16/02/2019

அனில் அம்பானிக்கு ஆதராவக உச்ச நீதிமன்ற ஆணையை மாற்றிய அதிகாரிகள் டிஸ்மிஸ்...


தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற உத்தரவை திருத்தியதாக நீதிமன்ற அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் தொலைபேசி நிறுவனம் எரிக்ஸன் நிறுவனத்துக்கு ரூ.550 கோடி வழங்கவில்லை என புகார் எழுந்தது. இது குறித்து, எரிக்சன் நிறுவனம் சார்பில் அனில் அம்பானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது

இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அனில் அம்பானிக்கு கடந்த ஜன.,7ம் தேதி உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் ”நேரில் ஆஜராக உத்தரவு என்ற வாசகத்தை திருத்தி நேரில் ஆஜராக விலக்கு” என வெளியிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

நீதிமன்ற அதிகாரி மானவ் சர்மாவும், துணை பதிவாளர் தபன் சக்ரவர்த்தியும் இதற்கு காரணம் என தெரியவந்ததை அடுத்து இருவரையும் பணிநீக்கம் செய்து நேற்று நள்ளிரவு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.