21/04/2017

ஆறு வருஷம்மா தமிழ் நாட்டுல நிதி அமைச்சரா இருந்தது யார்ரா? அண்ணன் ஓபிஎஸ் தாங்க....


அப்போ அந்த மூன்றரை லட்சம் கோடி கடனுக்கு யார்ரா காரணம்?
அண்ணன்தாங்க....

பொதுப்பணி துறைய கவனிச்சது யார்ரா?
அதுவும் அண்ணன்தாங்க...

அப்போ அந்த மணல், மின்சாரம் & பி.டபிள்யூ.டி & கிரனைட் ஊழலுக்கு யார்ரா காரணம்?
அண்ணன்தாங்க....

அந்த கருப்பு பண முதலைகள் சேகர் ரெட்டி & கரூர் அனபுநாதன் கோஷ்டிகளுக்கு பங்குதாரர் யார்ரா?
அண்ணன்தாங்க....

அந்த கிரனைட் கொள்ளையன் பிஆர்பிக்கு நெருங்கிய நண்பன் யார்ரா?
அண்ணன்தாங்க....

அம்மா அப்பலோவுல இருந்தப்போ பொறுப்பு அதிகாரத்துல இருந்தபோதும், சிகிச்சைபத்தி சந்தேகப்படாம, அம்மா இட்லி சாப்டாங்க, காப்பி குடிச்சாங்கன்னு சொல்லி ஏதுமறியா தொண்டனை ஏமாத்தியது யார்ரா?
அதுவும் அண்ணன்தாங்க...


அம்மா மறைவுக்கு அப்புறம்மா முதல்வர் அதிகாரத்துல இருந்தப்பவும், அம்மாவமரணத்தபத்தி பேசாமா, விசாரண செய்யாம இருந்தது யார்ரா?
அண்ணன்தாங்க....

ஜல்லிக்கட்டுக்கு போராடுன மாணவர்கள் & இளைஞர்கள தீவிரவாதிகள் என முத்திரைகுத்தி பேசியது யார்ரா?
அண்ணன்தாங்க....

சட்டசபையில பொய்யான பின்லேடன் படம் காமிச்சது யார்ரா?
அண்ணன்தாங்க....

நீட்நுழைவு தேர்வு, GST வரி மசோதாக்கெலாம் தமிழக உரிமைகளை விட்டுகொடுத்து, கையெழுத்து போட்டது யார்ரா?
அண்ணன்தாங்க....

சிவனேன்னு இருந்த சின்னம்மாவை, பொது செயலாளர் பதவிக்கும், முதல்வர் பதவிக்கும் முன்மொழிந்து அவரோட காலுல விழுந்த முதல்ஆளு யார்ரா?
அதுவும் அண்ணன்தாங்க...

ஓ... எல்லாத்துக்கும் காரணம் நம்ம அண்ணன் ஓபிஎஸ் தானா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.