உறவொன்று இல்லாமல்
தவிக்கும் வலியை விட...
உறவிருந்தும் இல்லாததை
போல் தவிக்கும்...
தவிப்பில் வரும்
வலி கொடியதடி...
பாறையில் செங்குத்தாய்
வளரும் மரமும்...
பள்ளத்தாக்கில் பூத்து
குலுங்கும் மலர்கொடியும்...
சூரிய ஒளியை
தேடுவதை போல...
அன்பெனும் ஆயுதத்தால்
என்னை மேலே உயர்த்தினாய்...
இது காலத்தின் சதியல்ல...
உன்னை சுமந்தெடுத்த
சதிகாரியின் சதி ...
நீ
என்னை பிரிந்தது...
நூலறுந்த பட்டமாய்
நான் தவிக்கிறேன்...
19/09/2021
தவித்துக் கொண்டிருக்கிறேனடி...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.