07/09/2017

திமுக கருணாநிதியும் தமிழின அழிப்பும்... சட்டநாதன் ஆணையம் என்னாச்சு?


தமிழக இட ஒதுக்கீட்டில் எப்படி வந்தேரிகள் புகுந்தார்கள் என்று தெரியுமா ?

இதோ என் இனத்துக்கும், எம் மக்களுக்கும் செய்த துரோக வரலாறு...

1972 - ல் கொண்டு வந்த சட்டநாதன் ஆணையத்தின்  பரிந்துரைகளைத் தமிழ் நாட்டில் நடைமுறைக்கு கொண்டு வந்தாலே மள்ளர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தமிழ்ச் சமூகங்களுக்கான உரிய பங்குகள் எல்லாத் துறைகளிலும் கிடைக்கப் பெறும்.

ஆகவே தமிழக அரசு தமிழ் மக்களின் நலன் கருதி  சட்டநாதன் ஆணையத்தின்  பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும்.

தமிழர்கள் இதற்க்கான போராட்டத்தை துரிதப்படுத்தி காலத்தின் அவசியத்தை புரிந்து கொண்டு போராட முன் வர வேண்டும்..

சட்டநாதன் ஆணையம் என்றால் என்ன?  அந்த ஆணையம் என்ன ஆனது?  இதன் முக்கியத்துவம் என்ன? இந்த ஆணையத்தை கிடப்பில் போட்டுத்  தமிழ் மக்களுக்கு துரோகம் செய்த துரோகி யார்?

இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டியவர், திருவாரூரை சேர்ந்த தெலுங்கர் கருணாநிதி மட்டுமே...

1956 - ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் கர்நாடகாவில் கன்னத்தை தாய்மொழியாகக் கொண்ட கன்னடச் சாதிகள் மட்டுமே மாநில பட்டியல்களில் கன்னடர் மட்டுமே அரசு வேலை மற்றும் அரசாங்க பிரதி நிதிகளாக இருக்க வகை செய்தது. அங்கு உள்ள பட்டியல்களில் எந்தவொரு தமிழ்ச் சாதிகளும் இடம் பெற முடியாது..

அவ்வாறே ஆந்திராவில் தெலுங்கைத் தாய் மொழியாகவும், கேரளாவில் மலையாளத்தை தாய்மொழியாகவும் கொண்டவர்கள் மட்டுமே அந்தந்த மாநில பட்டியல்களில் இடம் பெற வகை செய்யப்பட்டது..

இதே நிலைபோல் தமிழகத்திலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே பட்டியல்களை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை  முன் வைத்து அதன் அடிப்படையில்   சட்டநாத ஆணையம்  1972 - இல்  மு. கருணாநிதி தலைமையிலான தி.மு.ஆட்சியின் போது  நீதிபதி  சட்டநாதன் தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு  அனைத்து பட்டியல்களில் உள்ள தமிழ்ச் சாதிகளை இனம் கன்டு புதிய பட்டியல் உருவாக்குவதற்க்கான திட்டம் வகுக்கப் பட்டது.

சட்டநாதன் ஆணையம் அனைத்து பட்டியலில் உள்ள தமிழ்ச் சாதிகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, அந்தந்தச் சாதிகளைப் பற்றிய முழு விவரங்களையும் தொகுத்து ஆங்கிலத்தில் 300 பக்கங்களை கொண்ட அறிக்கையைத் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது..

அனைத்து பட்டியல்களிலும் தமிழ்ச் சாதிகளை மட்டுமே கொண்ட அந்த அறிக்கையில்  தனது சாதியான சின்ன மேளம் (இசை வேளார்) என்ற தெலுங்குச் சாதி இடம் பெறாதது கண்டு அதிர்ச்சி அடைந்த  மு. கருணாநிதி அறியாமையில்  பெரும் பிழை செய்து விட்டோமே  என அஞ்சி  சட்டநாதன் ஆணையத்தின்  அறிக்கையை அப்படியே கிடப்பில் போட்டு இருட்டடிப்புச் செய்து விட்டார்..

தமிழினத்தின் போலி தலைவர் மு. கருணாநிதி. தற்போது இருக்கக்கூடிய. அனைத்து பட்டியல்களிலும் ( SC, ST, BC, MBC)  தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவிகளை -- தமிழர்கள் இருக்கக்கூடிய இடங்களில் அந்நிய மொழியினரான தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும், மார்வாடிகளும், செளராட்டிரர்களும், இந்தியர்களும் தான் வலுவாக அமர்ந்து கொண்டு வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்..

இடத்தை பறிகொடுத்த தமிழர்கள் ஏமாளிகளாகத் தேர்வு எழுதிக் கொண்டே தெருவில் திரிகிறார்கள்.

ஆகையால் தமிழ் மக்களின் நலன் கருதி மீண்டும்  நமக்குறிய அதிகார பங்கினை மீட்டெடுக்க.  சட்டநாதன் ஆணையத்தை  தமிழகத்தில் நடைமுறைப்படுத்த தமிழர் அமைப்புகள் அனைத்தும் இந்த போராட்டத்தை வீரியத்துடன் முன்னெடுத்து போராட வேண்டும் என்பதை என் தமிழ்ச் சொந்தங்களுக்கு எனது பனிவான வேண்டுகோள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.