03/02/2019

கிரிவலப் பாதையில் நிர்வாண யாகம் நடத்திய ஆந்திர சாமியார்...


திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆந்திராவை சேர்ந்த சாமியார் ஒருவர் நிர்வாண யாகம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சூர்ய பிரகாசானந்தா சரஸ்வதி சுவாமிகள், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், கடந்த சில நாட்களாக நிர்வாண யாகம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள், யாகத்தை தடுத்து நிறுத்தினர்.

யாகம் தடுத்து நிறுத்தப்பட்டது தொடர்பாக அதிகாரிகளுக்கும், சாமியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து நிர்வாணமாக யாகம் நடத்திய சாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.