04/07/2021

கணவன் Vs மனைவி...

 


மனைவி: நான் மரணித்த பின் இன்னொரு திருமணம் முடிக்க எவ்வளவு காலம் எடுப்பீர்? என்று கேட்டாள்.

கணவன்: உன் மண்ணறையின் மண் காயும் வரை என்றான்.

மனைவி: வாக்குத்தர முடியுமா? என்றாள்.

கணவன்: சிரித்துக் கொண்டே தருகிறேன் என்றான்.

சில காலத்தின் பின் மனைவி மரணித்து விடுகிறான்.

கணவன் ஒரு வருடமாக அடக்கம் செய்த இடத்தை பார்க்கிறான் அது காயவே இல்லை.

ஒருநாள் மாலை அவளது மண்ணறை அருகே நின்றிருந்த ஒரு மனிதனைப் பார்த்து: நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டான்.

அம் மனிதன்: மரணித்த என் சகோதரியின் வாக்குமூலத்தை நிறைவேற்ற வந்திருக்கிறேன் என்றான்.

கணவன்: அது என்ன வாக்குமூலம் ?

அம் மனிதன்: இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை எனது மண்ணறையில் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பது இறந்து போன என் சகோதரியின் மரணமொழி என்றான்.

உயிர் வாழும் போதும்.. மரணித்த பின்பும்.. பெண்களின் சதி மகத்தானது....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.