10/06/2018

செங்கோட்டை பகுதியில்... அறிவிக்கப்படாத மின்வெட்டு..


செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில்  தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் இன்று மாலை வரை அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள், வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக செங்கோட்டை பகுதிக்கு உட்பட்ட காடுவெட்டி, மோட்டை, சதியன்மேடு, மூன்று வாய்க்கால், கண்ணுப்புள்ளி மெட்டு பகுதியில் நேற்று இரவு 9 மணி முதல் தற்போது வரை 24 மணி நேர தொடர் மின் வெட்டு  ஏற்பட்டுள்ளதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.