16/08/2018

பிரபஞ்ச இரகசியம்...


நீங்கள் வாழ்வில் என்ன சாதிக்க விரும்புகிறேர்களோ , என்னவாக விரும்புகிறேர்களோ, நீங்கள் எப்படிபட்ட வாழ்க்கையை வாழ விரும்புகிறேர்களோ..

அவை அனைத்தையும் அமைத்து நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கும் ஒரு கதையாக எழுதுங்கள். கதைக்கு பக்கங்கள் கணக்கில்லை. எழுதுங்கள் எழுதி கொண்டே இருங்கள்.

அந்த கதையின் நாயகன் நீங்கள் தான். உங்கள் கற்பனைக்கு எல்லை என்பதில்லை என்பதால் உங்கள் கதாபாத்திரத்தை கற்பனையால் நன்கு மெருகேற்றுங்கள்..

இயக்குனர் ஜேம்ஸ் கேம்ரூன் போல உங்கள் கதை டைட்டானிக் , அவதார் போன்ற பிரமாண்டமான படைப்புகளாக இருக்கட்டும்..

கதை அனைத்தையும் நிகழ்கால வாக்கியங்களாக மட்டுமே எழுத வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்..

நீங்கள் எழுதிய கதையை தினமும் காலையிலும் , இரவில் தூங்க செல்லும் முன்னர் வாசியுங்கள்..

வாசிக்கும் போது உங்கள் கதையை உங்கள் ஐம்புலன்களை பயன்படுத்தி மனதில் காட்சிப்படுத்தி பாருங்கள் உணருங்கள், அந்த கணத்தில் அது தான் உண்மையென்று ஆழமாக நம்புங்கள்..

நீங்கள் எழுதிய கதை மிக விரைவில் நிஜமாகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.