24/06/2018

வேற்று கிரகவாசிகள் பற்றிய மனிதனின் உளவியல்...


மனிதன் அனைத்தையும் அதாவது பூமியில் உள்ள அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறான்.

அவன் உணவு சங்கிலியில் நாம் முதல் இடம் பிடித்திருந்தாலும் உடல் அளவில் பலவீனமானவன். அதை மனித இனமும் அறியும்.

ஆகவே தான் நாம் நம்மை
மற்றவைகளிடமிருந்து (அதாவது பலமுடைய விலங்குகளிடம் இருந்து ”இதில் மனிதனும் அடக்கம்”) காத்து கொள்ள பல ஆயுதங்களை கண்டு பிடுத்துள்ளோம்.

வேற்றுகிரகவாசி, பூமியை தாக்குவார்களா?

மனித இனத்தை முற்றிலுமாக
அழித்து விடுவார்களா? என மனிதன் எண்ணுகிறான்..

அதாவது நம்முடைய வீடான இந்த பூமீயை இழக்கும் நிலை ஏற்பட்டுவிடுமோ?

அல்லது நமக்கு எதிர்காலம்
இல்லாமல் போய்விடுமோ?

அல்லது பூமியின் செல்வங்கள் திருட பட்டுவிடுமோ ?

என்ற பயம் உள்ளது. இந்த கூற்றை பல விஞ்ஞானிகளும்,மக்களும்,நானும் ஒப்புக்கொள்கிறேன்


நிங்களே நல்லா யோசிச்சு பாருங்க வேற்றுகிரகவாசியை காணும் தருணத்தில், உங்களுக்கு இந்த இடம் சார்ந்த பயமா தோன்றுகிறது?

இல்லை உயிர் தொடர்பான பயம் தோன்றுகிறதா?.. கண்டிப்பா இல்லை என்றே நான் கூறுவேன்.. 

அங்கு நடப்பது.. இனம் புரியாதது
அது என்னாதுனா புதிய தொரு உருவம்/உயிரினத்தை காணும் போது ஏற்படும் உணர்வு. அந்த உணர்வு நம்மை பயப்பட
வைக்ககூடியதாகவே இருக்கிறது இதற்கும் காரணம் உண்டு பரிணாமம்..

நாம் உடல் அளவில் பலவினமானவர்கள்
என்பதால் நம்மை காத்து கொள்ள மூளை எப்போதும் விழிப்புடனே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. விழிப்புடன் இருக்கும் முளையால் முடிவுகள் அதிவேகத்தில் பெறப்படும்.

ஆகையால் தான் நாம் பூமியில் நிண்ட காலத்திற்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பரிமாணத்தை சற்று தள்ளி வைத்து விட்டு பயத்தை பற்றி பார்ப்போம்..

மனிதன் புதியனவைகளை கண்டால் பயப்படுகிறான் என்ற இந்த கூற்றை பலர் மறுத்தாலும்.

அது உண்மை தான் தெளிவாக சொல்ல போனால் தோற்றம் குறித்த பயம்.

வேற்றுகிரகவாசி நம்மை போன்று பரிணாமத்தில் வளர்ச்சி அடைந்திருக்கலாம், அவ்வாறு பரிணாமத்தில் வளர்ச்சி அடைந்திருந்தாலும் அவர்கள் நம்மை போன்று தான் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.


டினோசார் போன்ற தோல் அமைப்புடன் கூட இருக்கலாம்.. ஏன் அவர்கள் நம்மை போன்றோ அல்லது நம்மை விட அழகாக கூட இருக்கலாம்.

குறிப்பு:- வேற்றுவாசிகளில்
அழகான இனம் Nordic..

அசிங்கமான இனம் Retallians..

அவர்கள் மனிதன் போன்ற உருவத்தில் இருந்தாலும் அவர்களை காணும் முதல் தருணம் நமக்கு பயம் ஏற்படுத்தக் கூடியதாகவே இருக்கும்.

அதாவது மிகவும் அதிர்சியடைந்த
நிலையாகவே இருக்கும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. ஏலியன்களை கண்டால் தான் பயமா? என்று கேட்டால் அதற்கும் இல்லை என்று தான் கூறுவேன்…

காரணம் இயற்கையில் மனிதன், உணவு, இருப்பிடம், விலங்கினங்கள், கருவிகள் என அனைத்தையும் பரிசோதனை மற்றும் அனுபவம் முறையில் தான் கண்டறிந்துள்ளான், இந்த முறையில் எந்த அளவிற்கு நன்மைகள் இருந்தனவோ அதே அளவிற்கு தீமைகளும் இருந்தன…

உதாரணத்திற்கு விஷமுடைய கனியை உண்ட பின் தான் அது விஷமுடையது என தெரிந்தது.. விளைவு ஒரு நன்மை ஒரு தீமை.. இந்த கனியை சாப்பிடக்கூடாது, சாப்பிட்டால் இறப்பு நிச்சயம் என்று. இந்த பயம் மனிதனுடைய ஒவ்வொரு செயலிலும் முற்காலத்தில் காணப்பட்டது.


பரிசோதனை மற்றும் அனுபவம் முறையில் எக்கனிகள் சாப்பிடக்கூடியது
என தெரிந்த பின், கனிகளின் நிறங்களை கொண்டே இது
உண்ணக்கூடியது, இவை உண்ண தகுதியற்றது என பிரிக்க தொடங்கினான்.. இவ்வாறு அவன் செய்த ஒவ்வொரு செயலிலும் மறைமுகமாக பயங்கள்
இருந்தன..

இந்த பயங்களின் தொகுப்பு இன்னும் நமது ஜீன்களுக்குள் நடமாடிக் கொண்டிருக்கிறது…

ஆகவே தான் அவன் புதியவைகளை அதாவது புதிய உருவத்தை கண்டால் பயப்படுகிறான்… நாம் அனைத்தையும் அறிந்துவிட்டதாக எண்ணிக்
கொண்டிருக்கிறோம்.. உண்மையை ஆராய்ந்தால் இன்னும் அவன் பூமியை
முழுவதுமாக ஆராயவில்லை..

அதாவது பூமியில் மனித காலடி தடம் படாத இடங்கள் பல உள்ளன. இதே போன்று பூமியில் காணப்படும் பல விலங்கினங்களை இன்னும் ஆராயபடவில்லை.

குறிப்பாக கடலில்… அவ்வாறு ஆராயும் போது சில உயிரினங்களை கண்டாலே நமக்கு பயம் வரும். அவைகளின் தோற்றம் நம்மை சற்று வியக்க வைக்கும்.

இந்த பயங்களுக்கு காராணம் நாம் நம் சுயக்கட்டுப்பாடை இழந்து அதாவது நம்
முன்னோர்கள் போன்று சிந்திப்பது தான்…

வேற்றுகிரகவாசியின் பறக்கும் தட்டு பற்றிய செய்தி வந்தால், அத்தருணத்தில் நாம் டிவி முன்னாடி வந்து அவற்றை நன்கு கவனிப்போம்….

என்ன ஏதாவது பறக்கும்தட்டு நினைவுக்கு வருகிறதா?

இவ்வாறு பயங்கள் நமக்கு தோன்றினாலும் அவை சில நிமிடங்களே நீடிக்கின்றன… நம் சிந்தனை மீண்டும் துண்டப்பட்டுவிடுகிறது..

நான் ஒன்றை கூற மறந்து விட்டேன் மனித இனம் ஆர்வமுடைய இனம் கூட, ஆகையால் தான் அது
தெரியாதவைகளை ஆராய்ந்து
தெரிந்து கொள்கிறது….

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.