03/12/2017

மீனவர்கள் மீட்பு பணி தொடர்பாக இந்திய கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கை...


கொச்சியிலிருந்து தென் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் 25 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் தவிக்கும் மீனவர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் ஈடுபட்டுள்ளது.

மேலும் மீனவர்களை தேடி கொச்சியிலிருந்து கப்பல்கள் கிளம்பி சென்றுள்ளன. கொச்சி அருகே 8 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

அலேப்பே அருகே 2 மீனவர்களை ஐஎன்எஸ் நீரேக்சாக் கப்பல் மீட்டது. திருவனந்தபுரம் அருகே 2 இறந்த மீனவர்களின் உடல்களை ஐஎன்எஸ் காகர்வானிகப்பல் மீட்டது.

விழிஞ்சம் கடற்கரை அருகே 15 மீனவர்களை மீட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.