28/04/2019

நீண்ட ஒரு கல்லறையா சீனப் பெருஞ்சுவர்?


சந்தேகமில்லாமல் சீனப் பெருஞ்சுவர் ஒரு உலக அதிசயம் தான்.ஒவ்வொரு வருடமும் இதை பார்ப்பதற்கென்றே 40 லட்சம் பயணிகள் வருகிறார்கள்.

சீனாவின் கிழக்கு மேற்காக 9000 கிலோ மீட்டர் நீள்கிறது.

இவை தவிர சீனப் பெருஞ்சுவருக்கு வேறு ஒரு முகமும் உண்டு.அது அந்த சுவரில் புதையுண்டு இருக்கும் ரகசியங்கள்.

கி.மு.2014ல் கின்(qin) சக்கரவர்த்தி சீனாவை இணைத்தபோது இந்தச் சுவரை எழுப்ப உத்தரவிட்டார்.அந்தப் பகுதியின் பண்டைய இனத்தவர்கள் தனது எல்லைக்கள் ஆக்கிரமிப்பதைத் தொடரக் கூடாது என்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.

சீனப் பெருஞ்சுவர் எப்படி காலத்தையும் தாண்டியும் நிற்கிறது?

இந்தக் கேள்விக்குக் கிடைக்கும் பதிலும் உலகத்தையே திகைக்க வைக்கும் ஒருவித அரிசிக் கஞ்சியை எலுமிச்சை கலவையில் கலந்துதான் சுவரின் கற்களை இணைத்துள்ளனர்.

முழுச் சுவரும் ஒரே சமயத்தில் கட்டப்பட்டது அல்ல. அடுத்தடுத்து வந்த சாம்ராஜ்ய மன்னர்கள் ஆளாளுக்கு கொஞ்சமாக சுவரை நீட்டித்தனர்.

சுவரை எழுப்புகையில் 10லட்சம் பேர் இறந்தனர்.(இதன் காரணமாகவே உலகின் நீளமான சுடுகாடு என்றும் சீனப் பெருஞ்சுவர் அழைக்கப்படுகிறது)

நிலவிலிருந்து பார்த்தால் உலகில் சீனப் பெருஞ்சுவர் தெரியும் என்பது பரவலாகப் பரவியுள்ள தவறான நம்பிக்கை.

சீனப் பெருஞ்சுவரை எழுப்ப பல உழைப்பாளிகள் கட்டாயப்படுத்தப்பட்டனர். அந்த பகுதியில் ஒரு நந்தவனமும் இருந்தது. அந்த நந்தவனத்தின் உரிமையாளரின் மகள் மெங் ஜியாங் என்பவர். அந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான் இளைஞன் பான் குயிலியாங் என்பவன்.

காதல் வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால்  அதில் நேர்ந்தது ஒரு சோகமான திருப்பம்.
சீனப் பெருஞ்சுவரை எழுப்புவதற்காக கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டான் அந்த இளைஞன்.

அவன் வருவான் என்று காத்திருந்தாள் காதல் மனைவி.கணவன் வருவதாக தெரியவில்லை பொறுமையிழந்த அந்த இளம் மனைவி சீனப் பெருஞ்சுவரின் கட்டுமானப் பணி நடக்கும் இடைத்தை அடைந்தாள்.

ஆனால் அங்கு எவ்வளவு தேடிப் பார்த்தும் அவள் கணவன் கிடைக்கவில்லை.

அப்போது சில கட்டுமான கலைஞர்கள் அவரை அணுகினார்கள். யாரைத் தோடுகிறாயா பெண்ணே என்று கேட்டார்கள்.என் கணவன் பான் குயிலியாகைத் தேடுகிறேன் என்றால்.

சுற்றுமுற்றும் பாார்த்தபடி ரகசியமான குரலில் உன் கணவன் இறந்து விட்டான்.

இரவு, பகல் என்று தொடர்ந்து அவனை வேலை வாங்கியதில் இதயம் வெடித்தே இறந்து விட்டான் என்றார்கள்.

மெங் ஜியாங் கதறினாள்.

வெகு நேரம் அழுதபின் என் கணவரின் உடல் எங்கே என்று கேட்டாள்.

அவன் உடலை இந்த பெருஞ்சுவருக்கு நடுவே புதைத்து கட்டிவிட்டார்கள் என்றபடி மெல்ல நகர்ந்தனர்.

இதுபோன்ற துயர சம்பவங்களை நேரில் பார்த்து பார்த்து அவர்கள் மனம் இறுகியிருந்தது.

இளம் மனைவி நாள் கணக்கில் அழுது தீர்த்தாள். பெருஞ்சுவரை ஆங்காங்கே ரகசியமாக தோண்டிப் பார்த்தாள். ஆங்காங்கே பல உடல் எலும்புகள் தெரிந்தன.

தன் கைகளை சுவரில் மோதினாள் அந்த ரத்தம் சற்று தள்ளியிருந்த ஒரு குறிப்பிட்ட எலும்பின் மீது பட்டது அதுவே தன் கணவணின் எலும்பு என்பதை உணர்ந்து கொண்டாள்.

இந்த நிகழ்வு திரைப்படமாக எடுக்கப்பட்டு புகழ் பெற்றது.

இனி சீனப் பெருஞ்சுவர் குறித்துக் கேள்விப்படும் போதெல்லாம் வியப்போடு கொஞ்சம் வேதனையும் எழும் அல்லவா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.