27/10/2017

இவன் தான் கொலை பன்னிருக்கான் எனக் கூறி காவலருக்கு பொதுமக்கள் சரமாரி அடி உதை - திருவண்ணாமலையில் பரபரப்பு...


திருவண்ணாமலை மேல்புழுதியூர் கிராமத்தை சேர்ந்த இளம் விவசாயி திருமலை வனப் பகுதிக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதை தொடர்ந்து வனப் பகுதியில் மர்மமான முறையில் திருமலை இறந்து கிடந்துள்ளார்.

இதை கண்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறை காவல் துறையினர் தான் திருமலையை அடித்து கொலை செய்துள்ளார்கள் எனக் கூறி சந்தேகப்படும் படி இருந்த வனத்துறை காவலர் ஒருவரை சரமாரியாக தாக்கினர். இதில் அவரது வாய் உடைந்தது. அவரது வாகனத்திற்க தீ வைத்தனர்.

இதை தொடர்ந்து அந்த பகுதியில் போராட்டம் வெடித்தது, இது தொடர்பாக 50 க்கும் மேற்பட்டவர்கள் மீது போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.