09/08/2021

முடி உதிர்தல், இளநரை சரியாக....

 


கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும். வழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா.... முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும்.

கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை விழுற பிரச்னை சரியாகும்.

மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் 1 1/2 லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கு தேய்ச்சிட்டு வந்தா... கூந்தல் நல்லா வளரும். அதோட நரை விழுறதையும் தடுக்கும்...

கட்டுமரம் கடலில் சாய்ந்தது...

 


காத்திருக்கிறேன்...

 




எதையும் யாரிடமும்
யாசகம் கேட்டு...

பழக்கமில்லை
எனக்கு...

உன்னை நேசித்தபின்...

உன்னை
உன்னிடம் யாசிப்பதற்கு...

எத்தனை ஆண்டுகள்...

எண்ணிப் பார்க்கையில்
எனக்கே பெருவியப்பாய்...

எளிதில் மறந்துவிட்டாய்...
என்னையும் என் காதலையும்...

உண்மையான காதலுக்கு
மரியாதையில்லை என்று 
உணர்த்திவிட்டாய்...

காத்திருக்கிறேன்
உனக்காக அல்ல...

உன் நினைவுகள்
என் மனதை விட்டு
அகலும் வேளைக்காக.....

தமிழ்த்தாய் வாழ்த்தை நோண்டிக் கிளறிய திராவிட வந்தேறிகள்...

 


எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே..

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்..

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்..

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்

உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே..

ஒன்றுபல வாயிடினும்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்..

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே..

மேற்காணும் வரிகள் ஆரியம் திராவிடம் இரண்டையும் விட தமிழின் பழைமையை கூறுவதால் அதையே வெட்டி ஒட்டிவிட்ட கொடியவர்கள் இவ்வந்தேறிகள்..

நம் தாய்மொழியாம் தமிழைப் புகழ்ந்து பாடும் நமது நாட்டுப் பண்(தேசிய கீதம்)..

அதையே தமது வசதிக்காகத் திருத்தி அதை நம் வாயாலேயே பாடவைத்து விட்டனர் இந்த திராவிட வந்தேறி பொறுக்கிகள்..

நாமும் வெட்கமின்றிப் பாடி நாம் எவ்வளவு இழிந்த இனம் என்று நிறுவிவருகிறோம்..

தமிழ் அன்னைக்கு நாம் செய்கிற வன்கொடுமை இது...

Facebook & Twitter ல இப்போ இதான் நடந்துட்டு இருக்கு 🤣

 


பக்கத்து வீட்டு கலாட்டா...

 




என் பையன் பஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்...

ரொம்ப சந்தோஷம்...

மேலே என்ன படிக்க வைக்க போறீங்க..

செகண்ட் கிளாஸ் தான்...

🤣🤣🤣

உன் நினைவுகள்...

 



உன் நினைவுகள் ஒன்றும்
சூரியன் அல்ல...

மறைந்து போவதற்கு...

சந்திரனும் அல்ல...

ஒருநாள் காணாமல் போவதற்க்கு...

காற்றும் அல்ல...

பறந்து போவதற்க்கு...

உயிரோடு இருந்தாலும்
இறந்தாலும்...

உன் நினைவுகளோடு..
நான்...

புளியம்பழ மருத்துவம்...

 


புளி இரத்தத்தைச் சுண்ட வைக்கும் என்பது ஒரு மூட நம்பிக்கை. இரத்தத்தை முறிக்கக் கூடிய சத்து ஏதும் புளியில் இல்லை.

குமட்டல், வாந்தி ஏற்பட்டால் சிறிதளவு புளியை வாயில் போட்டு நீரை விழுங்கினால் வாந்தி நிற்கும்.

அடிபட்டு இரத்தக்கட்டு ஏற்பட்டால் புளியும், உப்பும் கலந்து அரைத்து வடிகட்டி அடுப்பில் வைத்து தாங்கக்கூடிய சூட்டுடன் பற்றுப் போட்டால் இரத்தக்கட்டு கரைந்துவிடும்.

எகிர் வீக்கம், பல் வலி இவற்றிற்கு சிறிதளவு புளியும் அதே அளவு உப்பும் கலந்து வலியுள்ள இடத்தில் வைத்திருந்து 10 நிமிடம் கழித்து வாயில் வைத்திருந்த புளியை துப்பி வெந்நீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். இப்படி மூன்று வேளையும் செய்தால் பல் வலி குறையும். அந்த உமிழ் நீரை விழுங்கக்கூடாது...

பிராடு பாஜக கலாட்டா...