29/07/2017

மொழியானது ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் போன்றது என்றார்- காந்தி...


யார் ஒருவர் மொழிகளின் சமத்துவத்தை அங்கீகரித்து அதற்காக போராடவில்லையோ, அவர் ஒரு குடிமகனே அல்ல என்றார் - புரட்சியாளர் லெனின்.

உழைப்பிலிருந்து தோன்றியதே மொழி என்றார் - புரட்சியாளர் ஏங்கல்சு.

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அந்த மொழியை சிதைத்து விடு. அந்த இனம் தானாக அழிந்து விடும் என்றான் - இட்லர்.  

என் மொழி நாளை இறக்குமானால் நான் இன்றே இறந்து போவேன் என்று முழங்கினான் - அவாமொழி கவிஞன் ரசூல் கம்சத்.

இப்படி உலகத்தவர் அனைவரும் தத்தம்  தாய்மொழியை ‘உயிரென’ கருதி நின்றார்கள்.

ஆனால், நாமோ ‘மொழிதானே?’ என்று கருதி சாதியையும், மதத்தையும் தூக்கிப் பிடித்தோம். விளைவு.?

நம் மொழி, பண்பாடு, கலாச்சாரம் எல்லாம் சிதைந்தது..

தமிழர்கள் நாம் சாதியாய், மதமாய் பிளவுற்றோம்; சொந்த இன உறவுகளுக்குள்ளே சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் அடித்துக்கொண்டு செத்தோம்;

பின், ‘ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பது போல வந்தேறிகள் (திராவிடர்கள்) நம் தாய்நிலத்தை ஆக்கிரமித்தார்கள்; தமிழர்கள் நம்மை திராவிடர்கள் என்றார்கள்; உரிமை பறி போனது; உடைமை பறிபோனது; கடைசியில், ஈழத்தில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழ் உயிர்களும், தமிழகத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ் உயிர்களும் பறிபோனது.

இப்போது ‘தமிழர்’ என்ற உணர்வே செத்துப்போய் நம் அடையாளத்தையே இழந்து, மேடை போட்டு ‘நாம் அனைவரும் தமிழர். நாம் அனைவரும் தமிழர்.’ என்று முழங்கி நம்மை தட்டி எழுப்ப வேண்டிய இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இவ்வளவுக்கும் காரணம், ‘நம் தாய்மொழி தமிழ்தான் நம் அடையாளம்’ என்று உணராததே...

தமிழகத்தின் ஆட்சித்துறை (I.A.S)...


ஆர்.வரதராசுலு முதல்வரின் செயலாளர் / தெலுங்கர்,

ஆதிஃசேழையா மு.இணைச் செயலர் / தெலுங்கர்,

ஷீலாப்பிரியா ஆளுநரின் செயலர் /தெலுங்கர்,

அரிபாசுகர் தலைமைச் செயலர் /மலையாளி,

சி.இராமச்சந்திரன் /தொழில்துறை செயலர் /மலையாளி,

ஜி.இராமகிருஃழ்ணன் /போக்குவரத்து ஆணையர் /தெலுங்கர்,

எம்.தேவராஜ் நகராட்சி இயக்குனர் //படுகர்,

சுந்தரதேவன் /தேர்தல் ஆணையச் செயலர் /படுகர்,

எம்.அகமது ஐ.ஏ.எஸ், மலையாளி,

பி.சி.சிரியாக் ஐ.ஏ.எஸ், மலையாளி,

லீலா நாயர் ஐ.ஏ.எஸ், மலையாளி,

சாந்த ஷீலா நாயர், ஐ.ஏ.எஸ், மலையாளி,

கே.ஏ.மாத்யூ ஐ.ஏ.எஸ், மலையாளி,

சூசன் மாத்யூ ஐ.ஏ.எஸ், மலையாளி,

கே.சந்திர சூடன் ஐ.ஏ.எஸ், மலையாளி,

ஓ.பி.சோசம்மா ஐ.ஏ.எஸ், மலையாளி,

மாதவன் நம்பியார் ஐ.ஏ.எஸ், மலையாளி,

வே.மாதவன் நாயர் ஐ.ஏ.எஸ்,மலையாளி,

டி.ஜேக்கப் ஐ.ஏ.எஸ், மலையாளி,

வி.கே.செயக்கொடி ஐ.ஏ.எஸ், தெலுங்கர்,

ஆதிசேஃழன் ஐ.ஏ.எஸ், தெலுங்கர்,

வரபிரசாத்ராவ் ஐ.ஏ.எஸ், தெலுங்கர்,

ராம்மோகன் ராவ் ஐ.ஏ.எஸ், தெலுங்கர்.

ஐயகோ இந்நிலைமை வேறு எங்கேனும் உண்டா?

தமிழகத்தில் தமிழன் இல்லையா?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஒரு விவசாய நிகழ்ச்சி... தமிழினமே தயவு செய்து முழு ஆதரவும் கொடுங்கள்...


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிதான் இப்போதைக்கு தமிழ் சேனல்களில் நம்பர் ஒண் நிகழ்ச்சி. தினமும் 2 கோடி பேரும், கமல் தோன்றும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 4 கோடி பேரும் பார்ப்பதாக சொல்கிறார்கள். 14 செலிபிரிட்டிகள் ஒரே வீட்டில் வெளியுலக தொடர்பின்றி வாழ்வதுதான் இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட்..

கோடிக் கணக்கான மக்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்தபோதும் நிகழ்ச்சி பற்றிய விமர்சனங்களுக்கும் பஞ்சமில்லை. நாடு இருக்கிற நிலைக்கு இந்த மாதிரி நிகழ்ச்சி தேவையா? என்றும் கலாச்சார சீரழிவை விதைக்கிறது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இதே கான்செப்ட்டில் ஒரு விவசாய நிகழ்ச்சியை தயாரிக்க இருக்கிறார்கள். 5 ஏக்கர் நிலத்தை சுற்றி உயரமாக தடுப்பு அமைக்கிறார்கள். அதற்குள் சில குடிசைகள் ஒரு பம்பு செட்டு, கயிற்று கட்டில் போடுகிறார்கள்.

படித்த இளைஞர்கள், பெண்கள் 14 பேர் சீர்படுத்தப்பட்ட இந்த வயலில் நாற்று நடுவதில் தொடங்கி கதிர் அறுவடை செய்யும்வரை அங்கு தங்கிருக்க வேண்டும். அவர்களே நாற்றுநடுவது, களைபறிப்பது, உரமிடுவது, நீர் பாய்ச்சுவது என்று அனைத்து வேலைகளும் செய்ய வேண்டும்.

யார் கடைசி வரை தாக்கு பிடித்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பரிசு வழங்கப்படும். இதுதான் நிகழ்ச்சியின் கான்செப்ட்.

காஞ்சிபுரம் அருகே 5 ஏக்கர் விவசாய நிலத்தில் தடுப்பு மற்றும் குடிசைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 5 கேமராக்கள் கொண்டு இந்த நிகழ்ச்சியை படம் பிடிக்கிறார்கள்.

விவசாயம் பற்றி நன்கு அறிந்த ஒரு திரைப்படக் கலைஞர் நிகழ்ச்சியை நடத்துகிறார். தற்போது இதற்கான ஆட்கள் தேர்வும் நடக்கிறது. ஒரு சில நடிகர்களும் இதில் இடம் பெறுகிறார்களாம்.

நம்ம மூவீஸ் சார்பில் ஆர்கே தயாரிக்கிறார். திரைப்படக் கல்லூரி மாணவர் அன்பரசன் இயக்குகிறார்.

மக்கள் டி.வியில் ஒளிபரப்பாகலாம் என்று தெரிகிறது...

குட்கா விவகாரம் குறித்து கொக்கரித்துக் கொண்டு இருக்கிறார் திமுக ஸ்டாலின்...


போதை வஸ்துக்கள்  என்றாலே அது முழுக்க  முழுக்க தெலுங்கர்கள் சம்பந்தப்பட்டது.. தெலுங்கர்களின் மிகப்பெரிய வலைப்பின்னல் இதில் இருக்கிறது...

குட்கா, பான்பராக், மாவா போன்ற போதை வஸ்துக்கள் குறித்து சென்னையில் சோதனை நடத்திய போது அதில் சிக்கியவர்கள் அனைவருமே தெலுங்கர்கள்.

மாதவ்ராவ், பீமாராவ், ஸ்ரீ ராமுலு என்று எல்லோரும் தெலுங்கர்கள் தங்கள் கிட்டங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு புகையிலைப் பொருட்களை பாதிக்கு வைத்திருந்தார்கள்.

வைகோவின் மகன் வையாபுரி, ஐ. டி .சி எனப்படும் இந்தியன் டொபாக்கோ கம்பெனி நிறுவனத்தின் முகவராக இருந்து கொண்டு தமிழ்நாடு முழுவதும் சிகரெட்டுகளை விற்று, தமிழர்களை புகைப்பழக்கத்துக்கும், புற்றுநோய்க்கும்  ஆளாக்கிக் கொண்டு   இருக்கிறார்  என்பதெல்லாம் உங்களுக்கு தெரியும் தானே..

கேட்டால் வைகோ சொல்கிறார், ' குடிப்பழக்கத்தை விட சிகெரெட் பிடிப்பது பெரிய ஆபத்து இல்லை. சிகரெட் பிடிப்பவன் பெற்றது தாயைக் கற்பழிப்பதில்லை ' என்று. எப்படி இருக்கிறது நியாயம் பாருங்கள்.

தமிழ்நாட்டில் அத்தனை சட்டப்புறம்பான வேலைகளையும் செய்பவர்கள்  தெலுங்கர்கள் தான். அதுவும் அதிகாரத்தில் இருந்துக்கொண்டு அப்பட்டமாக சட்டத்தை மீறிக்கொண்டு இருக்கிறார்கள்.

சமீபத்தில் கைதானவர்களை எல்லாம் கூர்ந்து பார்த்தால், கோவில் சிலை திருடன் தீனதயாளு தெலுங்கன். முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன  ராவ் தெலுங்கன். கோடிக்கணக்கான  ரூபாய்க்கு மணல் திருடிய சேகர் ரெட்டி தெலுங்கன். குட்கா விவகாரத்தில் மாதவ்ராவ், பீமா ராவ்.

இதோடு முடியவில்லை விஷயம். தெலுங்கு திரையுலகில் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை மற்றும் உபயோகம் ஆகிய விஷயங்களில் பல முன்னணி நடிகர்கள் சம்பந்தப்பட்டு ஆந்திர திரையுலகமே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டு இருக்கிறது.

காஜல் அகர்வாலின் மேனேஜர் கைது, நடிகை சார்மி நேரடி தொடர்பு, ஆட்டக்காரி நடிகை முமைத்கான் குட்கா தொடர்பான விசாரணைக்காக தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சிறப்பு அனுமதி பெற்று வெளியேறி, இப்போது காவல்துறை கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார். பல பெரிய நடிகர்களும் சிக்கி இருக்கிறார்கள். விஷயம் தான் வெளியில் வரவில்லை.

தமிழ்நாட்டு அளவில் குட்கா விவகாரத்தை இன்னும் நோண்டினால் மு.க. ஸ்டாலின் கூட சிக்கலாம். இத்தனை கோடி மதிப்புள்ள ஒரு விவகாரம், அதுவும் தெலுங்கர்கள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் நிச்சயம் தெலுங்கு திமுகவின் ஆசி இலலாமல், தெலுங்கு திமுகவின் பங்கு  இல்லாமல்,  நடந்து இருக்க வாய்ப்பே இல்லை.

சாராய ஆலைகள் நடத்துகிற ஸ்டாலின், குட்கா விற்க மாட்டாரா என்ன....

வைகோவின் கூற்றுப்படி, சாராயத்தை  விட புகையிலை  பெரிய ஆபத்து இல்லையே... பாவகாரியம் இல்லையே...

கோடிக்கணக்கில் பணம் புழங்குகிற விஷயம் என்றால் திமுகவினருக்கு உடனே வியர்த்து விடுமே...

ஆகையால் தமிழ்நாட்டில் குட்கா விஷயத்தையும் ஸ்டாலின்  'ரிப்பன்' வெட்டி துவக்கி வைத்திருக்கலாம்.  

இருந்தாலும், ஏன் தமிழக அரசை அவர் குற்றம் சொல்கிறார் என்றால், தன்னை ஒருவர் திருடன் என்று கண்டு பிடித்து விடுவதற்கு முன்னால்,  உஷாராகி, இன்னொருவரை பார்த்து திருடன் திருடன் என்று  கத்தினால், தன மேல் கவனம் திரும்பாது என்று நினைப்பது திருடர்களின் சாலக்கு தானே..

தெலுங்கர்கள் எதையும் செய்வார்கள்...

பதிவு - Bhagyalakshmii Dhananyeyan

பாகிஸ்தான் பிரதமர் நாவாஸ் ஷெரிப்-பின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், அவரது தம்பி ஷெபாஸ் ஷெரிப் பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக தேர்வு எனத் தகவல்...


சித்தர்கள் சமாதியான இடம். அவர்கள் வாழ்ந்த நாட்கள்...


1. பதஞ்சலி சித்தர் - 5 யுகம் 7 நாள் வாழ்ந்தார். இராமேஸ்வரத்தில் சமாதியானார்.

2. அகஸ்தியர் - 4 யுகம் 48 நாள் வாழ்ந்தார். பாபநாசத்தில் சமாதியானார்.

3. கமலமுனி - 4000 வருடம் 48 நாள் வாழ்ந்தார். திருவாரூரில் சமாதியானார்.

4. திருமூலர் - 3000 வருடம் 13 நாள் வாழ்ந்தார். சிதம்பரத்தில் சமாதியானார்.

5. குதம்பை சித்தர் - 1800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். மாயவரத்தில் சமாதியானார்.

6. கோரக்கர் - 880 வருடம் 11 நாள் வாழ்ந்தார். பொய்கை நல்லூரில் சமாதியானார்.

7. தன்வந்திரி சித்தர் - 800 வருடம் 32 நாள் வாழ்ந்தார். வைத்திஸ்வரன் கோயிலில் சமாதியானார்.

8. சுந்தராணந்தர் - 800 வருடம் 28 நாள் வாழ்ந்தார். மதுரையில் சமாதியானார்.

9. கொங்ணர் - 800 வருடம் 16 நாள் வாழ்ந்தார். திருப்பதியில் சமாதியானார்.

10. சட்டமுனி - 800 வருடம் 14 நாள் வாழ்ந்தார். திருவரங்கத்தில் சமாதியானார்.

11. வான்மீகர் - 700 வருடம் 32 நாள் வாழ்ந்தார். எட்டுக்குடியில் சமாதியானார்.

12. ராமதேவர் - 700 வருடம் 06 நாள் வாழ்ந்தார். அழகர்மலையில் சமாதியானார்.

13. நந்தீஸ்வரர் - 700 வருடம் 03 நாள் வாழ்ந்தார். காசியில் சமாதியானார்.

14. இடைக்காடர் - 600 வருடம் 18 நாள் வாழ்ந்தார். திருவண்ணா மலையில் சமாதியானார்.

15. மச்சமுனி - 300 வருடம் 62 நாள் வாழ்ந்தார். திருப்பரங்குன்றத்தில் சமாதியானார்.

16. கருவூரார் - 300 வருடம் 42 நாள் வாழ்ந்தார். கரூரில் சமாதியானார்.

17. போகர் - 300 வருடம் 18 நாள் வாழ்ந்தார். பழனியில் சமாதியானார்.

18. பாம்பாட்டி சித்தர் - 123 வருடம் 14 நாள் வாழ்ந்தார். சங்கரன்கோயிலில் சமாதியானார்...

பனாமாவை சேர்ந்த சட்ட நிறுவனம் மொசாக் பொன்சேகா. இந்நிறுவனம் உலகம் முழுவதும் நிதி மோசடி குறித்து அறிய வாசிங்டனை தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச ஊடகவியலாளர் குழு மூலம் புலனாய்வு நடத்தியது. இந்தக் குழுவில் இந்தியாவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையும் இடம் பெற்றிருந்தது...


1.5 மில்லியன் அள்விற்கான ஊழல் பக்கங்களை கசியவிட்டது அந்நிறுவனம். உலகின் 500 க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் ஆயிரக்கணக்கான உலக தொழிலதிபர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது..

பல நாடுகளின் தலைவர்கள் பதவிகளை இதனால் ராஜினாமா செய்தனர். பல நாடுகளில் அங்குள்ள நீதிமன்றங்கள் விசாரணையை நடத்தி வருகிறது.

இதில் பாகிஸ்தானின் நவாஸ்செரீப் குடும்பத்தினர் பலர் பெயர்கள் இருந்தது. பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதை விசாரித்து நவாஸ்செரீப் கிரிமினல் என இன்று தீர்ப்பளித்து அவரை பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ளது..

இதில் இந்தியர்கள் 2000 பேரின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அவர்களில் முக்கியமானவர்கள் அதானி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் ஆகியோரும் அடங்குவர்..

இந்தியர்களின் மோசடி குறித்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் சர்மா என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.

மத்திய அரசுக்கு அறிக்கை கேட்டு நீதிமன்றம் உத்தரவிட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை எதுவும் நடக்கவில்லை..

எதுக்கெடுத்தாலும் பாகிஸ்தானைப் பார் என்பார்கள் அங்கு  பிரதமரையே பதவி நீக்கம் செய்து விட்டார்கள்..

இங்கயும் நீதிப் நீதிபதிகள் இருக்காங்க செம்மறியாட்டுக்கு மயிறு புடுங்கிக்கிட்டும்.. மாட்டுகறி விவகாரம் பேசிக்கிட்டும். தூ...

காவிரியை தமிழ்நாட்டிலும் அழித்த கன்னட(ஒக்கலிக‌)ர்...


கருநாடகத்தில் காவிரியை தடுத்து பெரும் அட்டூழியம் செய்வது கன்னடஒக்கலிகர் என்றால் சரி எனலாம்.

கருநாடகத்தில் பெரும்பாலான கன்னட அமைப்புகளின் தலைவர்கள் ஒக்கலிகா எனும் சாதியை சேர்ந்தவர்களே.

இவர்களே தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் முன்னின்று பெரும் கொடுமைகளை இழைத்தவர்கள் ஆவர்.

தேவே கவுடா, எஸ் எம் கிருஷ்ணா போன்ற முதல்வர்கள் இந்த சாதியினரே.

தென் கருநாடக பகுதியின் (மைசூர், மண்டியா, சாம்ராஜ் நகர் பெங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களின்) பெரும்பான்மை சாதியினர் இவர்களே.

ஆனால் தமிழ்நாட்டிலும் காவிரி அழிய காரணமாக‌ ஒரு கன்னடர் இருந்தார் என்றால் நீங்கள் ஆச்சரியம் மட்டுமல்ல அதிர்ச்சியும் அடைவீர்கள் அல்லவா? ஆம் மேலே தொடர்ந்து படியுங்கள்.

காவிரி ஆற்றுப் ப‌டுகைகளில் மணல் அள்ளுவது அரசு தான் என்றாலும் அதன் ஏற்றி இறக்கும் ஒப்பந்தத்தை ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கு தரப்படுவது வழக்கம் அப்படி கொடுப்பட்டவர்கலில் ஒருவர் தான் கோவையை சேர்ந்த ஆறுமுகசாமி எனும் கன்னடர் ஆவார். இவரும் ஒக்கலிக சாதியை சேர்ந்தவர்.

பொதுவாக தமிழ்நாட்டில் இருக்கும் வேற்று மொழியினர் பற்றிப் பேச்சு வந்தால் அவர்கள் பல நூறு ஆண்டுகளாக இங்கே இருக்கிறார்கள் தங்கள் மொழி சார்ந்த மாநிலங்களில் அவர்களுக்கு எந்த சொத்தோ தொடர்போ இல்லை அவர்களுக்கு தங்கள் மொழியை எழுதக் கூடத் தெரியாது என்றெல்லாம் கூறுவார்கள்.

இதில் ஒரளவு உண்மை இருந்தாலும் இந்த ஆறுமுகசாமி எனும் கன்னட வெறியர் காவிரி ஆற்றின் மணலை பெருமளவு கொள்ளை அடித்து காவிரி ஆறு அழியக் காரணமாக இருந்தவர்.

அவ்வாறு கொள்ளை அடித்த பணத்தை வைத்து தனது சாதியினருக்கு மட்டும் பல கல்வி சேவைகளை செய்தவர் (பின்பு பாவத்தின் அளவு அதிகரிக்க எல்லா சாதியினருக்கும் என்று விரிவு படுத்தினார்).

சரி கல்வி சேவையையாவது விட்டுவிடாலாம் ஆனால் கன்னட இனவெறியனும் சாதி வெறியனும் ஆன முன்னாள் பிரதமர் தேவே கவுடா மற்றும் ஒக்கலிக சாதி மடமான ஆதி சுஞ்சனகிரி எனும் மடாதிபதி ஆகியோர்களை அழைத்து வந்து விழாக்கள் எடுப்பது போன்றவற்றை தனது இனப்பாசம் காரணமாக தொடர்ந்து செய்து வருகிறார்.

குறிப்பாக ஆதி சுஞ்சனகிரியின் கிளையை ராமேசுவரம் கோவிலில் ஆரம்பிக்க எல்லா வகையிலும் துணை நின்றவர் இந்த இனவெறியர் ஆவார்.

இந்த ஆதி சுஞ்சனகிரி மடத்திற்கு தேனி மாவட்டத்தில் கல்லூரிகள் உள்ளன என்பது கூடுதல் தகவல். (தி.மு.க எம் எல் ஏ கம்பம் ராமகிருஷ்ணன் இக்கல்லூரிகளின் செயலாளர்).

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு பாசனப்பரப்பில் எண்பது விழுக்காட்டை ஆக்கிரமைத்துள்ளவர்கள் இந்த கன்னட ஒக்கலிகரே என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

தன்னுடைய இனப்பாசம் காரணாமாக கருநாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்த ஆறுமுகசாமி..

தமிழ்நாட்டிலும் இவ்வளவு பச்சையாக கன்னடர்கள் தங்களது இனவெறியை வெளிப்படுத்தி வருகிறார்கள் இவர்கள் மீது ஒரு துரும்பும் விழாமல் பாத்துக்கொள்கின்றன திராவிட அரசுகள்.

ஒரு கேள்வியைக் கூட தி.மு.க வோ அ.தி.மு.க வோ அல்லது ம.தி.மு. க கூட எழுப்பியதில்லை ஏன்? ஏன்?

ஆனால் திராவிட வெறிக்கும்பலுக்கு எப்பொழுதும் தமிழர்கள் தான் சாதி வெறியர்கள் இன வெறியர்கள்..

தமிழர்களே சிந்திப்பீர்...

பாஜக வும் நீதித்துறை கலாட்டாவும்...


திருச்சி வேலுசாமி எனும் ஒன் மேன் ஆர்மி...


நேரடியாக விசயத்திற்கு வருகிறேன்..

`ராஜீவ் படுகொலை: தூக்கு கயிற்றில் நிஜம்’ என்ற இந்த புத்தகத்தை ஏதேனும்  கடையில் பார்த்தாலோ.. அல்லது பழைய புத்தக கடையில் கிடந்தாலோ கூட ஒரு நொடி கூட தாமதிக்காமல் வாங்கி விடுங்கள்.

ஏனெனில்  தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய ஆவணம் அது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அரசியல்   அதிகாரத்திற்காக திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டு அந்த பலியை தமிழினத்தின் மீது போட்டு பெரும் இனப்படுகொலையை செய்து முடித்ததற்கு பின் இருக்கும் அரசியலை அம்பலப்படுத்துகிறது.

அந்த படுகொலை செய்த சூத்திரதாரி யார்.. என்ன பின்புலம் என்பதையெல்லாம் தெரிந்து கொள்ளவேண்டுமானால் நீங்கள் பத்திரிகையாளர் பா.ஏகலைவன் எழுத்தில் உருவான இந்த புத்தகத்தை படித்தே ஆக வேண்டும். (கூடவே நளினி பிரியங்கா சந்திப்பு புத்தகத்தையும் படித்துவிடுங்கள்..)

ஒருநாள் இரவு பதினொரு மணிக்கு இந்த புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.. அதிகாலை மூன்று மணி வரை கடைசி பக்கத்தை படித்து முடிக்கும் வரை கீழே வைக்க முடியவில்லை.. ஒவ்வொரு அத்தியாயமும் நம்மை அந்த காலகட்டத்திற்கே கொண்டு செல்கிறது. நாம் ஒரு பார்வையாளனாக அந்த இடத்தில் நிற்பதுபோல் எழுத்துநடை நம்மை கட்டிப்போடுகிறது.

வேலுசாமி அவர்களின் துணிச்சல் நினைக்க நினைக்க ஆச்சர்யமாக இருக்கிறது. நாம காமெடி பீஸாக நினைக்கும் சு.சாமி எப்படிப்பட்ட சதிகாரர்.. என்பதை அந்த காலகட்டத்திலே அம்பலப்படுத்தி கூட்டம் போட்டு பேசியிருக்கிறார்.

அவர் இடத்தில் வேறொருவர்  இருந்திருந்தால் பதவி சுகத்திற்காகவும் பணத்திற்காகவும் விலை போயிருப்பார்கள். அது எல்லாவற்றையும் விட உயிர் பயம்.. ஏனெனில் அவர் கை வைத்த இடம் அப்படிப்பட்டது.

இப்போதும் அவருக்கு வருத்தம் என்னவென்றால்.. சதிகாரர்கள் வெளியில் இருக்க, கால் நூற்றாண்டை கடந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவிகள் விடுதலையாக முடியவில்லையே என்பதுதான்..

வேலுசாமி அவர்களுடன் ஏற்கனவே அறிமுகம் உண்டு.. அப்போதெல்லாம் அவரை ஒரு காங்கிரஸ்காரராக மட்டுமே பார்த்து வந்திருக்கிறேன்.

ஆனால் இந்த புத்தகத்தை படித்து முடித்தப்பிறகு அவர் மீது பெரும் மரியாதை வந்துவிட்டது. தமிழர்கள் கொண்டாடியிருக்க வேண்டிய.. கொண்டாட வேண்டிய ஒரு முக்கியமான நபர் வேலுசாமி...

-கார்ட்டூனிஸ்ட் பாலா

சிறையில் இருக்கும் சசிகலாவிடம் அமைச்சர்கள் ஆலோசனை கேட்பதில் தவறில்லை - உச்ச நீதிமன்றம்...


ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர் உச்ச நீதிமன்றத்தில் சிறையில் இருப்பவர் கட்சிக்கு பொதுச் செயலாளராக இருக்கக் கூடாது எனவும், அமைச்சர்கள் சென்று அவரிடம் அலோசனை கேட்கக் கூடாது எனவும் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிறையில் இருப்பவரிடம் கட்சி தொடர்பாக ஆலோசனை கேட்பதில் என்ன தவறு எனக் கேட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது...

ஒரு ஊழல் வழக்கு மட்டுமே வைத்துள்ள லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜாஸ்வி மீது குற்றம் சாட்டி லாலுவிடம் இருந்து பிரிந்துவிட்டு...


5 ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள பாஜகவை சேர்ந்த சுஷல் மோடிக்கு துணை முதலமைச்சர் பதவியை கொடுக்கும் அதிமேதாவி நிதீஷ்குமார்...

துப்புங்க மக்கா நல்லா காரி துப்புங்க.....
மக்களை முட்டாளாக்கும் நிதிஷ்குமார் மீது....

யோகாவின் ஏழு சக்கர நிலைகள்...


யோக மார்கத்தில் இருக்கும் ஒருவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் குண்டலினி வார்த்தையை உபயோகிக்காமல் இருக்க முடியாது. அடிப்படையான உயிராற்றல் அல்லது உயிர் சக்தியை குண்டலினி என்பார்கள். யோகா மற்றும் தியானங்களில் திளைத்தவர்கள் அதன் சக்தியையும் மேன்மையையும் அறிவார்கள்.

உண்மையில் பாம்பு குண்டலினி சக்தியைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. ஏன் பாம்பு என்ற கேள்வி எழலாம். ஒரு பாம்பு அசையாமல் இருக்கும்போது அது இருப்பதே தெரியாது. ஆனால் அது சரசர வென்று ஓடும்போதுதான் அது இருப்பதை நாம் நன்கு தெரிந்து கொள்ள முடியும். குண்டலினியும் இந்தப் பாம்பு போன்றது தான். மனிதனின் முதுகுத் தண்டின் அடிப்பகுதியில் அமைதியாய் இருக்கும். அது அமைதியாய் இருக்கும் வரையில் நமக்கு சக்தி இருப்பதே தெரியாது. யோகம் மற்றும் தியானம் மூலம் அதை எழுப்பும் போது தான் அதன் அளவிட முடியாத பேராற்றலும் மகத்துவமும் நமக்குப் புரியும். குண்டலினியை எழுப்பினால் என்ன செய்ய முடியும் என்று சொல்வதற்கு முன் மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களைப் பற்றிச் சொல்வது அவசியமாகிறது.

சாதாரணமாக மனிதன் உட்கொள்ளும் உணவு செரிக்கப்பட்டு ஆற்றலாக மாற்றப்படுகிறது. அது என்ன உணவாக இருந்தாலும் அதிலுள்ள புரதம், கொழுப்பு எதுவாயுனும் இறுதியில் பிராண சக்தியாக மாற்றப்படுகிறது. இந்தப் பிராண சக்தியே வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இந்தப் பிராண சக்தி மனித உடலில் உள்ள சுமார் 70000 நாடிகள் வழியாகப் பாய்கிறது. இந்த எழுபதாயிரம் நாடிகளும் ஏழு முக்கிய மைய நாடிகளில் இணைகிறது. இவற்றையே மனித உடலில் ஏழு சக்கரங்களாக சொல்லப்பட்டுள்ளது. இவையே ஆற்றல் மையங்கள். (கட்டுரையில் ஆற்றல் மையம் என்றாலும் சக்கரம் என்றாலும் ஒரே பொருளாகக் கருத வேண்டுகிறேன்.) இந்த ஏழு சக்கரங்கள்தான் ஒவ்வொரு மனிதனின் செயல்கள், சாதனைகள், சாதகங்கள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கின்றன. மனித உடலில் உள்ள இந்த ஏழு சக்கரங்களையும் ஒவ்வொன்றாகக் கீழிருந்து மேலாகக் காண்போம்.

முதலில் மூலாதாரம்..

இது பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்க்கும் இடையில் அமைந்துள்ளது. சரியாக சொல்ல வேண்டுமானால் முதுகுத்தண்டின் பின் புறமாக அமைந்துள்ளது ஆசனவாய்க்கு இரண்டு இஞ்சு மேலே என்று சொல்லலாம், இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு அனுபவம் மற்றும் தகவல் சேகரிப்பு ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்ட நிலையில் உள்ள ஒரு மனிதன், உணவு, உறக்கத்தில் அதிக விருப்பம் கொண்டவனாக இருப்பான். இந்த மூலாதாரச் சக்கரம்தான் மனிதனின் வளர்ச்சிக்கு அடிப்படியான முக்கிய தூண்டு சக்தி ஆகும். இந்தச் சக்கரம் பஞ்ச பூதங்களில் நிலத்துக்கு நிகராகச் சொல்லப்படுகிறது.

இரண்டாவது சுவாதிஷ்டானம்..

இது பிறப்புறுப்புக்கு சற்று மேலாக அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு இன்பம் ஆகும். இந்தச் சக்கரம் நன்கு தூண்டப்பட்டுள்ள மனிதன் உலக வாழ்க்கையில் இன்பங்களை அனுபவிக்க நாட்டம் கொள்வான். இந்தச் சக்கரம் நீர்த் தத்துவத்துக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.

மூன்றாவது மணிப்பூரகம்..

இது தொப்புளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய செயல்பாடு முயற்சி மற்றும் உழைப்பு ஆகும். மணிப்பூரகம் நன்கு தூண்டப்பட்ட மனிதன் கடும் உழைப்பாளியாக வாழ்வில் சிறந்து விளங்குவான். இந்தச் சக்கரம் நெருப்புத் தத்துவத்தை பிரதிபலிக்கிறது.

நான்காவது அனாகதம்..

இது நெஞ்சுப் பகுதியில் அல்லது இருதயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தச் சக்கரத்தின் முக்கிய குணங்கள் அன்பு மற்றும் படைப்பாற்றல் ஆகும். இது காற்று தத்துவத்தைக் குறிக்கிறது.

ஐந்தாவது விசுக்தி..

இது தொண்டைக் குழியில் அமைந்துள்ளது. ஆகாயத் தத்துவத்தைக் குறிக்கும் இந்தச் சக்கரத்தின் முக்கிய ஆற்றல் தீமைகளை தடுத்து நிறுத்துவது ஆகும்.

ஆறாவது ஆக்ஞை (அல்லது ஆக்கினை)..

இது மனிதனின் புருவ மத்தியில் அமைந்துள்ளது. ஞானம், பேரறிவு ஆகியவை வெளிப்படக் காரணமாக அமைவது இந்தச் சக்கரம்தான்.

இறுதியாக சஹஸ்ரஹாரம் (அல்லது துரியம்)..

இது உச்சந்தலையில் அமைந்துள்ளது. தன்னிலை கடந்து ஆன்ம விடுதலையைக் கொடுத்து பேரானந்தத்தை அள்ளித் தருவது இந்தச் சக்கரம்தான். இந்தச் சக்கரம் தூண்டப்படுவது ஆயிரம் தாமரை ஒன்றாக மலர்வதைப் போல் சொல்லப்படுகிறது.

சாதாரண மனிதனுக்கு இந்த ஏழு சக்கரங்களும் முழுமையாகத்தூண்டப்படுவது இல்லை. பெரும்பாலான மனிதர்கள் முதல் மூன்று சக்கரங்கள் அரைகுறையாய் தூண்டப்பட்டிருப்பதிலேயே வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். வெகுசிலர்தான் நான்கு வரை வருகிறார்கள். ஏழு சக்கரங்களும் தூண்டப்பட குருவின் துணையும் அருளும் முக்கியம்...

பாஜக காரன் எல்லாம் தூக்கில் தொங்குங்கடா...


கோழையே சுடு...


1967 அக்டோபர் 8, மாலை மூன்றரை மணிக்கு பொலிவிய சேனையால் சே தமது 22 தோழர்களுடன் சுற்றி வளைக்கப்படுகிறார்.

சே காலில் குண்டு பாய்ந்திருந்தது சகதோழர் தூக்கிக்கொண்டு ஓடமுயன்றார் ஆனால் முடியவில்லை.

துப்பாக்கியை எடுக்கமுயன்ற சேவின் கை சுடப்பட்டது. குவப்ராடா டெல் யூரோ என்ற ஆற்றின்கரையில் இது நடந்தது (இப்போது அது நினைவிடம்).

கை கால்கள் கட்டப்பட்டு தூக்கிச் செல்லப்படுகிறார் சே.

ஒரு பள்ளிக்கூடத்தின் தனி அறையில் அவர் கிடத்தப்பட்டார்.

சே வை என்ன செய்வது விசாரணைக்கு உட்படுத்தினால் உலகம் உற்றுப்பார்க்கும்.
பேசாமல் கொன்றுவிடலாம் மோதலில் இறந்ததாக அறிவித்துவிடலாம் கூடியிருந்த சி.ஐ.ஏ உளவாளிகளான கியூப நாட்டு இனத்துரோகிகள், பொலிவிய சேனைத் தளபதிகள், அமெரிக்க-பொலிவிய அரசை கலந்தாலோசித்து முடிவுக்கு வந்தனர்.

1967 செப்டம்பர் 9, காலை பத்துமணி சார்ஜண்ட்.டெர்ரன் என்பவரிடம் சேவை கொல்லும் பணி கொடுக்கப்படுகிறது.

அந்த அழுக்கான அறையில் அவர் நுழைந்தார்.

கிழிந்த அழுக்கான ஆடைகள், பல நாள் பட்டினியால் எலும்பும் தோலுமாக, காலில் பிய்ந்துபோன சப்பாத்துகளை அணிந்த எழக்கூட முடியாமல் கிடக்கிறாரே இவரா உலக வல்லரசுகள் நடுங்கும் சே?

இவரா அர்ஜண்டினாவில் மருத்துவர் பட்டம் பெற்ற செல்வச் சீமான்?

இவரா வெறும் 300 போராளிகளை வைத்துக் கொண்டு விமானம் மற்றும் தாங்கி (tank)களுடன் நின்ற 7,000 படையினரைத் தோற்கடித்து ஹவானாவைக் கைப்பற்றிய மாவீரர்?

இவரா க்யூபாவின் ரூபாய் நோட்டுகளில் கையெழுத்துப் போட்ட நிதித்தலைவர்?

இவரா ஐ.நா சபையில் உரையாற்றிய மனிதர்?

இவர்தானா சொற்பமான போராளிகளுடன் பதினோரு மாதங்கள் பொலிவியாவைக் கதறவைத்த கரந்தடிப் போராளி?

நம்ப முடியவில்லை..

சே அந்தநிலையிலும் எழ முயன்றார்.

டெர்ரன் நடுங்கிப்போய் திரும்பிவிட்டார்.

பிறகு மேலாளர்களின் கண்டிப்பான உத்தரவுக்கு பணிந்து நிலைமறக்கும் அளவு குடித்துவிட்டு மறுபடி போனார். துப்பாக்கியை நீட்டினார்.

கோழையே சுடு, நீ சுடுவது தனி மனிதனைத்தான்..

சேவின் குரல் ஒலித்த மறுநொடி கண்களை இறுக்க மூடி முகத்தை வேறுபக்கம் திருப்பியவாறு படபடவென்று சுட்டுவிட்டான்.

ஆம் சே மரணத்தை வென்றுவிட்டார்.

மாந்த உடலில் அடைபட்டிருந்த சே உலகம் முழுவதும் நிறைந்துவிட்டார்...

சராசரித் தமிழனே சாதிப்பான்...


நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்...

வரலாறே தெரியாத
தமிழில் புலமையே இல்லாத
அரசியல் பற்றி எதுவுமறியாத

ஒரு சராசரித் தமிழ் இளைஞன்தான்
இனத்தின் மீது அக்கறைகொண்டு
தன் வீரமும் அறிவும் மட்டுமே துணையாக ஆயுதம் தூக்கி பதிலடி கொடுத்து..

புத்தகம் எழுதும்
இயக்கம் நடத்தும்
அரசியல் பேசும்
கூட்டம் சேர்க்கும்

அதிமேதாவி தமிழ்தேசியர்களின் அத்தனை முயற்சிகளின் பலனையும் அசட்டையாக தட்டிக்கொண்டு போகப்போகிறான்..

கோடானு கோடித் தமிழர்கள் மனதில் கால்மேல் கால் போட்டு அமரப்போகிறான்..

இன்று நடப்பதெல்லாம் அவன் செயல்களுக்கு நியாயம் கற்பிக்க மட்டுந்தான் பயன்படப்போகிறது...

பாஜக குஜராத் கலவர நாயகன் அமித்ஷா பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகிறார்...


ஆயிரக்கணக்கான குஜராத் மக்களின் ரத்தத்தை குடித்த ரத்த காட்டேரி கையில் இந்தியாவின் பாதுகாப்பு..

இனி ஆர்எஸ்எஸ் வெறியர்கள் சுதந்திரமாக கொலை செய்யலாம், கற்பழிக்கலாம், கலவரம் செய்யலாம் தடை இல்லை..

சமூக விரோதிகள், ரவுடிகள், குண்டர்கள்  ஊக்கமளிக்கபடும், சுதந்திரமாக நடமாடலாம் கொள்ளை அடிக்கலாம்..

பசு தீவிரவாதிகள் யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் கொல்லலாம் சட்டம் தடுக்காது,  தண்டிக்காது..

மக்களுக்கு எதிரான திட்டங்களை அமல்படுத்தலாம் தடுக்க நினைத்தால் ராணுவத்தை கொண்டேனும் ஒடுக்கலாம்..

காஷ்மீர் மக்களின் மரண ஓலம் அதிகரிக்கும், பிரச்சனை பெரிதாகும்..

பாதுகாப்பு துறையில்  ஆர்எஸ்எஸ் வெறியர்கள் நியமிக்கபடுவார்கள்..

சொந்த நாட்டு மக்களை கொலை செய்து விட்டு சீனாவிடம் பம்முவோம்..

இனி வாங்க போகும் ராணுவ தடவாளங்களில் மிகப்பெரிய ஊழல் நடக்கலாம்..

மனிதகுல விரோதி ஜனநாயக நாட்டின் பாதுகாப்பு துறைக்கு பொருப்புவகித்தால் இவையெல்லாம் நடக்கும்..

இந்தியா கேள்வி குறியாகும்?

இவை கதையல்ல மேற்கூறிய தகவல்கள் குஜராத்தில் நடந்தவையே இந்த  அரக்கனின் தலைமையில்.......

சிந்திப்போம்.. செயல்படுவோம்....

லஞ்சப் புகாரில் இன்ஸ்பெக்டர் கைது, கிடா வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாடிய கிராம மக்கள்...


தலித் மற்றும்  இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தொடர்ந்து பொய் வழக்குககளை பதிவு செய்து வந்தவரும், சாதி வெறியர்களுக்கு துணை நின்று அப்பாவி தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய மங்கலம்பேட்டையில் காவல் ஆய்வாளர் தமிழ்மாறன் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மங்களம்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் தமிழ்மாறன். சிறுவாம்பூர் கிராமத்துக்குள் இரு கோஷ்டிகளிடையே சண்டை சச்சரவு ஏற்பட, அச்சண்டையை தீர்க்க அக்கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் கோவிந்தராஜ் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது, இப்பிரச்னையைத் தீர்க்க கோவிந்தராஜிடம் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் ரூபாய் 50,000 கேட்டுள்ளார். அதற்கு கோவிந்தராஜ் ரூபாய் 20,000 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன்படி இன்று, இன்ஸ்பெக்டர் தமிழ்மாறனிடம் ரூபாய் 20,000 பணத்தை கொடுத்துள்ளார் கோவிந்தராஜ். இதை மறைந்திருந்து கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், இன்ஸ்பெக்டர் தமிழ்மாறனை கையும் களவுமாக கைது செய்தனர்.

இதையறிந்த சுற்று வட்டார கிராம மக்கள் காவல் நிலையம் முன்பு குவிந்து கோவிந்தராஜுக்கு மாலை போட்டு பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

இன்னும் சில கிராமத்து மக்கள் கிடா வெட்டி அக்கிராம மக்களுக்கு விருந்து வைத்து தீபாவளி போல கொண்டாடி வருகின்றனர்...

3 நாளைக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேள் இல்லை எனில் 50 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்வேன்.. ரூபாவிற்கு நோட்டிஸ் அனுப்பிய டிஜிபி சத்யநாராயண ராவ்...


நாட்டின் ஜனாதிபதி உட்பட நாட்டின் சிஸ்டத்தையே ரூபா அவமானப்படுத்தி விட்டதாக டிஜிபி தனது நோட்டிசில் குறிப்பிட்டுள்ளார்...

1980ல் தமிழகத்தின் ஈழ ஆதரவு...


தமிழ் மன்னர்களாம் எல்லாளன் முதல் சங்கிலியன் வரை செங்கோலோச்சிய தமிழ் ஈழம் என்னும் திருநாடு கொடுங்கோலர்களாம் அன்னியர்களால் அடிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையினைத் தகர்த்தெறிந்து மீண்டும் தமிழராட்சி நிறுவிட இலண்டன் தமிழர் ஒருங்கிணைப்பு க் குழுவினர் 31-08-80 அன்று இலண்டன் மாநகரில் கூடி 1982ம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பெருநாளன்று தமிழ்ஈழ அரசு நிறுவுவதென்றும் விடுதலைப் பிரகடனம் செய்வதென்றும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த இலண்டன் தீர்மானத்தை நாங்கள் ஒருமனதாக ஆதரிக்கிறோம் என்று இம்மக்கள் மாமன்றம் முடிவெடுக்கிறது.

1982ல் அமையவிருக்கும் தமிழ் ஈழ அரசிற்கு இந்திய பேரரசு முதல் முதலில் அங்கீகாரம் வழங்கிட வேண்டுமென்றும் இந்தியப் பேரரசை இம்மாமன்றம் வேண்டிக் கொள்கிறது.

உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம்
இந்தியக் கிளை
12-10-80
இடம்:மதுரை...

முதல் காத்தான்குடி படுகொலை...


ஏற்கனவே 1984ல் காத்தான்குடியில் இலங்கை அரசு படுகொலை நிகழ்த்தியுள்ளது..

இசுரேலியருடன் சிங்களப் படை சேர்ந்தியங்குவதைக் கண்டித்து "தமிழ்-இசுலாமியர் ஐக்கிய முன்னணி" காத்தான்குடியில் ஏற்பாடு செய்த போராட்டம் நடந்தபோது..

இசுரேல்-சிங்களக் கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி 30ற்கும் மேற்பட்ட தமிழ் இசுலாமியர்களைக் கொன்றனர்.

இதற்கு PLOT அமைப்பு கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை படத்தில்.

இதை அனைவரும் மறந்துவிட்டனரா?

1990ல் மீண்டும் சிங்களப்படை இதே காத்தான்குடியில் தாக்குதல் நடத்திய போது அதை புலிகள் செய்ததாக மாற்றிவிட்டது யார்?

நன்றி: padippakam.com/index.php?option=com_content&view=article&id=4340:muslims-massacred-in-sri-lanka&catid=37:plote&Itemid=53

குடிநீரை சுத்தம் செய்ய வாழைப்பழத் தோல் இருந்தால் போதும்...


இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..

ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டு பிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...

சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாக அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது. இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல பொருட்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற பொருட்களை பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு பொருளை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதற்காகவே இந்த ஆய்வு.
ஏற்கனவே தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சி விடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது. பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம்.

நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம்” என முடிகிறது ஆய்வறிக்கை.

இனி வாழைப்பழம் வாங்கினால், தோலைத் தூக்கி எறிய வேண்டாம். நீரில் போட்டு வையுங்கள்...