01/08/2017

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...



பொதுமக்களுக்கு மேலும் ஒரு இடி: ஏழைகளின் வயிற்றில் அடித்து தனது உண்மை முகத்தை காட்டியுள்ளது மத்திய அரசு..

இந்திய பொதுத்துறை வங்கிகள் அனைத்திலும் சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி சேமிப்புக் கணக்குகள் மீதான வட்டி இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது.
அதாவது, ரூ.4 கோடி ரூபாய் மற்றும் அதற்கு கீழ் சேமிப்பு கணக்கில் பணம் சேமிப்பவர்களுக்கு மூன்றரை சதவிகிதம் வட்டி என்றும்,

சேமிப்பு கணக்கில் ரூ.4 கோடி ரூபாய்க்கு மேல் பணம் சேமிப்பவர்களுக்கு 4 சதவிகிதம் வட்டி என்றும் கூறியுள்ளது.

நாட்டில் சாமானிய மக்கள் தான் சேமிப்பு கணக்குகளையே வைத்துள்ளனர். பொதுவாக சாமானிய மக்கள் யாரும் சேமிப்பு கணக்கில் அதிகளவு பணம் வைத்திருப்பது இல்லை.

சாமானிய மக்களின் சேமிப்பு கணக்கில் எப்போது சிறிதளவு பணமே சேமிப்பாக இருக்கும் பட்சத்தில் மத்தியஅரசானது தற்போது வட்டி விகிதத்தை குறைத்து சாமானிய மக்களின் வயிற்றில் மேலும் அடித்துள்ளது.

ஏற்கனவே மத்தியஅரசு கடந்த வருட இறுதியில், பணமதிப்பிழப்பு அறிவித்தபோதே, சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் குறையும் என்று புளும்பெர்க் நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் இந்தியா மற்றும் பணமில்லா பரிவர்த்தனை போன்ற மக்கள் விரோத அறிவிப்புகளின் காரணமாக ஏழை மக்களின் விரோதி பாரதியஜனதா என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறது பா.ஜ.க...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.