29/07/2017

பனாமாவை சேர்ந்த சட்ட நிறுவனம் மொசாக் பொன்சேகா. இந்நிறுவனம் உலகம் முழுவதும் நிதி மோசடி குறித்து அறிய வாசிங்டனை தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச ஊடகவியலாளர் குழு மூலம் புலனாய்வு நடத்தியது. இந்தக் குழுவில் இந்தியாவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையும் இடம் பெற்றிருந்தது...


1.5 மில்லியன் அள்விற்கான ஊழல் பக்கங்களை கசியவிட்டது அந்நிறுவனம். உலகின் 500 க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் ஆயிரக்கணக்கான உலக தொழிலதிபர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது..

பல நாடுகளின் தலைவர்கள் பதவிகளை இதனால் ராஜினாமா செய்தனர். பல நாடுகளில் அங்குள்ள நீதிமன்றங்கள் விசாரணையை நடத்தி வருகிறது.

இதில் பாகிஸ்தானின் நவாஸ்செரீப் குடும்பத்தினர் பலர் பெயர்கள் இருந்தது. பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதை விசாரித்து நவாஸ்செரீப் கிரிமினல் என இன்று தீர்ப்பளித்து அவரை பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ளது..

இதில் இந்தியர்கள் 2000 பேரின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அவர்களில் முக்கியமானவர்கள் அதானி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் ஆகியோரும் அடங்குவர்..

இந்தியர்களின் மோசடி குறித்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் சர்மா என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.

மத்திய அரசுக்கு அறிக்கை கேட்டு நீதிமன்றம் உத்தரவிட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை எதுவும் நடக்கவில்லை..

எதுக்கெடுத்தாலும் பாகிஸ்தானைப் பார் என்பார்கள் அங்கு  பிரதமரையே பதவி நீக்கம் செய்து விட்டார்கள்..

இங்கயும் நீதிப் நீதிபதிகள் இருக்காங்க செம்மறியாட்டுக்கு மயிறு புடுங்கிக்கிட்டும்.. மாட்டுகறி விவகாரம் பேசிக்கிட்டும். தூ...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.