29/07/2017

லஞ்சப் புகாரில் இன்ஸ்பெக்டர் கைது, கிடா வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாடிய கிராம மக்கள்...


தலித் மற்றும்  இஸ்லாமிய மக்களுக்கு எதிராக தொடர்ந்து பொய் வழக்குககளை பதிவு செய்து வந்தவரும், சாதி வெறியர்களுக்கு துணை நின்று அப்பாவி தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய மங்கலம்பேட்டையில் காவல் ஆய்வாளர் தமிழ்மாறன் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மங்களம்பேட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் தமிழ்மாறன். சிறுவாம்பூர் கிராமத்துக்குள் இரு கோஷ்டிகளிடையே சண்டை சச்சரவு ஏற்பட, அச்சண்டையை தீர்க்க அக்கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் கோவிந்தராஜ் காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது, இப்பிரச்னையைத் தீர்க்க கோவிந்தராஜிடம் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் ரூபாய் 50,000 கேட்டுள்ளார். அதற்கு கோவிந்தராஜ் ரூபாய் 20,000 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன்படி இன்று, இன்ஸ்பெக்டர் தமிழ்மாறனிடம் ரூபாய் 20,000 பணத்தை கொடுத்துள்ளார் கோவிந்தராஜ். இதை மறைந்திருந்து கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், இன்ஸ்பெக்டர் தமிழ்மாறனை கையும் களவுமாக கைது செய்தனர்.

இதையறிந்த சுற்று வட்டார கிராம மக்கள் காவல் நிலையம் முன்பு குவிந்து கோவிந்தராஜுக்கு மாலை போட்டு பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

இன்னும் சில கிராமத்து மக்கள் கிடா வெட்டி அக்கிராம மக்களுக்கு விருந்து வைத்து தீபாவளி போல கொண்டாடி வருகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.