31/12/2018

கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் மாநகராட்சி குப்பை லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் தலை நசுங்கி பலி...


மயிலாடுதுறையை சேர்ந்தவர் சுதாகர் (28)இவர் வடபழனியில் தங்கி மணலியில் உள்ள ரசாயண கம்பெனியில் வேலை பார்த்து வந்தார் ,நேற்று இரவு வேளச்சேரியில் உள்ள நண்பரை பாரத்துவிட்டு  வடபழனி நோக்கி  தனது பைக்கில் சென்றுக் கொண்டு இருந்தார். கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்திற்கு மேல்  வந்தபோது, பின்னால் வேகமாக வந்த மாநகராட்சி குப்பை லாரி ஒன்றுபைக் மீது மோதியது. இதில் சுதாகர் தூக்கியெறியப்பட்டு கீழே விழுந்தார்  ஹெல்மெட் அணிந்திருந்த சுதாகர்  தலைமீது  லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் ஹெல்மெட்டுடன் தலை நசுங்கி சம்பவ  இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த்தும் பரங்கிமலை விபத்து போக்குவரத்து புலனாய்வு போக்குவரத்து பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று சுதாகரின் சடலத்தை  கைப்ஙற்றி  பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துஇந்த விபத்துக்கு காரணமான ஜாபர்கான்பேட்டையை சேரந்த  லாரிடிரைவர் சங்கரை( 53) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.