18/10/2017

எங்கே சென்றார் கோவை மாவட்ட வருமான வரித்துறை துணை ஆணையர் சிவக்குமார்?


கோவை மாவட்ட வருமான வரித்துறை துணை ஆணையர் சிவக்குமார், கோவை கொடிசியாவை அடுத்து உள்ள ஒரு அடுக்குமாடு குடியிருப்பில் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 13-ம் தேதி வீட்டுக்கு வந்த சிவக்குமார் விடியற்காலையில் வீட்டில் இல்லாதை கண்டு அவரது மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில் சிவக்குமாரைக் காணவில்லையென அவரது சகோதரர் ராம்குமார் கோவை பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் கணவன் மனைவியிடையே தகராறு இருந்து வந்ததாகவும், குடும்ப பிரச்சனை காரணமாக சிவக்குமார் வீட்டை விட்டு வெளியேறி இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்திருக்கிறது.

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி கேமராவில் நள்ளிரவில் சிவக்குமார் சிறிய பெட்டியோடு வீட்டைவிட்டு வெளியேறும் காட்சி பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.