29/07/2017

காவிரியை தமிழ்நாட்டிலும் அழித்த கன்னட(ஒக்கலிக‌)ர்...


கருநாடகத்தில் காவிரியை தடுத்து பெரும் அட்டூழியம் செய்வது கன்னடஒக்கலிகர் என்றால் சரி எனலாம்.

கருநாடகத்தில் பெரும்பாலான கன்னட அமைப்புகளின் தலைவர்கள் ஒக்கலிகா எனும் சாதியை சேர்ந்தவர்களே.

இவர்களே தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் முன்னின்று பெரும் கொடுமைகளை இழைத்தவர்கள் ஆவர்.

தேவே கவுடா, எஸ் எம் கிருஷ்ணா போன்ற முதல்வர்கள் இந்த சாதியினரே.

தென் கருநாடக பகுதியின் (மைசூர், மண்டியா, சாம்ராஜ் நகர் பெங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களின்) பெரும்பான்மை சாதியினர் இவர்களே.

ஆனால் தமிழ்நாட்டிலும் காவிரி அழிய காரணமாக‌ ஒரு கன்னடர் இருந்தார் என்றால் நீங்கள் ஆச்சரியம் மட்டுமல்ல அதிர்ச்சியும் அடைவீர்கள் அல்லவா? ஆம் மேலே தொடர்ந்து படியுங்கள்.

காவிரி ஆற்றுப் ப‌டுகைகளில் மணல் அள்ளுவது அரசு தான் என்றாலும் அதன் ஏற்றி இறக்கும் ஒப்பந்தத்தை ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கு தரப்படுவது வழக்கம் அப்படி கொடுப்பட்டவர்கலில் ஒருவர் தான் கோவையை சேர்ந்த ஆறுமுகசாமி எனும் கன்னடர் ஆவார். இவரும் ஒக்கலிக சாதியை சேர்ந்தவர்.

பொதுவாக தமிழ்நாட்டில் இருக்கும் வேற்று மொழியினர் பற்றிப் பேச்சு வந்தால் அவர்கள் பல நூறு ஆண்டுகளாக இங்கே இருக்கிறார்கள் தங்கள் மொழி சார்ந்த மாநிலங்களில் அவர்களுக்கு எந்த சொத்தோ தொடர்போ இல்லை அவர்களுக்கு தங்கள் மொழியை எழுதக் கூடத் தெரியாது என்றெல்லாம் கூறுவார்கள்.

இதில் ஒரளவு உண்மை இருந்தாலும் இந்த ஆறுமுகசாமி எனும் கன்னட வெறியர் காவிரி ஆற்றின் மணலை பெருமளவு கொள்ளை அடித்து காவிரி ஆறு அழியக் காரணமாக இருந்தவர்.

அவ்வாறு கொள்ளை அடித்த பணத்தை வைத்து தனது சாதியினருக்கு மட்டும் பல கல்வி சேவைகளை செய்தவர் (பின்பு பாவத்தின் அளவு அதிகரிக்க எல்லா சாதியினருக்கும் என்று விரிவு படுத்தினார்).

சரி கல்வி சேவையையாவது விட்டுவிடாலாம் ஆனால் கன்னட இனவெறியனும் சாதி வெறியனும் ஆன முன்னாள் பிரதமர் தேவே கவுடா மற்றும் ஒக்கலிக சாதி மடமான ஆதி சுஞ்சனகிரி எனும் மடாதிபதி ஆகியோர்களை அழைத்து வந்து விழாக்கள் எடுப்பது போன்றவற்றை தனது இனப்பாசம் காரணமாக தொடர்ந்து செய்து வருகிறார்.

குறிப்பாக ஆதி சுஞ்சனகிரியின் கிளையை ராமேசுவரம் கோவிலில் ஆரம்பிக்க எல்லா வகையிலும் துணை நின்றவர் இந்த இனவெறியர் ஆவார்.

இந்த ஆதி சுஞ்சனகிரி மடத்திற்கு தேனி மாவட்டத்தில் கல்லூரிகள் உள்ளன என்பது கூடுதல் தகவல். (தி.மு.க எம் எல் ஏ கம்பம் ராமகிருஷ்ணன் இக்கல்லூரிகளின் செயலாளர்).

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு பாசனப்பரப்பில் எண்பது விழுக்காட்டை ஆக்கிரமைத்துள்ளவர்கள் இந்த கன்னட ஒக்கலிகரே என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

தன்னுடைய இனப்பாசம் காரணாமாக கருநாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்த ஆறுமுகசாமி..

தமிழ்நாட்டிலும் இவ்வளவு பச்சையாக கன்னடர்கள் தங்களது இனவெறியை வெளிப்படுத்தி வருகிறார்கள் இவர்கள் மீது ஒரு துரும்பும் விழாமல் பாத்துக்கொள்கின்றன திராவிட அரசுகள்.

ஒரு கேள்வியைக் கூட தி.மு.க வோ அ.தி.மு.க வோ அல்லது ம.தி.மு. க கூட எழுப்பியதில்லை ஏன்? ஏன்?

ஆனால் திராவிட வெறிக்கும்பலுக்கு எப்பொழுதும் தமிழர்கள் தான் சாதி வெறியர்கள் இன வெறியர்கள்..

தமிழர்களே சிந்திப்பீர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.