09/02/2021

மரணத்தின் பின் பெற்ற மகளைப் பிடித்த தாய்...

 


இந்த சம்பவம் பற்றித் தெரிய வருவது.... 

நம் "ஆன்மா ஆவிகள்" குழுவைச் சேர்ந்த நண்பர் ஒருவரின் இல்லம் அருகே நடந்த உண்மை சம்பவம்..

கோவை  மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில். (ஊர்ப் பெயரைத் தெரிவிக்க சம்மந்தப் பட்டவர்கள் விரும்பாததால் , வெளியிடவில்லை )  இவரின் வீட்டருகே உள்ள ஒரு முஸ்லிம் குடும்பத்தில் உள்ள சுமார் ஐந்து - ஆறு வயது மதிக்கத்தக்க  சிறுமிக்கு கடந்த பத்து நாட்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. மாலை வேளைகளில் சில விசித்திரமான பழக்கங்கள் (கைகளை ஒரு மாதிரி வளைத்துக் கொள்வது , முறித்துக்கொள்வது ) இருந்துள்ளது.

எது சாப்பிட்டாலும் , குடித்தாலும் வாந்தி என்று தொந்தரவாக இருந்துள்ளது . பல டாக்டர்களிடம் சிகிச்சை எடுத்தும் ஒன்றும் முன்னேற்றம் இல்லை.  அவர்களுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை .

இதைப் பார்த்துக் கொண்டு இருந்த பக்கத்து வீட்டில் வசித்து வரும் நண்பரொருவர் , தனக்குத் தெரிந்த கல் உடைக்கும் தொழிலாளி (பூசாரி ) நண்பரிடத்தில் அழைத்து சென்றிருக்கிறார். குழந்தை , அதன் தகப்பனார் , நண்பர் மூவரும் அந்த கல் உடைக்கும் பூசாரியிடம் சென்றிருக்கின்றனர்.

பூசாரி குழந்தையைப் பார்த்தவுடன் , திருநீறு மந்திரித்து , எலுமிச்சங்கனி ஒன்று கொடுத்து அனுப்பியுள்ளார். அவர்கள் புறப்படும் முன் இருவரையும் அழைத்து , " இந்தக் குழந்தையின் தாயார் தான் இந்த மகளைப் பிடித்திருக்கிறார்". நான் மந்திருத்திருக்கிறேன். இனிமேல் மருத்துவமனை செல்லத் தேவையிருக்காது என்றும், இனி ஒன்றும் தொந்தரவு இருக்காது என்றும் சொல்லி அனுப்பியிருக்கிறார்.

குழந்தையின் தகப்பனார் மற்றும் நண்பர் இருவரும்  அப்படியே அசந்து விட்டனர். (நமது நண்பரும் தான் ) ஏன் எனில் , இந்தக் குழந்தை மற்றும் அவர் தகப்பனார் யார் என்றே , பூசாரிக்குத் தெரியாதென்றும் , குழந்தையின் அம்மா இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் இறந்து விட்டதும் அவருக்குத் தெரிய வாய்ப்பே இல்லையென்றும் , அப்படியிருந்தும் மிகத் துல்லியமாக அவர் கூறியது மிகுந்த வியப்பை ஏற்படுத்தியதாக இருவரும் கூறினர்.

ஒரு வேளை இது தவறாக இருந்தால் , அந்த பூசாரியின் கௌரவம் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துப் பார்த்த போது வியப்பாக இருந்தது (பூசாரியின் பேட்டியை தனியே ஒரு நாள் வெளியிடுகிறோம்).

இந்தப் பூசாரிக்கு இந்த சக்தி வந்தது ஒரு சுவாரசியமான கதை.

அவர் ஒரு சாதாரண ஏழைக் கல் உடைக்கும் தொழிலாளி . அவ்வளவுதான். ஒரு நாள் வழக்கம் போல் கல் உடைத்துக் கொண்டிருக்கும் பொழுது , மதிய நேரத்தில் அருள் வந்து மயங்கி விட்டார் . அதன் பின் , கருப்ப சாமிதான் வந்ததாகவும் அது முதல் இவருக்கு , அமானுஷ்ய  சக்திகளை உணரும் ஆற்றல் வந்ததாகவும் கூறுகிறார் . 

இந்தப் பெண் குழந்தையின் தாயார் , உணவுக்குழாயில் புற்று நோய் வந்து , அதற்கான ஆங்கில மருந்து சிகிச்சைகளை, எடுத்துப் பலனில்லாமல் இறந்து விட்டார். அவருக்கும் நிற்காமல் வாந்தி வந்ததால் தான் , மருத்துவரிடம் காட்டிய பொழுது புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. அதன் பின் சிகிச்சைகளை தொடரும் பொழுது கீமோ தெரபி கொடுக்கப்பட்டது . அந்தச் சமயத்தில் தான் , கையை முறித்து , வளைத்துக் கொண்டு இருந்திருக்கிறார் .

அவர் நோய் வாய்ப்பட்டிருந்த சமயத்தில் செய்ததைப் போலவே இந்தக் குழந்தையின் செயல்பாடும் இருந்திருக்கிறது. இப்போது அக்குழந்தை எந்தத் தொந்தரவும் இல்லாமல் நலமுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. இதை நாமும் நம் நண்பருடன் நேரில் பார்த்து அறிந்து கொண்டோம்.

தற்போது தனது பெரியம்மா, மற்றும் பெரியப்பாவை தனது தாய் தந்தையாகவே நினைத்து வளர்ந்து வருகிறது அந்த குழந்தை...                              

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.