக்கிரமே இணைத்துக் கொள்ளும்.

இவர், தன்னம்பிக்கை, மகிழ்ச்சி, பொறுமை, சகிப்புத்தன்மை, மற்றவரை வாழ்த்தும் உணர்வு போன்ற பண்புகளால் கட்டமைக்கப்படுவார். இவரிடம் நெகட்டிவ் எனர்ஜி அடங்கிக் கிடக்கும். இவரது ஆளுமையில் மற்றவர்கள் கட்டுண்டு போவர். எதிர்பாராதவிதமாக நல்ல சூழ்நிலைகள் இவரை விட்டு விலகினாலோ, மாறினாலோ எனர்ஜியும் மாற்றம் அடையும். நெகட்டிவ் எனர்ஜி ஆளுமை செய்ய முற்படும். எனினும் அவரது நற்சிந்தனை அனுபவத்தால் அது நிரந்தரமாகி விடாமல் பாசிட்டிவ் எனர்ஜியை நோக்கி உடனுக்குடன் மீண்டு கொள்வார்.

கடலில் எவ்வாறு ஒவ்வொரு நாளும் நீர் தளும்பலில் உள்வாங்குதல், வெளி தள்ளுதல் ஏற்படுகிறதோ, அப்படி ஒரு நிகழ்வு போல மனிதனின் மன நிலையில் இத்தகைய ஏற்ற இறக்கங்களை சூழ்நிலைகள் நாளொரு பொழுதும் உருவாக்கிக் கொண்டே இருக்கும்.

இயல்பிலேயே நல்ல சூழ்நிலை, குடும்பநிலை அமையாதவர்கள், சூழ்நிலையின் பாதிப்பால் வாழ்வில் தன்னம்பிக்கை இழந்து, விரக்தி நிறைந்து, பயம், கோபம் மிகுந்து. மற்றவர்களை ஏக்கத்தோடும், பொறாமையோடும் காண்பவர்களாகவும், தன்னையே தனக்குள் தாழ்த்தி கொண்டும் வாழ்வர். இவரிடம் எளிதில் நெகட்டிவ் எனர்ஜி வெற்றி கொள்ளும். ஆளுமை செய்யும். பாசிட்டிவ் எனர்ஜி அடங்கிக் கிடக்கும். எதிர்பாராதவிதமாக தீய சூழ்நிலைகள் இவரை விட்டு விலகினாலோ, மாறினாலோ எனர்ஜியும் மாற்றமடையும். அடங்கிக் கிடந்த பாசிட்டிவ் எனர்ஜி துளிர்க்கும். எனினும் அது நிரந்தரமாக வளர்ந்து விடாமல் அதுநாள் வரை ஆதிக்கம் செய்த நெகட்டிவ் எனர்ஜி கண்காணிக்கும். ஒவ்வொரு நாளும் இந்த எனர்ஜி மாற்றம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

பலமுறை நிகழும் இத்தகைய மாற்றங்களில் அதிகமாக எந்த எனர்ஜி அவரை வழி நடத்துகிறதோ அதன் பலன்களை, பாதிப்புகளை அவரது வாழ்விலும், அவரைச் சேர்ந்தவர்கள் வாழ்விலும் எதிரொலிக்கும்.

உதாரணமாக பாசிட்டிவ் எனர்ஜி மிகுந்த ஒருவரை டிராஃபிக்கில் கெட்ட வார்த்தையால் ஒருவன் திட்டி விடுகிறான் என வைத்துக்கொள்வோம். திட்டியவனைத் திரும்ப மோசமான கெட்ட வார்த்தையால் திட்ட வேண்டும் என தோன்றும். முடியாது. அப்போது மனதில் நெகட்டிவ் எனர்ஜி எழும். திட்டியவன் மீது பாய வேண்டிய நெகட்டிவ் எனர்ஜி சம்மந்தமே இல்லாமல் அலுவலகத்தில் பணி செய்யும் எளிய ஊழியரின் சிறு தவறைச் சுட்டிக்காட்டி அவர் மீது பாய்ந்து விடும். அவர் என்ன செய்வார் அவருக்குச் சாதகமான இடத்தில் வெளியிடுவார். இப்படியாக இது பரவும்.

ஆக உள்வாங்கப்படும் எனர்ஜியைப் பொறுத்து சார்ந்தவர்களையும் பாதிக்கும், அல்லது பலனளிக்கும்.

மனிதர்கள் தங்களுக்குள் எழுப்பிக் கொள்ளும் எனர்ஜிகளில் ஒவ்வொரு நாளும் எந்த சக்தியின் ஆதிக்கம் அதிகரிக்கிறதோ, அதற்கான விளைவுகளை அவர் சார்ந்துள்ள சமூகமும், இந்த உலகமும் சந்திக்கிறது.

இத்தகைய பலப் பரிட்சை, அதனால் எழும் விளைவுகளால்தான் இந்த உலகம் பல ஆயிரம் ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்த மனிதகுலம் அனைத்திற்கும் முழுமையாகவும், முழுநேரமும் பாசிட்டிவ் எனர்ஜி சூழ்ந்திருக்க உத்தேசித்தே மதங்களின் உபதேசங்கள், வழி நடத்தைகள் அமைந்திருக்கின்றன. உலகில் மதங்கள் அனைத்துமே நற்சிந்தனைகள், நற்செயல்களை வழிமொழிகின்றன.

நான் எப்போதோ படித்த நிகழ்வு ஒன்றை இங்கே நினைப்படுத்துகிறேன். ’மகிழ்ச்சியை விதைப்பவர்’ என்ற பெயரில் அதைப் படித்த நினைவு. ஒருவர் தினமும் காலையில் பத்து ரூபாய்க்கு ஒரு ரூபா நாணயங்களாக மாற்றிக் கொண்டு நடைப்பயிற்சிக்குச் செல்வாராம். செல்லும்போது வேண்டுமென்றே அங்கொன்றும், இங்கொன்றுமாக நாணயங்களை வேண்டுமென கிழே போட்டு வைப்பாராம். காலையில் அதைக் கண்டெடுக்கும் பிற மனிதர்கள் ’இன்று அதிஷ்ட நாள்’ என சிறு மகிழ்ச்சிக்கு உள்ளாவர் இல்லையா? அதற்காகத்தான் அப்படிச் செய்வாராம். ஏனெனில் அம்மகிழ்ச்சி அலைகள் சமூகத்திற்குத் தானே திரும்பவும் கிடைக்கும். அதற்காக அப்படி நடந்துகொள்வாராம் அம்மனிதர்.

சூழ்நிலை தான் ஒரு மனிதனுக்கு சிந்தனைத் தருகிறது. அச்சிந்தனையே அவனிடமிருந்து சொல்லாக வெளிவருகிறது. அச்சொல்லே அவனது செயலாகிறது. தொடர்ச்சியான செயலே பண்பாகிறது. அப்பண்பே அம்மனிதன் மரபணுவில் பதிவு பெறுகிறது. அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.

எனவே வாழும் வீட்டில் சமூகத்தில், நாட்டில் பாசிட்டிவ் எனர்ஜியை பரவ விடுங்கள். அதை உருவாக்குங்கள். உங்களுக்கும் சமூகம் பாசிட்டிவ் எனர்ஜியையே திரும்ப வழங்கும்...

அரசியலை வேரறுப்போம்...


தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான்...


முக்கடலும் முத்தமிழும் மூவேந்தர் பரம்பரையும் கோட்டையிலே வில், புலி, மீன் கொடிகள் நாட்டி செந்தமிழ் தாய் சீரிமை திறம் விளங்க சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியனும் அவன் அமைத்த தமிழ் சங்கத்திலே எழுத்தாணி ஏந்தி தலைமைப்புலவனாய் தமிழாய்ந்த புலவர்களில் ஒருவர் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் ஆவார்.

அதன்கோட்டின் அமைவிடம்:
தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்கள் வாழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க இடம்தான் அதங்கோடு. இவ்விடம் குமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்டு பின்னர் விளவங்கோடு என மருவிய விளவங்கோடு தாலுக்காவில் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளது.

அதன்கோட்டில் சூரியமுக்கு என்னும் இடமுண்டு. இவ்விடத்தின் அருகில் "பக்றுளி ஆறு" என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட குழித்துறை தாமிரபரணி ஆறு செல்கிறது. தொன்றுதொட்டே அதங்கோடு ஒரு ஆற்றங்கரை நாகரீகப் பகுதியாக இருந்து வந்துள்ளது. இந்த ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.

அதங்கோடு சூரியமுக்கில் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்களால் நடத்தப்பட்டு வந்த தமிழ் சங்கம் தண்ணீர் பெருக்கால் அழிக்கப்பட்ட காரணத்தினால் அவரும் அவரோடு சார்ந்த தமிழ்ப்புலவர்களும் பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த 'கபாடபுரத்தில்' நடந்த தமிழ் சங்கத்தில் இணைந்தார்கள். கபாடபுர தமிழ்ச்சங்கத்தை கும்பவம்பக்குறுமுனி என்று அழைக்கப்பட்ட "அகத்தியர்" தலைமைதாங்கி நடத்தி வந்தார். அவருடன் கீழ்க்கண்ட பன்னிரு பெரும் சீடர்களாயினர்.

தொல்காப்பியர்
அதங்கோட்டாசான்
துராளிங்கன்
செம்புத்செய்
வையாபிகன்
வாய்ப்பியன்
பணம்பாரன்
கலாரம்பன்
அவினயன்
காக்கை பாடினியன்
நட்டதன்
வாமணன்

இவர்களை அகத்தியரின் "பன்னிருமாணாக்கர்" என அழைக்கிறோம். 'கபாடபுரத்தில் ',"அகத்தியர்" தலைமையில் நடந்து வந்த தமிழ் சங்கத்திற்கு,முதல் தமிழ் இலக்கண நூலாக இருந்தது "அகத்தியம்" என்னும் இலக்கண நூல் ஆகும்."அகத்தியம்" கால வெள்ளத்தால் அழிந்த காரணத்தால் அதற்கு வழி நூலக ஒரு இலக்கண நூலை இயற்ற தனது தலை மாணாக்கரான தொல்காப்பியரை அழைத்துச்சொன்னார் அகத்தியர்.

இந்நிலையில் தொல்காப்பியர் தொல்காப்பியத்தை இயற்றினார்.மதுரை தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப்பட்டது என்பது வரலாறு.

தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களிலும் எக்குற்றமும் இல்லை என அறுதி இட்டு கூறினார் அதங்கோட்டாசான்.

பணம்பாரரின் கருத்து:

தொல்கபியப் பாயிரத்திற்கு உரை எழுதிய பணம்பாரன் என்னும் தமிழ்ப் புலவர் தனது சிறப்புப் பாயிரத்தில்

"நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அரங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதன்கோட்டாசாற்கு அகில் தபத்தெரிந்து"

இதன் விளக்கம் யாதெனில் ,
மாற்றானது நிலத்தை தன் கீழ் வாழ்வார்க்கு கொண்டு கொடுக்கும் மன்னன் மாகீர்த்தியது அவையின் கண் நான்கு மறைகளையும் அதாவது ரிக், யஜூர் , சாம,அதர்வண எனும் நான்கு வேதங்களையும் முற்றும் உணர்ந்த "அதங்கோடு" என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என விரிவாக எழுதிஉள்ளார்.

இளம்பூரணரின் கருத்து:

தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு உரைப்பாயிரம் எழுதிய இளம்பூரணம் என்னும் தமிழ்ப்புலவர் நான்கு மறைகளையும் முற்றும் உணர்ந்த "அதங்கோடு" என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்று எழுதிஉள்ளார்.

அடைமொழி இன்றி தனிமொழியாக "அதங்கோடு" என்கிற ஊர் திகழ்கிறது. அதனால் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்தை அரங்கேற்றியவர் அதன்கோட்டில் பிறந்து தமிழ் ஆய்ந்த இடம் "அதங்கோடு" என உறுதி செய்யப்பட்டுள்ளது...

கல்வெட்டு உயிர் மெய் எழுத்துக்கள்...


தமிழர்களின் பெயரை வைத்து தான் இந்த உலகமே இயங்குகிறது...


Doctor -- வைத்தியநாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்
Pediatrist -- குழந்தைசாமி
Psychiatrist -- மனோ
Sex Therapist -- காமதேவன்
Marriage Counselor -- கல்யாணசுந்தரம்
Ophthalmologist--கண்ணாயிரம்
ENT Specialist -- நீலகண்டன்
Diabetologist -- சக்கரபாணி
Nutritionist -- ஆரோக்கியசாமி
Hypnotist -- சொக்கலிங்கம்
Exorcist -- மாத்ருபூதம்
Magician -- மாயாண்டி
Builder -- செங்கல்வராயன்
Painter -- சித்திரகுப்தன்
Meteorologist -- கார்மேகம்
Agriculturist -- பச்சைப்பன்
Horticulturist -- புஷ்பவனம்
Landscaper -- பூமிநாதன்
Barber -- சவுரிராஜன்
Beggar -- பிச்சை
Alcoholic -- மதுசூதனன்
Exhibitionist -- அம்பலவானன்
Fiction writer -- நாவலன்
Makeup Man -- சிங்காரம்
Milk Man -- பால் ராஜ்
Dairy Farmer -- பசுபதி
Dog Groomer -- நாயகன்
Snake Charmer -- நாகராஜன்
Mountain Climber -- ஏழுமலை
Javelin Thrower -- வேலாயுதம்
Polevaulter -- தாண்டவராயன்
Weight Lifter -- பலராமன்
Sumo Wrestler -- குண்டு ராவ்
Karate Expert -- கைலாசம்
Kick Boxer -- எத்திராஜ்
Bowler -- பாலாஜி
Spin Bowler -- திருப்பதி
Female Spin Bowler -- திரிப்புரசுந்தரி
Driver -- சாரதி
Attentive Driver -- பார்த்த சாரதி..

அண்ணன் சீமானின் இந்த முழக்கம் சரி தானே...


வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


1984 ஆம் ஆண்டில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு நம்பமுடியாத 25 செமீ உயரத்திற்கு ஒரு மர்மமான கல் பிரமிடு கண்டுபிடிப்பைக் கண்டனர். இது பண்டைய அட்லாண்டியன் நாகரிகத்தைச் சேர்ந்து என்று பலர் நம்புகின்றன.

இந்த மர்மமான பிரமிடு, கருப்பு மற்றும் வெள்ளை கற்களால் ஆனது, அது பதின்மூன்று நிலைகளும் பிரமிட்டின் உச்சியில் "பார்க்கும் கண்" மற்றும் புற ஊதா ஒளியில் வெளிப்படும் போது பிரகாசிக்கிறது. வியத்தகு முறையில் பிரமிடு வடிவமைப்பு எந்த அறியப்பட்ட மெசோஅமெரிக்கன் பிரமிடுகளை ஒத்திருக்கவில்லை,

ஆனால் இது எகிப்தில் காணப்பட்ட பாரம்பரிய பிரமிடுகளைப் போன்றது. பிரமிடு கீழே, விசித்திரமான கல்வெட்டுகள் மற்றும் "புள்ளிகள்" ஆகியவற்றைக் கொண்டுள்ளன, அவை எல்லா ஓரியன், ப்லேடியஸ் விண்மீன் தொகுதிகளை குறிக்கிறது. மற்றும் பிரமிட்டின் கீழ்பகுதியில் அரபிக் மற்றும் சமஸ்கிருத கீற்றுகள் உள்ளன.

இந்த நம்பமுடியாத பொருட்கள் ஒரு மனோவசிய வடிவவியலைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டதாகவும், பூஜ்ஜிய புள்ளியின் காந்த விளைவுகளுடன், இந்த லித்திக் வடிவமைப்பு பண்டைய நாகரிகங்களின் அறிவு மற்றும் தொழில்நுட்ப திறன்களைப் பற்றி முக்கிய கோட்பாடுகள் என்கின்றனர்.

இந்த மர்மமான பிரமிடு பற்றிய நிறைய விஷயங்கள் உள்ளன. இந்த பொருட்களை புறஊதா ஒளி வெளிச்சத்திற்கு உட்படுத்தும்போது, வெளிச்சம் இல்லாமல் சிதறாமல் போகும் சாதாரண ஒளியின் நிலைகளில் செதுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட குறியீடுகளுக்கு கவனம் செலுத்துவதன் மூலம் ஒளி அல்லாத சிதறல்களை வெளிச்சம் பரவுகிறது.

அதன் மேற்பரப்பில் பொறிக்கப்பட்ட உலக வரைபடம் கொண்ட 60 செமீ உயரமான கல், தென் அமெரிக்கா, மத்திய மற்றும் வடக்கு ஐரோப்பாவை, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பகுதிகள் மற்றும் அறியப்படாத நிலப்பரப்புகளும் இணைக்கப்படாத மூன்று சிறிய சிறிய கண்டங்களை சித்தரிக்கிறது.

இந்த வரைபடம் நமது கிரகத்தின் புவியியல் கட்டமைப்புக்கு மிகவும் வித்தியாசமான பழமையான காலத்தை பிரதிநிதித்துவப் படுத்துகிறது. கரீபியன் தீவுகள் மற்றும் புளோரிடா வரைபடத்தில் காட்டப்படவில்லை. ஒரு சிறிய கண்டம் அல்லது தீவு வட அட்லாண்டிக் நடுவில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் நிலப்பரப்புக்கு கீழே, இன்னொரு அறியப்படாத நிலப்பகுதி உள்ளது. ஜப்பானின் தென்பகுதியில், மூன்றாவது நிலப்பரப்பு உள்ளது. பண்டைய பாபிலோன் ஒரு வெள்ளைக் கோடுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பொருட்கள் எங்கிருந்து வந்தது, எவ்வளவு பழமையானது என்பது தெரியவில்லை. ஆனால் இதில் உள்ள வரைபடங்கள் மூலம் பழங்கால கலாச்சாரங்கள் இணைத்திருக்க வேண்டும். பிரமிடில் பொறிக்கப்பட்ட மொழி

"படைப்பாளரின் மகன் வருகிறார்"

"வீனஸ் என்னுடையது, மிக உயர்ந்த / படைப்பாளி நட்சத்திரம்"

என்று மொழிபெயர்க்கப்பட்டது.

இந்த பொருளை உருவாக்குவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கவனிப்பானது அதன் படைப்பாளர்களுக்கு ஒரு முக்கிய குறியீடாக தோன்றியிருப்பதாகத் தோன்றியது, ஆனால் அவர்கள் அதை எப்படி விளக்குவது என்பது தெளிவாக இல்லை.

இது மனித இனத்தின் கடந்த காலத்தைப் பற்றிய சிறிய அறிவை நமக்குத் தரும்.

வரப்போகும் அந்த படைப்பாளரின் மகன் யார்?

ஆய்வாளர்கள் போல நாமும் காத்திருப்போம்...

மதவாதிகளும் அரசியல்வாதிகளும் மக்களை சிந்திக்க விடுவதில்லை...


ஆடு மந்தைகள்  கூட்டங்களை தன் வசம் வைக்கவே பார்க்கிறார்கள்...

மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டால் அவர்களுக்கு வேலை இருக்காது பிறகு ஆடுகள் சேராது...

பின் மதவாதிகளும், அரசியல்வாதிகளும், அவர்கள் எதோ ஓர் மூலையில் தனியாக அவர் அவருடனே  பேசி கொண்டு இருப்பார்கள்...

ஏற்கனவே தென்சீன கடலில் அமெரிக்க கப்பல்களுடன் உரசல், இன்னும் கிழக்காசியாவல் அமெரிக்காவிற்கு இம்சை கொடுத்தல் என கடும் அழிச்சாட்டியம் செய்ய்ம் சீனா இப்பொழுது பகிரங்கமாக போர் முரசும் கொட்டியிருக்கின்றது...


நெத்ர்லாந்து தமிழர்கள்...


நெத்ர்லாந்து தமிழர் இவர்களில் 90%தினர் ஈழ தீவில் இருந்து உள்நாட்டு யுத்தத்தினால் இடம் பெயர்ந்தவர்கள்.

நெதர்லாந்து தமிழர் பெரும்பான்மையானோர் இலங்கை 1983 கறுப்பு யூலை இனக்கலவரங்களுக்குப் பின்பு குடிபுகுந்தவர்கள். சுமார் 20 000 தமிழ் மக்கள் இங்கு வசிக்கின்றனர். இவர்கள் டச்சு மொழியைப் பேசுகின்றனர்.

1600 களில் நெதர்லாந்துக்காரர் (ஒல்லாந்தர்) தமிழீழப் பகுதிகளை காலனித்துவப் படுத்தியிருந்தார்கள். குறிப்பிடத்தக்க தொகையினர் இலங்கையிலேயே தங்கி, தமிழ் சிங்கள மக்களுடன் கலந்து விட்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தகக்து...