03/07/2018

ஜூலை 28 முதல் தூத்துக்குடி- சென்னை கூடுதல் விமான சேவை...


பெங்களுருவில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவை தொடங்கியது. பெங்களுருவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த விமானத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பெங்களுருவில் இருந்து தூத்துக்குடிக்கு வாரந்தோறும் செவ்வாய் தவிர்த்து பிற நாட்களில் நேரடி விமான சேவை வழங்கப்பட உள்ளது. பிற்பகல் 2.15 மணிக்கு பெங்களுருவில் புறப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானம் 3.30க்கு தூத்துக்குடி வந்தடையும்.

ஜூலை 28 முதல் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 3 விமானங்கள் கூடுதலாக இயக்கப்படும். தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் செய்தியாளருக்கு பேட்டியளித்தார். விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப 35,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் அமைக்கப்படவுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.