24/09/2017

மே17 இயக்கம் திருமுருகன் காந்தியிடம் கேட்கப்படாத கேள்விகள்...


1) இந்தியா தமிழர்கள் மீது போர் தொடுக்கிறது. தமிழினம் அழிக்கப்படுகிறது என்கிறீர்கள். அந்த தமிழர்கள், தமிழினம் யார் எப்படி கண்டுபிடிப்பீர்கள்?

2) தமிழ்நாட்டில் தமிழினம் தவிர வேறு எந்த இனங்கள் உள்ளது? தெலுங்கினம், கன்னட இனம், மலையாள இனம் எல்லாம் இருந்தால் அதை எப்படி கண்டுபிடிப்பீர்கள்?

3) இயக்க அரசியலை மட்டுமே செய்வோம் என்கிறீர்கள். அது என்ன இயக்க அரசியல், தனித்தமிழ்நாடு கோரி விடுதலை போராட்ட அரசியலா? அல்லது இந்தியாவுக்குள்ளே கிடக்கும் இயக்க அரசியலா?

4) இந்தியாவுக்குள்ளேயே இயக்க அரசியல், தேர்தல் பாதையே இல்லை என்றால், தேர்தல்போது யாரை காட்டுவீர்கள்? யாருக்கு வேலை செய்வீர்கள்? மீண்டும் அதிகாரத்தை திராவிடத்திடம் கொடுத்து விட்டு தமிழரை வேடிக்கை பார்க்க வைக்கும் இயக்க அரசியலா?

5) தமிழ்நாடு விடுதலை கோரி இயக்க அரசியலென்றால் என்றைக்கு அறிவித்து துவங்க போகிறீர்கள்? அதனை என்றைக்கு, எப்படி அடைய போகிறீர்கள்?

இதற்கெல்லாம் விடை இல்லையென்றால் மே 17 இயக்கம் என்பது தமிழர்களை குழப்பி முட்டு சந்தில் நிறுத்தும் இயக்கமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.