03/12/2017

பெண்ணின் வயிற்றில் 15 ஆண்டுகளாக இறந்த நிலையில் சிசு... மருத்துவர்கள் அதிர்ச்சி...


15 ஆண்டுகளுக்கு முன் கருக்கலைப்பு செய்த பெண்ணின் வயிற்றில் இருந்து இறந்த நிலையிலேயே சிசு இருந்தது கண்டுபிடிக்க நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 52 வயது பெண் ஒருவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர் அதனை பெரிதுபடுத்தாமல் சிகிச்சை பெறாமல் இருந்துள்ளார். இதனால், வயிற்று வலியும், கடந்த 3 ஆண்டுகளாக அடிக்கடி வாந்தி எடுப்பதும் என்று பிரச்சனைகள் அதிகரிக்கவே, அவர் மருத்துவரை நாடி எக்ஸ்ரே எடுத்துக்கொண்டார்.

அப்போதுதான் தெரிய வந்தது. அந்த பெண்ணின் வயிற்றில் 15 ஆண்டுகளாக இறந்த நிலையில் சிசு ஒன்று இருந்தது என்று... அதிர்ச்சியடைந்த அந்த பெண், தாம் 15 ஆண்டுகளுக்கு முன்பு கருவுற்றதாகவும், கணவர் மற்றும் குடும்பத்தாரின் எதிர்ப்பால் அதனை கலைத்தாகவும் கூறியுள்ளார்.
ஆனால், கருக்கலைப்பு செய்தவர்கள் தவறான சிகிச்சை அளித்ததால், கரு முழுமையாக கலையாமல் கர்ப்பப்பையிலேயே இருந்துள்ளது.

இதையடுத்து, 2 மணிநேர அறுவைச்சிகிச்சைப்பிறகு வயிற்றில் இருந்த சிசு அகற்றப்பட்டது. 4 மாதம் ஆன நிலையில் கருவைக் கலைத்ததே இந்த விபரீதத்திற்கு காரணம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள், வயிற்றில் உள்ள சிசு முழுமையாக கலைந்துவிட்டதாக என்பதை பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளாமல் போவதே இதுபோன்ற விபரீதங்களுக்கு காரணம் என்றும் மூத்த மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.