16/11/2018

திருமணத்தில் நூதன விருந்து வைத்த மணமக்கள்.. குவியும் பாராட்டு...


புதுச்சேரியை அடுத்த ஆரோவில் அருகே உள்ள சஞ்ஜீவி நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இசைக்கலைஞரான இவருக்கும் சென்னையை சேர்ந்த பட்டதாரி பெண்ணான கீர்த்தி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று இருவருக்கும் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள கல்யாண மண்டபத்தில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் இருவரும் மண்டப வாசலில் வந்து  உறவினர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க தொடங்கினர்.

இதனை திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் மறுக்காமல் வாங்கி குடித்து விட்டு அவர்களை ஆசிர்வாதம் செய்தனர். 

டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் தாக்கி வரும் நிலையில், மணமக்கள் நில  வேம்பு கசாயம் அளித்தற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.