15/04/2019

திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவிகளை ஆபாச படம் எடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...


விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஜம்பை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 49 வயதான கனநாதன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் பயிலும் மாணவிகளை தனது செல்போன் மூலமாக தொடர்ச்சியாக ஆபாசமாக படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி ஒருவரை தனது செல்போன் மூலமாக கணநாதன் ஆபாச படம் எடுத்துள்ளார்.

இதனை அம்மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனடிப்படையில் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர், ஆசிரியரின் செல்போனில் மாணவிகளின் ஆபாச படம் இருந்ததை கண்டறிந்தனர். அந்த படங்களை அழித்த காவல் துறையினர் ஆசிரியர் கணநாதனை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.