21/04/2017

ஆகாயத்தில் ஒரு ஒளி - 27...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனப் பகுதியில் இன்று நாம் காணும் தீர்க்க தரிசனம் 27-ம் பகுதி ஆகும்.. இந்த 27 ம் தீர்க்க தரிசனமானது கருங்கடல் பகுதியில் ஒரு ஆச்சார்யமான நிகழ்வு நடக்க உள்ளது என்றும், அது வேற்றுக்கிரக வாசிகள் பற்றிய அதிசய நிகழ்வு என்றும் குறிப்பிடுகின்றது.

அதாவது மக்களுக்கு மிகவும் நெருக்கமான அதே சமயத்தில் மிக, மிக அருகில் கண்களுக்கு முன்னால் நிகழக்கூடிய (UFO) நிகழ்விலேயே மிகப்பெரிய நிகழ்வு என்று 27-ம் தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

கருங்கடல் மட்டுமின்றி USA - வின் பல பகுதிகளில் ஒரே சமயத்தில் பல பறக்கும் தட்டுகள் தென்படும் அதிசய நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக 27-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு விளக்கத்தை இங்கு தெரியப்படுத்துகிறது.

இச்சமயத்தில் பிரேசில், மன்னார் வளைகுடா பகுதி, கரேபியன் கடல் பகுதி, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் தென்பகுதி  போன்ற இடங்களில் பல வான்வெளி ஆச்சர்யங்களும், ஒளி வடிவ அதிசயங்களும் நிகழும் என்று 27-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.


27-ம் தீர்க்க தரிசனத்தின் படி இவ்வுலகின் பல பகுதிகளில் பறக்கும் தட்டுகள் சார்ந்த அதிசய நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் பூமியின் வான்வெளி தகவல் மாற்றத்தில் ஒரு வினோத குரல் ஒன்று முதன் முதலாக பதிவாகும் என்றும்,

அக்குரலுக்குரிய பதிலை உலக விஞ்ஞானிகள் ஒரு சமிக்கையை அனுப்பி உரிய பதிலை பெறுவார்கள் என்றும், அந்த பதிலில் ஒரு அதிசய விஷயம் ஒன்று இருக்கும் என்றும் அது இந்த பிரபஞ்சமே வியக்கும் ஒரு அதிசயமாக விஞ்ஞானம் பதிவு செய்யும் என்றும் 27-ம் தீர்க்க தரிசனம் ஒரு அதிசய நிகழ்வைப் பற்றி குறிப்பை தெரிவிக்கின்றது.

27-ம் தீர்க்க தரிசனம் நடந்து கொண்டியிருக்கும் சமயத்தில் இந்திய ஆன்மீக துறையில் ஒரு விஞ்ஞானம் சார்ந்த அதிசயம் ஒன்று வெளிப்படும் என்றும், அந்த அதிசயம் நடைபெற்ற இடத்தை நோக்கி நாசா விஞ்ஞானிகள் தனது ஆய்வை மேற்கொள்ள இந்தியா வருவார்கள் என்றும், இது உலக வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அப்பொழுது தென்படும் என்று 27-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு விளக்கத்தை தருகின்றது.

சுமேரியா நாடு, வட ஆப்ரிக்க நாடு, தென் ஆப்ரிக்க நாடு, கானாதேசம் போன்றவை அப்பொழுதுதான் தன்னுடைய வறுமை நிலையிலிருந்து மீண்டு எழும் என்றும், அதற்கு இறைவனின் அற்புதமே காரணமாக அமையக் கூடும் என்று 27-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.


மத்திய ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து ஒரு மாநாட்டை நடுத்துவார்கள் என்றும், அது இறைவனின் வருகையைப்பற்றிய ஆய்வு கட்டுரைகளின் மேல் விவாதம் நடைபெறும் மாநாடாக அது அமையும் என்றும், அந்த மாநாடு நடந்து முடியும் சமயத்தில் வாடிகன் நகரில் இறை அதிசயமொன்று வெளிப்படும் என்றும், அதே சமயத்தில் இயேசுக்கு எதிரான ஒரு சக்தி இந்த பூமியில் வந்துவிட்டதாக ஒரு புரளியும் மக்களிடையே எழுப்பியபடி ஒரு கிறிஸ்துவ அமைப்பு தனது நாசவேலையை செய்யும் என்றும், அந்த அமைப்பே இயேசுவிற்கு எதிரானது என்று மக்கள் அறிந்து கொள்ளும்படி ஒரு நிகழ்வு இறைவனால் ஏற்படுத்தப்படும் என்று 27-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

27-ம் தீர்க்க தரிசனம் நடக்கும் சமயத்தில் சுமார் 8 இடங்களில் மேரிமாதாவின் வெளிப்பாடும், அவரின் அதிசயம்  தென்படும் என்றும் அதில் 3 இந்திய தேசத்தில் நடக்கும் என்றும், இந்த அதிசய நிகழ்வுகள் இதுவரை நடந்திராத அளவிற்கு மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று 27-ம் தீர்க்க தரிசனம் மற்றொரு குறிப்பை தருகின்றது.

சிலுவைக்குள் சிலுவை உள்ளது போன்ற அடையாளச் சின்னத்தை மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள ஒரு கிறிஸ்துவ அமைப்பு வெளியிடும் என்றும், அந்த அமைப்பே கிருஸ்துவர்களுக்குள் பிரிவினையும், அவதூறு செய்திகளையும் மக்களிடையே பரப்புவார்கள் என்றும் 27-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு விளக்கத்தை தருகிறது.


கன்னியாகுமரியில் மாபெரும் ஒரு அதிசயம் நிகழும் என்றும், அச்சமயத்தில் தூத்துக்குடியில் உள்ள மிகப்பழமையான கிருஸ்துவ ஆலயத்தில் இறைவனின் மகா அற்புதம் ஒன்று வெளிப்படும் என்றும், அவர்கள்தான் இந்தியாவில் முதன்முதலாக இயேசுவின் வருகையைப் பற்றி உறுதியான செய்தியினை வெளியிடுவார்கள் என்றும், அதன்பின்னர் அந்த ஆலயத்தில் உள்ள ஒரு மர்மம் வெட்ட வெளிச்சமாகும் என்றும் இது உலகில் நல்லதொரு நிலைக்கு கிருஸ்துவ அமைப்பு விளங்கும்படி அமையும் என்று 27-ம் தீர்க்க தரிசனம் மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

கத்தோலிக்க திருச்சபையில் ஒரு மாநாடு நடைபெறும் என்றும், அங்கு இந்து மதத்தில் நடக்கும் மாபெரும் அதிசயத்தைப்பற்றி அவர்கள் தங்களுடைய அறிக்கையை ஆதாரத்துடன் வெளிப்படுத்துவார்கள் என்றும், இது இந்திய தேசத்தின் மீது உலக கிருஸ்துவர்களின் பார்வை பதியும்படி அமையும் என்று 27-ம் தீர்க்க தரிசனம் மெய்பட கூறுகிறது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.